‘இடி மின்னல் காதல்’ திரைவிமர்சனம்

‘இடி மின்னல் காதல்’ திரைவிமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இடி மின்னல் காதல் விமர்சனம் 3/5

பாவகி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் சார்பில், ஜெயச்சந்தர் பின்னம்நேனி & பாலாஜி மாதவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஸ்டோரி…

நாயகன் சிபி & நாயகி பவ்யா இருவரும் ஒரு நாள் இரவில் ஜாலியாக காரில் சுற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென ஒருவர் மீது மோதி விடுகின்றனர்.. அவரோ இறந்து விடுகிறார்.

நீ இன்னும் சில தினங்களில் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.. இந்த விபத்து வழக்கானால் உன்னால் அமெரிக்க செல்ல முடியாது.. எனவே இங்கிருந்து தப்பி விடு என நாயகி கூறிவிட்டு ஏதும் நடக்காதது போல் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கிறார். நாயகிக்கு உதவியாக நாயகனின் நண்பன் ஜெகனும் உதவி செய்கிறார்..

இதே நேரத்தில் தன் தந்தையை இரவு முழுவதும் காணவில்லை.. எங்கிருக்கிறார் அவருக்கு என்ன ஆனது? என்ன தவிக்கிறான் 15 வயது சிறுவன் ஆதித்யா இவனுக்கு ஆதரவாக அதே குடியிருப்பில் வசிக்கும் விபச்சாரி யாஸ்மின் பொன்னப்பா இருக்கிறார்.. சிறுவனின் தந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அந்த சிறுவனின் தந்தை வாங்கிய கடனுக்காக அவனை கடத்திக் கொண்டு சென்று விடுகிறார் வில்லன் வின்சென்ட் நகுல்.. (ஆனால் ஒரு இளவயது பெண்ணை கடத்துவது போல அமுல் பேபி என்று சொல்லி சொல்லி கடத்துவது நோக்கம் என்ன தான் புரியவில்லை.??)

அதன் பிறகு நடந்தது என்ன.? தந்தையை கொன்றது நாயகன் தான் என்பதை சிறுவன் அறிந்து கொண்டானா.? போலீஸ் விசாரணையில் என்ன தகவல் கிடைத்தது.? நாயகன் அமெரிக்கா சென்றாரா.? நாயகி என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

சிபி, பவ்யா த்ரிகா, ராதா ரவி, பாலாஜி சக்திவேல், ஜெய் ஆதித்யா, ஜெகன், வின்சென்ட் நகுல், மனோஜ் முல்லத், மோனா பெத்ரே, அனுஷா, ஸ்ரீ ராம், சோமு, சிவராஜ், ருத்ரு மற்றும் ஆரண்ய காண்டம் படத்தில் நடித்த யாஸ்மின் பொன்னப்பா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நாயகன் சிபி.. பெண் ரசிகைகளை கவரும் வகையில் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அசால்டாக ரொமான்ஸ் & ஆக்ஷனும் செய்திருக்கிறார்.

கடந்தாண்டு வெளியான ‘ஜோ’ படத்தில் 2ம் நாயகி நடித்த பவ்யா இந்த படத்தில் பவ்யமாக தன் கேரக்டரை செய்திருக்கிறார்.

பாலியல் தொழிலாளியாக யாஷ்மின் பொன்னப்பா.. கூடுதல் கவர்ச்சியாக சூடு ஏற்றி இருக்கிறார்.. அந்தப் பூக்கடை பகுதியில் நிறைய விபச்சாரிகள் இருந்தாலும் இவரின் தோற்றம் அந்த ஏரியாவிற்கு கொஞ்சம் கூட ஒட்டவில்லை..

ஒன்லைன் காமெடியை கொஞ்சமாக செய்து இருக்கிறார் ஜெகன்.. நெட்பிலிக்ஸ்-ல் உங்கள் காதலை விற்று விட்டீர்களா? என விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியையும் கிண்டல் அடித்திருக்கிறார்.

வில்லன் வேடத்தில் வின்சென்ட் நகுல்.. இவர் கயல் படத்தில் நடித்தவர்.. இவருக்கு கொடுத்த ஓவர் பில்டப் மியூசிக் அளவு கூட இவர் நடிக்கவில்லை..

கிறிஸ்தவ பாதிரியராக ராதாரவி, போலீஸ் கான்ஸ்டபிளாக பாலாஜி சக்திவேல் இருவரும் தங்கள் நடிப்பில் கச்சிதம்..

தந்தையை இழந்த சிறுவனாக ஆதித்யாவை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது.. L ஆனால் சில காட்சிகள் ஓவர் ஆக்டிங் தவிர்த்து இருக்கலாம்..

ஒரு காட்சியில் ராதாரவி நாயகனை சிறுவன் இருக்கும் இடத்திற்கு கொண்டு செல்கிறான்.. பார்த்த நொடியில் அவனுக்கு என்ன பிரச்சனை என கண்டுபிடித்து நாயகன் காப்பாற்றுவது நம்பும்படியாக இல்லை..

சிறுவன் ஆதித்யாவின் தந்தையாக மனோஜ் முல்லத்.. சேட்டு கேரக்டரில் செட்டாகி விட்டார்.. விபச்சாரிகளின் சகவாசத்தால் கிளைமாக்ஸில் இவருக்கு கொடுக்கப்பட்ட ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று..

டெக்னீசியன்ஸ் …

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் சிறப்பு.. காதல் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் வழக்கம் போல ஸ்கோர் செய்து இருக்கிறார் சாம்.

