ரகு தாத்தா விமர்சனம் 3.25/5.. ஹிந்தி மாலும் வாடா

ரகு தாத்தா விமர்சனம் 3.25/5.. ஹிந்தி மாலும் வாடா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரகு தாத்தா விமர்சனம் 3/5.. ஹிந்தி மாலும்.. வாடா

1970 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்த படத்தின் கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர்..

பாக்யராஜ் நடித்த சூப்பர் ஹிட்டான ஒரு படத்தில் ‘ஏக் கௌமி ஏ கிசான் ரகு தாத்தா என்ற வசனத்தை வைத்து ரகு தாத்தா என்று ஹிந்தி எதிர்ப்பை கிண்டல் அடித்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சுமன் குமார்..

ஸ்டோரி…

வள்ளுவன்பேட்டையில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிகிறார் கீர்த்தி சுரேஷ்.. ஆணாதிக்கத்தை எதிர்த்து இவர் எழுத்தாளராகவும் பல கதைகளை எழுதி வருகிறார்.

ஹிந்தியை எதிர்க்கும் இவரது தாத்தா எம்எஸ் பாஸ்கரை போல இவரும் அதே வழியில் பயணிப்பதால் இவருக்கான அந்தஸ்து அந்த வள்ளுவன் பேட்டை பகுதியில் உயர்ந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தாத்தாவுக்கு கேன்சர் நோய் தெரிய வருகிறது.. தான் இறப்பதற்குள் கீர்த்திக்கு திருமணம் செய்ய எம் எஸ் பாஸ்கர் திட்டமிடுகிறார்..

வங்கியில் ப்ரோமோஷன் கிடைக்க வேண்டுமென்றால் ஹிந்தி படிக்க வேண்டும் என்ற சூழ்நிலை அந்த காலகட்டத்தில் உருவாகிறது.

ப்ரோமோஷன்-காக ஹிந்தியை கற்றுக் கொண்டாரா ஹிந்தி எதிர்ப்பாளர் கீர்த்தி.? ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண் புரட்சியாளர் திருமணம் செய்து கொண்டாரா கீர்த்தி.? என்பதெல்லாம் மீதிக்கதை

கேரக்டர்ஸ்….

கீர்த்தி சுரேஷ், எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ஜெயக்குமார், இஸ்மத் பானு ஆனந்தசாமி, ஆதிரா மற்றும் பலர்..

பல படங்களில் கீர்த்தியை ரொமாண்டிக் நாயகியாகவும் ஆக்சன் ஹீரோயின் கூட பார்த்திருக்கிறோம்.. ஆனால் இதில் அடுத்த கட்டமாக தன்னால் காமெடியும் செய்ய முடியும் என நிரூபித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்..

பெண் புரட்சியாளராக இருந்தாலும் மெல்ல மெல்ல காதல் வயப்படும் கயல்விழியாகவும்.. ஹிந்தியை எதிர்க்கும் போராட்ட பெண்ணாகவும், தாய் தந்தையை எதிர்த்துப் பேசி ஆனால் தாத்தாவிற்கு கட்டுப்பட்ட பாசமிக்க பேத்தியாகவும் வெரைட்டி காட்டி நடித்திருக்கிறார் கீர்த்தி..

முதுகு மூடிய ஜாக்கெட் போட்டு அழகான கூந்தல் பின்னி ஒத்த ஜடை போட்டு கம்மல் வளையல் போட்டு என 1960 கால ஹீரோயின்களை நினைவுப்படுத்தி இருக்கிறார் கீர்த்தி..

கீர்த்திக்கு இணையாக இணைந்து காமெடியில் ரவுண்டு கட்டி இருக்கிறார் அண்ணியாக நடித்த இஸ்மத் பானு.. நாயகிக்கு உறுதுணையாக கேரக்டரில் தேவதர்ஷினியும் வெளுத்து கட்டி இருக்கிறார்..

இவர்களுக்கு ஹிந்தி கற்றுக் கொடுக்கும் ஹிந்தி காப்பியடிக்க உதவும் கலைஞர்களும் சிறப்பு..

கீர்த்தியின் அப்பா ஜெயக்குமார்.. அம்மா ஆதிரா மற்றும் தாத்தா எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோரும் உண்டு.. கண்டிப்பான தந்தை.. பாசமான தாத்தா எனக் குடும்பத்து உறவுகளை அழகாக காட்டி இருக்கின்றனர்

நாயகனாக தெலுங்கு நடிகர் ரவீந்திர விஜய் நடித்திருக்கிறார்.. மொட்டை கடிதாசி நபராக பொறுத்திரு செல்வா என்ற பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

இயக்கம் – சுமன் குமார்
இசை – ஷான் ரோல்டன்

‘கேஜிஎப், காந்தாரா’ படங்களைத் தயாரித்த ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இப்படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளது..

