என்னோடு விளையாடு விமர்சனம்

என்னோடு விளையாடு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பரத், கதிர், சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி, யோக் ஜேபி, கமலா கணேஷ் மற்றும் பலர்.
இயக்கம் : அருண் கிருஷ்ணசாமி
இசை : மோசஸ் மற்றும் சுதர்சன் குமார்
ஒளிப்பதிவாளர் : யுவா
எடிட்டிங் : கோபி கிருஷ்ணா
பி.ஆர்.ஓ.: கோபிநாதன்
தயாரிப்பாளர் : டோரண்டோ ரீல்ஸ், ரேயான் ஸ்டூடியோஸ்

கதைக்களம்…

பரத் மற்றும் சாந்தினி ஒரு ஜோடி. இதில் பரத் குதிரை ரேஸ் பிரியர். அதில் நிறைய நஷ்டத்தை சந்திக்கும் அவர் லாபம் சம்பாதிக்க குறுக்கு வழிக்கு செல்ல நினைக்கிறார்.

கதிர் மற்றும் சஞ்சிதா மற்றொரு ஜோடி. இதில் சஞ்சிதாவுக்கு உதவ கதிர் குறுக்கு வழிக்கு செல்லும் சூழ்நிலை உருவாகிறது.

ராதாரவி, யோக் ஜேபி, கமலா கணேஷ் ஆகிய மூவரும் குதிரை ரேஸின் ஜாம்பவான்கள்.

குதிரை பந்தயமும் இவர்களுக்குள் விளையாடும் சூதாட்டமே இந்த என்னோடு விளையாடு.

கதாபாத்திரங்கள்…

முன்பை விட இதில் படு ஸ்மாட்டாக் இருக்கிறார் பரத். கூடவே பாடி பில்டப் மெயின்ட்டெயின் செய்து இளைஞர்களை கவருகிறார்.

இவருக்கும் சாந்தினிக்கும் நல்ல கெமிஸ்ட்ரி. சாந்தினி அழகான கிறிஸ்த பெண்ணாக வருகிறார்.

அப்பாவியாக இளைஞராகவும் இறுதியில் அதிடியிலும் கதிர் கலக்கல். சஞ்சிதா கிளாமராகவும் ஹோம்லியாகவும் ரசிகர்களை கவருகிறார்.

ராதாரவி மற்றும் யோக் ஜேபி இருவரும் மூளைக்காரர்கள். குதிரை ஜெயிப்பது மட்டும் வெற்றியல்ல. அதில் தங்களது கௌரவமும் அடங்கியுள்ளது என்பதற்காக ஆடும் ஆட்டம் ரசிக்கலாம்.

ஒரு சில காட்சிகளில் வந்தாலும் ஜெயச்சந்திரன் மனதில் நிற்கிறார். நிறைய காட்சிகள் கொடுத்திருக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர்கள் இரண்டு பேர் என்பதால் 5 பாடல்களை தாண்டிவிடுகிறது.

பாடல்கள் நன்றாக இருந்தாலும் அடுத்தடுத்து வருவதை தவிர்த்து இருக்கலாம்.

யுவா ஒளிப்பதிவில் குதிரை ரேஸ் காட்சிகள் அதிரடி.

இயக்குனர் பற்றிய அலசல்…

குதிரை ரேஸ் சென்னையில் தடைப்பட்டு இருப்பதால் இதில் நடைபெறும் சூதாட்டங்கள் தமிழக ரசிகர்களுக்கு புது அனுபவம்தான்.

இடைவேளை வரை என்னாகுமோ? என்று செல்லும் திரைக்கதை அதன்பின்னர் குதிரை வேகம் எடுக்கிறது.

ஆனால் சூதாட்டத்தினால் சில குடும்பங்கள் அழிந்து வருவதையும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம்.

என்னோடு விளையாடு… சுவையான சூதாட்டம்

காதல் கண் கட்டுதே விமர்சனம்

காதல் கண் கட்டுதே விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கேஜி, அதுல்யா, சிவ்ராஜ், அனிருத் மற்றும் பலர்.
இயக்கம் : சிவராஜ்
இசை : பவன்
ஒளிப்பதிவாளர் : ராஜ்மோகன்
பி.ஆர்.ஓ.: கே.என். குமார்
தயாரிப்பாளர் : மாண்டேஜ் மீடியா (சிவராஜ்)

கதைக்களம்…

ஹீரோ கேஜி மற்றும் நாயகி அதுல்யா இருவரும் காலேஜ்மேட்ஸ். இருவரும் கோவையை சேர்ந்தவர்கள்.

