இவன் யாரென்று தெரிகிறதா? விமர்சனம்

இவன் யாரென்று தெரிகிறதா? விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் விஷ்ணு, வர்ஷா, ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், ராம்ஸ், பக்ஸ் மற்றும் பலர்.
இயக்குனர் சுரேஷ் குமார் எஸ் டி
இசை ரகுநந்தன் என் ஆர்
ஓளிப்பதிவு பி & ஜி

IYT 4

கதைக்களம்…

ஹீரோ விஷ்ணுவுக்கு மட்டும் காதல் செட்டாமல் இருக்கிறது. இதனால் காதலிக்கும் அவரது நண்பர்கள் இவரை அடிக்கடி கலாய்க்கின்றனர்.

இதனால் சேலன்ஞ்ச் செய்து ஒரு சூப்பர் பிகரை காதலிக்க புறப்படுகிறார்.

அப்போதுதான் நாயகி வர்ஷாவை சந்திக்கிறார். அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில் இவரது முன்னாள் தோழியும் இவரது வாழ்க்கையில் குறிக்கிடுக்கிறார்.

இவர் செய்த சேலன்சில் வெற்றிப் பெற்றாரா? என்பதே ‘இவன் யாரென்று தெரிகிறதா’ படத்தின் கதை.

IYT 2

கேரக்டர்கள்…

விஷ்ணு மற்றும் வர்ஷா இருவரும் யதார்த்த காதலர்களாக வருகிறார்கள். இன்றைய காதலர்களை அடிக்கடி நினைவுப்படுத்துகின்றனர்.

போலீஸ் உடையிலும் வர்ஷா சற்று கவர்ச்சியாகவே தெரிகிறார்.

இஷாரா இதில் 2வது நாயகியாக வருகிறார். தனக்கான வேலையை கரெக்ட்டாக செய்திருக்கிறார்.

வழக்கமான காதல் கதையாக தொடங்கும் இப்படம் திடீரென இரண்டாம் பாதியில் காமெடி களமாக மாறி ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கிறது.

IYT 1

மும்பை பாய்ஸ்களாக வரும் அருள்தாஸ், பக்ஸ், ராம்ஸ் கூட்டணியின் காமெடி சரவெடிதான்.

மிரட்டல் வில்லன்களாகவே இதுவரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இதில் முற்றிலும் செம காமெடி.

எதுன்னாலும் ஆர்டர் பண்ணி சாப்பிடுன்னு சொன்னா ஸ்ரீலங்காவில் இருந்து மீன் ஆர்டர் பண்ணி சாப்பிட்டுறான் பாஸ்.

குளிரா இருக்குதுன்னு நெருப்பு கோழியை ஆர்டர் பண்ணி சாப்பிடுறான் பாஸ் என்று சொல்லும் காட்சிகளில் நிச்சயம் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.

அதிலும் ஜெயப்பிரகாஷ்க்கு போன் போட்டு, இவர்கள் மொக்கை மேல் மொக்கை வாங்கும் காட்சிகள் அக்மார்க் காமெடி.

aana porandhavan iyt

அதுபோல் இவர்களின் பாடலும் நல்ல குத்து ரகம். அதிலும் ராம்ஸ் சேவிங் செய்துவிட்ட பின் யாரென்றே தெரியவில்லை.

அப்பா கேரக்டரில் வரும் ஜெயப்பிரகாஷ், ஹீரோ நண்பர்கள் அர்ஜுன், ராஜ்குமார் ஆகியோர் நல்ல தேர்வு.

யுகபாரதி வரிகளில் என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் கேட்கலாம்.

முதல்பாதியை நாடகத்தனம் இல்லாமல் கொண்டு சென்றிருந்தால் இவன் நிச்சயம் அதிகம் ரசிக்கப்பட்டு இருப்பான்.

‘இவன் யாரென்று தெரிகிறதா’ இவனை தெரிந்துக் கொள்ள ஒருமுறை பார்க்கலாம்

அதாகப்பட்டது மகாஜனங்களே விமர்சனம்

அதாகப்பட்டது மகாஜனங்களே விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்


நடிகர்கள் :
உமாபதி, ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், பாண்டியராஜன், மனோபாலா, ஆடுகளம் நரேன், யோக்ஜேப்பி, தம்பிராமையா மற்றும் பலர்.
இயக்கம் : ஆர். இன்பசேகர்
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : பிகே வர்மா
எடிட்டர்: ஜி. மதன்
பி.ஆர்.ஓ. : பிடி செல்வகுமார் (ராஜ்குமார்)
தயாரிப்பு : சிவரமேஷ் குமார் (சில்வர் ஸ்கீரின்)

கதைக்களம்…

நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி அறிமுகமாகியுள்ள படம் இது.

