புஜ்ஜி அட் அனுப்பட்டி பட விமர்சனம் 3.5/5.. Favorite Goat

புஜ்ஜி அட் அனுப்பட்டி பட விமர்சனம் 3.5/5.. Favorite Goat

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புஜ்ஜி அட் அனுப்பட்டி பட விமர்சனம் 3.5/5.. Favorite Goat

கஞ்சா போதை மது புகை வன்முறை நிறைந்த சினிமாவில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போக முடியாதா என ஏங்கும் பெற்றோர்களுக்காக வரவிருக்கும் படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’.

இந்த வாரம் மே 31ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஸ்டோரி…

சரவணன் & துர்கா இருவரும் அண்ணன் தங்க.. இவர்கள் ஒரு நாள் பள்ளி விட்டு வீட்டிற்கு வரும்போது ஒரு புதருக்குள் சிக்கிய ஆட்டுக்குட்டியை கண்டு அதைக் காப்பாற்றி வீட்டிற்கு எடுத்து வருகின்றனர்.

அந்த ஆட்டுக்குட்டிக்கு யாரும் உரிமை கொண்டாடாத நிலையில் இவர்களே அந்த ஆட்டை செல்லமாக வளர்த்து வருகின்றனர். இதற்குப் பெற்றோரும் சம்மதிக்க அவர்களின் பாதுகாப்புடன் புஜ்ஜி என்ற செல்ல பெயரிட்டு வளர்த்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் அந்த ஆட்டை இவர்களது குடிகாரத் தந்தை குடிக்க பணம் இல்லாமல் அனுப்பட்டி என்ற கிராமத்தில் விற்று விடுகிறார்.

இதற்காக ஆட்டுக்குட்டியை தேடி பள்ளிக்கு செல்லாமல் அனுப்பட்டி கிராமத்திற்கு செல்கின்றனர்.

அங்கு அவர்களால் ஆட்டை கண்டுபிடிக்க முடிந்ததா.? என்ன நடந்தது? தன் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளியின் பிள்ளைகளை காண முடியாமல் முதலாளி கமல் குமாரும் தேடி அலைகிறார்,.. இறுதியில் என்ன ஆனது.? ஆட்டை கண்டுபிடித்தார்களா குழந்தைகள்? குழந்தைகளை கண்டுபிடித்தாரா நாயகன் கமல்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்..

நாயகன் கமல் குமாரின் அறிமுக காட்சியே அசத்தல்தான்.. தோட்டத்து முதலாளியாக இருந்தாலும் அடவாடித்தனம் எதுவும் காட்டாமல் அன்பான மனிதராக வருகிறார். அதுவும் கோவை மொழி பேசி குழந்தைகளிடம் கொஞ்சம் இவரது அன்பு பிளஸ்.. நம்ம முதலாளி தங்க முதலாளி என்ற அளவுக்கு நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார்.

பள்ளி குழந்தைகளாக நடித்துள்ள சரவணன் மற்றும் துர்கா இருவரும் நடிப்பில் பாஸ் மார்க் பெறுகின்றனர்.. அதிலும் துர்காவாக நடித்துள்ள பிரணிதி 100 மார்க் பெற்று விடுகிறார்.. ஆட்டுக்குட்டி தொலைந்த பிறகு அந்த கூடைக்குள் அமர்ந்து கொண்டு அவரது ஏங்கும் முகமும் கண்களும் அழகு.

போலீசாக நடித்துள்ள வைத்தீஸ்வரியும் தன் நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார்.. அதிலும் உயிரதிகாரி தவறு செய்தாலும் அவர் தட்டிக் கேட்கும் குணம் பாராட்டுக்குரிய நடிப்பு.

ஆட்டுக்குட்டியை தேட துர்காவுடன் இணையும் இளம்பெண்ணும் நடிப்பில் கவருகிறார்.. அதுபோல பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பையன் & கறிக்கடை பாய் உள்ளிட்ட வரும் தங்கள் பங்களிப்பில் சிறப்பு..

ஆட்டை திருப்பி தர வேண்டுமென்றால் 5000 ரூபாய் வேண்டும் என கறிக்கடை பாய் நிபந்தனை விதிக்கும் போது உடனே 3000 ரூபாய் திரட்டுவது ஓவர் தான்…

டெக்னீசியன்ஸ்…

ராம் கந்தசாமி என்பவர் எழுதி இயக்கி தனது கவிலயா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார்.

கார்த்திக் ராஜா இசையமைக்க கு.கார்த்திக் பாடல்களை எழுத படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் அருமை.. குழந்தைகளை மட்டுமே மையப்படுத்தி காட்சிகள் அமைத்திருக்கிறார் இயக்குனர்.. நாயகன் கமல் மற்றும் வைத்தீஸ்வரிக்கு ஒரு காதல் பாடல் வைத்து இளசுகளையும் கவர்ந்திருக்கலாம்.

