சபரி விமர்சனம்… அம்மாவின் ஆசை

சபரி விமர்சனம்… அம்மாவின் ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சபரி விமர்சனம்… அம்மாவின் ஆசை

ஸ்டோரி…

வரலட்சுமி & கணேஷ் வெங்கட்ராம் இருவரும் தம்பதிகள்.. இவர்களுக்கு ஒரு மகள் ரியா. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விடுகின்றனர். இதனால் வரலட்சுமி தன் மகளை அழைத்துக் கொண்டு யாரும் தொடர்பு இல்லாத ஒரு காட்டுப் பகுதியில் உள்ள பங்களாவில் குடியேறி வசித்து வருகிறார்.

ஆனாலும் தன் மகள் தன்னுடன் இருக்க வேண்டும் என பிரச்சனை செய்து வருகிறார் கணேஷ்.. இந்த சூழ்நிலையில் ரியா தன் குழந்தை என உரிமை கோருகிறார் மைம் கோபி.

இதனால் வக்கீல் ராகுல் உதவியை நாடுகிறார் வரலக்ஷ்மி.. மைம் கோபி இறந்து பல மாதங்கள் ஆகிவிட்டது இறந்தவர் உன்னிடம் எப்படி பிரச்சினை செய்ய முடியும் என வக்கீல் கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள்.

ஆனால் தன் கண்ணுக்கு மட்டும் அவர் தெரிகிறார் என குழப்பம் அடைகிறார் வரலட்சுமி.

அடுத்தடுத்து என்ன நடந்தது? மகளை மைம் கோபி பறித்துக்கொண்டாரா?இறந்தவர் எப்படி உயிருடன் வந்தார்? இவர்களின் பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

நடிகர்கள்: வரலக்ஷ்மி, கணேஷ் வெங்கட்ராம், மைம் கோபி, மதுநந்தன், ஜபர்தஸ்த் பானி, ஷஷாங்க் சித்தம்செட்டி, ரிஷிகா பாலி, கேசவ் தீபக் மற்றும் பலர்.

ஒரு குழந்தையின் தாய் என்ற மெச்சூரிட்டி கேரக்டருக்கு ஏற்ப மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார் வரலட்சுமி.. பரிதவிப்பு பாசம் எமோஷன் ஆக்சன் என அனைத்தையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

ஸ்மார்ட் ஆக வரும் கணேஷ்க்கு பெரிதாக வேலை இல்லை.. குழந்தை வேண்டும் என பிரச்சனை செய்கிறார் அதன் பின்னர் திரைக்கதில் காணவில்லை ஆனால் கிளைமாக்ஸ் கட்சியில் வந்து ஒரு திருப்புமுனையை கொடுத்திருக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.

குழந்தை தனக்கு வேண்டும் என பிரச்சனை செய்துகொண்டு முறைத்துக் கொண்டும் துரத்திக் கொண்டுமே படத்தை முழுவதும் ஓட்டியிருக்கிறார் மைம் கோபி. சில காட்சிகளில் மிரட்டவும் செய்து இருக்கிறார்.

டெக்னீசியன்ஸ்…

இயக்குனர்: அனில் காட்ஸ்

தயாரிப்பாளர்: மகேந்திரநாத் கோண்ட்லா, மகரிஷி கோண்ட்லா

கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மே மாதம் 3 ஆம் தேதி இப்படம் வெளியானது..

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு கை கொடுத்துள்ளது.. இந்தக் காட்டு பங்களாவை வெறுமனே காட்டினால் எந்த பயமும் இருக்காது.. ஆனால் அதற்குப் பின்னணி இசை கொடுத்து அந்த வீட்டைக் கூட கொஞ்சம் மிரட்டலாக காட்டியிருக்கிறார்கள்..

தெலுங்கு இயக்குனர் அணில் இயக்கியிருக்கிறார்.. தெலுங்கில் உருவாக்கப்பட்ட தமிழுக்காக டப்பிங் செய்யப்பட்டு இருக்கிறது.

வரலட்சுமி, கணேஷ் மற்றும் மைம் கோபி உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் இருப்பதால் தெலுங்கு வாசத்தை மீறி தமிழ் மனமும் ஆங்காங்கே வீசுகிறது..

குழந்தைக்காக வாழும் அம்மா என்ற தாய் பாசத்தை கொண்டு கதையை நகர்த்தி இருந்தாலும் திடீரென மைம் கோபி வருகிறார் என்பதாகட்டும் மற்றவர்கள் மறுப்பதாகட்டும் வரலக்ஷ்மி மட்டும் நம்புவது ஆகட்டும் குழப்பமான மனநிலையிலே ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் இதற்கான தீர்வை எல்லாம் சொல்லி படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் அணில்.