உமாபதி ஒரு கிதாரிஸ்ட். எப்போதுமே அதனுடன் எங்கும் திரிபவர். அந்த கிதாரிலேயே அவரின் போட்டோ, போன் நம்பர், அட்ரஸ் எல்லாவற்றையும் குறிப்பிட்டு இருப்பார்.

ஒரு முறை இவருடைய செக்யூரிட்டி நண்பருக்கு உதவ செல்கிறார். அன்றைய தினத்தில் அந்த வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து விடுகின்றனர்.

அப்போது தவறுதலாக அந்த கிதாரை அங்கு மிஸ் செய்துவிடுகிறார்.

இதனால் போலீஸ்க்கு தடயம் கிடைத்துவிடும் என்பதால் அந்த வீட்டிற்குள் டிடெக்கிவ் ஏஜெண்டாக செல்கிறார்.

அதன்பின்னர் அங்கு நடக்கும் சுவராஸ்யங்களே இப்படத்தின் கதை.

கேரக்டர்கள்…

நடிப்பை விட நடனத்தில் அதிகம் ஸ்கோர் செய்கிறார் உமாபதி. இவரது குரலில் கம்பீரம் இல்லாததால் ஹீரோ கொஞ்சம் தடுமாறுகிறார்.

ரேஷ்மா ரத்தோர் கண்களை உருட்டி அழகாக வருகிறார். ஆக்ஷன் மற்றும் பாடல்களில் கவர்கிறார்.

கருணாகரன் தன்னை பலசாலியாக காட்டிக் கொள்ளுவது கொஞ்சம் புதுசு.

நிறைய அடி வாங்கிய பின் குடும்ப சென்டிமெண்டை கூறி அடியாட்களை கருணாகரன் கவர்வது ரசிக்க வைக்கிறது.

எதற்காக திருடர்கள் வந்தார்கள் என்பது தெரியாமல் ஆடுகளம் நரேன் தவிப்பது அருமை.

எவரும் எதிர்பாராத வகையில் மனோபாலா வில்லனாக மாறுவது செம காமெடி ட்விஸ்ட்.

யோக் ஜேப்பி மற்றும் பாண்டியராஜன் கேரக்டர்களை நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் அனைத்து பாடல்களும் அருமை. ஒரு குத்து பாடல் மற்றும் இதமான மெலோடிகள் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

ஏனடீ, நீ என்னை இப்படி ஆக்கின..? அந்த புள்ள மனசுக்குள்ள, இதற்குத்தானே ஆகிய பாடல்கள் இதமான ராகம்.

யுகபாரதியின் வரிகளும், ஸ்ரேயா கோஷல் தேன் குரலும் இமானின் எவர் கிரீன் மேஜிக் என்றே சொல்லலாம்.

ஆனால் டூயட் பாடல்கள் அனைத்தையும் ஒரே போலவே படமாக்கிவிட்டார். கொஞ்சம் வைரைட்டி காட்டியிருக்கலாமே.

வர்மாவின் ஒளிப்பதிவும் மதனின் படத்தொகுப்பு ரசிக்க வைக்கிறது.

படத்தின் கதையில் பெரிதாக புதுமையில்லை என்றாலும் கலகலப்பாக படத்தை எடுத்து செல்கிறார் இயக்குனர்.

க்ளைமாக்ஸில் அதாகப்பட்டது மகாஜனங்களே… ஒரு பொருளை தொலைத்துவிட்டு எப்படி எங்கோ தேடுகிறோம்? என விளக்கம் அளித்து, டைட்டிலை சொல்லிவிட்டார்.

தம்பிராமையாவை அருமையாக பயன்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கலாம்.

ஆனால் அவரது மகன் படம் என்பதால் ஒரே ஒரு காட்சியில் மட்டும் காட்டிவிட்டு மோசம் செய்துவிட்டார்.