நண்பர்களாக இருக்கும் இவர்கள் படிப்புக்கு பிறகு அடிக்கடி சந்திக்கும் சூழ்நிலை உருவாகிறது.

எனவே காதலும் உருவாகிறது. இதில் அதுல்யா ஒரு பத்திரிகையில் பணிபுரிகிறார்.

அங்குள்ள அனிருத் என்பவரிடம் (படத்தில் கார்த்திக்) இவர் பணி காரணமாக பழக, அது நாயகனுக்கு கோபத்தை உண்டாக்குகிறது.

அதனால் இவர்களின் காதல் இடையே மோதலும் உருவாகிறது. இதனையடுத்து அவர்கள் இணைந்தார்களா? காதல் என்னவானது என்பதுதான் படத்தின் கதை.

kadhal 2

கதாபாத்திரங்கள்..

நாம் மேலே கூறிய கேரக்டர்கள்தான் படத்தின் மொத்த கேரக்டர்களும் என்றே சொல்லாம்.

இடையில் நண்பர்கள் வந்து செல்கிறார்கள்.

ஒரு சராசரி கோவை பையனாக வந்து செல்கிறார் கே.ஜி. (படத்தில் சிவா) பெண்களின் மனதை புரிந்துக் கொள்ளாமல் தவிக்கும் காட்சிகளில் ரசிக்கலாம்.

அதுல்யாவுக்கு இது முதல் படம் என்றாலும் கண்களால் நிறையவே ஸ்கோர் செய்கிறார். கண்களும் அவரது புருவங்களும் நிறைய பேசுகின்றன.

ஹீரோவின் நண்பர்கள் மற்றும் ஆபிஸ் ப்ரெண்ட்ஸ் ஆகியோருக்கு இன்னும் வேலை கொடுத்திருக்கலாம்.

1S4A9266 copy

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் மிகப்பெரிய பலமே பவனின் பாடல்கள் மற்றும் சிவராஜின் ஒளிப்பதிவுதான்.

காதலே உனக்கு என்ன பாவம் செய்தேனோ என்று தொடங்கி எத்தனை நாட்கள் என்ற பாடல் நிச்சயம் எத்தனை நாட்கள் ஆனாலும் மனதை விட்டு போகாது.

என்னை கொஞ்சமாய் கொன்றாயே பாடலும் ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளரின் காதல் காட்சிகள் கண்களுக்கு விருந்து.

இன்றைய காதலர்களின் சின்ன சின்ன சண்டைகளை கொஞ்சம் நீளமாக சொல்லிவிட்டார்.

ஒரு குறும்படத்திற்கான கதையை நீண்ட நேரம் சொல்லியிருப்பதுதான் பலவீனம்.

படத்தில் எந்தவிதமான ட்விஸ்ட் இல்லாமல் போனது மகா வருத்தம்.

காதல் கண் கட்டுதே… காதலர்களை கவரும்

காஸி விமர்சனம்

காஸி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ராணா டக்குபதி, கே.கே. மேனன், அதுல் குல்கர்னி, நாசர், ஓம் புரி, டாப்ஸி மற்றும் பலர்.
இயக்கம் : சங்கல்ப் ரெட்டி
இசை : கே
ஒளிப்பதிவாளர் : மதி
எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்
பி.ஆர்.ஓ.: ரியாஸ் கே அஹ்மத்
தயாரிப்பாளர் : பிவிபி சினிமாஸ் மற்றும் மேட்னி மூவீஸ்

கதைக்களம்…

இந்த உலகம் பெரிதாக அறிந்திராத இந்தியா-பாகிஸ்தான் போர் பற்றிய கதை.

இது கடலுக்கு அடியில் நடைபெற்ற போர் என்பதால் மூடி மறைக்கப்பட்டு விட்டதோ?

இந்தியாவின் விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் செயல்திறனை நினைத்து பயப்படுகிறது பாகிஸ்தான் கடற்படை.

ஒரு சூழ்நிலையில் இந்தியாவை தாக்க முற்படுகிறது. இதனையறிந்த உளவுத்துறை இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் உள்ள ஓம் பூரி மற்றும் நாசருக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.

