சூப்பர் முயற்சி… சொதப்பிய ஆக்டிங்..; ஜாங்கோ விமர்சனம்

சூப்பர் முயற்சி… சொதப்பிய ஆக்டிங்..; ஜாங்கோ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

டைம் லூப் என்ற கான்செப்டில் இந்தியாவில் உருவான முதல் படம் தான் இந்த ஜாங்கோ.

கதைக்களம்..

டாக்டர் சதீஷ்குமாரும், ரிப்போர்ட்டர் மிருணாளினி ரவி இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

ஆனால் மாமியார் மருமகள் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

ஒருநாள் சதீஷ் காரில் செல்லும்போது, வானத்தில் இருந்து ஒரு எரிக்கல் பூமியில் விழுவதை பார்க்கிறார். அதன் கதிர் வீச்சு இவர் மீது விழுகிறது. (மற்றொருவர் மீதும் அந்த கதிர் வீச்சு விழுகிறது. அது ட்விஸ்ட்)

இதனால் டைம் லூப்பில் மாற்றிக் கொள்கிறார் சதீஷ். சதீஷின் வாழ்க்கை ஒரே நாளில் சிக்கிக் கொள்கிறது. நேற்று காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை நடந்த நிகழ்வுகள் தினம் தினம் ஒரே மாதிரியாக நடக்கிறது இவருக்கு மட்டும்.

இந்த நிலையில் மனைவி மிருணாளினியை சிலர் கொல்ல வருவது இவருக்கு தெரிய வருகிறது. இதனை டைம் லூப் மூலம் தடுக்க முயற்சிக்கிறார்.

இவர் மனைவியை அந்த நபர்களிடம் இருந்து காப்பாற்றினால் தன்னால் டைம் லூப்பில் இருந்து வெளியே வரமுடியாது. இவர் வந்தால் தன் மனைவியை காப்பாற்ற முடியாது.

அவர் மனைவியை காப்பாற்றினாரா? டைம் லூப்பில் இருந்து மீண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ஹீரோ சதீஷ்குமாருக்கு இது முதல் படம். முதல் படத்தில் இப்படி ஒரு கேரக்டரை ஏற்பது சவால்தான்.

ஒட்டு மொத்த கதையின் மூலக் கருவை தன் தோளில் சுமந்துள்ளார். ஆனால் அதற்குண்டான நடிப்பை அவர் முழுவதுமாக கொடுக்கவில்லை.

ஏதோ போற போக்கில் டயலாக்குகள் பேசி செல்கிறார். நாயகி மிர்ணாளினி. தற்போது எனிமி, எம்ஜிஆர் மகன் பல படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

ஆனால் இன்னும் நடிப்பில் மெச்சூரிட்டி இல்லை.இவர்களின் காதலையும் சரியாக சொல்லவில்லை இயக்குனர்.

ஹீரோவின் நண்பர்களாக வரும் நண்பர்களாக ரமேஷ் திலக், மற்றும் தங்கதுரை, டேனியல் பாப் ஆகியோர் வீணடிக்கப்பட்ட கேரக்டர்கள். நியூஸ் ரீடர் அனிதா சம்பத் கேரக்டரும் சரியாக பயன்படுத்தப்படவில்லை.

இதில் போலீசாக வரும் கருணாகரன் மட்டும் கொஞ்சம் தேறிவிட்டார்.

விஞ்ஞானியாக வரும் வேலு பிரபாகர் வில்லன் ஹரீஷ் பெராடி ஆகியோர் தங்கள் நடிப்பில் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்..

டைம் லூப் என்பதால் திரும்ப திரும்ப காட்சிகள் வரத்தான் செய்யும். அதை அழகாக படமாக்கியிருக்கலாம். தீபா அக்கா வரும் காட்சிகள் நாயகனுக்கு எப்படி தெரியுமோ? அப்படிதானே அடுத்த நாட்களில் தெரிய வேண்டும். ஆனால் அது மாறி மாறி வருகிறது.

முதல் நாள் செக்யூரிட்டி பேசும் காட்சிகள் அடுத்த நாள் காட்சியில் சரியாக காட்டப்படவில்லை. இப்படி முதல் பாதியில் நிறைய சோதித்து விட்டார் இயக்குனர். ஆனால் 2ஆம் பாதியில் கதை ஓட்டத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்.

கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. சான் லோகேஷி எடிட்டிங் முதல் பாதியில் சொதப்பல்.

ஜிப்ரானின் பின்னனி இசை நிஜமாகவே படு மிரட்டல். அடுத்த என்ன நடக்கப் போகிறது என ஏங்க வைத்துள்ளது-

நிறைய காட்சிகளில் வசனங்கள் நான் சின்க் ஆக இருக்கிறது. முக்கியமாக மிருளாளினி பேசும் காட்சிகள் நான் சின்க் ஆகவுள்ளது.

