கருடன் விமர்சனம் 4.25/5… கலக்கல் சம்பவம்

கருடன் விமர்சனம் 4.25/5… கலக்கல் சம்பவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கருடன் விமர்சனம் 4.25/5… கலக்கல் சம்பவம்

ஸ்டோரி…

சசிக்குமாரும் உன்னி முகுந்தனும் சிறு வயது முதலே சிறந்த நண்பர்கள்.. இவர்களுடன் இணைந்து கொண்டவர் சூரி.. சிறு வயது முதலே இவர்கள் ஒன்றாக வளர்கிறார்கள்.. உன்னிக்கு எதிராக எவன் வந்தாலும் சூரி எதிர்த்து நிற்பார்.. சசியின் அன்புக்கு கட்டுப்பட்டாலும் உன்னி முகுந்தனுக்கு விசுவாசி இவர்தான்.. அப்பத்தா வடிவுக்கரசி பெற்ற பிள்ளைகளை போல வளர்த்து வருகிறார்.

இவர்களின் நட்பை பார்த்து ஊரே பொறாமைப்படுகிறது.. ஒரு சிலர் பிரிக்க நினைத்தாலும் அது முடியாமல் போகிறது..

எந்த ஒரு பிரிக்க முடியாத உறவாக இருந்தாலும் அதை பிரித்து விடும் மூன்று பெண் பொன் மண் என்பது தெரிந்த ஒன்றுதான்.. இந்த மூன்று ரூபத்திலும் இந்த நண்பர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது..

இந்த சூழ்நிலையில் மினிஸ்டர் ஆர்வி உதயகுமார் மற்றும் தியேட்டர் ஓனர் மைம் கோபியின் சதி வலையில் விழுகிறார் உன்னி முகுந்தன்.. இதனால் சசிக்கு முன்னிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

இதன் பிறகு என்ன நடந்தது.? சூரி யாருக்கு ஆதரவாக செயல்பட்டார்? இவர்கள் பிரிந்தார்களா? வில்லன் சதித்திட்டம் வென்றதா என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விடுதலைப் படத்திலேயே விஸ்வரூப கதை நாயகனாக உருமாறி இருந்தார் சூரி.. அதனை மிஞ்சும் வகையில் இந்த கருடன் படத்தில் டன் கணக்கில் நடிப்பை கொடுத்திருக்கிறார். விசுவாசத்திற்கு மறுபெயர் சொக்கன் என்ற கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.

அண்ணனிடம் விசுவாசம் அண்ணியிடம் பாசம் காதலியிடம் நேசம் என அனைத்து விதத்திலும் சொக்கன் கேரக்டரில் சொக்க வைத்து விட்டார் சூரி.

சூரி இனி காமெடி செய்ய மாட்டாரா? என ஏங்கிய ரசிகர்களுக்காக ஒரு காட்சியில் பிரிகிடா அவரின் காதலை சொல்லும் போது தன்னை காதலித்து விட்டாரோ என எண்ணி இவர் செய்யும் ரகளை சூப்பர்..

தமிழ் சினிமாவில் நட்புக்கு கை கொடுக்கும் ஒரே நடிகர் சசிகுமார் தான்.. அந்த கேரக்டருக்கு பொருந்தி போகிறார் அவரது முடிவு சோகமா பெரும் சோகம்..

மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மிரட்டி இருக்கிறார்.. தவறான பாதையில் சென்றாலும் நட்புக்காக தயங்கி நிற்கும் காட்சி ரசிக்க வைக்கிறது.. அதே சமயம் திடீரென இவர் விஸ்வரூபம் எடுக்கும் காட்சிகள் மிரட்டல் ரகம்.. அவரது லாங் ஹேர் ஸ்டைல் தோற்றமும் வேற லெவல்..

மிகவும் நேர்மையான போலீசாக சமுத்திரக்கனி.. வில்லன் கோஷ்டி போலீசை பார்த்து எல்லா விஷயத்தையும் சொல்லியாச்சா? என்று அவர் கேட்கும் போது சிரிக்காமலும் சிந்திக்காமல் இருக்க முடியாது.

அப்பத்தா வடிவுக்கரசி… தன் அழகான நடிப்பின் மூலம் கேரக்டருக்கு சிறந்த வடிவம் கொடுத்திருக்கிறார்

சசிகுமாரின் மனைவியாக ஷிவதாநாயர், மற்றும் உன்னி முகுந்தனின் மனைவி, சூரியின் காதலியாக ரேவதி ஷர்மா & உன்னி மச்சானின் மனைவியாக பிரிகிடா உள்ளிட்டோரும் சிறப்பு..

இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டும் துரோகி என சூரியை ஷிவதாநாயர் மண் தூற்றி திட்டும் காட்சி கண்கலங்க வைக்கும்.

நாயகி ரேவதி ஷர்மாவின் மேனியும் அழகான கண்களும் வைத்த கண் வாங்காமல் பார்க்க தூண்டும்..

வில்லன்களாக வரும் ஆர்வி உதயகுமாரும் மைம் கோபியும் வில்லத்தனத்தில் சிறப்பு..

டெக்னீசியன்ஸ்…

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்… யுவன் இசையில் பாடல்கள் செம.. இன்டர்வெல் சீனில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.. சூரிக்கு சாமி வந்து மிரட்டும் காட்சி வேற லெவல் ரகம்..

படத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து.. எடிட்டரும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம்தான் இந்த கருடன்.. அழகான கதை நட்பு பாசம் துரோகம் விசுவாசம் என அனைத்தையும் மையப்படுத்தி கதை எழுதி இருப்பது சிறப்பு.

இந்த படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இதுவரை அவர் இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை எடுத்து இருக்கிறார்.

இதுவரை கொடுத்த அனைத்து படங்களுமே நல்ல பெயரை பெற்ற போதிலும் ஏன் இந்த நீண்ட இடைவெளி என்பது தான் தெரியவில்லை. அடுத்தடுத்து படங்கள் கொடுக்க துரை செந்தில் குமார் அவர்களை வாழ்த்துவோம்..

ஆக கருடன்.. கலக்கல் சம்பவம்

Garudan movie review

FIRST ON NET ‘குற்றப் பின்னணி’ விமர்சனம் 3.5/5.. கள்ளக்காதல் எச்சரிக்கை

FIRST ON NET ‘குற்றப் பின்னணி’ விமர்சனம் 3.5/5.. கள்ளக்காதல் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

FIRST ON NET ‘குற்றப் பின்னணி’ விமர்சனம் 3.5/5.. கள்ளக்காதல் எச்சரிக்கை

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 6-வது படம் ‘குற்றப் பின்னணி’..

‘வாங்க வாங்க’, ‘ஐ.ஆர்.8’ போன்ற படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

ஸ்டோரி…

‘ராட்சசன்’ படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த சரவணன் இந்தப் படத்தின் கதையின் நாயகனாக மாறியிருக்கிறார்.

இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பால்காரராக வேலை செய்து வசித்து வருகிறார். அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஒவ்வொரு வீட்டிற்கும் பால் கொடுத்து வியாபாரம் செய்து வருகிறார். அதன் பின்னர் வாட்டர் கேன் போடும் பிசினஸ் செய்து வருகிறார்.

ஒரு நாள் அதிகாலை 3 மணிக்கு ஒரு வீட்டிற்கு சென்று அங்கு உள்ள செல்வி என்ற இல்லத்தரசியை கழுத்தை நெரித்து கொலை செய்கிறார். தாலியால் அவரை கழுத்து நெறித்து கொலை செய்து விட்டு தாலியை மட்டும் எடுத்துச் செல்கிறார்..

கொலைக்கான எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸ் திண்டாடி வருகிறது.. சில நாட்களில் அந்தப் பெண்ணின் கள்ளக்காதலனையும் கொலை செய்கிறார்

இரு கொலை நடந்து முடிந்த சில தினங்களில் அதே பாணியில் வேறொரு வீட்டில் உள்ள கணவன் மனைவி இருவரையும் கொலை செய்கிறார்..

அடுத்தடுத்து சரவணன் கொலை செய்ய என்ன காரணம்? அவரது நோக்கம் என்ன? அவரது பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

கேரக்டர்ஸ்…

இதில் ‘ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபர் கேரக்டராக மிரட்டிய சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார்..

சினிமாவில் பல வருடங்களாக இருந்தாலும் சரவணனுக்கு முழு முகவரி கொடுத்த படம் ராட்சசன். அந்தப் படத்தில் கொடூர வில்லனாக ஜொலித்த இவர் இந்த படத்திலும் கொலைகாரன் என்றாலும் ஒரு அப்பாவியான தோற்றத்தில் வருகிறார்.

