கவிதை பேசும் கண்ணழகி; எம்பிரான் விமர்சனம் 3/5

கவிதை பேசும் கண்ணழகி; எம்பிரான் விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

நாயகன் ரெஜித் மேனன் ஒரு டாக்டர். இவரின் அம்மா கல்யாணி நடராஜன். தன் உண்டு தன் கடமை உண்டு என இருப்பவர் இவர். இவரது கனவில் இவருக்கு தெரியாத ஒரு பெண் அடிக்கடி வருகிறாள். ஏதோ தனக்கு நடக்க போகிறது? என குழப்பம் அடைகிறார்.

தன் மகனுக்கு ஒரு நல்ல வரன் கிடைக்க அம்மா கோயில் கோயிலாக செல்கிறார்.

நாயகி ராதிகா ப்ரீத்தி தனது தாத்தா சந்திரமெளலியோடு வசிக்கிறார்.

ஹீரோயினுக்கு ஹீரோ மீது லவ்வோ லவ். நீ போகும் இடமெல்லாம் நானே வருவேன் என்பது போல பாலோ செய்கிறார். ஆனால் தன் காதலை சொல்ல தயக்கம் காட்டுகிறார்.

அவர் டாக்டர் தானே. அவரை சந்திக்க வேண்டும் என்றால் தனக்கு ஏதாவது விபத்து அல்லது காய்ச்சல் வரவேண்டும் என்பதால் ஏதாவது செய்துக் கொண்டே இருக்கிறார்.

ஒரு நாள் அதிக காய்ச்சலும் வருகிறது. தன் தாத்தாவுடன் டாக்டரை சந்திக்க செல்கிறார்.

ஆனால் பெரும் விபத்து ஏற்பட தாத்தா சந்திரமெளலி சம்பவ இடத்திலேயே இறக்கிறார். நாயகியோ கோமா நிலைக்கு சென்று விடுகிறார்.

அதன் பின்னர் ராதிகா காதல் கை கூடியதா? ரெஜித் மேனனுக்கு ராதிகாவின் காதல் தெரிந்ததா.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ஸ்மார்ட்டான டாக்டர் ரெஜித் மேனன். இவர் ரொமான்ஸ் செய்யவில்லை என்றாலும் இவரை நிச்சயம் பெண்கள் சுற்றுவார்கள் என்பது போல இருக்கிறார். நடிப்பில் கொஞ்சம் ஸ்கோர் செய்துள்ளார்.

இந்த படமே நாயகிதான். என்ன அழகு? எத்தனை அழகு? என்ற பாட்டே பாடலாம். கண்களில் காதல் பேசி நம்மை போதை ஏற்றுகிறார். பேச்சும் மழலை பேச்சுக்கு ஈடாக உள்ளது. ப்ரேம் பை ப்ரேம் அழகு சேர்கிறார்.

தாத்தாவாக நடித்துள்ள சந்திரமௌலி மற்றும் அம்மாவாக நடித்துள்ள கல்யாணி இருவரும் தங்கள் பணிகளில் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யாகாவராயினும் நாகாக்க” பட புகழ் பிரசன்னாவின் இசையில் பாடல்கள் சிறப்பு என்றாலும் குறைந்த நேர படத்தில் இத்தனை பாடல்கள் தேவையா? என தோன்றுகிறது.

புகழேந்தி என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாயகி மீது அவ்வளவு பாசமா? எனத் தெரியவில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகாக காட்டியுள்ளார். எனவே நாயகிக்காகவே படத்தை பார்க்கலாம்.

நம் முன்னோர்கள் மறைந்த நம் நலம் விரும்பிகள் தனக்கு நடக்கப்போகும் நல்லது கெட்டதை முன்னரே கனவில் வந்து சொல்வார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

இது சரியா? என்பதை தாண்டி அப்படி இருந்தால் நல்லது தானே என நினைக்க தோன்றுகிறது.

நல்ல கதைக்களம் என்றாலும் மெதுவாக செல்லும் திரைக்கதையால் படம் நம்மை சோதிக்கிறது. ஒருவேளை ஏதாவது காமெடி நடிகர் இருந்திருந்தால் நமக்கு போரடிக்காமல் இருக்காது என்றே சொல்ல வேண்டும்.

