தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
Casting : KNR Raja, Radharavi, Vijayalakshmi Veerappan
Directed By : KNR Raja
Music By : Song : Ravivarma – Prem
Produced By : KNR Movies – KNR Raja
சந்தன கடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமி என்பவர் மாவீரன் பிள்ளை படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.. இந்த படத்தை ராஜா என்பவர் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்திருக்கிறார்.
கதைக்களம்…
மதுவற்ற தமிழகம்.. இயற்கை விவசாயம்.. ஊழலற்ற ஆட்சி.. இந்த மூன்றையும் மையப்படுத்தி கதாபாத்திரங்களை உருவாக்கி படத்தை கொடுத்துள்ளார்.
கூத்துக் கலைஞர் ராதா ரவி வருமானம் இன்றி தவிக்கிறார். ஒரு பக்கம் விவசாயம் செய்து கொண்டு மாடுகளை வளர்த்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் தண்ணீர் பஞ்சத்தால் மாடுகளை இழக்கிறார்.. மேலும் தண்ணீர் இல்லாமல் தன் பயிர்கள் மடிந்து போவதால் தற்கொலை செய்து கொள்கிறார்.
மற்றொரு பக்கம் இவரது மூத்த மகன் நன்றாக படித்து வழக்கறிஞராக இருந்தாலும் அரசின் டாஸ்மாக்கால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மரணமடைகிறார்.
எத்தனை முறை தேர்தலில் நின்றாலும் மக்களின் ஆதரவை பெற முடியாததால் விஜயலட்சுமைய தேர்தலில் நிற்க ஒரு அரசியல் கட்சி கேட்கிறது. இவர் மறுக்கிறார். ஆனாலும் அந்தக் கட்சி தேர்தலில் நிற்கிறது.. அதன் பிறகு எந்த காட்சியும் காட்டப்படவில்லை
மேலும் அரசாங்கத்தில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே எந்த காரியமும் நடக்கும்.. ஓட்டுகளை மக்கள் விற்பதால் எந்த மாதிரியான ஆட்சி அமையும் என்பதையும் வலியுறுத்தி இதன் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ராஜா.
கேரக்டர்கள்…
விஜயலட்சுமி அறிமுகமாகும் காட்சியே அசத்தலாக உள்ளது. அவர் சில மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி சொல்லி கொடுக்கிறார்.
அப்போது ஒரு நபர் கேள்வி கேட்க.. “ஆண்கள் பெண்களைக் காப்பாற்ற வேண்டும்.. ஆனால் தற்போது ஆண்களிடம் இருந்து பெண்களை தற்காத்துக் கொள்வது பெரும்பாடு.. என அதிரடியான வசனத்துடன் அறிமுகம் ஆகிறார்.
அதன் பின் பெரிதாக எந்த காட்சியிலும் ஒட்டாமல் இறுதியாக மதுவுக்கு எதிராக போராட வருகிறார்.. போராட்டம் போராட்டம்.. போராடினால் மட்டுமே நாம் எதிர்பார்க்கும் சமுதாயம் அமையும் என்பதை வலியுறுத்தி படத்தை நிறைவு செய்கிறார் விஜயலட்சுமி.
ராதாரவி தன்னுடைய நவரச நடிப்பால் ரசிகர்களை நிச்சயம் கவருவார்.. அவர் பேசும் வசனங்கள் சாட்டையடி.. அரசியல்வாதிகளை அரசு ஊழியர்களையும் வசனத்தால் சாடியிருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் காதல் என சுற்றித் திரியும் ராஜா தன்னுடைய தந்தை மற்றும் அண்ணனின் மரணத்தால் மனம் மாறுகிறார்.. பின்னர் காதலை வெறுக்கும் அவர் இந்த சமுதாயம் முன்னேற பாடுபடுகிறார்.
டெக்னீஷியன்கள்…
ஒளிப்பதிவாளர் மஞ்சுநாத் தன்னுடைய பணியை சில நேரம் நேர்த்தியாக செய்து இருக்கிறார். ஆனால் பல காட்சிகளில் வைத்த கேமராவை அப்படியே விட்டு விட்டார் போல.. சிலர் பேசும் வசனங்களில் அவரது முக பாவனைங்கள் தெரிவதே இல்லை.
ரவி வர்மாவின் இசையில், ஆலயமணியின் வரிகளில் பாடல்கள் கவனம் பெறுகின்றன. பிரேமின் பின்னணி இசை ஓகே தான்.
படத்தை இயக்கி தயாரித்திருக்கும் கே.என்.ஆர்.ராஜா.. மதுவற்ற தமிழகம்.. இயற்கை விவசாயம்.. ஊழலற்ற ஆட்சி.. இந்த மூன்றையும் மையப்படுத்தி மாவீரனில் பிள்ளை படத்தை கொடுத்திருக்கிறார்.
இதை மையப்படுத்தி இருந்தாலும் அதற்கு ஏற்ப திரைக்கதை அமைத்திருக்கலாம்.. ஆனால் சமூக கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே காட்சிகளை அமைத்து இருக்கிறார். திணித்துள்ளது தெரிகிறது.
ஆக மாவீரன் பிள்ளை.. வீரம் குறைவுதான்.
Maaveeran Pillai movie review and rating in tamil