அன்பும் ஆட்டுக்குட்டியும்… மானசி விமர்சனம்

அன்பும் ஆட்டுக்குட்டியும்… மானசி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்
நடிகர்கள்: நரேஷ் மாதேஸ்வர், ஹரிஷ்ஷா பேகம், தவசி, ஆதித்யா ராம், சல்மான் பரிஸ் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – கண்ணன் பட்டேரி
எடிட்டர் – அச்சு விஜயன்
இசை – சிவ்ராம்
இயக்கம் – நவாஸ் சுலைமான்
தயாரிப்பு – மேத்யூ ஜோசப்

கதைக்களம்…

நாயகன் நரேஷ் மாதேஸ்வர் ஆடு மேய்ப்பவர். ஆடுகள் இவரின் உலகம் எல்லாம். தன் குழந்தை போல் அதிகளவில் பாசம் வைத்திருப்பவர். ஆடுகளுக்க ஒவ்வொரு பேர் வைத்து அதனுடன் பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

ஊரை விட்டு ஒதுக்குப்புறமான இடத்தில் ஆடுகளுடன் வசிக்கிறார். இதனால் மக்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதை கூட தெரியாமல் வளர்கிறார்.

ஒரு நாள் ஒரு கல்லறை பார்க்கும் இவர். அதில் உள்ள எழுத்துக்களை படித்து, மானசி என்ற பெயரை தெரிந்துக் கொண்டு அந்த பெண்ணை காதலியாக நினைத்து உருகுகிறார்.

அவருடன் பேசுவதாக நினைத்து தன் வாழ்க்கையை ஓட்டுகிறார். ஒரு ஆட்டுகுட்டிக்கு கூட மானசி என்று பெயர் வைத்து கொஞ்சி விளையாடுகிறார்.

இவரின் மாமா தவசி. (கருப்பன் குசும்பன் கேரக்டர் பிரபலமானவர்). இவர்கள் ஒரு நாள் ஆடுகளை மேய்த்து வரும்போது ஒரு கார் அந்த வழியாக செல்கிறது.

அப்போது அதில் உள்ளவர்கள் மானசியை திருடி செல்கின்றனர்.

எனவே தன் ஆட்டுக்குட்டியை தேடி கம்பம் சிட்டி பகுதிக்கு செல்கிறார் நாயகன். அதன்பின்னர் என்ன ஆனது? தன் மானசியை எப்படி கண்டுபிடித்தார்? காதலி கனவில் மட்டும்தானா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்…

நாயகன் நரேஷ் மாதேஷ்வர். ஆட்டுக்குட்டி மீது இப்படி எல்லாம் அன்பு செலுத்த முடியுமா? என ஆச்சரியப்பட வைக்கிறார். கிராமத்து இளைஞராக வெள்ளந்தியாக நடித்திருக்கிறார்.

ஆனால் ஆடு போல கத்தி கொண்டு சண்டை போட்டு முட்டுவது எல்லாம் ஓவர். அதிலும் ஆடும் உடனும் கனவு காதலி உடனும் பேசுவது போரடிக்கிறது.

மாமாவாக வரும் தவசி எப்போதும் போல கிராமத்து மனிதராக ரசிக்க வைக்கிறார்.

நாயகி ஹரிஷ்ஷா பேகத்திற்கு பெரிதாக வேலையில்லை. பாடல் காட்சிகளில் கவர்கிறார். இடையில் போலீசாக வருகிறார். ஆனால் பயந்தபடியே இருப்பது கம்பீரத்திற்கு அளகு இல்லையே.

கிராமத்து பாடல்களும் பாடல் வரிகளும் நன்றாக உள்ளன. ஒரு குத்து பாடல் கூட தாளம் போட வைக்கிறது.
ஒளிப்பதிவில் தெளிவில்லை என்பதால் படத்துடன் மனம் ஒன்றாக மறுக்கிறது.

உண்மையாக அன்பு இருந்தால் அது எந்த உயிராக இருந்தாலும் நிச்சயம் அதை நம் மனம் தேடு என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.

