FIRST ON NET படிக்காத பக்கங்கள் பட விமர்சனம் 3.25/5.. பயனுள்ள பக்கங்கள்

FIRST ON NET படிக்காத பக்கங்கள் பட விமர்சனம் 3.25/5.. பயனுள்ள பக்கங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

FIRST ON NET படிக்காத பக்கங்கள் பட விமர்சனம் 3.25/5.. பயனுள்ள பக்கங்கள்

செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக கவர்ச்சியாக நடித்துள்ள படம் ‘படிக்காத பக்கங்கள்’.

இதில் பிரஜின், ஜார்ஜ் மரியன், ஆதங்க பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பெரிய விபத்திற்குப் பிறகு கதையின் நாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்திருக்கும் படம் ‘படிக்காத பக்கங்கள்’ இதில் நடிகையாக ஸ்ரீஜா என்ற பெயர் நடித்திருக்கிறார்.

ஸ்டோரி…

சேலத்தில் ஏற்காடுக்கு ஷூட்டிங் வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.. அப்போது ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அவரைப் பேட்டி எடுக்க லோக்கல் சேனல் ரிப்போர்ட்டர் என்ற பெயரில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டு அந்த ஹோட்டலுக்கு வருகிறார் ரிப்போர்ட்டர் (சைக்கோ வில்லன்) முத்துக்குமார்.

நடிகையைபேட்டி எடுத்துக் கொண்டிருக்கும்போத.. உங்களின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் யாருடன் படுத்தீர்கள்? எவ்வளவு கோடி உங்களிடம் இருக்கிறது? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்.

இதனால் கடுப்பான யாஷிகா அவரை செருப்பால் அடித்து கேமராவை உடைத்து விடுகிறார்.. இதனால் கடுப்பாகும் அந்த ரிப்போர்ட்டர் கேமரா ஸ்டாண்ட் எடுத்து அவரது தலையில் அடித்து யாஷிகாவை நாற்காலியில் கட்டிப்போட்டு துன்புறுத்துகிறார்.

உன்னுடன் நான் படுக்க வேண்டும்.. உன்னுடைய தீவிர ரசிகன் நான்” என்று மிரட்டுகிறார்.

என்னை கொன்று விடாதே.. நான் உன்னுடன் படுக்கிறேன் என சம்மதிக்கிறார் யாஷிகா. இருவரும் காம லீலையில் ஈடுபடும்போது திடீரென ரிப்போர்ட்டரை அடித்து உதைத்து நாற்காலியில் கட்டி போட்டு விடுகிறார் யாஷிகா.

நான் சாதாரண ஆள் இல்லை.. என்னிடம் பெரிய நெட்வொர்க் இருக்கிறது.. உன்னை போன்ற நடிகைகளை பெரிய விஐபிகளுக்கு விருந்தாக்கி பணம் பார்க்கும் கும்பல் நான்.. நான் செல்லவில்லை என்றால் உன்னை கொன்று விடுவார்கள் என மிரட்டுகிறார் அந்த ரிப்போர்ட்டர்.

நீ இங்கு வரவில்லை.. உன்ன வர வைக்க ஸ்கெட்ச் போட்டதே நான் தான் என்கிறார் யாஷிகா.. அப்படி என்றால் உண்மையில் யாஷிகா யார்? அவரது பின்னணி என்ன அந்த ரிப்போர்ட்டர் உண்மையில் யார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

இந்த படிக்காத பக்கங்களை பார்க்கத்தக்க வகையிலும் ரசிக்கத் தக்க வகையிலும் கவர்ச்சியாகவும் அழகாகவும் கொடுத்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அசத்தியிருக்கிறார்.. முக்கியமாக கவர்ச்சி தூக்கலாகவே இருக்கிறது.. கோடையிலும் சூடேற்றும் இவரது அழகு..

இரண்டு மணி நேர படத்தில் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு தான் வருகிறார் நாயகன் பிரஜின். இவரது கேரக்டர் படத்திற்கு திருப்புமுனை..

நாட்டில் ஒரு குற்றம் நடக்கும்போது அதன் பின்னணி என்ன? என்ற படிக்காத பக்கங்களை படிக்க வேண்டும் என்ற வசனங்களை சொல்லி ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் பிரஜின்..

சைக்கோ வில்லன் முத்துக்குமார் மிரட்டி இருக்கிறார்.. இவரது தலைமுடி இவருக்கு செட்டாகவில்லை.. கொஞ்சம் கவனித்து இருக்கலாம்..

அதுபோல ஆதங்க பாலாஜி மற்றும் தன்ஷிகா உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.

டெக்னீசியன்ஸ்…

பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார்… பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணிக்கிறது.. பாடலும் வரிகளும் ரசிக்கும் ரகமே..

