செய்முறை சடங்கும் சங்கடமும்..; மருத விமர்சனம்

செய்முறை சடங்கும் சங்கடமும்..; மருத விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தமிழக கிராமங்களில் இன்றளவிலும் காணப்படும் செய்முறை பற்றிய படம் இது. சில கிராமங்களில் இதை மொய்விருந்து என அழைப்பதுண்டு.

ஒருவர் தன் வசதிற்கேற்ப தன் உறவினருக்கு செய்முறை செய்ய 10-20 வருடங்களுக்கு பிறகு அதை வட்டியுடன் செய்ய முடியாமல் போகும் ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் நிலையே இந்த படம்.

செய்முறை செய்ய முடியாமல் சிலர் அவமானப்படுகின்றனர். சிலர் தற்கொலை செய்து உயிரையும் மாய்த்துக் கொள்ளுகின்றனர்.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி இருந்தபோது இந்த செய்முறை சடங்கை ரத்து செய்தார். ஆனால் அது சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கதைக்களம்…

சரவணன் ராதிகா இருவரும் அண்ணன் தங்கை.

சரவணனின் மனைவி விஜி. இவர்களுக்கு ஒரு மகள். (மகனும் உண்டு). ராதிகாவின் கணவர் மாரிமுத்து. இவர்களுக்கு ஒரு மகன். இவர்தான் படத்தின் இயக்குனரும் கூட.

ராதிகா மகனின் காதணி விழாவிற்கு சரவணன் தன் கௌரத்திற்காக அதிகமாக செய்முறை செய்துவிடுகிறார். ராதிகா எவ்வளவோ மறுத்தும் இது நடந்துவிடுகிறது.

சில வருடங்களுக்கு பிறகு ராதிகாவின் கணவர் மாரிமுத்துவை விஜி அசிங்கப்படுத்த மாரிமுத்து தற்கொலை செய்து விடுகிறார்.

இதனால் வறுமைக்கு தள்ளப்படும் ராதிகாவால் செய்முறை செய்ய முடியாமல் போகிறது. இவரின் மகனோ ஊதாரித்தனமாக இருக்கிறார்.

இறுதியாக ராதிகாவிடம் இருந்து செய்முறையை எப்படி வசூலித்தார் விஜி சந்திரசேகர்… இவர்களின் குடும்பம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

பாரதிராஜாவின் உதவியாளர் ஜி.ஆர்.எஸ். தான் இப்பட இயக்குனர் மற்றும் நாயகன். பாரதிராஜா பாணியில் படத்தை இயக்க முயற்சித்து இருக்கிறார்.

கிராமங்களில் நாம் பார்க்கும் திருமண நிகழ்ச்சி, காதுகுத்து ஆகியவற்றை வைத்தே படத்தை பாதி நகர்த்தியிருக்கிறார்.

இவருக்கு ஊரில் சில நண்பர்கள் இருக்கும்படியாக காட்டியிருக்கலாம். இவரே எல்லாம் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டார் போல. முதல் பாதியில இவரின் ஓவர் ஆக்டிங் கொடுமை தாங்க முடியவில்லை.

மீம்ஸ் எமோஜிக்கு ஏற்ப இவர் முக பாவனைகள் காட்டுவதை ரசிக்க முடியவில்லை.

பாவப்பட்ட நடிப்பில் ராதிகா அசத்தல். கிராமத்து அம்மாவாக வாழ்ந்திருக்கிறார். கிராமத்து பாஷை இவருக்கு கைவந்த கலை.

சித்தப்பு சரவணன். ப்ளாஷ்பேக்கில் கெத்து.. இரண்டாம் பாதியில் வெத்து என வெரைட்டி காட்டியிருக்கிறார். மனைவிக்கு பயந்து வாழ்ந்தாலும் தேவைக்கேற்ப ஆவேசம் காட்டியுள்ளது சிறப்பு.

மாரிமுத்து சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நடிப்பில் கச்சிதம்.