போலீஸ் தன்னைப் பிடித்து விடும் என்று தெரிந்து அவர் கொலைகள் செய்வது வித்தியாசமான நடவடிக்கை.. அதன் பின்னணியில் என்ன என்பதுதான் இந்த குற்றப் பின்னணி..

அலட்டிக் கொள்ளாத நடிப்பு அப்பாவியான முகம் என தன் கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார் சரவணன்.

மேலும் தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால், கராத்தே ராஜா மற்றும் பலர்..

இவருடன் நடித்துள்ள பல கலைஞர்களும் படத்தின் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கின்றனர்..

மற்றவர்களின் கேரக்டரை சொன்னால் கதையின் திருப்புமுனை தெரிந்து விடும்.. போலீஸ் அதிகாரிகள் நடித்த ஒவ்வொருவரும் எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர்.

எந்த விதத்திலும் அவர்கள் கமர்சியல் போலீசாக காட்டிக் கொள்ளாமல் ஒரு கிராமத்தில் நாம் பார்க்கும் போலீஸ் அதிகாரியாக வாழ்ந்திருக்கின்றனர்.

பல படங்களை வில்லனாக மிரட்டிய கராத்தே ராஜா இந்த படத்தில் முழுக்க முழுக்க பாசிட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

நாட்டில் நடக்கும் கள்ளக்காதல்.. கள்ளக்காதலால் தங்கள் பிள்ளைகளை கொல்லும் பெற்றோர்கள் என்ற கதைக்களத்தை எடுத்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் இஸ்மாயில்.

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவு – சங்கர் செல்வராஜ்,
இசை – ஜித்,
பாடல்கள் – என்.பி.இஸ்மாயில், ஜாபர் சாதிக்,
படத் தொகுப்பு – நாகராஜ்.டி,
சண்டைப் பயிற்சி இயக்கம் – ஆக்ஷன் நூர்,

பத்திரிகை தொடர்பு – வெங்கட்,
வசனம் – ரா.ராமமூர்த்தி,
தயாரிப்பு – ஆயிஷா – அகமல்,
கதை திரைக்கதை இயக்கம் – என்.பி. இஸ்மாயில்.

டிவி & நாளிதழ்களில் நாம் தினம் தினம் பார்க்கும் விபரீதமான விஷயங்களை திரைக்கதையாக அமைத்து இருக்கிறார்.. குறைந்த பட்ஜெட் படம் என்பதால் அதற்கு ஏற்றவாறு படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. இசையமைப்பாளரும் தன் பணியில் நேர்த்தி.. நாயகன் என்பதால் அவருக்கு காதல் பாடல் என்றெல்லாம் கதையை நீட்டாமல் விஷயத்தை சார்பாக சொல்லியிருக்கிறார்..

குற்றவாளிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறான்.. அவனது குற்றப் பின்னணி என்ன என்பதுதான் இந்த படத்தின் நோக்கம்.

நான் திருந்தி வாழ மாட்டேன் திரும்பி வருவேன் குற்றங்கள் நடக்கும் வரை எனது திட்டங்கள் தொடரும் என கள்ளக்காதலனுக்கும் கள்ளக்காதலிக்கும் எச்சரிக்கை கொடுத்திருக்கிறார் இந்த இயக்குனர் இஸ்மாயில்.

KUTTRA PINNANI movie review

புஜ்ஜி அட் அனுப்பட்டி பட விமர்சனம் 3.5/5.. Favorite Goat

புஜ்ஜி அட் அனுப்பட்டி பட விமர்சனம் 3.5/5.. Favorite Goat

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புஜ்ஜி அட் அனுப்பட்டி பட விமர்சனம் 3.5/5.. Favorite Goat

கஞ்சா போதை மது புகை வன்முறை நிறைந்த சினிமாவில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போக முடியாதா என ஏங்கும் பெற்றோர்களுக்காக வரவிருக்கும் படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’.

இந்த வாரம் மே 31ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஸ்டோரி…

சரவணன் & துர்கா இருவரும் அண்ணன் தங்க.. இவர்கள் ஒரு நாள் பள்ளி விட்டு வீட்டிற்கு வரும்போது ஒரு புதருக்குள் சிக்கிய ஆட்டுக்குட்டியை கண்டு அதைக் காப்பாற்றி வீட்டிற்கு எடுத்து வருகின்றனர்.