இப்படத்திற்கு டாலி ஒளிப்பதிவு செய்ய, மூர்த்தி மற்றும் சரண் ஷண்முகம் எடிட்டிங் செய்துள்ளனர்.

பெரும்பாலும் சமீபத்திய படங்களில் நீளம் பெரும் குறையாக இருக்கிறது.. ஆனால் இந்த படிக்காத பக்கங்களை இரண்டு மணி நேரத்திற்குள் கொடுத்திருப்பது சிறப்பு.

இந்த படத்தை எஸ் மூவி பார்க் & பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன..

நாளிதழ்களில் குற்ற செய்திகளை படிக்கும் போது பெரிய எழுத்துக்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.. ஆனால் அதன் பின்னர் நடந்தது என்ன என்ற செய்திகளுக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது.. அதுபோல அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் செய்திகளுக்கு முக்கியத்துவம் இருக்காது இவைதான் அந்த படிக்காத பக்கங்கள்..

இப்படித்தான் நாட்டில் எந்த ஒரு நிகழ்வுக்கு முக்கியமான நிகழ்வுக்கு படிக்காத பக்கங்கள் நிறைய இருக்கிறது.. நாம் அறிந்திட வேண்டிய பக்கங்கள் நிறைய இருக்கிறது.. அந்த படிக்காத பக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த படத்தை இயக்கியிருக்கிறார் செல்வம் மாதப்பன்.

ஆக இந்த படிக்காத பக்கங்கள்.. பயனுள்ள பக்கங்கள்..

Padikaadha Pakkangal movie review

உயிர் தமிழுக்கு விமர்சனம்.. 3.5/5.. அரசியல் அலப்பறை

உயிர் தமிழுக்கு விமர்சனம்.. 3.5/5.. அரசியல் அலப்பறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உயிர் தமிழுக்கு விமர்சனம்.. 3.5/5.. அரசியல் அலப்பறை

சத்யராஜ் நடித்த தாய் மாமன் மற்றும் அமைதிப்படை என இரண்டும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.. காதலிக்காக அரசியல் களத்தில் இறங்குவது.. பின்னர் அரசியலில் படிப்படியாக முன்னேறுவது என இரண்டையும் கலந்து தான் இந்த ‘உயிர் தமிழுக்கு’ படத்தை கொடுத்திருக்கிறார் அமீர்.

ஸ்டோரி…

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தன் மாமன் இமான் அண்ணாச்சியுடன் தேர்தல் அலுவலகத்திற்கு செல்கிறார் அமீர்.. அங்கு மற்றொரு கட்சி சார்பாக போட்டியிட வந்திருக்கும் ஆனந்தராஜ் மகள் சாந்தினி ஸ்ரீதரனை பார்க்கிறார்..

பார்த்தவுடனே அவள் மேல் காதல்.. எனவே சாந்தினி போல தானும் தேர்தல் களத்தில் இறங்குவது என அந்த சமயத்திலேயே முடிவெடுத்து தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் அமீர்..

மெல்ல மெல்ல அரசியலில் முன்னேறும் போது சாந்தினிக்கும் அமீர் மீது காதல் வருகிறது.. இப்படியாக காதலும் அரசியலும் கலந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் ஆனந்தராஜ் கொல்லப்படுகிறார். அந்த கொலைப்பழி அமீர் மீது விழுகிறது. இதனால் காதலர்கள் இருவருக்கும் பிரச்சனை முற்றுகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது? ஆனந்தராஜை கொலை செய்தது அமிர்தானா? இதனிடையில் என்ன நடந்தது? அரசியலில் வென்று வந்தாரா அமீர்? காதலியை கரம் பிடித்தாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்….

மக்கள் போராளி அமீர் என பெயர் வேற வைத்து விட்டார்கள்.. அதற்கு ஏற்ப அரசியலை ஒரு கை பார்த்து விட்டார் அமீர்.. காதலிக்காக தேர்தல் களத்தில் இறங்கி கவுன்சிலர் முதல் மாவட்ட செயலாளர் வரை அலப்பறை செய்திருக்கிறார் அமீர்.

அரசியல் நையாண்டி.. தமிழ் இலக்கிய வசனங்கள்.. காதலியை ஓர கண்ணால் சைட் அடிப்பது.. என அனைத்திலும் ஸ்கோர் செய்து விட்டார் அமீர்.. முக்கியமாக சீரியஸான அமீராக இல்லாமல் ஜாலியான பேர் வழியாக நடித்திருக்கிறார்..