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வில்லி சொர்ணாக்கா எனலாம். அப்படியொரு மிரட்டலாக நடிப்பில் விஜி சந்திரசேகர் வாழ்ந்திருக்கிறார். ஆனாலும் இவரும் சில காட்சிகளில் ஓவர் ஆக்ட்டிங்கை கொடுத்துவிட்டார். இயக்குனர் அப்படி சொல்லிருப்பார் போல.

விஜியின் மகளாக அவரின் நிஜ மகளே நடித்துள்ளார். அவர்தான் படத்தின் நாயகி லவ்லின். அம்மா.. அத்தை என நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ஆனால் இவருக்கு கிராமத்து பாஷை சரியாக ஒட்டவில்லை. அதை சரி செய்திருக்கலாம்.

டெக்னிஷியன்கள்..

பட்டுக்கோட்டை ரமேஷின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஆனால் கிராமத்து அழகை இன்னும் காட்டியிருக்கலாம். இவர்கள் குடும்பதை மட்டுமே காட்டியிருப்பது போரடிக்கிறது.

படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அவரின் இசையை குறை சொல்லும் அளவுக்கு நாம் தகுதியானவர் இல்லை. ஆனால் அவரது பழைய பாடல்கள் போல இல்லை என்பதே உண்மை.

ஆக செய்முறையை இன்னும் சிறப்பாக செய்திருந்தால் மருத இன்னும் மணக்கும் வகையில் இருந்திருக்கும்.

Marudha movie review and rating in Tamil

நினைத்தாலே இனிக்கும்…; முதல் நீ முடிவும் நீ விமர்சனம் 3.75/5

நினைத்தாலே இனிக்கும்…; முதல் நீ முடிவும் நீ விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

96 படத்தில் பள்ளி நினைவுகள்… பின்னர் ரீயூனியன் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் அந்த படத்தின் ப்ளாஷ்பேக்கில் விஜய்சேதுபதி த்ரிஷா கேரக்டர்களில் கௌரி ஆதித்யா நடித்திருந்தனர்.

இந்த படத்தில் பள்ளி பருவத்தில் நடித்தவர்களே 10-15 வருடங்களுக்கு பிறகு சந்திப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜதந்திரம் படத்தில் நடிகர்… எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இசையமைப்பாளர் என அறியப்பட்ட தர்புகா சிவா இந்த படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார்.

கதைக்களம்..

11ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் வினோத், ரேகா, அனு, கேத்ரின், சைனீஸ், துரை, பிரான்சிஸ், ரிச்சர்ட் உள்ளிட்ட மாணவர்கள்.

இதில் வினோத்தும் ரேகாவும் காதலிக்கிறார்கள். வினோத்தின் எல்கேஜி ப்ரெண்ட் சைனீஸ் யாராவது காதலிக்க மாட்டார்களா? என ஏங்குகிறார்.

வழக்கமான பள்ளிக் கூட கலாட்டா… கல்ச்சுரல் ப்ரோக்ராம்.. சைட் அடிப்பது.. ஊர் சுற்றுவது.. வாக்மேனில் பாட்டு கேட்பது… வாடகைக்கு கேசட் எடுத்து வீட்டில் பிட் படம் பார்ப்பது என ஜாலியாக முதல் பாதி செல்கிறது.

இடைவேளை கட்டத்தில் வினோத் ரேகா காதல் பிரச்சினையால் பிரிய நேர்கிறது. அதே சமயத்தில் சைனீஸ் அனு காதல் கை கூடுகிறது.

இவர்கள் கிட்டத்தட்ட 10 12 வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் கொள்ளும் நேரத்தில் யாருடைய வாழ்க்கையில் யார் இருக்கிறார்? என்னென்ன சாதித்தார்கள்.? எப்படி எல்லாம் வாழ்க்கை மாறியது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

வினோத் என்ற கேரக்டரில் ஹீரோவாக கிஷன் தாஸ். பள்ளி பருவத்தில் ரேகாவுடன் ஊர் சுற்றுவது.. ஒரு கட்டத்தில் தான் செய்யாத தவறுக்காக அவளின் காதலை உதாசீனப்படுத்துவது என பின்னி எடுத்திருக்கிறார்.