பாடல்களை கு கார்த்திக் பாடல்கள் எழுதி இருக்கிறார்.. புஜ்ஜி புஜ்ஜி என்ற பாடல் குழந்தைகளுக்கு பிடித்த பாடலாக அமையும்..

அருண்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சரவணன் மாதேஸ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவை மாவட்ட அழகை கண்முன் கொண்டு வந்திருக்கின்றனர்.

அதிலும் முக்கியமாக கோவை மொழி பேசும் கோவப்படாத மக்கள் அழகு..

ஒரு வாயில்லா ஜீவன் என ஒரு ஆட்டை நினைத்தால் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.. ஒருவேளை அது மட்டன் கறியாக நினைப்பவர்களுக்கு செட் ஆகாது..

Kamals Bujji at Anuppatti movie review

பூமர காத்து திரை விமர்சனம்..: விதை

பூமர காத்து திரை விமர்சனம்..: விதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூமரக் காத்து திரை விமர்சனம்..: விதை

ஸ்டோரி…

பள்ளிப்பருவத்தில் நாயகனுக்கு காதல் வருகிறது.. ஆனால் நாயகியிடம் காதலை சொல்ல நினைக்கும் போது நாங்கள் எல்லாம் நண்பர்கள் எங்களுக்கு படிக்கும் வயதில் காதலும் கிடையாது கத்திரிக்காயும் கிடையாது என நாயகி சொல்கிறார்.

எனவே காதலை மறைத்து வாழ தொடங்குகிறார் நாயகன்.. இதன் பின்னர் ஒரு கட்டத்தில் அவரை மாமன் மகள் காதலிக்கிறார்.. ஆனால் அவரையும் காதலிக்காமல் தான் செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஜன்னல் ஓரம் எப்போதும் அமர்ந்திருக்கும் ஜெனி என்ற கிறிஸ்தவ பெண்ணை காதலிக்கிறார்.

இவரை சந்திக்க வரும்போது நாயகிக்கு விபத்து ஏற்பட்டு கால் ஊனமாகிறது.. இதனையடுத்து தன்னால்தான் அந்த பெண் ஊனமானார் என்பதை அறிந்து அவளையே திருமணம் செய்து நினைக்கிறார்.. இதனால் வீட்டில் எதிர்ப்புகிறது..

அதன் பிறகு நாயகன் என்ன செய்தார்? குடும்பத்திற்கு கட்டுப்பட்டாரா? ஊனமுற்ற பெண்ணை மணந்து கொண்டாரா? அவரின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா, மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம் புலி, ஓ.எஸ்.மணி, முத்துக்காளை, போண்டாமணி, சிஸ்ஸர் மனோகர், குழந்தை நட்சத்திரம் ஜி.வி.சன்மதி & பலர் நடித்துள்ளனர்..

மனோபாலா மற்றும் தேவதர்ஷினிக்கு ஒரு பிளாஷ் பேக் காதல் காட்சி இருக்கிறது.. இருவரும் பள்ளி மாணவர்களாக வருவது சகிக்க முடியாத கற்பனை.. (அட்லீஸ்ட் கல்லூரி காதல் போல காட்டி இருக்கலாம்..) அந்த காட்சிகளை வெட்டி எறிந்து படத்தின் நீளத்தை குறைத்து நம்மையும் காப்பாற்றி இருக்கலாம்.

நாயகன் நாயகி கஷ்டப்படும்போது நிச்சயம் அடுத்தவர் மனதும் கலங்கும்.. அதுவும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் அவர்கள் போராடும் காட்சி நெகிழ்ச்சி..

பள்ளி மாணவியாக நாயகி மனிஷா.. அழகும் திறமையும் நிறைந்த நடிகை ஆனால் சில காட்சிகளில் மட்டும் வந்து சென்று விடுகிறார்..

பள்ளி மாணவனாக சந்தோஷ் சரவணன்.. வளர்ந்த பிறகு விதுஸ்.. ஐடி வேலைக்கு பொருத்தமான இவரது முகம் மெக்கானிக் வேலையில் ஈடுபடும் போது பொருந்தவில்லை.. நடிப்பில் பாஸ் மார்க் பெற முயற்சித்திருக்கிறார்..

ஊனமுற்ற பெண்ணாக மீனா நடிப்பில் கலங்க வைக்கிறார்.. சிங்கம்புலி, முத்துக்காளை, சிசர் மனோகர், சூப்பர் குட் லட்சுமணன், ஜி.எஸ்.மணி, காதல் அருண், தேனி முருகன், தீப்பெட்டி கணேசன், விஜய் கணேஷ், போண்டாமணி, நேல்லை சிவா, செவ்வாழை உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே உள்ளது.. இருந்தும் பயனில்லை..