ஜெயசந்தர் பின்னம்னேனியின் ஒளிப்பதிவு அருமை.. கலை இயக்குனரின் பணியும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. ஹவுசிங் போர்டு காலனி பூக்கடை ஏரியா உள்ளிட்டவைகளை இரவிலும் அழகாக படம் பிடித்திருக்கிறார்.

இயக்குநர் பாலாஜி மாதவன்.. (இவர் இயக்குனர் பி வாசுவின் உறவினர்.) நடிகர் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்..

யாரேனும் ஒருவர் மீது விபத்து ஏற்படுத்தி விட்டால் அதிலிருந்து தப்பிக்க செல்ல நினைக்கும் பலரின் மத்தியில் நாயகனின் நேர்மை பிடித்திருக்கிறது.. ஆனால் அதேக் கட்டத்தில் தன் காதலனுக்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என நினைக்கும் சுயநலவாதி நாயகி கேரக்டரையும் காட்டி இருப்பது காதலர்களின் கருத்து முரண்பாட்டையும் காட்டுகிறது..

நாயகன் என்ன வேலை பார்க்கிறார் அவர் எதற்காக வெளிநாடு செல்கிறார் என்பது புரியாமல் இருக்கும் கட்டத்தில் திடீரென இந்த சிறுவனை காப்பாற்ற வருவது ஏதோ திணிக்கப்பட்ட காட்சியாகவே தெரிகிறது..

வில்லனை இடியாகவும் நடந்த விபத்தை மின்னலாகவும் காதலை காதலாகவும் காட்டி இடி மின்னல் காதல் என தலைப்புக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி மாதவன்..

Idi Minnal Kadhal movie review

‘நேற்று இந்த நேரம்’ பட விமர்சனம்

‘நேற்று இந்த நேரம்’ பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நேற்று இந்த நேரம்’ பட விமர்சனம்

ஸ்டோரி…

நான்கு இளைஞர்கள் மூன்று இளம் பெண்கள்.. இவர்கள் ஏழு பேரும் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர்.. இவர்களில் ஒரு ஆணைத் தவிர மற்றவர்கள் காதலர்கள்.. அங்கே ஒரு காட்டு பங்களாவில் தங்கி உல்லாசமாக இருந்து குடித்துவிட்டு கூத்தடிக்கின்றனர்.

இதில் நாயகன் ஷாரிக்ஹாசன் ஒரு பிளேபாய்.. இந்த மூன்று தோழிகளிடமும் அவரது கைவரிசையை காட்டி இருக்கிறார்.

ஒன்றன்பின் ஒன்றாக கைவரிசை காட்டிய பின் நாயகியை காதலிக்கிறார்.. ஒரு கட்டத்தில் உன்னை திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை.. வேணும் என்றால் லிவிங் டுதர் முறையில் வாழலாம் என்கிறார் ஷாரிக். இதனை மறுக்கிறார் நாயகி.

இந்த கேப்பில் சிங்கிளாக இருக்கும் மற்றொரு நண்பன் நாயகிக்கு ரூட்டு விடுகிறார்.. இதனால் நண்பர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.. அடித்துக் கொள்(ல்)கின்றனர்..

இந்த சூழ்நிலையில் ஷாரிக் இரவில் காணாமல் போய்விடுகிறார்.. எனவே யார் என்ன செய்தனர்.? அவர் எங்கே சென்றார் என்ற பிரச்சனை வருகிறது.

இதனையடுத்து ஒரு நண்பன் போலீசுக்கு போன் செய்து விடுகிறார்.. போலீஸ் அந்த ஆறு பேரையும் விசாரிக்கின்றனர். அப்போது பல திருப்பங்கள் வருகிறது.

நண்பனுக்கு என்ன ஆச்சு.? அவர் நிஜமாக தொலைந்து விட்டாரா?அல்லது இறந்துவிட்டாரா? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

Shariq Hassan
Haritha
Monica Ramesh
Kavya Amira
Divakar Kumar
Nithin Aaditya
Anand
Aravind
Selva
Bala

நாயகன் ஷாரிக்ஹாசன்.. இவர் நட்சத்திரத் தம்பதிகள் உமா ரியாஸ் கானின் மகன் ஆவார்.. பிளேபாய் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார். உடல் மொழியிலும் கவருகிறார்.. நடனத்திலும் அசத்தியிருக்கிறார்..

ஹரிதா மோனிகா காவ்யா என மூன்று நாயகிகள்.. மூவரும் இளமை துள்ளலுடன் நம்மை ஈர்க்கின்றனர்..

ஷாரிக் முன்னாள் காதலியாக வரும் ஸ்ரேயா (மோனிகா) என்பவர் ஸ்கூல் யூனிஃபார்மில் நம்மை அதிகமாகவே கவருகிறார்.. அவரது வெட்கமும் அவரது கண்களும் அழகு.

நண்பர்களாக நடித்துள்ளவர்கள் தங்கள் பாத்திரத்தை அழகாகவே செய்திருக்கின்றனர். பள்ளிக் காட்சிகளிலும் அதன் பின்னர் கல்லூரி வாழ்க்கை முடித்த பின்னர் அவரது தோற்றங்களிலும் நல்ல மாற்றத்தை காண்பித்து இருக்கின்றனர்..

நண்பனை தொலைத்தவர்கள் எந்த பதற்றமும் இல்லாமல் இருப்பது ஏன்? என போலீஸ் சந்தேகிக்கும் போது நமக்கும் அந்த சந்தேகம் வருகிறது.?!