எனவே, கேப்டன் கே கே மேனன் தலைமையில் இந்த தாக்குதலை முறியடிக்க முனைகின்றனர்.

இதில் ராணா மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் உள்ளனர்.

பாகிஸ்தானின் கடற்கடையான காஸியை நம் இந்தியாவின் எஸ் 21 என்ற நீர் மூழ்கி கப்பல் எப்படி முறியடிக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

கதாபாத்திரங்கள்..

கோபக்கார கேப்டனாக ஜொலிக்கிறார் கே.கே. மேனன். இவரை பார்க்கும்போது நம் எதிரிகளை அழிக்க இப்படியொரு கேப்டன் நிச்சயம் வேண்டும் என்று நினைக்க தோன்றும்.

இவருக்கு நேர் எதிரானவர். நிதானமானவர் ராணா. தான் ஒரு மாஸ் நாயகன் என்பதை எல்லாம் மறந்து, இந்தியாவின் நிஜ வீரராக பிரதிபலிக்கிறார்.

ஒரு கடற்படையில் நிறைய பேருக்கு, விதவிதமான எண்ணங்கள் இருக்கும். ஆனால் அவற்றை எப்படி கேப்டன் ஒருங்கிணைக்கிறார்? என்பதை தெளிவாக தன் காட்சியில் மூலம் விவரிக்கிறார் டைரக்டர் சங்கல்ப்.

கிட்டதட்ட நீர் மூழ்கி கப்பல் மற்றும் கப்பற்படை பற்றி பாடமே நடத்தியிருக்கிறார்கள்.

ஹாலிவுட்டுக்கு சவால் மட்டுமல்ல. அதில் வென்றும் இருக்கிறார்கள்.

நேர்த்தியான ஒளிப்பதிவை கடலுக்கு அடியில் நிகழ்த்தி நம்மை ஒவ்வொரு காட்சியிலும் ஒட்ட வைக்கிறார்கள்.

பாகிஸ்தான் காட்சிகளுக்கு ஒருவித பச்சை நிறத்திலும் இந்திய காட்சிகளுக்கு நீல நிறத்திலும் காட்சிகளை அமைத்திருப்பது மிகச்சிறப்பு.

கே யின் பின்னணி இசை கூடுதல் பலம். கன்னி வெடி வெடிக்குமோ? இந்திய கப்பல் அழிந்துவிடுமோ என்று ஒவ்வொரு நிமிடமும இதயம் படபட வைக்கிறார்.

காட்சிகளில் கிராபிக்ஸ் என்றாலும் அவை கிராபிக்ஸ் என்றே சொல்லமுடியாத படி காட்சிகளில் அவ்வளவு தெளிவு.

(படத்தை நிச்சயம் தியேட்டரில் பார்த்து இந்தியாவின் போருக்கு பெருமை சேர்ப்பது நலம்)

காஸி… ஹாலிவுட்டுக்கு இந்தியன் சவால்

சிங்கம் 3 சி3 விமர்சனம்

சிங்கம் 3 சி3 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், நாகர், ராதாரவி, சூரி, க்ரிஷ், ரோபாசங்கர், தகூர்அனுப் சிங், சாம்ஸ், ராதிகா சரத்குமார், நீதுசந்திரா மற்றும் பலர்.
இயக்கம் : ஹரி
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவாளர் : பிரியன்
எடிட்டிங்: விடிவிஜயன்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பாளர் : ஸ்டூடீயோ கிரீன் ஞானவேல்ராஜா

கதைக்களம்….

சிங்கம் படத்தை போல இதிலும் சூர்யா ஒரு கமிஷ்னர்.

அவருக்கான புரொஜக்ட் என்னவென்றால், ஆந்திராவில் ஒரு கமிஷனர் கொல்லப்படுகிறார்.

அந்த கொலையாளியை கண்டுபிடிக்க துரை சிங்கம் புறப்படுகிறார்.

அங்குபோன பிறகுதான் ஒரு வெளிநாட்டு கும்பல் இந்தியளவில் செய்யும் நாசவேலைகள் இவருக்கு தெரிய வருகிறது.

அதனைதொடர்ந்து வழக்கம்போல் சிங்கத்தின் பாய்ச்சல் தொடர்கிறது.

C4M2MtPWYAAKj_E

கதாபாத்திரங்கள்…

படம் ஆரம்பித்து 30 நிமிடங்கள் பதுங்கும் சூர்யா அதன்பின்னர் அதிரடியாக க்ளைமாக்ஸ் வரை பாய்ந்து பாய்ந்து அடிக்கிறார்.

