தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
அரசர் காலத்தில் நடந்த ஒரு பிரச்சனையும் நவீன காலத்தில் நடக்கும் ஒரு பிரச்சனையும் இரண்டையும் கலந்து நவீன காலத்து கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.. அது என்ன என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன்.
கதைக்களம்…
கேரளாவில் ஒரு பகுதியில் உள்ள கோயில் அருகே அமர்ந்து தியானம் செய்கிறார் சாமியார் நிவின் பாலி.
அதிகாலை நேரத்தில் அந்தக் கோயிலில் உள்ள அனுமார் சிலை காணவில்லை என கோயில் அர்ச்சகர் புகார் கொடுக்கிறார்.
இந்த ஊருக்கு புதிதாக வந்த நிவின் பாலி மீது ஊர் மக்கள் சந்தேகப்பட இந்த பிரச்சனை கோர்ட்டுக்கு செல்கிறது.
கோர்ட் நிவின்பாலியை விசாரிக்கிறது. இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கையில் திடீரென ஒரு அரசரின் வழக்கும் அதே கோர்ட்டிற்கு விசாரணைக்கு வருகிறது.
எனவே நிவின்பாலி வழக்கை நிறுத்தி வைத்து விட்டு அரசருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் நீதிபதி.
அதில் அரசருக்கு உள்ள பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் மந்திரி வேண்டுகோள் விடுகிறார். அரசர் & நீதிபதியால் தீர்க்க முடியாத பிரச்சினையை இறுதியாக நிவின்பாலி தீர்த்து வைக்கிறார்.
அது என்ன என்பதுதான் படத்தின் கதை.
கேரக்டர்கள்…
ரொமான்டிக் ஹீரோ ஆக்ஷன் ஹீரோ என பெயர் பெற்ற நிவின் பாலி இந்த படத்தில் ஏதோ ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கி வழுக்கி விழுந்து விட்டார் என்றே சொல்லலாம்.
நடிகர் லால் ராஜாவாக மிரட்டல். அவரது மந்திரியாக நடிகர் ஆசிப் அலி பக்குவமான நடிப்பு. கதாநாயகி ஷான்வி ஸ்ரீவாத்சவ்.
டெக்னீசியன்கள்...
கேமராமேன் சந்துரு செல்வராஜ்..
ஆக்சன் ஹீரோ பைஜு என இரண்டு ஹிட் படங்களை நிவின்பாலியை வைத்து இயக்கியவர் தான் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார் இயக்குனர் அப்ரிட் ஷைன்.
படத்தின் ஒளிப்பதிவு நிச்சயமாக நம்மை கவரும்.. கேரளாவின் அழகை நம் கண் முன் காட்டுகிறது. பின்னணி இசை படத்திற்கு போதுமான அளவில் உள்ளது.
ஆனால் படத்தின் கதை ஓட்டம் தான் என்னவென்று சொல்வதே தெரியவில்லை.
ஒரு சாமானியனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவன் நாடுவது காவல்துறையை தான்..
ஒருவேளை காவல் துறையில் நீதி கிடைக்கவில்லை என்றால் சிபாரிசு செய்ய அரசியல்வாதிகளை நாடுவர். ஒருவேளை அப்படியும் நீதி கிடைக்கவில்லை என்றால் அவர் இறுதியாக நாடும் இடம் நீதிமன்றம்.
ஆனால் நீதி வேண்டிய ஒரு பெண்.. நீதிமன்றத்தில் ஒரு பெண்ணை மானபங்கம் படுத்துவது எந்த விதத்தில் சரி.?
ஒரு பெண்ணை அழ வைக்க வேண்டும் அவள் கண்ணீர் சிந்த வேண்டும் என்பதற்காகவே முதலில் அவளை கிள்ளுவது.. பின்பு அவளை துன்புறுத்துவது.. ஆடைகளை களைந்து விடுவது.. நிர்வாணமாக்குவது என்று மக்கள் முன்னிலையில் நீதிபதியே நீதிமன்றத்தில் செய்ய சொல்கிறார்.
ஒருவேளை அவள் கண்ணீர் சிந்தினால் அந்தக் கண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அரசர் அருந்தினால் அவரது விக்கல் நின்று விடுமாம்.. அதற்காக தான் இந்த துன்புறுத்தல் என்பதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்..
அதன் பிறகு இறுதியாக நிவின்பாலி செய்யும் செயலால் (தோகை இறகால் வருடுவது) அவள் கண்ணீர் சிந்துகிறாள்..
இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் நாம் நீதிமன்றத் தீர்ப்பு அவலங்களை கண்டு வருகிறோம்.. அதாவது மத்தியில் ஆளும் கட்சிக்கோ அல்லது மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே பல தீர்ப்புகளை வழங்கி உள்ளது நீதிமன்றம்.
இது போன்ற சூழலில்… ஒரு அரசுக்கு ஒரு அரசருக்கு ஆதரவாக நீதிபதியே அதுவும் நீதிமன்றத்தில் செயல்படுவது பெரும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
அதுவும் நீதிமன்றத்திற்கு வரும் அரசர் குற்றவாளி கூண்டில் நிற்காமல் அரியாசனத்தில் அமர்ந்து கொண்டு நீதி கேட்பது என்ன நியாயம்.?
இப்படி ஒரு சினிமா.. அதுவும் மலையாள பட உலகில் வந்திருப்பது வேதனைக்குரிய செயலாகும்.. இதில் நிவின் பாலி நடித்திருப்பது எந்த விதத்தில் என்பதே புரியவில்லை.
ஆக..மஹாவீர்யர்.. மலையாளத்தில் ஒரு மக்கு… நீதி செத்துடுச்சி நாட்டாமை..
Mahaveeryar movie review and rating in tamil