கத்தி சண்டை விமர்சனம்

கத்தி சண்டை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஷால், தமன்னா, வடிவேலு, சூரி ஜெகபதிபாபு, சம்பத் ராஜ், ஜெயப்பிரகாஷ், சௌந்தர்ராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : சுராஜ்
இசை : ஹிப் ஹாப் தமிழா ஆதி
ஒளிப்பதிவாளர் : ரிச்சர்ட் எம் நாதன்
எடிட்டிங்: செல்வா ஆர்.கே.
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பாளர் : நந்தகோபால் மெட்ராஜ் எண்டர்பிரைசஸ்

கதைக்களம்…

முதல் காட்சியே கண்டெய்னர் லாரி நிறைய பணம்… (அடடே.. இது ரியல் அரசியல் கதையா? என்று நினைக்கலாம். இப்படிதானே நாங்களும் நினைச்சோம்.

அந்த பணத்தை தமன்னாவின் அண்ணன் ஜெகபதிபாபு கைப்பற்றி அரசிடம் ஒப்படைகிறார்.

விஷால் அப்பாவியாக எண்ட்ரீ கொடுக்கிறார். பின்னர் தமன்னாவை காதலிக்க சூரி உதவியுடன் பல விதமான ரூட் போடுகிறார்.

இதனிடையில் ஜெகபதிபாபுவை ஒரு கும்பல் கடத்தி பணம் கேட்டு மிரட்டுகிறது.

அப்போதுதான் விஷால் யார்? என்ற உண்மை தெரிகிறது.

அதன்பின், என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

kaththi-sandai-movie-hd-wallpapers

கதாபாத்திரங்கள்…

திமிரு, கதகளி உள்ளிட்ட பல படங்களில் அப்பாவி என்ட்ரீ கொடுத்து விஷால் அதிரடியாக இறங்குவார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

இதிலும் இரண்டிலும் நன்றாகவே தேறியிருக்கிறார்.

ஆக்ஷன் காட்சிகள் என்றால் விஷாலுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. எனவே அதில் குறை வைக்கவில்லை.

தமன்னாவுக்கு பெரிதாக வேலையில்லை. ஆனால் அழகாக பளிச்சென்று வந்து கண்களை ப்ரைட் ஆக்குகிறார்.

வடிவேலு மற்றும் சூரியின் காமெடிகள் படத்திற்கு பெரிய ஆறுதல். இவர்கள் கெட்டப்பை அடிக்கடி மாற்றுவது ரசிக்கும் ரகம்.

சூரியின் லேடி கெட்டப், கராத்தே கெட்டப் உள்ளிட்டவைகள் ரசிக்கும் ரகம்.

இரண்டாம் பாதியை டாக்டர் பூத்ரி வடிவேலு தாங்கியிருக்கிறார். காரில் மறைந்து வரும் அந்த காட்சியை வடிவேலுக்காக ரசிக்கலாம்.

ஜெகபதிபாபு இன்னும் மிரட்டியிருக்கலாம்.

Kaththi-Sandai-first-look1

தொழில்நுட்ப கலைஞர்கள்..

நான் கொஞ்சம் கருப்புதான் என்ற பாடல் ஹிட்டுதான். ஆனால் ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் ஆம்பள பட பாடல்கள் கேட்ட ஞாபகம் வருகிறது.

ரிச்சர்ட் எம் நாதன், தன் ஒளிப்பதிவில் குறை வைக்கவில்லை.

வடிவேலுவின் ரீஎன்ட்ரியை மெயின்னா வைத்து காயை நகர்த்தியிருக்கிறார் சுராஜ்.

இறுதியாக வரும் ப்ளாஷ்பேக் இன்றைய அரசியல்வாதிகளுக்கு சாட்டையடி.

நேர்மையற்ற அரசியல்வாதிகளால் நாட்டு மக்கள் படும் அவஸ்தைகளை நன்றாக காட்சிப்படுத்தியுள்ளார் சுராஜ்.