நாயகி சாந்தினி ஸ்ரீதரன்.. சேலையில் ஒல்லியாகவும் டீ சர்ட்டில் குண்டாகவும் காணப்படுகிறார்.. அதற்கு ஏற்ப 6 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு காட்சிகள் காட்டப்படுகிறது.. ஒருவேளை அவர் நிஜத்திலேயே குண்டாகி விட்டாரா அல்லது படத்திற்காக உடலை ஏற்றினார்? என்பது சாந்தினிக்கே வெளிச்சம்.. வெட்கப்படும்போதும் தலையை கோதும் போதும் ரசிக்க வைக்கிறார் சாந்தினி ஸ்ரீதரன்.

நாயகி அப்பாவாக ஆனந்தராஜ்.. இவரை சுற்றி தான் கதை நகர்கிறது ஆனால் இவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.. இவரின் வீட்டுக்கே வந்து அமீர் தேர்தல் பிரச்சாரம் செய்ய காட்சி ரசிகர்களுக்கு சம விருந்து அதிலும் அந்த காட்சி அமீர் பேசும் தமிழ் இலக்கிய வசனங்கள் நம்மை மெய்மறந்து கைதட்ட வைக்கும்..

இதர அரசியல்வாதிகளாக இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், குட்டிபுலி சரவணசக்தி உள்ளிட்டோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…

கேட்ட மெட்டையே கேட்க விடாமல் புதிதாக வித்தியாசமாக கொடுக்கும் இசை அமைப்பாளர்களில் ஒருவர் வித்யாசாகர். அவர்தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்

இதில் அமீர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் என்பதால் புரட்சித் தலைவர் பாணியில் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு.. என்ற பாடலுக்கு மெட்டு அமைத்திருக்கிறார். அந்தப் பாடல் நிச்சயம் எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.. இது மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் ஆகும்.. இவை இல்லாமல் அரசியல் நையாண்டி பாடலும் காதல் பாடலும் சிறப்பு..

ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்கள் பணிகளில் நேர்த்தி… ஒரு அரசியல் நையாண்டி படத்தை எப்படி கலகலப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தை அறிந்து அதற்கு ஏற்ப உழைத்திருக்கின்றனர்..

அரசியலுக்கு வந்த நடிகர்கள் வர ஆசைப்படும் நடிகர்கள் என அனைவரையும் கலாய்த்து வசனங்களை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதம்பாவா. அதுபோல அரசியலுக்கு வர மாட்டேன் என்ற ரஜினியும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.. ஆன்மீக அரசியல் இருக்கும்போது ஆன்மா அரசியல் இருக்காதா? என்பதையும் கிண்டல் அடித்திருக்கிறார்..

சரி அரசியல்வாதிகளை தான் கிண்டல் அடித்திருக்கிறார் என்றால் தேர்தல் ஆணையத்தையும் விட்டு வைக்கவில்லை.. ஆனால் அந்த காட்சிகளை சென்சாரி மியூட் செய்து இருக்கின்றனர்.. பாஜக திமுக அதிமுக காங்கிரஸ் என பல கட்சிகளை கிண்டல் அடித்தாலும் எம்ஜிஆரை மட்டுமே புகழ்ந்து காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதம்பாவா.

சரி.. தமிழ் மொழிக்காக தான் இந்த அரசியல் அலப்பறை என்று நீங்கள் நினைத்தால் ஏமாற்றப்படுவீர்கள்.. முழுக்க முழுக்க காதலிக்காகவே இந்த உயிர் தமிழுக்கு.. (ஆதம்பாவா.. உங்கள் லந்து தாங்கலய்யா..??!!!)

அரசியல் படம் என்பதால் ஒவ்வொரு காட்சியிலும் 100க்கும் மேற்பட்ட நடிகர்களை நடிக்க வைத்து பிரம்மாண்டம் காட்டி இருக்கின்றனர்..

ஆக இந்த.. உயிர் தமிழுக்கு.. அரசியல் அலப்பறை

Uyir Tamilzhuku movie review

Rasavathi ரசவாதி விமர்சனம் 3.75/5.. ரசனை வாதி

Rasavathi ரசவாதி விமர்சனம் 3.75/5.. ரசனை வாதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rasavathi ரசவாதி விமர்சனம் 3.75/5.. ரசனை வாதி

ஸ்டோரி..

சித்த மருத்துவர் சதாசிவ பாண்டியன் (அர்ஜுன் தாஸ்). கொடைக்கானலில் வசித்து வருகிறார்.. ஊருக்குள் இவருக்கு நல்ல மரியாதை.

ஒரு கட்டத்தில் அங்கு உள்ள ஹோட்டலில் மேலாளராக பணிபுரிய வருகிறார் தன்யா ரவிச்சந்திரன்.. அதே சமயத்தில் அந்த ஊருக்கு போலீஸ் ஆக வருகிறார் வில்லன் சுஜித் சங்கர்.

