காடுவெட்டி திரை விமர்சனம்

காடுவெட்டி திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காடுவெட்டி திரை விமர்சனம்

ஸ்டோரி…

நகரத்தில் நடக்கும் காதலுக்கும் கிராமத்தில் நடக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்..

நகரத்தில் வாழும் காதல் ஜோடிக்கு பெரும்பாலும் பிரச்சனைகள் இல்லை.. அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் படிப்பறிவு இவை இரண்டும் தான் பெற்றோர்களால் கருதப்படும்.

ஆனால் அதே காதல் ஜோடி ஒருவேளை கிராமத்தில் வசித்து வந்தால் அவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனைகள் சமூகத்தில் ஏற்படும் என்பதுதான் இந்த படத்தின் கதை.

இத்துடன் நடுநாட்டான் ஆர் கே சுரேஷ் செய்யும் சமூக சேவைகள்.. கிராமத்து மக்களுக்கு அவர் உறுதுணையாக நிற்கும் ஊர் தலைவன்.. ஒரு கட்சித் தலைவனின் படைத் தளபதி என்ற கமர்சியல் கலந்து இந்த காடுவெட்டியை தந்திருக்கிறார் இயக்குனர் சோலை ஆறுமுகம்.

கேரக்டர்ஸ்…

ஆர். கே. சுரேஷ் – குரு
சங்கீர்த்தனா – தாட்சாயினி
விஷ்மியா – ஆர். கே. சுரேஷ் மனைவி
சுப்ரமணியசிவா – ராஜமாணிக்கம்
அகிலன்.
ஆடுகளம் முருகதாஸ்
ஆதிரா
சுப்ரமணியன்

பல படங்களில் நாயகனாகவும் வில்லனாகவும் மிரட்டிய ஆர் கே சுரேஷ் இதில் கதையின் நாயகனாக மிரட்டி இருக்கிறார்.. முறுக்கு மீசை கம்பீரத் தோற்றம் குரு கேரக்டருக்கு கெத்து காட்டி இருக்கிறார் ஆர் கே சுரேஷ்..

ஒரு சில காட்சிகளில் கதை ஓட்டத்திற்கு வசனங்கள் உதவினாலும் கதைக்கு மீறிய வசனங்கள் கட்சி சார்பாகவே திணிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது..

ஆர் கே சுரேஷின் மனைவியாக நாயகியாக விஷ்மியா.. கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்து இருக்கிறார்.

காதலியாக சங்கீர்த்தனா.. கிராமத்திலும் நகரத்திலும் இவரது கேரக்டர் பலிச்சிடுகிறது..எமோஷன் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்..

சுப்ரமணிய சிவா.. மற்ற நடிகர்களை காட்டிலும் இவரது தோற்றத்திலே மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.. சிட்டி டாடி கிராமத்து அப்பா என இரு தோற்றங்களிலும் அடையாளம் தெரியாத அளவிற்கு மிகை இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அகிலன்,ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா &
சுப்ரமணியன் ஆகியோரது கேரக்டர்கள் கவனம் பெறுகின்றது..

டெக்னீசியன்ஸ்…

இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் இசை – வணக்கம் தமிழா சாதிக்.
ஒளிப்பதிவு – M. புகழேந்தி
பாடல்கள் – மணிகண்டன் ப்ரியா, பா. இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல்.
கலை இயக்கம் – வீரசமர்
எடிட்டிங் – ஜான் ஆப்ரகாம்
ஸ்டண்ட் – கனல் கண்ணன்
நடனம் – தினேஷ்.
தயாரிப்பு மேற்பார்வை – மாரியப்பன் கணபதி.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – மஞ்சள் ஸ்கிரீன்ஸ்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – சோலை ஆறுமுகம்.

சிட்டி காதலை விட கிராமத்து காதல் ரசிக்கவும் வைக்கிறது.. சிட்டி காதலில் சினிமாத்தனமும் கிராமத்து காதலில் யதார்த்தமும் நிறைந்திருக்கிறது..

சாதிக் இசையமைப்பாளராக அறிமுகம்.. பாடல்களும் பாடல் வரிகளும் ரசிக்க வைக்கிறது…சாமி பாடல் ஒரு சாதி பிரிவினரின் தேசிய பாடலாக மாறும்.

ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை மிரட்டல்.. சில இடங்களில் ஓவர் பில்டப் ஆகவும் அமைந்துவிட்டது.

சிட்டி சப்ஜெக்ட் கிராமத்து மண்வாசனை என இரண்டுக்கும் ஏற்ப அருமையாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் புகழேந்தி..