டெக்னீசியன்ஸ்…

ஜோவின் ஒளிப்பதிவும் அரவிந்த் ஸ்ரீராம் ஈஸ்வர் ஆனந்தின் இசையும் அருமை..

அரவிந்த் ஶ்ரீராம் மற்றும் ஈஸ்வர் ஆனந்த் ஆகியோரது இசையில், இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜாவின் பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.. டெக்னிக்கலாக இந்த படம் இன்னும் வலுப்பெற வேண்டும்..

ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில், ஞான ஆரோக்கியராஜா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பூமர காத்து’.

ஞான ஆரோக்கியராஜா இந்தப் படத்தை இயக்கி முடித்து சென்சருக்கு அனுப்பும் சமயத்தில் அவர் கண் பார்வை இழந்து விட்டார்.. தற்போது இந்த படம் ரிலீசான பிறகு தான் பார்வை பெற கண் சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது என பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஆங்காங்கே காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.. முக்கியமாக மைனர் பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் புகை பிடிக்கும் நபர் பலர் இருக்கும் இடத்தில் புகை பிடிக்கக் கூடாது.. தன்னையும் கெடுத்து புகை புடிக்காத அடுத்தவரையும் கெடுக்க கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

இத்துடன் கிளைமாக்ஸ் காட்சியில்.. வறுமைக்கு எப்போதுமே தற்கொலை தீர்வாகாது.. தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும்… நாம் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வரும்போது நாம் பெற்ற பிள்ளைகளை கொல்ல எந்த உரிமையும் கிடையாது என்ற கருத்தையும் வலியுறுத்தி இருக்கிறார்..

இந்தப். பூமரக்காத்து தலைப்பு குறித்து கேட்டபோது.. மண்ணில் புதைந்து கிடக்கும் விதை எப்படியாவது ஒரு பெரிய மரமாக வளர்ந்து காய்கனிகள் நிழல் கொடுக்கும் அது போல நம்முடைய வாழ்க்கை அமைய வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஞான ஆரோக்கியராஜா.

Poomara Kaathu movie review

6 கண்களும் ஒரே பார்வை பட விமர்சனம்

6 கண்களும் ஒரே பார்வை பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

6 கண்களும் ஒரே பார்வை பட விமர்சனம்

ஸ்டோரி…

நாயகி கெனி.. இவரை மூன்று ஆண்கள் காதலிக்கின்றனர்.. எவரையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.

ஆண்கள் துரோகிகள் அவர்களை நம்பாதே என இவரின் அம்மா சொன்னதால் அந்த வழிப்படி நடக்கிறார்.. ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு விபத்து ஏற்படுகிறது. இதனையடுத்து சிகிச்சைக்காக 3 லட்சம் தேவைப்படுகிறது.

உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் கைவிரித்த வேளையில் வேறு வழியில்லாமல் தோழியின் ஆலோசனைப்படி ஒரு திட்டம் போடுகிறார் நாயகி..

அதாவது தன்னிடம் காதலை சொன்ன மூன்று நபர்களிடம் தலா 1 லட்சம் கேட்கிறார். என்னை நீங்கள் உண்மையாக விரும்பினால் என் அம்மாவை காப்பாற்ற உதவுங்கள் என்கிறார்.

அவர்கள் பணம் கொடுத்தார்களா.? கெனி அம்மாவை காப்பாற்றினாரா? காதலுக்காக பொய் சொன்ன கெனியின் நிலை என்ன? ஆனது என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

நாயகன் – ராஜ்நிதன்

நாயகி – கெனி

நாயகி அம்மா – திவ்யா லெனின்

நாயகி தாத்தா – வாசுவிக்ரம்

நாயகன் அம்மா – கும்கி ஆனந்தி

நட்புக்காக – அமிர்தலிங்கம்.

வில்லன் – ஆதவன்.

இதில் எல்லோரையும் விட அதிகமாக ஸ்கோர் செய்தவர் நாயகியின் அம்மா திவ்யா லெனின் தான். இவர் ராதா என்ற கேரக்டரில் nalla நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆண்களை நம்பி இவர் வாழ்க்கையை தொலைப்பதும் அதன் பின்னர் மகளுக்கு நல்ல ஆண்களை புரிய வைப்பதும் சிறந்த அம்மாவிற்கு உதாரணம்.

இவரையே ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கலாம் இயக்குனர் ஜானகிராமன்.. அழகிலும் நடிப்பிலும் கவருகிறார்.. குறைந்த வயது உடைய இவரை நாயகியின் அம்மாவாக நினைத்து கூட பார்க்க முடியவில்லை..

