Jama ஜமா விமர்சனம் 3.5/5.. ஜமா-ய் கூத்து

Jama ஜமா விமர்சனம் 3.5/5.. ஜமா-ய் கூத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜமா விமர்சனம் 3.5/5.. ஜமா-ய் கூத்து

‘ஜமா’ என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கும்.. பெண் வேடம் அணியும் ஆடவனின் வாழ்க்கையையும் நாடக கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படம் இது

நாயகனாக நடித்து படத்தை இயக்கியிருக்கிறார் பாரி இளவழகன்.. இவரது உறவினர்கள் தெருக்கூத்து கலைஞர்கள் என்பதால் படத்தை அப்படியே யதார்த்தமாக இயக்கி நல்லதொரு படைப்பாக கொடுத்திருக்கிறார்..

ஸ்டோரி…

பாரி தந்தை கூத்துப் பார்க்க அடிக்கடி செல்கிறார்.. தெருக்கூத்து மீது ஆர்வம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இவரே கலைஞராகவும் மாறி மக்களை மகிழ்விக்கிறார்.. ஜமா என்ற குழுவை அமைத்து மக்களின் ஆஸ்தான கலைஞராகிறார்.. ஒரு கட்டத்தில் நண்பர்களின் பொறாமையால் களையிழந்து இறக்கிறார்.

ஜமா என்ற கலைக்குழுவுக்கு தற்போது வாத்தியாராக சேத்தன் இருக்கிறார்.. என்னதான் சிறந்த கலைஞராக இருந்தாலும் ஒரு பக்கம் மதுவுக்கு அடிமையாகிறார்..

எனவே தன் தந்தையை கைவிட்ட ஜமா குழுவை மீண்டும் கைப்பற்ற மகன் பாரி இளவழகன் படாதபாடு படுகிறார்.. தங்களுக்கு சொந்தமான நிலத்தை கூட விற்று அதன் மூலம் கலைஞர்களை ஒன்று சேர்க்க நினைக்கிறார்..

ஆனால் ஊர் மக்கள் யாரும் இவரை மதிக்கவில்லை.. ஒரு கட்டத்தில் சேத்தன் மகள் அம்மு அபிராமியின் காதலைக் கூட நிராகரிக்கிறார்..

அதன் பிறகு நடந்தது என்ன? ஜமா குழுவை கைப்பற்றினாரா? காதலியை கரம் பிடித்தாரா? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

இந்த படத்தை பாரி இளவழகன் இயக்கி கதை நாயகனாக நடித்துள்ளார்.

சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முதல் படத்திலேயே ஒரு இயக்குனராகவும் கலைஞராகவும் உயர்ந்து நிற்கிறார் பாரி இளவழகன்.. பெண் வேடமிட்டு குந்தி தேவியாகவும் பிறகு அர்ஜுனனாக இவர் மாறும் காட்சிகள் ரசிகர்களுக்கு மெய்சிலிர்க்கும் காட்சிகள் ஆகும்.. பெண்களைப் போல நளினம் வெட்கம் என அனைத்தையும் கற்றுத் தன் உடல் மொழியை கூட மாற்றி இருக்கிறார் இயக்குனர்.

30 ஆண்டு காலம் தமிழ் சினிமாவில் பல வேடங்களில் நடித்து வந்தாலும் நடிகர் சேத்தனுக்கு இந்த படம் பெரும் பெயரைப் பெற்று தரும்.. கிராமத்துக் கலைஞர்களுக்கே உரித்தான திமிரும் இவர் கண்களில் வெளிப்படுகிறது..

காதலனுக்காக அப்பனையே தூக்கி எறியும் அம்மு அபிராமி நடிப்பில் அசத்தி இருக்கிறார்.. ஆனால் அதற்காக அப்பனை இப்படியா திட்டுவது? என்ற கேள்வி எழுகிறது.

பூனை என்ற கேரக்டரில் வரும் வசந்த் தன் கேரக்டரை உணர்ந்து ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறார்.

இவரைப் போல கூத்துக் கலைஞனாக வரும் மாரிமுத்து உள்ளிட்டோரும் ரசிக்க வைக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

ஒரு சாதாரண கதைக்கே தன் இசையால் உயிரோட்ட முடியும் என நூற்றுக்கணக்கான படங்களில் நிரூபித்தவர் இசைஞானி இளையராஜா.. இந்தப் படத்தில் கலையும் தெருக்கூத்தும் இணைந்திருப்பதால் தன் இசை மூலம் உயிரூட்டி உணர்வூட்டி ரசிக்க வைத்திருக்கிறார் இசைஞானி..

முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில்.. எந்த சினிமாத்தனமும் கலக்காமல் தெருக்கூத்து பாடலை வைத்து அதற்குப் பின்னணி இசை கொடுத்து தெறிக்க விட்டிருக்கிறார் இளையராஜா.. அவர் நினைத்திருந்தால் காந்தாரா பாடல் போல கொடுத்திருக்கலாம்.. ஆனால் இயக்குனரின் படைப்பாற்றலை அறிந்து இசையமைத்திருக்கிறார்..

ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணா.. திருவண்ணாமலை மக்களை அவர்களின் வாழ்வியல் முறையை தன் கேமராவில் அழகாக படம் பிடித்திருக்கிறார்

தெருக்கூத்து கலைஞர்கள் அவர்களின் ஒப்பனை அனைத்தையும் அப்படியே (சினிமா ஒப்பனை இல்லாமல்) அழகாக காட்டி இருக்கின்றனர் மேக்கப் கலைஞர்கள்.

‘ஜமா’ படத்தை ‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது…

இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜமா படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான “பிக்சர்ஸ் பாக்ஸ் கம்பெனி” நிறுவனம் வாங்கியுள்ளது..

ஆக எந்த சினிமாத்தனம் இல்லாமல் ஒரு டாக்குமென்டரி கதை போல அமைத்து அதற்கு தெருக்கூத்து வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாரி இளவழகன்.

Pari ilavazhagans Jama movie review

ராயன் விமர்சனம் 4/5… தனுஷின் டபுள் சம்பவம்

ராயன் விமர்சனம் 4/5… தனுஷின் டபுள் சம்பவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராயன் விமர்சனம் 4/5… தனுஷின் டபுள் சம்பவம்

ஸ்டோரி…

சிறுவயதிலேயே தன் பெற்றோரை தொலைத்து விட்ட தனுஷ் அவரது இரண்டு தம்பிகளையும் ஒரு தங்கையையும் வளர்த்து வருகிறார்.. இவர்களது நிலை அறிந்த செல்வராகவன் இவர்களுக்கு உதவியாக ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து பாதுகாவலராக இருந்து வருகிறார்..

இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு இரவு நேர ஃபர்ஸ்ட் ஃபுட் உணவகம் நடத்தி வாழ்ந்து வருகின்றனர்.

அதே ஊரில் இருக்கும் இரண்டு தாதாக்கள் சரவணன் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இடையே 25 ஆண்டு கால பகை இருந்து வருகிறது.. இந்த சூழ்நிலையில் தனுஷின் தம்பி சந்தீப் கிஷன் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் தன்னை அறியாமல் மது போதையில் சரவணனின் மகனை ambiyaiகொன்று விடுகிறார்.. இதனையடுத்து ராயா உன் தம்பியை என்னிடம் ஒப்படைத்து விடு இனிமேல் உனக்கு ஒரு தங்கை ஒரு தம்பி என்று மட்டும் நினைத்துக் கொள். என்று எச்சரிக்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? தம்பியை விட்டுக் கொடுத்தாரா? என்ன செய்தார் தனுஷ் என்பது மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

காத்தவராயன் – தனுஷ்
முத்துவேல் ராயன் – சந்தீப் கிஷன்
மாணிக்கராயன் – காளிதாஸ்
துர்கா – துஷாரா விஜயன்

ஆண் பிள்ளைகள் அனைவருக்கும் ராயன் என்ற பெயரே இருப்பதால் தன் தங்கைக்கு துர்கா என மாற்றி பெயர் வைக்கிறார் தனுஷ்.. தன் தங்கைக்கு பெயர் வைக்கும் அந்த காட்சியே அசத்தல் ரகம்தான்..

நடிகர் இயக்குனராக தனுஷ்.. தன் மீது முழு நம்பிக்கை வைத்து தனது 50வது படத்தை தானே இயக்கி அதில் மாஸ் காட்டி இருக்கிறார் தனுஷ்..

தலையை மொட்டை அடிக்க யோசிக்கும் ஹீரோக்கள் மத்தியில் மொட்டை தலை முறுக்கு மீசை என கெத்தாக அசத்தி இருக்கிறார்..

தம்பி பாசம் தங்கை பாசம் என குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்தாலும் பெண்களை அலறவிடும் ரத்தத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் இயக்குனர் தனுஷ்.. ஆனால் ஆக்ஷன் பிரியர்களுக்கு இந்த படம் ஸ்வீட் அல்வா தான்..

தனுஷ் நினைத்திருந்தால் அவரே மூன்று கதாபாத்திரத்தில் கூட நடித்திருக்கலாம்.. ஆனால் சந்திப் காளிதாஸ் உள்ளிட்ட நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கும் ஸ்பேஸ் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

சந்திப் கிஷனும் கொஞ்சம் வில்லத்தனம் கலந்து நடிப்பில் கவருகிறார்.. அவருக்கும் அபர்ணாவுக்கும் கெமிஸ்ட்ரி சூப்பர்.. கொலு கொலு குண்டு பெண்ணாக அபர்ணா போடும் ஆட்டம் வேற லெவல்..