தயாரிப்பு : மஞ்சள் ஸ்கிரீன்ஸ் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம் ஜி.ராமு, சோலை ஆறுமுகம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

காடுவெட்டி படத்தின் டைட்டில் கார்டு வரும்போது பல எச்சரிக்கை வசனங்கள் இடம்பெறுகிறது.. கதை கதாபாத்திரங்கள் கற்பனை.. யாரையும் குறிப்பிடுவனல்ல என சொல்லப்பட்டாலும் முக்கியமாக பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் ஆகிய கட்சித் தலைவர்கள் நினைவுபடுத்துவதாக உள்ளது

முக்கியமாக காடுவெட்டி கதாபாத்திரம் குருவை நினைவுபடுத்தும் கேரக்டராகவே அமைந்திருக்கிறது..

முக்கியமாக படத்தில் ஏகப்பட்ட வசனங்கள் கட் செய்யப்பட்ட மியூட் செய்யப்பட்டுள்ளது.. வசனங்கள் நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும் என சென்சாரில் கட் செய்யப்பட்டுள்ளது.

நாடகக் காதலை வளர்க்கும் ஒரு கட்சி பிரிவினரையும் சாடியிருக்கிறார் காடுவெட்டி..

ஆக காடுவெட்டி.. சாதி கட்சி பிரச்சாரம்..

Kaaduvetti movie review

Amigo Garage அமீகோ கேரேஜ் விமர்சனம்

Amigo Garage அமீகோ கேரேஜ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amigo Garage அமீகோ கேரேஜ் விமர்சனம்

ஸ்டோரி…

ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் எப்படி கேங்ஸ்டர் ஆக ஒரு மாறுகிறான்..

சுருக்கமாக சொல்லப்போனால் தனுஷ் நடித்த பொல்லாதவன் & கார்த்தி நடித்த நான் மகான் அல்ல என்ற படங்கள் பாணியில் வந்த படம்தான் ‘அமிகோ கேரேஜ்’.

அமிகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் நண்பர்கள் என்று அர்த்தம்.

பள்ளி வாழ்க்கையை ஜாலியாக என்ஜாய் செய்யும் மகேந்திரன் டியூஷன் டீச்சர் மகளை காதலிக்கிறார். அந்தப் பெண் இவளை விட மூத்தவர் என்பதால் அந்த லவ் பிரேக் அப் ஆகிறது..

ஒரு கட்டத்தில் கல்லூரி படிப்பு முடித்த பின் வேலைக்கு செல்கிறார் அங்கு நாயகி ஆதிரா ராஜுடன் காதல் ஏற்படுகிறது.

இந்த சூழ்நிலையில் அமீகோ கேரேஜ் நடத்தும் வி எம் சுந்தர் உடன் இவருக்கு நெருக்கம் ஏற்படுகிறது. அப்போது வேறு ஒரு கேங்ஸ்டர் உடன் இவருக்கு மோதல் ஏற்படுகிறது..

இதனால் வழக்கம் போல காதலுக்கும் இடைஞ்சல் வருகிறது.. இதன் பிறகு நாயகன் மஹேந்திரன் என்ன செய்தார்.?என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

‘Master’ Mahendran as Rudhra
GM Sundar as Anand
Athira as Tamil
Deepa Balu as Ramya
Dasarathi as Guru
Muralidharan Chandran as Muthu
Sirikko Udhaya
Madan Gopal
Sakthi Gopal
Murali Kamal

குழந்தை நட்சத்திரமாக நடித்து மாஸ்டர் மகேந்திரன் என்ற பெயர் பெற்றவர் நாயகன்.. மாஸ்டர் படத்தில் மாஸ்காட்டி இருந்தார்.. ருத்ரா என்ற கேரக்டரில் இந்த படத்தில் மகேந்திரன்.. ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டி இருக்கிறார்.

பள்ளி மாணவன் வேடத்தில் பெருந்தாடியுடன் வருகிறார்.. அரும்பு மீசை முளைக்கு காலத்தில் அடர்த்தியான தாடி ஏன்.? இதைக் கூடவா ஒரு நடிகருக்கு சொல்ல வேண்டும்..?

இரண்டு நாயகிகள் இருந்தும் மகேந்திரனிடம் ரொமான்ஸ் இல்லை.. தந்தையிடம் சென்டிமெண்டாக பேசும் காட்சியில் எமோஷனல் ரியாக்ஷன் இல்லை..

பத்து நிமிடங்கள் வந்து செல்லும் நாயகியாக தீபா பாலு.. அழகாக வருகிறார்.. ஒரு பாடலுக்கு மட்டும் ரசித்து விட்டு செல்கிறார்..