ஆக சபரி.. அம்மாவின்ஆசை

Sabari movie review

—-

அரண்மனை 4 விமர்சனம்.. 3.75/5.. KIDS SUMMER TREAT

அரண்மனை 4 விமர்சனம்.. 3.75/5.. KIDS SUMMER TREAT

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரண்மனை 4 விமர்சனம்.. 3.75/5.. KIDS SUMMER TREAT

ஸ்டோரி…

சுந்தர் சி ஒரு வக்கீல்.. இவர் தன் அத்தை கோவை சரளாவுடன் வசித்து வருகிறார். இவரின் ஆரம்ப காட்சியே ஆக்ஷனில் ஆரம்பிக்கிறது.. அதற்கு அடுத்து கதையின் வேகம் தொடங்குகிறது.

இவரது தங்கை தமன்னா இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து ஒரு காட்டுக்குள் இருக்கும் அரண்மனைக்கு ஓடி வருகிறார்… அங்குதான் அவருக்கு சில அதிர்ச்சியான சம்பவங்கள் தெரிய வருகிறது.

ஒரு அரண்மனையில் வசித்து வருகின்றனர் தமன்னா மற்றும் சந்தோஷ் பிரதாப். இவர்களுக்கு ஒரு மகன் & ஒரு மகள் உள்ளனர்..

ஒரு நாள் அதிகாலை சந்தோஷ் வாக்கிங் செல்லும்போது அவரது உடலில் ஒரு தீய சக்தி நுழைந்து விடுகிறது.. இதனை அறிந்து கொள்கிறார் தமன்னா. அப்போதுதான் தன் மகளையே கொல்ல சந்தோஷ் திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது.

இதனையடுத்து தன் கணவனிடம் இருந்து தன் மகளையும் மகனையும் காப்பாற்ற போராடுகிறார் தமன்னா. ஆனால் ஒரு கட்டத்தில் சந்தோஷ் & தமன்னாவையும் கொன்று விடுகிறது தீய சக்தி.

ஆனால் காவல்துறையோ கணவன் இறந்த துக்கத்தில் தமன்னா தற்கொலை செய்து கொண்டார் என வழக்கை முடித்து விடுகிறது.

இதன் பின்னர் இந்த வழக்கை துப்பு துலக்கி நடந்த சம்பவங்களுக்கு என்ன காரணம்? இதில் பின்னணியில் யார்? தீய சக்தி யார்? என்பதற்கு விடை தேடுகிறார் சுந்தர் சி.. இதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

சுந்தர் .சி – சரவணன்
தமன்னா – செல்வி
ராஷி கண்ணா – மாயா
சந்தோஷ் பிரதாப் – இஞ்சினியர்
யோகி பாபு – மேஸ்திரி
டெல்லி கணேஷ் –  ஜமீன்
கருடா ராம் – சுவாமி ஜீ
விடிவி கணேஷ் – கார்பெண்ட்டர்

அரண்மனை என்ற தலைப்பு வைத்து விட்டு அரண்மனையை காட்டாமல் இருக்க முடியுமா? கேரளாவில் உள்ள அரண்மனையை அழகாகவே கலை நுணுக்கத்துடன் படம் எடுத்துக் காட்டி இருக்கின்றனர்.

இந்த படத்தில் சுந்தர் சிக்கு ஜோடி இல்லை.. பாடல்களும் இல்லை… ஆனாலும் தங்கைக்காகவும் குடும்பத்திற்காகவும் வாழும் பாசமிக்க அண்ணனாகவே வாழ்ந்திருக்கிறார்.. முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளிலும் எமோஷன் காட்சிகளிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமன்னா தாயாக அழகான நடிப்பிலும் பேயாக மிரட்டல் நடிப்பையும் கொடுத்திருக்கிறார்.

தன் கணவரிடமிருந்து குழந்தைகளை காப்பாற்ற அவர் படும் அந்த ஒரு காட்சி தாய்மார்களின் பாசத்தை காட்டுகிறது.

மற்றொரு நாயகி ராசி கண்ணா கவர்ச்சியாகவும் அழகாக வந்து செல்கிறார்.

விடிவி கணேஷ் யோகி பாபு கோவை சரளா மூவரின் காமெடி செம.. கடைசி அரை மணி நேரத்தில் இவர்களின் காட்சிக்கு உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது..

அதுபோல் சாமியாருடன் நடந்து செல்லும் போது நடிகர் சேஷு செய்யும் காமெடிகளும் சிரிக்க வைக்கிறது..

சந்தோஷ் பிரதாப், ராமசந்திர ராஜு, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, சஞ்சய், கே.எஸ்.ரவிகுமார்… மற்ற நட்சத்திரங்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

டெக்னீசியன்ஸ்…

இசை – ஹிப்ஹாப் தமிழா
திரைக்கதை வசனம் – வேங்கட்ராகவன்
ஒளிப்பதிவு – ஈ.கிருஷ்ணமூர்த்தி
படத்தொகுப்பு – பென்னி ஓலிவெர்
கலை இயக்குனர் – குருராஜ்
சண்டைப்பயிற்சி – ராஜசேகர்
நடனம் – பிருந்தா
பாடல்கள் – கோசேஷா, விக்னேஷ் ஶ்ரீ காந்த், முத்தமிழ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

கதை, திரைக்கதை, இயக்கம் – சுந்தர்.சி
தயாரிப்பு – குஷ்பு சுந்தர் (Avni Cinemax P Ltd), ஏ.சி.எஸ் அருண்குமார் (Benzz Media Pvt Ltd)

பேய் படங்களின் ஃபார்முலாவை அறிந்தவர் சுந்தர்சி. பேய் கதையை குடும்பக்கதையுடன் இணைத்து எப்படி ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பது என்ற கலையை அறிந்திருக்கிறார்.. அதற்கு ஏற்றபடி கதையை அழகாக அமைத்திருக்கிறார்.

