தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சாமானியன் விமர்சனம் 3.5/5.. நம்ம ஊரு கடன்காரன்
ஸ்டோரி…
ராமராஜன் – ராதாரவி – எம் எஸ் பாஸ்கர் இவர்கள் மூவரும் பால்ய சிநேகிதர்கள்.. ராதாரவி சென்னையில் வசிக்க ராமராஜன் எம் எஸ் பாஸ்கர் மதுரை ஒரு கிராமத்தில் வசிக்கின்றனர்.
ஒரு நாள் சென்னைக்கு தன் நண்பனை காண ராமராஜன் எம் எஸ் பாஸ்கர் செல்கின்றனர்.. அங்குள்ள பிரபல வங்கிக்கு 35 லட்சம் பணத்தை டெபாசிட் செய்ய இருப்பதாக சொல்லி வங்கிக்கு செல்கிறார் ராமராஜன்.
அங்கு சென்ற பின்னர் தான் அந்த வங்கி அதிகாரிகளை பிணைய கைதிகளாக வைத்து தன்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பாம் வெடிக்க வைத்து கொன்று விடுவேன் என மிரட்டுகிறார்.
இதே நேரத்தில் போஸ் வெங்கட்டின் மனைவி வினோதினி & மகளை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகிறார் எம் எஸ் பாஸ்கர்.
அதே நேரத்தில் மற்றொரு வீட்டில் கர்ப்பிணியான ஸ்மிருதி வெங்கட்டை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகிறார் முஸ்லீம் பாய் ராதாரவி.
இந்த மூன்று நண்பர்களும் ஒரே நேரத்தில் இப்படி நடத்திக் கொள்வதன் நோக்கம் என்ன? இவர்கள் யார்? வங்கி அதிகாரிகளை மிரட்ட என்ன காரணம்? அதிகாரிகள் செய்த தவறு என்ன? நினைத்ததை இந்த சாமானியர்கள் சாதித்தார்களா என்பது தான் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
Ramarajan, Radharavi, MS Bhaskar, Boss Venkat, Mime Gopi, KS Ravikumar, Saravanan Suppaiyah, Naksha Saran, Leo Siva Kumar, Vinothini, Deepa Sankar, Smruthi Venkat, Apranathi, Aranthangi Nisha, Saravanan Sakthi, Gajaraj, Mullai, Arul Mani, Kodandam, Supergood Subramani, and other’s.
14 வருடங்களுக்குப் பிறகு ரீஎண்ட்ரி கொடுக்கும் ராமராஜன் வழக்கமான கதைக்களத்தை எடுக்காமல் இந்த 2K கிட்ஸ்களுக்கு பிடித்த கதையை எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் விதமாக நடித்திருக்கிறார்.
எக்ஸ் ஆர்மி என்ற பிளாஷ்பேக் காட்சிகள் அவருக்கு பொருந்தவில்லை.. கொஞ்ச நேரம் ஓவியமாக காணப்பட்டாலும் அந்த காட்சிகளில் அவரது சிகை அலங்காரம் ஆர்மிக்கு ஒட்டவில்லை
முக்கியமாக 60 வயதானாலும் ஜோடி இல்லாமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ராமராஜனை பாராட்டலாம்.
மைம் கோபி, கோதண்டம், போஸ் வெங்கட் கே எஸ் ரவிக்குமார், சரவணா சுப்பையா உள்ளிட்டோர் கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு.. அதிலும் மெயின் வில்லன் மைம் கோபி மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இளம் காதலர்களாக லியோ சிவகுமார் மற்றும் நக்ஷாசரன்.. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் ஐடி வேலை தம்பதியர்களாக வாழ்ந்திருக்கின்றனர்.. வீட்டுக் கடன் நம் உயிரை குடிக்கும் ஆயுளை விழுங்கி விடும் என்பதை எச்சரிக்கை பதிவாக கொடுத்திருக்கின்றனர்.
ஸ்மிருதி வெங்கட் அழகான நாயகியாகவும் கண் கலங்க வைக்கும் கர்ப்பிணியாகவும் நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நியூஸ் ரிப்போர்ட்டர் அபர்ணா கொஞ்ச நேரம் என்றாலும் யார் இந்த ஆங்கர் என கவனிக்க வைக்கிறார்..
