பேய் இல்லாத பேய் மிரட்டல்… லிப்ட் விமர்சனம் 3.5/5

பேய் இல்லாத பேய் மிரட்டல்… லிப்ட் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் டீம் லீடர் பதவிக்கு, பெங்களூருவிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி ஒரு ஐடியில் சேர்கிறார் கவின். வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே கம்பெனி வி.பி. அவருக்கு ஓவர் டைம் ஒர்க் கொடுக்கிறார்.

இரவு 10 மணிக்கு தான் ஒர்க் முடிகிறது. கவின் மட்டும் தனியாக வேலையை முடித்து விட்டு செல்லும்போது லிப்ட்டில் செல்லும் போது ஒரு அமானுஷ்யம் நடக்கிறது. அந்த அலுவலகத்தை அவரை செல்ல விடாமல் அது தடுக்கிறது.

அவர் எப்படி எல்லாமும் முயன்றும் தப்ப முடியவில்லை. அதே நேரத்தில் மற்றொரு கேபினில் அம்ரிதாவும் மாட்டிக் கொள்கிறார். இருவரையும் அந்த அமானுஷ்யம் துரத்துகிறது.

இவர்களை துரத்த என்ன காரணம்? இவர்களை பேயாக துரத்துவது யார்? இவர்கள் தப்பித்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

கவின் யதார்த்தமான நடிப்பில் நம்மை கவனிக்க வைக்கிறார். எனக்கு காதலிக்க நேரமில்லை என அவர் சொல்லும் போதெல்லாம் பெண்களின் மனம் பாடுபடும்.

அழகான மாடர்ன் மங்கையாக மனம் கவர்கிறார் அமிர்தா ஐயர். டேய்.. NEE GAY இல்லேல்ல.. பின்ன என்னை காதலிச்சா என்ன? என அமிர்தா கேட்கும் போது குறும்பு கலந்த நடிப்பில் மின்னுகிறார்.

முதலில் ஜாலியாக வந்தாலும் பின்னர் பயம், யதார்த்தம் என அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார் அம்ரிதா.

முழுப்படமே இவர்களை வைத்து மட்டுமே செல்கிறது. அதில் முதல் பாதியில் கொஞ்சம் ரொமான்ஸ் கொடுத்திருக்கலாம். இருவரின் பதட்டமே பாராட்டுக்குரிய வகையில் உள்ளது.

படத்தின் வில்லனாக பாலாஜி வேணுகோபால் மிகையில்லாத நடிப்பு. பிளாஷ்பேக்கில் கொஞ்ச நேரமே வரும் காதல் ஜோடிகளாக கிரண் கொன்டா, காயத்ரி ரெட்டி நடித்துள்ளனர். இவர்களையும் பாராட்டலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

படத்தில் ஒளிப்பதிவாளருக்கு அதிக வேலை. அதை பாராட்டும்படி சிறப்பாகச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவா. ஒரு லிப்ட்டை கூட இனி கண்டால் பயம் வரும் வகையில் கொடுத்துள்ளர்.

ஒரு பேய் படத்திற்கு என்ன அவசியமோ அதை பின்னணி இசையில் மிரட்டலாக கொடுத்துள்ளார் பிரிட்டோ மைக்கேல்.

மதனின் எடிட்டிங்க் பக்கா “ஷார்ப்”.

இயக்குனர் வினித் வரபிரசாத் அவர்களை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். காரணம்.. இந்த பேய் படத்தில் அவர் பேயை காட்டவில்லை. பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவில் நம்மை பயமுறுத்தி விடுகிறார்.

இதுபோன்ற பேய் படங்கள் என்றாலே நாயகிக்கு மேக்அப் போட்டு தலையை விரித்து போட்டப்படி வருவார்கள். பேய் பங்களா இருக்கும். ஆனால் அந்த பார்முலாக்களை உடைத்து புதிய பேய் கதை சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

முக்கியமாக பேய் படத்தில் ஐடி வேலையில் இருக்கும் தைரியமின்மையை கூறியிருக்கிறார். டார்கெட்… ஒர்க் பிரசர்… வேலையின்மை என பல உதாரணங்களை காட்டியிருக்கிறார். இதனால் பலர் தற்கொலை செய்துக் கொள்வதையும் ஒரு கருத்துக்காக பதிவு செய்துள்ளார்.