இடைவேளைக்கு முன்பு வரை மெதுவாக நகரும் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு ஜெட் வேகத்தில் பறக்கிறது.. முதலில் கதையை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. அதனுடன் கனெக்ட் ஆக வேண்டும் என்பதற்காக கதையை மெதுவாக நகர்த்தி அதில் ரசிகர்களை இணைத்து திரைக்கதையின் வேகத்தை அதிகரித்து இருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சிகள் தீய சக்தி மற்றும் அம்மன் சக்தி இரண்டுக்கும் நடக்கும் அந்த அம்மன் பாட்டு செம ஹைலைட்டு.. அதுவும் அந்த பாடலுக்கு குஷ்புவையும் சிம்ரனையும் இணைந்து ஆட வைத்து ரசிகர்களை அம்மன் அருள் வந்து கொண்டாட வைத்து விட்டார் இயக்குனர் சுந்தர் சி.. நடன மாஸ்டர் பிருந்தாவின் நடனமும் பிரகாசிக்க செய்கிறது..

தீய சக்தி உருவ பொம்மைக்குள் நுழைந்து அங்கு தன் தங்கை தமன்னாவின் மகளை காப்பாற்ற போராடும் சுந்தர் சி பைட் அசுரவேகம்.. அதற்கு ஏற்ப வில்லனும் ஆறு அவதாரங்களை எடுத்து ரசிகர்களை கதறவிட்டிருக்கிறார்.

அம்மன் அருள் வந்து ரசிகர்கள் அமைதி காக்கும் வேளையில் திடீரென ‘அச்சச்சோ… என்ற பாடலை இணைத்து அதில் தமன்னா & ராசி கண்ணாவின் கவர்ச்சியும் காட்டி இந்த கோடை வெயிலுக்கு ஜில் ஐஸ்கிரீம் கொடுத்திருக்கிறார்..

மற்ற பாடல்கள் பெரிதாக கவனம் பெறாத நிலையில் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி..

குழந்தைகளுக்குப் பிடித்த பேய் கதையில் குழந்தைகளையே நடிக்க வைத்து மிரட்ட வைத்து அவர்களை தியேட்டரில் அலற விட்டு விருந்து படைத்திருக்கிறார் சுந்தர் சி.

Aranmanai 4 movie review

‘தாத்தா’.. : ஜனகராஜ் நடித்த குறும்பட விமர்சனம்

‘தாத்தா’.. : ஜனகராஜ் நடித்த குறும்பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தாத்தா’.. : ஜனகராஜ் நடித்த குறும்பட விமர்சனம்

‘தாத்தா ‘குறும்படம் விமர்சனம்

ஸ்டோரி…

தாத்தா ஜனகராஜ் தனது மனைவி ரேவதியுடன் (தனிக்குடித்தனம்) வசித்து வருகிறார்… தள்ளாத வயதிலும் ஒரு வீட்டின் செக்யூரிட்டியாக பணிபுரிந்து தனது வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கிறார். இவர்களது மகள் ஒரு நாள் அப்பாவிடம் தனது மகனை விட்டு செல்கின்றார்.

பேரன் வந்த சந்தோஷத்தில் தாத்தாவும் பாட்டியும் தலக்கால் புரியாமல் பேரனுக்காக ஒவ்வொரு விஷயமாக செய்கின்றனர். ஒரு கட்டத்தில் அவனுக்கு வீட்டில் போர் அடிக்கவே வேறு ஒரு வீட்டிற்கு சென்று விளையாடுகிறான்.

அப்போது ரிமோட் கார் ஒன்றை பார்க்கிறான்.. தனக்கும் ரிமோட் கார் வேண்டும் என தாத்தாவிடம் கேட்கவும் செய்கிறான்.. ஆனால் தாத்தாவிடமோ பணம் இல்லை..

அடுத்தது என்ன நடந்தது..? அடுத்து ஒரு நாள் மட்டுமே பேரன் இருப்பான் என்ற நிலையில் தாத்தா என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் இந்த குறும்படத்தில் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

ஜனகராஜ், ஏ.ரேவதி, ரிஷி, ஞான ஷ்யாம் , மோனிஷ்,கயல் தேவராஜ் ,தீபா , முருகன் மந்திரம், ராயல் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

பேரன் ஆசைப்பட்ட ஒரு சிறிய ரிமோட் காராக இருந்தாலும் அதை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தாத்தாவிடம் மேலங்கி நிற்பதை ஒவ்வொரு காட்சியும் தன் கண்களில் கூட உணர வைத்து நடித்திருக்கிறார் ஜனகராஜ்.