தமிழ் படங்கள் என்றாலும் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும்.. டிசைன்களில் கூட ஆங்கிலமே பிரதானமாக இருக்கும்.. ஆனால் ரகு தாத்தா படத்தின் போஸ்டர்கள் அனைத்திலும் இசை வெளியீட்டு விழா நாளை முதல் என்ற வாசகங்கள் இடம் பெற்று இருக்கும் இதற்காகவே படக்குழுவினரை பாராட்டலாம்..

ஹிந்தி எதிர்ப்பு.. ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு என்று கூறப்பட்டாலும் ஹிந்தியை படிக்கும் சில நயவஞ்சகர்களையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

சான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.. நகைச்சுவைக்கு ஏற்ப பின்னணி இசை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.. ஆனால் பாடல்கள் ஒன்று கூட கவரவில்லை..

ஒளிப்பதிவாளர் கலை இயக்குனர் பாராட்டுக்குரியவர்கள்.. 1970 கால தபால் பெட்டி.. இலேண்ட் லெட்டர் கடிதம், ஆடை அலங்காரம், சிகை அலங்காரம், ஜன்னல் வீடு, தெருக்கள் வாகனங்கள் என அனைத்தையும் வைத்திருப்பது படத்திற்கு பலம்.

சீரியல் போலவே படம் இடைவேளை வரை நகர்கிறது.. ஆனால் இடைவேளைக்குப் பிறகுதான் படத்தின் கதை வேகம் சூடு பிடிக்கிறது.. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் உங்களை சிரிக்காமல் விடமாட்டோம் என டைரக்டர் சேலஞ் செய்து சிரிக்க வைத்து மகிழ்ச்சியாக அனுப்பி வைக்கிறார்

இனியாவது.. ஹிந்தியை எதிர்த்து ஒரு பக்கம் அவர்கள் படித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துக் கொண்டிருப்பவர்களை இந்த படம் மூலம் நிச்சயம் காணலாம்.. இனியாவது தமிழர்கள் திருந்தினால் சரிதான்.!

Keerthys Raghu Thatha review

தங்கலான் பட விமர்சனம் 4/5… தமிழர்களின் தங்கமகன்

தங்கலான் பட விமர்சனம் 4/5… தமிழர்களின் தங்கமகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்கலான் பட விமர்சனம் 4/5… தமிழர்களின் தங்கமகன்

அடிமைப்பட்டுக் கிடக்கும் தன் மக்களை மீட்டெடுக்க தங்கவேட்டைக்கு புறப்பட்ட தங்க மகன் இவன்..

ஸ்டோரி…

1850 இந்தியாவில் தங்கத்தை தேடி புறப்பட்ட தமிழர்களின் கதை இது..

இந்தியர்களை அடிமைப்படுத்தி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆண்டு கொண்டு இருந்த காலம் அது.. பல சூழ்ச்சிகளால் தங்கள் நிலத்தை இழக்கிறார் தங்கலான் (விக்ரம்)…

ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்திக் கொண்டு இருந்தாலும் இந்தியாவில் உயர் சாதி பிரிவினரால் தங்கலான் சாதியினர்

இந்த சூழ்நிலையில் யானை மலை அருகே தங்கப் புதையல் மலை இருப்பதை அறிகின்றனர் பிரிட்டிஷ்காரர்கள்.. பாம்புகள் தேள்கள் என ஆபத்து நிறைந்த அந்த பகுதியில் தங்கத்தை எடுக்க தங்கலான் உதவியை நாடுகின்றனர்..

சதியால் பறிகொடுத்த தன் நிலத்தை மீட்டெடுக்க வேறு வழியின்றி பிரிட்டிஷ்காரர்களுக்கு உதவுகிறார் விக்ரம்.. இதனால் ஆங்கிலேயர் போல ஆடைகளை உடுத்து அனுமதியும் கிடைக்கிறது வாழ்க்கை தரமும் உயருகிறது..

தன் சாதியினர் தன்னை போல உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என அவர்களுக்கும் அங்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார் விக்ரம். இந்த சூழ்நிலையில் பிரிட்டிஷ்காரர்களின் சதித்திட்டம் தெரிய வருகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

தங்கலான் விக்ரம் எங்கள் சொத்து.. என பெருமைப்பட்டுக் கொள்ளலாம் கோலிவுட் திரையுலகம்.. ஒரு சினிமாவுக்காக இப்படி எல்லாம் ஒரு நடிகனால்அர்ப்பணித்துக் கொள்ள முடியுமா? என ஒவ்வொரு காட்சியிலும் வியக்க வைக்கிறார் விக்ரம்

கண்கள் உதடுகள் கைகள் கால்கள் தலைமுடி என ஒட்டுமொத்த உடலையும் நடிக்க வைத்திருக்கிறார் விக்ரம்.. இந்தப் படத்திற்காக பல விருதுகளை வெல்வார் விக்ரம் என உறுதியாக சொல்லலாம்..