கத்தி சண்டை… நல்லாவே வெட்டலாம்

பலே வெள்ளையத் தேவா விமர்சனம்

பலே வெள்ளையத் தேவா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சசிகுமார், தன்யா, கோவை சரளா, சங்கிலி முருகன், பாலாசிங், ரோகிணி, வளவன் மற்றும் பலர்.
இயக்கம் : சோலை பிரகாஷ்
இசை : தர்புகா சிவா
ஒளிப்பதிவாளர் : ரவீந்திரநாத் குரு
எடிட்டிங்: பிரவீன் ஆண்டனி
பி.ஆர்.ஓ.: நிகில்
தயாரிப்பாளர் : கம்பெனி புரொடக்சன்ஸ் – சசிகுமார்

கதைக்களம்…

போஸ்ட் மாஸ்டர் ரோகினியின் மகன் சசிகுமார். இவர் அந்த ஊரில் மட்டன் கடை வைத்திருக்கும் பாலா சிங்கின் மகள் தன்யாவை காதலிக்கிறார்.

இவர்களின் காதலுக்கு அந்த ஊர் செல்ஃபி காத்தாயி கோவை சரளா மற்றும் சங்கிலி முருகன் உதவுகின்றனர்.

இடையில் அந்த ஊர் கேபிள் ஓனர் வளவனை பகைத்துக் கொள்கிறார் சசி.

வில்லனால் ஏற்படும் பிரச்சினைகளால் சசி எப்படி சமாளித்து, காதலியை கரம் பிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.
Bale Vellaiya Theva movie review rating

கதாபாத்திரங்கள்…

சசிகுமார் வழக்கமான கிராமத்து கதையில் ஜொலிக்கிறார். இதில் பெண்னை தன் பின்னால் சுற்ற விடாமல் இவர் சுற்றி வருவது ஓகே.

ஆனால் அதற்கான மொக்கை ஐடியாவை கேட்டுக் கொண்டு பள்ளி முட்டை, எச்சில் என்பதெல்லாம் என்னத்த சொல்வது?

நாயகி தனிக்கொடியாக வரும் தன்யாவுக்கு இதான் முதல் படம். அழகாய் அம்சமாய் வந்து செல்கிறார். சீரியஸ் காட்சிகள் இல்லை என்பதால் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.

படத்தின் மெயின் கேரக்டர் கோவை சரளாதான். செல்ஃபி எடுத்துக் கொண்டு சந்தோஷம் சொல்லும்போது கலக்குகிறார்.

தன்னை ஒருவன் மலடி என்று சொல்லிவிட்டானே என்று அழும்போது நடிப்பில் சபாஷ் சொல்ல வைக்கிறார் சரளா.

சங்கிலி முருகன் ஜொள்ளும் திருட்டு விசிடியுமாய் ரகளை செய்கிறார்.

சசியின் அம்மாவாக வரும் ரோகிணி அக்கா போல் இருக்கிறார்.

இவர்களுடன் பாலா சிங், வளவன் ஆகிய நல்ல நடிகர்கள் இருந்தும் திரைக்கதையில் வலுவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்திற்கு பெரிய ஆறுதல் ஒளிப்பதிவு.

ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகை கொண்டு வந்தாலும் சில காட்சிகளில் அதுவும் செயற்கையாக இருக்கிறது.

தர்புகா சிவா இசையில் பாடல்கள் ஜஸ்ட் லைக் தட்.

ஒரு திறமையான இயக்குனர் நடிகர் சசியை வைத்து என்னவெல்லாமே செய்திருக்கலாம். ஆனால் சோலை பிரகாஷ் நமக்கு சோகத்தையே ஏற்படுத்துகிறார்.

க்ளைமாக்ஸ், சசியின் கேபிள் செட்டாப் பாக்ஸ் பிசினஸ், ஊர் தண்டாரோ உள்ளிட்ட என்று பெரும்பாலான காட்சிகள் நம்பும்படியாக இல்லை.