மெயின் நாயகியாக ஆதிரா ராஜ்.. கண்ணழகிலும் கூந்தல் அழகிலும் நம்மை வசீகரித்து விடுகிறார் இந்த மலையாள நடிகை ஆதிரா.. கொஞ்சம் கதைக்கும் கொஞ்சம் டூயட்க்கும் இவர் உதவி இருக்கிறார்.

அமீகோ கேரேஜ் ஓனராக ஜி எம் சுந்தர்.. கொடுத்த பாத்திரத்தில் கச்சிதம்..

தசரதி மற்றும் முரளிதரன் இருவரும் மிரட்டல் வில்லன்ஸ்.. இவர்களின் லுக்கே கெத்து தான்..

இவர்களுடன் சிரிக்கோ உதயா, சுப்ரமணியம், மதன் கோபால், சக்தி கோபால் உள்ளிட்டோரும் உண்டு.

டெக்னீசியன்ஸ்…

Produced By – MURALI SRINIVASAN (PEOPLE PRODUCTION HOUSE)
Co-Produced By RAMACHANDRAN PERUMAL, PRIYA KATHIRAVAN, ASWIN KUMAR VG.
Director: PRASANTH NAGARAJAN
Editor: RUBEN – CS PREMKUMAR
Dop: VIJAYAKUMAR SOLAIMUTHU
Music: BALAMURALI BALU
Art: SRIMAN BALAJI
Stunt: DON ASHOK
Lyrics: Ku. KARTHIK
PRO: SATHISH (AIM)

An Action-Reaction Jenish Release

படத்தின் திரைக்கதையிலும் கேரக்டர்கள் தேர்விலும் பல சிக்கல்கள் இருந்தாலும் இந்த படத்தை தாங்கி நிறுத்தி இருப்பது ஒளிப்பதிவும் பாடல்களும் இசையும் தான்.

ஒளிப்பதிவாளர் விஜயகுமார் சோலைமுத்து.. கேரேஜின் காட்சிகள் கண்களுக்கு விருந்து..

பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் சூப்பர்.. தேவா பாடிய பிரண்ட்ஷிப் சாங் இனி பல நண்பர்களின் காலர் டியூனாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை. ஜிவி பிரகாஷ் பாடிய காரிருள் பாடல் ரசிக்க வைக்கிறது..

பாடல்கள் எழுதிய கு கார்த்திக்கின் வரிகளுக்கு கை கொடுத்து பாராட்டலாம்..

கலை இயக்குனர் ஸ்ரீமன் பாலாஜி கலைப்பணிகளை கவனித்திருக்கிறார்.

பிரசாந்த் நாகராஜன் என்ற அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நடிகர்கள் தேர்விலும் கவனம் செலுத்தி இருக்கலாம்..

நாயகனுக்கும் வில்லனுக்கும் ஏற்படும் மோதல்கள் கொஞ்சம் கூட பிரச்சினையாக தெரியவில்லை.. ஒரு வில்லன் நாயகனை பழி வாங்கவோ அல்லது நாயகன் வில்லனை பழிவாங்கவோ போதுமான காரணங்கள் இல்லை..

நார்மலான இளைஞன் கேங்ஸ்டர் ஆக மாறும் கதையை இன்னும் குடும்ப செண்டிமெண்ட் உடன் சொல்லி இருந்தால் இந்த கதை எமோஷனலாக ரசிகர்களுடன் கனெக்ட் ஆகி இருக்கும்..

Amigo Garage movie review

GAAMI காமி விமர்சனம்

GAAMI காமி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GAAMI காமி விமர்சனம்

Gaami என்றால் Seeker என்று பொருள்.. இந்த இயக்குனரின் தேடல் என்ன.? இந்தத் திரை கதாபாத்திரங்களின் தேடல் என்ன என்பதுதான் காமி.

வித்யாதர் காகிதா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் நடிப்பில் உருவான அட்வென்சர் த்ரில்லர் தான் இந்த `காமி’ (Gaami).

ஸ்டோரி…

ஷங்கர் (விஸ்வக் சென்) அகோரியாக வாழ்ந்து வருகிறார்.. இவருக்கு மிகவும் அரிதான ஹாபிடோபியா எனும் மனித தொடுகை ஒவ்வாமை பாதிப்பு இருக்கிறது.

அதாவது மனிதர்களைத் தொட்டாலே இவருக்கு ஆகாது.. இவரது நோயைக் குணமாக்க ‘மாலிபத்ரா’ என்ற வித்தியாசமான ஒளிரும் காளான்கள் தேவைப்படுகிறது.. அது இமயமலை பிரதேசத்தில் துரோனகிரி எனும் பகுதியில் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என்பதை அறிந்து அங்கே பயணிக்கிறார்.

