தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
நகரத்தில் வாழும் பெண்களுக்கு கல்வி எளிதாக கிடைத்துவிடுவதால், அதனின் அருமை அவர்களுக்கு சில சமயம் தெரிவதில்லை.
ஆனால் கிராமத்தில் வாழும் பெண்களுக்கு அதுவும் படிப்பே வேண்டாம் என நினைக்கும் நபர்களுக்கு மத்தியில் வாழும் ஒரு பெண்ணின் கதைதான் இலை.
நாயகி சுவாதி நாராயணன், நன்றாக படித்து உயர வேண்டும் என நினைக்கிறார்.
இவரின் தந்தை தவிர எல்லாரும் பெண் கல்வியை எதிர்க்கிறார்கள்.
இலையின் அம்மாவோ தன் தம்பிக்கு அவளை திருமணம் செய்துவைக்க நினைக்கிறார்.
பத்தாம் வகுப்பு கடைசி தேர்வின் அன்று, இலையின் தந்தையை வில்லன் அடித்து உதைக்கிறார்.
இதனால் தேர்வு செல்ல முடியாமல் தவிக்கிறார் இலை. இறுதியாக தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றினாரா? தேர்வு எழுதினாரா? எப்படி பிரச்சினைகளை எதிர்கொண்டார்? என்ற கேள்விகளுக்கான விடைதான் க்ளைமாக்ஸ்.
இலை கேரக்டரில் முழுவதுமான் தன்னை பொருத்தியிருக்கிறார் நாயகி சுவாதி நாராயணன்.
தனக்கான கதையை, முழுவதும் சுமந்து, இலைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
தேர்வு அன்று, அப்பாவை காண முடியாமல் தவிப்பதும், பள்ளி செல்ல முடியாமல் தவிப்பதும், தன்னுடைய ஒரு வயது தங்கையை கவனிக்க முடியாமல் அழுவதும், குழந்தையை பார்த்துக்க யாராவது கிடைக்க மாட்டார்களா? என தேடுவதும், என அந்த ஒவ்வொரு உணர்வுகளுக்கும் உயிரூட்டியிருக்கிறார் ஸ்வாதி.
நாயகியின் தந்தை, நாயகியின் மாமன் ஜெனிஷ், கன்னட நடிகர் கிங் மோகன், மலையாள நடிகை ஸ்ரீதேவி, கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம், காவ்யா என அனைவரது பாத்திரங்களும் சிறப்பான தேர்வு.
விஷ்ணு வி.திவாகரனின் இசையில் பாடல்கள் ஓகே. சந்தோஷ் அஞ்சலி ஒளிப்பதிவு சிறப்பு.
கல்வி கிடைக்க, பெண்கள் ஏங்குவதை அழகாக காட்சிகளில் உணர வைத்திருக்கிறார் இயக்குனர் பீனிஸ் ராஜ்.
கல்வியை அலட்சியப்படுத்தும் மாணவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார்.
குறும்படம் போல சில காட்சிகள் இருந்தாலும், கல்வி விழிப்புணர்வுக்காக பார்க்கலாம்.
இலை.. கல்வியில்லையேல் எதுவுமில்லை