இவரை நாம் பல படங்களில் காமெடியனாக மட்டுமே பார்த்திருக்கிறோம்.. ஆனால் இதில் முழுக்க முழுக்க தன் பேரனுக்காக உருகும் ஒரு தாத்தாவாக நடிப்பை கொடுத்திருக்கிறார். ஜனகராஜ் மீண்டும் படங்களின் நடிக்க வேண்டும் என்பதே இந்த குறும்படத்தை பார்க்கும் ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்கும்.

இது ஒரு சிறிய குறும்படம் என்றாலும் அதிலும் கூட அன்பு, பாசம், துயரம், பூரிப்பு என அனைத்தையும் அனாயாசமாக வெளிப்படுத்தி உள்ளார்.

அவரது மனைவியாக நடித்துள்ள ரேவதியும் பாசம் காட்டும் பாட்டியாக சிறப்பு.

பேரன் சரணாக வரும் சிறுவன் ஞானஷ்யாமும் இயல்பாக நடித்திருக்கிறார் முக்கியமாக தாத்தா கார் என்று அவன் சொல்லும் வார்த்தைகளில் ஒரு ஏக்கமும் பரிதவிப்பும் அழகாகவே தெரிகிறது .

ஜனகராஜின் மகனாக ரிஷி நடித்துள்ளார்.

ஜனகராஜுடன் பணியாற்றும் வாட்ச்மேனாக முருகன் மந்திரம் , பழைய பொருட்கள் வாங்கும் ‘காயலான் ‘ கடைக்காரராக யோகி தேவராஜ், பேன்சி ஸ்டார் கடைக்காரராக ராயல் பிரபாகர் நடித்துள்ளனர். ஒரு காட்சி என்றாலும் கவனிக்க வைக்கின்றனர்.

அது போல தன்னிடம் பணம் இல்லை என்றாலும் ஜனகராஜன் விருப்பத்திற்காக கடன் வாங்கி கொடுக்கும் முருகன் மந்திரமும் நம்மை கவர்கிறார்.

டெக்னீசியன்…

இயக்கம்- நரேஷ்,.ஒளிப்பதிவு – வினோத் ராஜா , இசை -அமினா ரஃபீக் – சந்தோஷ் , கலை இயக்கம் – வீரசமர் , எடிட்டிங் -நாஷ், உடைகள் – வாசுகி, மேக் அப் -கயல் , தயாரிப்பு நிர்வாகம் -எஸ். செளத்ரி.
இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பில் கவிதா .எஸ் தயாரித்துள்ளார். இந்தக் குறும்படம் ஷார்ட் ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

குறும்படம் என்றாலும் எங்கும் குறை காணாதபடி அழகாக ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் வினோத் ராஜா..

முக்கியமாக பேரன் ஊஞ்சலாடு காட்சிகளிலும் அந்த வீட்டிற்குள் கேமரா செல்லும் அந்த காட்சியும் ரசிக்க வைக்கிறது.

தாத்தா பாட்டிகள் வாழும் பழைய காலத்து வீட்டை அழகாகவே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் கலை இயக்குநர் வீரசமர்.

எடிட்டர் நாஷின் உறுத்தல் இல்லாத படத்தொகுப்பு சிறப்பு.

இயல்பான வேகத்தில் பயணிக்கும் ஆற்றோட்டமான கதை கொண்ட படத்திற்குப் பக்கபலமாக அமினா ரஃபீக், சந்தோஷ் ஆகியோர் அமைத்த பின்னணி இசையும் அமைந்துள்ளது.

இயக்குநர் நரேஷ்.. சொல்ல வந்த விஷயத்தை அழகாக எளிமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.. வயதானவர்கள் குழந்தைகளை போல நடந்து கொள்வார்கள் என்பது போல… குழந்தைகளின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளும் தாத்தா பாட்டி நிச்சயம் இந்த 2K கிட்சுக்கு கூட ரொம்ப பிடிக்கும்..

THATHA shortfilm review

Legendary Actor #Janakaraj in #THATHA – heartwarming Grandpa-Grandson story now streaming only on #ShortFlix.

Movie link: shortflix.page.link/49de

@shortflixindia @Naresh_Dir_ @kavithareporter @cinemakaran_dop

அக்கரன் விமர்சனம் 3.5/5… அன்பான உக்கிரன்

அக்கரன் விமர்சனம் 3.5/5… அன்பான உக்கிரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்கரன் விமர்சனம் 3.75/5… ஆவேச உக்கிரன்

ஸ்டோரி…

கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.. இவரின் மனைவி இறந்து விடுகிறார்.. மனைவியின் போட்டோ மட்டும்?? (👸🏻😭) காட்டப்படுகிறது.