இவர்களுடன் வினோதினி, தீபா சங்கர், அறந்தாங்கி நிஷா, சரவண சக்தி, சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் உள்ளனர்.
டெக்னீசியன்ஸ்…
Written & Directed by
R RAHESH
Producer : V Mathiyalagan
Banner : Etcetera Entertainment
Music : Mestro Illayarajaa
Lyrics: Mestro Illayarajaa
Singers : Mestro Illayarajaa, Karthik, Sharreth
Cinematographer : C Arul Selvan
Editor : Ram Gopi
Story : V Karthik Kumar
Costume : SP Sugumar
Choreographer: Vishnuvimal
PRO : A. John
1980 களில் ரஜினி கமலுக்கு போட்டியாக கருதப்பட்டவர் ராமராஜன்.. இவரது படங்களும் சரி பாடல்களும் சரி சூப்பர் ஹிட். அதற்கு முக்கிய காரணம் இளையராஜா.. தற்போது இவர்களின் கூட்டணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது.
அந்தக் கால அளவு இசை ரசிக்க வைக்கவில்லை என்றாலும் ராமராஜன் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இளையராஜா.
வழக்கம்போல பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.. இந்த விறுவிறுப்பான பேங்க் திரில்லர் கதைக்கு பாடல்கள் தேவை இல்லை என்றாலும் இளையராஜா இணைந்திருப்பதால் இரண்டு பாடல்களை வைத்திருக்கிறார் இயக்குனர் ராகேஷ்.
அருள் செல்வம் ஒளிப்பதிவில் பேங்க் மற்றும் கிராமத்து காட்சிகள் அருமை. இடைவேளை முன்பு வரை வங்கியை மையப்படுத்தி காட்சி அமைப்புகள் உள்ளது. அதற்கு ஏற்ப கேமரா ஆங்கிள்களை வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்..
மேலும் ராமராஜனின் கிராமத்து ரசிகரை கவரும் வகையில் ஆடு மாடுகளை காட்டி அதற்குப் பின்னணியில் செண்பகமே செண்பகமே பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளனர்..
ராம் கோபி என்பவர் எடிட்டிங் செய்திருக்கிறார்.. இடைவேளை வரை காட்சிகள் விறுவிறுப்பாக செல்கிறது.. ராமராஜனின் மகள் & எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆகியோரின் பிளாஷ்பேக் காட்சிகளில் கத்திரிப் போட்டு இருக்கலாம்..
முக்கியமாக ராமராஜனின் ஒப்பனையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. அதுபோல இந்தியன் ஆர்மி காட்சிகளில் ராமராஜனின் உருவமும் தோற்றமும் பொருந்தவில்ல..
கிராமத்து ராமராஜனை சிட்டியை மிரட்டும் ராஜனாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ராகேஷ்.. ராமராஜன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஆங்காங்கே சொர்க்கமே என்றாலும்… செண்பகமே செண்பகமே… உள்ளிட்ட பல பாடல்களை ஒலிக்கவிட்டு இருக்கிறார் இயக்குனர்.
வங்கி வீட்டுக் கடனால் அவதிப்படும் சாமானிய மக்களின் வலியை எதார்த்தமாக சொல்லி இருக்கிறார்.. 40 வருடங்களுக்கு முன்பு வங்கியில் லோன் எடுத்தாலும் மக்கள் சந்தோஷமான வாழ்வை அனுபவித்தனர்.. ஆனால் தற்போது கார்ப்பரேட் வங்கிகளால் லோன் பெறும் ஒவ்வொருவரும் அல்லோல் படும் வலியை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார்.
சாதாரண பெட்டிக்கடையில் கூட கடன் அன்பை முறிக்கும் என்ற வாசகம் இருக்கும். ஆனால் வங்கியில் அப்படி எந்த ஒரு வாசகம் இடம் பெறுவதில்லை என்பதையும் வங்கி லோன் பத்திரத்தில் முக்கிய குறிப்புகளை கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பதிவிட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்..
ஆக.. இந்த சாமானியன்.. லோன் வாங்கும் சாமானியர்களுக்கு எச்சரிக்கை பதிவு..
ராமராஜன் பாணியில் சொல்வதென்றால் நம்ம ஒரு கடன்காரன்..
Ramarajans Saamaniyan movie review