விக்ரம் மனைவி கங்கம்மாவாக பார்வதி.. தமிழ் சினிமாவில் ஜாக்கெட் போடாமல் ஏதாவது ஒரு நாயகி நடிப்பாரா என்று கேட்டால் சந்தேகம்தான்.. கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என வைராக்கியம் கொண்ட பூ பார்வதி இதில் புயலாகவும் மாறி அசத்தியிருக்கிறார்.. முதன்முறையாக ஜாக்கெட் போடும் பெண்களின் மனநிலையை தன் நடிப்பில் உணர்த்திருக்கிறார்.. ஜாக்கெட் போடும் காட்சியில் விக்ரம் & பார்வதி பேசும் வசனங்கள் பாலுணர்வை தூண்டும்..

சூனியக்காரி ஆராத்தியாக மாளவிகா மோகனன்… இவருக்கு மட்டுமே மேக்கப் போட எத்தனை மணி நேரமானது தெரியவில்லை.. அலங்காரத்தில் அலற விட்டிருக்கிறார் ஆராத்தி மாளவிகா..

நாராயணதாசனாக பசுபதி.. இவர் தங்கலான் சாதியை சேர்ந்திருந்தாலும் பூணூல் போட்டு பிராமணர்களை கிண்டல் அடிக்கும் நபராக வந்திருக்கிறார்.. ரஞ்சித் இந்த போக்கை மாற்றிக் கொள்வாரா?

ஹாலிவுட் நடிகர் டேனியலும் தன் பங்குக்கு அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

டெக்னீசியன்ஸ்…

அட்டக்கத்தி மெட்ராஸ் கபாலி காலா சார்பட்டா பரம்பரை என வித்தியாசமான அரசியல் படங்களை கொடுத்த ரஞ்சித்திடம் இருந்து இப்படி ஒரு படமா என வேக வைத்திருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்?

இந்தப் படத்தின் வெற்றிக்கு பாதி நடிகர்கள் என்றால் மீதி பாதி தொழில்நுட்ப கலைஞர்கள் தான் என அடித்து சொல்லலாம்.. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.. ஒளிப்பதிவாளர் கிஷோர் கலை இயக்குனர் மூர்த்தி என திறமையான கலைஞர்களை தேர்ந்தெடுத்து தன்னுடைய திரைக்கதைக்கும் பாலம் அமைத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.

பதினெட்டாம் நூற்றாண்டில் காணப்பட்ட அரசியல், பீரியட் டிராமா என பூர்வக்குடி மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக படமாக்கி ஆவணப்படம் போலவும் கொடுத்திருக்கிறார் ரஞ்சித்.. நாளை வரும் இயக்குனர்கள் இந்தப் படத்தை பார்த்து பதினெட்டாம் நூற்றாண்டு வாழ்வியலை தெரிந்து கொள்ளலாம்..

அறுவடை & மினுக்கி பாடல்கள் பட்டைய கிளப்பும்… படையெடுத்து சீறும் பாம்புகள்.. கருஞ்சிறுத்தை.. காட்டெருமை காட்சிகள் என ஒவ்வொரு காட்சியிலும் நம்மை மிரள வைக்கும் பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் ஜீவி பிரகாஷ்..

கலை இயக்குனரும் காஸ்ட்யூம் டிசைனரும் பணியை அர்ப்பணிப்புடன் செய்திருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.. ஒவ்வொரு காட்சியிலும் 100 நடிகர்கள் இருப்பதால் அவர்களுக்கான ஒப்பனைகளை செய்யவே சில மணி நேரங்கள் ஆகியிருக்கும்.. அதை ஒவ்வொரு நாளும் செய்திருப்பது பெரும் சாதனை தான்…

லைவ் சவுண்ட் என்பதால் படங்களில் நிறைய காட்சிகளில் வசனங்கள் புரியவில்லை.. பிளாஷ்பேக்கில் வரும் விக்ரம் மற்றும் பசுபதியின் ஏகப்பட்ட வசனங்கள் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டன..

பிரம்மாண்ட படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாவுடன் இணைந்து தயாரித்திருக்கிறார் நீலம் புரொடக்ஷன் சார்பாக இயக்குனர் பா ரஞ்சித்..

இடைவேளைக்கு முன்பு வரை இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைவு.. முக்கியமாக ஃபிளாஷ்பேக் காட்சிகள் தேவையற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படைப்பு வந்து நமக்கெல்லாம் பெருமை.. இதுவே ஹாலிவுட் அல்லது மலையாள படமாக இருந்தால் இதை இன்னும் கொண்டாடி இருப்பார்கள் ரசிகர்கள்.. ஆனால் தமிழர்களை தான் பாராட்ட மாட்டார்களே..