வில்லன் ஆதவன் தன்னுடைய கேரக்டரில் அசத்தல்.. காதலிக்கும் மூன்று நபர்களில் நாயகி மணக்க ஆசைப்படும் நபராக ராஜ் நிதன்.. முடிந்தவரை நடிக்க முயற்சித்து இருக்கிறார். மற்ற இரண்டு நபர்களும் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்..

திவ்யா கேரக்டரில் நடித்த கெனிக்கு இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பு தேவை.

வழக்கம்போல காதலை எதிர்க்கும் அப்பாவாக வாசு விக்ரம்..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவு – சீனிவாசன்.

எடிட்டிங் – T பன்னீர்செல்வம்

சண்டை பயிற்ச்சி – டைகர் சுகுமார்

இசை – பிருத்திவி

மக்கள் தொடர்பு – சேலம் சரண்

தயாரிப்பு – சுப்ரியா பிலிம்ஸ்

கதை, திரைக்கதை, வசனம்,தயாரிப்பு, இயக்கம் – ஜடையனூர் V. ஜானகிராமன் .

ஆறு கண்களும் ஒரே பார்வை என்ற தலைப்பிலேயே வித்தியாசம் காட்டி இருக்கிறார் இயக்குனர் ஜானகிராமன்.

பொதுவாக காதல் படங்களுக்கு அதே கண்கள்.. கண்கள் மோதிக்கொண்டால் காதல் கண்கள் என்றெல்லாம் இருக்கும்.. ஆனால் இதில் மூன்று ஆண்களின் காதலை சொல்வதாக ஆறு கண்களும் ஒரே பெண்ணை பார்க்கும் பார்வை என்பதால் ஆறு கண்களும் ஒரே பார்வை என்ற நோக்கத்தில் வித்தியாசமான தலைப்பு வைத்திருக்கிறார்.

இது போன்ற படங்களை நிச்சயம் இன்னும் காமெடி கலந்து சொல்லியிருக்கலாம்.. படத்தின் கதையும் திரைக்கதையும் சரியாக கையாளப்பட்டிருந்தாலும் டெக்னிக்கிலாக படம் வீக்காக இருக்கிறது..

முக்கியமாக பின்னணி இசையில் இரைச்சல் அதிகம்… கிரு கிரு கிறங்குறேன் டீ.. சறு சறு சாயுறேன் டீ.. என்ற பாடலில் வரிகளை விட இசை இரைச்சலை அதிகம்..

டி.ஐ. கலர் கரெக்ஷனில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.. அது மட்டுமில்லாமல் ஒளிப்பதிவிலும் கூடுதல் கவனம் வேண்டும்.. நிறைய ஆங்கிள்கள் வைத்து ரசிக்க வைத்திருக்கலாம்..

ஆக.. ஆறு கண்களும் ஒரே பார்வை.. ஆண் பெண் பார்வை..

6 Kangalum orae Paarvai movie review

PT SiR விமர்சனம்.. : ப்ராக்டீஸ் பத்தல சார்

PT SiR விமர்சனம்.. : ப்ராக்டீஸ் பத்தல சார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PT SiR விமர்சனம்.. : ப்ராக்டீஸ் பத்தல சார்

ஸ்டோரி…

கல்வியாளர் தியாகராஜன் நடத்தும் பிரபல கல்வி நிறுவனத்தில் பிடி ஆசிரியராக பணிபுரிகிறார் ஹிப் ஹாப் ஆதி.. பயந்த சுபாவம் உள்ளவர் ஹிப்ஹாப் ஆதி..

இதே பள்ளியில் இங்கிலீஷ் டீச்சராக நாயகி கஷ்மீரா.. இவர்கள் இருவரும் காதலிக்க ஒரு கட்டத்தில் பெற்றோர் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது

அப்போது இளவரசுவின் மூத்த மகள் அனிகா மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் வருகிறது.

இதனையடுத்து ஹிப் ஹாப் ஆதியும் அங்கு செல்கிறார்… ஆனால் அது கொலை அல்ல. அனிகா தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையும் கல்லூரியும் முடிவு செய்கிறது..

எனவே அனிகா மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைக்கும் ஆதி, முதலமைச்சரின் தனி பிரிவிற்கு ஈமெயில் அனுப்புகிறார். எனவே பிரச்சனை தமிழகத்தின் தலைப்புச் செய்தியாகிறது.

அதன் பின்னர் ஆதி என்ன செய்தார்? கொலை என்றால் அதை செய்தது யார்? சட்டத்தின் தீர்ப்பு என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

ஹீரோவாக ஆதி நடிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை ஒரே விதமான ரூட்டை கடைப்பிடிக்கிறார்.. குழந்தைகளுடன் ஆட்டம், நாயகியுடன் டூயட், பெற்றோருக்கு அடக்கமான பையன் என வருகிறார்.. இந்தப் பிடி சார் கேரக்டர்காக உடலை இன்னும் கம்பீரமாக வைக்க முயற்சித்து இருக்கலாம்..