தாய் இல்லாத தன் இரண்டு மகள்களை பாசமாக வளர்த்து வருகிறார். மூத்தவள் வெண்பா.. 2வது மகள் பிரியதர்ஷினி.. அம்மா இல்லாத காரணத்தால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தை & தங்கையை பொறுப்பாக பார்த்துக் கொள்கிறார் வெண்பா.

ஒரு கட்டத்தில் படிக்க சென்ற தன் இரண்டாவது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் எம் எஸ் பாஸ்கர். ஆனாலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் எம் எஸ் பாஸ்கரை களத்தில் இறங்குகிறார்.

இவரது மகள் என்ன ஆனார்? கடத்தப்பட்டாரா? எங்கு சென்றார்? தந்தை எம் எஸ் பாஸ்கர் என்ன செய்தார் மகளை கண்டுபிடித்தார்? தன் தங்கையை தொலைத்த வெண்பா என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

எம்.எஸ். பாஸ்கர் / கபாலி விஸ்வந்த் / வெண்பா / ஆகாஷ் பிரேம்குமார் / நமோ நாராயணன் / பிரியதர்ஷினி அருணாச்சலம் / அன்னராஜ் கார்த்திகேயன் / கார்த்திக் சந்திரசேகர் / கண்ணன் / மஹிமா

காமெடியன் குணச்சித்திர கேரக்டர் என பல படங்களில் நாம் பார்த்து ரசித்து சிரித்து மகிழ்ந்த எம்.எஸ். பாஸ்கர் இதில் முழுக்க முழுக்க ஆக்சன் நாயகனாக மாறி இருக்கிறார். எம் எஸ் பாஸ்கருக்கு ஆக்ஷன் செட் ஆகுமோ? என்ற ஐயம் ரசிகர்கள் மனதில் எழும்.. அதற்கு சூப்பர் ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண் கே பிரசாத்.

தாயை இழந்த மகள்களை ஒரு தகப்பன் எப்படி வளர்க்க வேண்டும்? எப்படி அரவணைத்துக் கொள்ள வேண்டும்? என்பதை உணர்வுப்பூர்வமான நடித்து காண்பித்திருக்கிறார்.

அம்மா இல்லாத பெண் பிள்ளைகள் எப்படி பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை வெண்பா.. இவரைப் போலவே இவர் உடுத்தும் உடைகள் கூட அவ்வளவு அழகு.. தனக்கு பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்பதை தைரியமாக சொல்லும் அன்பான பெண்ணாக.. அதே சமயத்தில் தன் காதலனுக்காகவும் தன் தந்தைக்காகவும் அவர் உருகும் காட்சிகளிலும் அத்தனை அழகு..

கபாலி விஸ்வந்த் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் இதில் கதையின் நாயகனாக திருப்புமுனை கொடுக்கும் கேரக்டரில் சிறப்பாக செய்திருக்கிறார்..

வெள்ளையாக இருந்தாலும் வில்லனாக இருக்கலாம் கருப்பாக இருந்தாலும் கதையின் நாயகனாக இருக்கலாம் என இரண்டு பாத்திரங்களை கபாலி விஸ்வந்த் மற்றும் ஆகாஷ் பிரேம்குமார் செய்திருக்கின்றனர்.

மற்ற வில்லன் கார்த்திக் சந்திரசேகரும் ஒரு அனுபவமிக்க நடிகரை போல செய்து இருக்கிறார்..

இவர்களுடன் அரசியல்வாதி நமோ நாராயணன் / சிஸ்டர் பிரியதர்ஷினி அருணாச்சலம் / அன்னராஜ் கார்த்திகேயன் / கண்ணன் / மஹிமா ஆகியோரும் உண்டு.. இவர்கள் கதையின் ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

டெக்னீசியன்ஸ் …

எழுத்து & இயக்கம் – அருண் K பிரசாத்
இசை – ஹரி
ஒளிப்பதிவு – எம்.ஏ.ஆனந்த்
ஸ்டண்ட்- சரவெடி சரவணன்
கலை இயக்குனர் – ஆனந்த் மணி
எடிட்டர்- பி.மணிகண்டன்
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்- K.முத்துக்குமார்
நிர்வாகத் தயாரிப்பாளர் – கருப்பசாமி காளிமுத்து
இணை தயாரிப்பு – R V K
தயாரிப்பு – குன்றம் புரொடக்ஷன்ஸ்

படம் தொடங்கிய சில நிமிடங்களில் கதையின் வேகம் ஆரம்பித்து விடுகிறது. எனவே எந்த விதத்திலும் கதை மீதான கவனம் திரும்பி விடக்கூடாது என்பதை உணர்ந்து பாடல்கள் நிறைய இல்லாமல் அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார். அருண் கே பிரசாத்.

வெங்கட்ராமன் குரலில் ஹரியின் இசையில் உருவான ‘தெய்வம் தந்த பூவாய்….’ என்ற பாடல் இனி தந்தை – மகள் பாசத்தை போற்றும் பாடலாக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கேட்கலாம்.. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் களில் பார்க்கலாம்.

