GAAMI காமி விமர்சனம்

GAAMI காமி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GAAMI காமி விமர்சனம்

Gaami என்றால் Seeker என்று பொருள்.. இந்த இயக்குனரின் தேடல் என்ன.? இந்தத் திரை கதாபாத்திரங்களின் தேடல் என்ன என்பதுதான் காமி.

வித்யாதர் காகிதா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் நடிப்பில் உருவான அட்வென்சர் த்ரில்லர் தான் இந்த `காமி’ (Gaami).

ஸ்டோரி…

ஷங்கர் (விஸ்வக் சென்) அகோரியாக வாழ்ந்து வருகிறார்.. இவருக்கு மிகவும் அரிதான ஹாபிடோபியா எனும் மனித தொடுகை ஒவ்வாமை பாதிப்பு இருக்கிறது.

அதாவது மனிதர்களைத் தொட்டாலே இவருக்கு ஆகாது.. இவரது நோயைக் குணமாக்க ‘மாலிபத்ரா’ என்ற வித்தியாசமான ஒளிரும் காளான்கள் தேவைப்படுகிறது.. அது இமயமலை பிரதேசத்தில் துரோனகிரி எனும் பகுதியில் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என்பதை அறிந்து அங்கே பயணிக்கிறார்.

அந்த ஒளிரும் காளானை கண்டறிந்து கைப்பற்றினால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள்.. இவருடன் பெண் மருத்துவர் ஒருவரும் அங்கு செல்கின்றனர்.

இந்தக் கதை ஒருபுறம் இருக்க மற்றொரு இரண்டு கிளை கதைகள் உள்ளன..

ஒரு கிராமத்தில் தேவதாசியாக வாழ்கிறார் அபிநயா. இவருக்கு ஒரு அழகு மகள்.. அந்த கிராமத்தின் நடைமுறைப்படி (??!!) அபிநயாவின் மகளும் தேவதாசியாக தொழிலுக்கு வரவேண்டும் என்கின்றனர். ஆனால் தன் மகளைக் காப்பாற்ற போராடுகிறார் அபிநயா.. மகளை தப்பிக்க வைக்க சில முயற்சிகளை மேற்கொள்கிறார்..

அடுத்த கதையில்…

சிடி 333 எனப் பெயர் சூட்டப்பட்ட ஒரு இளைஞன் சிறையில் அடைக்கப்படுகிறான்.. சட்ட விரோத மூளை அறுவை ஆய்வுக் கூடத்தில் எலிபோல் அடைத்து வைக்க துன்புறுத்தப்படுகிறான்.

எனவே அங்கிருந்து தப்பிக்க ‘Shawshank Redemption’ பாணியில் பல முயற்சி எடுக்கிறான்.

இந்த இரு சிறார்களுக்கும் சங்கருக்கும் என்ன தொடர்பு? என்பதை ‘நான் லீனியர்’ வழியே சொல்லுகிறது இந்த படம்.

கேரக்டர்ஸ்…

விஸ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெட்டா, மொஹமத் சமத், தயானந்த் ரெட்டி மற்றும் பலர்.

நடிகர் விஸ்வக் சென்.. இவரது கேரக்டர் வலுவாக அமைக்கப்பட்டிருக்கிறது.. அதற்கு ஏற்ப பனிமலையில் இவர் படும் சிரமம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

இமயமலை செல்லும் சாந்தினி செளத்ரி கேரக்டர் ரசிக்க வைத்தாலும் சில லாஜிக் மீறல்கள் உள்ளது.. பணிப்படர்ந்த அந்தப் பகுதியில் இவர் அசால்டாக கையுறை அணியாமல் செல்வதை நம்ப முடியவில்லை.. ஒரு காட்சியில் பனிமலையில் கயிறு அறுந்து இவர் விழும்போதும் முகத்தில் கீறலில்லை தலைமுடியில் ஒரு துளி கூட பனியில்லை..

அபிநயாவின் கேரக்டர் கண்கலங்க வைக்கும்.. வேண்டாத வெறுப்பாக தேவதாசி தொழில் ஈடுபட்டு தன் மகள் இதில் சிக்கிய விடக்கூடாது என்பதற்காக அவர் படும் அவஸ்தைகளையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

உமா என்ற சிறுமியின் மருத்துவ குறைபாடு.. அது என்னவென்று தெரியாமல் நம் குழம்பி இருக்கும் வேளையில் திரைக்கதை திருப்புமுனை கொடுத்து சிறுமி கேரக்டரை இளைஞனோடு இணைத்திருக்கிறார் இயக்குனர்.. இதன் மூலமாக நாயகன் கேரக்டரிலும் நமக்கான தீர்வு கிடைக்கிறது..

