தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘நேற்று இந்த நேரம்’ பட விமர்சனம்
ஸ்டோரி…
நான்கு இளைஞர்கள் மூன்று இளம் பெண்கள்.. இவர்கள் ஏழு பேரும் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர்.. இவர்களில் ஒரு ஆணைத் தவிர மற்றவர்கள் காதலர்கள்.. அங்கே ஒரு காட்டு பங்களாவில் தங்கி உல்லாசமாக இருந்து குடித்துவிட்டு கூத்தடிக்கின்றனர்.
இதில் நாயகன் ஷாரிக்ஹாசன் ஒரு பிளேபாய்.. இந்த மூன்று தோழிகளிடமும் அவரது கைவரிசையை காட்டி இருக்கிறார்.
ஒன்றன்பின் ஒன்றாக கைவரிசை காட்டிய பின் நாயகியை காதலிக்கிறார்.. ஒரு கட்டத்தில் உன்னை திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை.. வேணும் என்றால் லிவிங் டுதர் முறையில் வாழலாம் என்கிறார் ஷாரிக். இதனை மறுக்கிறார் நாயகி.
இந்த கேப்பில் சிங்கிளாக இருக்கும் மற்றொரு நண்பன் நாயகிக்கு ரூட்டு விடுகிறார்.. இதனால் நண்பர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.. அடித்துக் கொள்(ல்)கின்றனர்..
இந்த சூழ்நிலையில் ஷாரிக் இரவில் காணாமல் போய்விடுகிறார்.. எனவே யார் என்ன செய்தனர்.? அவர் எங்கே சென்றார் என்ற பிரச்சனை வருகிறது.
இதனையடுத்து ஒரு நண்பன் போலீசுக்கு போன் செய்து விடுகிறார்.. போலீஸ் அந்த ஆறு பேரையும் விசாரிக்கின்றனர். அப்போது பல திருப்பங்கள் வருகிறது.
நண்பனுக்கு என்ன ஆச்சு.? அவர் நிஜமாக தொலைந்து விட்டாரா?அல்லது இறந்துவிட்டாரா? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
Shariq Hassan
Haritha
Monica Ramesh
Kavya Amira
Divakar Kumar
Nithin Aaditya
Anand
Aravind
Selva
Bala
நாயகன் ஷாரிக்ஹாசன்.. இவர் நட்சத்திரத் தம்பதிகள் உமா ரியாஸ் கானின் மகன் ஆவார்.. பிளேபாய் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார். உடல் மொழியிலும் கவருகிறார்.. நடனத்திலும் அசத்தியிருக்கிறார்..
ஹரிதா மோனிகா காவ்யா என மூன்று நாயகிகள்.. மூவரும் இளமை துள்ளலுடன் நம்மை ஈர்க்கின்றனர்..
ஷாரிக் முன்னாள் காதலியாக வரும் ஸ்ரேயா (மோனிகா) என்பவர் ஸ்கூல் யூனிஃபார்மில் நம்மை அதிகமாகவே கவருகிறார்.. அவரது வெட்கமும் அவரது கண்களும் அழகு.
நண்பர்களாக நடித்துள்ளவர்கள் தங்கள் பாத்திரத்தை அழகாகவே செய்திருக்கின்றனர். பள்ளிக் காட்சிகளிலும் அதன் பின்னர் கல்லூரி வாழ்க்கை முடித்த பின்னர் அவரது தோற்றங்களிலும் நல்ல மாற்றத்தை காண்பித்து இருக்கின்றனர்..
நண்பனை தொலைத்தவர்கள் எந்த பதற்றமும் இல்லாமல் இருப்பது ஏன்? என போலீஸ் சந்தேகிக்கும் போது நமக்கும் அந்த சந்தேகம் வருகிறது.?!
டெக்னீசியன்ஸ்…
Written & Directed by: Sai Roshan KR
Music: Kevin.N
Original Background Score: Kevin.N
DOP: Vishal.M
Editor: Govindh N
Singers: GV Prakash Kumar, Arivu, Aadithya RK, Ravi G, Paul B Sailus, Kevin.N, Reshma Shyam, Prithvee
Lyrics: Prabhakaran Amudhan, Paul B Sailus, Prithvee, Kevin.N, K.R. Naveen Kumar, Sai Roshan KR, Anand
PRO: Sathishwaran
Producer: K.R. Naveen Kumar
இதுபோன்ற ஊட்டி பிரதேசங்களை காட்டும் போது எத்தனையோ அழகான இடங்களை காட்டி கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டி இருக்கலாம்.. ஆனால் மாறாக போலீஸ் விசாரணை என்ற பெயரில் ஒரே அறையில் திரும்பத் திரும்ப ஒரே இடத்தை காட்டிக் கொண்டிருப்பதும்.. ஒரே காட்சிகளை விசாரணை என்ற பெயரில் திரும்ப வரும் போது நம்மால் பொறுமையாக இருக்க முடியவில்லை..
இந்தப் படத்தில் நடித்துள்ள போலீஸ் கூட திரும்பத் திரும்ப அதையே சொல்லாதீங்க போதும்பா உன் புராணம் என்று என்கிறார் நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
ஒளிப்பதிவாளர் விஷால் கேமரா ஆங்கிள்களை பலவிதங்களில் காட்டி இருக்கலாம். ஒரே ஆங்கில் வைத்துவிட்டு எங்கே சென்றார்.. என்னவோ.?
கெவின் என்பவர் இசை அமைத்திருக்கிறார்.. பின்னணி இசையும் பாராட்டுக்குரியது.. ஜிவி பிரகாஷ் அறிவு ஆராத்யா ஆகியோர் பாடிய பாடல்கள் கவனம் பெறுகின்றன.
சாய் ரோஷன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. போலீஸ் விசாரிக்கும் போது நேற்று இந்த நேரம் என்ன நடைபெற்றது என்பதுதான் படத்தின் மையக்கரு எனவே அதையே படத்தின் தலைப்பாக வைத்து படத்தை நகர்த்தி இருக்கிறார் முக்கியமாக சம்பவங்கள் நடைபெற்ற நேரம் தேதியை குறிப்பிடும்போது கவனம் பெறுகின்றது.
சுற்றுலா தளங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லையா என்ற கேள்வி நிச்சயம் ரசிகர்களுக்கு எழும்.. அதை கூட ஒரு வசன காட்சியாக வைத்து போன.. வாரம் இங்கே ஷூட்டிங் நடைபெற்றது.. சீன் லீக் ஆக கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராக்களை நீக்கி விட்டோம்” என ஒரு செக்யூரிட்டி செல்வது போல காட்சி உள்ளது..
அதைக் கூட கவனித்த இயக்குனர் மற்ற காட்சிகளையும் கொஞ்சம் திறப்படம் கவனித்து இருந்தால் இன்னும் கூடுதல் பலம் பெற்று இருக்கும் ‘நேற்று இந்த நேரம்’..
நண்பர்கள் ஆட்டம் பாட்டம்.. போலீஸ் விசாரணை என விறுவிறுப்பாக கதையைக் கொண்டு சென்றிருந்தால் இன்னும் கூடுதல் கவனம் பெற்று இருக்கும்.
Netru Indha Neram movie review