அதாகப்பட்டது மகாஜனங்களே… ஒருமுறை பார்க்கலாம்.

இவன் தந்திரன் விமர்சனம்

இவன் தந்திரன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கௌதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி, சூப்பர் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, மயில்சாமி, கயல் தேவராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : ஆர் கண்ணன்
இசை : தமன்
ஒளிப்பதிவாளர் : பிகே வர்மா
எடிட்டர்: ஜி. மதன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : ஆர் கண்ணன்

ivan thanthiran audio launch photos

கதைக்களம்…

என்ஜீனியரிங் முடித்துவிட்டு சரியான வேலை கிடைக்காததால், கௌதமும் ஆர்.ஜே. பாலாஜியும் சென்னை ரிச் ஸ்ட்டீரிட்டில் எலக்ட்ரானிக் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றனர்.

ஒருமுறை அமைச்சர் சூப்பர் சூப்பராயன் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்த செல்கின்றனர். அமைச்சரின் மச்சான் ஸ்டண்ட் செல்வா கேமராவுக்கான பணத்தை தராமல் அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.

இதனிடையில் சரியான வசதியில்லாத காரணத்தினால் பல இன்ஜீனியரிங்களை மூட உத்தரவுவிடுகிறார் அமைச்சர்.

இதனால் ஹீரோயின் ஷ்ரத்தா மற்றும் பல மாணவ மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு மாணவன், தற்கொலை செய்துக் கொள்ள, அதை நேரில் பார்க்கிறார் கௌதம்.

எனவே அமைச்சரை பழிவாங்க, அவர் செய்யும் ஊழல் மற்றும் அவர் பெறும் லஞ்ச வீடியோ ஆதாரத்தை டெக்னிக்கலாக படம் பிடித்து, யூடிப்பில் பதிவேற்றம் செய்கிறார் கௌதம்.

இதனால் தன் பதவிக்கு ஆபத்து வர, அமைச்சர் என்ன செய்தார்? மற்ற மாணவர்களுக்கு நீதி கிடைத்ததா? இவருக்கான சிசிடிவி பணம் கிடைத்தா? என பல கேள்விகளுக்கு க்ளைமாக்ஸில் பதில் சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

Ivan-Thanthiran-Movie-Posters-5

கேரக்டர்கள்…

ரங்கூனில் முதல் வெற்றியை தொடர்ந்து இதில் சிக்ஸர் அடித்துள்ளார் கௌதம் கார்த்திக்.

அவருக்கான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருப்பது சிறப்பு. இன்ஜினியரிங் மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு யாரிடமோ கையை கட்டி வேலை செய்யாமல் தானே செய்யும் பிஸினஸ் மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாய் அமையும்.

கூவத்தூர் லாட்ஜ், ரியல் எஸ்டேட், கொம்பன் வில்லன், நமீதா ஸ்நேகா காஜேஜ் விளம்பரம் என எதையும் விட்டு வைக்காது ஆர்.ஜே. பாலாஜி தரும் டைமிங் கவுண்டர்கள் படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறது.

ஐடி மாணவர்கள் படும் அவஸ்தையை ஒரு காட்சியிலும் மற்ற காட்சியில் ஐடி மாணவர்களின் சிறப்புகளை ஆர்ஜே பாலாஜி சொல்லும் காட்சிகள் அசத்தல். (ஆனால் அதை ஹீரோ சொல்லியிருக்கலாமே..?)

நாயகி ஷ்ரத்தா அழகிலும் நடிப்பிலும் ரசிகர்களை ஈர்க்கிறார். காதலை வெளிப்படுத்தும் விதம் புதுமை.

கௌதம் காதலை சொல்ல, பிறகு முடிவை சொல்கிறேன் என ஷ்ரத்தா சொல்லாமல் வேறுமாதிரியாக சொல்வது ரசிக்க வைக்கிறது.

20 வருசத்துக்கு அப்புறம் பிடிச்சா அப்போ மேசேஜ் பண்றேன் என இவர் சொல்லும்போது, அப்போ சாரி ஆண்ட்டி என என் மகன் ரிப்ளை செய்வான் என கௌதம் கூறுவது நச்.

ஒரு காதலுக்காக 20 வருடங்கள் காத்திருக்க முடியாது என்பதை நாசூக்காக சொன்னதற்காக வசனகர்த்தாவை பாராட்டலாம்.