ஆக தங்கலான்.. தமிழனின் தங்க தம்பி

Thangalaan movie review

அந்தகன் விமர்சனம் 4.25/5.. டாப் கியரில் டாப் ஸ்டார் பிரஷாந்த்

அந்தகன் விமர்சனம் 4.25/5.. டாப் கியரில் டாப் ஸ்டார் பிரஷாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அந்தகன் விமர்சனம் 4.25/5.. டாப் கியரில் டாப் ஸ்டார் பிரஷாந்த்

அந்தகன் – பிரசாந்தின் 50 வது படமாகும்..

ஸ்டோரி…

பிரசாந்த் ஒரு பியானோ கலைஞர்.. இவர் கண் பார்வை தெரியாதவராக நடிக்கிறார்.. அதற்கு காரணம்.. பியானோ வாசிக்கும் போது பார்வை தெரியாதவராய் இருந்தால் தன்னால் இசையில் முழு கவனம் செலுத்த முடியும் என நம்புகிறார்.. மேலும் கண்பார்வையற்ற இருப்பதால் கூடுதல் லாபமும் அனுதாபமும் கிடைப்பதால் இந்த ஒரு நிலையை அவர் மேற்கொண்டு நடித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் நவரச நாயகன் நடிகர் கார்த்திக் தன் திருமண நாளில் மனைவி சிம்ரனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க இவரை தன் வீட்டிற்கு பியானோ வாசிக்க அழைக்கிறார்.

அதன்படி பிரசாந்தை வீட்டிற்கு உள்ளே அழைத்து செல்கிறார் கார்த்திக்கின் மனைவி சிம்ரன்.. அங்கே கார்த்திக் இறந்து கிடப்பதை பார்த்து விடுகிறார். அந்த சமயத்தில் வீட்டில் உள்ளே போலீஸ் சமுத்திரக்கனி இருப்பதை பார்த்து விடுகிறார்.

அதன் பிறகு பிரசாந்த் என்ன செய்தார்? தனக்கு கண் தெரியும் என்பதை ஒப்புக்கொண்டாரா? அல்லது பார்வையற்றவராக நடித்தாரா? என்பது தான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கே எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, சமுத்திரக்கனி, வனிதா, யோகிபாபு, மனோபாலா, ஆதேஷ் பாலா, பெசன்ட் ரவி, பூவையார் மற்றும் பலர்..

1990களில் கலக்கிய பிரஷாந்த் சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.. தற்போது இந்தப் படத்தின் மூலம் அவருக்கு ஒரு மிகப்பெரிய ரீ என்ட்ரீ கிடைத்துள்ளது.. பார்வை தெரியாதவராக இருக்கும்போது பார்வை தெரிந்தவராக இருக்கும்போது என இரண்டு மாறு பட்டு நடிப்பை கொடுத்திருக்கிறார் பிரசாந்த்..

ஒரு கட்டத்தில் நிஜமாகவே பார்வை பறிபோன பின் அவரின் நடிப்பு அவருக்கு பல விருதுகளை கொடுக்கும்.. இவருக்கும் பிரியா ஆனந்துக்கும் இருக்கும் நெருக்கம் மீண்டும் பிரஷாந்த்தை ரொமான்டிக் ஹீரோவாக காட்டி இருக்கிறது..

பிரஷாந்த் நிஜமான பியானோ என்பதால் நடிகர் கார்த்திக்கின் பாடல்களை வாசிப்பது சூப்பர்.. அது போல அமரன் பட பாடலை பாடியிருப்பதும் செம..

பார்த்தேன் ரசித்தேன் என்ற படத்தில் வில்லி வேடத்தில் கலக்கி இருப்பார் சிமரன்.. இன்னும் அந்த எனர்ஜி குறையாமல் கலக்கி இருக்கிறார் சிம்ஸ்..

யோகிபாபு & ஊர்வசி & KS ரவிக்குமார் கூட்டணி படத்திற்கு பலம்.. இவர்களது கேரக்டர் சிரிக்கவும் சிந்திக்க வைக்கிறது..

பிரியா ஆனந்தின் ஆடைகளுக்காகவே அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. கவர்ச்சியிலும் நடிப்பிலும் ஜொலிக்கிறார்..

சமுத்திரக்கனி, வனிதா.. இவர்களது கணவன் மனைவி கேரக்டர்ஸ் சீரியஸ்க்கு கியாரண்ட்டி.. என்னதான் போலீஸ் ஆக இருந்தாலும் தப்பு செஞ்சிட்டா பொண்டாட்டிக்கு பயப்படணும்.. என்பதை தன் கண்களில் காட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி.. அவர் வனிதாவை *லல்லுமா….* என சொல்லுவது செம..

மனோபாலா, ஆதேஷ் பாலா, பெசன்ட் ரவி, பூவையார் ஆகியோரின் கேரக்டர் கதை ஓட்டத்திற்கு பெரிய அளவில் உதவியிருக்கிறது.. ஆதேஷ் பாலா அசத்தல்.