அந்த ஒளிரும் காளானை கண்டறிந்து கைப்பற்றினால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள்.. இவருடன் பெண் மருத்துவர் ஒருவரும் அங்கு செல்கின்றனர்.

இந்தக் கதை ஒருபுறம் இருக்க மற்றொரு இரண்டு கிளை கதைகள் உள்ளன..

ஒரு கிராமத்தில் தேவதாசியாக வாழ்கிறார் அபிநயா. இவருக்கு ஒரு அழகு மகள்.. அந்த கிராமத்தின் நடைமுறைப்படி (??!!) அபிநயாவின் மகளும் தேவதாசியாக தொழிலுக்கு வரவேண்டும் என்கின்றனர். ஆனால் தன் மகளைக் காப்பாற்ற போராடுகிறார் அபிநயா.. மகளை தப்பிக்க வைக்க சில முயற்சிகளை மேற்கொள்கிறார்..

அடுத்த கதையில்…

சிடி 333 எனப் பெயர் சூட்டப்பட்ட ஒரு இளைஞன் சிறையில் அடைக்கப்படுகிறான்.. சட்ட விரோத மூளை அறுவை ஆய்வுக் கூடத்தில் எலிபோல் அடைத்து வைக்க துன்புறுத்தப்படுகிறான்.

எனவே அங்கிருந்து தப்பிக்க ‘Shawshank Redemption’ பாணியில் பல முயற்சி எடுக்கிறான்.

இந்த இரு சிறார்களுக்கும் சங்கருக்கும் என்ன தொடர்பு? என்பதை ‘நான் லீனியர்’ வழியே சொல்லுகிறது இந்த படம்.

கேரக்டர்ஸ்…

விஸ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெட்டா, மொஹமத் சமத், தயானந்த் ரெட்டி மற்றும் பலர்.

நடிகர் விஸ்வக் சென்.. இவரது கேரக்டர் வலுவாக அமைக்கப்பட்டிருக்கிறது.. அதற்கு ஏற்ப பனிமலையில் இவர் படும் சிரமம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

இமயமலை செல்லும் சாந்தினி செளத்ரி கேரக்டர் ரசிக்க வைத்தாலும் சில லாஜிக் மீறல்கள் உள்ளது.. பணிப்படர்ந்த அந்தப் பகுதியில் இவர் அசால்டாக கையுறை அணியாமல் செல்வதை நம்ப முடியவில்லை.. ஒரு காட்சியில் பனிமலையில் கயிறு அறுந்து இவர் விழும்போதும் முகத்தில் கீறலில்லை தலைமுடியில் ஒரு துளி கூட பனியில்லை..

அபிநயாவின் கேரக்டர் கண்கலங்க வைக்கும்.. வேண்டாத வெறுப்பாக தேவதாசி தொழில் ஈடுபட்டு தன் மகள் இதில் சிக்கிய விடக்கூடாது என்பதற்காக அவர் படும் அவஸ்தைகளையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

உமா என்ற சிறுமியின் மருத்துவ குறைபாடு.. அது என்னவென்று தெரியாமல் நம் குழம்பி இருக்கும் வேளையில் திரைக்கதை திருப்புமுனை கொடுத்து சிறுமி கேரக்டரை இளைஞனோடு இணைத்திருக்கிறார் இயக்குனர்.. இதன் மூலமாக நாயகன் கேரக்டரிலும் நமக்கான தீர்வு கிடைக்கிறது..

CT -333 என்ற கேரக்டரில் நடித்த மொஹமத் சமத் மனதில் பதிகிறார்.. ஒரு சிறை கைதியின் அடைபட்ட உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்..

டெச்னீசியன்ஸ்…

இசையமைப்பாளர் – நரேஷ் குமரன்

பாடல்கள் – ஸ்வீகர் அகஸ்தி

ஒளிப்பதிவாளர் – விஸ்வந்த் ரெட்டி செல்லுமலா

இயக்குனர் – வித்யாதர் காகிதா

தயாரிப்பு – கார்த்திக் கல்ட் கிரியேஷன்ஸ்

முதலில் மெதுவாக நகரும் திரைக்கதை ஷங்கருடன் ஜான்வி இணைந்த பின்னர் தான் படத்தின் கதை என்ன என்பதை மெல்ல மெல்லமாக நம்மால் உணர முடிகிறது..

பணிப்படர்ந்த இமயமலை.. இருள் சூழ்ந்த சிறைச்சாலை… தேவதாசி வாடும் கிராமம் என மூன்று கதைகளத்தையும் தன்னுடைய கேமராவில் அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஸ்வந்த் ரெட்டி செல்லுமலா.

