தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : ஜெய், பிரணித்தா, கருணாகரன், காளி வெங்கட், நவீன், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர்.
இயக்கம் : மகேந்திரன் ராஜமணி
இசை : சந்தோஷ் தயாநிதி
ஒளிப்பதிவாளர் : மகேஷ் முத்துஸ்வாமி
எடிட்டிங்: கோபி கிருஷ்ணா
பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்
தயாரிப்பாளர் : வன்ஸன் மூவீஸ் (சுதர்சன்)
கதைக்களம்…
காதல் தோல்விக்கு தற்கொலை சரியான முடிவல்ல.
ஒருவர் தற்கொலை செய்தாலும், செய்ய நினைத்தாலும் அவரை சுற்றியுள்ள குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கு பிரச்சினை எப்படியெல்லாம் வரும் என்பதே இப்படத்தின் கதை.
தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிகிறார் ஹீரோ ஜெய்.
இவருடைய நண்பர்கள் கருணாகரன் ஒரு பேங்க் கேஷியர், காளி வெங்கட் ஒரு ஷேர் ஆட்டோ டிரைவர், நவீன் கால் சென்டரில் வேலை செய்கிறார்.
ஜெய்யும் அவருடன் பணிபுரியும் பிரணித்தாவும் காதலிக்கிறார்கள். ஒரு சூழ்நிலையில் இருவரும் பிரிய நேரிடுகிறது.
அதனால் தற்கொலைக்கு முயற்சிக்கும் ஜெய்யால், அவரது நண்பர்கள் என்னவெல்லாம் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை காமநெடியுடன் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் மகேந்திரன் ராஜமணி.
கதாபாத்திரங்கள்…
ஜெய் வழக்கம்போல நடுத்தர குடும்ப பையன். ஆனால் நடிப்புக்கு பெரிதாக ஸ்கோப் இல்லை. ஜாலியாக வந்து செல்கிறார்.
ஹீரோயின் உடன் டூயட் பாடுகிறார். ஆக்ஷன் கிடையாது.
இவரின் நண்பர்களாக வரும் கருணாகரன், காளிவெங்கட், நவீன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
ஜெய்யை தேடுவதிலும் தற்கொலை செய்துக் கொண்டிருப்பானோ என பதறுவதிலும் நன்றாகவே தேடி தேறியிருக்கிறார்கள்.
இந்த அடிமைகள்கள்தான் படத்திற்கு பெரியளவில் கைகோர்த்திருக்கிறார்கள்.
க்ளைமாக்ஸின்போது கௌரவ தோற்றத்தில் வருகிறார் அஞ்சலி. அதைவிட கூடுதலாக ஒரு 3 காட்சிகளில் வருவார் பிரணீத்தா. அவ்வளவுதான்.
நாயகன் காதல் தோல்வி என்பதால் நாயகிக்கு சீன்கள் இல்லையோ?
ஒரு காட்சி என்றாலும் அஞ்சலி அம்சமாக வந்துபோகிறார்.
இவரைப்போல் சந்தானம் ஒரு காட்சியில் ரசிகர்களின் அப்ளாஸை அள்ளுகிறார்.
காதலி வந்தால் டேக் கேர். காதலி போனால் டோன்ட் கேர் என்று பன்ச் பேசி ரசிக்க வைக்கிறார்.
இவர்களுடன் மொட்டை ராஜேந்திரனும் வருகிறார். சில காட்சிகளில் சிறப்பு சேர்க்கிறார்.
லொள்ளுசபா மனோகர் ஒரே காட்சியில் வந்து சிரிக்க வைக்கிறார்.
தம்பி ராமைய்யா, ஆர்எம்ஆர் மனோகர், மாரிமுத்து, சூப்பர்குட் சுப்ரமணி, படவா கோபி ஆகியோரும் உண்டு. இவர்களின் காட்சிகளில் வலுவில்லை.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
சந்தோஷ் தயாநிதி இசையில் நட்பு பாடல் நண்பர்களுக்கு விருந்து. கண்ணாடி பூக்கள் பாடல் ஓகே.
ஒளிப்பதிவாளர் படத்திற்கு சிறப்பு சேர்ந்திருந்தால் இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
இயக்கம் பற்றிய அலசல்…
தற்கொலை செய்யப்போகும் ஜெய், அதற்குமுன் ஒன்றன்பின் ஒன்றாக செய்வது சில நேரங்களில் ரசிக்க வைத்தாலும் மற்ற நேரங்களில் போரடிக்கிறது.
நிறைய காட்சிகளில் டபுள் மீனிங் வசனங்கள் இருக்கிறது.
அதிலும் அஜித் வசனம் ஒன்று வந்தால் விஜய் வசனம் ஒன்றும் வருகிறது. இவை பல இடங்களில் இடம்பெறுவதை தவிர்த்து இருக்கலாம்.
ஜெய் ப்ரணித்தா காதலில் வலுவில்லை. அதுபோல் காதல் முறிவுக்கும் சரியான காரணம் சொல்லவில்லை.
இப்படியாக சில தொய்வுகள் ஏற்ப்பட்டாலும் ஆங்காங்கே நகைச்சுவையை பரவி ரசிக்க வைக்கிறார்.
ஒருவர் தற்கொலை செய்யப்போகும் முன், மற்றவர்களுக்கு போன் செய்வதால் ஏற்படும் பிரச்சினைகளை காமெடி கலந்து சொன்னதில் இயக்குனர் மகேந்திரன் ராஜமணி சபாஷ் பெறுகிறார்.
எனக்கு வாய்த்த அடிமைகள்… தற்கொலைக்கான விழிப்புணர்வு