கிராமத்து கதை என்பதால் மட்டும் இக்கதையை சசி இதை தேர்தெடுத்தாரா? எனத் தெரியவில்லை. என்னாச்சு சசி சார்?

சசிகுமாரின் எல்லாம் படத்துலயும் நாலு பாட்டிங்க இருப்பாங்க. ஆனால் இதுல ஒரு பாட்டியே தாங்க முடியல.

பலே வெள்ளையத் தேவா… வேதனை தேவா

நேர்முகம் விமர்சனம்

நேர்முகம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ரஃபி, மீரா நந்தன், பாண்டியராஜ், கூல் சுரேஷ், மீனாட்சி, ஆதித்யா, நெல்லை சிவா, சிசர் மனோகர் மற்றும் பலர்.
இயக்கம் : முரளி கிருஷ்ணா
இசை : முரளி கிருஷ்ணா
ஒளிப்பதிவாளர் : கோபி
எடிட்டிங்: அத்தியப்பன் சிவா
பி.ஆர்.ஓ.: ஜான்
தயாரிப்பாளர் : ஹை டெக் பிக்சர்ஸ் ரஃபி

ner mugam audio

கதைக்களம்…

மனோதத்துவ டாக்டர் ஆதித்யா மேனனிடம் ட்ரீட்மெண்ட்டுக்காக செல்கிறார்கள் ஹீரோ ரபி மற்றும் ஹீரோயின் மீனாட்சி.

ஆனால் அவர்களை வளைத்து, தனக்கு சொந்தமான காட்டு பங்களா ஹெஸ்ட் அவுஸ் அடைத்து வைக்கிறார் டாக்டர்.

அங்கு பார்த்தால் இவர்களைப் போன்று பல காதல் ஜோடிகள் அடைக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால் ட்ரீட்மெண்டுக்கு பதில், அடியாட்களின் அடி மிரட்டல் மட்டுமே அங்கு கிடைக்கிறது.

டாக்டர் அப்படி செய்ய என்ன காரணம்? என்ற ப்ளாஷ்பேக்கும் வருகிறது.

ஆனால் அதில் ட்விஸ்ட் வைத்து ஹீரோ டச்சோடு படத்தை முடிக்கிறார் இயக்குனர் முரளி கிருஷ்ணா.

ner mugam stills

கதாபாத்திரங்கள்…

படத்தின் புரொயூசர் ஹீரோ எல்லாம் ரஃபிதான். வருகிறார் செல்கிறார். நடிப்பில் இன்னும் பல படிகளை தாண்ட வேண்டும்.

இரண்டு ஹீரோயின் இருந்தும் காதல் காட்சிகளில் ஒரு கெமிஸ்ட்ரியும் இல்லை.

நாயகிகள் மீரா நந்தன், மீனாட்சி… ஒருவர் ஹோம்லியாக வருகிறார். மற்றொருவர் க்ளாமராக வருகிறார்.
கூல் சுரேஷ் கத்தி கத்தி பேசிக் கொண்டே இருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக பாண்டியராஜன். இவருடன் நெல்லை சிவா, சிசர் மனோகர். கொஞ்சம் காமெடி. கொஞ்சம் போர்.

டாக்டராக வரும் ஆதித்யா மிரட்டலாக வந்தாலும் க்ளைமாக்ஸில் கம்பீரம் இல்லை.

படத்தின் முதல் பாதியில் ஆக்ஷன் த்ரில்லரை சொல்லிவிட்டு இரண்டாம் பாதியில் கலகலப்பாய் பாட்டு, ஆட்டம் என கொண்டு செல்கிறது.

பார்வை ஒன்றே போதுமே படத்தின் பலமே பாடல்கள்தான். இதிலும் அதில் ஜஸ்ட் பாஸ் மார்க் பெறுகிறார்.