வேற்று கிரக ஆராய்ச்சி, சயின்ஸ் பிக்ஷன், செயற்கை இதயம், டைம் லூப், என சூப்பரான பாய்ண்ட்டுக்களை வைத்துள்ளார் இயக்குனர். ஆனால் தரமான கிராபிக்ஸ் காட்சிகள் போதவில்லை. மேக்கிங்கில் இன்னும் கவனம் வேண்டும். நடிகர்களின் தேர்வும் இன்னும் பெட்டராக இருந்து இருக்கலாம்.

ஆக… ஜாங்கே.. இந்த டைம் லூப்பில் சிக்காமல் சென்று பாருங்கள்…

Jango movie review and rating in tamil

மிரட்டலா..? உருட்டலா..?.; பொன் மாணிக்கவேல் விமர்சனம்

மிரட்டலா..? உருட்டலா..?.; பொன் மாணிக்கவேல் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

ஒரு நீதிபதி கொலை செய்யப்படுகிறார். இதனால் சென்னையே பரபரப்பாகிறது.

இதனால் குற்றவாளிகளை பிடிக்க போலீசுக்கு அழுத்தம் தரப்படுகிறது. தற்போதைய காவல்துறையில் யாரும் சரியில்லை. எனவே வேலையை உதறி மாடு மேய்க்க சென்ற (பிரபுதேவா) பொன் மாணிக்கவேலை மீண்டும் அழைக்கிறது காவல்துறை.

விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் இறந்த நீதிபதியின் மற்றொரு நண்பர் போலீஸ் ஒருவரும் கொல்லப்படுகிறார்.

இருவரின் கொலைகளை தொடர்ந்து இவர்களின் அடுத்த நண்பரான தொழில்அதிபர் சுரேஷ் மேனனுக்கு கொலை மிரட்டல் வருகிறது.

எனவே உங்களை காப்பாற்ற வேண்டும் என்றால் எனக்கு 10 கோடி கொடுங்கள் என டீல் பேசுகிறார் பொன் மாணிக்கவேல்.

சுரேஷ் மேனன் என்ன செய்தார்? திட்டமிட்டு மிரட்டி கொலை செய்பவர் யார்? கொலைகளுக்குக் காரணம் என்ன? நேர்மையான போலீஸ் ஏன் டீல் பேசினார்? என்பதே ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

முதன்முறையாக பொன் மாணிக்கவேலாக போலீஸ் வேடம் ஏற்றுள்ளார் பிரபுதேவா. முரட்டு தோற்றம்.. கஞ்சி போட்ட சட்டை, வீராப்பு என அலட்டிக் கொள்ளாமல் வித்தியாசமான வேடத்தில் ரசிக்க வைக்கிறார்.

ப்ளாஷ்பேக் காட்சிகளில் போலீஸ் உரிய கம்பீரத்தை கொடுக்க முயற்சித்துள்ளார்.

மனைவி நிவேதா உடலில் இவர் வருடங்களை சொல்லி சொல்லி பேசும் அந்த வரலாற்று சம்பவங்கள் ரசிக்க வைக்கிறது. ஆனால் நிவேதாவுக்கான காட்சிகள் பெரிதாக இல்லை. வழக்கமாக வந்து போகிற நாயகி வேடம் அவருக்கு.

ஆக்சன் படம் என்றாலும் தீரம் அதிகாரம் ஒன்று… சேதுபதி படங்களை போல காவலர்களின் காதல் காட்சிகளை வைத்திருக்கலாம். ஆனால் இதில் மிஸ்ஸிங்.

தொழிலதிபர் சுரேஷ் மேனக் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர் மறைக்கும் ரகசியங்கள் படத்தின் ட்விஸ்ட்.

சில நிமிடங்களே வந்தாலும் மறைந்த இயக்குநர் மகேந்திரன் ரசிகர்களை கவர்ந்து விடுவார். இவரின் பேத்தியாக வருபவரும் நல்ல தேர்வு.

வில்லனாக வரும் பத்ரிநாத் (சுதன்சு பாண்டே) சோனு சூட் போல இருக்கிறார்.

பெருவளத்தான் (பாகுபலி பிரபாகர்) காட்சிகள் படத்தில் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. கைலாஷ் கேரக்டரில் நடித்துள்ள சார்லஸ் வினோத் நம் கவனம் ஈர்க்கிறார். பிரபுதேவாவை விட இவர் தான் நிறைய விசாரணைகளை செய்கிறார். (அதன்பின்னர் பிரபுதேவாவின் சீன்ஸ் நமக்கு ஏன் என்று புரிய வைக்கிறது)

டெக்னிஷியன்கள்..

