தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்..
ஒருவரின் மனதில் உள்ளதை அவரை பார்க்கும் சில நொடிகளில் சொல்லிவிடும் மைண்ட் ரீடர் என்பதை தான் கூர்மன் என தமிழில் ஒரு திருக்குறள் உடன் சொல்லியிருக்கிறார்கள்.
அதாவது சந்திரமுகி படத்தில் வடிவேலு நினைப்பதை எல்லாம் ரஜினி சொல்வாரே.. அதுபோல..
கதைக்களம்..
ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள பங்களா வீட்டில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ராஜாஜி. இவர் முன்னாள் போலீஸ். ஒருவரிடம் பேசும் சில நிமிடங்களிலேயே அவர் மனதில் நினைப்பதை சொல்லும் திறமை கொண்டவர்.
இதனாலேயே போலீஸ் விசாரணையில் இவருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவரின் காதலி ஜனனி ஐயர் கொல்லப்படுகிறார்.
ஜனனியின் முறைமாமன் ராஜாஜியையும் தலையில் அடித்து விடுகிறார். நாயகி இறந்துவிடுகிறார். நாயகன் மட்டும் உயிருடன் இருக்கிறார்.
இந்த பிரச்சினையில் மனதளவில் கொஞ்சம் பாதிக்கப்பட காவல்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் ராஜாஜி. எங்கும் வெளியில் செல்லாமல் அந்த வீட்டிலேயே தனிமையில் இருக்கிறார். இவரின் வீட்டில் உதவியாளராக பால சரவணன்.
ராஜாஜியின் திறமையை அறிந்த இன்ஸ்பெக்டர் ஆடுகளம் நரேன் குற்றவாளிகளை ராஜாஜி பண்ணை வீட்டுக்கு அனுப்பி விசாரணையில் உண்மைகளை அறிகிறார். ஆனால் ஒரு குற்றவாளி ராஜாஜியின் வீட்டில் இருந்து தப்பி விடுகிறார்.
அதன்பின்னர் என்ன ஆனது? ராஜாஜி வீட்டை விட்டு வெளியே வந்தாரா.? குற்றவாளியை கண்டு பிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
நிறைய படங்களில் பார்த்த ராஜாஜி இந்த கூர்மன் படத்தில் முற்றிலும் மாறுப்பட்ட கேரக்டரில் தோன்றியுள்ளார். நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.
தர்மதுரை படத்தில் ரஜினி வருவாரோ அதுபோல… தாடி வைத்தும் ப்ளாஷ்பேக்கில் ஷேவிங் செய்தும் அதற்கேற்ப உடல்மொழியும் கொடுத்துள்ளார். பாசம், ஆக்ரோஷம் என வித்தியாசம் காண்பித்திருக்கிறார்.
2வது நாயகனாக பிரவீன், நடிப்பில் கவனிக்க வைத்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பு சிறப்பு. ஆனால் பால சரவணன் கண்களுக்கு தெரியாத மறைந்த ஜனனி ஐயர் இவர் கண்களுக்கு தெரிவது எப்படின்னு தெரியல…
பாலசரவணன் கொஞ்சம் வயதான கேரக்டரில் நடித்துள்ளார். எனவே கொஞ்சம் நையாண்டியை குறைத்துள்ளார் போல.
ஜனனி ஐயர் கேரக்டரில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம். நாயகனுக்கு அட்வைஸ் செய்வது மட்டுமே இவரின் வேலை.
ஆடுகளம் நரேன் வழக்கமான போலீஸ் கேரக்டரில் கச்சிதம்.
சுபு என்னும் கேரக்டரில் ஜெர்மன் ஷேப்பர்ட் என்ற நாய் நடித்துள்ளது.
டெக்னீஷியன்கள்..
சக்தி அரவிந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. படத்தில் உள்ள பண்ணை வீடும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும் அழகு.
ஒரு திரில்லர் பட ஓட்டத்திற்கு தேவையான பின்னணி இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ.
கோபி கருணாநிதியின் அரங்க அமைப்பு நம்மை கவர்கிறது.
வித்தியாசமான கதைக்களத்தை வைத்து இப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பிரயான் பி ஜார்ஜ். மேக்கிங்கிலும் வித்தியாசம் காட்டியுள்ளார்.
போலீஸ் கேரக்டரில் வருகிறார் ராஜாஜி. அவர் போலீசாக இருக்கும்போதும் ஓய்வில் இருக்கும்போது ஆர்மி ஜீப்பிலேயே சுத்துகிறார். அதற்கான காரணம் என்னவோ? இயக்குனரே…
பாலியல் வன்கொடுமை படத்தின் கரு. ஆனால் அதை அழுத்தமாக பதிவு செய்யாமல் விட்டுள்ளார் இயக்குனர். உணர்வுப்பூர்வமாக சொல்லியிருந்தால் இந்த கூர்மன் இன்னும் கவனிக்கப்பட வைத்திருப்பான்.
கூர்மன்… மைண்ட் ரீடர்
Koorman movie review and rating in tamil