சொல்லப்போனால் இமயமலைக்கு நம்மை அழைத்துச் சென்ற அனுபவத்தை தந்திருக்கிறார் இவர்.

இசையமைப்பாளரின் நரேஷ் குமரனின் பின்னணி இசை நம்மை ஈர்க்கச் செய்கிறது.. ஒரு இதமான அனுபவத்தை தந்திருக்கிறது . ஸ்வீகர் அகஸ்தியின் பாடல்கள் சிறப்பு..

ஓர் ஆய்வுக்கூடத்தில் நடக்கும் ஆராய்ச்சியில் என்ன மாதிரியான ஆராய்ச்சி இதனால் என்ன பலன் என்பதற்கான விளக்கத்தை இன்னும் விரிவாக கொடுத்திருக்கலாம்..

மூன்று கதைகளை இணைக்க வேண்டும் என்பதற்காக படாத பாடு பணியை செய்து இருக்கிறார் எடிட்டர்.. ஆனால் இது நம்மையும் சோதிக்கிறது.. ஒரு திரைக்கதை வேகமாக பயணிக்கிறது.. மற்றொரு திரைக்கதையோ அழுத்தமான உணர்வுடன் பயணிக்கிறது இரண்டையும் இணைக்கும் போது அதற்கான கால அவகாசம் இல்லை என்பதால் நம்மோடு ஒன்ற மறுக்கிறது..

இந்த மூவரின் தேடல் தான் என்ன என்பது அறிய நாம் குழம்பி கொண்டு இருக்கும் வேலையில் அதற்கான விளக்கத்தை கிளைமாக்ஸில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்..

ஓர் அறிமுக இயக்குனர் இப்படியான வித்தியாசமான முயற்சி எடுத்துள்ளதை பாராட்டலாம்.. ஆனால் அதே சமயம் விறுவிறுப்பாக கொடுத்து இருந்தால் இந்த காமியுடன் இணைந்து பயணித்திருக்கலாம்.

Gaami movie review

அரிமாபட்டி சக்திவேல் பட விமர்சனம்

அரிமாபட்டி சக்திவேல் பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரிமாபட்டி சக்திவேல் பட விமர்சனம்

திருச்சி அருகே உள்ள அரிமா பட்டியில் நடக்கும் காதல் சாதி கதை தான் இந்த படம்.. இந்த ஊரில் இன்னும் சாதிய காதலுக்கு எதிர்ப்பு இருக்கிறது என்பதை சொல்ல வந்திருக்கும் படமே இது..

ஸ்டோரி…

சாதி படம் என்றாலே நாயகன் கீழ் சாதி நாயகி மேல் சாதி.. வழக்கம்போல நாயகி வீட்டில் எதிர்ப்பு கிளம்பும்.. அவரது அண்ணனோ தந்தையோ எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.. இந்த ஃபார்முலாவில் இருந்து கொஞ்சமும் தடம் மாறாமல் வந்திருக்கும் படம் தான்..

நாயகன் பவன். நாயகி மேக்னா எலன்.. இருவரும் சிறுவயது முதலில் காதலிக்கிறார்கள்.

வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் நாயகி டீச்சர் ஆகிறார். நாயகன் சென்னையில் இயக்குனராக வேண்டும் என வேலை தேடி அலைகிறார்..

இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிய வர நாயகிக்கு மணமுடிக்க ஆசைப்படுகிறார் அவரது அண்ணன் பிர்லா போஸ். நாயகனின் கீழ் சாதிக் காதலுக்கு முறுக்கிக் கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

ஆனால் நாயகனோ இயக்குனர் ஆன பின்னர் தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதமாக நிற்கிறார்.. அதன் பின்னர் நாயகி என்ன செய்தார்.? காதலர்கள் இணைந்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

நாயகன் பவன்.. இவர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கூட.. சக்திவேல் பணி புரியும் அலுவலகத்தில் ஒருவர் நிச்சயம் நீ பெரிய ஆளாகி அரிமாபட்டியின் அடையாளமாக வருவார் என்கிறார்.. ஓஹோ கதை வேறு தளத்திற்கு போகிறது என்று நாம் நினைத்தால் வழக்கம்போல எதையும் சாதிக்கவில்லை நாயகன் பவன்..

நாயகனுக்கு அழுகை & ரொமான்ஸ் வரவில்லை ஆக்ஷனில் மட்டும் கைத்தட்டல் வாங்கி விடுகிறார்..

நாயகி மேக்னா ஹெலன்.. இவரது கண்கள் நம்மை என்றென்றும் கவரும்.. இரண்டு புருவங்களை இணைக்கும் அவரது அந்த புருவ முடி கூட அழகுதான்.. கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.