எம் ஏ ஆனந்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.. காரைக்குடி பகுதிகளில் பார்க்கும் பிரம்மாண்ட வீடு போல அழகான வீட்டை அழகாகவே காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.

அருண்கே பிரசாத் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. ஒரு பாசமான தந்தை தன் மகள்களை வளர்க்க படும் அர்ப்பணிப்பு உழைப்பு அனைத்தையும் அழகாக திரைக்கதையில் அமைத்திருக்கிறார்.

அதே நேரம் மகளை தொலைத்த தந்தையின் வேதனை ஆவேசத்தையும் ஒருங்கிணைத்து இந்த அக்கிரனை அக்கறையுடன் உருவாக்கி தந்திருக்கிறார் இயக்குனர்..

ஒரு தந்தை மகள் பற்றிய இந்த கதையில் இத்தனை வன்முறை தேவையா? என்ற கேள்வி நிச்சயம் எழுகிறது. முக்கியமாக குடிநீர் குழாயை திறந்தால் தண்ணீர் வருவது போல வன்முறை காட்சிகளை ரத்தம் பீறிட்டு அடிப்பது நம்மை பயமுறுத்துகிறது.. அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.

தாயில்லாத பெண் பிள்ளைகளை வளர்க்க ஒரு தந்தை எடுக்கும் அக்கறையும் அர்ப்பணிப்பும் தான் இந்த ‘அக்கரன்’.

Venba Vishwanths Akkaran review

ரத்னம் விமர்சனம்..; மாஸ் ஆக்ஷன்

ரத்னம் விமர்சனம்..; மாஸ் ஆக்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரத்னம் விமர்சனம்… மாஸ் ஆக்ஷன்

நடிகர் விஷால் & இயக்குனர் ஹரி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘ரத்னம்’.

இந்தப் படத்தில் விஷால் உடன் பிரியா பவானி சங்கர் நடிக்க சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய டி எஸ் ஜெய் எடிட்டிங் செய்ய பாடல்களை விவேகா எழுதியுள்ளார்.

தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சண்டை பணிகளை கனல் கண்ணன் மேற்கொண்டுள்ளார்.

கார்த்திகேயன் சந்தானம் ஜி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் ரத்னம் படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.

ஸ்டோரி…

1994 ஆம் ஆண்டில் கதை தொடங்கி… திருப்பதி செல்லும் பக்தர்களை வழி மறித்து அவர்களிடம் தங்கச் செயின்களை பறிக்கிறது கொள்ளையர் கூட்டம்.. இப்படியாக தமிழக – ஆந்திர எல்லையில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி வைத்திருக்கிறது இந்த கும்பல்

மற்றொருபுறம் வேலூரில் சமுத்திரகனியை கொல்ல வரும் ஒரு கும்பலிடம் இருந்து சிறுவயது விஷால் காப்பாற்றுகிறார்.

இந்த இரண்டு கதைகளும் 30 ஆண்டுகளுக்குப் பின் நகருகிறது.. 2024 ஆம் ஆண்டு கதை தொடங்குகிறது..

வேலூரில் சட்டமன்ற உறுப்பினராக எம்எல்ஏவாக வளர்ந்து நிற்கும் சமுத்திரகனிக்கு தளபதியாக வளர்ந்து நிற்கிறார் விஷால்.

ஒரு கட்டத்தில்.. மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் மெடிக்கல் சீட் கிடைக்காமல் 4வது முறையாக நீட் எழுத வேலூர் வருகிறார் பிரியா பவானி சங்கர்.. இவரை பார்த்த உடனே இவருக்காக ஓடி ஓடி நிற்கிறார் விஷால்.

பிரியாவைக் கொல்ல ஒரு கும்பலிடம் இருந்து தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றுகிறார்.. இது காதலாக இருக்குமோ என்ற நம்பிக்கையில் காதலை பிரியா சொல்ல நான் உன்னை காதலிக்கவில்லை என்கிறார் விஷால்.

அப்படி என்றால் பிரியாவுக்காக விஷால் ஓடி நிற்க காரணம் என்ன? இருவருக்கும் உள்ள பந்தம் என்ன?

பிரியாவைக் கொல்ல வரும் கும்பலின் நோக்கம் என்ன அவர்களின் பின்னணி என்ன? என்பதெல்லாம் படத்தின் மீதி கதை

கேரக்டர்ஸ்…

நாயகன் விஷால் நாயகி ப்ரியா பவானி சங்கர் என்றாலும் இருவருக்கும் ஜோடியாக பாடல் இல்லாமல் கதையை நகர்த்தி இருப்பது இயக்குனர் ஹரியின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.. அதில் ஒரு அம்மா சென்டிமென்ட் இணைத்து இருப்பது வித்தியாசமான கற்பனை.

விஷாலின் ஆக்ஷனுக்கு டன் கணக்கில் தீனி போட்டு இருக்கிறார் பைட் மாஸ்டர் கனல் கண்ணன்… திரை எங்கும் ரத்த தெறிக்கும் அளவில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது..

விஷாலுக்கு அடியாள் போல அதகளம் செய்து இருக்கிறார் யோகி பாபு.