இசையில் சாதித்து பெரிய இசையமைப்பாளர் என வலம் வரும் போது இவரிடம் காணப்படும் மெச்சூரிட்டி நடிப்பில் வியக்கவைத்துள்ளார்.

இவரின் நண்பர்.. 2வது ஹீரோ எனலாம். சைனீஸ் கேரக்டரில் அதகளம் பண்ணியிருக்கிறார் ஹரீஷ். ஸ்கூல் பையனாக பாடிலாங்குவேஜில் மிரட்டியிருக்கிறார். அதே பையன் வளர்ந்த பிறகு பக்குவ நடிப்பிலும் சிறப்பு.

இவரின் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. நிச்சயம் நம் ஸ்கூலில் இப்படியொரு பையன் நமக்கும் நண்பனாக இருந்திருப்பார்.

இவர்களை போல ரேகா.. அனு.. கேத்ரீன் கேரக்டர்களுக்கு சூப்பர். அப்படியொரு அப்பாவித்தனமாக பள்ளிப் பருவ நடிப்பை கொடுத்துள்ளனர்.

சுரேந்தர் கதாபாத்திரத்தில் கெளதம் ராஜ், கேத்ரின் கதாபாத்திரத்தில் பூர்வா ரகுநாத், துரை கதாபாத்திரத்தில் ஷரன் குமார், ப்ரான்சிஸ் கதாபாத்திரத்தில் ராகுல் கண்ணன், ரேகா கதாபாத்திரத்தில் மீதா ரகுநாத், ரிச்சர்ட் கதாபாத்திரத்தில் வருண் ராஜன், திருமால் கதாபாத்திரத்தில் நரேன், விக்கி கதாபாத்திரத்தில் ஹரினி ரமேஷ் கிருஷ்ணன் அனைவரும் அசத்தியுள்ளனர்.

டெக்னீஷியன்கள்..

சுஜித் சரங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். எங்கும் மிகைப்படுத்தப்படாத காட்சிகள் நம்மை படத்துடன் ஒன்ற வைத்துள்ளன.

படத்தின் இயக்குனர் தர்புகா சிவா ஒரு காட்சியில் நடிகராக வருகிறார். இவரே இசையமைத்தும் இருக்கிறார்.

சித்து ஸ்ரீராம் குரலில் முதல் நீ.. முடிவும் நீ பாடல் நிச்சயம் அனைத்து தரப்பினரையும் கவரும். ஆனால் (மறுவார்த்தை பேசாதே) என்ற பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

வாசுதேவனின் ஆர்ட் ஒர்க் பேசப்படும் வகையில் உள்ளது. 1990களில் உள்ள கேசட்.. கம்ப்யூட்டர்.. ஸ்கூல் யூனிபார்ம்.. பைக்,.. வாக்மேன்… தளர்வான உடைகள் என அனைத்தையும் கவனித்து செய்துள்ளார்.

பள்ளி காலங்களில் படிக்கும் நாம் பெரிய ஆளாக ஏதாவது ஒன்றை நினைப்போம். ஆனால் காலங்கள் மாற மாற.. எப்படியெல்லாம் நம் எண்ணங்கள் காலத்திற்கேற்ப மாறுகிறது என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்.

ஆனால் முதல்பாதியில் இருந்த கலாட்டா இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங்.

படத்தில் இரண்டு க்ளைமாக்ஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர். காதலர்கள் இணைந்தால் இப்படியொரு சம்பவம்.. காதலர்கள் இணையாவிட்டால் இப்படியொரு சம்பவம் என ரசிகர்களே பிரித்துக் கொள்ளலாம். இந்த புது முயற்சியை நிச்சயம் பாராட்டலாம்.

ஆக. முதல் நீ.. முடிவும் நீ.. நம் நினைவுகள் நினைத்தாலே இனிக்கும்.