கல்லூரி மாணவனாக காளிதாஸ் கலக்கல்.. பெரிய அண்ணனுக்கு பயம்.. சின்ன அண்ணனுக்கு நட்பு என வெரைட்டி காட்டி இருக்கிறார்.. அதே சமயம் இடைவேளைக்குப் பிறகு இவரது கேரக்டரில் வரும் திருப்புமுனை நம்பும்படியாக இல்லை.. அதை இயக்குனர் தனுஷ் வலுப்படுத்தி இருக்கலாம்.

சார்பட்டா பரம்பரை & அநீதி படங்களில் கலக்கிய துஷாரா விஜயன் இந்த படத்தில் ஆக்ஷனிலும் மிரட்டி சென்டிமென்டிலும் அசத்தியிருக்கிறார்.. தன் அண்ணனுக்காக ஆஸ்பத்திரியில் வில்லன்களை அடித்து துவசம் செய்திருக்கிறார் துஷாரா.

எஸ்.ஜே. சூர்யா.. வழக்கம்போல வில்லத்தனத்தில் அலற விட்டிருக்கிறார்.. சைலன்ட் வில்லனாக கலக்கியிருக்கிறார் சரவணன்.

தன் தந்தையை கொன்றவர்களை பழி தீர்க்க பிரகாஷ்ராஜ் போடும் போலீஸ் ஸ்கெட்ச் வேற லெவல் ரகம்… அதிலும் ராயன் பாகம் 2காக வைத்த ட்விஸ்ட் சூப்பர்.

கொஞ்ச நேரமே நட்புக்காக வந்தாலும் வரலட்சுமி செம.. தன் கணவன் எஸ்.ஜே சூர்யாவுக்கு 2வது பொண்டாட்டி இருப்பது தெரிந்தும் அவருக்கு பிரச்சனை ஏற்படும் காட்சியில் சிரிப்பலையில் அதிரும்

பிளாஷ்பேக் காட்சியில் செல்வராகவன் கெட்டப் சிறப்பு.. ஒரு பாதுகாவலராக குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் இவரது ஆலோசனை அருமை..

திலீபன் கேரக்டரும் ரசிக்க வைக்கிறது.. இப்படியாக ஒவ்வொரு நடிகர்களையும் அந்த கேரக்டருக்காக தேர்ந்தெடுத்து அருமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் தனுஷ்..

தன் 50வது படத்தில் ஹீரோயின் வேண்டாம் டூயட் வேண்டாம் என தனுஷின் தைரிய முடிவுக்கே அவரை வெகுவாக பாராட்டலாம்..

டெக்னீசியன்ஸ்…

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அருமை.. பல காட்சிகள் இருட்டில் படமாக்கப்பட்டு இருந்தாலும் அதற்கு ஏற்ற லைட்டிங் கொடுத்து தனுஷை ஆக்சன் காட்சிகளில் ஜொலிக்க விட்டுள்ளார்..

பிளாஷ்பேக் காட்சிகளில் குடிசைப் பகுதிகளை அமைத்த கலை இயக்குனரை பாராட்ட வேண்டும்..

வெஸ்டர்ன் கிளாசிக் என இது நாள் வரை இசையில் மிரட்டி கொண்டிருந்த ஏ ஆர் ரகுமான் இந்த படத்தில் தர லோக்கல் பாணியில் இறங்கி இசையை தெறிக்க விட்டுள்ளார். அடங்காத அசுரன்… வாட்டர் பாக்கெட் பாடல்கள் பட்டையை கிளப்பும். உசுரே நீதானே நீதானே பாடலும் சிறப்பு..

பைட் மாஸ்டரை நிச்சயம் பாராட்ட வேண்டும். முக்கியமாக இடைவேளையில் வரும் அந்த ஆக்ஷன் காட்சி.. மழை நீரும் ரத்தமும் கலந்த காட்சிகளை படமாக்கி இருப்பது வேற லெவல் ரகம்..

தனுஷுக்கு ஏற்ற வகையில் பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்..

மொத்தத்தில் ராயன் படத்தில் நடிகராகவும் இயக்குனராகவும் டபுள் சம்பவம் செய்திருக்கிறார் தனுஷ்..

Dhanush 50th movie Raayan review

23 மணி 23 நிமிடங்களில் உருவான பிதா விமர்சனம்..

23 மணி 23 நிமிடங்களில் உருவான பிதா விமர்சனம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

23 மணி 23 நிமிடங்களில் உருவான பிதா விமர்சனம்..