ஆடுகளுடன் பேசுவது இல்லாத காதலியை வரவழைத்து அவருடன் பேசுவது நாயகன் ஓகே என்றாலும் ரசிகர்களுக்கு சரி வருமா?

ஆனால் ஆட்டை தேடி சென்ற பின்னும் அதன் பின் நடக்கும் நிகழ்வுகளிலும் சுவராஸ்யம் இல்லை.

ஆட்டை விற்கும் கும்பல் அதன் பின்னணியில் உள்ள வியாபாரத்தை இன்னும் மெருக்கேற்றி சொல்லியிருக்கலாம் இந்த மானசி அனைவருக்கும் பிடித்திருக்கும்.

மானசி.. அன்பும் ஆட்டுக்குட்டியும்

Manasi review rating

உச்சம் தொட்டதா..? உச்சக்கட்டம் விமர்சனம்

உச்சம் தொட்டதா..? உச்சக்கட்டம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்.. தாகூர் அனூப் சிங் – ஆதித்யா, சாய் தன்ஷிகா – ரேஷ்மி, தன்யா ஹோப் – கரிஷ்மா, கபீர் துஹான் சிங் – தர்மேந்திரா, கிஷோர், ஷ்ரத்தா தாஸ் – கிருத்திகா, பிரபாகர், வம்சி கிருஷ்ணா, ஷ்ரவன் ராகவேந்திரா
கதை மற்றும் இயக்கம் – சுனில் குமார் தேசாய்
தயாரிப்பாளர் – தேவராஜ் ஆர்
பின்னணி இசை – சஞ்ஜோய் சவுத்ரி
ஒளிப்பதிவு – ராஜன், விஷ்ணு வர்தன்
படத்தொகுப்பு – பி எஸ் கெம்பராஜூ
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

கதைக்களம்..

சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங் தான் இப்படத்தின் நாயகன்.

படத்தில் 2 நாயகிகள் உள்ளனர். ஒருவர் தன்ஷிகா மற்றொருவர் தடம் பட நாயகி தன்யா ஹோப்.

தன்ஷிகாவை காதலிக்கிறார் ஹீரோ தாகூர் அனூப் சிங். இவர்கள் இருவரும் காதலர்கள். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு விடுதிக்கு செல்கின்றனர்.

அங்கு, ஒரு நபரை ஒரு கும்பல் கொலை செய்கிறது. இந்த கொலையை தன்ஷிகா வீடியோ எடுத்து விடுகிறார்.
இதனை பார்த்த அந்த கும்பல் தன்ஷிகாவை துரத்துகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க ஒரு கார் டிக்கியில் ஒளிந்து கொள்கிறார் தன்ஷிகா.

கார் டிக்கி மூடிவிடுகிறது. பின்னர் என்ன ஆனது? தன்ஷிகா என்ன ஆனார்? தன் காதலியை அனூப் சிங் காப்பாற்றினாரா? கொலையாளிகள் யார்? கொலைக்கு என்ன காரணம்.? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹீரோ தாகூர் அனூப் சிங் செம உடற்கட்டோடு வருகிறார். ஆக்சனில் அசத்தல். அதகளம் செய்து மிரட்டியிருக்கிறார். இவரது உடற்கட்டுக்கு ரொமான்ஸ் வராது போல. முகத்தை இறுக்கமாகவே வைத்துள்ளார்.

ரெளடி கும்பலிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும் ஆக்சனிலும் ஸ்கோர் செய்துள்ளார் தன்ஷிகா.

தடம் படத்தில் தடம் பதித்த இரண்டாவது நாயகி தன்யா ஹோப் இதில் பைட்டில் நம்மை கவர்கிறார்.

‘வேதாளம்’ புகழ் கபீர் துஹான் சிங் வில்லனாக நடித்துள்ளார். தன் கண்களிலேயே மிரட்டியுள்ளார்.