இவருக்கு வில்லனும் சளைத்தவர் இல்லை. இருவரும் மோதும் காட்டுப் பகுதியில் உள்ள சண்டைக் காட்சிகள் அனல் பறக்கிறது.

அதுபோல் சூர்யாவின் பன்ச் டயலாக்குகளும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

அனுஷ்கா அவரது உயரத்திற்கு ஏற்ப, அம்சமாக வருகிறார்.

ஸ்ருதிஹாசனின் கேரக்டர் வெறுமனே இல்லாமல் ஒரு பத்திரிகையாளராக வருகிறார். ஒரு பாடலும் இவருக்கு உண்டு.

மற்ற கேரக்டர்கள் சூர்யாவின் போலீஸ் படைக்கு அதிகம் உதவுகிறது.

சிரிப்பு போலீஸ் போல சூரி, ரோபா சங்கர், சாம்ஸ் காணப்பட்டாலும் அவர்களை நிறைவாக பயன்படுத்தியுள்ளார் ஹரி.

ஒரு காட்சியில் ராதாரவியும் நாசரும் ஒன்றாக வருகிறார்கள். (நடிகர் சங்க மோதலுக்கு பிறகு வருவது ஆச்சரியம்தான்)

C3b_kDFUEAAAXlC

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

பின்னணி இசையில் கிட்டதட்ட எல்லா கருவிகளையும் பயன்படுத்தியிருப்பார் போல. சில நேரம் காதுகள் கிழிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

பிரியன் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. விடி விஜயனின் எடிட்டிங் எத்தனை கிலோ மீட்டர் வேகம் என்றே தெரியவில்லை. ஸ்பீட் பிரேக் இல்லாமல் பாய்கிறது.

C3b_kDAUoAAJNNC

இயக்குனர் பற்றிய அலசல்

படம் ஆரம்பித்து கிட்டதட்ட 30 நிமிடங்கள் சிங்கம் பதுங்கி செல்கிறது திரைக்கதை.

ஆனாலும் படத்தில் விறுவிறுப்புக்கு குறைச்சல் இல்லை.

காமெடி டயலாக்குகள் கூட பாஸ்ட்டாகவே பாய்கிறது. வழக்கம்போல இது சூர்யா-ஹரி கூட்டணியின் கமர்ஷியல் மசாலா.

உலகில் உள்ள பல நாடுகளில் மருத்துவ கழிவுகளை இந்தியாவில் கொட்டுகின்றனர். அது ஒழிக்கப்படும் வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

சிங்கம் 3 கர்ஜனை தொடரும்…

எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜெய், பிரணித்தா, கருணாகரன், காளி வெங்கட், நவீன், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர்.
இயக்கம் : மகேந்திரன் ராஜமணி
இசை : சந்தோஷ் தயாநிதி
ஒளிப்பதிவாளர் : மகேஷ் முத்துஸ்வாமி
எடிட்டிங்: கோபி கிருஷ்ணா
பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்
தயாரிப்பாளர் : வன்ஸன் மூவீஸ் (சுதர்சன்)

Enakku-Vaitha-Adimaigal-Movie-Pooja-Stills-1

கதைக்களம்…

காதல் தோல்விக்கு தற்கொலை சரியான முடிவல்ல.

ஒருவர் தற்கொலை செய்தாலும், செய்ய நினைத்தாலும் அவரை சுற்றியுள்ள குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கு பிரச்சினை எப்படியெல்லாம் வரும் என்பதே இப்படத்தின் கதை.

தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிகிறார் ஹீரோ ஜெய்.

இவருடைய நண்பர்கள் கருணாகரன் ஒரு பேங்க் கேஷியர், காளி வெங்கட் ஒரு ஷேர் ஆட்டோ டிரைவர், நவீன் கால் சென்டரில் வேலை செய்கிறார்.

ஜெய்யும் அவருடன் பணிபுரியும் பிரணித்தாவும் காதலிக்கிறார்கள். ஒரு சூழ்நிலையில் இருவரும் பிரிய நேரிடுகிறது.