தமிழ் சினிமாவில் கின்னெஸ் சாதனை முயற்சியாக 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் ‘சுயம்வரம்’.. இந்தப் படத்தில் ரஜினி – கமல் தவிர 90களில் பிரபல நட்சத்திரங்கள் பிரபு, சத்யராஜ் கார்த்தி, பார்த்திபன், பாண்டியராஜன், விஜயகுமார், சுவலட்சுமி, ரோஜா, ஐஸ்வர்யா ரம்பா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது அந்த படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் 23 மணி நேரம் 23 நிமிடங்களில் எடுக்கப்பட்டுள்ள சாதனை படம் தான் ‘பிதா’.

இந்தப் படத்தின் ஷூட்டிங் மட்டுமல்லாமல் படத்தின் போஸ்ட் ப்ரடக்சன் பணிகள் உள்ளிட்ட அனைத்தையும் இந்த நேரத்திற்குள் படக்குழுவினர் முடித்திருப்பது பெரும் சாதனை தான். முக்கியமாக படத்தின் டப்பிங் இல்லாமல் லைவ் ஆடியோவில் ரெக்கார்டிங் செய்திருப்பது சிறப்பம்சமாகும்.

ஸ்டோரி…

ஆதேஷ் பாலா, சாம்ஸ் மற்றும் மாரிஸ் ராஜா ஆகிய மூவரும் ஒரு தொழில் அதிபரை கடத்துகின்றனர். அவரது கார் டிரைவரையும் கடத்துகின்றனர்.

ரூபாய் 25 கோடி பணம் கேட்டு தொழில் அதிபரின் மனைவியை மிரட்டுகின்றனர்.. கடத்தியவர்களை ஒரு பங்களாவில் அடைத்து வைத்திருக்கும் சூழ்நிலையில் அந்த வழியாக செல்லும் நாயகி அனுவையும் கடத்துகின்றனர்.

தன் அக்கா அனுவை தொலைத்துவிட்ட மாஸ்டர் ஹர்ஷித்.. அப்போது கடத்தல்காரர்கள் அக்காவை கடத்தியது தெரிந்து அவர்களை பின் தொடருகிறான். அதன் பிறகு என்ன நடந்தது?

வாய் பேச முடியாத காது கேளாத இந்த மாஸ்டர் ஹர்ஷித் தன் அக்காவை எப்படி காப்பாற்றினான்.? தொழிலதிபரை மீட்டது எப்படி என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் சினிமா கலைஞர்கள் என்றாலும் ஒரே நாளில் படத்தை முடிக்க வேண்டும் என்பதால் அனைத்து வசனங்களையும் மனப்பாடம் செய்து கிட்டத்தட்ட நாடக கலைஞர்களைப் போல இந்த சாதனை படத்தை முடிக்க உதவி புரிந்துள்ளனர்..

கதையின் நாயகன் ஆதேஷ் பாலா படத்தில் ஹீரோவும் நானே வில்லனும் நானே என்பது போல இரண்டையும் சரிசமமாக செய்திருக்கிறார்.. தொழிலதிபர் மனைவி ரெஹ்னாவை மிரட்டும் காட்சிகளில் அதிர வைக்கிறார்..

ஆனால் 25 கோடி 25 கோடி என்று அடிக்கடி சொல்வதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்..

சாம்ஸ் மற்றும் மாரிஸ் ராஜா இருவரும் கலகலப்புக்கு உதவி இருக்கின்றனர்.. கிடைக்கும் சில நொடிகளில் கூட தன்னுடைய காமெடி பஞ்ச் டயலாக்கைகளை தூவி விட்டிருக்கிறார் சாம்ஸ்.

பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட அம்மா.. வாய் பேச முடியாத தம்பி என இருவரையும் பார்த்துக் கொண்டு தன் காதலைக் கூட தியாகம் செய்யும் அனுவாக அசத்தியிருக்கிறார் நாயகி அனுகிருஷ்ணா.

பல டிவி சீரியல்களில் பார்த்து ரசித்த ரெஹனா இதில் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.. முக்கியமாக இவரது கேரக்டர் படத்திற்கு பெரும் திருப்புமுனை.. அழகிலும் நடிப்பிலும் ரெஹனா செம சூப்பர்.

டெக்னீசியன்ஸ்…

மதியம் 2 மணி அளவில் ஷூட்டிங்கை தொடங்கி அடுத்த நாள் மதியம் 1 மணி அளவில் படத்தை முடித்து இருப்பது நிச்சயமாக ஆச்சரியமாக இருக்கிறது.. முக்கியமாக திருவிழா கூட்டத்தில் படத்தை படமாக்கி இருப்பதும் சிறப்பு..

எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை, ‘ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்’ சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ்.

இயக்குனர் எஸ்.சுகன்… இந்தப் பிதா படத்தை 23 மணி நேரம் 23 நிமிடங்களில் இயக்கி போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளையும் முடித்திருக்கிறார் இயக்குனர் சுகன்.. இந்த சாதனையை முறியடித்து 23 மணி நேரத்தில் கலைஞர் நகர் என்ற ஒரு படத்தையும் இவர் இயக்கியிருப்பது கூடுதல் தகவல்.