அந்த ஆட்டுக்குட்டிக்கு யாரும் உரிமை கொண்டாடாத நிலையில் இவர்களே அந்த ஆட்டை செல்லமாக வளர்த்து வருகின்றனர். இதற்குப் பெற்றோரும் சம்மதிக்க அவர்களின் பாதுகாப்புடன் புஜ்ஜி என்ற செல்ல பெயரிட்டு வளர்த்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் அந்த ஆட்டை இவர்களது குடிகாரத் தந்தை குடிக்க பணம் இல்லாமல் அனுப்பட்டி என்ற கிராமத்தில் விற்று விடுகிறார்.

இதற்காக ஆட்டுக்குட்டியை தேடி பள்ளிக்கு செல்லாமல் அனுப்பட்டி கிராமத்திற்கு செல்கின்றனர்.

அங்கு அவர்களால் ஆட்டை கண்டுபிடிக்க முடிந்ததா.? என்ன நடந்தது? தன் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளியின் பிள்ளைகளை காண முடியாமல் முதலாளி கமல் குமாரும் தேடி அலைகிறார்,.. இறுதியில் என்ன ஆனது.? ஆட்டை கண்டுபிடித்தார்களா குழந்தைகள்? குழந்தைகளை கண்டுபிடித்தாரா நாயகன் கமல்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்..

நாயகன் கமல் குமாரின் அறிமுக காட்சியே அசத்தல்தான்.. தோட்டத்து முதலாளியாக இருந்தாலும் அடவாடித்தனம் எதுவும் காட்டாமல் அன்பான மனிதராக வருகிறார். அதுவும் கோவை மொழி பேசி குழந்தைகளிடம் கொஞ்சம் இவரது அன்பு பிளஸ்.. நம்ம முதலாளி தங்க முதலாளி என்ற அளவுக்கு நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார்.

பள்ளி குழந்தைகளாக நடித்துள்ள சரவணன் மற்றும் துர்கா இருவரும் நடிப்பில் பாஸ் மார்க் பெறுகின்றனர்.. அதிலும் துர்காவாக நடித்துள்ள பிரணிதி 100 மார்க் பெற்று விடுகிறார்.. ஆட்டுக்குட்டி தொலைந்த பிறகு அந்த கூடைக்குள் அமர்ந்து கொண்டு அவரது ஏங்கும் முகமும் கண்களும் அழகு.

போலீசாக நடித்துள்ள வைத்தீஸ்வரியும் தன் நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார்.. அதிலும் உயிரதிகாரி தவறு செய்தாலும் அவர் தட்டிக் கேட்கும் குணம் பாராட்டுக்குரிய நடிப்பு.

ஆட்டுக்குட்டியை தேட துர்காவுடன் இணையும் இளம்பெண்ணும் நடிப்பில் கவருகிறார்.. அதுபோல பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பையன் & கறிக்கடை பாய் உள்ளிட்ட வரும் தங்கள் பங்களிப்பில் சிறப்பு..

ஆட்டை திருப்பி தர வேண்டுமென்றால் 5000 ரூபாய் வேண்டும் என கறிக்கடை பாய் நிபந்தனை விதிக்கும் போது உடனே 3000 ரூபாய் திரட்டுவது ஓவர் தான்…

டெக்னீசியன்ஸ்…

ராம் கந்தசாமி என்பவர் எழுதி இயக்கி தனது கவிலயா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார்.

கார்த்திக் ராஜா இசையமைக்க கு.கார்த்திக் பாடல்களை எழுத படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் அருமை.. குழந்தைகளை மட்டுமே மையப்படுத்தி காட்சிகள் அமைத்திருக்கிறார் இயக்குனர்.. நாயகன் கமல் மற்றும் வைத்தீஸ்வரிக்கு ஒரு காதல் பாடல் வைத்து இளசுகளையும் கவர்ந்திருக்கலாம்.

பாடல்களை கு கார்த்திக் பாடல்கள் எழுதி இருக்கிறார்.. புஜ்ஜி புஜ்ஜி என்ற பாடல் குழந்தைகளுக்கு பிடித்த பாடலாக அமையும்..

அருண்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சரவணன் மாதேஸ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவை மாவட்ட அழகை கண்முன் கொண்டு வந்திருக்கின்றனர்.

அதிலும் முக்கியமாக கோவை மொழி பேசும் கோவப்படாத மக்கள் அழகு..

ஒரு வாயில்லா ஜீவன் என ஒரு ஆட்டை நினைத்தால் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.. ஒருவேளை அது மட்டன் கறியாக நினைப்பவர்களுக்கு செட் ஆகாது..