இமானின் இசையில் ‘உதிரா உதிரா’ பாடல் அழகாக ரசிக்க வைக்கிறது. கே.ஜி வெங்கடேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து.

முகில் செல்லப்பன் என்பவர் இயக்கியிருக்கிறார். பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளை மீ டூ என வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.

தங்களுக்கு பிரச்சினை என்றால் அதை சொல்ல பெண்கள் தைரியமாக முன்வர வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

ஒரு போலீஸ் என்பவர் நாட்டு மக்களுக்காக செயல்பட வேண்டுமா? அல்லது காவல்துறைக்காக செயல்பட வேண்டுமா? என்று கேட்பதன் மூலம் வசனகர்த்தா கண்ணன் கவனிக்க வைக்கிறார்.

ஆக சொல்ல வேண்டிய விசயத்தை எளிதாக சொல்லாமல் ட்விஸ்ட் என்ற பெயரில் ஆங்காங்கே திரைக்கதையை ஓட விட்டுவிட்டார் இயக்குனர்.

ட்விஸ்ட்டுகளை இன்னும் சுவாரஸ்யமாக கொடுத்திருந்தால் இந்த பொன் மாணிக்கவேல் இன்னும் அதிகமாக ஜொலித்திருப்பார்.

Pon Manickavel movie review and rating in tamil

இவர் யாரென்று தெரிகிறதா..? குருப் விமர்சனம்

இவர் யாரென்று தெரிகிறதா..? குருப் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்… 1975-1980/களில் கேரளாவில் பேசப்பட்ட கொலை குற்றவாளியும், இந்தியளவில் போலீசாரால் இன்றளவிலும் தேடப்பட்டு வரும் குற்றவாளியுமான குருப் என்பவரின் உண்மைச் சம்பவம்தான் இப்படக் கதை.

கதைக்களம்..

எப்படியாவது தன் மகனுக்கு நல்ல வழி காட்டிவிட வேண்டும் என துல்கர் சல்மானை அவரது பெற்றோர் இந்திய ராணுவ விமானப் படையில் சேர்த்து விடுகின்றனர்.

ஆனால் அவருக்கோ அதில் ஈடுபாடு இல்லை. அங்கு ஒரு பெண்ணை காதலிக்கிறார். பயிற்சியை சரியாக முடிக்காமல் அங்குள்ள சரக்குகளை ப்ளாக் மார்கெட்டில் விற்கிறார்.

மேலும் உடல்நிலை சரியில்லை என விடுமுறையில் செல்கிறார். அப்போது தான் அவர் ஊருக்கு சென்ற பின் தற்கொலை செய்து கொண்டார் என செய்தியை ராணுவ மையத்திற்கு தெரிவிக்கிறார்கள்.

ஆனால் உயிரோடு இருக்கும் அவர் பெர்ஃஷியா செல்கிறார். அங்கு பெரிய செல்வந்தராக மாறுகிறார். தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்கிறார். ஒரு கட்டத்தில் கேரளா வருகிறார்.

வெளிநாட்டில் தான் இன்சூரன்ஸ்க்கு கட்டிய பணத்தை உயிரோடு இருக்கும்போதே அனுபவிக்க நினைக்கிறார்.

அதற்காக தன் கூட்டாளிகளுடன் இணைந்து சட்டவிரோதமாக ஒரு திட்டம் தீட்டுகிறார்.

அந்த திட்டம் என்ன? சட்டவிரோதமாக என்ன செய்தார்? இன்ஷ்யூரன்ஸ் பணம் கிடைத்ததா? இவர் செய்த தில்லு முல்லு என்ன? போலீசார் என்ன செய்தனர்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

குருப் ஆக துல்கர் சல்மான். 1970 80களில் கமல் ரஜினி படங்களில் அவர்களின் ஸ்டைலிஷ் உடைகள் மற்றும் அவர்களின் மேனரிசங்களை ரசித்திருப்போம்.

1980களின் கமல் ரஜினியை ஜெராக்ஸ் எடுத்துள்ளார் துல்கர் சல்மான். அந்த கேரக்டராக மாறியிருக்கிறார். அந்த காலத்து நடை, உடை, பாவனைகளை கொண்டு வந்துள்ளார்.

தாடியை மாற்றி மீசையை மாற்றி பல கெட்டப்புகளை போட்டு அசத்தலாக இருக்கிறார். ஆனால் ஒரு குற்றவாளி தன்னை மாற்றிக் காட்ட வேண்டுமென்றால் முடி அலங்காரம் மொட்டை என வரை மாற்றியிருக்க வேண்டாமா.? வெறும் மீசை தாடியை மட்டுமே மாற்றுகிறார்.