கலகலப்புக்கு இரண்டு ஆள் வேண்டும் என்ற பெயரில் யோகி பாபு & மொட்ட ராஜேந்திரனும்.. இவர்களின் காமெடி படத்தை டிஸ்டர்ப் செய்கிறது..

நாயகி பிரியா பவானி சங்கர்.. நீட் மெடிக்கல் தேர்வை பற்றி பேசும் காட்சி மாணவர்களின் வலியை உணர்த்துகிறது.. இரண்டு தோற்றங்களில் வந்து இரு விதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நல்லவன் பாதி கெட்டவன் பாதி என்ற என்ற கொள்கை கேரக்டரில் அசத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.. விஷால் போடும் ஒவ்வொரு ஸ்கெட்சுக்கும் இவர் உதவும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது..

தங்க செயின்களை பறிக்கும் வழிப்பறிக் கொள்ளையர்கள் பெரிய தாதாக்களாக வளர்ந்து ஆந்திராவை மிரட்டும் வில்லன்களாக முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார் ஆகியோர் மாஸ் வில்லன்கள்.. அதிலும் மெயின் வில்லன் முரளி சர்மாவின் இன்ட்ரோ சீன் செம பில்டப்..

என்னதான் ஸ்டைலிஷ் இயக்குனர் என்று பெயர் எடுத்தாலும் ஹரி படத்தில் நடிக்கும் போது படபடவென பேசித்தானே ஆக வேண்டும்.. கௌதம் மேனன் ஒரே ஒரு காட்சியில் வந்து வேகமாக பேசி செல்கிறார்.

ஆந்திர அமைச்சராக கஜராஜ் கச்சிதம்..

இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், ஒய் ஜி மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் உள்ளனர்.

டெக்னீசியன்ஸ்…

படம் தொடங்கிய சில நிமிடங்களில் வரும் தாய் மகன் பாச பாடல் ரசிகர்களை கவரும்.. இதனை அடுத்து சில நிமிடங்களில் வரும் டோன்ட் ஒரி என்ற பாடல் ஆட்டம் போட வைக்கிறது.

எதுக்காக வந்து நிக்கிற? என் மேல் என்ன அக்கறை? என்ற பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.

பாடல்களை விட பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.. அதுவும் சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி அதிர வைக்கிறது..

ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கைவண்ணத்தில் காட்சிகளில் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது..

ஹரி படங்கள் என்றாலே வேகத்திற்கு பஞ்சம் இருக்காது.. வேகம் என்றாலும் குடும்ப செண்டிமெண்ட் என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கும்.. ஆனால் இந்த படத்தில் அந்த டெம்ப்ளேட் ஃபார்முலாவை மீறி தமிழகம் மற்றும் ஆந்திரா எல்லையில் கதையை நகர்த்தி இருக்கிறார்.

நீட் தேர்வு… தமிழகம் & ஆந்திர அரசியல்… பிராமணர்களின் வாழ்க்கை முறை.. அவர்களின் பழிவாங்கும் எண்ணம்… வழிப்பறி கொள்ளையர்கள் இப்படி பல கதைகளை இணைத்து இரண்டு படங்களாக சொல்ல வந்த கதையை ஒரே படத்தில் எடிட்டிங் செய்து படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் ஹரி.

ஹரியின் அதிரடி வேகம் விஷாலின் ஆக்சன் வேகம் என இரண்டும் கலந்து விறுவிறுப்பாக செல்கிறது.. அரை மணி நேரத்திற்கு ஒரு ஃபைட் என தெறிக்க விட்டிருக்கிறார் பைட் மாஸ்டர் கனல் கண்ணன்.. இவை நிச்சயம் தெலுங்கில் தெறிக்கவிடும்..

Vishals Rathnam movie review

ஒரு நொடி விமர்சனம்… 3.75/5.. ஒவ்வொரு நொடியும் பதட்டம்

ஒரு நொடி விமர்சனம்… 3.75/5.. ஒவ்வொரு நொடியும் பதட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு நொடி விமர்சனம்… 3.75/5..

ஒரு நொடி என்பது வாழ்க்கையில் சாதாரணமாக விஷயமாக சாதாரண மனிதனுக்கு தோன்றலாம்.. ஆனால் அந்த ஒரு நொடி என்பது ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரர்களுக்கு பெரிய விஷயமாகும்..

அதுபோல ஒருவனின் வாழ்க்கையில் அந்த ஒரு நொடி என்ன செய்தது? அவனின் வாழ்க்கை எப்படி மாறியது என்பதுதான் இந்த படத்தின் கதை.

ஸ்டோரி…

தன் கணவர் எம்எஸ் பாஸ்கரை காணவில்லை எனவும் வேலராமமூர்த்தி மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி..

இந்த வழக்கை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் தமன்குமார்.

எம் எஸ் பாஸ்கர் என்ன ஆனார்? எங்கு சென்றார்? என எந்த துப்பும் கிடைக்காத நிலையில் திடீரென நிகிதா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவர் தீபாவின் மகள்.