‘ஆடுகளம்’ கிஷோர், ஷ்ரவன், ராகவேந்திரா, வம்சி கிருஷ்ணா, ஷ்ரத்தா தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு சஞ்ஜோய் சவுத்ரி இசை அமைத்திருக்கிறார்.

பின்னணி இசை ஓகே. பெரிதாக மிரட்டவில்லை. த்ரில்லர் படத்திற்கு இது போதாது.

பி.ராஜன், விஷ்ணுவர்த்தன் ஒளிப்பதிவில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

த்ரில்லர் கதையாக இருந்தாலும் நமக்கு அப்படி ஒரு அனுபவம் கிடைக்கவில்லை.

Uchakattam review rating

கவிதை பேசும் கண்ணழகி; எம்பிரான் விமர்சனம் 3/5

கவிதை பேசும் கண்ணழகி; எம்பிரான் விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

நாயகன் ரெஜித் மேனன் ஒரு டாக்டர். இவரின் அம்மா கல்யாணி நடராஜன். தன் உண்டு தன் கடமை உண்டு என இருப்பவர் இவர். இவரது கனவில் இவருக்கு தெரியாத ஒரு பெண் அடிக்கடி வருகிறாள். ஏதோ தனக்கு நடக்க போகிறது? என குழப்பம் அடைகிறார்.

தன் மகனுக்கு ஒரு நல்ல வரன் கிடைக்க அம்மா கோயில் கோயிலாக செல்கிறார்.

நாயகி ராதிகா ப்ரீத்தி தனது தாத்தா சந்திரமெளலியோடு வசிக்கிறார்.

ஹீரோயினுக்கு ஹீரோ மீது லவ்வோ லவ். நீ போகும் இடமெல்லாம் நானே வருவேன் என்பது போல பாலோ செய்கிறார். ஆனால் தன் காதலை சொல்ல தயக்கம் காட்டுகிறார்.

அவர் டாக்டர் தானே. அவரை சந்திக்க வேண்டும் என்றால் தனக்கு ஏதாவது விபத்து அல்லது காய்ச்சல் வரவேண்டும் என்பதால் ஏதாவது செய்துக் கொண்டே இருக்கிறார்.

ஒரு நாள் அதிக காய்ச்சலும் வருகிறது. தன் தாத்தாவுடன் டாக்டரை சந்திக்க செல்கிறார்.

ஆனால் பெரும் விபத்து ஏற்பட தாத்தா சந்திரமெளலி சம்பவ இடத்திலேயே இறக்கிறார். நாயகியோ கோமா நிலைக்கு சென்று விடுகிறார்.

அதன் பின்னர் ராதிகா காதல் கை கூடியதா? ரெஜித் மேனனுக்கு ராதிகாவின் காதல் தெரிந்ததா.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ஸ்மார்ட்டான டாக்டர் ரெஜித் மேனன். இவர் ரொமான்ஸ் செய்யவில்லை என்றாலும் இவரை நிச்சயம் பெண்கள் சுற்றுவார்கள் என்பது போல இருக்கிறார். நடிப்பில் கொஞ்சம் ஸ்கோர் செய்துள்ளார்.

இந்த படமே நாயகிதான். என்ன அழகு? எத்தனை அழகு? என்ற பாட்டே பாடலாம். கண்களில் காதல் பேசி நம்மை போதை ஏற்றுகிறார். பேச்சும் மழலை பேச்சுக்கு ஈடாக உள்ளது. ப்ரேம் பை ப்ரேம் அழகு சேர்கிறார்.

தாத்தாவாக நடித்துள்ள சந்திரமௌலி மற்றும் அம்மாவாக நடித்துள்ள கல்யாணி இருவரும் தங்கள் பணிகளில் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யாகாவராயினும் நாகாக்க” பட புகழ் பிரசன்னாவின் இசையில் பாடல்கள் சிறப்பு என்றாலும் குறைந்த நேர படத்தில் இத்தனை பாடல்கள் தேவையா? என தோன்றுகிறது.

புகழேந்தி என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாயகி மீது அவ்வளவு பாசமா? எனத் தெரியவில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகாக காட்டியுள்ளார். எனவே நாயகிக்காகவே படத்தை பார்க்கலாம்.