டெக்னீசியன்ஸ்…

Written & Directed by: Sai Roshan KR

Music: Kevin.N

Original Background Score: Kevin.N

DOP: Vishal.M

Editor: Govindh N

Singers: GV Prakash Kumar, Arivu, Aadithya RK, Ravi G, Paul B Sailus, Kevin.N, Reshma Shyam, Prithvee

Lyrics: Prabhakaran Amudhan, Paul B Sailus, Prithvee, Kevin.N, K.R. Naveen Kumar, Sai Roshan KR, Anand

PRO: Sathishwaran

Producer: K.R. Naveen Kumar

இதுபோன்ற ஊட்டி பிரதேசங்களை காட்டும் போது எத்தனையோ அழகான இடங்களை காட்டி கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டி இருக்கலாம்.. ஆனால் மாறாக போலீஸ் விசாரணை என்ற பெயரில் ஒரே அறையில் திரும்பத் திரும்ப ஒரே இடத்தை காட்டிக் கொண்டிருப்பதும்.. ஒரே காட்சிகளை விசாரணை என்ற பெயரில் திரும்ப வரும் போது நம்மால் பொறுமையாக இருக்க முடியவில்லை..

இந்தப் படத்தில் நடித்துள்ள போலீஸ் கூட திரும்பத் திரும்ப அதையே சொல்லாதீங்க போதும்பா உன் புராணம் என்று என்கிறார் நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

ஒளிப்பதிவாளர் விஷால் கேமரா ஆங்கிள்களை பலவிதங்களில் காட்டி இருக்கலாம். ஒரே ஆங்கில் வைத்துவிட்டு எங்கே சென்றார்.. என்னவோ.?

கெவின் என்பவர் இசை அமைத்திருக்கிறார்.. பின்னணி இசையும் பாராட்டுக்குரியது.. ஜிவி பிரகாஷ் அறிவு ஆராத்யா ஆகியோர் பாடிய பாடல்கள் கவனம் பெறுகின்றன.

சாய் ரோஷன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. போலீஸ் விசாரிக்கும் போது நேற்று இந்த நேரம் என்ன நடைபெற்றது என்பதுதான் படத்தின் மையக்கரு எனவே அதையே படத்தின் தலைப்பாக வைத்து படத்தை நகர்த்தி இருக்கிறார் முக்கியமாக சம்பவங்கள் நடைபெற்ற நேரம் தேதியை குறிப்பிடும்போது கவனம் பெறுகின்றது.

சுற்றுலா தளங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லையா என்ற கேள்வி நிச்சயம் ரசிகர்களுக்கு எழும்.. அதை கூட ஒரு வசன காட்சியாக வைத்து போன.. வாரம் இங்கே ஷூட்டிங் நடைபெற்றது.. சீன் லீக் ஆக கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராக்களை நீக்கி விட்டோம்” என ஒரு செக்யூரிட்டி செல்வது போல காட்சி உள்ளது..

அதைக் கூட கவனித்த இயக்குனர் மற்ற காட்சிகளையும் கொஞ்சம் திறப்படம் கவனித்து இருந்தால் இன்னும் கூடுதல் பலம் பெற்று இருக்கும் ‘நேற்று இந்த நேரம்’..

நண்பர்கள் ஆட்டம் பாட்டம்.. போலீஸ் விசாரணை என விறுவிறுப்பாக கதையைக் கொண்டு சென்றிருந்தால் இன்னும் கூடுதல் கவனம் பெற்று இருக்கும்.

Netru Indha Neram movie review

‘பூமர் அங்கிள்’ பட விமர்சனம்

‘பூமர் அங்கிள்’ பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூமர் அங்கிள் பட விமர்சனம்

ஸ்டோரி…

யோகிபாபு ஒரு ரஷ்ய நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.. சில நாட்களில் மனைவியை பிடிக்காத காரணத்தினால் விவகாரத்து வேண்டும் என்கிறார் யோகி பாபு.

இதனால் யோகி பாபுவின் பூர்வீக அரண்மனையில் சில நாட்கள் மனைவியுடன் தங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. வேறு வழியின்றி அதற்காக ஒப்புக்கொள்கிறார் யோகி பாபு.

அதன்படி இருவரும் பூர்வீக அரண்மனையில் சென்று தங்குகின்றனர். இவர்களுடன் இரண்டு உதவியாளர்களும் வருகின்றனர்.. யோகி பாபு அங்கு வருவதை அறிந்த அவரது பழைய நண்பர்கள் சேசு தங்கராஜ் பாலா ஆகியோரும் வருகின்றனர்.

தங்களுக்குத் திருமணம் ஆகாததற்கு யோகிபாபு தான் காரணம்.. எனவே அவர் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் எனவே அவரது நிம்மதியை கெடுக்க வேண்டும் என திட்டம் போடுகின்றனர். இந்தக் கட்டத்தில் யோகி பாபு பழிவாங்க வேண்டும் என ரோபோ சங்கரும் வருகிறார்.

இந்த சூழ்நிலையில் திடீரென நடிகை ஓவியாவும் வருகிறார்.

அந்த அரண்மனையில் இவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் தான் யோகி பாபு மனைவியின் சதி திட்டம் தெரிய வருகிறது. அவர் ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்காக பணிபுரிகிறார் எனவும் அவரின் சதி திட்டத்தில் தாங்கள் சிக்கிக் கொண்டோம் என்பதையும் இவர்கள் அறிகின்றனர்

அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை. அவளது பின்னணி என்ன.? யோகி பாபு உடன் சென்ற இருவர்கள் யார்? என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

Yogibabu – Nesam
Oviya. – Oviya
Bala. – Billa
Thangadurai- vallarasu
Shesu. – Dawood

கவுண்டமணி பாணியில் அடுத்தவர் உருவத்தை கேலி செய்வதை காமெடியாக நினைத்து பல படங்களை செய்து வருகிறார் யோகி பாபு.. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது..