பல காட்சிகளில் ரசிகர்கள் சீட் நுனியில் இருப்பார்கள். ஆனால் இந்த படத்தை தியேட்டர்களில் பார்க்க முடியாது. இது ஓடிடியில் ரிலீசாகி உள்ளது.

லிப்ட்டில் கவின் கையில் கத்தியை வைத்துக் கொண்டு ஆடும் அந்த கொலை ஆட்டம் பிரம்மிக்க வைக்கிறது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாகியுள்ளது.

lift movie review

FIRST ON NET ஜாதி-மத அரசியலுக்கு நோ என்ட்ரீ…; ருத்ர தாண்டவம் விமர்சனம் 3/5

FIRST ON NET ஜாதி-மத அரசியலுக்கு நோ என்ட்ரீ…; ருத்ர தாண்டவம் விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் மற்றும் நாயகன் ரிச்சர்ட் மீண்டும் இணைந்துள்ள படம் ருத்ர தாண்டவம்.

இந்த படத்தை ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன் ஜி தயாரித்து இயக்கியிருக்கிறார்.

கதையின் நாயகனாக ரிஷி ரிச்சர்ட் நடிக்க அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ராதாரவி, கௌதம் மேனன், தம்பி ராமையா, ஜேஎஸ்கே கோபி, மனோபாலா, தீபா அக்கா, மாரிமுத்து, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஃபாருக் என்பவர் ஒளிப்பதிவு செய்ய ஜுபின் இசையமைத்துள்ளார்.

அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் படம் ரிலீசாகிறது.

கதைக்களம்…

ருத்ர பிரபாகரன் காவல்துறை அதிகாரி. நேர்மையானவர். பொறுமையானவர். கைதிகளிடம் கூட கனிவாக நடந்துக் கொள்ளும் நல்ல போலீஸ்காரன்.

மாணவர்களிடம் போதை பொருட்கள் விற்கும் 18 வயது இளைஞர்களை ஒரு முறை கையும் களவுமாக பிடிக்கிறார். அவர்கள் பைக்கில் தப்பித்துச் செல்ல அவர்களை துரத்துகிறார்.

அப்போது எதிர்பாராவிதமாக அவர்களை எட்டி உதைத்து பிடிக்க முயலும்போது இருவரும் கீழே விழுந்து விடுகின்றனர்.

அதில் இரு இளைஞன் சில நாட்களில் மரணமடைகிறார். இதனால் ருத்ரனின் வேலைக்கு பிரச்சினை ஏற்படுகிறது. மேலும் அந்த இளைஞன் தலித் இளைஞன் என்பதால் அரசியல் கட்சிகள் பிரச்சினையை வேறு ரூட்டில் திருப்பிவிட ருத்ரன் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.

அதன்பிறகு என்ன ஆனது? ருத்ரன் மீண்டும் பணியில் சேர்ந்தாரா? வழக்கில் எப்படி ஜெயித்தார்? இளைஞரின் மரணத்தின் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ருத்ர பிரபாகரனாக ரிச்சர்ட் நடித்துள்ளார். ஆ… ஊ என கத்தி கத்தி சண்டை போட்டுக் கொண்டோ இல்லை பன்ச் டயலாக் பேசியோ போலீஸ் ஆக தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. கொடுத்த வேலையை சிறப்பாக கச்சிதமாக யதார்த்தமாக செய்துள்ளார் ரிச்சர்ட்.

வேலை போன பிறகு சோகமாக இருந்தால் ஓகே. அதற்கும் முன்பும் சோகமயமாகவே இருக்கிறார். காரணம் என்ன ரிச்சர்ட்?