என்ன காரணத்தினாலோ நாயகன் அர்ஜுனை குறிவைத்து அவர் மேல் வீண் படழிகளை சுமத்துகிறார்.. மேலும் தன்யா உடன் அர்ஜுன் நெருங்கி பழகும்போது அவர்களை பிரிக்கவும் நினைக்கிறார்.

அர்ஜுனை வெறுக்கவும் அவரின் காதலியை பிரிக்கவும் என்ன காரணம்.? அர்ஜுன் தாஸ் & போலீஸ் சுஜித்தின் பின்னணி? இவர்களுக்கு மோதல் ஏன்.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

அர்ஜூன் தாஸ் – சதாசிவ பாண்டியன்
தன்யா ரவிச்சந்திரன்-  சூர்யா
சுஜித் சங்கர்- பரசு ராஜ்
ரேஷ்மா வெங்கடேஷ்-சந்திரா

கைதி மாஸ்டர் படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் கதையின் நாயகனாக வருகிறார்.. ஏற்கனவே அநீதி படத்தில் அருமையான நடிப்பை கொடுத்திருந்தார். இந்த ரசவாதி-யில் ரசனை மிகுந்த நடிப்பை கொடுத்து வசீகரிக்கிறார்.. இரண்டு நாயகிளுடனும் இவரது கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட்.. இவரது கனீர் குரல் இவரது பிளஸ்..

முதல் நாயகி தன்யா ரவிச்சந்திரன்.. இதுவரை ஏற்காத வேடம் ஏற்று நல்லதொரு நடிப்பை கொடுத்து பாராட்டை பெறுகிறார்..

மலையாள நடிகர் வில்லன் சுஜித் ஷங்கர் வேற லெவல் நடிப்பை கொடுத்திருக்கிறார். இவர் கொட்டாவி விடுவது கூட வித்தியாசமான கெத்து.. சீரியசான இந்த ரசவாதி-யில் கொஞ்சம் சிரிப்பையும் வரவைத்து வில்லத்தனமான நடிப்பை கொடுத்து நம்மை மிரட்டி இருக்கிறார்..

சந்திரா கேரக்டரில் வரும் ரேஷ்மா நம்மை அதிகமாகவே ரசிக்க வைக்கிறார்.. அடவாடி பெண்ணாகவும் கல்யாணத்திற்கு பிறகு அமைதியான பெண்ணாகவும் ரசிக்க வைக்கிறார்.. சபாஷ் சந்திரா.. சந்திரா என்ற பெயர் கேரக்டர்கள் தமிழ் சினிமாவில் அரிதானது..

ஜி.எம். சுந்தர்- முருகானந்தம்
ரிஷிகாந்த் – இளங்கோ
ரம்யா சுப்ரமணியன் -Dr. சைலஜா உள்ளிட்டோர் கேரக்டர்கள் படத்தின் கதை ஓட்டத்திற்கு தகுந்தார் போல ரசிக்கும் வகையிலான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்..

டாக்டர் சைலஜாவாக வரும் ரம்யாவின் கேரக்டர் கலகலப்புக்கு உதவி இருக்கிறது.. ரசிக்க தக்க நடிப்பை கொடுத்திருக்கிறார்.. சிறந்த நடிகர் ஜி எம் சுந்தரின் கேரக்டரில் கூடுதல் வலு சேர்த்து இருக்கலாம்..

டெக்னீசியன்ஸ்..

Writer & Director – Santhakumar
Producer – Santhakumar
Banner – DNA Mechanic Company
Co Producer – Saraswathi Cine Creation
Dop – Saravanan Ilavarasu
Music – Thaman S
Lyricist – Yugabharathi
Editor – V.J. Sabu Joseph
Art Director – Sivaraj Samaran
Stunt Master – Action Prakash
Dance Choreographer –  Sathish Krishnan
Makeup – Vinoth sukumaran
Costumer – Perumal Selvam
Costume Designer – Minuchitrangkani.J

தமன் இசை அமைத்திருக்கிறார்.. அதற்கு ஏற்ப பாடல் காட்சிகளும் அழகு.. பாடல்களை விட பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

சரவணன் இளவரசு ஒளிப்பதிவில் கொடைக்கானல் அழகு கொள்ளை அழகு.. வெயிலுக்கு இதமான கண்களுக்கு குளிர்ச்சியான காட்சிகளை கொடுத்திருக்கிறார்..

யுக பாரதியின் பாடல் வரிகள் இசையை தாண்டி ரசிக்க வைக்கிறது.. எடிட்டர் சாபு ஜோசப் தன் பணியில் நேர்த்தி..