இவரின் காதல் மனைவியாக வரும் சோபிதா படம் முழுக்க சோகமயமாகவே வருகிறார். வேறு நாயகிகளே இல்லையா? முகத்தில் புத்துணர்ச்சியே இல்லை.

மற்றொரு நாயகி கேரக்டரில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். ஒரே காட்சியில் வந்து செல்கிறார். பாவம்.

நேர்மையான கம்பீரமான போலீசாக வரும் இந்திரஜித் திரைக்கதைக்கு நல்ல தேர்வு. படத்தின் கதையே இவரிடம் இருந்து ஆரம்பமாகி க்ளைமாக்ஸில் முடிகிறது. இவர் செய்யும் இன்ஸ்வெட்டிகேசன் ரசிக்கவும் வைக்கிறது.

துல்கரின் ப்ரெண்டாக வரும் ஷைன் டாம் சாக்கோ படத்தின் 2வது ஹீரோ என சொல்லலாம். மெகா குடிகாரனாக மனிதர் வெளுத்து கட்டியிருக்கிறார். யாரூய்யா இந்த ஆளு என கண்டிப்பாக கேட்க வைப்பார். இவர் நல்லவனா? கெட்டவனா? என யோசிக்கவும் வைப்பார்.

விமான பயிற்சி மைய ப்ரெண்ட் கேரக்டரும் கவனம் பெறுகிறது. இவர்களுடன் டோவினோ தாமஸ், பரத் (தமிழ் நடிகர்) ஆகியோரும் உண்டு. இவர்களுக்கு பெரிதாக வேலையில்லை. ஆனாலும் கேரக்டர்கள் நிறைவு.

டெக்னிஷியன்கள்..

இந்த படத்தை ஒட்டுமொத்தமாக 4 பேர் தாங்கியுள்ளனர். ஒருவர் துல்கர். மற்ற 3 பேர்கள்… ஒளிப்பதிவாளர் கலை இயக்குனர் & இசையமைப்பாளர்.

பாராட்டும் வகையில் ஒளிப்பதிவு உள்ளது. அதே போல 1965 வரை காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப கலை இயக்குனர் பாடுபட்டுள்ளார். இவர்களுடன் இசையமைப்பாளரும் கைகோர்க்கிறார். பின்னணி இசை மிரட்டல். இப்படத்தின் சுவாரஸ்யத்தை இசை ஆங்காங்கே கூட்டியுள்ளது.

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி மற்றும் கலை இயக்குனர் மனோஜ் ஆகியோர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள். சுஷின் ஷியாம் இசையில் பாடல்கள் ஓகே.

உண்மை சம்பவத்தை சினிமாவிற்கு ஏற்றார் போல் திரைக்கதையை அமைத்து இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத். வலுவான இந்த கதையை நான் லீனியர் பேட்டர்னில் கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். ஆனால் படத்தின் நீளம்… சோர்வை தருகிறது. இடைவேளை வருவதற்கே 1.30 மணி நேரம் ஆகிறது.

மேலும் கதை ஓடிக் கொண்டிருக்கும்போது அன்றைய காலகட்டம் என மாற்றி மாற்றி காட்சிகளை காட்டியிருப்பது ரசிகர்களை சற்றே குழப்பமடைய செய்யும்.

திரைக்கதை.. கதை ஓட்டம் ஆகியவை போரடித்தாலும் படத்தின் மேக்கிங் நம்மை படத்தை ரசிக்க வைக்கிறது.

KURUP movie tamil review

சிஸ்டத்தை சரிசெய்யும் கடவுள்..; OPERATION JUJUPI விமர்சனம்

சிஸ்டத்தை சரிசெய்யும் கடவுள்..; OPERATION JUJUPI விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

இது ஒரு அரசியல் படம்தான். ஆனால் இதுவரை நாம் பார்க்காத கோணத்தில் சொல்லப்பட்ட அரசியல் படம். ‘ஆபரேஷன் ஜுஜுபி’ (Operation JuJuPi) அனைவரும் புரிந்துக் கொள்ளும் இந்தியாவில் ஆங்கிலப் படமாக ரிலீசாகியுள்ளது. தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கதைக்களம்..

கதை நாயகன் காமெடி நடிகர் சாம்ஸ். இந்த நாட்டின் சிஸ்டம் சரியில்லை என்று கவலைப்படுகிறார். இதை அவர் தன் நண்பர்களிடம் சொல்லும்போது அவரை கிண்டல் செய்கின்றனர்.

உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. பேசாம நல்ல டாக்டரை பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள் என்கின்றனர்.