ரிச்சர்ட்டுக்கும் நாயகி தர்ஷா குப்தாவுக்கும் பெரிதாக கெமிஸ்ட்ரி இல்லை. ஒருவேளை மிடுக்கான போலீஸ் என்பதால் அதை குறைத்துவிட்டாரோ?

அழகான பாசமான மனைவியாக வந்து செல்கிறார் தர்ஷா குப்தா.

உயர் அதிகாரியாக ஜேஎஸ்கே கோபி. இவரும் யதார்த்த போலீசாக நடித்துள்ளார். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தன் துறை அதிகாரிக்கு எப்படி உதவ வேண்டும் என்பதை சொல்லும் விதம் அருமை. நிறைய படங்களில் இனி இவருக்கு வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கலாம்.

வக்கீல் இந்திரசேனாவாக ராதாரவி. கேரக்டரில் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். நாம் வாழ்க்கையில் சந்திக்கும் வக்கீல் போல சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மற்றொரு வக்கீலாக மாரிமுத்து. இவர் நியாயம் எது என்பதை பாராமல் காசுக்கு வேலை செய்யும் வக்கீலை காட்டியிருக்கிறார்.

போலீஸ் ரைட்டராக தம்பி ராமையா. நீண்ட நாளைக்கு பிறகு இவருக்கு பொறுப்பான வேடம். மனிதர் குறை வைக்காமல் நடிப்பை வழங்கியுள்ளார்.

வில்லனாக கௌதம் மேனன். ஓவராக கத்தி மிரட்டி வில்லத்தனம் செய்யாமல் தேவைக்கு ஏற்ப கெஞ்சியும் மிரட்டியும் சாதிக்கும் வில்லனிசம் செம.

போதை பொருள் விற்கும் இளைஞனாக பெரிய காக்கா முட்டை நடித்துள்ளார். இவரும் இவரது நண்பரும் தங்கள் கேரக்டரில் கச்சிதம். தீபா அக்கா, ஒய்ஜி

மகேந்திரன், மனோபாலா, ராம்ஸ் ஆகிய அனைவரும் தங்கள் கேரக்டர்களில் சிறப்பு. அம்பானி சங்கர் உள்ளிட்ட சில கலைஞர்களுக்கு வேலையே இல்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாரூக் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு இதம். ஹீரோ அண்ட் வில்லன் சந்திக்கும் காட்சியை பல ஆங்கிளில் காட்டியிருக்கலாம். ஒரே ஆங்கிள் ஷாட் போரடிக்கிறது. அந்த காட்சியில் இசை கூட பெரிதாக கவரவில்லை.

ஜுபின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. சலீம் படத்தில் வரும் பின்னணி இசை போல சில இடங்களில் உள்ளதை இசையமைப்பாளர் கவனித்திருக்கலாம்.

இந்த படத்திற்கு ஏன் இவ்வளவு பிரச்சினை.. இத்தனை தடை.. இவ்வளவு மிரட்டல்… பில்டப் தேவையா? எனத் தெரியவில்லை.
ஒரு போலீஸ்க்கு வழக்கமாக ஏற்படும் பிரச்சினை தான் முதல் பாதி. இரண்டாம் பாதியில் அதை அரசியல் சாயம் பூசிபவர்களுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.

தான் சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் விரைவாக சொல்லியிருக்கலாம் இயக்குனர் மோகன். நிறைய காட்சிகளுக்கு கத்திரியும் போட்டு இருக்கலாம். படத்தின் நீளம் பொறுமையை சோதிக்கிறது.

மதமாற்றம் மற்றும் போதை பொருள் கலாச்சாரத்திற்கு சாட்டையடி கொடுத்துள்ளார். ஒருவர் மதம் மாறிய பின்னர் அவர் இருந்த முந்தைய ஜாதி இனி செல்லாது என்பதை அரசியல் நுனுக்கத்துடன் சொல்லியிருக்கிறார்.

