மனுசனா நீ விமர்சனம்

மனுசனா நீ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் ஒரு கும்பல் இளைஞர்களை குறி வைத்து கடத்துகிறது.

கிட்டதட்ட 36 வாலிபர்கள் மாயமாகி விடுகின்றனர். இதனால் போலீஸ் அதற்கான விசாரணையில் இறங்குகிறது.

இதனிடையில் நாயகன் ஆதர்ஷும், நாயகி அனு கிருஷ்ணாவும் காதலிக்கின்றனர்.

ஆதர்ஷின் அப்பா ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவருடைய நிலத்தை அந்த ஊரில் பெரிய தாதாவாக இருக்கும் சுப்பு பஞ்சு அபகரிக்க நினைக்கிறார். ஆனால், ஆதர்ஷின் அப்பா இடம் கொடுக்க மறுக்கிறார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்படுகிறது.

இந்நிலையில் சுப்பு பஞ்சுவின் ஆட்களை ஆதர்ஷை அடிக்க, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் கஸாலி ஒரு மருந்து செலுத்துகிறார்.

இதனால் அவருக்கு பல மடங்கு சக்தி வருகிறது.

அப்போது ஆதர்ஷின் முகத்தில் பல காயங்கள் திடீரென ஏற்படுகிறது.

திடீரென ரத்தம் கொட்டுகிறது. முகமெல்லாம் பருக்கள் போல காயங்கள் ஏற்படுகிறது.

இதற்கு காரணம் கஸாலி செலுத்திய மருந்துதான் காரணம் என போலீஸ் கண்டுபிடிக்கிறது.

மற்ற இளைஞர்களையும் அவர்தான் கடத்தியுள்ளார் என்பது தெரியவருகிறது.

அப்படியென்றால் கஸாலி என்ன மருந்து கொடுத்தார். மற்ற இளைஞர்களை கடத்த என்ன காரணம்? என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்..

நாயகனாக நடித்திருக்கிறார் ஆதர்ஷ். டான்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ஓகே. நடிக்க முயற்சித்திருக்கிறார்.

நாயகி அனுகிருஷ்ணா அழகு கண்களால் ரசிகர்களை ஈர்ப்பார். அவரைப் போன்று அவரது கண்களும் குண்டு.

பின்னணி இசை சில இடங்களில் பேசப்படும்.

கஸாலி இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல், மருத்துவமனையின் டீனாகவும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்திற்கு இசையையும் இவரே அமைத்திருக்கிறார்.

மெடிக்கல் க்ரைம் திரில்லர் படத்தை மாறுப்பட்ட கோணத்தில் கொடுக்க நினைத்திருக்கிறார். டாக்டர்கள் ஆராய்ச்சி செய்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதில் ஜஸ்ட் பாஸ் மார்க் பெறுகிறார். க்ளைமாக்ஸில் அந்த கால் முடியாதவர் பழிவாங்கும் காட்சி நச்.

ஆராய்ச்சி என்ற பெயரில் மனித உயிர்களோடு விளையாடும் மருத்துவர்களுக்கு இப்படம் ஒரு எச்சரிக்கை.

மனுசனா நீ… மெடிக்கல் மிராக்கிள்

First on Net : நாச்சியார் விமர்சனம்

First on Net : நாச்சியார் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜோதிகா, ஜிவி. பிரகாஷ், இவானா, ராக்லைன் வெங்கடேஷ், தமிழ்குமரன் மற்றும் பலர்
இயக்கம் : பாலா
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு: ஈஸ்வர்
எடிட்டிங்: சதீஷ் சூர்யா
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு: பாலா மற்றும் EON STUDIOS

கதைக்களம்…

நாச்சியார் (ஜோதிகா) ஒரு போலீஸ் அதிகாரி. ஒரு மைனர் பெண்ணை (இவான்) கற்பழித்து குற்றத்திற்காக ஜிவி பிரகாஷை கைது செய்கிறார்.

அவரும் மைனர்தான். இந்நிலையில் இவானுக்கு குழந்தை பிறக்கிறது.

ஆனால் குழந்தையின் டிஎன்ஏ டெஸ்ட் ஜிவி.பிரகாஷின் டெஸ்ட் உடன் மேட்ச் ஆகவில்லை.

அப்படியென்றால் அந்த சிறுமியின் குழந்தைக்கு அப்பன் யார்? குழந்தை என்ன ஆனது? ஜோதிகா குற்றவாளியை கண்டு பிடித்தாரா? ஜிவி. பிரகாஷ் யார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு நாச்சியார் விடை சொல்வாள்.