வெள்ளக்காரிச்சி குள்ளச்சி குண்டச்சி என்பது போலவே பலரையும் ஒருமையில் அழைத்துப் பேசுகிறார்.. இவர் விவகாரத்தைக் கேட்கும் போது ஆலோசனை சொல்லும் பெண்மணியை கூட அகிலாண்டம் என அசால்டாக பேசுகிறார்..

நடிகை ஓவியாவின் கால்ஷீட் கிடைத்துவிட்டது என்பதற்காக காட்சிகள் வைத்தார்களா தெரியவில்லை..? ஒரு ஆட்டம் போட்டு பின்னர் கிளைமாக்ஸ் காட்சியில் சூப்பர் உமனாக வரூகிறார்..

சேசு, தங்கதுரை, பாலா ஆகியோர் படம் முழுவதும் வருகிறார்கள்.. கத்தி கத்தி கொண்டே இருக்கிறார்கள்.. அதிலும் சமீபத்தில் மறைந்த நடிகர் சேஷு இதில் ஓவராகவே கூச்சலிட்டு இருக்கிறார்.

நாம் ஹாலிவுட் பார்த்து ரசித்த சக்திமான்.. ஸ்பைடர் மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்களின் ஆடைகளில் தங்கராஜ் & பாலா வந்து கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனர்.

இவர்களுடன் எம். எஸ் பாஸ்கர், ரோபோ சங்கர், சோனா & மதன்பாபு ஆகியாரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…

Written by : Thillai

Directed by: Swadesh MS

DOP: Subash dhandabani

Editor: Elayaraja S

Music: Santhan & Dharma Prakash

Art Director: P A Anand

Stunts: Suresh

Costume designer: Rebecca Maria

PRO : A. John

Produced By: Anka மீடியா

திரைக்கதைக்காக ரொம்ப மெனக்கட்டு கதை எழுதி வசனங்கள் எழுதி என எந்த பெரிய சிரமமும் மேற்கொள்ளாமல் லாஜிக் பார்க்க கூட வேண்டாம் என முடிவெடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்வதேஷ்..

லாஜிக் பார்க்காதீங்க.. குழந்தைங்க கூட வாங்க… ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை நம்ம லோக்கல் காமெடியன்கள் மூலம் பார்த்து கண்டு ரசியுங்கள் என வசனங்களை எழுதி இருக்கிறார் தில்லை..

இவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் துணைப் புரிந்திருக்கின்றனர். ஒளிப்பதிவை சுபாஷ் தண்டபாணி மேற்கொள்ள இசையை சாண்டன் மற்றும் தர்ம பிரகாஷ் இருவரும் இணைந்து செய்திருக்கின்றனர்..

குழந்தைகள் ரசிக்கும் வகையில் கொடுத்திருந்தாலும் கொஞ்சம் கிராபிக்சில் கவனம் செலுத்தி இருக்கலாம்.. நிறைய காட்சிகளை கிரீன் மேட்டில் கட்டிங் செய்த தோற்றம் தெரிகிறது.

Boomer Uncle movie review

The Goat Life ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனப் பாவங்கள்

The Goat Life ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனப் பாவங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The Goat Life ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனப் பாவங்கள்

கேரளாவில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.. மார்ச் 29ஆம் தேதி தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தி கோட் லைஃப் என்ற இந்த படம் வெளியாகிறது.

மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குனர் பிளஸ்சி என்பவரால் இந்த படம் உருவாகியுள்ளது. பிரிதிவிராஜூக்காக 16 வருடங்கள் காத்திருந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. இதன் இடையில் பிரித்திவிராஜ் பல படங்களில் நடித்துவிட்டார். மேலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் கல்யாணம் குடும்பம் குழந்தைகள் என ஆகிவிட்டது. மேலும் இயக்குனராகவும் மாறிவிட்டார்.

ஆனால் பிரித்திவிராஜ்விடம் 2008 ஆம் ஆண்டு இந்த கதையை சொல்ல ஆரம்பித்து 2018 இல் இதன் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். அதன் பின்னர் கொரோனா காலத்தில் வெளிநாட்டு பாலைவனத்தில் இந்த படக்குழுவினர் மாட்டிக்கொண்டதும் அப்போதும் செய்தியாக வந்தது.

அதற்கு பின்னர் லாக்டவுன் முடிந்து இந்த படத்தை தொடங்கி முடித்து தற்போது திரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இத்தனை கஷ்டங்களை அனுபவித்து உருவாக்கி இந்த ஆடு ஜீவிதம் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

பிரித்விராஜ் – அமலாபால் ஜோடியாக நடிக்க ஜிம்மி முக்கிய வேடத்தில் நடிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஸ்டோரி…

கேரளாவில் நடைபெற்ற கதை என்றாலும் தமிழுக்காக கும்பகோணத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

நஜீப். (பிருத்விராஜ்) மற்றும் அமலாபால் இருவரும் தம்பதியினர்.. தன்னுடைய குடும்ப கஷ்டத்திற்காக வெளிநாடு செல்ல நினைக்கிறார் பிரித்திவிராஜ். அதற்காக வீடு நிலம் எல்லாம் விற்று தன் உறவினர் பையன் ஒருவனுடன் செல்கிறார்.