Mudhal Nee Mudivum Nee movie review and rating in Tamil

தேனாக கொட்டிய பாசம்.. தேள் விமர்சனம் 3.5/5

தேனாக கொட்டிய பாசம்.. தேள் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

பொதுவாக ஒரு படத்தை காப்பியடிப்பவர்கள்… கதையை திருடுபவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இது கொரிய மொழிப்படம் ஒன்றின் தழுவல் என சொல்லி படத்தை தொடங்கிய இயக்குநர் ஹரிகுமாருக்கு பாராட்டுக்கள்..

கதைக்களம்..

கோயம்பேடு சந்தையில் காய்கறி வியாபாரத்தை விட கந்து வட்டி பிசினஸ் கனஜோர். இந்த கும்பலிடம் வேலை செய்கிறார் பிரபுதேவா. இவரது பேச்சு குறைவு செயல் அதிகம்.

அதாவது பணம் தராமல் இழுத்தடிக்கும் பேரிடம் பணத்தை வாங்கி வருவதற்கு பதிலாக உயிரையே வாங்கி வரும் பலே கில்லாடி. இதனால் பிரபுதேவாவுக்கும் எதிரிகள் உண்டு.

இவருக்கு யாரும் இல்லை என்பதால் தனியாக வாழ்கிறார். இவரை ஒருதலையாக காதலிக்கிறார் ஏரியா டான்சர் சம்யுக்தா ஹேக்டே. நாயகியின் ப்ரோ யோகிபாபு.

ஒரு கட்டத்தில் நான்தான் உன் அம்மா என சொல்லி வருகிறார் ஈஸ்வரி ராவ். முதலில் ஏற்க மறுக்கிறார் பிரவுதேவா. 15 வயதில் என்னை ஒருத்தன் கெடுத்துவிட்டான். விவரம் தெரியாத வயதில் உன்னை அனாதையாக்கி சென்றுவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்கிறார்.

பின்னர் மனம் மாறி அம்மாவை ஏற்கிறார். புதிதாக கிடைத்த தாய் பாசத்தால்  கந்து வட்டி வசூலிக்க செல்ல மறுத்து அம்மாவுடன் வாழ்கிறார்.

பிரபுதேவா இல்லாமல் பணம் சரியாக வசூலாகவில்லை என்பதால் கும்பலின் கோபத்துக்கு ஆளாகிறார்.

அதன்பின்னர் என்னானது..? பிரபுதேவாவை அந்த கும்பல் என்ன செய்தது? அம்மா மகன் பாசம் நீடித்ததா..? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

டான்ஸ் இல்லாத படத்தில் டான்சர் பிரபுதேவா என்பதே ஆச்சரியமான விஷயம்தான். தனிமையில் வாழ்வதும் பின்னர் அம்மாவின் பாசத்துக்காக ஏங்குவதும் என உணர்ந்து நடித்துள்ளார்.

க்ளைமாக்ஸ் முடிவு எந்த ஹீரோவும் செய்ய தயங்கும் கேரக்டர். இதற்காகவே பிரபுதேவாவை நிச்சயம் பாராட்டலாம்.

யோகிபாபுவின் ஒன்லைன் காமெடிகள் பெரிதாக எடுபடவில்லை. பிரபுதேவா செய்யாத நடனத்தை சம்யுக்தா செய்து அசத்தியிருக்கிறார். நாயகனை சுற்றி சுற்றி காதலிக்கும் வழக்கமான நாயகி வேடம். ஆனால் கிளாமர் காட்டி இந்த குளிர் சீசனில் கொஞ்சம் சூடேற்றிவிட்டார்.

ஈஸ்வரி ராவ் கேரக்டர் எதிர்பாராத ஒன்று. காலா படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகனிடம் கெஞ்சும் காட்சிகளில் நம்மை அழ வைக்கிறார். ஆனால் சில சீன்களில் நரைத்த முடியுடன் வருகிறார். மற்ற காட்சிகளில் கறுப்பு தலைமுடி.

ப்ளாஷ்பேக்கில் மாரிமுத்து.. கந்து வட்டி மற்றொரு தலைவனாக அர்ஜெய். இவர்களின் காட்சிகள் குறைவு.