கேரக்டர்கள்…

இதுநாள் வரை நாம் பார்த்த துறுதுறு ஜோதிகா இதில் முரட்டு ஜோதிகாவாக ஜொலிக்கிறார்.

வெள்ளத் தோலா இருக்கேன். ஹேய் ஸ்வீட்டி, ஹாய் இப்படி எல்லாம் பேசுவேன் பாத்தியா. சங்க அறுத்துடுவேன் என ஜோதிகா சொல்லும் போதே இவர் ஒரு டெரர் போலீஸ்தான் என பயமுறுத்துகிறார்.

ஆனால் அந்த முரட்டு குணத்திலும் மென்மை இருக்கிறது என்பதை தன் போலீஸ் ஜீப் டிரைவர் ஒரு வண்டியில் மோதிய உடன் அந்த டிரைவரை கண்டிப்பதில் தெரிகிறது.

அந்த மென்மையை க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்று நம் மனதை வென்றுவிடுகிறார்.

குற்றவாளிக்கு ஜோதிகா கொடுக்கும் அந்த தண்டனை பாலா டச். இதுபோல் தண்டனை கொடுத்துவிட்டால் எவனும் தப்பு செய்ய மாட்டான்.

இதுநாள் வரை ஜிவி. பிரகாஷிடம் இப்படியொரு நடிப்பை பார்த்திருக்க முடியாது. தன் கெட்டப் முதல் பாடி லாங்குவேஜ் வரை மாற்றியிருக்கிறார்.

நாச்சியார் படத்திற்கு முதல்நாள் சூட்டிங் செல்லும்போது இந்த மேக்அப் உடன்தான் ஜிவி பிரகாஷ் போனாராம். அப்போதே இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையாம். இவரின் கேரக்டர் வெற்றி அன்றே தொடங்கிவிட்டது.

மேடம் அது ஒரு சப்ப மேட்டர். நான் பாத்துகிறேன். அவகிட்ட சொல்லாதீங்க என ஜோதிகாவிடம் சொல்லும்போது ஜிவி. பிரகாஷ் ஜேஜே பிரகாஷ் ஆக மாறிவிடுகிறார்.

தன் இனிமையான நடிப்பால் மயிலிறகாய் வருடி செல்கிறார் இவானா.

சின்ன சின்ன முகபாவனைகள், மழலைத்தனம் மாறா பேச்சு, எல்லாரிடம் அன்பாய் பழகும் விதம் என நம்மை இறுக வைத்து விடுகிறார் இந்த இவானா.

இவர்களுடன் ப்ரோஷ் கானாக வரும் ராக்லைன் வெங்கடேஷ் படம் முழுக்க யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டு விடுகிறார். கம்பீரம் கண்ணியம் என நல்ல தேர்வு.

இவர்களுடன் ஜிவி. பிரகாஷின் பாட்டி (மருதுவில் விஷால் அம்மாவாக நடித்தவர்), போலீஸ் கான்ஸ்டபிள், இவானாவின் தாய்மாமன், டாக்டர்கள், ஜோதிகாவின் கணவர், அவர்களின் மகள் என அனைவரும் சில காட்சிகளில் வந்தாலும் தன் முத்திரையை பதித்து செல்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாலாவுக்கு இளையராஜாவுக்கும் அப்படி என்னதான் கெமிஸ்ட்ரியோ தெரியாது. கதையை புரிந்து அதற்கு தன் இசையால் உயிரூட்டியிருக்கிறார். பின்னணி இசையில் கூட திரைக்கதையின் உணர்ச்சிகளை சொல்லிவிடுகிறார்.

படத்தின் டைட்டில் கார்டூ போடும்போது எதற்க்காக குப்பை மேட்டை காண்பிக்கிறார்கள் என்றால், அதையும் ஒரு முக்கிய காட்சியாக கொடுத்துவிடுகிறார்.

எங்களுக்கு கோயிலும் ஒன்னுதான். குப்பை மேடும் ஒன்னுதான் என் போலீஸ் சொல்வது சட்டத்தின் மதிப்பை காட்டுகிறது.

குண்டு வைக்கிறவன அந்த கடவுள் தண்டிக்கலையே என்று சொல்லிவிட்டு அப்படியென்றால் ஒரு நல்ல கடவுளை இனி உருவாக்கிவிடுமோ என்று அந்த போலீஸ் பேசும் வசனங்கள் நச்.