ஹீரோவின் அப்பாவாக சார்லி.. வெள்ளந்தி மனிதராக நின்று ஊர்முன் அசிங்கப்படுவதும் மகனுக்காக தவிப்பதும் என அப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார்..

நாயகியின் அண்ணனாக பிர்லா போஸ்.. வில்லத்தனம் கலந்த நடிப்பில் கவர்கிறார்..

அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி.. ஊரில் முக்கிய புள்ளியாக ஜெயச்சந்திரன்.. பஞ்சாயத்து தலைவராக சூப்பர் குட் சுப்ரமணி.. இதில் சேதுபதி ஜெயச்சந்திரன் கம்பீர தோற்றத்துடன் கெத்து காட்டி இருக்கிறார்..

டெக்னீசியன்ஸ் …

ஒளிப்பதிவாளர் ஜெ பி மேன்.. இவரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.. வழக்கமான சாதியை காதல் கதை என்றாலும் இவரின் ஒளிப்பதிவு படத்துடன் நம்மை ஒன்றை வைக்கிறது..

மணி அமுதவன் இசையில் காதல் பாடல்களும் கவர்கிறது.. அந்தோணி தாசன் பாடிய ‘வண்ண வண்ண இறகு நீ’ பாடல்… மீண்டும் கேட்கும் ரகம்..

சாதிய காதல்.. ஊர் பஞ்சாயத்து.. ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது.. ஊருக்கு கட்டுப்படும் அப்பாவி தந்தை என வழக்கமான காதல் கண்ணீர் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் கந்தசாமி..

1980 – 90களில் பார்த்த காதல் கதை தான் என்றாலும் இன்றளவும் இந்த கொடுமை அரிமாபட்டியில் நடக்கிறது என்பதை ஆணித்தரமாக ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறார் இயக்குனர்.

படம் முடிந்ததும் எண்டு கார்டில் இன்றும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் ஊருக்கு திரும்ப முடியாதவர்கள் என பலரது புகைப்படங்களையும் காட்டி நிரூபிக்கிறார்.

Arimapatti Sakthivel movie review

கார்டியன் பட விமர்சனம்

கார்டியன் பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்டியன் பட விமர்சனம்

பேய் படங்கள் என்றாலே உலக சினிமாவில் எழுதப்படாத ஒரு டெம்ப்ளேட் இருக்கும்.. ஹீரோ ஹீரோயின் இருப்பார்கள்.. அவர்களை அமானுஷ்ய சக்திகள் வந்து பயமுறுத்தும்.. அதன் பின்னர் அந்த பேய்க்கு ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கும்.

அதை தொடர்ந்து பழிவாங்கல் கதை இருக்கும்.. இந்த டெம்ப்ளேட்டில் எந்த ஒரு சிறு குறையும் இல்லாமல் வந்திருக்கும் படம் தான் ஹன்சிகா நடித்த ‘கார்டியன்’.

ஸ்டோரி…

குழந்தை பருவம் முதலிலே அதிர்ஷ்டம் இல்லாதவர் என்ற பெயருடன் வளர்கிறார் ஹன்சிகா.. இவர் ஆசைப்படுவது எதுவும் கிடைக்காது.. அப்படியே கிடைத்தாலும் நிலைக்காது.. எனவே இவரை அதிர்ஷ்டம் இல்லாதவர் (அன்லக்கி) என்று அவரது தோழிகளும் அழைக்கின்றனர்.

கட்டிடத் தொழிலில் இன்டீரியர் டிசைனிங் முடித்த ஹன்சிகா ஒரு இடத்தில் வேலைக்கு சேர்கிறார் அங்கே அவருக்கு சிறு விபத்து ஏற்பட அந்த ரத்தம் ஒரு கல்லின் மீது படுகிறது.. அதனைத் தொடர்ந்து அவர் நினைத்தது எல்லாம் நடக்கிறது..

இவர் ஒருவரை திட்டும் போது தொலைந்து போ செத்துப் போ என்று சொன்னால் கூட அவர் இறந்து விடுகிறார்.. இதனால் அதிர்ச்சி அடையும் ஹன்சிகா ஒரு டாக்டரை அணுகி ஆலோசனை கேட்கிறார்..

அப்போதுதான் அவர் ஹன்சிகாவின் உடலில் ஒரு சக்தி நுழைந்திருப்பது தெரிய வருகிறது.. அந்த பேய் நோக்கம் என்ன? அது பழிவாங்க என்ன காரணம்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

அரண்மனை படத்தில் பேயாக வந்து நம்மை அலறவிட்டவர் ஹன்சிகா.. இந்தப் படத்திலும் அந்த அனுபவத்தில் கொஞ்சம் கூடுதலாகவே மிரட்டி இருக்கிறார்..