இவரின் விசா ஏற்பாடுகளை கவனித்த ஏஜென்ட் இவரை ஏமாற்றி ஒரு வழியாக அரபு நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது பிரித்விராஜும் உறவினர் பையனும் பிரிந்து விடுகின்றனர்.. இதை தெரியாமல் சென்று அரபு நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்தில் சிக்கி கொள்கிறார்.

அங்கு மொழி தெரியாமல் சரியான உணவு தண்ணீர் கிடைக்காமல் செம்மறி ஆடுகள் மற்றும் ஒட்டகங்களை மேய்த்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக அடிமைத்தன வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்..

ஒரு கட்டத்தில் தன்னுடன் இந்தியாவில் இருந்து புறப்பட்ட உறவினர் பையனை சந்திக்கிறார். இவர்களுடன் ஒரு ஆப்பிரிக்க நண்பரும் இணைந்து கொள்கிறார்.

அடிமைத்தன வாழ்க்கையில் சிக்கிக்கொண்ட இவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பிக்க திட்டம் போடுகின்றனர்.

அவர்களின் திட்டம் நிறைவேறியதா? அவர்களுக்கு விடுதலை கிடைத்ததா? இந்தியா திரும்பி வந்தார்களா? அவர்களின் நிலை என்ன? அந்த அரேபியர்கள் இவர்களை என்ன செய்தனர்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

Prithviraj Sukuamarn
Amala Paul
Jimmy Jean-Louis
K.R. Gokul
Talib al Balushi
RikA

பிரித்திவிராஜ் ஒரு நடிகராக நமக்குத் தெரியும்.. ஆனால் இதில் அந்த நடிகர் தொலைந்து இருக்கிறார்.. அவர் நஜீப் என்ற கேரக்டரில் வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.. அந்த அளவிற்கு ஒரு அர்பணிப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

செழிப்பான கேரளாவில் இளமையாக தோன்றும் பிரிதிவிராஜ் பாலைவனம் சென்றதும் கொஞ்சம் கொஞ்சமாக கறுத்துப் போவதும் தாடி வளர்ப்பதும் தலைமுடி வளர்வதும் என ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு முகத்தோற்ற அமைப்பில் தன்னை வருத்தி நடித்திருக்கிறார்..

தப்பித்துச் செல்ல நினைக்கும் போது தண்ணீரில் குளிப்பதும் நிர்வாணமாக நடந்து செல்லும் போதும் அடடா என்ன ஒரு அர்ப்பணிப்பான் நடிப்பு என வியக்க வைக்கிறார்.

இனி உங்களைக் காண முடியாது என தப்பித்துச் செல்ல நினைக்கும் போது அங்கு உள்ள ஆடுகள் மற்றும் ஒட்டகங்களிடம் அவர் பேசி செல்லும் போது அவரின் நல்ல உள்ளத்தை காட்டுகிறது… பிருத்விராஜ்க்கு கண்டிப்பாக பல விருதுகள் கிடைக்கும்..

ஆப்பிரிக்க நபராக நடித்திருக்கும் ஹாலிவுட் நடிகர் ஜிம்மியும் உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. தான் மட்டும் தப்பித்துச் செல்ல நினைக்காமல் நடக்க முடியாத இந்தியருக்கு அவர் உதவும் காட்சி வேற லெவல்.. இந்திய சிறுவனுக்காக அவர் உருகி உதவுவதும் நம்மை கண்கலங்க வைக்கும்..

அமலாபால் கொஞ்ச நேரம் மட்டுமே வருகிறார்.. இந்த சீன்கள் போதும் நான் ஸ்கோர் செய்து விடுவேன் என சேலஞ்சாக எடுத்து அதை நிறைவேற்றி இருக்கிறார்.

டெக்னீசியன்ஸ்…

Director – Blessy Ipe Thomas
Production -Visual Romance
Music – A.R. Rahman
Editor -Sreekar Prasad
Cinematography – Sunil KS
Audiography – Resul Pookuttty

இப்போது டெக்னாலஜி வளர்ந்து விட்ட காலத்தில் செல்போன் முதலிய தொலைத்தொடர்பு சாதனங்கள் இருக்கின்றன.. ஆனால் ஒரு காலத்தில் அவையெல்லாம் இல்லாத போது இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பாலைவனத்தில் சிக்கிய இந்தியர்கள் என எளிமையாக இந்த கதையை நாம் ஒரு வரியில் சொல்லிவிட்டாலும் அதில் பட்ட கஷ்டங்களை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பிளஸ்சி.

ஒளிப்பதிவாளர் சுனில் அவர்களின் கைவண்ணம் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.. முக்கியமாக ஃபிளாஷ்பேக் காட்சிகளில் அமலா பாலுக்கு பிரித்விராஜ் நீச்சல் கற்றுக் கொடுக்கும் அந்த ஒரு காட்சி கவிதை கவிதை கவிதை.. உதட்டில் முத்தமிட்டு உணர்வுபூர்வமான காதலை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்..

மொழி தெரியாமல் பாலைவனத்தில் அவர் படும் கஷ்டங்கள் தன் நண்பனை நினைத்து உருகும் காட்சிகள் தன் குடும்பத்தை நினைத்து ஏங்கும் காட்சிகள் விடுதலை கிடைக்காதா என அழுகின்ற காட்சிகள் என ஒவ்வொன்றையும் உணர்ந்து நஜீப் என்ற கேரக்டரை நச்சென்று செய்திருக்கிறார்..