ஆக இந்த ருத்ர தாண்டவம்… ஜாதி மத அரசியலுக்கு நோ என்ட்ரீ

FIRST ON NET ஒலியும் ஒளியும் நடுவே புடவை விளம்பரம்..; சிவகுமாரின் சபதம் விமர்சனம் 1.5/5

FIRST ON NET ஒலியும் ஒளியும் நடுவே புடவை விளம்பரம்..; சிவகுமாரின் சபதம் விமர்சனம் 1.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மீசையை முறுக்கு’ படத்தைத் தொடர்ந்து ‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’.

TG தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன் ஆகியோர் SathyaJyothi Films சார்பில், ஹிப் ஹாப் தமிழா மற்றும் Indie Rebels உடன் இணைந்து சிவக்குமார் சபதம் படத்தை தயாரித்துள்ளனர்.

ஆதி ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான படம் ‘நான் சிரித்தால்’. அது தோல்வியை தழுவியதால் சபதம் எடுத்து இந்த சிவகுமாரின் சபதம் கொடுத்துள்ளார். படம் எப்படி இருக்கிறது.?

கதைக்களம்…

காஞ்சி பட்டுக்கே உரித்தான காஞ்சிபுரத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக தாத்தா வளர்ப்பில் வளர்கிறார்.

ராஜா காலத்தில் இருந்தே பட்டு நெய்து வரும் பாரம்பரிய வரதராஜன் குடும்பம் இது. ஆதி பிறப்பதற்கு 2-3 வருடங்களுக்கு முன்பு தான் இவரின் பாட்டிக்கு பிறக்கிறார் பிரான்க்ஸ்டர் ராகுல்.

எனவே கதைப்படி பிரான்க்ஸ்டர் ராகுல் ஆதிக்கு சித்தப்பா ஆகிறார்.

ஒரு கட்டத்தில் ஆதியை சென்னை அழைத்து செல்கிறார் சித்தப்பா. அங்கே சித்தப்பா குடும்பத்தில் ஆதியால் பிரச்சினை ஏற்படுகிறது.

இதனால் மீண்டும் தாத்தா வீட்டுக்கு திரும்பும் ஆதி “தான் ஒரே வருடத்தில் பட்டு தொழிலில் பெரிய தொழிலதிபராக உயர்ந்து காட்டி உங்களை வீழ்த்துவேன்..” என சபதம் போடுகிறார்.

இதுவே சிவகுமாரின் சபதம். அந்த சபதம் நிறைவேறியதா.? என்ன செய்தார்.? ஆதி என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

யோகிபாபு கசின் பிரதர் போல அவரது ஹேர் ஸ்டைலில் வருகிறார் ஹிப் ஹாப் ஆதி. ஆடுகிறார் பாடுகிறார் அழுகிறார் ஆனால் பெரிதாக ஈர்ப்பு இல்லை.

படத்தின் முதல் பாதியிலேயே 4 பாடல்கள் ஒலியும் ஒளியும் போல வருகிறது. இதன் நடுவே காஞ்சி பட்டு புடவைகளின் பாரம்பரிய சிறப்பு புராணம் வருகிறது.

அழகான நாயகியாக மாதுரி. சில இடங்களில் பானா காத்தாடி சமந்தாவை நினைவுப்படுத்துகிறார்.

தாத்தா கேரக்டரில் இளங்கோ குமணன். ரசிக்கும்படி செய்திருக்கிறார். ஆனால் இவர் கம்பீர தாத்தாவா? காமெடி தாத்தாவா? என கன்ப்யூஸ் செய்கிறார்.

ஆதியின் நண்பனாக ஆதித்யா கதிர் நடித்துள்ளார். சில இடங்களில் காமெடியில் ஓகே. பல இடங்களில் பேசியே கொல்கிறார்.

தன் முதல் படமான ‘மீசையை முறுக்கு’ படத்தில் ஏகப்பட்ட யூடியூபர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

இந்த சிவகுமாரின் சபதம் படத்தில் யூடியூபில் பிரபலமான பிரான்க்ஸ்டர் ராகுலை நடிக்க வைத்துள்ளார் என்பதை விட அழ வைத்துள்ளார். முருகன் என்ற பெயர் கொண்ட கேரக்டரில் வருகிறார்.