டெக்னீசியன்ஸ்…

தயாரிப்பு: சாந்தி தியாகராஜன், ப்ரீத்தி தியாகராஜன்..
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: ரவி யாதவ்
இயக்கம்: தியாகராஜன்
பி ஆர் ஓ: நிகில் முருகன்

அனிருத் பாடிய *அந்தகன் ஆன்த்தம்…* படம் (என்ட் கார்ட்) முடிந்து வந்தாலும் ஆட்டம் போட வைக்கிறது.. அதில் பிரஷாந்த் ஹேர் ஸ்டைல் & சிம்ரன் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு வேற லெவல் ஹாப்பினஸ்..

இசை: சந்தோஷ் நாராயணன்v& ஒளிப்பதிவு: ரவி யாதவ்… இருவரும் கூடுதல் கவனம் எடுத்து சீன்களை சிறப்பித்துள்ளனர்..

இயக்கம்: தியாகராஜன்… ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அந்தாநூன் என்ற படத்தின் ரீமேக்.. இதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கூடுதல் கவனம் எடுத்து இருக்கிறார் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன்.. அதற்கு ஏற்ப கேரக்டர்களுக்கு நடிகர்களை தேர்ந்தெடுத்து வேலை வாங்கி கைத்தட்டல் வாங்க வைத்து விட்டார்.. மனோபாலா பேசும் சின்ன சின்ன டயலாக் கூட ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது..

இண்டெர்வெல்க்கு பிறகு நிறைய நிறைய ட்விஸ்ட் வைத்து க்ளைமாக்ஸ் வரை சீட் நுனியில் உட்கார வைத்துவிட்டார் டைரக்டர் தியாகராஜன்..

ஆக தன் மகன் பிரஷாந்துக்கு ஒரு கம் பேக் கொடுத்து இருக்கிறார் தியாகராஜன்..

இனி சினிமா பயணத்தில் டாப் கியரில் டாப் ஸ்டார் பிரஷாந்த் செல்வார் என எதிர்பார்க்கலாம்..

Prashanths Andhagan movie review

வீராயி மக்கள் பட விமர்சனம் 3.75/5.. பாசப் போராட்டம்

வீராயி மக்கள் பட விமர்சனம் 3.75/5.. பாசப் போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீராயி மக்கள் பட விமர்சனம் 3.75/5.. பாசப் போராட்டம்

ஸ்டோரி…

கணவன் இல்லாமல் தன் மூன்று மகன்கள் ஒரு மகளை வளர்த்து வருகிறார் வீராயி (பாண்டி அக்கா.)

ஒரு கட்டத்தில் மாமியார் – மருமகள் பிரச்சனை.. அண்ணன் தம்பி பிரச்சனை.. பொருளாதார பிரச்சனை.. சொத்து பிரிப்பு உள்ளிட்டவைகளால் குடும்பம் பிரிகிறது..

அம்மா மறைவுக்குப் பின் பாசம் இல்லாமல் கேட்பாரற்று அண்ணன் தம்பி தங்கை உறவுகள் பிரிந்து சிதறுகிறது..

அதன் பிறகு என்ன நடந்தது? அண்ணன் தம்பிகள் இணைந்தார்களா? சொத்து தான் பிரச்சனை என்பதை உணர்ந்து இணைந்தார்களா? இந்த வீராயி மக்கள் என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Vela Ramamoorthy
Marimuthu
Deepa Shankar
Suresh nandha
Nandhana
Rama
Senthil kumari
Jerald Milton
Pandi

சுரேஷ் நந்தா மற்றும் நந்தனா ஆகிய இருவரும் படத்தின் காதல் ஜோடிகள் என்றாலும் அவர்களை விட அதிகமாகவே ஸ்கோர் செய்து இருக்கிறார்கள் அனுபவமிக்க நடிகர்கள்..

முக்கியமாக வேலராமமூர்த்தி மாரிமுத்து பாண்டியக்கா தீபா ஷங்கர் செந்தி உள்ளிட்ட அனைவரையும் சொல்லலாம்..

தன் அம்மாவை மதிக்காத தம்பி பொண்டாட்டி.. ஓடிப்போய் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பி.. சொத்தைப் பிரிக்க சொல்லும் தம்பி மனைவி என அனைத்தையும் தாங்க முடியாமல் தாங்கி ஆலமர அண்ணனாக வேலராமமூர்த்தி..

மனைவியின் பேச்சைக் கேட்டு வில்லத்தனம் செய்யும் மாரிமுத்து.. *மூத்த மருமகள் ஸ்ரீதேவி.. நான் என்ன மூதேவியா? என் மாமியாரிடம் சண்டை போடும் செந்தி என அனைவரும் அடடா போட வைக்கின்றனர்..

குடும்பம் பிரிந்த சோகத்தில் அழும் வீராயி நம்மையும் அழ அதை வைத்து நடிப்பில் உச்சம் தொடுகிறார்…

என் புருஷன் தப்புதான்.. அவனை வெட்டிப் போட்டாலும் உன் தங்கையாகவே வாழ்ந்து விடுவேன் என பாசத்திற்காக ஏங்கும் தங்கையாக தீபா ஜொலிக்கிறார்.