‘மௌனகுரு & மகாமுனி’ ஆகிய படங்களை இயக்கிய சாந்தகுமார் இந்த படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார்.. அவரது பெயரிலேயே சாந்தம் இருப்பதால் என்னவோ தனது படங்களில் வரும் கேரக்டர்களும் முக்கியமாக நாயகன் கேரக்டரை சாந்தமாகவே கொண்டு செல்வது அவரது பாணி..

அரசியல்வாதி ஆன்மீகவாதி தீவிரவாதி போல இந்த ரசவாதி ஒருவர்.. சித்த மருத்துவம் (பாதம்) ரசாயனங்களை கலந்த ரசவாதி இவர்… படத்தின் தலைப்பில் அருகில் இங்கிலீஷ் சப்டைட்டில் இருப்பதால் சிலரால் புரிந்து கொள்ள முடியும்..

வர்மக்கலை சித்த மருத்துவம் இயற்கை ஆர்வலர் என சமூக ஆர்வம் கொண்ட ஒரு கேரக்டரை நாயகனாக உருவகப்படுத்தி அந்த கேரக்டருக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்..

தான் உண்டு தன் வேலையுண்டு என நாயகன் இருந்தாலும் அவருக்காகவே சில வில்லங்கம் ஏற்படும் என்பது சாந்தகுமாரின் திரைக்கதை ஃபார்முலா. அதை இந்தப் படத்தில் காண முடிகிறது..

ஆக இந்த ரசவாதி.. ரசனை வாதி

Rasavathi movie review

ஸ்டார் விமர்சனம் 3.5/5.. நம்பிக்கையே நட்சத்திரம்

ஸ்டார் விமர்சனம் 3.5/5.. நம்பிக்கையே நட்சத்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டார் விமர்சனம் 3.5/5.. நம்பிக்கையே நட்சத்திரம்

ஸ்டோரி…

சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டும் என நினைக்கும் அப்பா தன்னால் சாதிக்க முடியாததை தன் மகனை வைத்து சாதிக்க நினைக்கிறார். அதற்காக தந்தையும் அவரது குடும்பமும் படும் கஷ்டங்களே இந்த படத்தின் கதை.

சினிமாவில் நடித்து பெரிய நட்சத்திரமாக உயர வேண்டுமென்று ஆசைப்படும் கவின் அதற்காக பல கஷ்டங்களை அனுபவிக்கிறார். இப்படியான சூழ்நிலையில் ஒரு நாள் நடிக்க அழைப்பு வரும்போது அவர் காரில் பயணிக்கிறார்.

அப்போது ஒரு பெரிய விபத்து ஏற்படவே அவரது முகம் கோரமாகிறது.. இதனால் அவரது கல்லூரி கால காதலியும் இவரை கைவிட்டு சென்று விடுகிறார்.. இதனால் தன்னால் நடிக்க முடியாது என குற்ற உணர்ச்சியில் வாழ்கிறார்..

அதன் பிறகு என்ன நடந்தது? சினிமாவில் நடித்து ஸ்டார் ஆக முடிந்ததா.? தந்தையின் ஆசை நிறைவேற்றினார்.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்..

கவினுடன், லால், அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சினிமாவில் நடிகனாவது சாதாரண விஷயம் இல்லை… அதற்காக ஒவ்வொரு இளைஞனும் படும் கஷ்டங்களை தன் கண்முன்னே நிறுத்தி இருக்கிறார் கவின்.

நடிப்பு பயிற்சிக்காக பம்பாய் சென்ற பின் அங்கு தேர்வு ஆகாத நிலையில் படும் கஷ்டங்களையும் கையில் காசு இல்லாமல் படும் அவஸ்தைகளையும் தத்துரூபமாக நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ப்ரீத்தி மற்றும் அதிதி ஆகிய இரு நாயகிகளுடனும் கவினின் கெமிஸ்ட்ரி செம.

பிரீத்தி முகுந்தன் அதிகமாகவே ஸ்கோர் செய்கிறார்.. காதலனுக்காக வழிவது பின்னர் காதலனை விட்டு நழுவது என இரண்டிலும் குட் ஸ்கோர்..

2வது நாயகியாக வரும் அதிதியும் அழகான நடிப்பில் கவர்கிறார்.

கவினின் அப்பாவாக லால், அம்மாவாக கீதா கைலாசம். மற்றும் மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், சஞ்சய் ஸ்வரூப், ராஜா ராணி பாண்டியன், தீரஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் தன் தாய் இறந்த தருணம் அதே சமயத்தில் மகனுக்கு சினிமா வாய்ப்பு தருணம் என இரண்டையும் வெளிப்படுத்தும் காட்சியில் சிறந்த நடிகராக தெரிகிறார்.

