தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
தமிழக கிராமங்களில் இன்றளவிலும் காணப்படும் செய்முறை பற்றிய படம் இது. சில கிராமங்களில் இதை மொய்விருந்து என அழைப்பதுண்டு.
ஒருவர் தன் வசதிற்கேற்ப தன் உறவினருக்கு செய்முறை செய்ய 10-20 வருடங்களுக்கு பிறகு அதை வட்டியுடன் செய்ய முடியாமல் போகும் ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் நிலையே இந்த படம்.
செய்முறை செய்ய முடியாமல் சிலர் அவமானப்படுகின்றனர். சிலர் தற்கொலை செய்து உயிரையும் மாய்த்துக் கொள்ளுகின்றனர்.
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி இருந்தபோது இந்த செய்முறை சடங்கை ரத்து செய்தார். ஆனால் அது சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
கதைக்களம்…
சரவணன் ராதிகா இருவரும் அண்ணன் தங்கை.
சரவணனின் மனைவி விஜி. இவர்களுக்கு ஒரு மகள். (மகனும் உண்டு). ராதிகாவின் கணவர் மாரிமுத்து. இவர்களுக்கு ஒரு மகன். இவர்தான் படத்தின் இயக்குனரும் கூட.
ராதிகா மகனின் காதணி விழாவிற்கு சரவணன் தன் கௌரத்திற்காக அதிகமாக செய்முறை செய்துவிடுகிறார். ராதிகா எவ்வளவோ மறுத்தும் இது நடந்துவிடுகிறது.
சில வருடங்களுக்கு பிறகு ராதிகாவின் கணவர் மாரிமுத்துவை விஜி அசிங்கப்படுத்த மாரிமுத்து தற்கொலை செய்து விடுகிறார்.
இதனால் வறுமைக்கு தள்ளப்படும் ராதிகாவால் செய்முறை செய்ய முடியாமல் போகிறது. இவரின் மகனோ ஊதாரித்தனமாக இருக்கிறார்.
இறுதியாக ராதிகாவிடம் இருந்து செய்முறையை எப்படி வசூலித்தார் விஜி சந்திரசேகர்… இவர்களின் குடும்பம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்..
பாரதிராஜாவின் உதவியாளர் ஜி.ஆர்.எஸ். தான் இப்பட இயக்குனர் மற்றும் நாயகன். பாரதிராஜா பாணியில் படத்தை இயக்க முயற்சித்து இருக்கிறார்.
கிராமங்களில் நாம் பார்க்கும் திருமண நிகழ்ச்சி, காதுகுத்து ஆகியவற்றை வைத்தே படத்தை பாதி நகர்த்தியிருக்கிறார்.
இவருக்கு ஊரில் சில நண்பர்கள் இருக்கும்படியாக காட்டியிருக்கலாம். இவரே எல்லாம் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டார் போல. முதல் பாதியில இவரின் ஓவர் ஆக்டிங் கொடுமை தாங்க முடியவில்லை.
மீம்ஸ் எமோஜிக்கு ஏற்ப இவர் முக பாவனைகள் காட்டுவதை ரசிக்க முடியவில்லை.
பாவப்பட்ட நடிப்பில் ராதிகா அசத்தல். கிராமத்து அம்மாவாக வாழ்ந்திருக்கிறார். கிராமத்து பாஷை இவருக்கு கைவந்த கலை.
சித்தப்பு சரவணன். ப்ளாஷ்பேக்கில் கெத்து.. இரண்டாம் பாதியில் வெத்து என வெரைட்டி காட்டியிருக்கிறார். மனைவிக்கு பயந்து வாழ்ந்தாலும் தேவைக்கேற்ப ஆவேசம் காட்டியுள்ளது சிறப்பு.
மாரிமுத்து சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நடிப்பில் கச்சிதம்.
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வில்லி சொர்ணாக்கா எனலாம். அப்படியொரு மிரட்டலாக நடிப்பில் விஜி சந்திரசேகர் வாழ்ந்திருக்கிறார். ஆனாலும் இவரும் சில காட்சிகளில் ஓவர் ஆக்ட்டிங்கை கொடுத்துவிட்டார். இயக்குனர் அப்படி சொல்லிருப்பார் போல.
விஜியின் மகளாக அவரின் நிஜ மகளே நடித்துள்ளார். அவர்தான் படத்தின் நாயகி லவ்லின். அம்மா.. அத்தை என நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ஆனால் இவருக்கு கிராமத்து பாஷை சரியாக ஒட்டவில்லை. அதை சரி செய்திருக்கலாம்.
டெக்னிஷியன்கள்..
பட்டுக்கோட்டை ரமேஷின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஆனால் கிராமத்து அழகை இன்னும் காட்டியிருக்கலாம். இவர்கள் குடும்பதை மட்டுமே காட்டியிருப்பது போரடிக்கிறது.
படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அவரின் இசையை குறை சொல்லும் அளவுக்கு நாம் தகுதியானவர் இல்லை. ஆனால் அவரது பழைய பாடல்கள் போல இல்லை என்பதே உண்மை.
ஆக செய்முறையை இன்னும் சிறப்பாக செய்திருந்தால் மருத இன்னும் மணக்கும் வகையில் இருந்திருக்கும்.
Marudha movie review and rating in Tamil