ஒருநாள் சாம்ஸ் முன்பு கடவுள் தோன்றுகிறார். அவரின் பிரச்சனை குறித்து கேட்கிறார். மேலும் JuJuPi என்ற ஓர் பானத்தையும் வழங்குகிறார்.

அந்த அமிர்த பானத்தை பருகும் சாம்ஸ், இந்த நாட்டையே மாற்றும் அளவுக்கு ஒரு கனவு காண்கிறார்.

இதன்பின்னர் அந்த கனவு மூலம் அரசியல் உலகில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்கிறது. அது என்ன என்பது தான் இந்த ‘Operation JuJuPi’.படத்தின் கதை.

படம் பற்றிய அலசல்…

இதுவரை ஒரு காமெடியனாகவே நாம் சாம்ஸ் பார்த்து இருக்கிறோம்.

ஆனால் தன்னால் குணச்சித்திர கேரக்டரில் நடிக்க முடியும். அதில் தன் நடிப்பு திறமையை ஒளிர செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார்.

சாம்ஸின் மனைவியாக வினோதினி மற்றும் மகள் ஆகியோர் தங்கள் பங்களிப்பில் கச்சிதம். வினோதினி செய்யும் காமெடிகள் நம்மை சிரிக்கவும் வைத்துள்ளது. பாராட்டுக்கள்.

ஸ்டைலிஷான இளம் பிரதமராக நடித்திருக்கிறார் ராகவ் என்பவர். அவர் போடும் திட்டங்கள் அனைத்தும் அப்ளாஸை அள்ளும்.

அரசியல்வாதிகளாக வையாபுரி, வெங்கட் சுபா, இயக்குநர் சந்தானபாரதி, படவா கோபி, ஜெகன், மனோபாலா உள்ளிட்ட காமெடியன்களும் உண்டு. ஆனால் இவர்களை படத்தில் சீரியஸாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர் படப்பிடிப்பில் காட்சிகள் ரசிக்க வைக்கிறது- கிழக்கு கடற்கரை சாலை இப்படியா இருக்கிறதா? என வேற ஆங்கிளில் நம்மை வியக்க வைத்துள்ளார்.

இது ஒரு ஆங்கிலப் படம் போல இருந்தாலும் தமிழக மக்களுக்கு புரியும்படி படத்தொகுப்பு செய்துள்ளார் படத்தொகுப்பாளர் வினோத் ஸ்ரீதர்.

கதை எழுதி இயக்கி தயாரித்துள்ளார் அருண்காந்த். இத்துடன் இசையும் அமைத்துள்ளார். இவையில்லாமல் கலர் மிக்ஸிங், ஒலி கலவை உள்ளிட்ட 14 பணிகளை இவரே செய்திருக்கிறாராம்.

நாட்டில் உள்ள மக்கள் சந்தோஷமாக இருப்பது தான் ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார் இயக்குனர்.

நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். அவர்களும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார்.

இதே நாட்டில் வாழ்ந்துக் கொண்டு இதே நாட்டை குறை சொல்பவர்களையும் நாசூக்காக சுட்டிக் காட்டியிருக்கிறார். அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஆக… Operation JuJuPi… சிஸ்டத்தை சரிசெய்யும் கடவுள்

Operation JUUPi movie review and rating in Tamil

நல்லவரா.? கெட்டவனா..? எனிமி விமர்சனம் 2.75/5

நல்லவரா.? கெட்டவனா..? எனிமி விமர்சனம் 2.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்… பால்ய நண்பர்களாக வளர்ந்து பகைவர்களாக மாறிய இருவர் பற்றிய கதை.

கதைக்களம்..

தம்பி ராமையா ஒரு மளிகை கடை ஓனர். தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர். போலீஸ் சகவாசமே வேண்டாம் என நினைப்பவர். இவரின் ஒரே மகன் விஷால்.

பிரகாஷ் ராஜ் ஒரு போலீஸ் ஆபிசர். இவரின் மகன் ஆர்யா. தன் மகனை தன் துறையிலேயே பெரிய அதிகாரியாக ஆக்க வேண்டும் என அதற்கான பயிற்சிகளை சிறுவயதிலேயே கொடுக்க துவங்குகிறார்.

இருவரின் வீடுகள் அருகருகே உள்ளதால் விஷால் ஆர்யா நட்பு வளர்கிறது.

பிரகாஷ் ராஜ் கொடுக்கும் பயிற்சிகளை பார்த்து பார்த்து அதனால் ஈர்க்கப்படுகிறார் விஷால்.. எனவே இருவருக்கும் பயிற்சி கொடுக்கிறார் பிரகாஷ்ராஜ்.

ஒரு கட்டத்தில் பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்படுவதால் இரு குடும்பங்களும் பிரிய நேரிடுகிறது.