CT -333 என்ற கேரக்டரில் நடித்த மொஹமத் சமத் மனதில் பதிகிறார்.. ஒரு சிறை கைதியின் அடைபட்ட உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்..

டெச்னீசியன்ஸ்…

இசையமைப்பாளர் – நரேஷ் குமரன்

பாடல்கள் – ஸ்வீகர் அகஸ்தி

ஒளிப்பதிவாளர் – விஸ்வந்த் ரெட்டி செல்லுமலா

இயக்குனர் – வித்யாதர் காகிதா

தயாரிப்பு – கார்த்திக் கல்ட் கிரியேஷன்ஸ்

முதலில் மெதுவாக நகரும் திரைக்கதை ஷங்கருடன் ஜான்வி இணைந்த பின்னர் தான் படத்தின் கதை என்ன என்பதை மெல்ல மெல்லமாக நம்மால் உணர முடிகிறது..

பணிப்படர்ந்த இமயமலை.. இருள் சூழ்ந்த சிறைச்சாலை… தேவதாசி வாடும் கிராமம் என மூன்று கதைகளத்தையும் தன்னுடைய கேமராவில் அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஸ்வந்த் ரெட்டி செல்லுமலா.

சொல்லப்போனால் இமயமலைக்கு நம்மை அழைத்துச் சென்ற அனுபவத்தை தந்திருக்கிறார் இவர்.

இசையமைப்பாளரின் நரேஷ் குமரனின் பின்னணி இசை நம்மை ஈர்க்கச் செய்கிறது.. ஒரு இதமான அனுபவத்தை தந்திருக்கிறது . ஸ்வீகர் அகஸ்தியின் பாடல்கள் சிறப்பு..

ஓர் ஆய்வுக்கூடத்தில் நடக்கும் ஆராய்ச்சியில் என்ன மாதிரியான ஆராய்ச்சி இதனால் என்ன பலன் என்பதற்கான விளக்கத்தை இன்னும் விரிவாக கொடுத்திருக்கலாம்..

மூன்று கதைகளை இணைக்க வேண்டும் என்பதற்காக படாத பாடு பணியை செய்து இருக்கிறார் எடிட்டர்.. ஆனால் இது நம்மையும் சோதிக்கிறது.. ஒரு திரைக்கதை வேகமாக பயணிக்கிறது.. மற்றொரு திரைக்கதையோ அழுத்தமான உணர்வுடன் பயணிக்கிறது இரண்டையும் இணைக்கும் போது அதற்கான கால அவகாசம் இல்லை என்பதால் நம்மோடு ஒன்ற மறுக்கிறது..

இந்த மூவரின் தேடல் தான் என்ன என்பது அறிய நாம் குழம்பி கொண்டு இருக்கும் வேலையில் அதற்கான விளக்கத்தை கிளைமாக்ஸில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்..

ஓர் அறிமுக இயக்குனர் இப்படியான வித்தியாசமான முயற்சி எடுத்துள்ளதை பாராட்டலாம்.. ஆனால் அதே சமயம் விறுவிறுப்பாக கொடுத்து இருந்தால் இந்த காமியுடன் இணைந்து பயணித்திருக்கலாம்.

Gaami movie review

அரிமாபட்டி சக்திவேல் பட விமர்சனம்

அரிமாபட்டி சக்திவேல் பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரிமாபட்டி சக்திவேல் பட விமர்சனம்

திருச்சி அருகே உள்ள அரிமா பட்டியில் நடக்கும் காதல் சாதி கதை தான் இந்த படம்.. இந்த ஊரில் இன்னும் சாதிய காதலுக்கு எதிர்ப்பு இருக்கிறது என்பதை சொல்ல வந்திருக்கும் படமே இது..

ஸ்டோரி…

சாதி படம் என்றாலே நாயகன் கீழ் சாதி நாயகி மேல் சாதி.. வழக்கம்போல நாயகி வீட்டில் எதிர்ப்பு கிளம்பும்.. அவரது அண்ணனோ தந்தையோ எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.. இந்த ஃபார்முலாவில் இருந்து கொஞ்சமும் தடம் மாறாமல் வந்திருக்கும் படம் தான்..

நாயகன் பவன். நாயகி மேக்னா எலன்.. இருவரும் சிறுவயது முதலில் காதலிக்கிறார்கள்.

வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் நாயகி டீச்சர் ஆகிறார். நாயகன் சென்னையில் இயக்குனராக வேண்டும் என வேலை தேடி அலைகிறார்..

இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிய வர நாயகிக்கு மணமுடிக்க ஆசைப்படுகிறார் அவரது அண்ணன் பிர்லா போஸ். நாயகனின் கீழ் சாதிக் காதலுக்கு முறுக்கிக் கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

ஆனால் நாயகனோ இயக்குனர் ஆன பின்னர் தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதமாக நிற்கிறார்.. அதன் பின்னர் நாயகி என்ன செய்தார்.? காதலர்கள் இணைந்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

நாயகன் பவன்.. இவர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கூட.. சக்திவேல் பணி புரியும் அலுவலகத்தில் ஒருவர் நிச்சயம் நீ பெரிய ஆளாகி அரிமாபட்டியின் அடையாளமாக வருவார் என்கிறார்.. ஓஹோ கதை வேறு தளத்திற்கு போகிறது என்று நாம் நினைத்தால் வழக்கம்போல எதையும் சாதிக்கவில்லை நாயகன் பவன்..

நாயகனுக்கு அழுகை & ரொமான்ஸ் வரவில்லை ஆக்ஷனில் மட்டும் கைத்தட்டல் வாங்கி விடுகிறார்..

நாயகி மேக்னா ஹெலன்.. இவரது கண்கள் நம்மை என்றென்றும் கவரும்.. இரண்டு புருவங்களை இணைக்கும் அவரது அந்த புருவ முடி கூட அழகுதான்.. கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.

ஹீரோவின் அப்பாவாக சார்லி.. வெள்ளந்தி மனிதராக நின்று ஊர்முன் அசிங்கப்படுவதும் மகனுக்காக தவிப்பதும் என அப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார்..

நாயகியின் அண்ணனாக பிர்லா போஸ்.. வில்லத்தனம் கலந்த நடிப்பில் கவர்கிறார்..

அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி.. ஊரில் முக்கிய புள்ளியாக ஜெயச்சந்திரன்.. பஞ்சாயத்து தலைவராக சூப்பர் குட் சுப்ரமணி.. இதில் சேதுபதி ஜெயச்சந்திரன் கம்பீர தோற்றத்துடன் கெத்து காட்டி இருக்கிறார்..

டெக்னீசியன்ஸ் …

ஒளிப்பதிவாளர் ஜெ பி மேன்.. இவரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.. வழக்கமான சாதியை காதல் கதை என்றாலும் இவரின் ஒளிப்பதிவு படத்துடன் நம்மை ஒன்றை வைக்கிறது..

மணி அமுதவன் இசையில் காதல் பாடல்களும் கவர்கிறது.. அந்தோணி தாசன் பாடிய ‘வண்ண வண்ண இறகு நீ’ பாடல்… மீண்டும் கேட்கும் ரகம்..

சாதிய காதல்.. ஊர் பஞ்சாயத்து.. ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது.. ஊருக்கு கட்டுப்படும் அப்பாவி தந்தை என வழக்கமான காதல் கண்ணீர் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் கந்தசாமி..

1980 – 90களில் பார்த்த காதல் கதை தான் என்றாலும் இன்றளவும் இந்த கொடுமை அரிமாபட்டியில் நடக்கிறது என்பதை ஆணித்தரமாக ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறார் இயக்குனர்.

படம் முடிந்ததும் எண்டு கார்டில் இன்றும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் ஊருக்கு திரும்ப முடியாதவர்கள் என பலரது புகைப்படங்களையும் காட்டி நிரூபிக்கிறார்.

Arimapatti Sakthivel movie review

கார்டியன் பட விமர்சனம்

கார்டியன் பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்டியன் பட விமர்சனம்

பேய் படங்கள் என்றாலே உலக சினிமாவில் எழுதப்படாத ஒரு டெம்ப்ளேட் இருக்கும்.. ஹீரோ ஹீரோயின் இருப்பார்கள்.. அவர்களை அமானுஷ்ய சக்திகள் வந்து பயமுறுத்தும்.. அதன் பின்னர் அந்த பேய்க்கு ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கும்.

அதை தொடர்ந்து பழிவாங்கல் கதை இருக்கும்.. இந்த டெம்ப்ளேட்டில் எந்த ஒரு சிறு குறையும் இல்லாமல் வந்திருக்கும் படம் தான் ஹன்சிகா நடித்த ‘கார்டியன்’.