வழக்கமான ரெண்டு பாடல் ஹீரோவுடன் இரண்டு காட்சிகள் என வந்து செல்லும் நாயகியாக கஷ்மீரா.. தேவதர்ஷினி மற்றும் ஹிப் ஹாப் ஆதி பேசும் காட்சியில் எனக்கும் ஒரு வசனம் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டது போல கஷ்மீரா பேசுகிறார்.

அக்கா & தங்கையாக அனிகா & அபி நட்சத்திரா.. கதையை சுழன்று ஓட வைக்கும் அச்சாணியாக அனிகாவின் கேரக்டர்..

இதில் அனிகாவின் தந்தையாக இளவரசு.. அவரது நடிப்பு நம்மை கண்கலங்க வைக்கிறது..

ஆதியின் அம்மாவாக தேவதர்ஷினி அப்பாவாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. ஜோசியரிடம் தன் மகன் ஜாதகத்தை கொடுப்பதற்கு பதில் இவர்களின் ஜாதகத்திலே கொடுத்து மொக்கை வாங்கும் காட்சி சிரிப்பலை..

எல்லா இடத்திலும் சிறு பெண்கள் முதல் வயதானவரை எல்லா பெண்களும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்ற காட்சி கண் கலங்கவும் சிந்திக்கவும் வைக்கிறது..

ஒரு காலத்தில் பிரபல நடிகராக இருந்து தியாகராஜன் இந்த படத்தில் பாலியல் டாச்சர் செய்யும் கல்வியாளராக நடித்திருக்கிறார்.. மாணவிகளை டார்ச்சர் செய்யும் கேரக்டரில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது ஆச்சரியம் தான்..

இவர்களுடன் நீதிபதியாக பாக்யராஜ் வக்கீலாக மதுவந்தி, ஆதியின் மாமனாராக வக்கீலாக பிரபு, முனீஸ் காந்த் பாண்டியராஜன் உள்ளிட்டோரும் உண்டு..

வக்கீல்கள் வாதாடுவதை விட கோர்ட்டில் நிறைய வசனங்களை நாயகன் ஆதியே பேசி படத்தை முடிக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

ஹிப் ஹாப் ஆதி இசையில் உருவான 25வது படம் இது.. அதற்காகவே அவர் கூடுதல் சிரமம் எடுத்து இசை அமைத்திருக்கலாம்.. ஒருவேளை நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டாரோ.?

குட்டி பிசாசு என்ற பாடல் இளம் ரசிகர்களை கவரும்.. மற்ற பாடல்கள் அவரது வழக்கமான டியூனில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை பாராட்டுகுரியது.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்.. காட்சிகளை அழகுப்படுத்தி இருக்கிறது..

ரியோ நடித்த நெஞ்சமுண்டு நேர்மை உண்டு படத்த இயக்கிய கார்த்தி வேணுகோபால்தான் இந்த பிடி சார் படத்தை இயக்கியிருக்கிறார்.

யூடியூப் இல் இருந்து அவர் இன்னும் முழுமையாக சினிமாவுக்கு வரவில்லை என்று தோன்றுகிறது.. சில காட்சிகள் யூடியூப் வகையறாக்களில் சேருகிறது..

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடுமையான தண்டனையுடன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.. ஆனால் அந்த கருத்தை முழுவதுமாக அட்வைஸ் ஆக சொல்லாமல் கமர்சியல் கலந்து சொல்லியிருக்கிறார்.. முக்கியமாக காதல் நட்பு மாணவர்கள் கலாட்டா என கலந்து இருக்கிறார்.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக அதை சொல்ல முன்வர வேண்டும்.. சோசியல் மீடியாக்களுக்கு பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்க கூடாது.. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராட வேண்டும்.. காவல் & சட்டத்தின் தீர்வை மட்டுமே நம்பியிருக்க கூடாது எனவும் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

கோலிவுட்டின் பிரபல் நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த பிரம்மாண்ட படத்தை தயாரித்து இருக்கிறார் ஐசரி கணேஷ்.

ஆக இந்த பிடி சார்.. ப்ராக்டீஸ் பத்தல சார்

PT SIR movie review

பகலறியான் விமர்சனம் 3/5.. நைட் ரைடு

பகலறியான் விமர்சனம் 3/5.. நைட் ரைடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பகலறியான் விமர்சனம் 3/5.. நைட் ரைடு

ரிஷிகேஷ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் லதா முருகன் தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்து முருகன் இயக்கி இருக்கும் படம் ‘பகலறியான்’.

வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, வினு பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பகலை அறியாத ஓர் இரவு பறவை என்பது தான் இந்தப்படத் தலைப்பின் பொருள்..