இடைவேளைக்கு முன்பு கலகலப்பாக துறுதுறுவாக வந்த ஹன்சிகா இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் பயமுறுத்தி இருக்கிறார்.

என்னதான் பேய் படம் என்றாலும் ஹீரோயினுக்கு ஒரு ஜோடி வேண்டும் தானே.. அதற்காக பிரதீப் ராயன் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்.. கொஞ்சம் வந்து ரொமான்ஸ் செய்கிறார்..

நகைச்சுவை என்ற பெயரில் நக்கல் செய்து கலகலப்பு ஊட்டி இருக்கிறார்கள் மொட்ட ராஜேந்திரன் மற்றும் பழைய ஜோக் தங்கதுரை.

தியா (அறிமுகம்) ‘பேபி’ க்ரிஷிதா (அறிமுகம்).. அம்மா மகளாக நடித்த இருவரும் நம்மை ரசிக்கவும் அழவும் வைத்திருக்கிறார்கள். இவர்களின் நடிப்புக்காக இன்னும் பல படங்களில் இவர்களை பார்க்கலாம்..

வில்லன்களாக சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, அபிஷேக் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர்..

இவர்கள் ஆடிட்டர் தியாவை கொலை செய்ய போதுமான காரணங்கள் இல்லை.. ஒரு தவறு நடந்தால் அதற்காக கொலை செய்யலாம்.. ஆனால் நடக்காத தவறுக்காக நடந்து விடுமோ என்ற பயத்தில் கொலை செய்வது.. அதுவும் கொடூரமாக செய்வது எல்லாம் ஓவர் தான்..

டெக்னீசியன்ஸ்…

சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். பேய் பட இசை என்றால் ரசிகர்களை பயன்படுத்த வேண்டாமா? எனவே அதிக இரைச்சலையும் கொடுத்து மிரட்டி இருக்கிறார்.. மெலோடி பாடல் ரசிக்க வைக்கிறது.

இந்த படத்திற்கு K.A சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. இவரது பணி பாராட்டுக்குரியது.

தயாரிப்பு – பிலிம் ஒர்க்ஸ்

‘வாலு & ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.

இயக்கம் – சபரி – குரு சரவணன் (கூகுள் குட்டப்பா)

வழக்கமான பேய் படம் என்பதை தாண்டி ஓரிரு ட்விஸ்ட்கள் வைத்திருந்தால் இன்னும் கூடுதல் சுவாரசியம் இருந்திருக்கும்.. இந்த ‘கார்டியன்’ நிச்சயம் நம் கவனம் ஈர்த்திருப்பார்..

Hanshikas Guardian movie review

ஜெ. பேபி பட விமர்சனம்

ஜெ. பேபி பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெ. பேபி பட விமர்சனம்

தொலைந்து போன தன் அம்மாவை தேடிச்செல்லும் இரு மகன்களின் கதை தான் இந்த ஜெ. பேபி.

ஸ்டோரி…

ஊர்வசி (ஜெ. பேபி) இவருக்கு 5 பிள்ளைகள்.. 3 ஆண் மகன்கள்.. இரண்டு 2 பிள்ளைகள். இதில் மூத்தவர் மாறன்.. இளையவன் தினேஷ்.. இவர்கள் முகம் தெரிந்தவர்கள்.. மற்றவர்கள் புதுமுகங்கள்.. இவர்கள் அனைவரும் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட அண்ணன் தம்பி பிரச்சனையால் மன நிம்மதி இல்லாமல் தவிக்கிறார் ஊர்வசி.

இதனால் பித்து பிடித்தது போல ஊரில் ஏகப்பட்ட பிரச்சனைகள் செய்து கொண்டிருக்கிறார். திடீரென மற்ற வீடுகளை பூட்டி வருவது.. போலீசை மிரட்டுவது.. மற்றவர்களுக்கு வீட்டுக்கு வந்த தபால்களை எடுத்து வருவது என பிரச்சனைகளை செய்து கொண்டிருப்பதால் எங்கேயாவது தொலைந்துவிடு என பிள்ளைகள் திட்டுகின்றனர்.

இதனால் ஒரு கட்டத்தில் விரக்தியாகும் ஊர்வசி யாருக்கும் தெரியாமல் திடீரென கொல்கத்தா சென்று விடுகிறார். இதனையடுத்துக் கொல்கத்தாவில் உள்ள காவல்துறை மூலம் தமிழக காவல்துறைக்கு தகவல் வருகிறது.