Ivan-Thanthiran-Movie-Posters-2

ஸ்டண்ட் செல்வா சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார். தன்னை கொன்றுவிட்ட மாமாவிடம் எதற்காக உண்மையை சொல்லனும் என்று உயிர் விடும் காட்சி அருமை. அந்த ரூம் பைட்டும் பாராட்டுக்குரியது.

அரசியல்வாதி கேரக்டரில் மிடுக்காக இருக்கிறார் சூப்பர் சுப்பராயன். வீடியோ ஆதாரத்தில் மாட்டிக் கொள்ளும்போது, அதற்கு வேறு ஒரு மாதிரியான டயலாக் பேசுவது அரசியல்வாதிகளுக்கே உரிய குணத்தை பிரதிபலிக்கிறார்.

பஞ்சாயத்து செய்ய வரும் மயில்சாமி, கம்யூட்டர் பார்ட்ஸ் பெயர்கள் தெரியாமல் தவிப்பது அருமை.

ஒரே காட்சியில் வந்தாலும், ஓர் ஏழை அப்பாவின் தவிப்பை உணர வைக்கிறார் கயல் தேவராஜ்.

Ivan-Thanthiran-Movie-Posters-6

தொழில்நுட்ப கலைஞர்கள்…

என்னை மெதக்கவிட்ட பாடல் நல்ல தேர்வு. இரண்டே மணி நேரத்தில் சொல்ல வந்த விஷயத்தை இயக்குனர் சரியாக சொல்லியிருப்பது சூப்பர்.

பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற வைக்கிறது. இதுவரை ரசிகர்களுக்கு போதும் என மற்ற காட்சிகளை வெட்டி எடுத்த எடிட்டர் ஆர்.கே. செல்வாவுக்கு வாழ்த்துக்கள்.

இன்றைய இயந்திர வாழ்க்கையின் பலம் இன்ஜினியரிங் மாணவர்களே என்பதை சொல்லி மாணவ சமுதாயத்தை உயர்த்தியிருக்கிறார்.

படத்தின் ஒவ்வொரு காட்சியையும் போரடிக்காமல் இயக்கியிருக்கிறார் கண்ணன்.

இப்படத்தை நம்பிக்கை வைத்து ரிலீஸ் செய்திருக்கும் தனஞ்செயனை கைகுலுக்கி பாராட்டலாம்.

இவன் தந்திரன்… இன்ஜினியரிங் மந்திரம்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் விமர்சனம் AAA

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் விமர்சனம் AAA

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, சனாகான், மொட்டை ராஜேந்திரன், மகத் மற்றும் பலர்.
இயக்கம் : ஆதிக் ரவிச்சந்திரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : கிருஷ்ணன் வசந்த்
எடிட்டர்: ரூபன்
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே அஹ்மது
தயாரிப்பு : மைக்கேல் ராயப்பன்

கதைக்களம்…

மைக்கேல் ஒரு தாதா செந்தாமரையின் அடியாள். இவரே அந்த மதுரையின் எல்லா சம்பவங்களையும் சிறப்பாக செய்வதால் மதுரை மைக்கேல் ஆகிறார்.

இவருக்கு செல்வி (ஸ்ரேயா) மீது காதல். அப்புறம் என்ன? நமக்கு தெரிந்த கதைதான். நீங்க திருந்தனும். நாம நிம்மதியா வாழனும். இந்த ஊர் வேணாம் என ஸ்ரேயா சொல்கிறார்.

இதனால், சிம்பு என்ற மதுரை மைக்கேல் திருந்த நினைக்கிறார்.

ஆனால் அதற்கு முன் ஒரு சம்பவத்தை செய்ய சொல்கிறார் செந்தாமரை. அதை செய்ய போக அவர் மாட்டிக் கொள்கிறார்.

அதன்பின்னர் சில வருடங்கள் சிறைக்கு சென்று, தப்பி ஓடி துபாய் சென்று தன் பெயரை மாற்றி அஸ்வின் தாத்தாவாக வலம் வருகிறார்.

அங்கு 26 வயதான தமன்னா இவரை காதலிப்பதாக நினைத்து, இவரும் டூயட் பாடுகிறார்.