எம்பிரான்… கவிதை பேசும் கண்ணழகி

ஆச்சரியங்கள் நிறைந்தவன்.; அகவன் விமர்சனம்

ஆச்சரியங்கள் நிறைந்தவன்.; அகவன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கிஷோர் ரவிச்சந்திரன், சைரா ஸ்ரீ, நித்யா ஷெட்டி, தம்பி ராமையா, சரண்ராஜ், நரேன், பிரியங்கா, ஹலோ கந்தசாமி, ஆர்என்ஆர் மனோகர் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – பாலா பழனியப்பன்
எடிட்டர் – தாஸ் அண்ட் நிர்மல்
இசை – சி. சத்யா
இயக்கம் – ஏபிஜி ஏழுமலை
தயாரிப்பு – ரவிச்சந்திரன்
பிஆர்ஓ – நிகில் முருகன்

கதைக்களம்..

நாயகன் கிஷோர் கோயிலில் தங்கி கோயில் தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். தன் அண்ணணை இழந்த அண்ணி மற்றும் 2 குழந்தைகளை நன்றாக வளர்க்க கஷ்டப்படுகிறார்.

இவருக்கு பக்கபலமாக தம்பி ராமையாகவும் வேலை பார்க்கிறார்.

கோயில் அருகே 2 நாயகிகள் (அக்கா தங்கை) பூக்கடை வைத்து வியபாரம் செய்கின்றனர். இருவருக்குமே ஹீரோ மீது காதல்.

கோயிலில் தினம் தினம் இரவு வேளையில் சில மர்மமான விஷயங்கள் நடைபெறுகிறது.

அந்த மர்மமான சம்பவங்களுக்கு பேய் தான் காரணம் என சொல்லப்படுகிறது.

ஆனால் கோயிலில் பேய் எப்படி வரும் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.

ஒரு சூழ்நிலையில் நாயகியே இந்த சர்ச்சையில் சிக்கி கொள்கிறார். அதை தெரிந்துக் கொள்ள நாயகன் முற்படுகிறார்.

இதனிடையில் ஒரு கும்பல் நாயகனை கடத்தி விடுகிறது. அப்போதுதான் அந்த கும்பலுக்கு நாயகனுக்கும் உள்ள தொடர்பான பல பிரச்சினைகளை முடிவுக்கு வருகிறது. அது என்ன..? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

தயாரிப்பாளரின் மகன் தான் பட நாயகன் கிஷோர். நல்ல உயரம், கலர் என ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஆனால் மனதில் எப்போதும் ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டு செயல்படுவதால் இறுக்கமாகவே வருகிறார்.

எனவே டபுள் ஹீரோயின்ஸ் இருந்தும் ரொமான்ஸ்க்கு இடமில்லை.

அக்கா தங்கை (சைரா ஸ்ரீ, நித்யா ஷெட்டி) என நடித்திருக்கும் இரண்டு பேருமே நடிப்பில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

பேய்க்கும் கோயில் நிர்வாகிக்கும் பயப்படுவராக தம்பி ராமையா. ஒன்லைன் காமெடியில் கலக்கியிருக்கிறார்.

உயர் போலீஸ் அதிகாரியாக சரண்ராஜ் நடித்துள்ளார். இவருடன் ஆர்என்ஆர் மனோகர் மற்றும் அந்த வெள்ளை தாடி பெரியவரும் நல்ல தேர்வு. மிரட்டியுள்ளனர்.

கணவன் மனைவியாக வரும் நரேன் (கீர்த்திவாசன்) காவ்யா (பிரியங்கா) இருவரும் நல்ல தேர்வு. சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒரு நாத்திகவாதியான யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். அதிலும் ஆன்மிக பாடல்களையும் ஆராய்ந்து எழுதியுள்ளது சிறப்பு.

கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள அழகை கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் பால பழனியப்பன். நிறைய காட்சிகளை இருட்டிலேயே படமாக்கியுள்ளார். அதையும் நன்றாகவே செய்துள்ளார்.

சத்யாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. எல்லா பாடல்களுமே அ என்ற எழுத்தில் தொடங்குவது சிறப்பு.

இயக்கம் பற்றிய அலசல்…

ஒரு கோயில் கோபுரத்தை வடிவமைக்கின்றனர் என்பது முதல் மூலவர் அமைவது வரையிலான அனைத்தையும் ஆதார அடிப்படைகளை ஆராய்ந்து அதை வைத்து கதையை அமைத்துள்ளார் இயக்குநர் ஏழுமலை.

குறுந்தொகையில் “அகவன் மகள் பாடுக பாட்டே” என்கிற வரிகள் வரும். அதுபோல் இங்கு அகவன் என்றால் தெய்வம் என பொருள் படும் வகையில் அமைத்துள்ளார்.