இவை இல்லாமல் கிராமத்து மனிதர்கள்.. டீ போடும் லேடி.. என ஒவ்வொருவரும் கவனம் ஈர்கின்றனர். *யார் எக்கேடு கெட்டுப்போனால் என நினைக்காமல் பிரிந்த குடும்பம் ஒன்றாக வேண்டும் என நினைக்கும் அந்த தண்டட்டி பாட்டி நிச்சயம் மனதில் நிற்பார்

டெக்னீசியன்ஸ்…

ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் என்.சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கியிருக்கிறார்.

எம்.சீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். முகன்வேல் எடிட்டிங் செய்திருக்கிறார். இவர்கள் திரைக்கதையுடன் பயணிக்கும் வகையில் தங்கள் பணியை நகர்த்தி இருப்பது சிறப்பு.

இயக்குனருடன் உறுதுணையாக இருந்து இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி தன் பங்கை மன்மனம் மாறாமல் இசை விருந்து படைத்திருக்கிறார்.. ‘செங்கொடி ஊருக்கு… மற்றும் ‘நெஞ்சுக்குள்ள…. ஆகிய பாடல் வரிகள் ரசிக்கும் ரகம்.. சுரேஷ் நந்தா மற்றும் நந்தனாவின் காதல் பாடல்கள் காதலர்களை மட்டுமல்ல அனைவரையும் கவரும்..

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார் இயக்குனர். அங்கு உள்ள மக்களையும் இதில் நடிக்க வைத்து மண் மனம் மாறாத வீராயி மக்கள் படைப்பை கொடுத்திருக்கிறார்.

சுசீந்திரன் மற்றும் ரவி மரியா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த நாகராஜ் கருப்பையா தான் இப்பட இயக்குனர்..

நகரத்தின் இயந்திர வாழ்க்கை.. தொழில்நுட்ப வளர்ச்சி.. கிராமத்தில் கூட செல்போன் மற்றும் சமூக வலைத்தள ஆதிக்கம் உள்ளிட்டவைகளால் சிதறி கிடைக்கும் கூட்டுக் குடும்பத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.

தன் குடும்ப உறவுகளை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.. அம்மா பாசம்.. அப்பத்தா நேசம் பெரியப்பா சித்தப்பா அத்தாச்சி அத்தை மாமா மச்சான் பங்காளி உள்ளிட்ட உறவுகளை மீண்டும் புதுப்பிக்க இந்த வீராயி மக்கள் வந்திருக்கின்றனர் என்றே சொல்லலாம்.

வெட்டு குத்து வன்முறை ரத்தம் போதை கஞ்சா என தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குனர்களும் பாதையை மாற்றிக் கொண்டிருக்க கூட்டுக் குடும்பமே சிறந்தது அதில் உள்ள சந்தோஷம் எதிலும் இல்லை என உரக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா..

Veerayi Makkal movie review

பார்க் விமர்சனம் 2.5/5.. பேய் காதலர்கள்

பார்க் விமர்சனம் 2.5/5.. பேய் காதலர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பார்க் விமர்சனம் 2.5/5.. பேய் காதலர்கள்

ஸ்டோரி…

திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் நடந்த கதையை பார்க் என்ற பெயரில் இயக்கி இருக்கிறார் படத்தின் இயக்குனர்.

நாயகன் தமன் நாயகி ஸ்வேதா ஒரே ஊரில் இருக்கும் போது அடிக்கடி சந்தித்துக் கொள்ள அதுவே அவர்களுக்குள் நெருக்கமாகி காதலாக மாறுகிறது..

பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தமும் நடக்கிறது.. அப்போது ஒரு கட்டத்தில் இவர்களுக்கு வில்லனால் பிரச்சனை ஏற்படும் போது ஓடிப்போய் அருகே உள்ள பூங்காவில் தஞ்சம் அடைகின்றனர்.

அப்போது அந்த பூங்காவில் உலாவி வரும் இரண்டு பேய்கள் இவர்களின் உடலில் புகுந்து விடுகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது? அந்தப் பேய்கள் இவர்களை குறி வைப்பது ஏன்.? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

‘ஒரு நொடி’ பட நாயகன் தமன் குமார் நடித்துள்ளார். நாயகியாக ஸ்வேதா டோரதி நடிக்க வில்லனாக யோகிராம் நடித்துள்ளார். பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான ஒரு நொடி படத்தில் கம்பீர போலீசாக நடித்திருந்தார் தமன் குமார்.. ஆனால் இந்த படத்தில் வழக்கம் போல தமிழ் சினிமா நாயகனாக மாறி இருக்கிறார்.. இடைவேளைக்கு முன்பு வரை ரொமாண்டிக் ஹீரோ இடைவேளைக்கு பின்பு பேய் பிடித்த ஹீரோ என ஆக்ஷனில் இறங்கியிருக்கிறார் தமன்..