கோர்ட் காட்சி முதல் விசாரணை காட்சிகள் வரை அனைத்தும் யதார்த்தம்.

க்ளைமாக்ஸில் ஜிவி. பிரகாஷை ஜோதிகா பாராட்டும் காட்சி மனதில் நிற்கும்.

ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் கைவண்ணத்தில் காட்சிகள் கவிதை.

டீசரில் ஜோதிகா பேசும் அந்த கெட்ட வார்த்தை சரியான இடத்தில்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

படத்தின் முதல் பாதி செல்வதே தெரியாது. அப்படியொரு எடிட்டிங் செய்து இருக்கிறார் சதீஷ் சூர்யா.அடடா… இப்படியொரு ட்விஸ்ட் என நினைக்கும்போதே இண்டர்வெல் கொடுத்து ரசிக்க வைத்துவிடுகிறார் பாலா.

சினிமாவில் நடித்தவர்கள் எல்லாம் நடிகர்கள் என்றால் பாலாவின் இயக்கத்தில் நடித்தவர்கள்தான் சிறந்த நடிகர்கள் என ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்.

குற்றம் செய்யாதவர்களை ஜோதிகா தண்டிப்பதும் அதன்பின்னர் அதற்கு மன்னிப்பு கூட கேட்காதது எல்லாம் போலீஸின் மிருகத்தனம்.

விசாரித்துவிட்டு அடிக்காமல் அடித்துவிட்டு விசாரிப்பதும் அதற்கு விளக்கம் கொடுப்பதும் சரியான தீர்வல்ல. இவருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறதே. அதை எண்ணி பார்ப்பது இல்லையோ?

நாச்சியார்… தமிழ்சினிமாவின் நறுமணம்

கலகலப்பு2 விமர்சனம்

கலகலப்பு2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜெய், ஜீவா, சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரசா, யோகிபாபு, விடிவி கணேஷ், ராதாரவி, முனீஷ்காந்த், மதுசுதன் ராவ், வையாபுரி, மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி, சதீஷ், மனோபாலா, சிங்கமுத்து, ரோபோ சங்கர், சந்தான பாரதி, தளபதி தினேஷ், நந்திதா (கவுரவ கேரக்டர்) மற்றும் பலர்
இயக்கம் : சுந்தர் சி.
இசை : ஹிப்ஹாப் ஆதி
ஒளிப்பதிவு: யுகே செந்தில்
எடிட்டிங்: ஸ்ரீகாந்த்
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே அஹ்மத்
தயாரிப்பு: குஷ்பூ

கதைக்களம்…

சுந்தர் சி படம் என்றால் காமெடி மேஜிக்தான். அதிலும் இந்த படத்திற்கு கலகலப்பு என்று டைட்டில் வைத்துவிட்டு விட்டார். அவரின் மேஜிக் காமெடி ஒர்க் அவுட் ஆகியுள்ளதா? என்று பார்ப்போம்.

ஜெய்க்கு அவரின் பரம்பரை சொத்து ஒன்று காசியில் உள்ளது தெரிய வருகிறது.

அதை தேடி அங்கு செல்கிறார். அந்த இடத்தில் மேன்சன் நடத்தி வருகிறார் ஜீவா.

அது தெரியாமல் அங்கு சென்று தங்குகிறார் ஜெய். அப்போது அங்கு வரும் நிக்கி கல்ராணி மீது காதல்.
தன் தங்கையை பெண் பார்க்க வரும் சதீஷின் தங்கை கேத்ரீன் மீது ஜீவாவுக்கு காதல்.

இதனிடையில் ஜீவாவை ஒரு பண விஷயத்தில் ஏமாற்றியவரும், ஜெய்யை ஏமாற்றியதும் மிர்ச்சி சிவா என்று தெரிய வருகிறது.

எனவே இருவரும் சேர்ந்து சிவாவை தேடிச் செல்ல, அதன்பின்னர் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஜெய், ஜீவா இரண்டு நாயகர்கள். ஜெயக்கு நிக்கி ஜோடி. ஜீவாவுக்கு கேத்ரீன் ஜோடி.

இவர்களின் காதல் எந்த விதத்திலும் அவர்களுக்கும் ஒட்டவில்லை. நமக்கும் ஒட்டவில்லை. வருகிறார்கள். டூயட் பாடுகிறார்கள்.

நாயகிகள் இருவரும் இடையை இடையே கிளுகிளுப்பு ஏற்றுகிறார்கள்.