இதனை எடுத்து மூர்த்தி என்பவர் மூலம் தங்கள் அம்மாவை தேடி கொல்கத்தா செல்கின்றனர் மாறன் & தினேஷ்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ஊர்வசி – J. Baby
தினேஷ் – Sankar
மாறன் – Senthil
சேகர் நாராயணன் – Sakthi
மெலடி டார்கஸ் – Selvi.
தாட்சாயிணி – Ramani,
இஸ்மத் பானு – Sankar Wife,
சபீதா ராய் – Senthil Wife
மாயா ஸ்ரீ – Sakthi Wife

பேபி கேரக்டரை இதைவிட யாராலும் சிறப்பாக செய்ய முடியாது என சவால் விட்டு நடிப்பில் நம்மை மிரள வைத்திருக்கிறார் ஊர்வசி.. அவருக்கே உரித்தான கலகலப்பான பேச்சு எடக்கு முடக்கான செய்கைகள் என நம்மை கவருகிறார்..

ஒரு கட்டத்தில் எமோஷனல் ஆகவும் நம்மை அழ வைத்து விடுகிறார்.. குழந்தைகளிடம் ஏதோ ஒன்றை வாங்கி கேட்கும் போது அதற்கு அவரின் பிள்ளைகள் ‘இல்லை..’ என்று சொல்லும்போது நீ குழந்தையா இருக்கும்போது எல்லாத்தையும் வாங்கி கொடுத்தேனே என்று சொல்லும் போது ஒரு தாயின் உணர்வை பிரதிபலிக்கிறார்.

மாறன் & தினேஷ் சண்டையிட்டு பேசிக் கொள்ளாமல் இருக்கும்போது ஒரு தாய் படும் வேதனைகளை கண் முன் நிறுத்துகிறார்.

பள்ளிக் குழந்தைகளுக்கு வேன் ஓட்டும் டிரைவராக தினேஷ். ஒரு யதார்த்தமான நடுத்தர குடும்ப மனிதனை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார். ஊர்வசி செய்த பிரச்சினைகளுக்காக ஒவ்வொருவரிடம் சண்டை போடும்போது மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்..

பல படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் காமெடி செய்து வந்த மாறனை இதில் படம் முழுக்க அலையவிட்டு காமெடியும் செய்ய வைத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.

இரவில் குடித்துவிட்டு உளறுவது பின்னர் காலையில் வேறு மாதிரி பேசுவது என மாறன் தன் பங்கு சிறப்பாக செய்திருக்கிறார்..

ஊர்வசியின் மற்ற பிள்ளைகள் என அனைவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

இப்படம் உண்மைக் கதையின் அடிப்படையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி. அவரின் பெரியம்மா பெயர் தான் பேபி. நிஜ வாழ்க்கையில் தொலைந்து போன பேபியை தேட ஒருவர் உதவி செய்து இருக்கிறார்.. அவர்தான் மூர்த்தி அவரை இந்த படத்தில் நடிக்க வைத்து அருமையான ஒரு நல்ல மனிதரை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறார்.

ஊர்வசியின் பேத்தியாக அபி நட்சத்திரா ஒரே காட்சியில் வந்து செல்கிறார்.

டெக்னீசியன்ஸ்…

Producers : Pa.Ranjith, Abhayanand Singh, Piiyush Singh, Sourabh Gupta, Aditi Anand, Ashwini Chaudhari.

Neelam Productions, Neelam Studios, Vistas Media.

இயக்கம் – சுரேஷ் மாரி
இசை – டோனி பிரிட்டோ.
ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன்,
எடிட்டிங் – சண்முகம் வேலுச்சாமி,
கலை – ராமு தங்கராஜ்,
பாடல்கள் – கபிலன் உமாதேவி , விவேக்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன.. டோனி பிரிட்டோ இசையில் பாடல் வரிகளும் நம் கவனம் பெறுகின்றன..

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவில் சென்னை அழகும் கொல்கத்தா அழகு ரசிக்க வைக்கிறது.. எடிட்டர் கொஞ்சம் நீளத்தை வெட்டி இருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

பொதுவாக ரஞ்சித் படங்கள் என்றாலே சாதி விஷயம் மேலோங்கி நிற்கும்.. ஆனால் இதில் எதுவும் கலக்காமல் இருப்பது இந்த பேபிக்கு சிறப்பு.

நிஜ வாழ்க்கையை படமாக்கி இருப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் திரைக்கதை அமைத்து எடுத்த இயக்குனர் சுரேஷ் மாரியை பாராட்டலாம்.

நிச்சயம் இந்த படம் மகளிர் தினத்தில் அம்மாக்களுக்கு சமர்ப்பணமாக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

J Baby movie review

More Articles
Follows