தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேண்டிள் லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மூலன் வழங்கும் படம் `ஓடு ராஜா ஓடு’.
ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமான குரு சோமசுந்தரம் இதில் நாயகனாக நடித்துள்ளார்.
இவருடன் நாசர், லட்சுமி பிரியா, ஆனந்த் சாமி, ஆஷிகா சால்வன், வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் தீபக் பாகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படத்தொகுப்பு – நிஷாந்த் ரவிந்திரன்
இசை – தோஷ் நந்தா
ஒளிப்பதிவு – ஜதின் சங்கர் ராஜ் & சுனில் சி.கே.,
தயாரிப்பு – விஜய் மூலன்
இயக்கம் – நிஷாந்த் ரவிந்திரன் & ஜதின் ஷங்கர் ராஜ்.
மக்கள் தொடர்பாளர் : ராஜ்குமார்
பட வெளியீடு : பிடி. செல்வகுமார்
கதைக்களம்..
குருசோமசுந்தரத்தின் மனைவி லட்சுமி ப்ரியா. கணவர் ஒரு எழுத்தாளர். சினிமா வாய்புப்பாக அலைகிறார். வீட்டில் இருக்கும் அவருக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்தால் அவர் எப்படி செய்கிறார்.
பொறுப்பாக இருக்கிறாரா? என்பதற்காக செட்டப் பாக்ஸ் வாங்க அனுப்புகிறார்.
அவரிடமோ பணம் இல்லை. ஆனால் கண்டிப்பாக வாங்கி வந்தால் மட்டுமே வீட்டில் அனுமதி என ஒரு நாள் அவகாசம் தறுகிறார். இல்லையென்றால் தன் தாய் வீட்டுக்குப் போய் விடுவேன் என மிரட்டுகிறார்.
எனவே தனது போதை நண்பர் பீட்டருடன் செட்டாப் பாக்ஸ் வாங்க செல்கிறார் நாயகன்.
அந்த போதை நண்பர் பணத்திற்காக ஒரு ஐடியா தருகிறார். இருவரும் பாஸ் கஜபதி என்பவரிடம் வசமாக சிக்கிக் கொள்ள, அவர்களிடம் ஒரு பொட்டி கொடுத்து போதை மாமி அங்கம்மாளிடம் அனுப்புகின்றனர். (அப்படித்தாங்க பெயர் வெச்சுருக்காங்க).
இதனிடையில் பணம் தொலைகிறது.இது ஒரு பக்கம்.
பழைய தாதா காளிமுத்துவை (நாசர்) லயன் (கால பைரவி) மூலம் கொல்ல திட்டமிடுகிறார் அவரது சொந்த தம்பியும் வீரபத்திரனின் எதிரியுமான செல்லமுத்து. இது அடுத்த கதை.
மற்றொருபுறம் காளிமுத்துவை பழிவாங்குவதற்காக நகுல் (அனந்த் சாமி), அவரது நண்பன் இம்ரான் மற்றும் மனைவி மேரியுடன் (ஆஷிகா)சேர்ந்து திட்டம் தீட்டுகிறார். இது 3வது கதை.
குப்பத்தில் வாழும் சிறுமி மலரும் (பேபி ஹரினி), சிறுவன் சத்யாவும் (மாஸ்டர் ராகுல்), காணாமல் போன பணத்தை அடித்து ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள். இது 4வது கதை.
இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து கதை சொல்லியிருக்கிறார் டைரக்டர்.
இந்த கேரக்டர்களின் இன்ட்ரோவே அரை மணி நேரத்திற்கு மேலாக வருகிறது.
இறுதியில் என்ன ஆகிறது? என்பதுதான் படக்கதை.
கேரக்டர்கள்…
குரு சோமசுந்தரம் வழக்கம்போல யதார்த்த நடிப்பில் மிளிர்கிறார். அழகான மனைவிக்கு பயந்து இவர் அவஸ்தை படுவது இயல்பாக இருக்கிறது.
மனைவியாக வரும் லட்சுமி பிரியா, நாசர், ஆஷிகா, பேபி ஹிரினி, மாஸ்டர் ராகுல் என அனைவரும் கச்சிதமான நடிப்பை தந்துள்ளனர்.
கால பைரவி லயன் கேரக்டர் செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். யாரும் எதிர்பாராத வித்த்தில் வந்து சிலிர்க்க வைக்கிறார் சிம்ரன்.
அழகான லட்சுமி ப்ரியா நடிப்பிலும் அழகுதான்.
இரண்டு லவ்வருமே தனக்கு வேனும் என ஆகிஷா சொல்லும் போது தியேட்டரில் அலப்பரை தான்.
படத்தில் பெண்களையும் ஆண்களையும் செக்ஸ்க்காக அலைபவர்களாக காட்டியுள்ளனர்.
கஞ்சா புகைக்கும் நண்பன், செக்ஸ்க்காக அலையும் பக்கத்து வீட்டுக்காரன், ஜெயிலில் இருந்த விடுதலையாகும் கணவன், அவன் நண்பன் ரெண்டு பேருமே வேனும் என சொல்வது எல்லாம் ரொம்பவே ஓவர்.
பீட்டருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் சோனா என சொல்லிக் கொண்டே போகலாம்.
இதில் இரண்டு சிறுவன் சிறுமியர் வேற.
அறுந்தவாலு பேபி ஹரினியும், ரோட்சைட் ரோமியோ மாஸ்டர் ராகும் காதல் போல காட்டியுள்ளது. அதாவது டாவு என்கிறார்கள்,
இதை டைரக்டர்கள் குறைத்திருக்கலாம்.
திரைக்கதை எழுதி படத்தொகுப்பை கவனித்திருக்கிறார் நிஷாந்த்.
தோஷ் நந்தா இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே. மனதில் ஒட்டவில்லை.
பின்னணி இசை சில இடங்களில் ஓகே.
இப்படத்தை இரட்டை இயக்குனர்கள் நிஷாந்தும், ஜத்தினும் இயக்கியுள்ளனர்.
சூது கவ்வும் பட பாணியில் ப்ளாக் காமெடியை தொட்டு இருக்கிறார்கள். ஆனால் இதில் இன்னும் காமெடியை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஒரு பிளாக் காமெடி படத்துக்கு தேவையானதை தர முயற்சித்துள்ளனர்.
பல கதைகள் வருவதால் எல்லாருக்கும் புரியுமா? என்பது சந்தேகம்தான். முக்கியமாக கவனம் சிதறாமல் படத்தை பார்த்தால் இந்த ஓடு ராஜா ஓடு புரிவான்.
ஓடு ராஜா ஓடு… செட்டப் பாக்ஸில் ஒரு ப்ளாக் காமெடி