தம்பி ராமையா தன் மகனுடன் சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி செட்டில் ஆகிறார். விஷாலும் தன் தந்தைக்கு அறியாமல் அங்கே சில துப்பறியும் வேலைகளில் ஈடுபடுகிறார்.

ஒரு கட்டத்தில் மினிஸ்டர் ஒருவரை கொலை ஒருவர் திட்டமிடுகிறார். அதில் ஈடுப்படுபர் ஆர்யா என விஷாலுக்கு தெரிய வருகிறது.
அப்போது சந்திக்கும் நண்பர்கள் என்ன செய்தார்கள்..? பகைவர்களா மாறினார்களா? ஆர்யா சிங்கப்பூரில் யாரூய்யா? பிரகாஷ் ராஜின் கொலை பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

விஷால் & ஆர்யா இருவரும் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது வரும் அந்த சிறுவர்கள் இருவருமே செம ஆக்ட்டிங்.. படம் தொடங்கிய அந்த 15 நிமிடங்கள் தங்கள் நடிப்பால் கவர்ந்து விடுகிறார்கள்.

விஷால் ஸ்மார்ட்டாக வருகிறார். மிருளாணியுடன் கொஞ்சம் ரொமான்ஸ் செய்கிறார். ஆக்சன் காட்சிகளில் பட்டைய கிளப்புகிறார்.
மிர்ணாளிணிக்கு விஷால் நிச்சயத்தார்த்தம் சர்ப்ரைஸ் கொடுப்பது ஓகே. ஆனால் தந்தைக்கு முன்னாடியே சொல்லாமல் இருப்பது ஏன்? என தெரியவில்லை.

வில்லனாக ஆர்யா. படு மிரட்டல் என சொல்வதற்கில்லை. ஆனால் ஸ்டைலி வில்லனாக வருகிறார். எமோஷ்னல், கோபம், என சைலண்ட் ஆக்‌ஷனில் அசத்தியிருக்கிறார். இவருக்கும் மம்தாவுக்கு நல்ல கெமிஸ்ட்ரி.

நாயகியாக மிர்ணாளினி மற்றும் மம்தா மோகன்தாஸ். இரண்டு பாடலுக்கு நடனம் கொஞ்சம் பேசி கொஞ்சம் ரசிக்க வைக்கிறார் மிர்ணாளினி. மம்தா கொஞ்சம் நேரமே வந்தாலும் கவர்ந்துவிடுகிறார். மம்தாவின் சிறுமி பருவத்தில் வரும் அந்த பெண்னும் ரசிக்க வைக்கிறார். இவரின் மாமாவாக வரும் ஜான்விஜய் காட்சிகள் கச்சிதம். இவரின் காட்சிகளை அதிகரித்திருக்கலாம்.

ஹீரோவின் நண்பனாக கருணாகரன். காமெடி பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் நிறைய காமெடி செய்தார் என படக்குழுவினர் பிரஸ்மீட்டில் தெரிவித்தனர். அதை கொஞ்சமாச்சும் படத்தில் செய்திருந்தால் ரசிகர்கள் சிரித்திருப்பார்கள்.

பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா இருவரும் அசத்தல். தம்பி ராமையா சில நேரங்களில் தனி ஒருவன் பட அப்பா கேரக்டரை நினைவுப்படுத்துகிறார். அந்த அப்பாவித்தனம். அதுவும் ரசிக்க வைக்கிறது எனலாம்.

தமன் இசையில் பத்தல பத்தல பாட்டு நம்மையும் பாட வைக்கிறது.

பின்னனி இசையில் இசையமைப்பாளர் சாம் சி எஸ்.. மிரட்டலான இசையை தெறிக்கவிட்டுள்ளார். இவரது பின்னணி இசை பல படங்களில் பேசப்பட்டுள்ளது.

படத்தில் பாரட்டப்பட வேண்டிய ஒன்று. ஒளிப்பதிவும் அதன் மேக்கிங்கும் எனலாம். ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை. சிங்கப்பூரின் அழகை மேலும் அழகாக்கி தந்துள்ளார்.

விஷால் ஆர்யா இருவரும் சினிமாவை தாண்டி நெருங்கிய நண்பர்கள். அப்படியிருக்கையில் இவர்கள் எனிமியானது எப்படி? என்ற ஆர்வம் முதலிலேயே வருகிறது.

அதன்படி திரைக்கதையும் அமைத்தும் இருக்கிறார் ஆனந்த் சங்கர். ஆனால் அதை படமாக்கியதில் தான் சறுக்கியிருக்கிறார் டைரக்டர்.

