தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோடியில் ஒருவன் ஆத்மிகா, கோடியில் ஒருவன் பாடல்கள், விஜய் ஆண்டனி கோடியில் ஒருவன், மெட்ரோ இயக்குனர் கோடியில் ஒருவன்
மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மீகா ஜோடியாக நடித்துள்ள படம் கோடியில் ஒருவன்.
கதைக்களம்.
தன் ஏழை தாய் ஆசைப்பட்டப்படி ஒரு ஐஏஎஸ் ஆகி இந்த நாட்டுக்கு சேவை செய்ய நினைக்கிறார் விஜய் ஆண்டனி.
என ஐஏஎஸ் பயிற்சிக்காக சென்னையில் ஒரு சேரி பகுதியில் தங்கி படிக்கிறார். அங்கு போதை பழக்கத்துக்கு அடிமையான சிறார்களை நல்வழிப்படுத்த டியூசன் எடுக்கிறார்.
இதனால் அங்குள்ள போதை விற்பனையாளர்களின் கோபத்திற்கு ஆளாகிறார். அவர்களை சமாளிக்க தனக்கு பதவி வேண்டும் என நினைத்து அரசியலில் நுழைகிறார்.
அவருக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா? அம்மாவின் ஆசையை நிறைவேற்றினாரா? ஐஏஎஸ் லட்சியம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
பொறுமை கோபம் ஆக்சன் அம்மா சென்டிமெண்ட் இவை விஜய் ஆண்டனிக்கு அல்வா சாப்பிடுவது போல. எனவே இதில் அனைத்திலும் அசத்தியிருக்கிறார். ஒவ்வொரு வீடாக சென்று மாணவனை படிக்க சொல்லி கேட்பது நம்மை கலங்க வைக்கும். கவுன்சிலர் ஆகி இவர் எடுக்கும் நடவடிக்கை ரசிக்க செய்கிறது.
விஜய் ஆண்டனிக்கு சுட்டு போட்டாலும் ரொமான்ஸ் வராது. எனவே நாயகியுடன் லவ் என்பதை மறந்துவிட வேண்டியதுதான்.
ஆத்மிகா அழகாக வருகிறார். ஒரு சில காட்சிகள் வந்து டூயட் பாடுகிறார். நாயகன் லட்சிய பயணத்தில் கொஞ்சம் இவருக்கும் காட்சிகள் கொடுத்திருக்கலாம்.
இவர்களுடன் சுல்லு, ராமசந்திர ராஜு, சூப்பர் சுப்புராயன், பூ ராமு, ஆதித்யா கதிர் ஆகியோர் தங்கள் கேரக்டரில்களில் நிறைவு. வில்லன்கள் அனைவரும் மிரட்டல்.
டெக்னீஷியன்கள்…
N.S.உதய குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு. அதுவும் சென்னை நகர சேரி மக்களின் வீடுகளும் அந்த சாக்கடை பகுதிகளை எப்படித்தான் படம் பிடித்தாரோ?
குப்பைகளை விஜய் ஆண்டனி பொறுக்கி எடுக்கும் காட்சி நம்மை முகம் சுளிக்க வைக்கும். அதில் நடித்தவர்கள் பாராட்ட வேண்டும்.
நிவாஸ் K பிரசன்னா இசையில் பாடல்கள் ஓகே ரகம். தாய் சென்டிமெண்ட் பாடல் பாட வைக்கிறது. பின்னணி இசை மிரட்டல். ஆக்சன் காட்சிகள் அனல் பறக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மேத்திவ் தெறிக்க விட்டுள்ளார்.
மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். அதில் செயின் திருடர்களை ஸ்கெட்ச் போட்டு காட்டியிருப்பார்.
இதில் வார்டு மெம்பர் முதல் கவுன்சிலர் வரை… அவர்களின் ஊழல் தோலை உரித்திக் காட்டியிருக்கிறார். ஒரு சட்டசபையை போல மாநகராட்சி அரங்கம் இருப்பதும் அதில் இத்தனை உறுப்பினர்களா? என உள்ளாட்சி பற்றி பாடமும நடத்தியிருக்கிறார்.
ஒரு மாநகராட்சி தேர்தலை இன்ச் பை இன்ச் ஆக காட்டிய இயக்குனர் பொதுத் தேர்தலை டிவியில் மட்டும் காட்டிவிட்டார். நாயகனுக்கு மக்கள் ஆதரவு எப்படி கிடைத்தது? வீட்டை விட்டே வெளியே வராத விதவை தாய் தன் மகனை எப்படி படிக்க வைத்தார்? என்பதற்கான விடைகள் இல்லை.
இந்த லாஜிக்கை எல்லாம் மறந்து தாய் சென்டிமெண்ட் பாட்டு ஆக்சன் சமூக அக்கறை என அனைத்தைதையும் கலந்துக் கொடுத்திருக்கிறார் டைரக்டர்.
ஆக இந்த “கோடியில் ஒருவன்” ஏழைகளின் தலைவன்.