தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்.. நாவல் கதை பாணியில் ஒரு த்ரில்லர் பயணம்.
மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில் ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதா ஸ்ரீநிவாசன், விக்னேஷ் சண்முகம், கிரிஜா ஹரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் சிலம்பரசன், கிருபாகர், செல்வி வெங்கடாசலம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
கதைக்களம்..
கதையின் நாயகி அம்ருதா ஸ்ரீநிவாசன். இவர் பிரபல எழுத்தாளர். இயல் என்ற பெயரில் தான் சந்தித்த அனுபவங்களை மிகவும் சுவாரஸ்யமாக நாவலாக எழுதுபவர்.
ஒரு நாவல் எழுதவேண்டும் என்றால் தானே அந்த கேரக்டராக நம் நிஜவாழ்வில் மாற வேண்டும் என நினைப்பவர்.
இவர் தன் வீட்டில் தனியாக இருக்கும் போது உதவி கேட்டு ஒரு நபர் வருகிறார். இவரும் உள்ளே அனுமதிக்க திடீரென அந்த மர்ம நபர் அம்ருதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுகிறார்.
எனவே இந்த கொலை வழக்கை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலசந்திரன்.
இது கூலிக்காக கொலை செய்யும் கூட்டம் இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார் ராஜேஷ். ஆனால் கொலைக்கான நோக்கம் என்ன? யார் கொலை செய்தார்கள்..? அப்படி என்ன குற்றம் செய்தார் நாவலாசிரியர்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்..
இயல் என்றால் இயற்கை என்ற பொருள் உண்டு. எனவே தன் எழுத்துக்களை இயற்கையாகவே காட்டியுள்ளார். அதாவது செயற்கையாக இல்லாமல் வாழ்ந்திருக்கிறார் அம்ருதா.
இவரின் குரல் படத்தின் பெரிய பலம். வார்த்தைகள் ஒவ்வொன்றும் அழுத்தம் திருத்தமாக அழகான உச்சரிப்புடன் உள்ளது. அப்படியொரு வாய்ஸ் ஓவரில் படத்தை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.
நல்ல கதையாக இருந்தால் அந்த வாய்ப்புகள் இனி இவரைத் தேடி வரும்.
இன்ஸ்பெக்டராக ராஜேஷ். நான் ஓவர் திங்கிங் ஆள் கிடையாது. என் அப்பா போலீஸ். அவர் இறந்துவிட்டதால் எனக்கு இந்த வேலை கிடைத்துவிட்டது. அதில் என்னால் முடிந்தவரை நேர்மையாக குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறேன் என இவர் ஜெனிபரிடம் சொல்லும்போது யதார்த்தமாக இருக்கிறது.
காதலனாக வரும் விக்னேஷ் சண்முகம் சரியான தேர்வு. காதலியை துரத்துவதும். பின்னர் விலகுவதும்.. அதன்பின்னர் கூடுவதும் என யதார்த்த நாயகனாக தெரிகிறார்.
காமமா? காதலா? என்ற தவிப்பில் இவர் காதலியை கைவிடும் காட்சிகளில் ஆண்கள் பெருமைப்பட்டு கொள்ளலாம். (சில ஆண்கள்.. ஹிஹிஹி)
இவரைப்போல மற்ற கேரக்டர்களில் வரும் நபர்களும் சரியான நடிப்பை கொடுத்துள்ளனர். எங்குமே மிகைப்படுத்தப்படாத நடிப்பை காணலாம்.
டெக்னிஷியன்கள்..
படத்தின் பின்னணி இசையும் வசனங்களும் பாராட்டும் வகையில் உள்ளது. ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசை நன்றாக உள்ளது. கூடுதல் கவனத்தை பெறும்.
பிரவின் பாலுவின் ஒளிப்பதிவு நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது. காட்சிகளின் லைட்டிங் சென்ஸ் நன்றாக உள்ளது.
இதுபோன்ற திரைக்கதைகள் நம்மை சில நேரத்தில் குழப்பி விடலாம். அண்மையில் க் என்ற படம் கொஞ்சம் அதுமாதிரிதான். ஆனால் 2 முறை பார்த்தால் படம் புரியலாம்.
இந்த படத்தில் கதையை பாமர ரசிகனுக்கும் புரியும் வகையில் கொடுத்துள்ளார் படத்தொகுப்பாளர் ராம் பாண்டியன்.
இயக்குனர் மனோ வெ கண்ணதாசன் என்பவருக்கு இது முதல் படம் என அவரே சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்.. யதார்த்த கதை.. அதில் நாவல்… என அழகாக திரைக்கதை அமைத்துள்ளார்.
படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் இருப்பதால் எதையும் சொல்ல இயலாது. அதுவும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.
கொலைக்கான காரணத்தில் ஒரு மைனஸ் ஒன்று உள்ளது என்றாலும் அதை சொன்னாலும் படத்தின் ட்விஸ்ட் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால் அதை விட்டு விடுகிறோம்.
கொலையாளி என்றாலும் அவனுக்கு ஒரு காரணம் இருக்கும் என்பதால் அதை தவிர்த்து விடுகிறோம்.
ஆக.. சில படங்கள் நம் இதயத்திற்கு நெருக்கமான பக்கத்தில் இருக்கும். அந்த வகையில் இறுதிபக்கம்.. நம் இதயத்தின் பக்கம் எனலாம்.
Iruthi Pakkam movie review and rating in tamil