தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்..
ராம்கி மிகப்பெரிய தொழில் அதிபர் இவரிடம் உள்ள ஐந்து கோடியை எடுத்துக்கொண்டு காரில் பயணிக்கிறார்.
அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் அருந்த காரை விட்டு இறங்க அந்த நேரத்தில் ஒரு கும்பல் இவரிடம் உள்ள பணத்தை கொள்ளையடித்து சென்று விடுகிறது
இதனையடுத்து அவர் போலீஸ் நட்டியிடம் புகார் தெரிவிக்க அதனை தேடி அலைகிறது காவல்துறை.
போலீஸ் நட்டி, ரவி மரியா மனோபாலா ஆகியோர் அந்த பணப்பெட்டியை தேடி ஊட்டி முழுவதும் அலைக்கின்றனர்.
இதனிடையில் பணப்பெட்டியை அந்த நபரிடம் இருந்து கொள்ளையடிக்க வேறொரு கும்பல் திட்டம் போடுகிறது. இதில் போலீஸ் அதிகாரி ஒருவரும் உடந்தையாக இருக்கிறார்.
இறுதியில் அந்த பணப்பெட்டி ராம்கிக்கு கிடைத்ததா? போலீஸ் திட்டம் என்ன ஆனது? கொள்ளை கும்பல் திட்டம் என்ன என்பதே கதை.
கேரக்டர்கள்…
நேர்மையான போலீஸ் அதிகாரியாக நட்டி நடித்து இருக்கிறார். இவரின் மனைவி பூனம் பஜ்வா. கம்பீரமான போலீசாக தன்னை தன் உயரத்திற்கு ஏற்ப உயர்த்தி காட்டியுள்ளார் நட்டி நட்ராஜ்.
நட்டிக்கும் பூனம் பஜ்வாவுக்கும் உள்ள கிள்மா பாடல் மார்கழி குளிரில் செம மஜா.
ரவி மரியா மனோபாலா காமெடி நமக்கு எரிச்சலை தருகிறது.
பின்னணி இசை இரைச்சலை கொடுக்கிறது. நட்டியை நேர்மையான அதிகாரியாக காட்ட தேவையில்லாத சண்டை காட்சிகளை திணித்துள்ளனர்.
நிறைய காட்சிகளை கிரீன் மேட்டில் எடுத்துள்ளனர் என்பது அப்பட்டமாக தெரிகிறது. முக்கியமாக போலீஸ் ஜீப் பயணிக்கும் காட்சியும் பூனம் வஜ்வாவின் அம்மா பேசும் மருத்துவமனை காட்சிகளும் அப்படியே உள்ளன.
மொட்ட ராஜேந்திரன் காமெடி செய்வார் என்று பார்த்தால் அவரும் நம்மை வெறுப்பேற்றுகிறார்.
ஒரு குத்துப்பாட்டுக்கு சஞ்சனா மற்றும் அஸ்மிதா உடன் ஆட்டம் போடுகிறார். மஸ்காரா புகழ் ஆட்டக்காரியின் கிளுகிளுப்பான பாடல் செம ஹாட்..
ஒரு பணப்பெட்டியை தேடி கும்பல் அலையும் கதையை இன்னும் சுவாரசியமாகவும் காமெடியாகவும் கொடுத்திருக்கலாம். ஆனால் திரைக்கதை அமைப்பதிலும் காட்சி அமைப்பதிலும் தடுமாறி இருக்கிறார் டைரக்டர் தனசேகர்.
நீ உழைத்த பணம் மட்டுமே உனக்கு சொந்தம்.. அடுத்தவன் பணத்துக்கு ஆசைப்படாதே என்ற சிறப்பான கருத்தை வலியுறுத்தினாலும் அதை சொன்ன விதத்தில் தடுமாறி இருக்கிறார்.
சத்யதேவ் உதயசங்கர் இசையமைக்க தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் இப்படம் உருவாகியிருக்கிறது.
ஆக குருமூர்த்தி… மீசைய முறுக்கினா போதுமா?