அழகான நாயகியாக ஸ்வேதா.. இவரது கண்களும் உதடுகளும் ரசிக்க வைக்கிறது.. கவர்ச்சியில்லாத நேர்த்தியான உடைகளை உடுத்தி இறப்பது சிறப்பு..

பேய் என்பதால் முகத்தில் மட்டும் கொஞ்சம் மேக்கப் போட்டு உடம்பில் எந்த விதமான மாற்றமும் காட்டாமல் தன் வேலையை குறைத்துக் கொண்டிருக்கிறார்.

காமெடி செய்கிறேன் என்ற பெயரில் கடுப்பேத்தி இருக்கிறார் நடிகர் பிளாக் பாண்டி.. இவர்களுடன் ரஞ்சனா நாச்சியார் அழகிலும் நடிப்பிலும் மிரட்டி இருக்கிறார்.. வில்லன்களுக்கு வேலையில்லை..

டெக்னீசியன்ஸ்…

பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்ய ஹமரா சி.வி. என்பவர் இசையமைத்திருக்கிறார்.

கோயில் நகரம் என்று அழைக்கப்படும் திருவண்ணாமலையில் கோயில் அல்லாது கிராமத்து அழகை தன் கேமராவில் அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்..

பேய்க்கு ஏற்ற பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஆனால் பேய் வரும் போதெல்லாம் இருவரும் மூச்சு வாங்கும் அந்த வேகம் கொஞ்சம் செயற்கை தனமாக இருப்பதை தவிர்த்து இருக்கலாம்..

எடிட்டிங் குரு சூர்யா.. கலை இயக்கம் ஆர் வெங்கடேஷ்.. சுசித்ரா குரலில் ராபர்ட் மாஸ்டர் நடனமைத்த குத்தாட்ட பாடல் ஆட்டம் போட வைக்கிறது.

ஈ.கே.முருகன் இயக்கியுள்ளார் . இவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்தவர். எனவே பல இடங்களில் வெங்கடேஷின் டைரக்டர் டச் தெரிகிறது..

அக்சயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் நடராஜ் ‘பார்க்’ படத்தை தயாரித்துள்ளார். நாயகி ஸ்வேதானவின் தந்தையாக நடித்தவர் தான் தயாரிப்பாளர் ஈ.நடராஜ்..

இடைவேளைக்கு முன்பு வரை காதல்.. இடைவேளைக்கு பின்பு பேயாட்டம் என இரண்டு கதைகளை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.. பேய் பழிவாங்கல் கதை இருந்தால் நிச்சயமாக ஒரு பிளாஷ்பேக் இருக்கும் தானே.. இந்த படமும் அதற்கு விதிவிலக்கு இல்ல

ஆனா ஃப்ளாஷ்பேக்கில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் பேய் படத்திற்கு பெரும் மதிப்பெண் கிடைத்திருக்கும்.

அடுத்து என்ன காட்சி நடக்கும் என நம்மால் முன்பு யூ கிக்க முடிவதால் பெரிதான சுவாரசியம் இல்லை.. ஆனால் ஒரு வித்தியாசம்.. பொதுவாக பேய் படங்களில் ஒன்று ஹீரோ பேயாக இருப்பார் அல்லது ஹீரோயின் பேயாக இருப்பார்.. இந்த படத்தில் இருவரையும் பேயாட்டம் ஆடி இருப்பது வித்தியாசமான ஒன்றுதான்.

வழக்கமான காதல்.. வழக்கமான பேய் பட வரிசையில் இந்த பார்க் இணையும்..!

Thaman Swetha starring Park review

மின்மினி பட விமர்சனம் 3/5.. இதயத் துடிப்பு

மின்மினி பட விமர்சனம் 3/5.. இதயத் துடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மின்மினி பட விமர்சனம் 3/5.. இதயத் துடிப்பு

ஸ்டோரி….

பிரவீன் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள்.. பள்ளியில் முதல் மாணவனாக இருந்தாலும் மற்ற மாணவர்களை கிண்டல் செய்யும் சேட்டை சுபாவம் உள்ளவர் கௌரவ்..

அந்தப் பள்ளியில் புதிதாக சேர்ந்த பிரவீனை அடிக்கடி வம்புக்கு இழுக்கிறார்.. இவர்கள் அதே பள்ளி விடுதியில் தங்கி படிக்கின்றனர்..

ஒருநாள் மாணவர்கள் சுற்றுலா சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்து நடக்கிறது.. அப்போது பிரவீனை தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றுகிறார் கவுரவ்.. அப்போது நன்றி கூட சொல்ல முடியாமல் தவிக்கிறார் பிரவீன்..