இந்த கொலை தொடர்பான விசாரணையிலும் எந்த ஒரு முன்னேற்றமும் கிடைக்காத நிலையில் குழம்பி போகிறார் இன்ஸ்பெக்டர் தமன்குமார்.

இந்த இரு வழக்குகளுக்கும் படத்தின் தலைப்பான ஒரு நொடி-க்கும் என்ன சம்பந்தம்? இறுதியில் என்ன ஆனது? என்பதை சொல்லி த்ரில்லாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் மணிவர்மன்.

கேரக்டர்ஸ்…

தமன்குமார், நிகிதா, எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, தீபாஷங்கர், ஸ்ரீரஞ்சனி உட்பட பலர் நடித்துள்ளனர்.

போலீஸ் வேடத்திற்கு பத்துப் பொருத்தமும் பக்காவாக இருக்கிறது என்பது போல அலட்டிக் கொள்ளாத நடிப்பில் நம்மை கவர்கிறார் தமன் குமார். இவருடன் வரும் இதர போலீஸ் அதிகாரிகளும் அருமையான நடிப்பு வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

கணவரை தொலைத்த கலக்கம்.. காவல் நிலையம் செல்ல தயக்கம் என இரண்டையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்ரீரஞ்சனி..

எம் எஸ் பாஸ்கரின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம்.. சின்ன வேடம் என்றாலும் முத்திரை பதித்து விடுவார். இந்த படத்தில் குறைவான காட்சிகளில் வந்து நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவரின் நண்பராக வரும் கஜராஜன் கவனிக்கத்தக்க நடிப்பை கொடுத்திருக்கிறார்..

நாயகி நிகிதா… பாசம் பதட்டம் என அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.. ஆண்கள் மட்டுமே திரையில் காட்டப்பட்ட போது இவரின் முகம் நமக்கு ஆறுதலை தருகிறது..

நிகிதாவின் அப்பா நடிப்பு ரசிக்க வைக்கிறது… அம்மா தீபா ஷங்கரின் நடிப்பு கவனிக்க வைத்தாலும் சில இடங்களில் ஓவர் ஆக்டிங்..

முடி திருத்தும் கலைஞராக வரும் விக்னேஷ் ஆதித்யா கேரக்டர் எதிர்பாராத திருப்பத்தை கதையில் உண்டாக்குகிறது.

டெக்னீசியன்ஸ்…

கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சஞ்சய் மாணிக்கம் இசை அமைத்துள்ளார்..

பாடல் ஆசிரியர் ஜெகன் கவிராஜ் எழுதிய ‘கொல்லாதே….’ என்ற பாடல் கதையின் உணர்வை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு..

சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை க்ரைம் திரில்லருக்கான உணர்வை ஒவ்வொரு நொடியும் தந்து இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ரித்தீஷ் தன்னுடைய கேமரா கோணங்களில் நம்மை படபடக்க வைத்து நகர்த்தி இருக்கிறார்.

முழுக்க முழுக்க ஒரு நொடியை மையப்படுத்தி கதையை நகர்த்தி இருக்கிறார்.. எந்த இடத்திலும் வேறு எங்கும் கதை செல்லாத வண்ணம் நாயகன் நாயகி எனக் கதைகளை திசை திருப்பாமல் சீட் நுனியில் நம்மை உட்கார வைத்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் மணிவர்மன்.

நாம் இதுவரை பார்த்த பெரும்பாலான படங்களில் ஒரு கொலை என்றால் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கும். ஆனால் எதிர்பாராத ஒரு விஷயத்தை வைத்து ஒரு நொடி-யை இயக்குனர் சொன்ன விதம் அருமையோ அருமை..

இன்ஸ்பெக்டர் தமன்குமார் தன்னிச்சையாக செயல்படுவதாகவே படத்தை நகர்த்தி இருப்பது ஒரு கேள்விக்குரி தான்.. இவருக்கு மேலே உயர் அதிகாரிகள் எவருமே இல்லையா?

முதலில் சந்தேக வளையத்துக்குள் வரும் வேலராமமூர்த்தி இறுதியில் என்ன ஆனார் என்பதற்கான விடை எங்கும் இல்லை.

அவரைப்போல மிரட்டல் அரசியல்வாதியாக காட்டப்படும் பழ கருப்பையாவின் கேரக்டரும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் தொலைந்து விடுகிறது.?

எந்த ஒரு திரைக்கதையாக இருந்தாலும் அது ரசிகனுடன் தொடர்பில் இருந்தால் மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும்.. இந்த படத்தில் கொலையாளி அவரா இவரா என நம்மையும் யோசிக்க வைத்து படத்துடன் ஒன்றை வைத்து பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணிவர்மன்.

மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தனஞ்செயன் வழங்குகிறார். ஏப்ரல் 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

ஆக ஒரு நொடி.. ஒவ்வொரு நொடியும் பதட்டம்

Oru Nodi movie review

More Articles
Follows