ஸ்டோரி…

குழந்தை பருவம் முதலிலே அதிர்ஷ்டம் இல்லாதவர் என்ற பெயருடன் வளர்கிறார் ஹன்சிகா.. இவர் ஆசைப்படுவது எதுவும் கிடைக்காது.. அப்படியே கிடைத்தாலும் நிலைக்காது.. எனவே இவரை அதிர்ஷ்டம் இல்லாதவர் (அன்லக்கி) என்று அவரது தோழிகளும் அழைக்கின்றனர்.

கட்டிடத் தொழிலில் இன்டீரியர் டிசைனிங் முடித்த ஹன்சிகா ஒரு இடத்தில் வேலைக்கு சேர்கிறார் அங்கே அவருக்கு சிறு விபத்து ஏற்பட அந்த ரத்தம் ஒரு கல்லின் மீது படுகிறது.. அதனைத் தொடர்ந்து அவர் நினைத்தது எல்லாம் நடக்கிறது..

இவர் ஒருவரை திட்டும் போது தொலைந்து போ செத்துப் போ என்று சொன்னால் கூட அவர் இறந்து விடுகிறார்.. இதனால் அதிர்ச்சி அடையும் ஹன்சிகா ஒரு டாக்டரை அணுகி ஆலோசனை கேட்கிறார்..

அப்போதுதான் அவர் ஹன்சிகாவின் உடலில் ஒரு சக்தி நுழைந்திருப்பது தெரிய வருகிறது.. அந்த பேய் நோக்கம் என்ன? அது பழிவாங்க என்ன காரணம்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

அரண்மனை படத்தில் பேயாக வந்து நம்மை அலறவிட்டவர் ஹன்சிகா.. இந்தப் படத்திலும் அந்த அனுபவத்தில் கொஞ்சம் கூடுதலாகவே மிரட்டி இருக்கிறார்..

இடைவேளைக்கு முன்பு கலகலப்பாக துறுதுறுவாக வந்த ஹன்சிகா இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் பயமுறுத்தி இருக்கிறார்.

என்னதான் பேய் படம் என்றாலும் ஹீரோயினுக்கு ஒரு ஜோடி வேண்டும் தானே.. அதற்காக பிரதீப் ராயன் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்.. கொஞ்சம் வந்து ரொமான்ஸ் செய்கிறார்..

நகைச்சுவை என்ற பெயரில் நக்கல் செய்து கலகலப்பு ஊட்டி இருக்கிறார்கள் மொட்ட ராஜேந்திரன் மற்றும் பழைய ஜோக் தங்கதுரை.

தியா (அறிமுகம்) ‘பேபி’ க்ரிஷிதா (அறிமுகம்).. அம்மா மகளாக நடித்த இருவரும் நம்மை ரசிக்கவும் அழவும் வைத்திருக்கிறார்கள். இவர்களின் நடிப்புக்காக இன்னும் பல படங்களில் இவர்களை பார்க்கலாம்..

வில்லன்களாக சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, அபிஷேக் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர்..

இவர்கள் ஆடிட்டர் தியாவை கொலை செய்ய போதுமான காரணங்கள் இல்லை.. ஒரு தவறு நடந்தால் அதற்காக கொலை செய்யலாம்.. ஆனால் நடக்காத தவறுக்காக நடந்து விடுமோ என்ற பயத்தில் கொலை செய்வது.. அதுவும் கொடூரமாக செய்வது எல்லாம் ஓவர் தான்..

டெக்னீசியன்ஸ்…

சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். பேய் பட இசை என்றால் ரசிகர்களை பயன்படுத்த வேண்டாமா? எனவே அதிக இரைச்சலையும் கொடுத்து மிரட்டி இருக்கிறார்.. மெலோடி பாடல் ரசிக்க வைக்கிறது.

இந்த படத்திற்கு K.A சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. இவரது பணி பாராட்டுக்குரியது.

தயாரிப்பு – பிலிம் ஒர்க்ஸ்

‘வாலு & ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.

இயக்கம் – சபரி – குரு சரவணன் (கூகுள் குட்டப்பா)

வழக்கமான பேய் படம் என்பதை தாண்டி ஓரிரு ட்விஸ்ட்கள் வைத்திருந்தால் இன்னும் கூடுதல் சுவாரசியம் இருந்திருக்கும்.. இந்த ‘கார்டியன்’ நிச்சயம் நம் கவனம் ஈர்த்திருப்பார்..

Hanshikas Guardian movie review

ஜெ. பேபி பட விமர்சனம்

ஜெ. பேபி பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெ. பேபி பட விமர்சனம்

தொலைந்து போன தன் அம்மாவை தேடிச்செல்லும் இரு மகன்களின் கதை தான் இந்த ஜெ. பேபி.