ஆனால் தமன்னா இவரை காதலிக்க வில்லை என தெரிந்ததும் இவர் எடுக்கும் முடிவே படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

சிம்பு இந்த படத்திற்காக தன் உடலை ஏற்றியிருக்கிறார். பின்னர் இறக்கியிருக்கிறார். இந்த உடம்பை வைத்து லுசுப் பெண் முதல் இன்னைக்கு நைட் மட்டும் நீ கேர்ள்ட் ப்ரெண்ட் என பாடலை எல்லாம் பாடுகிறார்.

ஸ்ரேயா உடன் காதல் காட்சிகளில் சில ரொமான்ஸ் இருந்தாலும் பன்ச் பேசியே பயமுறுத்துகிறார்.

இவருடன் மகத், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் என பலர் இருந்தும் காட்சிகள் சுவாரசியம் இல்லை.

தமன்னா கவர்ச்சியாகவும் அழகாகவும் வந்து ரசிக்க வைக்கிறார். அஸ்வின் தாத்தாவை லவ் செய்யும் காட்சிகளில் கொஞ்சம் ஓவர்தான்.

ஆனால் கடைசியில் வைக்கும் ட்விஸ்ட் எதிர்பாராத திருப்பம்.

3வது சிம்பு நன்றாக ஸ்டைலிஷ் ஆக வருகிறார். அந்த கெட்டப் கூட அசத்தல்தான்.

அஸ்வின் தாத்தாவுடன் வரும் கோவை சரளா, சுவாமிநாதன், மனோகர் ஆகியோர் எல்லாம் எதற்கு என்றே தெரியவில்லை.

கரண்ட் அடித்து விழும் ஷாக் பார்ட்டியாக ஒய்ஜி மகேந்திரன் வருகிறார். இவருக்கு லிப் லாக் சீன்கள் வேறு.

விஜயகுமார் மற்றும் கஸ்தூரி ஆகியோர் ஓரிரு காட்சிகளில் வருகின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவும் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இல்லை என்றால் எந்தளவுக்கு நீங்கள் ரசிப்பீர்கள் எனத் தெரியவில்லை.

யுவன் மற்றும் சிம்பு கூட்டணி என்றாலே பாடல்கள் அட்டகாசம்தான்.

இதில் ஒரு பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். ரத்தம் என் ரத்தம் என்ற பாடல் சிம்புவையும் அவருக்காக எதையும் செய்யும் ரசிகர்களை குறித்த பாடலாக அமைந்துள்ளது.

மற்ற இரண்டு பாடல்களை சிம்பும், அடுத்த இரண்டை யுவனும் எழுதியுள்ளனர்.

அஸ்வின் தாத்தா மற்றும் மதுரை மைக்கேல் கேரக்டர்களின் தீம் சாங் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெறும்.

இயக்கம் பற்றிய அலசல்…

முதல் பாகத்தில் என்ன சொல்ல வருகிறார்? இரண்டாம் பாகத்தில் என்ன சொல்ல போகியார் எனத் தெரியவில்லை.

இதில் ஜீவி பிரகாஷ் வேறு நன்றிக் கடனாக வருகிறார்.

படத்தில் காதலை போற்றும் டயலாக்குகளுக்கு பஞ்சமில்லை. ஆண்களின் காதலை உயர்வாக சொல்லி, பெண்களின் காதலை கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.

பிட்டு படம் டைரக்டர் என்பதால் இப்படியான காட்சிகளை வைத்திருக்கிறாரா? எனத் தெரியவில்லை.

இதில் ஒரு காட்சியில் இயக்குனரும் வருகிறார். ஆனால் ரம்யா என்ற தமன்னா கேரக்டரை பெயரை சொல்லாமல் தமன்னா தமன்னா என்று இவர் அழைக்கிறார்? அது ஏன்? (அட அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் எல்லாம் இதை கவனிக்கலையா?)

மொத்தத்தில் AAA…. எஸ்கேப் எஸ்கேப் எஸ்கேப்

வனமகன் விமர்சனம்

வனமகன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜெயம் ரவி, சாயிஷா, தம்பி ராமையா, வருண், ஷாம் பால், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : விஜய்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவாளர் : திரு
எடிட்டர்: ஆண்டனி
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : ஏஎல் அழகப்பன்

vanamagan stills 1

கதைக்களம்…

அந்தமான் தீவில் புத்தாண்ட கொண்டாட தன் தோழிகள் மற்றும் நண்பர்களுடன் செல்கிறார் நாயகி காவ்யா (சயிஷா)

அப்போது அனுமதி மறுக்கப்பட்ட பகுதிக்குள் ஒரு த்ரில்லுக்காக செல்கின்றனர்.