கவினின் அம்மாவாக கீதா கைலாசம்.. அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை அக்காவுக்கு கல்யாணம் வயது.. வீட்டில் பணம் இல்லை என ஒரு எதார்த்த குடும்ப தலைவியாக கீதா உணர்வுடன் எடுத்திருக்கிறார்..

கால்சீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியான நடிகராக இருக்கும் காதல் சுகுமார் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகளை இழந்து தெருவில் ஐஸ் விற்க்கும் நபராக வருவது பல இளைஞர்களின் கனவைக் கேள்விக்குறியாக்கும்.

இயக்குனர் இளனின் தந்தை பாண்டியன் இந்த படத்தில் நாயகி அதிதியின் தந்தையாக வருகிறார்.. மகளைக் கூட பார்த்துக் கொள்ள முடியாத பொறுப்பற்ற தந்தையாக இவர்

ஸ்டார் படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக உயர்ந்து நிற்கிறார் மாறன்.. ஹீரோ ஹீரோ என்று கவினை இவர் அழைக்கும் போது நாயகனாக உயர நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அது ஒரு எனர்ஜி டானிக்

டெக்னீசியன்ஸ்…

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்… ஒளிப்பதிவாளர் – எழில் அரசு..

புதுப்பேட்டைக்கு போட்ட மெட்டை இந்த ஸ்டார் படத்தில் பயன்படுத்தி ஸ்டார் வேல்யூவை ஏத்திவிட்டார் யுவன் சங்கர் ராஜா.. பாடல்கள் அனைத்தும் தாளும் படமும் ரசிக்கவும் வைக்கிறது.. அதே சமயம் திகட்ட திகட்ட பாடல்களை கொடுத்து படத்தின் நீளத்தை அதிகரித்துவிட்டார்.

இடைவேளை இப்போ வந்து விடும் என்று நாம் நினைக்கையில் மீண்டும் 15 நிமிடங்கள் நீண்டு கொண்டிருக்கிறது. அப்படித்தான் கிளைமாக்ஸ் காட்சியும்.?!

ஒளிப்பதிவாளர் எழிலரசு தன் பங்கில் எந்த குறையும் வைக்கவில்லை.. 1980 முதல் 90 2000 2010 ஆண்டுகள் வரை தன் கேமரா கண்களில் அழகாக படம் பிடித்து ரசிகர்களுக்கு ரசனை விருந்து கொடுத்திருக்கிறார்.

அதற்கு ஏற்ப கலை இயக்குனர் மற்றும் காஸ்டியூம் டிசைனர் இருவரும் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப கலை நுட்பங்களை அழகாக வடிவமைத்து இருக்கின்றனர்.

தன் மகனை ஸ்டாராக்க வேண்டும் என பாடுபடும் தந்தையைப் போல தன்னையும் ஒரு ஸ்டார் ஆக்கிக் கொள்ள வேண்டும் என முற்பட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் இளம் இயக்குனர் இளன்.

ஆரம்பப் பள்ளி.. மேல்நிலைப்பள்ளி.. காலேஜ்.. பேமிலி.. சினிமா ஆபீஸ்.. ஐடி ஆபீஸ் என என அனைத்தையும் கலந்து நாயகனின் யதார்த்த வாழ்வை படம் பிடித்திருக்கிறார்.

தான் சொல்ல வந்த விஷயத்தை இரண்டு பாகங்களாக எடுக்க நினைத்து விட்டார் போல இயக்குனர்.. எடிட்டர் ஆவது கொஞ்சம் கட்டிங் செய்து குறைத்து இருக்கலாம்.

தன்நம்பிக்கை மட்டும் தான் நம்மை ஸ்டார் ஆக்கும் என்ற விதையை இளைஞர்கள் மனதில் விதைத்து விட்டார் இயக்குனர் இளன்

ஆக இந்த ஸ்டார்.. நம்பிக்கையே நட்சத்திரம்

Star movie review

குரங்கு பெடல் விமர்சனம் 4/5.. சைக்கிள் சவால்

குரங்கு பெடல் விமர்சனம் 4/5.. சைக்கிள் சவால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குரங்கு பெடல் விமர்சனம் 4/5.. சைக்கிள் சவால்

நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் படம் ‘குரங்கு பெடல்’… கடந்த 53-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது.

ஸ்டோரி..

1980களில் கத்தேரி என்ற கிராமத்தில் நிகழும் கதை..

இப்போதெல்லாம் பள்ளி கோடை விடுமுறை காலத்தில் எந்த பயிற்சி வகுப்புக்கு பிள்ளையை அனுப்பலாம் என பெற்றோர்கள் நினைக்கும் காலம்..