‘கண்ணுக்கு’, ‘போறவளே’ ஆகிய பாடல்கள் நிச்சயம் கேட்கலாம்.

மொத்தத்தில் நேர் முகம்… உங்கள் சாய்ஸ்

மணல் கயிறு 2 விமர்சனம்

மணல் கயிறு 2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : எஸ்வி சேகர், விசு, ஜெயஸ்ரீ, அஸ்வின் சேகர், பூர்ணா, ஜெகன், சாம்ஸ், சோனியா, டெல்லி கணேஷ், சுவாமிநாதன் மற்றும் பலர்.
இயக்கம் : மதன்குமார்
இசை : தரன் குமார்
ஒளிப்பதிவாளர் : கோபி
எடிட்டிங்: அத்தியப்பன் சிவா
பி.ஆர்.ஓ.: விஜயமுரளி
தயாரிப்பாளர் : முரளி ராமசாமி (ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்)

கதைக்களம்…

எஸ்வி சேகர், விசு, ஜெயஸ்ரீ (இவர்கள் மூவரும் 35 வருடங்களுக்கு முன்பே முதல் பாகத்தில் நடித்தவர்கள். இவர்களே இரண்டாம் பாகத்திலும் அதே கேரக்டரில் நடித்திருப்பது ஆச்சரியமே)

நாரதர் நாயுடு விசு ஒரு கல்யாண புரோக்கர். இவரிடம் பெண் பார்க்க சொல்லும் எஸ்.வி. சேகர் எட்டு நிபந்தனைகள் விதிக்கிறார்.

எட்டு கன்டிசன்களுக்கு ஏற்ற ஒரு பெண் கிடைத்துவிட்டாள் என்று பொய்யை கூறி ஜெய்ஸ்ரீ கட்டி வைத்து விடுகிறார் விசு.

இதனால் விசுவை வெறுக்கும் எஸ்வி. சேகர் என்ன செய்தார்? என்ற தொடக்கத்துடன் இரண்டாம் பாகம் தொடர்கிறது.

தனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால், அதுபோன்ற வேற எட்டு கன்டிசன்களை போடுகிறார் எஸ்வி. சேகரின் மகள் பூர்ணா.

இதிலும் நாரதர் நாயுடு தன் வேலையை காட்டி அஸ்வினை பூர்ணாவுக்கு கட்டி வைக்கிறார்.

இதுவும் பொய் என்று தெரிந்த பூர்ணா, எஸ்வி சேகர் குழு என்ன செய்கிறார்கள் என்பதை இந்த இரண்டாம் பாக மணல் கயிறு.

manal kayiru stills

கதாபாத்திரங்கள்…

முதல் பாகம் பார்க்காதவர்கள் அப்படத்தை நினைவூட்ட முக்கிய காட்சிகளை முதல் 10 நிமிடத்தில் காட்டி ரசிக்க வைக்கிறார்கள்.

விசு சிறிது நேரமே வந்தாலும் ரசிக்க வைக்கிறார். திருமண உறவை பற்றி இவர் சொல்லும் காட்சிகள் தாய்மார்களின் அப்ளாஸை கூட அள்ளும்.

இவரும் எஸ்.வி. சேகரும் இணையும் காட்சிகள் இதில் இல்லை. இருந்தால் படம் இன்னும் ரசிக்க வைத்திருக்கும்.

எஸ்.வி. சேகர் தன் நையாண்டி மூலம் இன்னும் சிறப்பு சேர்க்கிறார்.

அவரின் டபுள் மீனிங் டயலாக் இக்கால இளசுகளுக்கு செம விருந்து.

ஜெய்ஸ்ரீ குண்டாக இருந்தாலும் அதே முக சாயலுடன் வளம் வருகிறார். இதில் எஸ்வி சேகருடன் இணைந்து கலாய்க்கவும் செய்கிறார்.