Kamals Bujji at Anuppatti movie review

பூமர காத்து திரை விமர்சனம்..: விதை

பூமர காத்து திரை விமர்சனம்..: விதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூமரக் காத்து திரை விமர்சனம்..: விதை

ஸ்டோரி…

பள்ளிப்பருவத்தில் நாயகனுக்கு காதல் வருகிறது.. ஆனால் நாயகியிடம் காதலை சொல்ல நினைக்கும் போது நாங்கள் எல்லாம் நண்பர்கள் எங்களுக்கு படிக்கும் வயதில் காதலும் கிடையாது கத்திரிக்காயும் கிடையாது என நாயகி சொல்கிறார்.

எனவே காதலை மறைத்து வாழ தொடங்குகிறார் நாயகன்.. இதன் பின்னர் ஒரு கட்டத்தில் அவரை மாமன் மகள் காதலிக்கிறார்.. ஆனால் அவரையும் காதலிக்காமல் தான் செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஜன்னல் ஓரம் எப்போதும் அமர்ந்திருக்கும் ஜெனி என்ற கிறிஸ்தவ பெண்ணை காதலிக்கிறார்.

இவரை சந்திக்க வரும்போது நாயகிக்கு விபத்து ஏற்பட்டு கால் ஊனமாகிறது.. இதனையடுத்து தன்னால்தான் அந்த பெண் ஊனமானார் என்பதை அறிந்து அவளையே திருமணம் செய்து நினைக்கிறார்.. இதனால் வீட்டில் எதிர்ப்புகிறது..

அதன் பிறகு நாயகன் என்ன செய்தார்? குடும்பத்திற்கு கட்டுப்பட்டாரா? ஊனமுற்ற பெண்ணை மணந்து கொண்டாரா? அவரின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா, மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம் புலி, ஓ.எஸ்.மணி, முத்துக்காளை, போண்டாமணி, சிஸ்ஸர் மனோகர், குழந்தை நட்சத்திரம் ஜி.வி.சன்மதி & பலர் நடித்துள்ளனர்..

மனோபாலா மற்றும் தேவதர்ஷினிக்கு ஒரு பிளாஷ் பேக் காதல் காட்சி இருக்கிறது.. இருவரும் பள்ளி மாணவர்களாக வருவது சகிக்க முடியாத கற்பனை.. (அட்லீஸ்ட் கல்லூரி காதல் போல காட்டி இருக்கலாம்..) அந்த காட்சிகளை வெட்டி எறிந்து படத்தின் நீளத்தை குறைத்து நம்மையும் காப்பாற்றி இருக்கலாம்.

நாயகன் நாயகி கஷ்டப்படும்போது நிச்சயம் அடுத்தவர் மனதும் கலங்கும்.. அதுவும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் அவர்கள் போராடும் காட்சி நெகிழ்ச்சி..

பள்ளி மாணவியாக நாயகி மனிஷா.. அழகும் திறமையும் நிறைந்த நடிகை ஆனால் சில காட்சிகளில் மட்டும் வந்து சென்று விடுகிறார்..

பள்ளி மாணவனாக சந்தோஷ் சரவணன்.. வளர்ந்த பிறகு விதுஸ்.. ஐடி வேலைக்கு பொருத்தமான இவரது முகம் மெக்கானிக் வேலையில் ஈடுபடும் போது பொருந்தவில்லை.. நடிப்பில் பாஸ் மார்க் பெற முயற்சித்திருக்கிறார்..

ஊனமுற்ற பெண்ணாக மீனா நடிப்பில் கலங்க வைக்கிறார்.. சிங்கம்புலி, முத்துக்காளை, சிசர் மனோகர், சூப்பர் குட் லட்சுமணன், ஜி.எஸ்.மணி, காதல் அருண், தேனி முருகன், தீப்பெட்டி கணேசன், விஜய் கணேஷ், போண்டாமணி, நேல்லை சிவா, செவ்வாழை உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே உள்ளது.. இருந்தும் பயனில்லை..

டெக்னீசியன்ஸ்…

ஜோவின் ஒளிப்பதிவும் அரவிந்த் ஸ்ரீராம் ஈஸ்வர் ஆனந்தின் இசையும் அருமை..

அரவிந்த் ஶ்ரீராம் மற்றும் ஈஸ்வர் ஆனந்த் ஆகியோரது இசையில், இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜாவின் பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.. டெக்னிக்கலாக இந்த படம் இன்னும் வலுப்பெற வேண்டும்..

ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில், ஞான ஆரோக்கியராஜா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பூமர காத்து’.

ஞான ஆரோக்கியராஜா இந்தப் படத்தை இயக்கி முடித்து சென்சருக்கு அனுப்பும் சமயத்தில் அவர் கண் பார்வை இழந்து விட்டார்.. தற்போது இந்த படம் ரிலீசான பிறகு தான் பார்வை பெற கண் சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது என பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஆங்காங்கே காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.. முக்கியமாக மைனர் பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் புகை பிடிக்கும் நபர் பலர் இருக்கும் இடத்தில் புகை பிடிக்கக் கூடாது.. தன்னையும் கெடுத்து புகை புடிக்காத அடுத்தவரையும் கெடுக்க கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

இத்துடன் கிளைமாக்ஸ் காட்சியில்.. வறுமைக்கு எப்போதுமே தற்கொலை தீர்வாகாது.. தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும்… நாம் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வரும்போது நாம் பெற்ற பிள்ளைகளை கொல்ல எந்த உரிமையும் கிடையாது என்ற கருத்தையும் வலியுறுத்தி இருக்கிறார்..

இந்தப். பூமரக்காத்து தலைப்பு குறித்து கேட்டபோது.. மண்ணில் புதைந்து கிடக்கும் விதை எப்படியாவது ஒரு பெரிய மரமாக வளர்ந்து காய்கனிகள் நிழல் கொடுக்கும் அது போல நம்முடைய வாழ்க்கை அமைய வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஞான ஆரோக்கியராஜா.

Poomara Kaathu movie review

6 கண்களும் ஒரே பார்வை பட விமர்சனம்

6 கண்களும் ஒரே பார்வை பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

6 கண்களும் ஒரே பார்வை பட விமர்சனம்

ஸ்டோரி…

நாயகி கெனி.. இவரை மூன்று ஆண்கள் காதலிக்கின்றனர்.. எவரையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.

ஆண்கள் துரோகிகள் அவர்களை நம்பாதே என இவரின் அம்மா சொன்னதால் அந்த வழிப்படி நடக்கிறார்.. ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு விபத்து ஏற்படுகிறது. இதனையடுத்து சிகிச்சைக்காக 3 லட்சம் தேவைப்படுகிறது.

உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் கைவிரித்த வேளையில் வேறு வழியில்லாமல் தோழியின் ஆலோசனைப்படி ஒரு திட்டம் போடுகிறார் நாயகி..

அதாவது தன்னிடம் காதலை சொன்ன மூன்று நபர்களிடம் தலா 1 லட்சம் கேட்கிறார். என்னை நீங்கள் உண்மையாக விரும்பினால் என் அம்மாவை காப்பாற்ற உதவுங்கள் என்கிறார்.

அவர்கள் பணம் கொடுத்தார்களா.? கெனி அம்மாவை காப்பாற்றினாரா? காதலுக்காக பொய் சொன்ன கெனியின் நிலை என்ன? ஆனது என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

நாயகன் – ராஜ்நிதன்

நாயகி – கெனி

நாயகி அம்மா – திவ்யா லெனின்

நாயகி தாத்தா – வாசுவிக்ரம்

நாயகன் அம்மா – கும்கி ஆனந்தி

நட்புக்காக – அமிர்தலிங்கம்.

வில்லன் – ஆதவன்.

இதில் எல்லோரையும் விட அதிகமாக ஸ்கோர் செய்தவர் நாயகியின் அம்மா திவ்யா லெனின் தான். இவர் ராதா என்ற கேரக்டரில் nalla நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆண்களை நம்பி இவர் வாழ்க்கையை தொலைப்பதும் அதன் பின்னர் மகளுக்கு நல்ல ஆண்களை புரிய வைப்பதும் சிறந்த அம்மாவிற்கு உதாரணம்.

இவரையே ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கலாம் இயக்குனர் ஜானகிராமன்.. அழகிலும் நடிப்பிலும் கவருகிறார்.. குறைந்த வயது உடைய இவரை நாயகியின் அம்மாவாக நினைத்து கூட பார்க்க முடியவில்லை..

வில்லன் ஆதவன் தன்னுடைய கேரக்டரில் அசத்தல்.. காதலிக்கும் மூன்று நபர்களில் நாயகி மணக்க ஆசைப்படும் நபராக ராஜ் நிதன்.. முடிந்தவரை நடிக்க முயற்சித்து இருக்கிறார். மற்ற இரண்டு நபர்களும் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்..