ஓர் இரவில் நடக்கும் இரண்டு கதைகளை இணைத்து ‘பகலறியான்’ படத்தை இயக்கியிருக்கிறார் முருகன்…

ஸ்டோரி…

தந்தையை கொன்று சிறுவயதிலேயே ஜெயில் தண்டனை அனுபவித்தவர் நாயகன் வெற்றி.. வெளியே வந்த பிறகு இவரை நாயகி காதலிக்கிறார்.. ஆனால் முன்னாள் கைதிக்கு பெண் தர மறுக்கிறார் நாயகியின் தந்தை..

எனவே தந்தைக்குத் தெரியாமல் ஓடி சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என காரில் ஏற்றி இரவில் பயணிக்கிறார் வெற்றி.. ஆனால் ஒரு பெண் புரோக்கரிடம் தன் காதலியை விற்று விட துடிக்கிறார்.

இதே சமயத்தில் தன் தங்கையை காணவில்லை என்று என இரவு முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறார் மற்றொரு நாயகன் முருகன்.. தனது எதிரி கும்பல் தான் தங்கையை கடத்தி வைத்திருக்கிறதா என்று எண்ணி அவர்களுடன் மோதுகிறார்..

இந்த இரு கதைகளும் சந்திக்கும் வேளையில் படத்தில் ஒரு கனமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் முருகன்..

கேரக்டர்ஸ்…

ஜீவி & ஜீவி 2 உள்ளிட்ட படங்களில் வெற்றி நாயகனாக வந்த நாயகன் வெற்றி இதிலும் ஒரு கனமான அழுத்தமான கேரக்டரை தேர்ந்தெடுக்கிறார்.. ஆனால் எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான முகபாகனைகளை அவர் இன்னும் எத்தனை காலம் தான் வைத்து கொண்டே இருப்பாரோ? தம் அடித்தும் முறைத்து படத்தை ஓட்டிவிட்டார் நாயகன் வெற்றி.

ஒரே மாதிரியாக கார் கண்ணாடியை பார்த்துக் கொண்டே நாயகியை முறைக்கும் அந்த காட்சிகளை ரிப்பீட் மோடில் ஓட விட்டாரோ இயக்குனர் என தெரியவில்லை.

சைலன்ட் கேரக்டரில் நடித்து வைலன்ட் காட்டி இருக்கிறார் செகண்ட் ஹீரோ முருகன்.. கிளைமாக்ஸ் காட்சியில் இவரது நடிப்பும போற்றும் வகையில் உள்ளது.. அதேசமயம் எல்லாருமே நீண்ட தலை முடி தாடியிடம் வைத்திருப்பதால் யார் எவர்?என்று கன்பியூஷன் ஏற்படுகிறது.

நாயகி அக்‌ஷயா கந்தமுதன் கண்களாலும் உதடுகளாலும் கவனிக்க வைக்கிறார்.. காதலனை நம்பி வந்திருக்கும் நாயகி ஒரு கட்டத்தில் நாயகனின் பிளான் வேறு என்பதை தெரிந்த பின் இவர் கொடுக்கும் ரியாக்ஷன் செம ஆக்டிங்..

இதுவரை நாம் பார்க்காத வித்தியாசமான கேரக்டரில் காமெடியன் சாப்ளின் பாலு நடித்திருக்கிறார்.. பெரும்பாலும் இவரைப் போன்ற முன்னாள் காமெடியன்கள் டான் ஹீரோக்களுக்கு ஆலோசகராக வருவார்கள்.. இவரும் அதற்கு விதிவிலக்கல்ல!

போலீசாக நடித்திருக்கும் சாய் தீனா-வின் கேரக்டர் வேஸ்ட்.. இவருடன் வரும் மற்றொரு போலீஸ் ஓவர் ஆக்டிங்.. இந்த சீன்களை வெட்டி இருக்கலாம்..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் அபிலாஷின் கேமரா இரவு வெளிச்சத்தில் காட்சிகளை ரம்யமாக்கி இருக்கிறது..

விவேக் சரோவின் இசையில் பின்னணி இசை காட்சிகளை திரில்லாக கொண்டு செல்கிறது.. பாடல்கள் ஓகே ரகம்… படத்தொகுப்பாளர் குரு பிரதீப் தன் பணியில் நேர்த்தி..

2வது நாயகனாக நடித்திருக்கும் முருகன் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. இவரது தோற்றம் கரடு முரடு என்றாலும் வாய் பேச முடியாதவராக நம்மை கவனிக்க வைக்கிறார்.. முக்கியமாக நடிப்பில் நம்மை பேச வைக்கிறார்..