திரைக்கதையை இன்னும் பலப்படுத்தி இருக்கலாம் இயக்குனர். விஷாலும் பேசிக் கொண்டே இருக்கிறார். ஆர்யாவும் பேசிக் கொண்டே இருக்கிறார். இதுவே நம்மை சோதிக்கிறது.

சிறுவன்களை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் அளவுக்கு கூட விஷால் ஆர்யா காட்சிகள் சுவாரஸ்யம் தரவில்லை.

விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி, விக்ரம் நடித்த இருமுகன் படங்களில் இருந்த கதைக்கான வலு இந்த படத்தில் இல்லை. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிவிட்டார் எனலாம்.

FIRST ON NET : Rajini Magic with Siva Sentiment..; அண்ணாத்த விமர்சனம் 3.5/5

FIRST ON NET : Rajini Magic with Siva Sentiment..; அண்ணாத்த விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன் லைன்.. பெரும் நட்சத்திர பட்டாளங்களுடன் கிராமத்து கதையில் அண்ணன் தங்கை சென்டிமெண்ட்

கதைக்களம்…

சூரக்கோட்டை ஊராட்சி பிரசிடெண்ட் காளையன் (அண்ணாத்த ரஜினி). இவரின் தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்). தங்கை மீது உயிருக்கு நிகரான பாசம்.

ஊரில் எவன் ரவுடியிசம் செய்தாலும் அடிதடி என இறங்குகிறார் ரஜினி. இதனால் அடிக்கடி வழக்காகிறது. அப்போது வழக்கறிஞர் நயன்தாராவின் பழக்கம் ஏற்படுகிறது. இருவருக்கும் காதலும் கூட.

ரஜினியின் முறைப்பெண்கள் குஷ்பூ மீனா. இவர்களில் ஒருவரை திருமணம் செய்தால் மற்றவரின் மனது காயப்படுமே என்பதால் இருவரையும் மணக்க மறுக்கிறார். இதனால் மீனா லிவிங்ஸ்டனை மணக்கிறார். குஷ்பூ பாண்டியராஜனை மணக்கிறார்.

நீதான் என்னை திருமணம் செய்யவில்லை. என் தம்பியை உன் தங்கைக்கு திருமணம் செய்து வை. நம் உறவு ஒட்டியிருக்கும் என்கின்றனர் குஷ்பூ மற்றும் மீனா… குஷ்பூவின் தம்பி சதீஷ். மீனாவின் தம்பி சத்யன்.

இதனிடையில் கீர்த்திக்கு வேறு ஒரு பிரச்சினை வருகிறது.

அது என்ன பிரச்சினை.? யாரை திருமணம் செய்தார் கீர்த்தி. யார் பிரச்சினை செய்தார்கள்? தங்கைக்கு பிரச்சினை கொடுத்தவரை ரஜினி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ரஜினிக்கு வயது ஏற ஏற இளமை துள்ளலும் அதிகரிக்கிறது எனலாம். இதில் அண்ணாமலை அருணாச்சலம் பட ரஜினிகளை பார்க்கலாம். பேட்ட தர்பார் படங்களை விட இதில் செம ஸ்டைலாக மாஸாக இருக்கிறார்.

முதல் பாதியில் தனக்கே உரித்தான பழைய குறும்புத்தனத்துடன் ரஜினி சேட்டை செய்துள்ளார். அதே சமயம் நிறைய இடங்களில் போகிற போக்கில் அட்வைஸ் பூக்களை சிதறவிட்டுள்ளார். இரண்டாம் பாதியில் அனல் தெறிக்க ஆக்சன் காட்சிளில் அதகளம் செய்துள்ளார். கூடவே வில்லன்களை பதறவைத்துள்ளார்.

வழக்கமாக ஹீரோவுக்கு உதவும் கேரக்டர் நயன்தாராவுக்கு இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் அதை சிறப்பாக செய்ய முயற்சித்துள்ளார்.

படத்தில் ரஜினிக்கு நிகரான வேடம் கீர்த்திக்கு. முதல் பாதியில் கலகலப்பான கீர்த்தி. இரண்டாம் பாதியில் கலங்கிய கீர்த்தி. அண்ணனுக்காக உருகும்போதும் அழ வைக்கிறார். ஆனால் ஓவராக உடல் இளைத்து காணப்படுகிறார். ரஜினி முருகனில் பார்த்த கீர்த்தி இப்போது இல்லை.

குஷ்பூ அறிமுகமாகும்போது கொண்டையில் தாழம்பூ.. மீனா அறிமுகமாகும் போது தில்லானா தில்லானா பாடல்கள் ஒலிக்கிறது. அழகான திறமையான முறைப்பெண்களுக்கு இன்னும் அதிகப்படியான வாய்ப்பு கொடுத்திருக்கலாம். மற்றபடி அழகாக வந்து கொஞ்சம் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளனர்.