அதனால் தற்கொலைக்கு முயற்சிக்கும் ஜெய்யால், அவரது நண்பர்கள் என்னவெல்லாம் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை காமநெடியுடன் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் மகேந்திரன் ராஜமணி.

jai pranitha

கதாபாத்திரங்கள்…

ஜெய் வழக்கம்போல நடுத்தர குடும்ப பையன். ஆனால் நடிப்புக்கு பெரிதாக ஸ்கோப் இல்லை. ஜாலியாக வந்து செல்கிறார்.

ஹீரோயின் உடன் டூயட் பாடுகிறார். ஆக்ஷன் கிடையாது.

இவரின் நண்பர்களாக வரும் கருணாகரன், காளிவெங்கட், நவீன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

ஜெய்யை தேடுவதிலும் தற்கொலை செய்துக் கொண்டிருப்பானோ என பதறுவதிலும் நன்றாகவே தேடி தேறியிருக்கிறார்கள்.

இந்த அடிமைகள்கள்தான் படத்திற்கு பெரியளவில் கைகோர்த்திருக்கிறார்கள்.

க்ளைமாக்ஸின்போது கௌரவ தோற்றத்தில் வருகிறார் அஞ்சலி. அதைவிட கூடுதலாக ஒரு 3 காட்சிகளில் வருவார் பிரணீத்தா. அவ்வளவுதான்.

நாயகன் காதல் தோல்வி என்பதால் நாயகிக்கு சீன்கள் இல்லையோ?

ஒரு காட்சி என்றாலும் அஞ்சலி அம்சமாக வந்துபோகிறார்.

இவரைப்போல் சந்தானம் ஒரு காட்சியில் ரசிகர்களின் அப்ளாஸை அள்ளுகிறார்.

காதலி வந்தால் டேக் கேர். காதலி போனால் டோன்ட் கேர் என்று பன்ச் பேசி ரசிக்க வைக்கிறார்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரனும் வருகிறார். சில காட்சிகளில் சிறப்பு சேர்க்கிறார்.
லொள்ளுசபா மனோகர் ஒரே காட்சியில் வந்து சிரிக்க வைக்கிறார்.

தம்பி ராமைய்யா, ஆர்எம்ஆர் மனோகர், மாரிமுத்து, சூப்பர்குட் சுப்ரமணி, படவா கோபி ஆகியோரும் உண்டு. இவர்களின் காட்சிகளில் வலுவில்லை.

3 friends

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சந்தோஷ் தயாநிதி இசையில் நட்பு பாடல் நண்பர்களுக்கு விருந்து. கண்ணாடி பூக்கள் பாடல் ஓகே.

ஒளிப்பதிவாளர் படத்திற்கு சிறப்பு சேர்ந்திருந்தால் இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

இயக்கம் பற்றிய அலசல்…

தற்கொலை செய்யப்போகும் ஜெய், அதற்குமுன் ஒன்றன்பின் ஒன்றாக செய்வது சில நேரங்களில் ரசிக்க வைத்தாலும் மற்ற நேரங்களில் போரடிக்கிறது.

நிறைய காட்சிகளில் டபுள் மீனிங் வசனங்கள் இருக்கிறது.

அதிலும் அஜித் வசனம் ஒன்று வந்தால் விஜய் வசனம் ஒன்றும் வருகிறது. இவை பல இடங்களில் இடம்பெறுவதை தவிர்த்து இருக்கலாம்.

ஜெய் ப்ரணித்தா காதலில் வலுவில்லை. அதுபோல் காதல் முறிவுக்கும் சரியான காரணம் சொல்லவில்லை.

இப்படியாக சில தொய்வுகள் ஏற்ப்பட்டாலும் ஆங்காங்கே நகைச்சுவையை பரவி ரசிக்க வைக்கிறார்.

ஒருவர் தற்கொலை செய்யப்போகும் முன், மற்றவர்களுக்கு போன் செய்வதால் ஏற்படும் பிரச்சினைகளை காமெடி கலந்து சொன்னதில் இயக்குனர் மகேந்திரன் ராஜமணி சபாஷ் பெறுகிறார்.

எனக்கு வாய்த்த அடிமைகள்… தற்கொலைக்கான விழிப்புணர்வு

போகன் விமர்சனம்

போகன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜெயம் ரவி, அர்விந்த் சாமி, ஹன்சிகா, வருண், அக்ஷரா கௌடா, ஆடுகளம் நரேன், நாசர், பொன்வண்ணன், ஜாமி மற்றும் பலர்.
இயக்கம் : லட்சுமணன்
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : சௌந்தர்ராஜ்
எடிட்டிங்: ஆண்டனி
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : பிரபுதேவா ஸ்டூடீயோஸ்

????????????????????????