ஒரே நாளில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் அம்மா, காதலிக்கும் அக்கா, தொழில் அதிபர் கடத்தல் என, குறுகிய நேரத்தில் சிறப்பாக காட்சிகளை இயக்கியுள்ளார் எஸ்.சுகன்.

இடைவேளைக்கு முன்பு வரை சாதாரணமாக செல்லும் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பாகிறது.. கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்து சுவாரசியமாக இருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பலம்..

வசனம் – பாபா கென்னடி,

ஒளிப்பதிவு – இளையராஜா..

இசை – நரேஷ்

எடிட்டர் – ஸ்ரீவர்சன்

கலை -:கே.பி.நந்து

மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்,

தயாரிப்பு எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ்,

விநியோகம் – ‘ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்’ ஜெனீஷ், பிதா படத்தை ஜூலை 26’ம் தேதி உலகெங்கும் வெளியிடுகிறார்..

Record movie Pitha 23 : 23 review

TEENZ டீன்ஸ் விமர்சனம்.. TEENAGE THINGS

TEENZ டீன்ஸ் விமர்சனம்.. TEENAGE THINGS

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TEENZ டீன்ஸ் விமர்சனம்.. TEENAGE THINGS

வித்தியாசமான படைப்பு என்றால் பார்த்திபனுக்கு தமிழ் சினிமாவில் தனியாக ஓர் இடம் எப்போதும் உண்டு.. அவரது புதிய பாதை தொடங்கி இன்று வரை டீன்ஸ் படத்திலும் அவரது தனித்துவ இயக்கம் தெரிகிறது..

ஸ்டோரி…

சென்னை சிட்டியில் ஒரு காம்பவுண்டுக்குள் இருக்கும் குடியிருப்பில் வசிக்கும் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்கள் அடிக்கடி சந்திப்பது வழக்கம்.. இவர்கள் 13 பேரும் ஒரே வகுப்பில் படிப்பதால் இவர்களுக்குள் நெருக்கம் அதிகம்..

நம் பெற்றோர்கள் நம்மை இன்னும் சின்ன குழந்தைகளாகவே பாவிக்கிறார்கள்.. நாம் வளர்ந்து விட்டோம்.. நமக்கு சுதந்திர வேண்டும் என ஒரு திட்டம் போடுகின்றனர்.

அதன்படி இதில் உள்ள ஒரு தோழியின் கிராமத்து வீட்டிற்கு சென்று அங்கு உள்ள ஒரு பேய் கிணறை பார்க்க வேண்டும் என திட்டமிட்டு பயணிக்கின்றனர்.

இவர்கள் செல்லும் வழியில் போராட்டம் நடப்பதால் காட்டு வழியாக செல்கின்றனர்.. அப்போது இவர்களில் ஒவ்வொருவராக காணாமல் போகின்றனர்.

இதனால் என்ன செய்வது? எவரின் உதவியை நாடுவது என தெரியாமல் தவிக்கின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது? காணாமல் போனவர்களை கடத்தியவர்கள் யார்? என்ன சம்பந்தம்.? இதில் பார்த்திபனின் பங்கு என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

– Parthiban as Janarthanan
– Yogi Babu as Thanigachalam
– Deepesshwaran G as Adhityan
– Frankinsten as Afil
– K.S. Deepan as Ayyankali
– Vishrutha Shiv as Apoorva
– L.A. Rishi Rathnavel as Dhilan
– Sylvensten as Nafil
– Asmitha Mahadevan as Nainika
– D. Amruutha as Nakshatra
– Udaipriyan. K as Nishanth
– B. Kritika as Sara
– D. John Bosco as Sarvesh
– Roshan as Shaun
– Prashitha Nazir as Teena

இதில் 8 சிறுவர்கள் 5 சிறுமியர் என இவர்கள் 13 பேரும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கின்றனர்.. எங்கும் மிகை இல்லாத நடிப்பையும் கொடுத்திருக்கின்றனர்.. ஆனால் இதில் இருவருக்கு மட்டும் காதல் என்ற விஷயம் தேவையில்லாதது.. காதலை வைத்து கதை ஓட்டத்தில் சுவாரஸ்ய ஏற்ப்படுத்த முயன்று அதில் இயக்குனர் பார்த்திபனுக்கு தோல்வி.

பார்த்திபனே ஒரு ஸ்டார் வேல்யூ நிறைந்த நடிகர் தான் இதில் காமெடி என்ற பெயரில் யோகி பாபுவை வைத்து நம்மை நோகடித்து விட்டார்..

பார்த்திபன் ஒரு விஞ்ஞானியாக வருகிறார்.. ஆனால் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை நிதர்சனமான உண்மை..