மாநகரம் மற்றும் பவுடர் ஆகிய படங்கள் ஓர் இரவில் நடக்கும் கதையை மையப்படுத்தி இருக்கும்.. அந்த பாணியில் இந்த படமும் வந்திருக்கிறது.

ஆனாலும் இடைவேளை வரை காட்சிகள் கன்ப்யூஷன் மோடில் இருக்கிறது.. கேரக்டர் விளக்கம் கொடுத்து படத்தை தொடங்கி இருக்கலாம்..

இறுதியில் எதிர்பாராத திருப்புமுனையை கொடுத்து நம்மை கொஞ்சம் கலங்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனர்.. கிளைமாக்ஸில் எந்த ஒரு வசனத்தை வைக்காமல் ஓர் அழகான காதல் புரிதலை காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் முருகன்..

ஆக பகலறியான்.. நைட் ரைடு

Pagalariyaan movie review

சாமானியன் விமர்சனம் 3.5/5.. நம்ம ஊரு கடன்காரன்

சாமானியன் விமர்சனம் 3.5/5.. நம்ம ஊரு கடன்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாமானியன் விமர்சனம் 3.5/5.. நம்ம ஊரு கடன்காரன்

ஸ்டோரி…

ராமராஜன் – ராதாரவி – எம் எஸ் பாஸ்கர் இவர்கள் மூவரும் பால்ய சிநேகிதர்கள்.. ராதாரவி சென்னையில் வசிக்க ராமராஜன் எம் எஸ் பாஸ்கர் மதுரை ஒரு கிராமத்தில் வசிக்கின்றனர்.

ஒரு நாள் சென்னைக்கு தன் நண்பனை காண ராமராஜன் எம் எஸ் பாஸ்கர் செல்கின்றனர்.. அங்குள்ள பிரபல வங்கிக்கு 35 லட்சம் பணத்தை டெபாசிட் செய்ய இருப்பதாக சொல்லி வங்கிக்கு செல்கிறார் ராமராஜன்.

அங்கு சென்ற பின்னர் தான் அந்த வங்கி அதிகாரிகளை பிணைய கைதிகளாக வைத்து தன்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பாம் வெடிக்க வைத்து கொன்று விடுவேன் என மிரட்டுகிறார்.

இதே நேரத்தில் போஸ் வெங்கட்டின் மனைவி வினோதினி & மகளை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகிறார் எம் எஸ் பாஸ்கர்.

அதே நேரத்தில் மற்றொரு வீட்டில் கர்ப்பிணியான ஸ்மிருதி வெங்கட்டை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகிறார் முஸ்லீம் பாய் ராதாரவி.

இந்த மூன்று நண்பர்களும் ஒரே நேரத்தில் இப்படி நடத்திக் கொள்வதன் நோக்கம் என்ன? இவர்கள் யார்? வங்கி அதிகாரிகளை மிரட்ட என்ன காரணம்? அதிகாரிகள் செய்த தவறு என்ன? நினைத்ததை இந்த சாமானியர்கள் சாதித்தார்களா என்பது தான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

Ramarajan, Radharavi, MS Bhaskar, Boss Venkat, Mime Gopi, KS Ravikumar, Saravanan Suppaiyah, Naksha Saran, Leo Siva Kumar, Vinothini, Deepa Sankar, Smruthi Venkat, Apranathi, Aranthangi Nisha, Saravanan Sakthi, Gajaraj, Mullai, Arul Mani, Kodandam, Supergood Subramani, and other’s.

14 வருடங்களுக்குப் பிறகு ரீஎண்ட்ரி கொடுக்கும் ராமராஜன் வழக்கமான கதைக்களத்தை எடுக்காமல் இந்த 2K கிட்ஸ்களுக்கு பிடித்த கதையை எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் விதமாக நடித்திருக்கிறார்.

எக்ஸ் ஆர்மி என்ற பிளாஷ்பேக் காட்சிகள் அவருக்கு பொருந்தவில்லை.. கொஞ்ச நேரம் ஓவியமாக காணப்பட்டாலும் அந்த காட்சிகளில் அவரது சிகை அலங்காரம் ஆர்மிக்கு ஒட்டவில்லை

முக்கியமாக 60 வயதானாலும் ஜோடி இல்லாமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ராமராஜனை பாராட்டலாம்.

மைம் கோபி, கோதண்டம், போஸ் வெங்கட் கே எஸ் ரவிக்குமார், சரவணா சுப்பையா உள்ளிட்டோர் கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு.. அதிலும் மெயின் வில்லன் மைம் கோபி மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இளம் காதலர்களாக லியோ சிவகுமார் மற்றும் நக்ஷாசரன்.. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் ஐடி வேலை தம்பதியர்களாக வாழ்ந்திருக்கின்றனர்.. வீட்டுக் கடன் நம் உயிரை குடிக்கும் ஆயுளை விழுங்கி விடும் என்பதை எச்சரிக்கை பதிவாக கொடுத்திருக்கின்றனர்.

