தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன் லைன்…
பவுடர் பூசிக்கொண்டு தன் முகத்தை மறைக்கும் மனிதர்களின் ஒரிஜினல் முகத்தை காட்டி இருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.
கதைக்களம்…
1) தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத எம்எல்ஏ-வை ஒரு கும்பல் போட்டு தள்ளுகிறது. இது ஒரு கதை.
2) கமிஷனர் வீட்டில் ஒருவர் தொலைந்து போக அதைப்பற்றி விசாரிக்க நிகில் முருகனை இரவில் அழைக்கிறார் கமிஷனர் ரயில் ரவி.
3) சினிமாவில் பணிபுரியும் விஜய்ஸ்ரீ தன் மகன் ஆன்லைன் வகுப்புக்காக கேட்ட செல்போனுக்காக வேறுவழி இல்லாமல் ஒரு கொலை பழிக்கு ஆளாகிறார்.
4) தன் மகள் அனித்ராவை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலனிடம் நியாயம் கேட்கிறார் தந்தை வையாபுரி.
5) காதலித்தபோது தன்னை நெருக்கமாக படம் எடுத்து மிரட்டும் காதலனிடம் பணம் கொடுக்க வருகிறார் வித்யா பிரதீப். அதிகாலை இவருக்கு திருமணம்.
6) இதனிடையில் சென்னையில் மனிதக்கறி வேட்டை.. இரவில் திருடும் கும்பல்… காதலர்களின் ரொமான்ஸ்.. என திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர்.
இந்தக் குட்டி குட்டிக் கதைகளை ஒன்றோடு ஒன்றாக இணைத்து இறுதியில் வித்தியாசமான க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் டைரக்டர் விஜய்ஸ்ரீ.
கேரக்டர்கள்…
சீரியஸ் ரோலில் விஜய் ஸ்ரீ காணப்பட்டாலும் கிளைமாக்ஸ்சில் அவரது செய்கை சபாஷ் போட வைக்கும். பரட்டை என்ற கேரக்டரை பட்டை தீட்டியிருக்கிறார்.
பிஆர்ஓ நிகில் முருகன் முதல்முறையாக கதை நாயகனாக நடித்துள்ளார். தன்னால் முடிந்தவரை ராகவன் கேரக்டரை கொடுத்துள்ளார். இவரது குரல் இவருக்கு பிளஸ் பாயிண்ட்.
இதுவரை ஏற்காத ஒரு சீரியஸ் கேரக்டரில் வையாபுரி. இனி இவருக்கு தந்தை வேடங்கள் அதிகமாக வரும்.
நாயகியாக அனித்ரா. அழகான நடிகை. ஒரு பக்கம் காதல்.. ஒரு பக்கம் குடும்பம்.. என தன் தவிப்பை நடிப்பில் காட்டியிருக்கிறார்.
அதிகாலை திருமணத்தை வைத்துக் கொண்டு தன் முன்னால் காதலனிடம் சிக்ககிய பறவையாக வித்யா பிரதீப்.
இளையா வரும் காட்சிகள் இளைஞர்களுக்கு இன்பமயமே. மியாவ் மியாவ் என்ற பூனை சத்தம் பூரிப்பு. சாந்தினி ஹாட்..
வித்யா பிரதீப்பின் காதலன் ராணவ் ஆகியோரும் கவனம் வைக்கின்றனர்.
சின்ன சின்ன கேரக்டரில் வரும் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பில் கச்சிதம்.
முக்கியமாக வையாபுரியுடன் வரும் விக்கி தன் பயந்த சுபாவத்தால் நம்மை கவர்கிறார்.
இவர்களுடன் ஆதவன் மற்றும் சில்மிஷம் சிவா இருவரின் காமெடி (காம நெடி) உச்சகட்டம். ஆதவன் அரசாங்கத்தை கிண்டல் அடிக்கும் காட்சிகள் சிறப்பு. அதுபோல சில்மிஷம் சிவா பேசும் இங்கிலீஷ் வார்த்தைகள் ரசிக்கும் ரகம்.
எம்எல்ஏ நமஸ்காரம், மொட்ட ராஜேந்திரன்.. சிங்கம் புலி.. செக்யூரிட்டி தர்மா.. அடியாள் சதீஷ் முத்து போலீஸ்காரர்கள் ஒற்றன் துரை, ராமராஜ் அர்ஜுன், ராயல் பிரபாகர் உள்ளிட்டோரும் கவனம் பெறுகின்றனர்.
டெக்னீஷியன்கள்…
படத்திற்கு இசையமைத்துள்ளார் லியாண்டர் லீ மார்ட்டி. பின்னணி இசை பெரிதாக பேசப்படும்.
மேலும் சாயம் போன வெண்ணிலவே.. நோ சூடு நோ சொரணை ஆகிய பாடல்கள் ரசிக்கும் ரகம். படத்தின் ஒளிப்பதிவை ராஜா பாண்டி மற்றும் பிரஹத் என்பவர் செய்திருக்கின்றனர். இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி.
இரவு நேர காட்சி என்றாலும் ஒவ்வொரு கதைக்கும் ஏற்ப லைட்டிங் கொடுத்து செய்து இருப்பது சிறப்பு.
படத்தை நீண்ட நேரம் இழுக்காமல் சிறப்பாக கட்டிங் செய்திருக்கிறார் எடிட்டர் குணா.
படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் விஜய்ஸ்ரீ.
படத்தின் வசனங்கள் பலம்..
முக்கியமாக மின்சார ஒயர்களை அணில் கடிப்பது… போலீஸ் வரும்போது சைரன் அடித்துக் கொண்டே வருவது.. இதனால் திருடர்கள் உஷாராவது என்பதையும் கிண்டல் அடித்துள்ளார்.
இரவு நேரத்தில் கூட காவல்துறை அதிகாரிகள் அவர்களது உயர் அதிகாரிகளால் எப்படி எல்லாம் அலைக் கழிக்கப்படுகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.
அதுபோல மக்கள் நினைத்தால் எம்எல்ஏ-களுக்கு மரண பயத்தை உண்டாக்கலாம் என்பதையும் தன் பாணியில் சொல்லி இருக்கிறார்.
காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கு பாடம் கற்பித்திருக்கிறார்.
படத்தில் நெருடலான விஷயம்..
மனிதக்கறி என்பது கொலைக்கு நிகரானது.. ஆனால் அகோரிகள் மத்தியில் பிரபலமான மனிதக்கறியை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஒரு காட்சியில் மனிதக் கறி அடங்கிய பெட்டியை HUMAN MEAT ஹியூமன் மீட் என்ற பெயரில் ஒருவர் டெலிவரி செய்வது என்பது பெரும் கேள்விக்குறி??!? அது இயக்குனருக்கே வெளிச்சம்..
ஆக பவுடர்.. பட்டை தீட்டிய பரட்டை