மிர்ச்சி சிவா இடைவேளையில் வருகிறார். அவரும் யோகிபாபுவும் வந்தபின்தான் படத்தின் காமெடி களை கட்டுகிறது.

யோகிபாபு மற்றும் சிங்கமுத்து காமெடி செமயாய் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இந்த கூட்டணி தொடர்ந்தால் இன்னும் ரசிக்கலாம்.

ரோபோ சங்கரின் அக்கா அவரது கணவர் சந்தானபாரதியை பார்த்து உங்க மாமா ஒன்னுமே பண்ணல என அடிக்கடி டபுள் மீனிங் காமெடி ஒரு பக்கம்.

இவர்களுடன் விடிவி கணேஷ், ராதாரவி, முனீஷ்காந்த், மதுசுதன் ராவ், வையாபுரி, மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி, சதீஷ், மனோபாலா, சிங்கமுத்து, தளபதி தினேஷ் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே உள்ளது.
இரண்டாம் பாதியில் இவர்கள் நம்மை நன்றாகவே சிரிக்க வைக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சுந்தர் சியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார்தான் இதிலும் ஒளிப்பதிவு.

காசி மேன்சன், கலர்புல் லொக்கேஷன் என ரசிக்க வைக்கிறார். இரண்டு அழகான நாயகிகளையும் அழகாகவே காட்டிவிட்டார்.

ஹிப்ஹாப் ஆதியை நம்பி போனால் கொஞ்சம் ஏமாற்றம்தான். பிடிச்சிருக்கா பிடிக்கலையா என்ற பாடல் கொஞ்சம் பிடிக்கலாம்.

ஆர்ட் டைரக்டர் பொன்ராஜ் குமார் கவனிக்கவைக்கிறார்.

சுந்தர் சி படம் என்றால் குடும்பத்தோடு பார்க்கலாம். அதை நம்பி போகலாம்.

ஆனால் முதல்பாதியில் காமெடி ரொமான்ஸ் என்ற பெயரில் நம் பொறுமையை சுந்தர் சி அதிகம் சோதித்து விட்டார்.

கலகலப்பு 2 கொஞ்சம் ரசிக்கலாம்

சவரக்கத்தி விமர்சனம்

சவரக்கத்தி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : மிஷ்கின், ராம், பூர்ணா மற்றும் பலர்
இயக்கம் : ஜிஆர். ஆதித்யா
இசை : அரோல் கரோலி
ஒளிப்பதிவு: கார்த்திக் வெங்கட்ராமன்
எடிட்டிங்: ஜீலியன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: மிஷ்கின்

கதைக்களம்…

காலை முதல் மாலை 5 மணிக்குள் நடக்கும் ஒரு கதைதான் இதன் ஒன்லைன்.

ராம் முடி வெட்டும் தொழில் செய்பவர். இவரின் பிரதான ஆயுதமே சவரக்கத்தி தான். இவரின் மனைவி பூர்ணா. இவருக்கு காது கேட்காது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.

பூர்ணாவின் தம்பியின் திருட்டு கல்யாணத்திற்கு தன் குடும்பத்துடன் பைக்கில் செல்கிறார் ராம்.

அப்போது ஒரு சின்ன விபத்து. அந்த காரில் மிஷ்கின் இருக்கிறார்.

அப்போது மிஷ்கின் ஒரு பெரிய தாதா என்பதை தெரியாமல் அவரை கேவலமாக திட்டு விடுகிறார் ராம்.

இதனால் மிஷ்கினின் ஆட்கள் ராமை விரட்ட அவர் ஓடிக் கொண்டே இருக்கிறார்.

அதன் பின்னர் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை நகைச்சுவையோடு பரிமாறியிருக்கிறார் டைரக்டர் ஆதித்யா.
சவரக்கத்தி வென்றதா? வெட்டுக்கத்தி வென்றதா? என்பதே க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

ராம் யதார்த்த மனிதராக வாழ்ந்திருக்கிறார். தன்னால் சண்டை போட முடியாது என்பது தெரிந்தாலும், தன் குழந்தைகள் முன் அவமானப்பட முடியாமல் திருப்பி அடிக்கும்போது அப்பா ஒரு ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார்.
ஒரு வரியில் சொன்னால் பிச்சை கேரக்டரில் பிச்சி எறிந்திருக்கிறார் ராம்.

இவருக்கு இணையான கேரக்டரில் மிஷ்கின். அடிதடி தாதா என வலம் வந்தாலும் விட்டுக் கொடுத்து செல்வதில் தன் கேரக்டரை உயர்த்தியிருக்கிறார்.