ஸ்டோரி…

ஊர்வசி (ஜெ. பேபி) இவருக்கு 5 பிள்ளைகள்.. 3 ஆண் மகன்கள்.. இரண்டு 2 பிள்ளைகள். இதில் மூத்தவர் மாறன்.. இளையவன் தினேஷ்.. இவர்கள் முகம் தெரிந்தவர்கள்.. மற்றவர்கள் புதுமுகங்கள்.. இவர்கள் அனைவரும் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட அண்ணன் தம்பி பிரச்சனையால் மன நிம்மதி இல்லாமல் தவிக்கிறார் ஊர்வசி.

இதனால் பித்து பிடித்தது போல ஊரில் ஏகப்பட்ட பிரச்சனைகள் செய்து கொண்டிருக்கிறார். திடீரென மற்ற வீடுகளை பூட்டி வருவது.. போலீசை மிரட்டுவது.. மற்றவர்களுக்கு வீட்டுக்கு வந்த தபால்களை எடுத்து வருவது என பிரச்சனைகளை செய்து கொண்டிருப்பதால் எங்கேயாவது தொலைந்துவிடு என பிள்ளைகள் திட்டுகின்றனர்.

இதனால் ஒரு கட்டத்தில் விரக்தியாகும் ஊர்வசி யாருக்கும் தெரியாமல் திடீரென கொல்கத்தா சென்று விடுகிறார். இதனையடுத்துக் கொல்கத்தாவில் உள்ள காவல்துறை மூலம் தமிழக காவல்துறைக்கு தகவல் வருகிறது.

இதனை எடுத்து மூர்த்தி என்பவர் மூலம் தங்கள் அம்மாவை தேடி கொல்கத்தா செல்கின்றனர் மாறன் & தினேஷ்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ஊர்வசி – J. Baby
தினேஷ் – Sankar
மாறன் – Senthil
சேகர் நாராயணன் – Sakthi
மெலடி டார்கஸ் – Selvi.
தாட்சாயிணி – Ramani,
இஸ்மத் பானு – Sankar Wife,
சபீதா ராய் – Senthil Wife
மாயா ஸ்ரீ – Sakthi Wife

பேபி கேரக்டரை இதைவிட யாராலும் சிறப்பாக செய்ய முடியாது என சவால் விட்டு நடிப்பில் நம்மை மிரள வைத்திருக்கிறார் ஊர்வசி.. அவருக்கே உரித்தான கலகலப்பான பேச்சு எடக்கு முடக்கான செய்கைகள் என நம்மை கவருகிறார்..

ஒரு கட்டத்தில் எமோஷனல் ஆகவும் நம்மை அழ வைத்து விடுகிறார்.. குழந்தைகளிடம் ஏதோ ஒன்றை வாங்கி கேட்கும் போது அதற்கு அவரின் பிள்ளைகள் ‘இல்லை..’ என்று சொல்லும்போது நீ குழந்தையா இருக்கும்போது எல்லாத்தையும் வாங்கி கொடுத்தேனே என்று சொல்லும் போது ஒரு தாயின் உணர்வை பிரதிபலிக்கிறார்.

மாறன் & தினேஷ் சண்டையிட்டு பேசிக் கொள்ளாமல் இருக்கும்போது ஒரு தாய் படும் வேதனைகளை கண் முன் நிறுத்துகிறார்.

பள்ளிக் குழந்தைகளுக்கு வேன் ஓட்டும் டிரைவராக தினேஷ். ஒரு யதார்த்தமான நடுத்தர குடும்ப மனிதனை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார். ஊர்வசி செய்த பிரச்சினைகளுக்காக ஒவ்வொருவரிடம் சண்டை போடும்போது மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்..

பல படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் காமெடி செய்து வந்த மாறனை இதில் படம் முழுக்க அலையவிட்டு காமெடியும் செய்ய வைத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.

இரவில் குடித்துவிட்டு உளறுவது பின்னர் காலையில் வேறு மாதிரி பேசுவது என மாறன் தன் பங்கு சிறப்பாக செய்திருக்கிறார்..

ஊர்வசியின் மற்ற பிள்ளைகள் என அனைவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

இப்படம் உண்மைக் கதையின் அடிப்படையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி. அவரின் பெரியம்மா பெயர் தான் பேபி. நிஜ வாழ்க்கையில் தொலைந்து போன பேபியை தேட ஒருவர் உதவி செய்து இருக்கிறார்.. அவர்தான் மூர்த்தி அவரை இந்த படத்தில் நடிக்க வைத்து அருமையான ஒரு நல்ல மனிதரை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறார்.