திவ்யா கேரக்டரில் நடித்த கெனிக்கு இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பு தேவை.

வழக்கம்போல காதலை எதிர்க்கும் அப்பாவாக வாசு விக்ரம்..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவு – சீனிவாசன்.

எடிட்டிங் – T பன்னீர்செல்வம்

சண்டை பயிற்ச்சி – டைகர் சுகுமார்

இசை – பிருத்திவி

மக்கள் தொடர்பு – சேலம் சரண்

தயாரிப்பு – சுப்ரியா பிலிம்ஸ்

கதை, திரைக்கதை, வசனம்,தயாரிப்பு, இயக்கம் – ஜடையனூர் V. ஜானகிராமன் .

ஆறு கண்களும் ஒரே பார்வை என்ற தலைப்பிலேயே வித்தியாசம் காட்டி இருக்கிறார் இயக்குனர் ஜானகிராமன்.

பொதுவாக காதல் படங்களுக்கு அதே கண்கள்.. கண்கள் மோதிக்கொண்டால் காதல் கண்கள் என்றெல்லாம் இருக்கும்.. ஆனால் இதில் மூன்று ஆண்களின் காதலை சொல்வதாக ஆறு கண்களும் ஒரே பெண்ணை பார்க்கும் பார்வை என்பதால் ஆறு கண்களும் ஒரே பார்வை என்ற நோக்கத்தில் வித்தியாசமான தலைப்பு வைத்திருக்கிறார்.

இது போன்ற படங்களை நிச்சயம் இன்னும் காமெடி கலந்து சொல்லியிருக்கலாம்.. படத்தின் கதையும் திரைக்கதையும் சரியாக கையாளப்பட்டிருந்தாலும் டெக்னிக்கிலாக படம் வீக்காக இருக்கிறது..

முக்கியமாக பின்னணி இசையில் இரைச்சல் அதிகம்… கிரு கிரு கிறங்குறேன் டீ.. சறு சறு சாயுறேன் டீ.. என்ற பாடலில் வரிகளை விட இசை இரைச்சலை அதிகம்..

டி.ஐ. கலர் கரெக்ஷனில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.. அது மட்டுமில்லாமல் ஒளிப்பதிவிலும் கூடுதல் கவனம் வேண்டும்.. நிறைய ஆங்கிள்கள் வைத்து ரசிக்க வைத்திருக்கலாம்..

ஆக.. ஆறு கண்களும் ஒரே பார்வை.. ஆண் பெண் பார்வை..

6 Kangalum orae Paarvai movie review

PT SiR விமர்சனம்.. : ப்ராக்டீஸ் பத்தல சார்

PT SiR விமர்சனம்.. : ப்ராக்டீஸ் பத்தல சார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PT SiR விமர்சனம்.. : ப்ராக்டீஸ் பத்தல சார்

ஸ்டோரி…

கல்வியாளர் தியாகராஜன் நடத்தும் பிரபல கல்வி நிறுவனத்தில் பிடி ஆசிரியராக பணிபுரிகிறார் ஹிப் ஹாப் ஆதி.. பயந்த சுபாவம் உள்ளவர் ஹிப்ஹாப் ஆதி..

இதே பள்ளியில் இங்கிலீஷ் டீச்சராக நாயகி கஷ்மீரா.. இவர்கள் இருவரும் காதலிக்க ஒரு கட்டத்தில் பெற்றோர் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது

அப்போது இளவரசுவின் மூத்த மகள் அனிகா மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் வருகிறது.

இதனையடுத்து ஹிப் ஹாப் ஆதியும் அங்கு செல்கிறார்… ஆனால் அது கொலை அல்ல. அனிகா தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையும் கல்லூரியும் முடிவு செய்கிறது..

எனவே அனிகா மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைக்கும் ஆதி, முதலமைச்சரின் தனி பிரிவிற்கு ஈமெயில் அனுப்புகிறார். எனவே பிரச்சனை தமிழகத்தின் தலைப்புச் செய்தியாகிறது.

அதன் பின்னர் ஆதி என்ன செய்தார்? கொலை என்றால் அதை செய்தது யார்? சட்டத்தின் தீர்ப்பு என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

ஹீரோவாக ஆதி நடிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை ஒரே விதமான ரூட்டை கடைப்பிடிக்கிறார்.. குழந்தைகளுடன் ஆட்டம், நாயகியுடன் டூயட், பெற்றோருக்கு அடக்கமான பையன் என வருகிறார்.. இந்தப் பிடி சார் கேரக்டர்காக உடலை இன்னும் கம்பீரமாக வைக்க முயற்சித்து இருக்கலாம்..