ஆனால் 1980களில் கோடை விடுமுறையில் பள்ளி சிறுவர்கள் நீச்சல் கற்றுக்கொள்வது சைக்கிள் கற்றுக்கொள்வது, உறவினர் வீடுகளுக்கு செல்வது என்றுதான் விடுமுறையை கழிப்பார்கள். அந்த சமயத்தில் நிகழ்ந்த நிகழ்வு தான் இது.

சைக்கிள் ஓட்ட தெரியாத தந்தை காளி வெங்கட்.. எனவே இவரை நடராஜா சர்வீஸ் என்று ஊர் மக்கள் கிண்டல் அடிக்கின்றனர். ஆனால் இவரது பத்து வயது மகன் மாரியோ சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள நினைக்கிறான்.

இதற்கு தந்தை அனுமதிக்கவில்லை.. எனவே தாய் தந்தைக்கு தெரியாமல் வாடகை சைக்கிள் எடுத்து கற்றுக்கொள்ள நினைக்கிறான்.. மேலும் மற்ற நண்பர்களுக்கும் இவனுக்கும் ஒரு போட்டி.. யார் முதலில் கற்றுக் கொள்கிறார்கள்??

இந்த சூழ்நிலையில் மாரி சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டாலும் அவனுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.? அது என்ன பிரச்சனை? என்ன செய்தார் மாரி.? முதலில் கற்றுக் கொண்டது யார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

காளி வெங்கட், சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர், பிரசன்னா பாலச்சந்திரன் , ஜென்சன் திவாகர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கிராமத்தில் நாம் பார்க்கும் ஒரு மனிதராகவே வாழ்ந்திருக்கிறார் காளி வெங்கட்.. இவரை நடராஜா சர்வீஸ் என கிண்டல் செய்யும்போது வேதனைகளை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் ஒரு கட்டத்தில் தன் மகனே தந்தைக்கு அட்வைஸ் செய்யும் காட்சியில் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் வெள்ளந்தி மனிதராக ஏற்றுக்கொள்ளும் காட்சி ரசிக்க வைக்கிறது.

மாரி நண்பர்களாக நடித்துள்ள அனைவரும் மண்வாசனை மாறாத சிறுவர்களாக வாழ்ந்திருக்கின்றனர்.

வாடகை சைக்கிள் எடுக்க ஒரு ரூபாய் கூட இல்லாத நிலையிலும் அதனை எடுத்து சைக்கிள் ஓட்டி அந்த கட்டணத்தை அடைக்க சிறுவன் சந்தோஷ் (மாரி) எடுக்கும் ஒவ்வொரு செயல்களும் அப்படியே அவனை கட்டி அணைத்து முத்தமிட தோன்றுகிறது.

மிலிட்டரி சைக்கிள் கடை வைத்திருக்கும் நபர்.. குடிகாரன் மற்றும் காளி வெங்கட் மனைவி அவர்களின் மகள் என் அனைவரும் கலகலப்புக்கும் எமோஷனுக்கும் உதவி இருக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ் …

ஒளிப்பதிவு : சுனில் பாஸ்கர்
இசை : ஜிப்ரான்
இயக்கம் : கமலகண்ணன்

எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

சுனில் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. 1980 களில் வெளியான படங்களை பார்க்கும் உணர்வை ஒளிப்பதிவாளர் தத்ரூபமாக கொடுத்திருக்கிறார்..

ஜிப்ரான் இசையில் பின்னணி இசையும் சூப்பர்.. சைக்கிள் சப்தம்.. செயின் அறுந்து விழுவது சத்தம் என அனைத்தும் அருமை.

மதுபான கடை & வட்டம் ஆகிய படங்களை இயக்கிய கமலக்கண்ணன் ‘குரங்கு பெடல்’ என்ற இந்த படத்தின் மூலம் நம்மை சைக்கிள் ஓட்டி பழகிய நாட்களுக்கே அழைத்துச் சென்று இருக்கிறார்..

மிகப்பெரிய பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் எல்லோருடைய வாழ்விலும் சைக்கிள் என்பது ஒரு பயணமாக ஓர் அங்கமாக இருந்திருக்கும்.. அந்த உணர்வுகளை இந்த காலத்து சிறுவர்களுக்கும் (2K kids) புரியும் வகையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன்.

குழந்தைகளுக்காகவே முழுக்க முழுக்க இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் எனவே குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கலாம்..