ரசிகர்களை ஒரேடியாக சோதித்து விட்டார் பிரான்க்ஸ்டர் ராகுல். ஓவர் ஆக்ட்டிங்கில் ஓவர் பில்டப்.

சந்திரசேகர் கேரக்டரில் விஜய் கார்த்திக் என்பவர் நடித்துள்ளார். இவர் இந்து படத்தில் பிரபுதேவாவின் நண்பராக நடித்துள்ளார். வில்லனத்தனம் கலந்த நடிப்பில் கலக்கல்.

ஆதியின் சித்தியாக விஜே பார்வதி வருகிறார். அவருக்கும் பெரிதான காட்சிகள் இல்லை. இவர்களுடன் ரஞ்சனா நாச்சியார், மனோஜ் & கோபால் ஆகியோரும் உண்டு. சிலர் நம் கவனம் ஈர்க்கின்றனர்.

டெக்னீஷியன்கள்..

கதை, திரைக்கதை, பாடல்கள், எழுதி படத்தை தயாரித்து ஹீரோவாக ஆதியே நடித்து இயக்கவும் செய்துள்ளார்.

பாடல்கள் ஆட்டம் போட வைத்தாலும் அவரின் முந்தைய பாடல்களை கேட்பது போல தான் உள்ளது. நாயகியுடன் தனியாக டூயட் கூட இல்லை. குரூப் டான்சர்ஸ் ஸ்டைலில் கலர்புல்லாக இருக்கு. அவ்வளவுதான்.

அருண்ராஜா ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. ரசிக்கலாம்.. எடிட்டர் முதல் பாதியை முழுவதுமாக கட் செய்திருக்கலாம்.

படம் முடியும் போது 20 நிமிட காட்சிகள் ஓகே. அதற்காக படம் முடியும் வரை ரசிகர்கள் காத்திருப்பார்களா? ஆதி ப்ரோ.?

அடுத்த படமாச்சும் பாத்து பண்ணுங்க ஹிப் ஹாப் ஆதி ப்ரோ..??!!

அருண்ராஜா DF. Tech (ஒளிப்பதிவு), தீபக் S. துவாரகநாத் (படத்தொகுப்பு), சந்தோஷ் (நடன இயக்குனர்), ஸ்ரீஜித் சாரங் (கலரிஸ்ட்), வாசுதேவன் (கலை இயக்குனர்), Nectar Pixels Media (VFX), தபஸ் நாயக் (ஒலி கலவை), நிகில் மேத்யூஸ் (ஒலி பொறியாளர்), , Sync Cinema (SFX), அமுதன் பிரியான் (டிசைன்ஸ்), அஸ்வந்த் ராஜேந்திரன் (நிர்வாக தயாரிப்பாளர்) ஆக பணியாற்றியுள்ளனர்.

SivakumarinSabadham Movie Review and Rating in Tamil

மாயமில்ல… மந்திரமில்ல… ஒன்னுமில்ல… சூ மந்திரகாளி விமர்சனம் 2/5

மாயமில்ல… மந்திரமில்ல… ஒன்னுமில்ல… சூ மந்திரகாளி விமர்சனம் 2/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு கிராமம் – அடுத்தவர் மீது பொறாமை பிடித்தவர்கள் முதலில் செய்யும் காரியம் அவனுக்கு பில்லி சூனியம் செய்து செய்வினை வைப்பதுதான். இப்படி ஊருக்கு ஒருவர் இருந்தால் ஓகே.. ஊரே அப்படியிருந்தால்…

அடுத்த கிராமம் – பில்லி சூன்யம் வைப்பதை தொழிலாக கொண்டவர்கள் வாழும் கிராமம்

கதைக்களம்…

ஒரு கிராமத்தில் வாழ்பவர்கள் அனைவரும் பங்காளிகள். இவர்கள் அனைவரும் பொறாமை குணம் கொண்டவர்கள். எனவே ஒருவருக்கொருவர் சூனியம் வைத்து அடுத்தவனை அழிப்பதையே எண்ணமாக கொண்டவர்கள்.

