தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், நாசர், அபிஹாசன், பானுப்ரியா, அஞ்சு குரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நம் செயல்பாடுகள் நமக்கு சரியாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களின் பார்வையில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்..
சாதித்தவர்களின் சாதுவானவர்கள். அவர்களின் அனுபவப்படி நடத்தல் நலம்.
கொடுக்கப்பட்ட வேலையை முழுமையாக செய்யாவிட்டால் என்ன பிரச்சனை ?
ஆடம்பரமே வாழ்க்கையில்லை. பணத்தை மீறிய வாழ்க்கை உண்டு.
இப்படியாக 4 கதைகளை கொண்ட படம்தான் சில நேரங்களில் சில மனிதர்கள்.
கதைக்களம்..
தன் தாயை இழந்த அசோக் செல்வன் தன் அப்பா நாசருடன் வாழ்ந்து வருகிறார். இவர் ரியா என்பரை திருமணம் அப்பா சம்மதத்துடன் மணக்கவிருக்கிறார்.
தன் அப்பா மீது அதீத பாசம் வைத்திருந்தாலும் அதை முரட்டுத்தனமாக காட்டுபவர் அசோக் செல்வன். உங்களுக்கு ஒன்றுமே தெரியல.. நான் சொல்றதை கேளுங்க என்ற அதட்டல் குணம் படைத்தவர்.
இவரின் பேச்சை கேட்காமல் நாசர் தன் நண்பர்களுக்கு மகனின் கல்யாண பத்திரிகை வைக்க தனியாக செல்கிறார்.
இரவு முழுவதும் அப்பாவை காணவில்லை என தேடி அலைகிறார் அசோக். என்ன ஆனார் நாசர்.?
2வது கதையில்…
பிரபலமான இயக்குனர் அறிவழகன் (கேஎஸ் ரவிக்குமார்) இவரது மகன் அபிஹாசன் அமெரிக்காவில் வளர்ந்தவர்.
சினிமா மீதுள்ள ஆசையால் நடிகராக அறிமுகமாகிறார். ஆனால் அப்பாவின் சென்டிமெண்ட் குடும்ப படங்கள் இவருக்கு சுத்தமாக பிடிக்காது.
அதிகார வர்க்க பணக்கார திமிரோடு வாழ்பவர். தந்தை துணை இல்லாமல் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என நினைப்பவர். இவர் ஒரு பிரச்சினையை சந்திக்கிறார். அப்பா உதவினாரா?
3வது கதை..
ஸ்டார் ஹோட்டலில் ஹவுஸ் கீப்பராக பணிபுரிபவர் மணிகண்டன். தனக்கு திறமை இருந்தும் மதிப்பு இல்லை என குமுறுபவர் இவர். மேலும் கொடுத்த வேலை எதுவாக இருந்தாலும் அதை முழுமையாக முடிக்காதவர். இவர் பாதியில் ஒரு வேலையை விட்டு சென்றதால் மற்றவர் பாதிக்கப்படுகிறார்..
4வது கதை..
ரித்விகாவின் கணவர் பிரவீன் ராஜா. தன் மனைவி தன் குடும்பத்தை வசதியாக காட்டிக் கொள்ள நினைப்பவர். காஸ்ட்லியான பொருட்களை வாங்கி தம்பட்டம் அடிப்பவர் இவர்.
உங்களுக்காக என்னால் அப்படி வாழ முடியாது என்பவர் ரித்திகா. இதனால் என்ன பிரச்சினை உருவானது?
இந்த நாலு கதைகளும் ஒரு கட்டத்தில் சந்திக்கிறது. ஒவ்வொருவரின் டென்ஷன்கள் மற்றவர்களின் பிரச்சினைக்கு எப்படி காரணமாகிறது? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்..
அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், ரித்விகா, அபிஹாசன், கே எஸ் ரவிக்குமார், நாசர் உள்ளிட்ட கேரக்டர்கள் அனைத்தும் சிறப்பு. இயக்குனர் கேரக்டருக்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்துள்ளது மிகச்சிறப்பு.
இதில் அதிகம் ஸ்கோர் செய்பவர் நடிகர் நாசர் தான். கொஞ்ச நேரமே வந்தாலும் சேரி பாஷைகளில் தன் பாசத்தை புரிய வைத்துள்ளார்.
கோபக்கார இளைஞனாக அசோக் செல்வன். இவர் வருங்கால மனைவியுடன் தன் தவறை உணர்ந்து அடங்கி போவது ரசிக்க வைக்கிறது.
எப்போதுமே கொடுத்த கேரக்டருக்கு மகுடம் சூட்டுபவர் நடிகர் மணிகண்டன். யதார்த்த நாயகனாக அசத்தியிருக்கிறார்.
SHIT… SHIT… என ஸ்டைலிஷ் இங்கிலீஷ் பேசியிருக்கிறார் அபிஹாசன். சில இடங்களில் ஓவர் ஆக்டிங் தெரிகிறது. குறைத்திருக்கலாம்.
ரித்விகா அவரது கணவர் பிரவீன் ராஜா இருவரும் சிறப்பு. பிரவீன் ராஜாவின் நண்பராக வரும் அந்த வக்கீல் சில காட்சிகளே என்றாலும் கவனிக்க வைக்கிறார்.
கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அனுபமாகுமார் பல சிறந்த நடிகர்கள் இருந்தும் அவர்களுக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.
டெக்னிஷியன்கள்…
மெய்யேந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு. சேரி காட்சியிலும் ஆடம்பர குடும்ப காட்சியிலும் மாறுபட்ட லைட்டிங் கொடுத்திருப்பது சூப்பர்.
ரதனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னனி இசை சில இடங்களில் கவனம் பெறுகிறது.
அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் பாஸ் மார்க்கும் பெறுகிறார்.
நான்கு கதைகளை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டே செல்வதால் ஒரு கதையை நாம் உணர்வதற்குள் அடுத்த கதை வருவதால் கவனம் சிதறுகிறது.
எமோஷனல் கதைதான் என்றாலும் அதை உணர்வுபூர்வமாக சொன்னாமல் போனதால் ரசிகர்களுக்கு சின்ன ஏமாற்றமே.
முக்கியமாக ஒரு விபத்து நடக்கிறது. அதுக்கு யார் காரணம்? என பொதுமக்கள் இறுதியாக தெரிந்துக் கொண்டார்களா? என்பதை இயக்குனர் சரியாக காட்சிப்படுத்தவில்லை. அதை ரசிகர்களே புரிந்துக் கொள்ளட்டும் விட்டுட்டாரா?
நடிகரை ட்ரோல் செய்யும் காட்சிகள் சிறப்பு. இது என்ன சொல்ல போகிறாய்? நடிகர் அஸ்வினை குறிப்பதாகவே உள்ளது. அவர் பேசி சர்ச்சையான இசை வெளியீட்டுக்கு விழாவுக்கு முன்பே எடுக்கப்பட்ட காட்சியா? என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.
ஆக.. நம்மில் பல பேர் பல டென்ஷன்களுடன் வாழும் மனிதர்கள் தான் என்பதை சொல்லி ரிலாக்ஸ் ஆக சொல்லியிருக்கிறார் டைரக்டர் விஷால் வெங்கட்.
Sila Nerangalil Sila Manidhargal review