ஊர்வசியின் பேத்தியாக அபி நட்சத்திரா ஒரே காட்சியில் வந்து செல்கிறார்.

டெக்னீசியன்ஸ்…

Producers : Pa.Ranjith, Abhayanand Singh, Piiyush Singh, Sourabh Gupta, Aditi Anand, Ashwini Chaudhari.

Neelam Productions, Neelam Studios, Vistas Media.

இயக்கம் – சுரேஷ் மாரி
இசை – டோனி பிரிட்டோ.
ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன்,
எடிட்டிங் – சண்முகம் வேலுச்சாமி,
கலை – ராமு தங்கராஜ்,
பாடல்கள் – கபிலன் உமாதேவி , விவேக்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன.. டோனி பிரிட்டோ இசையில் பாடல் வரிகளும் நம் கவனம் பெறுகின்றன..

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவில் சென்னை அழகும் கொல்கத்தா அழகு ரசிக்க வைக்கிறது.. எடிட்டர் கொஞ்சம் நீளத்தை வெட்டி இருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

பொதுவாக ரஞ்சித் படங்கள் என்றாலே சாதி விஷயம் மேலோங்கி நிற்கும்.. ஆனால் இதில் எதுவும் கலக்காமல் இருப்பது இந்த பேபிக்கு சிறப்பு.

நிஜ வாழ்க்கையை படமாக்கி இருப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் திரைக்கதை அமைத்து எடுத்த இயக்குனர் சுரேஷ் மாரியை பாராட்டலாம்.

நிச்சயம் இந்த படம் மகளிர் தினத்தில் அம்மாக்களுக்கு சமர்ப்பணமாக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

J Baby movie review

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ விமர்சனம்

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பின்னணிப் பாடகர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட பிரதீப்குமார் இந்த படத்தை தயாரித்து இசையமைத்திருக்கிறார்.

சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படம் மூலம் புகழ்பெற்ற பிரசாத் ராமர் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ என்ற இந்த படம் நாளை மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தில் வெளியாகிறது.

ஸ்டோரி…

மதுரையில் தன் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக் கொண்டிருப்பவர் நாயகன். சோசியல் மீடியாவில் எந்தப் பெண் கிடைத்தாலும் அவளிடம் பேசி நெருக்கமாக பழகி பின்னர் அவளை கழட்டி விடுவது நாயகனின் வழக்கமான வேலை.

ஒரு கட்டத்தில் பேஸ்புக் மூலம் இவருக்கு அறிமுகம் ஆகிறார் மயிலாடுதுறை சேர்ந்த நாயகி. அவளுக்கு பர்த்டே வரவே அவளைக் காண பைக்கில் தன் நண்பனுடன் செல்கிறார் நாயகன்.

உனக்கு பிறந்தநாள் பரிசு தர நேரில் வந்திருக்கிறேன் என அவளை அழைத்துக் கொண்டு மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார்-க்கு பைக்கில் செல்கின்றனர்.

இருவரும் பைக்கில் சுற்றிக் கொண்டிருக்கும்போது இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தென்படுகின்றன. இதனிடையில் பைக் பிரச்சனை டிராபிக் போலீஸ் லைசன்ஸ் பிரச்சினை என உள்ளிட்டவைகளை சந்திக்கின்றனர்.

பிறந்தநாள் பரிசு நாயகி கேட்க திடீரென எதிர்பாராமல் முத்தமிட்டு விடுகிறார் நாயகன். இதனையடுத்து அவனை அடித்து விடுகிறார்.. இதன் பிறகு என்ன நடந்தது? இருவரும் காதலிக்க தொடங்கினார்களா? அல்லது வழக்கம்போல கழட்டி விட்டாரா? நாயகனின் மனநிலையை புரிந்து கொண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

செந்தூர் பாண்டியன் நாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரண் நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் நாம் அன்றாடம் பார்க்கும் பக்கத்து வீட்டு பிள்ளைகளை போலவே வருகின்றனர்.

எந்த பெண்ணையும் காம கண்ணோட்டத்துடன் பார்க்கும் நாயகன் கேரக்டரை சரியாக செய்திருக்கிறார் செந்தூரப் பாண்டியன்.