சின்ன சின்ன முகபாவனைகளால் மிஷ்கின் மிளிர்கிறார்.

காது கேளாத கேரக்டரில் பூர்ணா. தன் சொந்த குரலில் பேசி அப்பாவி பெண்ணாக மனதில் நிறைகிறார்.

கர்ப்பிணியாக இருந்து கொண்டு இவர் செய்யும் அட்டகாசங்கள் அதகளம்.

இவர்களுடன் மிஷ்கின் அடியாட்களாக வரும் ஒவ்வொருவரும் செம. அதிலும் அந்த பச்சை டிசர்ட்க்காரர் கவனம் ஈர்க்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மிஷ்கின் எழுதி பாடியுள்ள சவரக்கத்தி தங்ககத்தி பாடல் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். அரோல் கரோலி இசை ரசிக்க வைக்கிறது.

ஒரு சில இடங்களை சுற்றி சுற்றி காட்சிகள் வைத்திருந்தாலும் அதையும் போராடிக்காமல் அழகாக கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் வெங்கட்ராமன்.

படத்தின் இயக்குனர் ஜிஆர். ஆதித்யா என்றாலும் முழுக்க முழுக்க மிஷ்கின் படம்தான். அவரது பாணியில் சவரக்கத்தியை பட்டை தீட்டியிருக்கிறார்.

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்திற்கு சென்றால் ரசிக்கலாம். க்ளைமாக்ஸ் காட்சி நிச்சயம் நம்மை கலங்க வைக்கும்.

சவரக்கத்தி.. தங்ககத்தி

விசிறி விமர்சனம்

விசிறி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ராம் சரவணா, ராஜ்சூர்யா, ரெமோனா ஸ்டெஃபனி மற்றும் பலர்
இயக்கம் : வெற்றி மகாலிங்கம்
இசை : தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் சங்கர்
பி.ஆர்.ஓ. : குமரேசன்
தயாரிப்பு: ஜமீல் சகீப், ஜாபர் சாதிக்

கதைக்களம்…

தல தளபதி ரசிகர்களும் அவர்களின் சண்டையும் அதன்பின்னர் சமாதானமும் இது படத்தின் ஒன்லைன் கதை.
விஜய் அஜித் ரசிகர்கள் இருவர் ஃபேஸ்புக்கில் விரோதியாக உள்ளனர்.

இதில் விஜய் ரசிகரின் தங்கையை காதலிக்கும் அஜித் ரசிகர் அந்த பெண்ணிடம் தான் ஒரு விஜய் ரசிகர் என்று கூறிவிடுகிறார்.

அதன்பின்னர்தான் தன் அண்ணனின் விரோதியே அந்த அஜித் ரசிகர்தான் என தெரிய வருகிறது.

நீ எங்களையும் போல் விஜய் ரசிகராக மாறிவிடு. அப்படியென்றால் உன்னை திருமணம் செய்துக் கொள்கிறேன் என நாயகி சவால் விடுகிறாள்.

இதனிடையில் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருந்த படங்களை ஒரு கும்பல் வாட்ஸ் அப்பில் வெளியிட்டு விடுகிறது.

அதன்பின்னர் என்ன நடந்தது? அந்த கும்பலை கண்டுபிடித்தார்களா? அஜித் ரசிகர் விஜய் ரசிகராக மாறினாரா? என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

visiri rival song

கேரக்டர்கள்…

‘தல வெறியன்’ சிவாவாக நடித்திருக்கும் ராம் சரவணாதான் படத்தின் நாயகன். ஒரு பொண்ணை “வால்ட்டு” (மேட்டர்) அடிக்க வேண்டுமென அவர் காதலிப்பது ரொம்ப ஓவர்தான்.

‘தளபதி ரசிகன்’ கில்லி சூர்யாவாக ராஜ் சூர்யா நடித்துள்ளார். இவர் படத்தின் 2வது நாயகன் என்றாலும் இவரை வில்லன் போல காட்டியிருக்கிறார்கள்.

ரெமோனா ஸ்டெஃபனி நாயகியாக நடித்துள்ளார். சில காட்சிகளில் தேர்ச்சி பெறுகிறார்.

அஜித் ரசிகரின் நண்பர்களாக வரும் ஒரு நபர் கவனிக்க வைக்கிறார்.

இவர்களைத் தவிர படத்தில் ஒரு சில கேரக்டர்கள் இருந்தாலும் யாரும் மனதில் ஒட்டவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தன்ராஜ் மாணிக்கம் இசையில் தல தளபதி போட்டி பாட்டு ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு கச்சிதம்.