விளம்பரங்களில் அஸ்வின் சேகரின் கிண்டல் ரசிக்க வைக்கிறது. உடம்மை குறைத்தால் இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். ரொமான்ஸ் எப்படி என்பதுதான் தெரியவில்லை.

பூர்ணாவுக்கு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். அவரும் அதில் நிறைவை தருகிறார்.

இவர்களுடன் ஜெகன், சாம்ஸ், எம்எஸ் பாஸ்கர் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் கூடுதல் பலம் சேர்கின்றனர்.

சாம்ஸின் அந்த இண்டர்வியூ காட்சி ரசிக்க வைக்கிறது.

sv sekar manal

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கோபியின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. தரண்குமார் இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே.

அனிருத் பாடிய பாட்டு வரவேற்பை பெரும்.

வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். உதாரணத்திற்கு…

  • கடவுளின் கருவறைக்கு சென்றால்… தண்ணீர் தீர்த்தம், சாதம் பிரசாதம், சாம்பல் வீபூதி ஆகிறது.
  • கணவன் மனைவி இருவரும் எதிரெதிர் திசைகளில் குடும்ப உறவை இழுத்தால், அது அறுந்து போகும். மாறாக ஒருவர் இழுக்க மற்றொருவர் அவருடன் செல்ல வேண்டும் என்று விளக்கும் காட்சி அருமை.

poorna

இயக்குநர் பற்றிய அலசல்…

குடும்பத்தோடு பார்க்கும் வகையில் மதன்குமார் படத்தை இயக்கி இருக்கிறார்.

ஆனால் முதல்பாதியில் இருந்த அந்த நகைக்சுவை இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். அதை சரி கட்டியிருக்கலாமே.

படத்தில் நாடகத்தன்மை இருப்பதை தவிர்க்க முடியாமல் செய்திருக்கலாம்.

மணல் கயிறு…. மணக்கும் உறவு

பைரவா பாடல்கள் விமர்சனம்

பைரவா பாடல்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பைரவா படத்துக்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இதில் நான்கு பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் உள்ளது.

அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.

ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் பாடலாக வர்லாம் வர்லாம் வா பைவா பாடல் அமைந்துள்ளது.

கபாலி நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் இப்பாடலுக்கு தன் குரல் மூலம் பலம் சேர்துள்ளார்.

நில்லாயோ என்ற பாடல் ரசிகர்கள் மனதில் நீண் நாட்களுக்கு நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பட்டைய கிளப்பு, குட்டைய குழப்பு என்ற பாடல்கள் வரிகள் விஜய்யின் சி கிளாஸ் ஆடியன்டிஸை கவரும் வகையில் உள்ளது.

அழகான சூடான பூவே என்ற பாடல் சில நேரங்களில் கொடி படத்தில் இடம் பெற்ற ஏய் சூழலி என்ற பாடலை நினைவுப் படுத்துகிறது. (ஓ கொடி படத்திற்கும் சந்தோஷ் நாராயணன்தானே இசை…)

ப்பாபா ப்பாபா என்ற பாடலை ஹீரோ விஜய்யே பாடியுள்ளார். ஆனால் விஜய்யின் வழக்கமான மேஜிக் இதில் மிஸ் செய்வதைப் போல் தோன்றுகிறது.

ஆனால் ஆட்டம் போட வைக்கும் ரகம்தான் இந்தப் பாடல். அதனால் பெரிதும் ஏமாற்றமில்லை.