அங்கே எதிர்பாரா விதமாக காட்டுவாசியான நாயகன் மீது காரில் மோதிவிடுகின்றனர்.

இதனால் அவரின் மருத்துவத்திற்காக சென்னைக்கு அழைத்து வந்துவிடுகின்றனர்.

அதன்பின்னர் காட்டுவாசி நம் நாட்டுக்கள் பல கலாட்டக்களை செய்ய அதை ரசிக்கிறார் நாயகி.

இதனிடையில் அந்த காட்டுக்குள் வின்டு மில் கட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிட்டுகிறது.

இந்த இரண்டையும் ஒரு முடிச்சில் இணைத்து, ஒரு வளமான விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

vanamagan sayyesha

கேரக்டர்கள்…

தன் பெயரிலேயே ஜெயம் இருப்பதால் அதனை தக்கவைத்துக் கொள்ள போராடும் ஜெயம் ரவி இதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

படத்தில் நமக்கு புரியாத வார்த்தைகளை இவர் பேசினாலும் நடிப்பின் மூலம் ஒன்ற வைக்கிறார்.

குரங்கு போல தாவுவதும், புலியிடம் இருந்து குழந்தையை காப்பாற்றுவதும், சயிஷாவின் தழுவலுக்கு சாய்வதும் என ரசிக்க வைக்கிறார்.

தமிழ் ரசிகர்களின் பிடித்தமான புதுவரவு சயிஷா. நடனத்தில் மேனியை ரப்பராக வளைத்து நமக்கு சுளுக்கு வரவைக்கிறார்.

காட்டுவாசியிடம் காட்டும் அன்பாகட்டும், கண்களில் காட்டும் கவர்ச்சியாகட்டும் என அனைத்திலும் கட்டி போட்டுவிடுகிறார் இந்த வனமகள்.

நமக்கு கூகுள் மேப் போல, இவிங்களுக்கு ஈகிள் மேப் என்பது தொடங்கி, இடிச்ச சுவர் வழியே வெளியே போனா என்ன? கேட்கும் வரை தன் கேரக்டரை நிற்க வைக்கிறார்.

தான் வளர்த்த பாப்பா, இன்று வளர்ந்து மேடம் ஆகிவிட்டதால், மேடம் பாப்பா என்று கூப்பிடுவது கூட அழகுதான்.

தன் வழக்கமான நடிப்பால் பிரகாஷ் ராஜ் ஈர்க்கிறார். புதுநடிகர் ஷாம் பால் இந்த மிரட்டல் போலீஸ் யார்யா? என கேட்க வைக்கிறார்.

தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி, சண்முகராஜா, வருண் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

vanamagan duet

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மதன் கார்க்கியின் வரிகளுக்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசை சூப்பர் மேட்ச்.

செயற்கையாக நாட்டை விட இயற்கையான காடுதான் எப்போதுமே அழகு என்பதை ஒளிப்பதிவாளர் திரு நிரூபித்து இருக்கிறார்.

டேம்ன் டேம்ன் பாடல், யம்மா அழகம்மா மற்றும் பச்சை உடுத்திய காடு ஆகியவை இதமான ராகம்.

ஸ்டண்ட் சில்வாவின் சண்டைக் காட்சி மற்றும் அந்த புலி பைட் சீன் அருமை.

vanamagan press meet

இயக்கம் பற்றிய அலசல்…

நாம் புலிக்கு உதவினால், அந்த விலங்கு கூட நம் அன்புக்கு வசமாகும் என்பதை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

குடும்பத்துடன் பார்க்கும் வகையில் படங்களை கொடுப்பதில் எப்பவுமே விஜய் பெஸ்ட்தான். இதிலும் நிறைவாக செய்துள்ளார்.

நம்மிடம் இருக்கும் ஏசியை விட காடுகளில் குளிர் அதிகமாக இருக்கும். அங்கே மேலாடை இல்லாமல் இருக்கும் ஹீரோ, இங்கே டிரெஸ் போட்டும் கொண்டும் ரூம் ஏசிக்கு நடுங்குவது ஏன்.? எனத் தெரியவில்லை.