டெக்னீசியன்ஸ்…

Conceived & Crafted: Parthiban
MUSIC DIRECTOR: D. IMMAN
CINEMATOGRAPHY: GAVEMIC ARY
Action – Stunt Silva / Mukesh
Publicity Designer – Kannadasan DKD
Creative Producers : Keerthana Parthiepan Akkineni
Producers : Caldwell Velnambi, Dr. Bala Swaminathan, Dr. Pinchi Srinivasan, Ranjith Dhandapani And Radhakrishnan Parthiban.
PRO: Nikil முருகன்

இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.. இயேசுவே பேசுவே என்ற பாடல் அழகு சேர்க்கிறது.. ஆனால் படத்தில் இடம்பெற்ற பாடலை விட எல் ராமச்சந்திரன் படத்தொகுப்பில் பிரிகிடா நடித்த இயேசுவே பேசுவே சாங் மேக்கிங் வீடியோ சிறப்பு..

பின்னணி இசையும் கவனிக்க வைக்கிறது. சுவாரசியமாக செல்லும் திரைக்கதையில் திடீரென அடுத்தடுத்து 3 பாடல்கள் வருவது தேவையில்லை..

படம் தொடங்கும்போது ஒவ்வொரு கேரக்டரையும் அவர்கள் பெயர் சேர்த்து வரும் பாடல் அழகு.. அது போல் படம் முடிந்த பிறகு வரும் Bibili Bibili பாடலும் ஆட்டம் போட வைக்கிறது..

GAVEMIC ARY ஒளிப்பதிவில் அந்தப் பேய் கிணறு.. கிளாஸ் ரூம் உள்ளிட்ட அனைத்தும் கொள்ளை அழகு.. அதுபோல ஏலியன் காட்சிகளும் அழகு..

இடைவேளை முன்பு வரை ஜாலியாகவும் விறுவிறுப்பாகவும் செல்லும் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு சறுக்கலை சந்திக்கிறது.. விஞ்ஞானியாக வரும் பார்த்திபன் கிராமத்து வாசியாக வரும் யோகி பாபு உள்ளிட்டோர் காட்சிகளில் எந்த முக்கியத்துவம் இல்லை.. ஏலியன் காட்சிகள் நல்லதொரு கற்பனை என்றாலும் அதற்கான அழுத்தம் இல்லை..

சமீபகாலமாக ஒத்த செருப்பு, இரவின் நிழல் உள்ளிட்ட வித்தியாசமான படைப்புகளை கொடுத்த பார்த்திபன் இந்த டீன்ஸ் படத்தை முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே எடுத்திருக்கிறார்.. எனவே குழந்தைகள் இந்த படத்தின் நிச்சயம் ரசிப்பார்கள்.. அவர்களது பார்வையில் இருந்து இந்த படத்தை பார்த்திபன் படமாக்கி இருப்பது சிறப்பு.. முக்கியமாக டீன் ஏஜ் பிள்ளைகள் பெற்றோர்களை எப்படி பார்க்கிறார்கள் ஆசிரியர்களை எப்படி பார்க்கிறார்கள் இந்த சமூகத்தை எப்படி பார்க்கிறார்கள் என்பதை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்த்திபன் படைத்திருக்கிறார்.

ஆக டீன்ஸ்.. Teenage Things..

Teenz movie review

இந்தியன் 2 விமர்சனம்.; எதுவும் மாறல.. எவனும் திருந்தல

இந்தியன் 2 விமர்சனம்.; எதுவும் மாறல.. எவனும் திருந்தல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியன் 2 விமர்சனம்.; எதுவும் மாறல.. எவனும் திருந்தல

ஸ்டோரி…

சித்தார்த், பிரியா பவானிசங்கர், ஜெகன் மற்றும் ரிஷி ஆகிய நால்வரும் பார்க்கிங் டாக்ஸ் என்ற பெயரில் யூடியூப் நடத்தி வருகின்றனர்.. இதன் மூலம் சமூகத்தில் நடக்கும் குற்றங்களை மக்களுக்கு சொல்கின்றனர்..

இவர்களின் மூலம் குற்றங்கள் அரசுக்கு தெரியவந்து காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.. ஆனாலும் குற்றவாளிகள் ஒரு சில தினங்களில் ஜாமீனில் வெளியே வருகின்றனர்..

இதுபோல குற்றவாளிகளை தண்டிக்க முடியாதா என இவர்கள் ஏங்கி காத்திருக்க வேறு வழியின்றி இந்தியன் தாத்தாவை அழைக்கின்றனர்.. இவர்களின் சமூக வலைத்தள குரல்களைக் கேட்கும் இந்தியன் தாத்தா வருகிறார்.