ஆனால் இந்தியாவில் வாழுகின்ற பெரும்பாலான முஸ்லிம்களுக்கு நிச்சயம் உருது அரபி ஹிந்தி ஓரளவிற்கு தெரிந்திருக்கும்.. ஆனால் அரபு நாட்டில் அவர்கள் பேசும் ஒரு சிறு வார்த்தை கூட தெரியாமல் நஜீப் முழிப்பது ஏன்? என்பது தான் புரியவில்லை..

பாலைவனத்தில் வீசும் புயல் காற்று அங்கு ஊர்ந்து செல்லும் ஆயிரம் பாம்புகள், முட்டி மோதும் செம்மறி ஆடுகள், தண்ணீர் இன்றி செத்து கிடக்கும் ஒட்டகங்கள், தண்ணீர் அருகில் ஓடும் பல்லிகள் என ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுனில்.

பாலைவனத்தில் வீசும் சூறாவளி காற்றுக்கு ஏற்ப சூறாவளி இசையை கொடுத்து இருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.. அவரது பின்னனி இசையும் பாடல்களும் கதை ஓட்டத்திற்கு உயிரைக் கொடுத்திருக்கிறது.

ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இந்தப் படத்தில் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார்.. ஒவ்வொன்றையும் ரசித்து ஒலி குரலாக பதிவிட்டு இருக்கிறார்..

தங்களுக்கு விடியல் பிறக்காதா? விடிவு காலம் பிறக்காதா வெளிநாடு சென்று கை நிறைய சம்பாதித்து குழந்தைகளையும் மனைவி குடும்பத்தை காப்பாற்றலாம் என வெளிநாடு ஓடும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த படம் சமர்ப்பணம் ஆகும்.

15 வருடங்கள் பட்ட கஷ்டத்திற்கு ஈடு இணையாக தன்னுடைய முழு உழைப்பை கொடுத்து படத்திற்கு உயிர் ஊட்டி இருக்கிறார் இயக்குனர் பிளஸ்சி.

Aadu Jeevitham The Goat Life review

ஹாட் ஸ்பாட் விமர்சனம் 4/5.. செம ஹாட்..

ஹாட் ஸ்பாட் விமர்சனம் 4/5.. செம ஹாட்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாட் ஸ்பாட் விமர்சனம் 4/5.. செம ஹாட்..

ஸ்டோரி…

ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போகிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். அவர் வித்தியாசமாக எதிர்பாராத ஒன்றாக இருக்க வேண்டும் என்கிறார்.

அதன்படி நான்கு கதைகளை சொல்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்..

ஆந்தாலாஜி பாணியில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் விக்னேஷ் கார்த்திக். பெரும்பாலும் ஆந்தாலாஜி கதைகளில் கதைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருக்கும்.. ஆனால் இதில் நான்கு கதைகளை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

முதல் கதையில் ஆணுக்கு பெண் தாலி கட்டுவது.. இரண்டாம் கதையில் அண்ணன் தங்கை காதல்… மூன்றாம் கதையில் ஆண் விபச்சாரனும் பெண்ணின் காதலும்.. நான்காம் கதையில் ரியாலிட்டி ஷோக்கலில் சிக்கிய சிறுவர்கள்..

இதோ விமர்சனம்..

முதல் கதையில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி ஜோடி.. தாலி கட்டப்பட்ட ஆண்மகன் வாழ்வதற்காக பெண் வீட்டிற்கு சென்றால் அங்கு மருமகனுக்கும் மாமனாருக்கும் ஏற்படும் பிரச்சனையை காமெடி கலந்து வித்தியாசமாக காட்டியிருக்கிறார்.

இரண்டாம் கதையில் சாண்டியும் அம்மு அபிராமியும் காதலிக்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் இருவரும் பெற்றோர்களின் சம்மதத்திற்காக காத்திருக்கும் வேளையில் அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதும் அண்ணன் – தங்கை உறவு என்பது தெரிய வருகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது?

மூன்றாம் கதையில்.. சுபாஷ் ஜனனி இருவரும் காதலிக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் வேலையை இழந்து விரக்தியில் இருக்கும் நாயகன் வேறு வழியின்றி ஆண் விபச்சாரமனாக மாறிவிடுகிறார்.. இதனால் காதலில் பிரச்சினை ஏற்படுகிறது.. காதல் வேறு.. காமம் வேறு என விளக்கம் கொடுக்கிறார் நாயகன். இதனால் கடுப்பான ஜனனி என்ன செய்தார்.? ஒரு நாள் ஆண் விபச்சாரனாக ஒரு லாஜிக்கு செல்லும்போது அங்கு தன் அம்மாவை காண்கிறார்.. அதன் பிறகு என்ன ஆனது?

நான்காம் கதையில் கலையரசன் மற்றும் சோபியா இருவரும் தம்பதிகள்.. இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகளும் ஐந்து வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். டிவி ரியாலிட்டி ஷோக்களில் தங்கள் பிள்ளைகளை பங்கேற்க சோபியா முற்படுகிறார். கலையரசனுக்கு இதில் ஆர்வம் இல்லை என்றாலும் மனைவிக்காக ஒத்துக் கொள்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த ரியாலிட்டி ஷோக்கள் எல்லை மீறும் போது என்ன செய்தார் என்பதுதான் கதை..

கேரக்டர்ஸ்…

இந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் மற்றும் தயாரிப்பாளர் கே.ஜெ.பாலமணிமார்பன்.. இவர்கள் இருவருமே தயாரிப்பாளர் இயக்குனராகவே நடித்திருக்கின்றனர். இவர்களின் உடல் மொழியும் நடிப்பும் பாராட்டும் படி வகையில் அமைந்திருப்பது hotspot-க்கு கூடுதல் சிறப்பு..