ரஜினியுடன் பச்சைக்கிளி கேரக்டரில் ஒட்டியே வருகிறார் சூரி. ஆங்காங்கே கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.

கிராமத்து வில்லனாக பிரகாஷ்ராஜ் ஓகே. பெரிதாக வாய்ப்பில்லை. சிட்டி வில்லன்களாக ஜெகபதிபாபு மற்றும் அபிமன்யுசிங். இருவரும் வடஇந்திய வில்லன்களை போல கச்சிதம்.

இவர்களுடன் நிறைய நட்சத்திரங்கள்… வேலராமமூர்த்தி, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கொளப்புள்ளி லீலா, அர்ஜய், கபாலி விஸ்வந்த், பாலா, ரெடின் கிங்கிஸ்லி, (மறைந்த) நடிகர் தவசி, ஜார்ஜ் மரியன் என கோடம்பாக்கத்தின் பாதி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரஜினி படத்தில் இருந்தோம் என இவர்கள் சொல்லிக் கொள்ளலாம்.

டெக்னீஷியன்கள்..

இமான் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ஆல்ரெடி சூப்பர் ஹிட்.

பொதுவாக ஒரு படத்திற்கு ஒரு தீம் மியூசிக் தான் ஒலிக்கும். இதில் 3 வகையான தீம் மியூசிக் அமைக்கப்பட்டுள்ளது. அதனை கேட்கும்போது ரசிகர்களின் கரவொலியால் தியேட்டர்கள் அதிருகிறது.

எஸ்பிபி பாடிய அண்ணாத்த அண்ணாத்த பாடல் முழுக்க முழுக்க ரஜினி ராஜ்யம்தான். இன்னா ஸ்டைலு.. அப்படியொரு எனர்ஜியான பாடல் அது.

சார காத்து பாடல் காதல்மயம். திகட்டாத அழகான மெலோடி. மருதாணி பாடல் இனி திருமண திருவிழாக்களில் ஒலிக்கும்.
வா சாமீ.. பாடல் இனி ரஜினி ரசிகர்களின் தேசி(ய)த்து) கீதமாகும்.

வெற்றி ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்புல். படம் முழுக்க எப்போதும் திருவிழா கோலம்தான். படம் பிடிக்கவே ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பார் எனத் தெரிகிறது. மதுரை கிராமத்து அழகும் சரி.. கொல்கத்தா ஆக்சன் காட்சிகளும் சரி.. கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.

இயக்கம் பற்றி…

சிவா படம் என்றால் எப்போதும் குடும்ப சென்டிமெண்ட் உடன் கிராமத்து மண் வாசனை கலந்தே இருக்கும். ஆனால் ரஜினிக்கான கதையை இன்னும் பட்டைய தீட்டியிருக்கலாம். வேதளாம், விஸ்வாசம் ஆகிய படங்களில் பம்பாய் கொல்கத்தா சென்றது போல இதில் கொல்கத்தா செல்கிறார். அவருக்கு என்ன ராசியோ.? தெரியல.

ஒருவேளை ரஜினியை பம்பாய் அழைத்து சென்றால் இது பாட்ஷா போல வந்துவிடும் என நினைத்தாரோ என்னவோ.? தன்னுடைய முந்தைய படங்களில் உள்ள சக்ஸ்ஸ் சென்டிமெண்ட் காட்சிகளை இதிலும் கொடுத்துள்ளார்.

ஆனால் படத்தில் டயலாக் செம. அதுவும் ரஜினி பேசும் போது இது பன்ச் டயலாக் ஆகிறது. நாம வாழும் போது பலரை சிரிக்க வைக்கனும். இறக்கும் போதும் பலரை அழ வைக்கனும். இதான் வாழ்க்கை.. என்பதுபோல நிறைய தத்துவ வசனங்களை சிதறவிட்டுள்ளார் சிவா.

ரஜினி என்ற மாபெரும் நட்சத்திரத்துடன் ஒரு பட்டாளத்தை வைத்து திணறியிருக்கிறார் சிவா எனத் தெரிகிறது, இடைவெளி காட்சியில் பாட்ஷா ஸ்டைலில் ஒரு பன்ச் வைத்திருந்தால் பவர்புல்லாக இருந்திருக்கும்.

ஆக.. ரஜினிக்கு ஒரு பேமிலி சென்டிமெண்ட் படத்தை தன் பாணியில் கொடுத்துள்ளார் சிவா… இல்லத்தரசிகளுக்கு இது இனிய தீபாவளி விருந்து.

Rajinis Annaatthe review rating

More Articles
Follows