அதன் பிறகு நடப்பது எல்லாம் படத்தின் மீதிக்கதை.. ஆனாலும் ஒரு நிலையில் கோ பேக் இந்தியன் என கமலுக்கு எதிராக ஊரே திரள்கிறது.. அப்படி என்னதான் நடந்தது? என்பது மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

70 வயதை நெருங்கும் கமல் இன்னும் நாம் வியக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுத்துக் கொண்டே இருப்பார் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்..

இந்தியன் முதல் பாகத்தில் ஒரே மாதிரியான கெட்டப்பில் படம் முழுவதும் வருவார்.. ஆனால் இந்த மொபைல் உலகத்தில் யாராவது வீடியோ எடுத்து தன்னை அடையாளப்படுத்தி விடுவார்கள் என்பதற்காக பல வித கெட்டப்புகளில் வந்து அசர வைக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார்…

தடிமனான மேக்கப் ஐ தாண்டியும் அவரது நடிப்பு வெளிப்படுகிறது.. முக்கியமாக உதடு நாக்கு மூலம் கூட உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.. லஞ்ச அதிகாரிகளை களை எடுக்கும் சகலகலா வல்லவனாக கமல்..

சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், பாபி சிம்ஹா பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷி உள்ளிட்டோர் இருந்தாலும் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

சமுத்திரக்கனி, விவேக், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், ரேணுகா, மனோபாலா, எஸ்.ஜே.சூர்யா, தம்பி ராமையா, காளிதாஸ் ஜெயராம், இமான் அண்ணாச்சி, வினோத் சாகர், மாரிமுத்து ஆகியோரும் உண்டு என சொல்லிக் கொள்ளலாம்..

வில்லன்களில் குல்ஷன் குரோவரும், ஜாகிர் ஹுசைனும் மிரட்டல்.. இந்தியன் 3 படத்தில் தான் காஜல் அகர்வால் காட்சிகள் இருக்கும்.. எஸ் ஜே சூர்யா காட்சிகள் வலு வில்லை.. அதுபோல பாபி சிக்ஹாவும் படத்தில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..

டெக்னீசியன்ஸ்…

ஷங்கர் படங்கள் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது.. இந்தியன் 2 படத்தில் அது அதிகம்.. முக்கியமாக இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளுக்கும் சென்று படமாக்கி இருக்கிறார்..

காலண்டர் பாடலில் ஒளிப்பதிவின் அழகியலும் அழகிகளின் ஆட்டமும் வானத்தில் ஆடுவது போன்ற செட்டப்பும் பிரம்மாண்டத்தின் உச்சம்..

இசையைப் பொருத்தவரை இந்தியன் முதல் பாக அளவிற்கு இல்லை என்றாலும் இன்றைய நவீன ட்ரெண்டுக்கு ஏற்ப துள்ளலான இசையை கொடுத்திருக்கிறார் அனிருத்.. கம் பேக் இந்தியன் என்ற பாடலும் தாத்தா வராரு கதற விட போறாரு என்ற பாடலும் ஆட்டம் போட வைக்கிறது.. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் கேமரா கண்களில் காட்சிகள் அழகோ அழகு..

ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவு, அனல் அரசு, பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா உள்ளிட்ட பல பைட் மாஸ்டர்கள் செய்திருக்கின்றனர்.. ஒவ்வொன்றும் அனல் தெறிக்கும் ரகம்..

ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்திருக்கிறார்.. மூன்று மணி நேர படத்தை கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் இன்னும் விறுவிறுப்பும் சுவாரசியமும் கூடியிருக்கும்..

முத்துராஜ் கலைவண்ணம் படத்தின் பிரம்மாண்டத்திற்கு ஹைலைட்.. வில்லன் ஜாகிர் ஹுசைனின் தங்க மாளிகை கலை வண்ணத்தில் ஜொலிக்கிறது..

வசனகர்த்தா சுஜாதா தற்போது இல்லை.. அந்த கூட்டணியை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என்பது வசனங்களில் தெரிகிறது.

ஷங்கரின் பிரம்மாண்டத்திற்கு நாங்கள் இருக்கிறோம் என்பது போல லைக்கா கை கொடுத்திருக்கிறது.. ஃபாரின் சீன்கள் முதல் பல சீன்களை வியந்து பார்க்க வைக்கிறது..

ஊழல் என்பது அரசு அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளும் மட்டுமில்லை.. அவர்களும் மக்களே.. நம் குடும்பத்திலும் இருக்கிறது… நம் வீட்டில் இருக்கும் லஞ்சப் பேர்வழிகளை களை எடுத்தால் மட்டுமே வீடும் நலம் பெறும் நாடும் வளம் பெறும் என்பதை உணர்த்தும் விதமாக திரைக்கதை அமைத்த ஷங்கரை வெகுவாக பாராட்டலாம்..