நான்கு ஜோடிகளை காட்டியிருந்தாலும் கலையரசன் சோபியா ஜோடிக்கு முதலிடம்.. இருவரும் அருமையான நடிப்பை வழங்கியுள்ளனர். அதிலும் ரியாலிட்டி ஷோக்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை கலையரசன் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு உண்டாகும்.

குழந்தைகளை குழந்தையாக இருக்க விடுங்கள்.. அவர்களை நீங்களே ஒரு கற்பழிப்பவனிடம் கூட்டி கொடுத்து விடாதீர்கள் என சொல்லும் போதும் நிச்சயம் கைத்தட்டல்கள் பறக்கும்.

சுபாஷ் ஜனனி ஐயரின் கதை ஒரு வித்தியாசமான கற்பனை.. சுபாஷ் லாஜிக்கு செல்லும்போது அம்மாவை காணும் போதும் அதன் பிறகு உண்டாகும் ஒரு விஷயத்தை எந்த ஆபாசமும் இல்லாமல் காமெடியாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

ஆதித்யா கௌரி-யின் காதல்.. நிஜமாலுமே வீட்டோட மாப்பிள்ளையாக அப்படி நடந்து விட்டால் ஆண்களின் நிலை படுமோசம். அதை அழகாக கையாண்டு பெண்களும் ஆண்களும் நிகரானவர்களே.. பெண்கள் புகுந்த வீட்டிற்கு வந்து விட்டாலும் அவர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார்.

அம்மு அபிராமி சாண்டியின் காதல்.. கொஞ்சம் ரசிக்க வைத்தாலும் இப்படி எல்லாம் நடக்குமா? என்பதை நம் ரசிகர்கள் யூகத்திற்கு விட்டுவிட்டார் இயக்குனர்.

டெக்னீசியன்ஸ்…

கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் நான்கு கதைகளும் காட்சியமைப்பும் கவனம் பெறுகிறது.

இசையமைப்பாளர்கள் சதீஷ் ரகுநாதன் மற்றும் வான் இசையில் கதையை சுற்றிய பாடல் ரசிக்க வைக்கிறது.

திட்டம் இரண்டு & அடியே ஆகிய படங்களை இயக்கியவர் தான் விக்னேஷ் கார்த்திக்.. அவரது இயக்கத்தில் வந்தள்ள படமிது.

இந்தப் பட டிரைலர் வெளியானபோது சர்ச்சையை ஏற்படுத்தியது.. முக்கியமாக இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது..

ஹாட் ஸ்பாட் டிரைலரில் நெகட்டிவ் காட்சிகளை வைத்திருந்தார் டைரக்டர்.. அவையெல்லாம் படத்தில் இல்லை..

ஆக செம ஹாட் டாபிக் ஸ்டோரி எடுத்து ரசிக்க வைக்கிறார் விக்னேஷ் கார்த்திக்.

Hot spot movie review

REBEL ரெபெல் விமர்சனம்… காலேஜ் பாலிடிக்ஸ்

REBEL ரெபெல் விமர்சனம்… காலேஜ் பாலிடிக்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

REBEL ரெபெல் விமர்சனம்… காலேஜ் பாலிடிக்ஸ்

1956 ஆம் ஆண்டு கேரளா மற்றும் தமிழக எல்லைகள் பிரிக்கப்பட்டது.. அப்போது கன்னியாகுமரி தமிழகத்திற்கும் மூணாறு கேரளா பகுதிக்கும் சென்றது.. ஆனாலும் மூணாறில் வாழ்ந்த தமிழர்கள் கேரளாவை விட்டு செல்ல மனம் இல்லாமல் அங்கேயே இப்பொழுதும் தங்கி வசித்து வருகின்றனர். இதனை வைத்து இந்த படத்தை ஆரம்பித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் நிகேஷ்.

மூணாறில் வாழ்ந்த தமிழர்கள் தங்களின் கல்லூரி மேற்படிப்புக்காக பாலக்காடு சென்ற போது 1980 – 83 ஆண்டுகளில் நடைபெற்ற கல்லூரி அரசியல் சம்பவத்தை படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.

ஸ்டோரி…

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் வசித்து வருகின்றனர் ஜி வி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் ஆதித்யா பாஸ்கர்.

பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இவர்கள் படிக்க தேர்வாகின்றனர்.

அங்கு தன்னுடன் பிஏ ஹிஸ்டரி படிக்கும் மமிதாபைஜும் மீது காதல் கொள்கிறார் ஜிவி பிரகாஷ்.. இதனிடையில் மலையாளிகளின் ராகிங் பிரச்சனைகளுக்கு ஜிவி பிரகாஷ் மற்றும் நண்பர்கள் உள்ளாகுகின்றனர்.

இந்த மோதலால் ஒரு கட்டத்தில் ஆதித்யா பாஸ்கரை கொன்று விடுகிறார் வில்லன் வெங்கி..

இந்நிலையில் கல்லூரி தேர்தல் வருகிறது. வில்லன் வெங்கி தலைமையில் ஒரு அணியும் நாயகி மமீதா பைஜூ தலைமையில் ஒரு அணியும் என இரு மலையாள மாணவர்களும் போட்டி போடுகின்றனர்.

இவர்களை எதிர்த்து களம் காண்கிறார் நாயகன் ஜிவி பிரகாஷ். தமிழக மாணவர் அணி சார்பாக அந்தோணியை களம் இறக்குகிறார் ஜிவி பிரகாஷ்.