வழக்கமான ரெண்டு பாடல் ஹீரோவுடன் இரண்டு காட்சிகள் என வந்து செல்லும் நாயகியாக கஷ்மீரா.. தேவதர்ஷினி மற்றும் ஹிப் ஹாப் ஆதி பேசும் காட்சியில் எனக்கும் ஒரு வசனம் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டது போல கஷ்மீரா பேசுகிறார்.

அக்கா & தங்கையாக அனிகா & அபி நட்சத்திரா.. கதையை சுழன்று ஓட வைக்கும் அச்சாணியாக அனிகாவின் கேரக்டர்..

இதில் அனிகாவின் தந்தையாக இளவரசு.. அவரது நடிப்பு நம்மை கண்கலங்க வைக்கிறது..

ஆதியின் அம்மாவாக தேவதர்ஷினி அப்பாவாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. ஜோசியரிடம் தன் மகன் ஜாதகத்தை கொடுப்பதற்கு பதில் இவர்களின் ஜாதகத்திலே கொடுத்து மொக்கை வாங்கும் காட்சி சிரிப்பலை..

எல்லா இடத்திலும் சிறு பெண்கள் முதல் வயதானவரை எல்லா பெண்களும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்ற காட்சி கண் கலங்கவும் சிந்திக்கவும் வைக்கிறது..

ஒரு காலத்தில் பிரபல நடிகராக இருந்து தியாகராஜன் இந்த படத்தில் பாலியல் டாச்சர் செய்யும் கல்வியாளராக நடித்திருக்கிறார்.. மாணவிகளை டார்ச்சர் செய்யும் கேரக்டரில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது ஆச்சரியம் தான்..

இவர்களுடன் நீதிபதியாக பாக்யராஜ் வக்கீலாக மதுவந்தி, ஆதியின் மாமனாராக வக்கீலாக பிரபு, முனீஸ் காந்த் பாண்டியராஜன் உள்ளிட்டோரும் உண்டு..

வக்கீல்கள் வாதாடுவதை விட கோர்ட்டில் நிறைய வசனங்களை நாயகன் ஆதியே பேசி படத்தை முடிக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

ஹிப் ஹாப் ஆதி இசையில் உருவான 25வது படம் இது.. அதற்காகவே அவர் கூடுதல் சிரமம் எடுத்து இசை அமைத்திருக்கலாம்.. ஒருவேளை நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டாரோ.?

குட்டி பிசாசு என்ற பாடல் இளம் ரசிகர்களை கவரும்.. மற்ற பாடல்கள் அவரது வழக்கமான டியூனில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை பாராட்டுகுரியது.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்.. காட்சிகளை அழகுப்படுத்தி இருக்கிறது..

ரியோ நடித்த நெஞ்சமுண்டு நேர்மை உண்டு படத்த இயக்கிய கார்த்தி வேணுகோபால்தான் இந்த பிடி சார் படத்தை இயக்கியிருக்கிறார்.

யூடியூப் இல் இருந்து அவர் இன்னும் முழுமையாக சினிமாவுக்கு வரவில்லை என்று தோன்றுகிறது.. சில காட்சிகள் யூடியூப் வகையறாக்களில் சேருகிறது..

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடுமையான தண்டனையுடன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.. ஆனால் அந்த கருத்தை முழுவதுமாக அட்வைஸ் ஆக சொல்லாமல் கமர்சியல் கலந்து சொல்லியிருக்கிறார்.. முக்கியமாக காதல் நட்பு மாணவர்கள் கலாட்டா என கலந்து இருக்கிறார்.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக அதை சொல்ல முன்வர வேண்டும்.. சோசியல் மீடியாக்களுக்கு பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்க கூடாது.. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராட வேண்டும்.. காவல் & சட்டத்தின் தீர்வை மட்டுமே நம்பியிருக்க கூடாது எனவும் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

கோலிவுட்டின் பிரபல் நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த பிரம்மாண்ட படத்தை தயாரித்து இருக்கிறார் ஐசரி கணேஷ்.

ஆக இந்த பிடி சார்.. ப்ராக்டீஸ் பத்தல சார்

PT SIR movie review

More Articles
Follows