தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்கம்: யாழ் குணசேகரன்
நடிகர்: கதிரேச குமார்,
இசை: கெபி
ஒளிப்பதிவு: அஜித்குமார்
எடிட்டர்: ராஜேஷ்
கதைக்களம்..
கிராமத்தில் ஒரு பெரியவர் ஒத்தை அடி பாதை ஒன்றில் சைக்கிள் ஓட்டி செல்கிறார். அவரைப் பின் தொடர்ந்து ஒரு கார் வந்து கொண்டே இருக்கிறது. வெகுநேரமாக காரில் உள்ளவர்கள் ஹாரன் அடித்தும் வழிவிட மறுக்கிறார் பெரியவர்.
அவர்கள் காரை விட்டு இறங்கி வந்து பெரியவரை வழிவிடச் சொல்லியும் அவர் வீம்புக்காகவே சைக்கிளை வைத்து வழி மறுக்கிறார். எனவே காரில் உள்ள சிலர் வந்து பெரியவரை அடிக்கின்றனர். ஆனாலும் அவர் வழிவிடவே முடியாது என்ற மனநிலையில் இருக்கிறார்
சிறிது நேரத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள கிராமத்தினர் அங்கு ஒன்று கூடுகின்றனர். காவல்துறையும் இந்த பிரச்சனைக்காக அங்கே வருகிறது. பெரியவர் வழிவிட மறுக்க என்ன காரணம்? காரில் உள்ளவர்களுக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை என்பதுதான் படத்தில் மீதிக்கதை.
கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்..
கதையின் நாயகனாக நடித்துள்ள கதிரேசகுமார் மிக இயல்பாக நடித்துள்ளார். பலமான அடிகளை வாங்கியம்போதும் வழி விடாமல் அவர் வீம்பு பிடிப்பதை பார்க்கும் போது அவரின் மன உறுதி கண்களில் தெரிகிறது.
இவருடன் கிருஷ்ணகுமார், விஜயராணா தீரன், KN ராஜேஷ், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, ‘உறியடி’ ஆனந்த்ராஜ் ஆகியோர் உண்டு.
வழியில் இத்தனை பிரச்சனை நடந்தும் பெரியவர் வழிவிட மறுக்கவே அடிதடி மோதல் ஏற்படுகிறது. அப்போதே நம்மால் காருக்குள் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் அதை இயக்குனர் வெளிப்படுத்தினாலும் விளக்கமாக சொல்லவில்லை. அதற்கான காட்சிகளும் பெரிதாக இல்லை.
தெனாலிராமன் கதையை பெரியவர் சொல்லும் போது அதற்கான விளக்கம் புரிகிறது. பலவீனமாக இருக்கும் ஒருவன் உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்றால் விவேக யுக்த்தியை கையாள வேண்டும் என்பதை நாசூக்காக சொல்லி இருக்கிறார் இயக்குனர் யாழ் குணசேகரன்.
இடைவேளை வரை ஒத்தையடி பாதை காட்சிகளே திரும்பத் திரும்ப காட்டப்பட்டாலும் ஏன்? என்ன நடக்கிறது? என்பதை அறிய நம்மை இருக்கையில் அமர வைத்துள்ளார் இயக்குனர். கிளைமாக்ஸ் காட்சியில் அதற்கான விளக்கத்தை அவர் இன்னும் சிறப்பாக அழுத்தமாக சொல்லி இருந்தால் இந்த கெழப்பய இன்னும் அதிகமாகவே பேசப்பட்டு இருப்பார்.
படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சின்ன பட்ஜெட் படத்திற்கு என்ன தேவையோ அதை கொடுத்திருக்கிறது. ஆனாலும் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் அதிகமாகவே ரசித்திருக்கலாம்.
ஆக.. உண்மையை சொல்ல நேர்மையாக வாழ வயது தடை இல்லை உடல் தடையில்லை என்பதை உரக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
Kezhappaya movie review