அப்பா இல்லாத பெண் பிள்ளை.. வீட்டில் கண்டிப்பான போலீஸ் அம்மா ஆனாலும் ஊர் சுற்ற ஆசைப்படும் இளவயது பெண்ணின் மன உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறார் நாயகி ப்ரீத்தி.

இவர்களுடன் சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் காந்தி கலகலப்புக்கு உதவி இருக்கிறார்.. இளைஞர்கள் பேசிக் கொள்ளும் டபுள் மீனிங் காமநெடிகளை ஆங்காங்கே கேட்க முடிகிறது.. ஆனால் ஒரு சில எல்லை மீறிய வார்த்தைகளாக இருக்கிறது..

முக்கியமாக புகை காட்சிகளில் கீழே புகை பிடிப்பது குற்றம் என்ற வாசகங்கள் இடம்பெறவில்லை என்பது ஏன் தெரியவில்லை??

பிரசாத் ராமர் கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்துள்ளார்.

இசை மற்றும் பாடல்களை உருவாக்கிய அதே நேரத்தில் பிரதீப் குமார் இந்தப் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

ஒளிப்பதிவாளராக உதய் தங்கவேல் பணியாற்ற படத்தொகுப்பாளராக ராதாகிருஷ்ணன் தனபால், கலை இயக்குநராக விஜய் ஆதிநாதன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர்.

சோசியல் மீடியாவில் மூழ்கிக் கிடக்கும் இளசுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் எனக் கூறப்பட்டாலும் ஒரு 20 நிமிட குறும்படத்தை இரண்டு மணி நேர திரைப்படம் ஆக ஏன் கொடுத்தார் என்பது தான் தெரியவில்லை.

ஒரு மெக்கானிக்கிடம் பைக்கை கொடுக்கும்போது அவர் அந்த வாகனத்தை சரி செய்யும் வரை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.. அதுபோல ஹோட்டலில் சாப்பிடும் போது ஹோட்டலில் உணவு வைப்பது முதல் சாப்பிடுவது முதல் அவர்கள் செல்பி எடுப்பது முதல்ல என ஒவ்வொரு காட்சிகளையும் வைத்து நம்மை நோகடித்து விட்டார்கள்.

இப்படியாக ஒவ்வொரு காட்சிகளுக்கும் 10 15 நிமிடங்கள் எடுத்து படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர்.

நம் வீட்டுப் பெண்களைப் போல மற்ற பெண்களையும் பார்க்க வேண்டும் என தத்துவத்தை சொன்னாலும் இறுதியாக நாயகனின் தங்கையும் தடம் மாறி செல்லும் காட்சிகளும் இடம் பெறுகிறது..

அதாவது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்… வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற தத்துவத்தை பேசினாலும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.’ என்று ஏன் இந்த படத்திற்கு தலைப்பு வைத்தார் இயக்குனர் என்பது தான் புரியாத புதிராகவே இருக்கிறது.?

சரி இயக்குனர் தான் இப்படி என்றால் ஒளிப்பதிவாளரும் நம்மை நோகடித்து விட்டார்.. ஒவ்வொரு காட்சிகளுக்கும் ஒரே ஆங்கில் மட்டுமே படம் பிடித்திருக்கிறார்.

ஒரு வண்டி ஒரு இடத்திற்கு சென்று சேர ஐந்து நிமிடங்கள் ஆனால் அதை அப்படியே காட்டிக் கொண்டே இருக்கிறார்..

நல்லவேளை மதுரையில் இருந்து மயிலாடுதுறை செல்ல 8 மணி நேரம் ஆகும் காட்சியை 8 எபிசோடு எடுக்காமல் விட்டுவிட்டார் அதுவே பெரிய நன்றி..

சோசியல் மீடியா என்பது ஆபத்தானது அதில் மூழ்கிக் கிடக்கும் ஆண்கள் எந்த கண்ணோட்டத்துடன் நம்மை அணுகுகிறார்கள் என்பதை பெண்கள் கவனித்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சொன்னாலும் அதை சொன்ன விதத்தில் தடுமாறி நம்மை தள்ளாட வைத்து விட்டார் இயக்குனர்.

Nalla Perai Vaanga Vendum Pillaigalae movie review

போர் பட விமர்சனம்.. காலேஜ் கலாட்டா

போர் பட விமர்சனம்.. காலேஜ் கலாட்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போர் பட விமர்சனம்.. காலேஜ் கலாட்டா

ஸ்டோரி …

பிரபு செல்வன் (அர்ஜுன் தாஸ்).
யுவராஜ் (காளிதாஸ் ஜெயராம்).

கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் அர்ஜுன் தாஸ் சீனியர்.. காளிதாஸ் ஜெயராம் அவரின் ஜூனியர்..

கல்லூரியில் சேர்வதற்கு முன்னேரே சிறுவயது தொடங்கி இவர்களின் பகை தொடர்ந்து வருகிறது.. அது கல்லூரியில் விஸ்வரூபம் எடுக்கிறது..

இவர்களின் தோழிகளாக ரிஷ்விகா (சஞ்சனா நடராஜன்), காயத்ரி (டி.ஜெ.பானு)..

இரு மாணவர்களின் மோதல் அவர்களின் நண்பர்களின் மோதல் என படம் முழுவதும் மோதல் மோதல்.. ஒரு கட்டத்தில் இவர்களின் இந்த கல்லூரியை எப்படி ஒரு ‘போர்’க்களமாக்குகிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

பல படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் சமீபத்தில் வெளியான ‘அநீதி’ படத்தில் நாயகனாக அவதாரம் எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தப் ‘போர்’ படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார்.. மிரட்டான பாத்திரம் தான்.. கதைக்கு ஏற்ப அவரது கேரக்டர் பில்டப் செய்யப்பட்டிருந்தாலும் அவரது குரல் சில இடங்களில் பலமாகவும் பலவீனமாகவும் தெரிகிறது..

கல்லூரி மாணவியரின் காதல் மன்னனாக காளிதாஸ்.. இவரது கேரக்டர் மீது எந்த பெண்ணும் காதலால் விழுந்து விடுவாள் என பில்டப் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அவரும் ஸ்மார்ட் ஆக இருக்கிறார்.

சஞ்சனா நடராஜன், டி.ஜெ. பானு, நித்யஸ்ரீ ஆகியோரின் உண்டு.. இவர்கள் கதையின் நாயகிகளாக கல்லூரி மாணவியராக நடித்திருக்கின்றனர்..

அம்ருதா சீனிவாசன் கேரக்டரின் சிறப்பாக அமைந்திருக்கிறது ஆனால் அவருக்கான ஸ்பேஸ் அதிகப்படுத்தி இருக்கலாம்..

டெக்னீசியன்ஸ் …

ஆறு ஏழு எபிசோடுகளாக ஒரு வெப் தொடருக்கான கதையை ஒரு திரைப்படமாக கொடுக்க முன்வந்திருக்கிறார் இயக்குனர் பிஜோய் நம்பியார்..

கல்லூரி படங்கள் எத்தனையோ பார்த்து இருப்போம் அதில் காதல் கலாட்டா முதல் என அனைத்தையும் இருக்கும் ஆனால் இதில் எந்த சுவாரசியம் இல்லாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

இசை ஒளிப்பதிவு கலை என ஒவ்வொரு துறைக்கும் 2-3 நபர்களை அமைத்து விட்டார். எனவே தான் இந்த குளறுபடிகள் காரணமோ என நினைக்கத் தோன்றுகிறது.

ஒளிப்பதிவாளர்கள்.. ஜிம்ஷி காலிட், பிரெஸ்லி ஆஸ்கர் டிசோசாவை.

பின்னணி இசை -ஹரீஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன் மற்றும் கௌரவ் கோட்கிண்,

கலை இயக்குநர்கள் : லால்குடி இளையராஜா, மானசி சாவரே.

எடிட்டர் – பிரியங்க் பிரேம்குமார்..

இயக்குனர் பிஜோய் நம்பியார்..

இன்று பள்ளிகளிலேயே போதை மருந்து கலாச்சாரம் வந்துவிட்டது.. எனவே கல்லூரியில் வைத்தாலும் தப்பில்லை என விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு மருத்துவக் கல்லூரியில் மக்களின் ஆரோக்கியத்திற்காக படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒரு போதை மருந்து கலாச்சாரத்தை உருவாக்கி வைத்திருப்பது நோக்கம் என்ன.?

அர்ஜுன் தாசுக்கு மன பிரச்சனை.. காளிதாசுக்கு பாலியல் தொல்லை.. ஒரே ஹாஸ்டலில் பாய்ஸ் & கேர்ள்ஸ், தோழியின் தன் பாலின ஈர்ப்பு என என அநாகரிகமான காட்சிகளை வைத்து ரசிகர்களின் பொறுமையை சோதித்து விட்டார் இயக்குனர்..

இதனால் இந்த போர் படத்துடன் நம்மால் ஒன்றும் முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.!

Arjundas and Kalidas starrer Por Review

More Articles
Follows