மலையாளிகள் மத்தியில் தமிழக மாணவர்கள் வென்றார்களா என்பது தான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்க மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இளம் வயதில் விளையாட்டு ஆர்வத்தில் இருக்கும் ஜீவி பிரகாஷ் தன் பெற்றோர்கள் படும் வேதனையை அறிந்து கல்லூரியில் சேர்வது என அழகாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.. ஒரு கட்டத்தில் தன் நண்பனை இழந்த பின்னர் இனியும் பொறுக்க முடியாது என வெகுண்டு எழும்போது நட்பை போற்றும் வகையில் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நாயகனுக்கு ஈடாக ஒரு படி மேலே வில்லத்தனமான நடிப்பை கொடுத்திருக்கிறார் மலையாள நடிகர் வெங்கி. இவரின் கண்கள் பிரித்திவிராஜ் அடிக்கடி நினைவுபடுத்துகிறது. இனி இவரை தமிழ் படங்களில் வில்லனாகவும் நாயகனாகவும் பார்க்க வாய்ப்பு இருக்கிறது.

சமீபத்தில் வந்து தமிழகத்தை கலக்கி கொண்டிருக்கும் பிரேமலு படத்தில் ரீனா கேரக்டரில் நடித்த மமீதா பைஜூ இந்த ரெபல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்.

அழகான கண்கள் உதடுகள் என இவரை அதிகமாகவே ரசித்து காட்சிகளை வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பரதநாட்டியத்திலும் புரட்சி போராட்டத்திலும் என இரு மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார் மமீதா.

ஆதித்யா பாஸ்கரின் எமோஷன் காட்சிகள் நம்மை அறியாமல் கண் கலங்க வைக்கும். அவரது நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

கல்லூரி வினோத் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி ஆகியோரின் கேரக்டர்கள் பெரிதும் உதவி இருக்கின்றன.

கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதிரா ஆகியோரது கேரக்டர்கள் கவனம் பெறுகின்றன.

டெக்ணீசியன்ஸ்…

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் சித்து என்பவரும் இவருடன் இணைந்து இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். .

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. ஜிவி பிரகாஷின் பெற்றோர்கள் சுப்பிரமணிய சிவா ஆதிரா ஆகியோர் தேயிலை தோட்டத்தில் படும் வேதனைகளையும் அங்கு வாழும் தமிழர்களின் உழைப்பையும் அழகாகவே படம் பிடித்திருக்கிறார்.

இதன் பின்னர் பாலக்காடு பகுதியில் பயணிக்கிறது இவரின் கேமரா அங்கு கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்கள் காதல் நட்பு என அனைத்தையும் உணர்வு பூர்வமாக கொடுத்திருக்கிறார்.

பின்னணி இசை + பாடல்களில் ஜிவி பிரகாஷின் ஒத்துழைப்பு நன்றாகவே தெரிகிறது.. அவரும் இரண்டு பாடல்களுக்கு தன் இசை கரங்களை கொடுத்திருக்கிறார். அதற்கு ஏற்ப சித்துவும் அழகாகவே இசைப் பணிகளை கோர்த்து இருக்கிறார்.

மலையாளமும் தமிழும் கலந்த பாடலும் புரட்சிகரமான பாடலும் ரசிக்கவும் தாளம் போடவும் வைக்கிறது.

இடைவேளைக்கு முன்பு விறுவிறுப்பாக சென்ற திரைக்கதை பின்னர் தடுமாறி இருப்பது தெரிகிறது. முதல் பாதியில் நட்பு காதல் என்ற கலகலப்பாக சென்ற படம் பின்னர் கலவரமாக மாறி படம் முழுவதும் தெறீக்கிறது.. வன்முறை வன்முறை மாணவர்கள் மத்தியில் இத்தனை கலவரம் தேவையா? எனக் கேட்கத் தோன்றுகிறது.

மூணாறில் தமிழர்கள் வாழ்வதாக காட்சிகள் காட்டப்பட்டு இருந்தாலும் அவர்களின் தமிழ் உச்சரிப்பு தமிழ்நாட்டைப் போலவே உள்ளது.. கொஞ்சம் கூட மலையாளம் கலக்காமல் எப்படி?

கம்யூனிசம் தமிழர்களின் உரிமைப் போராட்டம் என முதல் படத்திலேயே கம்யூனிசம் பேசி கவர்ந்திருக்கிறார் இயக்குனர் நிகேஷ்.

கல்லூரி கலவரம் என நாம் பார்த்து பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கேரளாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள அரசியலையும் இதில் கலந்து இருக்கிறார்.. முக்கியமாக 1980 ஆண்டுகளில் திமுக அதிமுக தமிழகத்தில் முக்கிய கட்சியாக இருந்தது. அதை ஜிவி பிரகாஷின் தமிழக அணிக்கு கருப்பு சிவப்பு வண்ணத்தை கொடுத்து அந்த கொடியில் கொஞ்சம் வெள்ளையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இத்தனை வன்முறைகள் முடிந்து அடடா அடுத்து என்ன நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கையில் திடீரென கல்லூரி தேர்தல் ரத்து செய்யப்பட்டது என முடித்திருப்பது நமக்கு அதிர்ச்சியை கொடுக்கிறது. கிளைமாக்ஸ் இன்னும் சுவாரசியத்தை கொட்டி இருக்கலாம் இயக்குனர்.

ஆக ரெபெல்… காலேஜ் பாலிடிக்ஸ்

Rebel movie review

More Articles
Follows