Kurangu Pedal movie review

சபரி விமர்சனம்… அம்மாவின் ஆசை

சபரி விமர்சனம்… அம்மாவின் ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சபரி விமர்சனம்… அம்மாவின் ஆசை

ஸ்டோரி…

வரலட்சுமி & கணேஷ் வெங்கட்ராம் இருவரும் தம்பதிகள்.. இவர்களுக்கு ஒரு மகள் ரியா. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விடுகின்றனர். இதனால் வரலட்சுமி தன் மகளை அழைத்துக் கொண்டு யாரும் தொடர்பு இல்லாத ஒரு காட்டுப் பகுதியில் உள்ள பங்களாவில் குடியேறி வசித்து வருகிறார்.

ஆனாலும் தன் மகள் தன்னுடன் இருக்க வேண்டும் என பிரச்சனை செய்து வருகிறார் கணேஷ்.. இந்த சூழ்நிலையில் ரியா தன் குழந்தை என உரிமை கோருகிறார் மைம் கோபி.

இதனால் வக்கீல் ராகுல் உதவியை நாடுகிறார் வரலக்ஷ்மி.. மைம் கோபி இறந்து பல மாதங்கள் ஆகிவிட்டது இறந்தவர் உன்னிடம் எப்படி பிரச்சினை செய்ய முடியும் என வக்கீல் கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள்.

ஆனால் தன் கண்ணுக்கு மட்டும் அவர் தெரிகிறார் என குழப்பம் அடைகிறார் வரலட்சுமி.

அடுத்தடுத்து என்ன நடந்தது? மகளை மைம் கோபி பறித்துக்கொண்டாரா?இறந்தவர் எப்படி உயிருடன் வந்தார்? இவர்களின் பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

நடிகர்கள்: வரலக்ஷ்மி, கணேஷ் வெங்கட்ராம், மைம் கோபி, மதுநந்தன், ஜபர்தஸ்த் பானி, ஷஷாங்க் சித்தம்செட்டி, ரிஷிகா பாலி, கேசவ் தீபக் மற்றும் பலர்.

ஒரு குழந்தையின் தாய் என்ற மெச்சூரிட்டி கேரக்டருக்கு ஏற்ப மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார் வரலட்சுமி.. பரிதவிப்பு பாசம் எமோஷன் ஆக்சன் என அனைத்தையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

ஸ்மார்ட் ஆக வரும் கணேஷ்க்கு பெரிதாக வேலை இல்லை.. குழந்தை வேண்டும் என பிரச்சனை செய்கிறார் அதன் பின்னர் திரைக்கதில் காணவில்லை ஆனால் கிளைமாக்ஸ் கட்சியில் வந்து ஒரு திருப்புமுனையை கொடுத்திருக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.

குழந்தை தனக்கு வேண்டும் என பிரச்சனை செய்துகொண்டு முறைத்துக் கொண்டும் துரத்திக் கொண்டுமே படத்தை முழுவதும் ஓட்டியிருக்கிறார் மைம் கோபி. சில காட்சிகளில் மிரட்டவும் செய்து இருக்கிறார்.

டெக்னீசியன்ஸ்…

இயக்குனர்: அனில் காட்ஸ்

தயாரிப்பாளர்: மகேந்திரநாத் கோண்ட்லா, மகரிஷி கோண்ட்லா

கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மே மாதம் 3 ஆம் தேதி இப்படம் வெளியானது..

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு கை கொடுத்துள்ளது.. இந்தக் காட்டு பங்களாவை வெறுமனே காட்டினால் எந்த பயமும் இருக்காது.. ஆனால் அதற்குப் பின்னணி இசை கொடுத்து அந்த வீட்டைக் கூட கொஞ்சம் மிரட்டலாக காட்டியிருக்கிறார்கள்..

தெலுங்கு இயக்குனர் அணில் இயக்கியிருக்கிறார்.. தெலுங்கில் உருவாக்கப்பட்ட தமிழுக்காக டப்பிங் செய்யப்பட்டு இருக்கிறது.

வரலட்சுமி, கணேஷ் மற்றும் மைம் கோபி உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் இருப்பதால் தெலுங்கு வாசத்தை மீறி தமிழ் மனமும் ஆங்காங்கே வீசுகிறது..

குழந்தைக்காக வாழும் அம்மா என்ற தாய் பாசத்தை கொண்டு கதையை நகர்த்தி இருந்தாலும் திடீரென மைம் கோபி வருகிறார் என்பதாகட்டும் மற்றவர்கள் மறுப்பதாகட்டும் வரலக்ஷ்மி மட்டும் நம்புவது ஆகட்டும் குழப்பமான மனநிலையிலே ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் இதற்கான தீர்வை எல்லாம் சொல்லி படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் அணில்.

ஆக சபரி.. அம்மாவின்ஆசை

Sabari movie review

—-

More Articles
Follows