இவர்களின் அடுத்த கிராமத்தில் ஒரு காதலர்களின் சாபக்கேட்டால் எந்த பெண்ணும் கர்ப்பம் தரிப்பதில்லை. ஆனால் இங்கே தான் பில்லி சூன்யம் வைப்பவர்கள் அதிகம் வாழ்கிறார்கள்.

எனவே நாயகன். தன் பொறாமை கார ஊர் மக்களை திருத்த நினைக்கிறார். அதன்படி மாந்திரீகம் தெரிந்த ஒரு பெண்ணை அழைத்துவர முயற்சிக்கிறான்.

சென்ற இடத்தில் மாந்தீரிகம் தெரிந்த பெண் அழகில் மயங்கி விடுகிறான். எனவே அங்கே சில நாடகமாடுகிறார்.

பங்காளியூர் கிராமம் என்ன ஆனது? அவன் முயற்சி வெற்றி பெற்றதா-? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதாநாயகனாக கார்த்திகேயன் வேலு என்பவர் அறிமுகம். சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும் போதுமான முகபாவனைகள் இல்லை.

மாந்திரீகம் தெரிந்த பெண்ணாக சஞ்சனா புர்லி. தெய்வீகமான முகம் எனபார்களே அப்படியொரு முகம். அந்த கிராமத்து நிலவே தேவையில்லை போல. இவர் அப்படி அப்படி பளிச் சென்று இருக்கிறார் அந்த கிராமத்தில். அழகு பொம்மையாக வந்து செல்கிறார்.

பெண் வேடமிட்டு நாயகனின் நண்பனாக நடித்தவர் சூப்பர். அசல் பெண் போலவே நடித்துள்ளார்.

அருவி குருவி என 2 சிறுமிகள். இருவரும் படத்தை ஜாலியாக கொண்டு செல்கிறார்கள். இவர்கள் இல்லை என்றால் படம் போர்தான்.

இரண்டு கிராமத்திலும் நிறைய மனிதர்கள் உள்ளனர். ஒரு சிலர் ரசிக்க தக்க வகையில் நடிப்பை வழங்கியுள்ளனர். கதிரவன் என்பவரின் நடிப்பை பாராட்டலாம்.

மேக்அப்பில் நிறைய பேரின் முகங்கள் தெரியவில்லை.

பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும் ஓகே ரகம். சதிஷ் ரகுநாதனின் இசையமைத்து இருக்கிறார். பின்னணி இசைக்கு நவிப் முருகன்.

ஒளிப்பதிவாளர் முகமது பர்ஹாணின் காட்சிகள் சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.

இசை மரம் நல்ல கற்பனை. படத்தின் பாதியே கற்பனையில் தான் உள்ளது. எனவே இதையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஈஸ்வர் கொற்றவை ஒரு ஜாலியாக படம் கொடுக்க வேண்டும் என வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ளார். அதை இன்னும் சிறப்பாக கொடுக்க முயற்சித்து இருக்கலாம்.

படத்தின் விளம்பரங்களை மட்டும் நம்பாமல் கதையை நம்பி படம் எடுத்தால் இன்னும் பெரியளவில் படம் பேசப்பட்டு இருக்கலாம்.

ஆக.. சூ மந்திரக்காளி… மாயமில்ல.. மந்திரமில்ல.. ஒன்னுமில்ல…

Choo Mandhirakaali movie review and rating in Tamil

மண் வாசனையுடன் மகள் தாலாட்டு… சின்னஞ்சிறு கிளியே விமர்சனம் 3.5/5

மண் வாசனையுடன் மகள் தாலாட்டு… சின்னஞ்சிறு கிளியே விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குழந்தைகளை கடத்தி மனித உறுப்புகளை திருடும் கும்பல் பற்றிய கதையுடன் அப்பா மகள் உறவை அழகாகவும் இயற்கை உணவு பழக்கங்களை யதார்த்தமாக சொல்லியுள்ள படம் சின்னஞ்சிறு கிளியே.