தன் உயிரை காப்பாற்றி மரணம் அடைந்த கௌரவின் ஆசையை நிறைவேற்ற முயல்கிறான்.. அவனின் ஆசைப்படி ஒருநாள் இமயமலை சிகரத்திற்கு தனி ஆளாக பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என முடிவெடுக்கிறார்..

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம்.. விபத்தில் மூளைச்சாவு அடைந்த கௌவ்வின் இதயம் எஸ்தருக்கு பொருத்தப்படுகிறது.. எனவே எஸ்தருக்கும் ஒரு ஆசை வருகிறது..

கௌரவ் படித்த பள்ளிக்கூடத்தில் படித்து அவனின் நிறைவேறாத ஆசையை தானும் நிறைவேற்ற வேண்டும் என எண்ணுகிறார்.. அப்போதுதான் பிரவீன் எண்ணம் இவருக்கு தெரிய வருகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்….

த்ருஷ்யம் படத்தில் மோகன்லாலின் 2வது மகளாகவும் பாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது மகளாகவும் நடித்த எஸ்தர் அணில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்..

எஸ்தர் அணில், பிரவீன் கிஷோர் மற்றும் கவுரவ் காளை ஆகிய மூவரின் நடிப்பும் சூப்பர்… பள்ளியில் சின்ன சண்டை அவர்களுக்குள் உள்ள நட்பு மோதல் என அனைத்தையும் உணர்வுகளில் காட்டி நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கின்றனர்..

பாரி முகிலன் கேரக்டரில் நடித்த கௌரவ் சூப்பர்.. இவர் மூளைச்சாவு அடைந்து ஆறு பேருக்கு வாழ்வு கொடுப்பது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கேரக்டர் ஆகும்..

சபரியாக நடித்திருக்கும் பிரவீன் சாந்தமான மாணவனாக வருகிறார்.. இமயமலையில் பைக் பயணம் செய்யும் மனிதநேய நபராகவும் ஜொலிக்கிறார்.. ஆனால் நிறைய காட்சிகளில் இவரது முகபாவனையில் போதுமான மெச்சூரிட்டி இல்லை..

பள்ளியில் சின்ன பெண்ணாக எஸ்தர் இமயமலையில் பயணிக்கும் மோட்டார் ரைடராக பயணிப்பது வேற லெவல்.. நம் வீட்டுப் பெண்கள் ஸ்கூட்டியை ஓட்டவே கஷ்டப்படும் போது ஒரு பெரிய புல்லட்டை இமயமலையில் ஓட்டியிருப்பது ஆச்சரியமான ஒன்றாகும்..

டெக்னீசியன்ஸ்…

படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவு தான்.. மனோஜ் பரமஹம்சா கேரியரில் ஒளிப்பதிவில் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று தரும்..

நிலச்சரிவு முதல் அங்குள்ள மக்களின் வாழ்வியலை அழகாக கண்முன் படம் பிடித்திருக்கிறார்.. அதுபோல இமயமலைக்கு செல்ல வேண்டும் என ஒரு தூண்டுதலையும் தன்னுடைய ஒளிப்பதிவில் ஏற்படுத்தி இருக்கிறார்.

இடைவேளைக்கு முன்பு வரை பள்ளி கதை இரண்டாம் பாதியில் இமயமலையில் பைக் பயணம் என இரண்டு அனுபவங்களை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.. ஒரு பள்ளி என்றால் குறைந்தபட்சம் 100 மாணவர்களை காட்ட வேண்டும். ஆனால் 20 மாணவர்களை மட்டுமே காட்டி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் அது ஏன்?

எட்டு வருடம் காத்திருந்தவர் இரண்டு நபர்களை மட்டுமே நடிக்க வைத்து இரண்டாம் பாதி முழுவதையும் ஓட்டி இருக்கிறார் அது ஏனோ?

15 வயது சிறுவர் சிறுமியரை நடிக்க வைத்து அவர்கள் வளரும் வரை 8 ஆண்டுகள் காத்திருந்து அவர்களை மீண்டும் அதே கேரக்டரில் நடிக்க வைத்து ஒரு வித்தியாசமான படைப்பை கொடுத்திருக்கிறார் ஹலிதா ஷமீம்.

பூவரசன் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கியவர் இவர்..

பள்ளிப்பருவத்தில் நட்பு வளர்ந்த பின் அதே பள்ளி நினைவுகளுடன் காதல் என ஒரு கவித்துவமான படைப்பை கொடுக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்..

இந்தப் பெண் இயக்குனருக்கு பக்க பலமாக இருந்து ஒரு பெண்ணாக அவரின் உணர்வுகளைப் புரிந்து இசை பணியை நேர்த்தியாக செய்து இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான்.. பாடல்கள் கவனம் பெறுகின்றன.. பின்னணி இசையில் ரகுமான் போல அல்லாமல் இளையராஜா போல மெல்லிய இசையை கொடுத்திருப்பது சிறப்பு..

8 years wait Minmini review

More Articles
Follows