டெக்னிஷியன்கள்…

சி.சத்யாவின் இசையில் தாய்ப் பாடல் உருக வைக்கிறது. என்னை பெத்த தேவதையே… என் தேவதையே என அம்மாவுக்கான பாடல் வரிகள் சூப்பர். பின்னணி இசையிலும் நல்ல தேர்ச்சி. விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.

நிறைய படங்களில் நாயகனாக நடித்த ஹரிக்குமார் தான் இப்படத்தின் இயக்குனர். பிரபுதேவாவின் ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

பொதுவாக தமிழ் படங்களில் நாயகன் ரவுடியாக இருந்தால் நாயகி வந்துதான் திருத்துவார். ஆனால் அம்மாவாக ஒரு கேரக்டர் (ஜெமினி படம் அப்படித்தான்) வந்து திருத்துவது சில படங்களில் உள்ள புதுமை.

அம்மா மகன் பாசம் இன்னும் நெருக்கமாக இருந்திருந்தால் நாமும் படத்துடன் ஒன்றிருந்திருக்கலாம். முதல்பாதியில் மெதுவாக கதை நகர்கிறது. ஆனால் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

Thael Movie review rating

சிங்களரிடம் சிக்கிய சிங்கம்.; சினம் கொள் விமர்சனம்

சிங்களரிடம் சிக்கிய சிங்கம்.; சினம் கொள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

இலங்கை போர் பற்றி இந்த உலகமே அறிந்திருக்கும். ஆனால் போருக்கு பின்னால் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை. இந்த வாழ்வியலை யதார்த்தமாக சொல்லும் படம். போராளிகளின் வாழ்வையும் இந்த படம் அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

கதைக்களம்…

சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகிறார் போராளி அரவிந்தன் சிவஞானம். அப்போது தன் மனைவி மகள் எங்கே என தெரியாமல் தேடி அலைகிறார். அவரது நிலங்களை இலங்கை ராணுவம் அபகரித்துக் கொண்டமையால் தன் குடும்பத்தை தேடி அலைகிறார்.

போராளி நண்பர்கள் ஆதரவுடன் குடும்பத்தை கண்டுபிடிக்கிறார் அரவிந்தன்.

இனியாவது தன் குடும்பத்துடன் புதிய வாழ்க்கை வாழ நினைக்கிறார். ஆனால் இவருக்கும் ஒரு வெளிநாட்டு வாழ் தொழிலதிபர் தனச்செயனுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஒரு போதை கும்பல் தொழிலதிபரின் மகளை கடத்துகிறது. ஒருவேளை தன் மகளை அரவிந்தன் தான் கடத்தியிருப்பார் என தொழிலதிபர் சந்தேகிக்க போலீஸ் இவரை தேடுகிறது.

இதனால் மீண்டும் தன் வாழ்க்கையை தொலைக்கும் சூழ்நிலை. இதிலிருந்து எப்படி மீண்டார்.? போலீஸ் என்ன செய்தது.? அரவிந்தன் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

போராளியாக வாழ்ந்திருக்கிறார் அரவிந்தன். மனைவியை தேடி அலைவதாகட்டும் பின்னர் தன்னை சுற்றி நடக்கும் சதியில் இருந்து மீள்வதாகட்டும் அனைத்திலும் பாராட்டுக்களை பெறுகிறார்.

அரவிந்தனின் மனைவியாக நர்வினி டெரி, சிறப்பான தேர்வு. யாழினியாக லீலாவதி, பிரேம், பாலா, தீபச்செல்வன், வெளிநாட்டு வாழ் தமிழராக தனச்செயன் ஆகியோரும் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம்.

படத்தில் நடித்தவர்கள் என்பதை விட தங்கள் எண்ணங்களை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்து வாழ்ந்துள்ளனர் என சொல்லலாம். எங்குமே கமர்சியல் எட்டிப்பார்க்கவில்லை.

டெக்னிஷியன்கள்..

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையளவுக்கு பாடல்கள் ஈர்க்கவில்லை. ஆனால் பாடல் வரிகள் வலியை உணர்த்தும விதமாக உள்ளது.

எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற வைக்கிறது.

பொதுவாக இதுபோன்ற படங்கள் ஆவணப்படங்களாவே வெளிவரும். (டாக்குமெண்ட்ரி டைப்) ஆனால் இந்த படம் அப்படியாக இல்லாமல் நல்ல தரத்துடன் யதார்த்தமாக படைக்கப்பட்டு உள்ளது.

இன்னும் இலங்கை தமிழர்களை நம்மில் ஒருவராக பார்க்காமல் அகதிகளாகவே பார்க்கும் மனநிலை இங்கு உள்ளது. அவர்களை வைத்து இங்கே அரசியல் நடக்கிறது. அதை நாம் அறியும் வகையில் படமாக்கியுள்ளனர்.

இறுதியாக ஒரு காட்சியில் கதையின் நாயகன் மரணமடைகிறார். அது எப்படி என்பது புரியாமலே படம் முடிகிறது. ஆனால் அதன் பின்னால் இலங்கை அரசும் சென்சார் அமைப்பும் உள்ளது.

கைதி செய்யப்பட்ட காலத்தில் போராளிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளால் சில வருடங்களில் அவர்கள் மரணிப்பதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப்.

போராளி அமுதனை கண்டதும் ஊர் மக்கள் அனைவரும் அவரை வரவேற்கின்றனர். மனைவியை தேடி அலைகிறார். ஆனால் போராட்டக் களத்தையும் அவர்களின் மண வாழ்க்கையின் ஆரம்பத்தையும் சின்ன சின்ன காட்சிகளாக காட்டியிருக்கலாம் இயக்குனர்.

அமுதன் யார்? அவரை பேச்சை ஊரே கேட்க என்ன காரணம்? என்பதை காட்டியிருந்தால் நம்மால் இன்னும் படத்துடன் ஒன்றிணைந்திருக்க முடியும்.

ஆக… இந்த சினம் கொள் படம்.. போராளி சிங்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி சிங்களரிடம் தொலைத்தனர் என்பதை சொல்லும்..

 

ஏதாச்சும் சொல்லுங்க..; என்ன சொல்ல போகிறாய் விமர்சனம் 2.75/5

ஏதாச்சும் சொல்லுங்க..; என்ன சொல்ல போகிறாய் விமர்சனம் 2.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

டிவியில் குக் வித் கோமாளியில் கலக்கிய அஸ்வின் இதில் ஹீரோ. இவருடன் புகழும் நடித்துள்ளார். படம் முழுக்க முக்கோண காதல்…

கதைக்களம்…

ரேடியோவில் ஆர்ஜேவாக பணிபுரிகிறார் விக்ரம் (அஸ்வின்). இவர் காதலித்து திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். ஆனால் நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவந்திகாவை பெண் பார்க்க செல்கிறார். இவர் ஒரு காதல் கதைகளின் எழுத்தாளர்.

நாயகனுக்கு ஏற்கெனவே ஒரு லவ் ப்ரேக்அப் இருக்க வேண்டும் என நினைக்கிறார். அப்போதுதான் காதலியை புரிந்து மனைவியை இன்னும் நன்றாக காதலிப்பாராம் என விளக்கம் சொல்கிறார்.

எனவே பெண் பார்க்கும் சமயத்தில் நாயகனும் ஒரு பெண்ணை காதலித்தாக பொய் சொல்கிறார். (அந்த பொய் காதலி தேஜீ அஸ்வினி. )

ஹீரோ முன்னாள் காதலை உருகி சொல்ல சொல்ல… அந்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்கிறார் அவந்திகா. எனவே தன் நண்பன் புகழின் உதவியால் தேஜீவை நடிக்க சொல்கிறார்கள். முதலில் மறுக்கும் தேஜீ பின்னர் ஒத்துக் கொள்கிறார்.

நிச்சயத்தார்த்தமும் நடக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் பொய்யான காதலி மீது அஸ்வினுக்கு காதல் வருகிறது. ஆனால் அவளோ காதலிக்க மறுக்கிறார்.

