தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
Casting : Harikumar, Roshan Bhashir, Ratha ravi, Abu Khan, Ravimariya, Manobala, Aruldass, Kowsalya, Ashika Ashokan, Tanisha Kuppanda, Adithya Kathir, Kajal Pasupathi, Uma Shree
Directed By : Jayachandran
Music By : Baiju jacob
Produced By : Vettrivel Cinemas – SJS. Sundharam & JVR
தறுதலையாக இருக்கும் ஒரு கிராமத்தினர் கருவறையில் இருக்கும் புனிதர்களாக மாறும் கதை தான் இந்த சான்றிதழ்
கதைக்களம்…
கருவறை என்ற ஒரு கிராமம். இந்த கிராமத்திற்கு மத்திய அரசு நற்சான்றிதழ் கொடுக்க நினைக்கிறது. அந்த கிராமத்தினரோ சான்றிதழ் கொடுக்க வேண்டுமென்றால் எங்கள் கிராமத்திற்கு கவர்னர் வரவேண்டும் என்கின்றனர்.
அப்படி என்ன சாதித்தது அந்த கிராமம்? அந்த கிராமத்தில் நடக்கும் நடவடிக்கைகள் என்ன? என்பதுதான் அனைவரின் ஆச்சரிய கேள்விகளாகும்.
எனவே அந்த கிராமத்தில் என்ன நடக்கிறது என்பது அறிய மீடியாக்களும் சில மர்மநபர்களும் உள்ளே நுழைகின்றனர்.
அத்துமீறி அவர்கள் நுழைந்து விட்டதால் அவர்களை ஒரு தனி அறையில் அடைத்து வைக்கின்றனர் கிராமத்தினர். கிராமம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அனைவரையும் கண்காணிக்கிறது.
இரவு 8 மணிக்கு மேல் யாரும் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது.. எவர் குடிக்க விரும்பினாலும் குவாட்டர் அளவு தான் குடிக்க வேண்டும் என்கின்றனர்.
இப்படியாக கட்டுப்பாட்டுக்குள் அந்த கிராமத்தை வைத்திருக்க என்ன காரணம்.? இதற்கு முன் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
இதுவரை ஏற்காத வெள்ளந்தி கேரக்டரில் வெள்ளை சாமியாக வாழ்ந்திருக்கிறார் ஹரிக்குமார். ஆனால் இவரது ஆலோசனைகளும் நடவடிக்கைகளும் செயற்கை தனமாக உள்ளது.
ஆனால் இவரை போல் ஊருக்கு ஒருவர் இருந்தால் நிச்சயம் இந்த நாடு விரைவில் வல்லரசாகும்.
கருவறை கிராமத்து இளைஞராக ரோஷன் பஷீர் – நிருபராக வரும் ஆஷிகா அசோகன். இருவரும் காதலர்களாக வந்து கதைக்கு குளிர்ச்சி ஊட்டி செல்கின்றனர்.
குடிகாரன் மற்றும் நல்லவன் என மாறுபட்ட பாத்திரங்களை செய்து இருக்கிறார் ரவி மரியா. ஆதித்யா கதிர் வரும் காட்சிகள் கலகலப்பு. ஒன் லைன் டைமிங் காமெடியில் சிரிக்க வைக்கிறார்.
ராதாரவி கௌசல்யா அருள்தாஸ் மனோபாலா ஆகியோருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் நடிப்பில் குறைவில்லை.
ஹரிகுமாரின் மனைவி அழகாக வந்து இளைஞர்களை சூடேற்றுகிறார். காஜல் பசுபதி, உமா ஸ்ரீ ஆகியோரும் இதில் அடக்கம்.
டெக்னீஷியன்கள்…
இசையமைப்பாளர் பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.
படத்தொகுப்பாளர் ஜெ.எப்.காஸ்ட்ரோ தன் பணியை கவனமாக செய்து இருக்கலாம். இடைவேளையில் வரும் காட்சியும் கிளைமாக்ஸ் வரும் காட்சியும் தொடர்புடையதாகவே இல்லை. தறுதலை கிராமம் கருவறையாக மாறுவதை கதைக்கு ஏற்ப எடிட்டிங் செய்திருக்கலாம்.
கலை இயக்குநர் நாஞ்சில் பி.எஸ்.ராபர்ட் தன் பணியில் நேர்த்தி.
இடைவேளைக்கு முன்பு ஒரு கதையாகவும் இடைவேளைக்குப் பின்பு வேறு கதையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டும் துண்டு படங்கள் போலவே பார்வையில் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் இடைவேளையில் வைத்த காட்சிகளை கிளைமாக்ஸில் வைத்து இருக்கலாம்.
கருவறை போல ஒரு கிராமம் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என எண்ண வைக்கிறது காட்சி அமைப்புகள். நடக்கிறதோ? இல்லையோ? ஆனால் அப்படி ஒரு ஊர் கட்டுப்பாடு இருந்தால் இந்தியா ஓர் உயர்ந்த இடத்தை அடையும் என எதிர்பார்க்கலாம்.
ஒரு புதிய கோணத்தில் ஓர் அழகிய கிராமத்தை கண் முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜெயச்சந்திரன் அரபு நாடுகளில் விதிக்கப்படும் கடுமையான சட்டங்களைப் போல இந்த கிராமத்திலும் சில விதிமுறைகளை வகுத்திருக்கிறார்.
இப்படியாக மக்கள் வாழ்ந்தால் நிச்சயம் நற்-சான்றிதழ் நமக்கெல்லாம் கிடைக்கும் என நம்பலாம்..
Harikumar starrer Saandrithazh movie review