நம் முன்னோர்கள் மறைந்த நம் நலம் விரும்பிகள் தனக்கு நடக்கப்போகும் நல்லது கெட்டதை முன்னரே கனவில் வந்து சொல்வார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

இது சரியா? என்பதை தாண்டி அப்படி இருந்தால் நல்லது தானே என நினைக்க தோன்றுகிறது.

நல்ல கதைக்களம் என்றாலும் மெதுவாக செல்லும் திரைக்கதையால் படம் நம்மை சோதிக்கிறது. ஒருவேளை ஏதாவது காமெடி நடிகர் இருந்திருந்தால் நமக்கு போரடிக்காமல் இருக்காது என்றே சொல்ல வேண்டும்.

எம்பிரான்… கவிதை பேசும் கண்ணழகி

ஆச்சரியங்கள் நிறைந்தவன்.; அகவன் விமர்சனம்

ஆச்சரியங்கள் நிறைந்தவன்.; அகவன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கிஷோர் ரவிச்சந்திரன், சைரா ஸ்ரீ, நித்யா ஷெட்டி, தம்பி ராமையா, சரண்ராஜ், நரேன், பிரியங்கா, ஹலோ கந்தசாமி, ஆர்என்ஆர் மனோகர் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – பாலா பழனியப்பன்
எடிட்டர் – தாஸ் அண்ட் நிர்மல்
இசை – சி. சத்யா
இயக்கம் – ஏபிஜி ஏழுமலை
தயாரிப்பு – ரவிச்சந்திரன்
பிஆர்ஓ – நிகில் முருகன்

கதைக்களம்..

நாயகன் கிஷோர் கோயிலில் தங்கி கோயில் தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். தன் அண்ணணை இழந்த அண்ணி மற்றும் 2 குழந்தைகளை நன்றாக வளர்க்க கஷ்டப்படுகிறார்.

இவருக்கு பக்கபலமாக தம்பி ராமையாகவும் வேலை பார்க்கிறார்.

கோயில் அருகே 2 நாயகிகள் (அக்கா தங்கை) பூக்கடை வைத்து வியபாரம் செய்கின்றனர். இருவருக்குமே ஹீரோ மீது காதல்.

கோயிலில் தினம் தினம் இரவு வேளையில் சில மர்மமான விஷயங்கள் நடைபெறுகிறது.

அந்த மர்மமான சம்பவங்களுக்கு பேய் தான் காரணம் என சொல்லப்படுகிறது.

ஆனால் கோயிலில் பேய் எப்படி வரும் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.

ஒரு சூழ்நிலையில் நாயகியே இந்த சர்ச்சையில் சிக்கி கொள்கிறார். அதை தெரிந்துக் கொள்ள நாயகன் முற்படுகிறார்.

இதனிடையில் ஒரு கும்பல் நாயகனை கடத்தி விடுகிறது. அப்போதுதான் அந்த கும்பலுக்கு நாயகனுக்கும் உள்ள தொடர்பான பல பிரச்சினைகளை முடிவுக்கு வருகிறது. அது என்ன..? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

தயாரிப்பாளரின் மகன் தான் பட நாயகன் கிஷோர். நல்ல உயரம், கலர் என ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஆனால் மனதில் எப்போதும் ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டு செயல்படுவதால் இறுக்கமாகவே வருகிறார்.

எனவே டபுள் ஹீரோயின்ஸ் இருந்தும் ரொமான்ஸ்க்கு இடமில்லை.

அக்கா தங்கை (சைரா ஸ்ரீ, நித்யா ஷெட்டி) என நடித்திருக்கும் இரண்டு பேருமே நடிப்பில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

பேய்க்கும் கோயில் நிர்வாகிக்கும் பயப்படுவராக தம்பி ராமையா. ஒன்லைன் காமெடியில் கலக்கியிருக்கிறார்.