நாட்டில் யாரோ ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்காக கம்பேக் இந்தியன் என்று அழைக்கும் சித்தார்த் தன் அம்மா தற்கொலை செய்து கொண்டார் என்பதற்காக கோ பேக் இந்தியன் என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயம் அல்ல.. அவர் சொன்னால் அனைவரும் செய்வார்களா? பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியன் தாத்தா பலம் புரியாதா? என்ற கேள்விகள் எழுகிறது..

கமல் என்ற மிகப்பெரிய நட்சத்திர படத்தில் ரஜினி டயலாக் காட்சிகளை வைத்திருப்பது வேற லெவல்.. அதுபோல ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் கமலைப் புகழ்ந்து ரஜினி பேசியிருப்பார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்..

ஆக இந்தியன் 2.. Come Back Indian

Indian2 movie review

நானும் ஒரு அழகி… மலர்ந்த பெண்மை

நானும் ஒரு அழகி… மலர்ந்த பெண்மை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நானும் ஒரு அழகி… மலர்ந்த பெண்மை

ஸ்டோரி…

நாயகி மேக்னா.. இவர் வயதில் உள்ள பெண்கள் எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தை குட்டி என பெற்று விட்டாலும் இன்றும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.. அப்படியான மகளை நன்றாக படித்து வைக்க வேண்டும் என அம்மா ஆசைப்படுகிறார்.. இதற்காக தன் அண்ணன் மகன் டியூஷனில் சேர சொல்கிறார்.. வேறு வழியின்றி நாயகி மேக்னா அருண் நடத்தும் டியூஷனில் சேர்கிறார்..

இருவருக்கும் திருமணம் செய்து கொள்ளும் உறவு முறை என்றாலும் சில தயக்கங்களால் தங்கள் காதலை வெளிப்படுத்தாமல் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.. இந்த சூழ்நிலையில் நாயகன் அருண் வெளியூர் செல்கிறார்..

அந்த நேரத்தில் திடீரென ஒரு ஐடி மாப்பிள்ளைக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்கிறார் அம்மா.. தன் காதலை மறக்கவும் முடியாமல் ஐடி மாப்பிள்ளை உடன் சந்தோஷமாக வாழவும் முடியாமல் தவிக்கிறார் நாயகி.

இப்படியான சூழ்நிலையில் திருமணம் ஆகி 5 வருடம் ஆனபோதிலும் குழந்தை இல்லை என்பதால் மலடி என்ற அவமானத்துடன் வாழ்கிறார்..

தன் கணவனால் தனக்கு குழந்தை கொடுக்க முடியாது என்பதை அறிகிறார். தான் மலடி இல்லை என்பதை ஊருக்கு நிரூபித்து காட்ட நினைக்கிறார்.. அதன்பிறகு என்ன நடந்தது? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

கிருஷ்ணம்மாள் என்ற கேரக்டரில் நாயகி மேக்னா.. இவர் டிவி சீரியல் நடிகை என்பதால் ஒவ்வொரு ரியாக்ஷனும் தாமதமாகவே வருகிறது.

மலடி இல்லை என்பது நிரூபிப்பதற்காக இவர் சில முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த காட்சிகளில் வலுவில்லை.. மேலும் படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களும் ஏதோ பேருக்கு டயலாக் பேசி நடித்திருப்பதாகவே தெரிகிறது.. நிறைய காட்சிகளில் உதட்டு அசைவம் வசனங்களும் ஒட்டவில்லை..

கதைக்கு ஏற்ப காட்சிக்கு ஏற்ப உணர்வுபூர்வமாக வசனங்களை ஏற்றி இறக்கி பேச வேண்டும்.. ஆனால் ஏதோ மனப்பாடம் செய்துவிட்டு அனைவரும் மைக் முன்னாடி பேசியதாக தெரிகிறது..

நாயகனாக அருண்.. எதற்காக தன் மாமன் மகளுடன் பேச மறுக்கிறார் என்பதற்கான ஒரு காரணம் கூட இல்லை..

நாயகியின் கணவராக ராஜதுரை.. இவர் ஐடி துறையில் பணியாற்றினாலும், வேஷ்டி, முறுக்கு மீசை என்று திருநெல்வேலி மாப்பிள்ளைக்கு கெத்து காட்டி இருக்கிறார்.

சிவசக்தி, சுபராமன், ஸ்டெல்லா ஆகியோரும் உண்டு.. கதையை ஓட்ட நடிக்க முயற்சித்து இருக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் மகிபாலன்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்திருப்பதுடன் இசையும் அமைத்திருக்கிறார் பொழிக்கரையான்.க.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கிருஷ்ணம்மாள்.. அவரின் பெயரை நாயகி கேரக்டருக்கு வைத்து வலு சேர்க்க முயற்சித்திருக்கிறார்.. ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் எந்த ஒரு தாக்கமும் ஏற்படவில்லை..

Naanum oru Azhagi movie review

More Articles
Follows