ஒரு பக்கம் கட்டிக் கொள்ள போகும் பெண்.. மற்றொரு புறம் பொய்யான காதலி.. நடுவில் அஸ்வின். என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அஸ்வின் அறிமுகம் படம்.. செம ஸ்மார்ட்டாக இருக்கிறார். நன்றாக டான்ஸ் ஆடியுள்ளார். ஆனால் இன்னும் நடிப்பில் மெருகேற்ற வேண்டும். இவளா அவளா என தடுமாறும் காட்சிகளில் பெரிதாக ஈர்ப்பு இல்லை. அதுபோல் எமோஷனலும் போதவில்லை.

அவந்திகா அழகு என்றால் தேஜ் அஸ்வினி கூடுதல் அழகு. இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். தேஜ் மேடை நாடக காட்சிள் போர்.

பார் (PUB) நடத்தும் நபராக புகழ். காமெடி எடுபடவில்லை. அதுபோல் சுவாமிநாதன் காட்சிகளும் நீண்ட இழுவை.

மற்றபடி டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு காட்சிகள் ஓகே ரகம்.

டெக்னிஷியன்கள்..

படத்தில் பெரும் பாராட்டை பெறுபவர்கள் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்.

விவேக் – மெர்வின். இவர்களின் பின்னணி இசை செம. அதுபோல் பாடலும் நம்மை ஈர்க்கிறது. ‘க்யூட் பொண்ணு’ பாடலும் ‘நீதானடி’ பாடலும் சூப்பர். உருட்டு பாடல் தாளம் போட்டு ஆட வைக்கும். க்ளைமாக்ஸ் மெலோடி பாடலும் அருமை.

ரிச்சர்ட் எம்.நாதனின் ரிச்சான ஒளிப்பதிவு நம் கண்ணுக்கு விருந்து. முக்கியமாக ஏடிஎம் சீன்.. இரவில் கடற்கரை காட்சிகள்.. நாடக மேடை என அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது. கலை இயக்குனரின் கைவண்ணமும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.

ஆனால் எடிட்டர்தான் நம்மை பொறுமையை சோதித்துவிட்டார். முதல் பாதி செம. ஆனால் இரண்டாம் பாதி இழுத்துக் கொண்டே போகிறது.

இயக்குனர் ஹரிஹரன் காதலர்களை கவர படம் எடுத்துள்ளார். அதற்கேற்ப நிறைய காட்சிகளை வைத்துள்ளார். நிறைய காட்சிகளில் வாலி படமும் குஷி படமும் நினைவுக்கு வரும். அதுபோல் புகழும் ஒரு டயலாக் சொல்கிறார்.

முதலில் லவ் ப்ரேக் அப் செய்தவர்தான் வேண்டும் என சொல்லும் அவந்திகா.. பின்னர் திருமணம் நடந்து 10 வருடத்திற்கு பின் மனம் மாறினால் என்ன செய்வது என குழுப்புவது எல்லாம் ரொம்ப ஓவர்.

அதுபோல் நாயகனின் மனம் அடிக்கடி மாறுவதாலும் புகழும் மாற்றி மாற்றி பேசுவதாலும் நமக்கே போரடிக்கிறது. அட ஏதாச்சும் சொல்லி முடிங்கப்பா என சொல்ல வைக்கிறது.

ஆக.. என்ன சொல்ல போகிறாய்.. நன்றாக சொல்லியிருந்தால் சிறப்பு.

Enna Solla Pogiraai movie review and rating in Tamil

பொங்கலுக்கு கிடைத்த பிரியாணி.; நாய்சேகர் விமர்சனம் 3.5/5

பொங்கலுக்கு கிடைத்த பிரியாணி.; நாய்சேகர் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

நாய் கடியால் சேகருக்குள் ஏற்படும் மாற்றங்களை காமெடியாக அறிவியல் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிஷோர் ராஜ்குமார். இவரே படத்தில் ஒரு கேரக்டராகவும் நடித்துள்ளார்.

காமெடி நடிகர் சதீஷ் இதில் நாயகனாக அறிமுகம். சின்னத்திரை நடிகை பவித்ரா லட்சுமி நாயகியாக அறிமுகம்.