அறிமுக நடிகர்கள், பட்ஜெட் ஆகியவையால் சிறு குறைபாடுகள் இருந்தாலும், இயக்குநர் தான் சொல்ல வந்ததை ரொம்ப நீடிக்காமல் சொல்லிவிட்டார்.

டைட்டில் கார்டூ போடும்போது விஜய் அஜீத்தின் படங்களில் இருந்து ‘மாஸ் சீன்’களை பக்காவாக தொகுத்து மாஸ் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

ஆனால் படம் முழுவதும் ஹீரோ வாய்ஸ் ஓவரில் பேரில் ஓவராக பேசிக் கொண்டே இருக்கிறார். குறைத்திருக்கலாம்.

பெரும்பாலான காட்சிகளில் டயலாக்குகளை விட பினன்னி இசை காதை கிழிக்கிறது. சில இடங்களில் பில்டப் மட்டுமே உள்ளது.

விசிறி… தல தளபதிக்காக பேசும்

படைவீரன் விமர்சனம்

படைவீரன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஹீரோ விஜய் யேசுதாஸ் எந்த வேலைக்கும் போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார்.

இதனிடையில் நாயகி அம்ரிதாவை காதலிக்கிறார்.

இவர்கள் ஊருக்கும், பக்கத்து ஊருக்கும் ஜாதி பிரச்சனை பல காலமாக இருக்கிறது.

ஆனால் மாமன் மச்சான் என அன்போடு வாழ நினைக்கின்றனர்.

ஒரு சூழ்நிலையில் போலீஸ் ஸ்டேசன் செல்கிறார் நாயகன்.

அங்கு சென்றபின்தான் சரக்கு, சாப்பாடு, அதிகாரம் என ஜாலியாக வாழ வேண்டுமென்றால் போலீஸ் ஆக வேண்டும் என தீர்மானிக்கிறார்.

அதற்காக தனது உறவினரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான பாரதிராஜாவிடம் உதவி கேட்கிறார்.

அதன்பின்னர் லஞ்சம் கொடுத்து போலீஸ் ஆகிறார்.

போலீஸ் பயிற்சி முடித்து ஊருக்கு திரும்பும் போது, இரு ஊர்களுக்கும் இடையேயான ஜாதி பிரச்சனை கலவரமாக மாறி விடுகிறது.

அதன்பின்னர் என்ன செய்தார்? ஜாதி கலவரத்தை முற்றிலும் அழித்தாரா? ஜாதியை ஒழிக்க என்ன செய்தார் இந்த படை வீரன் என்பதே மீதிக்கதை.

DVAnL8iVwAAWO2_

கேரக்டர்கள்..

வேலை வெட்டி இல்லாத கிராம இளைஞர் மற்றும் போலீஸ் கேரக்டர் என இரண்டிற்கும் செம பிட்டாய் வாழ்ந்துள்ளார் விஜய் யேசுதாஸ்.

மாரி படத்தை விட இதில் பல மடங்கு நடிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

எக்ஸ் மிலிட்டர் மேனாக வருகிறார் பாரதிராஜா. சில காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் இவரது கேரக்டரில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

ஜாதியை ஒழிக்க இவர் சொல்லும் வசனங்கள் நன்றாக உள்ளது.

துணிச்சலான பெண்ணாக அம்ரிதா. அழகாக நடித்து நம் மனதில் நிற்கிறார்.

சிங்கம் புலி, மனோஜ் குமார் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளனர். சிங்கம்புலி மற்றும் மகாநதி சங்கருக்கு இன்னும் சில காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

DVAnOlSVQAAJh4S

தொழில்நுட்ப கலைஞர்கள்..

படத்திற்கு பெரிய பலம் கார்த்திக் ராஜாவின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அருமை. உள்ளது. ராஜா வேல் மோகனின் ஒளிப்பதிவும் ரசிக்கும்படி உள்ளது.

முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு துறுதுறுப்பு 2ஆம் பாதியில் இல்லை. ஜாதி பிரச்சினை, போலீஸ் என எங்கோ செல்கிறது.

ஆனால் கிளைமாக்ஸ் சற்றும் எதிர்பாராத ஒன்று. இயக்குனர் தனாவை இறுதிக்காட்சிக்காகவே பாராட்டலாம்.

படைவீரன்… ஜாதியை ஒழிக்கும் வீரன்

More Articles
Follows