மொத்தத்தில் நில்லாயோ, அழகிய சூடான பூவே, வர்லாம் வர்லாம் வா பைரவா… ஆகிய பாடல்கள் நிச்சயம் ரகிகர்கள் நெஞ்சில் இடம் பிடிக்கும்.

bairavaa full track list

வீரசிவாஜி விமர்சனம்

வீரசிவாஜி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விக்ரம் பிரபு, ஷாம்லி, மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர், யோகி பாபு, விடிவி கணேஷ், ஜான்விஜய் மற்றும் பலர்.
இயக்கம் : கணேஷ் விநாயக்
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : சுகுமார்
எடிட்டிங்: ரூபன்
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பாளர் : மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்

கதைக்களம்…

கால் டாக்ஸி ட்ரைவர் விக்ரம் பிரபு. அனாதையான இவருக்கு மெஸ் நடத்தும் வினோதி அக்காவாக இருந்து பாத்துக்கொள்கிறார்.

எனவே இவரும் அவரின் மகள் மீது பாசத்துடன் இருக்கிறார்.

ஒரு சூழ்நிலையில், வினோதினியின் குழந்தைக்கு மூளையில் கட்டி இருப்பது இவருக்கு தெரிய வர, ஆப்ரேஷன் செய்ய ரூ 25 லட்சம் தேவைப்படுகிறது.

டாக்ஸிஸை விற்று கொஞ்சம் பணமும், இவரின் நண்பர்கள் யோகிபாபு, ரோபோ ஷங்கர் மூலம் பாதி பணம் பெறுகிறார்.

மீதி பணத்துக்காக வில்லன் ஜான்விஜய்யை நாடுகிறார்.

ஆனால் அந்த மோசடி கும்பல் இவர்களின் பணத்தை பற்றிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகிறது.

அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக குழப்பி கதை சொல்கிறார் இயக்குநர்.

veera sivaji shamlee

கதாபாத்திரங்கள்..

சிவாஜி கணேசன், பிரபு இவர்களின் வழியில் வந்தவர் விக்ரம் பிரபு.

ஆனால் இவர் எதற்காக இந்த கதையை தேர்ந்தெடுத்தார் எனத் தெரியவில்லை.

டான்ஸ் ஓகே. சண்டை காட்சிகளில் மட்டும் அதிரடி காட்டுகிறார்.

அஞ்சலி பாப்பாவாக வந்த ஷாம்லியை இதில் ரசிக்க காத்திருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம். வருகிறார். டூயட் பாடுகிறார். செல்கிறார்.

படத்திற்கு கொஞ்சம் மட்டுமே ஆறுதல் தருபவர்கள் ரோபோ சங்கர் மற்றும் யோகி பாபு இருவர் மட்டுமே.

பைவ் ஸ்டார் விளம்பரத்தில் வரும் ரமேஷ், சுரேஷ் என்ற இரண்டு கேரக்டர்களாக வந்து பேசி பேசியே செல்கின்றனர்.

இவர்களுடன் ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, மாரிமுத்து, மன்சூர் அலிகான், விடிவி கணேஷ் என பலர் இருந்தும், பெரிதாக சொல்லும்படி இல்லை.

திறமையான கலைஞர்களை இயக்குனர் கவனிக்கவில்லை என்பது வருத்தமே.

veera sivaji stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில், தாறு மாறு தக்காளி சோறு மற்றும் சொப்பன சுந்தரி பாடல்களை தாளம் போட்டு ரசிக்கலாம்.

மற்றபடி மெலோடி கிங் இமான், இப்படத்தில் நம்மை ஏமாற்றி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

காரைக்காலில் படம் ஆரம்பிப்பது போல் காட்டி இருக்கிறார்கள். அதன்பின்னர் க்ளைமாக்ஸில் காட்டப்படுகிறது.

மற்றபடி காட்சிகளை பாண்டிசேரியில் முழுவதும் எடுத்துள்ளனர்.

மூளை குழம்பி, நினைவு திரும்பி ஹீரோ வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

பைனான்ஸ் கம்பெனியில் பணத்தை போட்டு ஏமாற வேண்டாம் க்ளைமாக்ஸில் அட்வைஸ் செய்து படத்தை முடிக்கிறார்கள்.

மொத்தத்தில் வீரசிவாஜி… பலசாலி இல்லை

 

More Articles
Follows