கதைக்களம்…

கதையின் நாயகன் செந்தில்நாதன். இவரது குடும்பமே இயற்கை மருத்துவத்தில் சிறந்தவர்கள். எனவே இயற்கைக்கு ஏற்றபடி இயற்கை உணவகம் நடத்தி வருகிறார். எந்த மருத்துவ பிரச்சினைக்கும் ஆங்கில மருத்துவத்தை நாடாதவர்.

தன் மனைவியை மகள் பிரசவத்தின் போது பறிகொடுத்துவிட்டதால் மகளை மிக பொறுப்பாக பாசமாக வளர்க்கிறார். மகளுக்கு சிட்டுக்குருவி என வித்தியாசமாக பெயரிட்டு அதற்கு சூப்பரான விளக்கமும் கொடுத்துள்ளார்.

ஊர் கோயில் திருவிழாவில் இவரது செல்ல மகள் காணாமல் போகிறார். சில மணி நேரங்களில் கிடைத்தாலும் மகளின் முதுகெலும்பிலிருந்து மஜ்ஜையை ஒரு மர்ம கும்பல் திருடியதை அறிகிறார்.

அதன்பிறகு என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

மகளை ஸ்கூல் சேர்க்கும் காட்சி முதல் இவரின் வித்தியாச பார்வை புலப்படுகிறது. எந்த ஹீரோயிசமும் இல்லாமல் சராசரி ஆளாக தன் பாத்திரத்தை நிறைவு செய்துள்ளார் செந்தில்நாதன்.

பொறுப்பான அப்பா மட்டுமில்லாமல் சமூக பொறுப்புள்ள மனிதனாகவும் உயர்ந்து நிற்கிறார். ஆனால் முகத்தில் சிரிப்பை அவ்வளவாக பார்க்கமுடியவில்லை. காதல் காட்சியில் கூட அப்படிதான். ஒருவேளை சசிகுமாரின் வாரிசாக வருவாரோ..?

தெத்துப் பல் அழகியாக பட நாயகியாக வருகிறார் சான்ட்ரா நாயர். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிறைகிறார்.

செந்தில்நாதன் பாட்டியாக குலப்புள்ளி லீலா. (மருது விஷால் பாட்டி) நிறைய காட்சிகளில் வந்து யதார்த்த பாட்டியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் 2ஆம் நாயகி, நாயகியின் தம்பி, சின்ன குழந்தை என அனைவரும் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

சில நேரங்களில் ஒளிப்பதிவு டல்லா இருந்தாலும் கிராமத்து வெளிச்சம் இப்படித்தான் இருக்கும் என மனதை தேற்றிக் கொள்ளலாம். ஒளிப்பதிவாளர் பாண்டியனிடம் பெரிதாக குறையில்லை. மஸ்தான் – காதர் இசையில் பாடல்கள் ஓரிரு முறை கேட்கலாம்.

தமிழ் மண், இயற்கை வைத்தியம், தாத்தா பாட்டி பாசம், சமூக பொறுப்பு என அனைத்தையும் கமர்சியல் இல்லாமல் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன்.

ஆக சின்னஞ்சிறு கிளியே… மண் வாசனையுடன் மகள் தாலாட்டு

Chinnanjiru Kiliye movie review and rating in Tamil

யாரைத்தான் நம்புவதோ..? நடுவன் விமர்சனம் 3.5/5

யாரைத்தான் நம்புவதோ..? நடுவன் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பரத் கோகுல் ஆனந்து இருவரும் கொடைக்கானலில் டீ பேக்டரி நடத்தி வருகின்றனர்.

பரத் மிகப்பொறுப்பாக இருக்கிறார். பரத்திற்கு அழகான மனைவி அபர்ணா. பரத்தின் உறவுக்காரர் தர்மராஜ். இவரின் பையன் அருவி பாலா. தன் பையனை பரத் டீ பேக்டரியில் வேலைக்கு சேர்த்து விடுகிறார்.