கதைக்களம்..

சதீஷ் மற்றும் பவித்ரா லட்சுமி இருவரும் ஒரே ஐடி கம்பெனியில் பணிபுரிகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கின்றனர்.

சதீஷின் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஞ்ஞானி மரியம் ஜார்ஜ் பல ஆராய்ச்சிகளை செய்துவருகிறார். இவர் வெறித்தனமாக ரஜினி ரசிகர் என்பதால் ரஜினி பட பெயர்களையே தன் ஆராய்ச்சிக்கு பெயராக வைக்கிறார்.

உதாரணத்திற்கு புறா மற்றும் நாய் டிஎன்ஏக்களை எடுத்து மாற்றி செலுத்துகிறார். அதாவது நாய் பறக்கும்.. புறா கடிக்கும்… இதுபோன்ற வித்தியாசமான ஆராய்ச்சிகளை செய்து பார்க்கிறார்.

இந்த சூழ்நிலையில் இவர் வளர்க்கும் ஒரு நாய் (அதன் பெயர் படையப்பா) சதீஷை கடித்துவிடுகிறது. இதனால் நாய் சுபாவம் கொண்டவராக மாறுகிறார் சதீஷ். அந்த படையப்பாவோ சதீஷாக மாறுகிறது.

இதனால் சதீஷ் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறது.. நாய் மனிதனாக மாறி என்ன செய்தார்.? கடைசியில் என்ன ஆச்சு? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் என்பதால் ஓவர் பில்டப் இல்லாமல் கொடுத்த கேரக்டரில் பாராட்டை பெறுகிறார் சதீஷ். க்ளைமாக்ஸ் காட்சி என்றாலும் கூட அதிரடி பைஃட் கேட்காமல் செய்துள்ளது சிறப்பு. டான்ஸில் நல்ல தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் இன்னும் ரொமான்ஸ் செய்திருக்கலாம்.

அமுல்பேபியாக வந்து செல்கிறார் பவித்ரா லட்சுமி. சில காட்சிகளில் க்யூட்.

நாய்க்கு வாய்ஸ் கொடுத்துள்ளார் மிர்ச்சி சிவா. படையப்பா பேசும் பன்ச் வசனங்கள் நிறைய கைத்தட்டல்களை பெறுகிறது.

பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் வில்லனாக நடித்துள்ளார். பாட்டு பாடியே கொல்லும் காட்சிகள் செம. இது என்ன ராகம்.. இது என்ன ராகம் என இவர் கேட்பது சிறப்பு.

பவித்ராவின் அப்பா இளவரசு, சதிஷின் அப்பா ஞானசம்பந்தம், அடியாள் மாறன், சயின்ஸ்ட் மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பல பேர் நம்மை நிறையே சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

சொல்லப்போனால் சதீஷை விட இவர்களை நிறைய காமெடி செய்துள்ளனர்.

சதீஷின் நண்பராக நடித்துள்ள இயக்குனர் கிஷோர் ராஜ்குமாரும் சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்க தவறவில்லை.

இதுபோன்ற படங்களில் லாஜிக் பார்க்க வேண்டாமென்பதால் காமெடிக்காக ரசிக்கலாம்.

மேலும், மனோபாலா, கேபிஒய் பாலா, இளவரசு, ஸ்ரீமன், சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டெக்னிஷியன்கள்..

அஜீஷின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சாண்டி நடனம் அமைத்துள்ள நாய் பாணியில் ஆடும் டான்ஸ் அருமை. டூயட் பாடல் ஓகே.

பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. எடிட்டர் தன் பணியில் ஓகே.

குழந்தைகளை கவரும் வகையில் படத்தை இயக்கியுள்ளார் கிஷோர். எனவே பொங்கலுக்கு குடும்பத்துடன் பார்க்கலாம்.

ஆக.. இந்த நாய் சேகர்.. பொங்கலுக்கு கிடைத்த பிரியாணி

Naai Sekar movie review and rating in Tamil

More Articles
Follows