தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பகலறியான் விமர்சனம் 3/5.. நைட் ரைடு
ரிஷிகேஷ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் லதா முருகன் தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்து முருகன் இயக்கி இருக்கும் படம் ‘பகலறியான்’.
வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, வினு பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பகலை அறியாத ஓர் இரவு பறவை என்பது தான் இந்தப்படத் தலைப்பின் பொருள்..
ஓர் இரவில் நடக்கும் இரண்டு கதைகளை இணைத்து ‘பகலறியான்’ படத்தை இயக்கியிருக்கிறார் முருகன்…
ஸ்டோரி…
தந்தையை கொன்று சிறுவயதிலேயே ஜெயில் தண்டனை அனுபவித்தவர் நாயகன் வெற்றி.. வெளியே வந்த பிறகு இவரை நாயகி காதலிக்கிறார்.. ஆனால் முன்னாள் கைதிக்கு பெண் தர மறுக்கிறார் நாயகியின் தந்தை..
எனவே தந்தைக்குத் தெரியாமல் ஓடி சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என காரில் ஏற்றி இரவில் பயணிக்கிறார் வெற்றி.. ஆனால் ஒரு பெண் புரோக்கரிடம் தன் காதலியை விற்று விட துடிக்கிறார்.
இதே சமயத்தில் தன் தங்கையை காணவில்லை என்று என இரவு முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறார் மற்றொரு நாயகன் முருகன்.. தனது எதிரி கும்பல் தான் தங்கையை கடத்தி வைத்திருக்கிறதா என்று எண்ணி அவர்களுடன் மோதுகிறார்..
இந்த இரு கதைகளும் சந்திக்கும் வேளையில் படத்தில் ஒரு கனமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் முருகன்..
கேரக்டர்ஸ்…
ஜீவி & ஜீவி 2 உள்ளிட்ட படங்களில் வெற்றி நாயகனாக வந்த நாயகன் வெற்றி இதிலும் ஒரு கனமான அழுத்தமான கேரக்டரை தேர்ந்தெடுக்கிறார்.. ஆனால் எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான முகபாகனைகளை அவர் இன்னும் எத்தனை காலம் தான் வைத்து கொண்டே இருப்பாரோ? தம் அடித்தும் முறைத்து படத்தை ஓட்டிவிட்டார் நாயகன் வெற்றி.
ஒரே மாதிரியாக கார் கண்ணாடியை பார்த்துக் கொண்டே நாயகியை முறைக்கும் அந்த காட்சிகளை ரிப்பீட் மோடில் ஓட விட்டாரோ இயக்குனர் என தெரியவில்லை.
சைலன்ட் கேரக்டரில் நடித்து வைலன்ட் காட்டி இருக்கிறார் செகண்ட் ஹீரோ முருகன்.. கிளைமாக்ஸ் காட்சியில் இவரது நடிப்பும போற்றும் வகையில் உள்ளது.. அதேசமயம் எல்லாருமே நீண்ட தலை முடி தாடியிடம் வைத்திருப்பதால் யார் எவர்?என்று கன்பியூஷன் ஏற்படுகிறது.
நாயகி அக்ஷயா கந்தமுதன் கண்களாலும் உதடுகளாலும் கவனிக்க வைக்கிறார்.. காதலனை நம்பி வந்திருக்கும் நாயகி ஒரு கட்டத்தில் நாயகனின் பிளான் வேறு என்பதை தெரிந்த பின் இவர் கொடுக்கும் ரியாக்ஷன் செம ஆக்டிங்..
இதுவரை நாம் பார்க்காத வித்தியாசமான கேரக்டரில் காமெடியன் சாப்ளின் பாலு நடித்திருக்கிறார்.. பெரும்பாலும் இவரைப் போன்ற முன்னாள் காமெடியன்கள் டான் ஹீரோக்களுக்கு ஆலோசகராக வருவார்கள்.. இவரும் அதற்கு விதிவிலக்கல்ல!
போலீசாக நடித்திருக்கும் சாய் தீனா-வின் கேரக்டர் வேஸ்ட்.. இவருடன் வரும் மற்றொரு போலீஸ் ஓவர் ஆக்டிங்.. இந்த சீன்களை வெட்டி இருக்கலாம்..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் அபிலாஷின் கேமரா இரவு வெளிச்சத்தில் காட்சிகளை ரம்யமாக்கி இருக்கிறது..
விவேக் சரோவின் இசையில் பின்னணி இசை காட்சிகளை திரில்லாக கொண்டு செல்கிறது.. பாடல்கள் ஓகே ரகம்… படத்தொகுப்பாளர் குரு பிரதீப் தன் பணியில் நேர்த்தி..
2வது நாயகனாக நடித்திருக்கும் முருகன் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. இவரது தோற்றம் கரடு முரடு என்றாலும் வாய் பேச முடியாதவராக நம்மை கவனிக்க வைக்கிறார்.. முக்கியமாக நடிப்பில் நம்மை பேச வைக்கிறார்..
மாநகரம் மற்றும் பவுடர் ஆகிய படங்கள் ஓர் இரவில் நடக்கும் கதையை மையப்படுத்தி இருக்கும்.. அந்த பாணியில் இந்த படமும் வந்திருக்கிறது.
ஆனாலும் இடைவேளை வரை காட்சிகள் கன்ப்யூஷன் மோடில் இருக்கிறது.. கேரக்டர் விளக்கம் கொடுத்து படத்தை தொடங்கி இருக்கலாம்..
இறுதியில் எதிர்பாராத திருப்புமுனையை கொடுத்து நம்மை கொஞ்சம் கலங்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனர்.. கிளைமாக்ஸில் எந்த ஒரு வசனத்தை வைக்காமல் ஓர் அழகான காதல் புரிதலை காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் முருகன்..
ஆக பகலறியான்.. நைட் ரைடு
Pagalariyaan movie review