ஆனால் பரத்தின் பார்ட்னர் கோகுல் ஆனந்த் கம்பெனியிலேயே குடிக்கும் ஒரு பெண் பித்தர். திருமணமாகாதவர்.

அருவி பாலா ஒரு முறை பரத் இல்லாத வீட்டில் அந்த வீட்டில் நடக்கும் ஒரு திரைமறைவு ரகசியத்தை பார்த்துவிடுகிறார். இதை சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

அப்போது இவரது நண்பர்களுடன் இணைந்து வெளியில் செல்லும்போது போலீசில் மாட்டிக் கொள்கிறார். ஜெயில் தண்டனையில் இருந்து தப்பிக்க போலீஸ் 10 லட்சம் கேட்கிறார்.

அருவி பாலா என்ன செய்தார்? அவர் என்ன விஷயம் பார்த்தார்? பரத்திடம் சொன்னாரா? பரத் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

இதுவரை பார்க்காத பாத்திரத்தில் பரத். அமைதியான அப்பா, பொறுப்பான கணவன், நேர்மையான முதலாளி என பன்முகம் காட்டியிருக்கிறார்.

பிசினஸ் பார்ட்னர் பொறுப்பில்லை என்றாலும் சகித்துக் கொள்ளும் காட்சிகளில் தொழில் நேர்த்தி தெரிகிறது.

பரத்தின் நண்பனாக பார்ட்னராக கோகுல் ஆனந்த். இவரின் பார்வையில் ஹீரோயிசம் மற்றும் வில்லத்தனம் இரண்டும் கலந்திருக்கிறது.

அபர்ணாவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் குறைவு. க்ளோசப் காட்சிகள் கூட சரியாக இல்லை. கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.

அருவி பாலாவின் தந்தை தர்மராஜ் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் நடிப்பில் கவனிக்க வைக்கிறார். முழுவேடம் கொடுத்தால் கலக்குவார்.

அருவி பாலா சுற்றியை கதை நடக்கிறது. அவரும் அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

யோக் ஜெய்பீ, ஜார்ஜ், பாலா, தசராதி குரு, கார்த்திக், சுரேஷ் ராஜ், ஆராத்யா ஶ்ரீ ஆகியோரின் நடிப்பும் சிறப்பு.

டெக்னீஷியன்கள்..

இது த்ரில்லர் கலந்து எமோஷனல் படம் எனலாம். அதற்கேற்ப பின்னணி இசையை கொடுத்திருந்தால் இன்னும் பயம் தொற்றிக் கொள்ளும் ரசிகர்களுக்கு. இசையமைப்பாளர் தரண் குமாரிடம் அது மிஸ்ஸிங்.

ஒளிப்பதிவாளர் யுவா தன் பணியில் சிறப்பு. இரவு காட்சியிலும் பேக்டரி பகல் காட்சியிலும் தன் பணிக்கு சிறப்பு சேர்த்துள்ளார்.

படத்தின் க்ளைமாக்ஸை நாம் யூகித்தாலும் அதன் வேகத்தை இன்னும் கூட்டியிருந்தால் ரசிகர்களின் நாடி துடிப்பு எகியிறுக்கும்.

இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் பலரும் தங்கள் உண்மை முகங்களை சமூகத்தில் காட்டிக் கொள்வதில்லை. அது உடன் படுக்கும் மனைவியாக இருந்தாலும் உடன் பழகும் நண்பனாக இருந்தாலும்.

எனவே சில நேரங்களில் நாம் யதார்த்த வாழ்க்கை வாழாமல் செயற்கையாகவே வாழ்கிறோம்.

எவரையும் முழுமையாக நம்ப வேண்டாம். என்பதையும் இயக்குனர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

முகமூடிக்கு பின்னாடி ஒரு முகம் இருக்கிறது. அதுதான் மனிதர்களின் உண்மையான முகம் என்பதை தெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஷாரங்.

நடுவன் தயாரிப்பு – கியூ என்டர்டெயின்மென்ட்

ஆக நடுவன்… யாரைத்தான் நம்புவதோ?

Naduvan movie review and rating in Tamil

More Articles
Follows