கதைக்களம்…

போகன்.. அட என்னப்பா.. இதுவும் ஒரு கூடுவிட்டு கூடு பாயும் கதைதான் என்று ஒரே வரியில் சொல்லிவிடலாம்.

ஆனால்… அப்படிபார்த்தால் வரும் படங்களில் 80 சதவிகிதம் காதல்கதைதான் என்று ஒதுக்கிவிட முடியுமா? அதை இயக்குனர் எப்படி சொல்லியிருக்கிறார் என்பதுதானே சுவாரஸ்யம். அப்படி ஒரு சுவாரஸ்யம் நிறைந்த கதைதான் போகன்.

ஆதித்யா (அரவிந்த் சாமி), மிகப்பெரிய பணக்காரர். ஆனால் பணத்துக்காக எதையும் செய்யும் அதாவது கொள்ளையடிக்கும் குணம் கொண்டவர்.

ஆனால் இவர் கொள்ளையடிக்காமல், ஒரு அபூர்வ சக்தியைப் பயன்படுத்தி மற்றவர்களை அதில் சிக்கவைத்து வாழ்பவர் இவர்.

விக்ரம் (ஜெயம் ரவி) ஒரு போலீஸ். இவருக்கும் மகாலட்சுமிக்கும் (ஹன்சிகா) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது.

இந்நிலையில் அர்விந்த் சாமியின் சூழ்ச்சியால், ஜெயம்ரவியின் அப்பா சிக்கிக் கொள்ள, அதன்பிறகு ஜெயம் ரவிக்கும் அரவிந்த்சாமிக்கும் நடக்கும் உச்சக்கட்ட போராட்டமே போகன்.

bogan team

கதாபாத்திரங்கள்…

இதில் ரெண்டு ஹீரோ. ரெண்டு வில்லன் என்றே சொல்லலாம். அவர்கள் இருவரும் சாட்சாத் ஜெயம்ரவியும் அர்விந்த்சாமியும்தான்.

அர்விந்த்சாமி ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்துவிட்டார். இந்த படத்திற்கு பிறகு இனி ஜெயம் ரவியும் வில்லனாக நடிக்கலாம்.

அரவிந்த்சாமியாக ஜெயம்ரவி மாறியபின் அவரைப் போல் செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்குகிறார்.

அதுபோல், தன்னுடைய வில்லத்தனத்தை ஸ்டைலிஷ்ஷாகவும் அப்பாவியாகவும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார் அரவிந்த் சாமி.

இவர்களுடன் ஹன்சிகாவும் போட்டிக் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கிளாமராகவும் வந்து ரசிக்க வைக்கிறார்.

நாசர், பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், நாகேந்திர பிரசாத் மற்றும் வருண் ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

’ஆரம்பம்’ புகழ் அக்‌ஷரா கெளடா சில காட்சிகளிலேயே வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.

jayam ravi hansika

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசை இதிலும் குறை வைக்கவில்லை. அதிலும் பின்னணி இசையில் பின்னிஎடுத்துவிட்டார்.

இயக்குநர் காட்சியை சுவாரஸ்யமாக வைத்திருந்தாலும், அதை ரசிக்கும்படி செய்திருப்பவர் ஒளிப்பதிவாளர் செளந்தரராஜன்தான்.

மதன்கார்க்கி வரிகளுக்கு சங்கர் மகாதேவன் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள வாராய் வாராய் பாடலை எத்தனை முறை வேண்டுமனாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

தாமரை எழுதியுள்ள செந்தூரா பாடலும் ரசிக்கலாம்.

டமாலு டூமீலு பாடலில் எல்லா நடிகர்களும் வருவதால் தியேட்டரில் ஆரவாரம்தான்.

முதல் பாதியில் சில காட்சிகளை வெட்டி இருக்கலாமே என்று எடிட்டர் ஆண்டனியிடம் கேட்க தோன்றுகிறது.

சில லாஜிக் மீறல் இருந்தாலும் தன்னுடை விறுவிறுப்பான திரைக்கதையால் குறைகளை திணறடித்திருக்கிறார் இயக்குனர் லட்சுமணன்.

போகன்…. போற்றக்கூடியவன்

More Articles
Follows