தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
ஹீரோ விஜய் யேசுதாஸ் எந்த வேலைக்கும் போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார்.
இதனிடையில் நாயகி அம்ரிதாவை காதலிக்கிறார்.
இவர்கள் ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் ஜாதி பிரச்சனை பல காலமாக இருக்கிறது.
ஆனால் மாமன் மச்சான் என அன்போடு வாழ நினைக்கின்றனர்.
ஒரு சூழ்நிலையில் போலீஸ் ஸ்டேசன் செல்கிறார் நாயகன்.
அங்கு சென்றபின்தான் சரக்கு, சாப்பாடு, அதிகாரம் என ஜாலியாக வாழ வேண்டுமென்றால் போலீஸ் ஆக வேண்டும் என தீர்மானிக்கிறார்.
அதற்காக தனது உறவினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான பாரதிராஜாவிடம் உதவி கேட்கிறார்.
அதன்பின்னர் லஞ்சம் கொடுத்து போலீஸ் ஆகிறார்.
போலீஸ் பயிற்சி முடித்து ஊருக்கு திரும்பும் போது, இரு ஊர்களுக்கும் இடையேயான ஜாதி பிரச்சனை கலவரமாக மாறி விடுகிறது.
அதன்பின்னர் என்ன செய்தார்? ஜாதி கலவரத்தை முற்றிலும் அழித்தாரா? ஜாதியை ஒழிக்க என்ன செய்தார் இந்த படை வீரன் என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்..
வேலை வெட்டி இல்லாத கிராம இளைஞர் மற்றும் போலீஸ் கேரக்டர் என இரண்டிற்கும் செம பிட்டாய் வாழ்ந்துள்ளார் விஜய் யேசுதாஸ்.
மாரி படத்தை விட இதில் பல மடங்கு நடிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
எக்ஸ் மிலிட்டர் மேனாக வருகிறார் பாரதிராஜா. சில காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் இவரது கேரக்டரில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.
ஜாதியை ஒழிக்க இவர் சொல்லும் வசனங்கள் நன்றாக உள்ளது.
துணிச்சலான பெண்ணாக அம்ரிதா. அழகாக நடித்து நம் மனதில் நிற்கிறார்.
சிங்கம் புலி, மனோஜ் குமார் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளனர். சிங்கம்புலி மற்றும் மகாநதி சங்கருக்கு இன்னும் சில காட்சிகளை கொடுத்திருக்கலாம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்..
படத்திற்கு பெரிய பலம் கார்த்திக் ராஜாவின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அருமை. உள்ளது. ராஜா வேல் மோகனின் ஒளிப்பதிவும் ரசிக்கும்படி உள்ளது.
முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு துறுதுறுப்பு 2ஆம் பாதியில் இல்லை. ஜாதி பிரச்சினை, போலீஸ் என எங்கோ செல்கிறது.
ஆனால் கிளைமாக்ஸ் சற்றும் எதிர்பாராத ஒன்று. இயக்குனர் தனாவை இறுதிக்காட்சிக்காகவே பாராட்டலாம்.
படைவீரன்… ஜாதியை ஒழிக்கும் வீரன்