உயர் போலீஸ் அதிகாரியாக சரண்ராஜ் நடித்துள்ளார். இவருடன் ஆர்என்ஆர் மனோகர் மற்றும் அந்த வெள்ளை தாடி பெரியவரும் நல்ல தேர்வு. மிரட்டியுள்ளனர்.

கணவன் மனைவியாக வரும் நரேன் (கீர்த்திவாசன்) காவ்யா (பிரியங்கா) இருவரும் நல்ல தேர்வு. சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒரு நாத்திகவாதியான யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். அதிலும் ஆன்மிக பாடல்களையும் ஆராய்ந்து எழுதியுள்ளது சிறப்பு.

கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள அழகை கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் பால பழனியப்பன். நிறைய காட்சிகளை இருட்டிலேயே படமாக்கியுள்ளார். அதையும் நன்றாகவே செய்துள்ளார்.

சத்யாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. எல்லா பாடல்களுமே அ என்ற எழுத்தில் தொடங்குவது சிறப்பு.

இயக்கம் பற்றிய அலசல்…

ஒரு கோயில் கோபுரத்தை வடிவமைக்கின்றனர் என்பது முதல் மூலவர் அமைவது வரையிலான அனைத்தையும் ஆதார அடிப்படைகளை ஆராய்ந்து அதை வைத்து கதையை அமைத்துள்ளார் இயக்குநர் ஏழுமலை.

குறுந்தொகையில் “அகவன் மகள் பாடுக பாட்டே” என்கிற வரிகள் வரும். அதுபோல் இங்கு அகவன் என்றால் தெய்வம் என பொருள் படும் வகையில் அமைத்துள்ளார்.

இப்பட தயாரிப்பாளர் நிஜத்தில் கட்டியுள்ள ஒரு கோயிலை மையமாக வைத்து அதை சுற்றி கதையை வடிவமைத்துள்ள இயக்குனரை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

ராஜராஜ சோழன் முதல் பல அரசர்கள் வடிவமைத்துள்ள சிற்ப கோயில்களையும் அதனை சார்ந்துள்ள ஆச்சயரியங்களை அடுக்கியுள்ளார்.

பூமியில் அடியில் புதைக்கப்பட்ட ஆச்சரியங்களையும் தமிழனின் பெருமையை போற்று வகையில் ஓர் அருமையான திரைக்கதையை கொடுத்துள்ளார் ஏழுமலை.

அதில் கமர்சியல் கலந்துக் கொடுத்தால் மட்டுமே ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதையும் உணர்ந்து செயல்பட்டு இருக்கிறார்.

ஆனால் படத்தின் நீளத்தை கருதி சில காட்சிகளை வெட்டி எறிந்தால் இந்த அகவனை இன்னும் ரசிப்பார்கள்.

படத்தில் 2 இடங்களில் நடிகர் அஜித் பற்றிய டயலாக் வருகிறது. அது தேவையில்லாமல் திணிக்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.

அகவன்.. ஆச்சரியங்கள் நிறைந்தவன்

Aghavan review rating

First on Net குருவாயூரப்பன் மகிமை… கிரிஷ்ணம் விமர்சனம்

First on Net குருவாயூரப்பன் மகிமை… கிரிஷ்ணம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: அக்சய் கிருஷ்ணன், ராதிகா, சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, விஜய்பாபு, வினீத், ராஜீவ் பணிக்கர், அஞ்சலி உபசனா மற்றும் பலர்.
ஒளிப்பதிவு & இயக்கம் – தினேஷ் பாபு
எடிட்டர் – அபிலாஷ் பாலசந்திரன்
இசை – ஹரி பிரசாத்
சொந்த உண்மை கதை மற்றும் தயாரிப்பு – பி.என். பலராம்
பிஆர்ஓ – விஜய்முரளி மற்றும் சக்தி சரவணன்
வெளியீடு – ஜெனிஷ்

கதைக்களம்..

நாயகன் அக்சய் மற்றும் நாயகி ராதிகா இருவரும் ஒரே காலேஜில் படிக்கின்றனர். இருவருக்கும் காதலும் மலர்கிறது.

