தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
Oru Thavaru Seidhal ஒரு தவறு செய்தால் விமர்சனம் 3.5/5
ஸ்டோரி…
உபசனா ஸ்ரீதர் பாரி சுரேந்தர் சந்தோஷ் என நான்கு நண்பர்கள் ஒரு பெண். இவர்கள் அனைவரும் நன்றாக படித்து திறமையானவர்கள் இருந்தாலும் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் அவதிப்படுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கே.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிறது.. தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்து தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் இருக்கும் நிலையில் பெரிய அளவில் குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து செட்டிலாக நினைக்கின்றனர்.
அதன்படி பொய்யான வீடியோ ஒன்றை கிரியேட் செய்து அதை ஒரு சுயேட்ச்சை வேட்பாளருக்கு (நமோ நாராயணனுக்கு) அனுப்பி இதை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர்.
இதனால் ஆளுங்கட்சி & எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இருவரும் மோதிக் கொள்வார்கள். அந்த இடைவெளியில் சுயேட்ச்சை வேட்பாளர் ஜெயித்து விடலாம் என்ற எண்ணத்தின்படி அதை விற்கின்றனர்.
முதலில் ஒரு ஓட்டுக்கு 100 ரூபாய் என்ற அளவில் 17 கோடியை தர சம்மதிக்கிறார் வேட்பாளர்.. ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் திட்டம் வேறு ஒன்றாகி விடுகிறது.
நண்பர்களின் திட்டம் நிறைவேறியதா.?அரசியல்வாதியின் திட்டம் நிறைவேறியதா? இவர்கள் கேட்ட பணத்தை கொடுத்தாரா? இறுதியில் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
MS bhaskar as parmaeshwaran
Ramchandran as ram
Upasana rc as munishwari
Paari as paari
Srithar as srithar
Namo narayan as ulaganathan
Surendhar as sura
Santhosh as Santhosh
உபசனா ஸ்ரீதர் பாரி சுரேந்தர் சந்தோஷ் இவர்கள் அனைவரும் ஒரே அறைக்குள் படம் முழுக்க இருந்தாலும் அசால்டான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.. இவர்கள் போடும் திட்டம் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது..
முக்கியமாக இதில் ஒருவரை மட்டும் கொஞ்சம் லூசாக சித்தரித்து அவரை அலைய விடுவது ரசிக்க வைக்கிறது.. அதிலும் அந்த நபர் வேறு ஒருவனை ரவுடியாக அழைத்து வந்து அவரும் அலையும் காட்சிகளும் நம்மை கண்டிப்பாக வாய்விட்டு சிரிக்க வைக்கின்றனர்.
மக்களை ஏமாற்றும் அரசியல்வாதியை ஏமாற்றும் நண்பர்கள் என அவர்களை வைத்து திட்டம் போடும் கதை என்றாலும் இறுதியில் அறவழியில் அவர்கள் செல்ல நினைப்பது படத்தின் மீதான நம்பிக்கை தருகிறது.
அதில் முக்கியமாக ஊனமுற்ற ஒரு நபர் பேசும் வசனம் நிச்சயம் நம்மை செவிகளில் அறையச் செய்யும்.. தன்னையும் தன் மக்களையும் நம்பாதவன் தான் ஓட்டை விற்பான் இந்த நாட்டை விற்பான் என்ற வசனங்கள் நிச்சய நம்மை சிந்திக்க வைக்கும்.
2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஒரு தவறு செய்தால் என்று தலைப்பில் வந்திருக்கும் இந்த படம் நிச்சயம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
நமோ நாராயணன் & எம் எஸ் பாஸ்கர் இருவரும் அரசியல்வாதியை போல போடும் திட்டம் ஆச்சரியப்படுத்துகிறது.. தனக்கு காரியம் ஆகும் வரை தான் ஒருவனை கூட வைத்திருப்பான் அரசியல்வாதி.. காரியமில்லை என்றால் அவனை கழட்டி விடுவான் என்பதையும்.. முட்டாள் அல்லக்கை ஆட்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகளையும் அவர் நக்கல் அடித்திருப்பது வேற லெவல் ரகம்..
மக்களை ஏமாற்ற அரசியல்வாதி எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை அவர்களின் கேரக்டர்கள் உணர்த்துகிறது..
டெக்னீசியன்ஸ்…
Director – Mani dhamodharan
D. O. P – Vijay krishna and mahesh sridhar as
Editor – Vithu jeeva
Music Director – K.m rayan
Production Banner – KMP Pictures
PRO – Nikil Murukan
ராயனின் பின்னணி இசை படத்திற்கு பலம்.. 1980 களில் வந்த டி ராஜேந்தர் படங்களில் கவிதைகளைக் கொண்டு பாடல்களை வைத்திருப்பார் டி. ஆர்.. அதுபோல இந்த படத்தில் ஒரு பாடல் இடம் பெற வேண்டிய இடத்தில் அழகான கவிதைகளை மட்டும் வாசிக்க வைத்திருக்கின்றனர்.. அதுவும் டி. ராஜேந்திர் குரலில் அந்த கவிதைகள் ஒலிப்பது அழகோ அழகு..
படத்தில் 20% மட்டுமே வெளியில் படமாக்கப்பட்டுள்ளது 80% படத்தை ஒரே லாட்ஜ் அறைக்குள் வைத்து முடித்திருக்கின்றனர்.. அதற்கு கூடுதல் உழைப்பை ஒளிப்பதிவாளர் கொடுத்திருந்தாலும் ஹை குவாலிட்டி கேமராவை பயன்படுத்தி இருக்கலாம்.. குவாலிட்டி குறைவாக இருப்பதால் படத்தை முழுவதுமாக ரசிக்க முடியவில்லை… இரு கேமராமேன்கள் இருந்தும் இந்த நிலையா?
மணி தாமோதரன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. என்னதான் அரசியல் களத்தில் பணநாயகம் வென்று விட்டாலும் ஜனநாயகம் வாழ எவராவது ஒருவர் நிச்சயமாக நேர்மையாக இருப்பார் என்ற ஒரு கதாபாத்திரம் நிச்சயம் நம்மை ரசிக்க வைக்கிறது.
முதலில் நாம் திருந்தினால் மட்டுமே பெரிய மாற்றங்கள் உருவாகும் என்பதை ஒரு காட்சியில் கிளைமாக்ஸில் வைத்து நம்மை சிந்திக்கவும் வைத்து இருக்கிறார் இயக்குனர்
Oru Thavaru Seidhal movie review