அழுக்கு காட்டுவாசி ஒரு பாடலில் மட்டும் அழகுவாசியாக மாறுவது ஏனோ? அது கனவுப் பாடலாக இருந்தாலும், யதார்த்தை மீறி திணிக்கப்பட்டது போல உள்ளது.

பிரகாஷ்ராஜ் துப்பாகியால் சுட்டபின் அவ்வளவு நேரம் ஜெயம் ரவி பைட் செய்து பிழைப்பது எப்படி?

இதுபோன்ற சில குறைகளை தவிர்த்தால் வனமகனையும் வனமகளையும் ரசிக்கலாம்.

வனமகன்… ரசிகர்களின் வசீகரன்

உரு விமர்சனம்

உரு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கலையரசன், தன்ஷிகா, மைம் கோபி, டேனியல் மற்றும் பலர்.
இயக்கம் : விக்கி ஆனந்த்
இசை : ஜோஹன்
ஒளிப்பதிவாளர் : பிரசன்னா எஸ் குமார்
எடிட்டர்: சான் லோகேஷ்
பி.ஆர்.ஓ. : சி.என். குமார்
தயாரிப்பு : வையம் மீடியாஸ்

கதைக்களம்…

எழுத்தாளர் கலையரசன். ஒரு காலத்தில் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்டவர். பின்னர் நாளடையில் அவரின் கதைகளுக்கான மவுசு குறையவே விரக்தியில் இருக்கிறார்.

இவரின் மனைவி தன்ஷிகா. கணவருக்கு வேலையில்லாமல் இருப்பதாலும், குழந்தையில்லாமல் இருப்பதாலும் மிகுந்த கவலையில் இருக்கிறார்.

இந்நிலையில் ஒரு த்ரில்லர் கதைக்கான கரு கிடைக்கவே அதை எழுத வேண்டி தனிமைக்காக அடர்ந்த மேகமலைக்கு செல்கிறார்.

அங்கு இருந்து கதை எழுத, அவரை சுற்றி பல அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகிறது.

ஒரு உருவம் இவரை துரத்துகிறது. இந்நிலையில் அங்கு தன்ஷிகா வந்து சேர, அவரையும் கொலை செய்ய முற்படுகிறது.

அந்த உருவம் யார்? எதற்காக இவர்களை கொல்ல வேண்டும்? அந்த கதையை எழுதி முடித்தாரா? தன்ஷிகாவை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.


கேரக்டர்கள்…

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதற்காகவே கலையரசனுடன் கை குலுக்கலாம்.

அதே கண்கள், எய்தவன் என ஒரு படி ஏறியவர் உருவிலும் முன்னேறியிருக்கிறார்.

தனியாகவே நின்று ஸ்கோர் செய்பவர் தன்ஷிகா. இதிலும் அசத்தியிருக்கிறார். குட். கீப் இட் அப்.

இவர்களைத் தவிர மைம் கோபி மற்றும் டேனி ஆகியோர் உள்ளனர். அவர்களுக்கான கேரக்டரில் இன்னும் வலு சேர்த்திருக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். அடர்ந்த காட்டுக்குள் அந்த வளைவான பாதைகள் அதில் கார் செல்லும் காட்சிகள் அசத்தல்.

அந்த இரவு வெளிச்சத்திலும் இவரது கேமரா விளையாடியுள்ளது.

பின்னனி இசை யில் ஜோகன் மிரட்டியிருக்கிறார்.

வித்தியாசமான கதையை கொடுத்த விக்கி ஆனந்துக்கு நன்றி. யார் அந்த உருவம் என ரசிகர்களை சீட் நுனியிலே உட்கார வைத்து விடுகிறார்.

ஆனால் அதே நேரம் அந்த தவிப்பை க்ளைமாக்ஸில் கொடுத்திருந்தால் இந்த உருவின் ரேஞ்சே வேற.

அட இவ்வளவுதானா? என்ற க்ளைமாக்ஸ் எண்ண வைக்கிறது.

மேலும், படத்தில் கொஞ்சம் ரொமான்ஸ், காதல் பாடல், காமெடி என சேர்ந்திருந்தால் படத்திற்கு கூடுதல் பலம் கிடைத்திருக்கும்.

உரு… உருப்படியானவன்

More Articles
Follows