ஸ்மிருதி வெங்கட் அழகான நாயகியாகவும் கண் கலங்க வைக்கும் கர்ப்பிணியாகவும் நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நியூஸ் ரிப்போர்ட்டர் அபர்ணா கொஞ்ச நேரம் என்றாலும் யார் இந்த ஆங்கர் என கவனிக்க வைக்கிறார்..

இவர்களுடன் வினோதினி, தீபா சங்கர், அறந்தாங்கி நிஷா, சரவண சக்தி, சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் உள்ளனர்.

டெக்னீசியன்ஸ்…

Written & Directed by
R RAHESH

Producer : V Mathiyalagan

Banner : Etcetera Entertainment
Music : Mestro Illayarajaa
Lyrics: Mestro Illayarajaa
Singers : Mestro Illayarajaa, Karthik, Sharreth
Cinematographer : C Arul Selvan
Editor : Ram Gopi
Story : V Karthik Kumar
Costume : SP Sugumar
Choreographer: Vishnuvimal
PRO : A. John

1980 களில் ரஜினி கமலுக்கு போட்டியாக கருதப்பட்டவர் ராமராஜன்.. இவரது படங்களும் சரி பாடல்களும் சரி சூப்பர் ஹிட். அதற்கு முக்கிய காரணம் இளையராஜா.. தற்போது இவர்களின் கூட்டணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது.

அந்தக் கால அளவு இசை ரசிக்க வைக்கவில்லை என்றாலும் ராமராஜன் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இளையராஜா.

வழக்கம்போல பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.. இந்த விறுவிறுப்பான பேங்க் திரில்லர் கதைக்கு பாடல்கள் தேவை இல்லை என்றாலும் இளையராஜா இணைந்திருப்பதால் இரண்டு பாடல்களை வைத்திருக்கிறார் இயக்குனர் ராகேஷ்.

அருள் செல்வம் ஒளிப்பதிவில் பேங்க் மற்றும் கிராமத்து காட்சிகள் அருமை. இடைவேளை முன்பு வரை வங்கியை மையப்படுத்தி காட்சி அமைப்புகள் உள்ளது. அதற்கு ஏற்ப கேமரா ஆங்கிள்களை வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்..

மேலும் ராமராஜனின் கிராமத்து ரசிகரை கவரும் வகையில் ஆடு மாடுகளை காட்டி அதற்குப் பின்னணியில் செண்பகமே செண்பகமே பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளனர்..

ராம் கோபி என்பவர் எடிட்டிங் செய்திருக்கிறார்.. இடைவேளை வரை காட்சிகள் விறுவிறுப்பாக செல்கிறது.. ராமராஜனின் மகள் & எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆகியோரின் பிளாஷ்பேக் காட்சிகளில் கத்திரிப் போட்டு இருக்கலாம்..

முக்கியமாக ராமராஜனின் ஒப்பனையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. அதுபோல இந்தியன் ஆர்மி காட்சிகளில் ராமராஜனின் உருவமும் தோற்றமும் பொருந்தவில்ல..

கிராமத்து ராமராஜனை சிட்டியை மிரட்டும் ராஜனாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ராகேஷ்.. ராமராஜன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஆங்காங்கே சொர்க்கமே என்றாலும்… செண்பகமே செண்பகமே… உள்ளிட்ட பல பாடல்களை ஒலிக்கவிட்டு இருக்கிறார் இயக்குனர்.

வங்கி வீட்டுக் கடனால் அவதிப்படும் சாமானிய மக்களின் வலியை எதார்த்தமாக சொல்லி இருக்கிறார்.. 40 வருடங்களுக்கு முன்பு வங்கியில் லோன் எடுத்தாலும் மக்கள் சந்தோஷமான வாழ்வை அனுபவித்தனர்.. ஆனால் தற்போது கார்ப்பரேட் வங்கிகளால் லோன் பெறும் ஒவ்வொருவரும் அல்லோல் படும் வலியை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார்.

சாதாரண பெட்டிக்கடையில் கூட கடன் அன்பை முறிக்கும் என்ற வாசகம் இருக்கும். ஆனால் வங்கியில் அப்படி எந்த ஒரு வாசகம் இடம் பெறுவதில்லை என்பதையும் வங்கி லோன் பத்திரத்தில் முக்கிய குறிப்புகளை கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பதிவிட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்..

ஆக.. இந்த சாமானியன்.. லோன் வாங்கும் சாமானியர்களுக்கு எச்சரிக்கை பதிவு..

ராமராஜன் பாணியில் சொல்வதென்றால் நம்ம ஒரு கடன்காரன்..

Ramarajans Saamaniyan movie review

More Articles
Follows