நாயகன் வீட்டில் இந்த காதலுக்கு ஆதரவு இருந்தாலும், நாயகி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது.

ஒரு நாள் காலேஜ் கல்சுரல் புரோம்கிராம்கள் நடக்கும் போது நாயகன் மயங்கி விழுகிறான்.

பின்னர் தான் அவனுக்கு இதயத்தை சுற்றி ஒரு கட்டி இருப்பது தெரிய வருகிறது. கட்டியை அகற்றினாலும் அகற்றாவிட்டாலும் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர்.

மருத்துவர்கள் கைவிட்ட காரணத்தால் கடவுள் குருவாயூரப்பனையே நம்பி உள்ளனர் பெற்றோர். அப்போதுதான் ஒரு அதிசயம் நடக்கிறது.

அது என்ன? ஹீரோ உயிர் பிழைத்தானா? அது எப்படி? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்..

இதுவொரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கமர்சியல் எதையும் கலக்காமல் அப்படியே சொல்ல முயற்சித்துள்ளனர்.

நாயகன் தான் அந்த நோயில் இருந்து குணமானவர். எனவே அவரையே நாயகனாக்கி அவரது அப்பா இந்த படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கில் வெளியிடுகிறார்.

தன் மகன் பிழைக்க காரணமான குருவாயூரப்பன் மகிமை இந்த நாட்டுக்கு தெரிய வேண்டும் என்பதால் இதை தயாரித்துள்ளார். எனவே அவரை வெகுவாக பாராட்டலாம்.

நாயகன் நாயகி இருவரும் அழகான தேர்வு. காதல் மற்றும் நடனத்தில் அசத்துகின்றனர். நாயகியின் கண்களும் கூந்தலும் நம்மை ஈர்க்கின்றன. இவர்களின் நண்பர்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

சாய்குமார் மற்றும் சாந்தி கிருஷ்ணா இருவரும் நாயகன் பெற்றோர்களாக நடித்துள்ளனர். ஒரு பிள்ளைக்கு தீராத நோய் இருந்தால் பெற்றோரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை தங்கள் உணர்வுகளில் கொடுத்துள்ளனர்.

ஓரிரு பாடல்கள் ரசிகர்களை கவரும். பின்னணி இசை ஒரு சில இடங்களில் பேசப்படும் வகையில் உள்ளது.

இரண்டாம் பாதி முழுவதும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சென்றதால் அதில் நாடகத்தன்மை அதிகமாகவே உள்ளது. எனவே கமர்சியல் ரசிகர்களுக்கு படம் ஏமாற்றத்தை கொடுக்கும்.

தன் மகனின் உயிரை காப்பாற்றிய கடவுள் குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக இந்த படத்தை எடுத்துள்ளார் பலராம். இன்னும் சிறப்பாக திரைக்கதை அமைத்து எடுத்திருந்தால் எல்லாரையும் இந்த கிருஷ்ணன் கவர்ந்திருப்பார்.

குருவாயூரப்பன் மகிமையை உணர இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

ஆக மொத்தம்.. கிருஷ்ணம்.. குருவாயூரப்பன் மகிமை

Krishnam review rating

நடைபாதை வாசிகளின் வலி… ‘கபிலவஸ்து’ விமர்சனம்

நடைபாதை வாசிகளின் வலி… ‘கபிலவஸ்து’ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பொது கட்டண கழிப்பிடத்தை கவனித்து வருகிறார் நாயகன் நேசம் முரளி. இவரின் அம்மா மீரா கிருஷ்ணன் தவறான வழியில் இவரை பெற்று இங்கு இவரை போட்டு விட்டு சென்றுவிட்டதால் அந்த கக்கூஸை கூட கோயிலாக நினைத்து வழிப்பட்டு வருகிறார்.

சாம்பிராணி போடுவது முதல் நாயகி நந்தினியுடன் காதல் செய்வது வரை எல்லாத்தையும் அந்த கழிப்பிடத்திலேயே செய்து வருகிறார்.

அந்த கழிப்பிடத்தில் அருகே உள்ள நடைபாதையிலேயே நாயகி உள்பட பலரும் வசிக்கின்றனர்.

இதுபோல் ஒரு சிறுமியும் பாட்டியுடன் வசிக்கிறார். பள்ளி சென்று நன்றாக பயிலும் இவர், ஒரு வாடகை வீட்டிலாவது வசிக்க நினைக்கிறார். இதனால் இவர்களை அனைவரும் ஒரு வாடகை வீடு பிடிக்கவும் அட்வான்ஸ் கொடுக்கவும் படாதப்பாடு படுகின்றனர்.

அந்த சிறுமி படித்து முன்னேறினால் தாங்கள் அனைவரும் முன்னேறி விடலாம் என்பதால் ஒரு தங்கையாக நினைத்து சிறுமிக்கு நாயகன் உதவுகிறார்.

இவர்கள் நடைபாதை வாசிகள் என்பதாலும் இவர்களுக்கு யாருமில்லை என்பதாலும் அடிக்கடி போலீஸ் இவர்களை ஏதாவது ஒரு காரணம் சொல்லி சிறையில் அடைக்கின்றனர்.

ஒரு நாள் ஒரு பிரச்சினையில் நாயகனை போலீஸ் 2 வருடம் சிறையில் அடைத்து விடுகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? சிறுமி படித்தாரா? கழிப்பிடம் என்ன ஆனது? காதலி என்ன ஆனார்? வாடகை வீட்டுக்கு சென்றார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

தவறான வழியில் பிறக்கும் படும் அவலநிலையை அழகாக சொல்லி இருக்கிறார் நேசம் முரளி. இவரே இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.

அடிக்கடி கழிப்பிடத்தை காட்டுவதும், அதற்கு பூஜை செய்வதும் எல்லாம் ரொம்ப எரிச்சலை உண்டாக்குகிறது.

சிறுமி ஐஸ்வர்யா அனைவரையும் கவர்கிறார். இவரது கேரக்டர் நம் மனதில் நிறைந்கு இருக்கும். சின்ன வயதிலயே முன்னேற துடிக்கும் இவரது கேரக்டர் பேசப்படும் வகையில் உள்ளது.

போலீஸ் அதிகாரியாக மன்சூர் அலிகான் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

நாயகி நந்தினியை பாராட்டியே ஆகவேண்டும். படம் முழுவதும் கழிப்பிடத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் எப்படி எல்லாம் நடித்தார்களோ? தெரியவில்லை. ஆனால் அவர்களின் சகிப்புத்தன்மையை பாராட்ட வேண்டும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பலம். அதுபோல் பட பாடல் வரிகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது.

உங்களுக்கு கழிப்பிடம் எங்களுக்கு இருப்பிடம் என்ற பாடல் ரசிக்க வைக்கிறது.

உதவி செய்ய அனுமதி கேட்கனுமா? என்று சிறுமி கேட்கும் வசனங்கள் நம்மை ஈர்க்கிறது.

விஜியின் ஒளிப்பதிவு பிளாட்பாரத்தில் வாழ்பவர்களை யதார்த்தம் மீறாமல் காட்டியிருக்கிறார்.

30 வருடத்திற்கு முன்பு தவறவிட்ட குழந்தையை இப்போது தாய் தேடி வர என்ன காரணம்? என்பதை தெளிவாக சொல்லவில்லை.

தான் பிறந்த இடம் என்பதால் டாய்லெட்டில் உள்ள மலத்தை கையால் க்ளீன் செய்வது எல்லாம் முகம் சுழிக்க வைக்கிறது.

கபிலவஸ்து என்றால் புத்தர் இடம் என்பது நமக்கு தெரிந்திருக்கலாம். எனவே படத்தையும் புத்தர் பிலிம்ஸ் என்ற பெயரில் எடுத்துள்ளனர்.

மொத்தத்தில் ‘கபிலவஸ்து’ நடைபாதை வாசிகளின் வலி

Kabilavasthu review rating

More Articles
Follows