இப்பட தயாரிப்பாளர் நிஜத்தில் கட்டியுள்ள ஒரு கோயிலை மையமாக வைத்து அதை சுற்றி கதையை வடிவமைத்துள்ள இயக்குனரை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

ராஜராஜ சோழன் முதல் பல அரசர்கள் வடிவமைத்துள்ள சிற்ப கோயில்களையும் அதனை சார்ந்துள்ள ஆச்சயரியங்களை அடுக்கியுள்ளார்.

பூமியில் அடியில் புதைக்கப்பட்ட ஆச்சரியங்களையும் தமிழனின் பெருமையை போற்று வகையில் ஓர் அருமையான திரைக்கதையை கொடுத்துள்ளார் ஏழுமலை.

அதில் கமர்சியல் கலந்துக் கொடுத்தால் மட்டுமே ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதையும் உணர்ந்து செயல்பட்டு இருக்கிறார்.

ஆனால் படத்தின் நீளத்தை கருதி சில காட்சிகளை வெட்டி எறிந்தால் இந்த அகவனை இன்னும் ரசிப்பார்கள்.

படத்தில் 2 இடங்களில் நடிகர் அஜித் பற்றிய டயலாக் வருகிறது. அது தேவையில்லாமல் திணிக்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.

அகவன்.. ஆச்சரியங்கள் நிறைந்தவன்

Aghavan review rating

First on Net குருவாயூரப்பன் மகிமை… கிரிஷ்ணம் விமர்சனம்

First on Net குருவாயூரப்பன் மகிமை… கிரிஷ்ணம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: அக்சய் கிருஷ்ணன், ராதிகா, சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, விஜய்பாபு, வினீத், ராஜீவ் பணிக்கர், அஞ்சலி உபசனா மற்றும் பலர்.
ஒளிப்பதிவு & இயக்கம் – தினேஷ் பாபு
எடிட்டர் – அபிலாஷ் பாலசந்திரன்
இசை – ஹரி பிரசாத்
சொந்த உண்மை கதை மற்றும் தயாரிப்பு – பி.என். பலராம்
பிஆர்ஓ – விஜய்முரளி மற்றும் சக்தி சரவணன்
வெளியீடு – ஜெனிஷ்

கதைக்களம்..

நாயகன் அக்சய் மற்றும் நாயகி ராதிகா இருவரும் ஒரே காலேஜில் படிக்கின்றனர். இருவருக்கும் காதலும் மலர்கிறது.

நாயகன் வீட்டில் இந்த காதலுக்கு ஆதரவு இருந்தாலும், நாயகி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது.

ஒரு நாள் காலேஜ் கல்சுரல் புரோம்கிராம்கள் நடக்கும் போது நாயகன் மயங்கி விழுகிறான்.

பின்னர் தான் அவனுக்கு இதயத்தை சுற்றி ஒரு கட்டி இருப்பது தெரிய வருகிறது. கட்டியை அகற்றினாலும் அகற்றாவிட்டாலும் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர்.

மருத்துவர்கள் கைவிட்ட காரணத்தால் கடவுள் குருவாயூரப்பனையே நம்பி உள்ளனர் பெற்றோர். அப்போதுதான் ஒரு அதிசயம் நடக்கிறது.

அது என்ன? ஹீரோ உயிர் பிழைத்தானா? அது எப்படி? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்..

இதுவொரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கமர்சியல் எதையும் கலக்காமல் அப்படியே சொல்ல முயற்சித்துள்ளனர்.

நாயகன் தான் அந்த நோயில் இருந்து குணமானவர். எனவே அவரையே நாயகனாக்கி அவரது அப்பா இந்த படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கில் வெளியிடுகிறார்.

தன் மகன் பிழைக்க காரணமான குருவாயூரப்பன் மகிமை இந்த நாட்டுக்கு தெரிய வேண்டும் என்பதால் இதை தயாரித்துள்ளார். எனவே அவரை வெகுவாக பாராட்டலாம்.

நாயகன் நாயகி இருவரும் அழகான தேர்வு. காதல் மற்றும் நடனத்தில் அசத்துகின்றனர். நாயகியின் கண்களும் கூந்தலும் நம்மை ஈர்க்கின்றன. இவர்களின் நண்பர்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

சாய்குமார் மற்றும் சாந்தி கிருஷ்ணா இருவரும் நாயகன் பெற்றோர்களாக நடித்துள்ளனர். ஒரு பிள்ளைக்கு தீராத நோய் இருந்தால் பெற்றோரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை தங்கள் உணர்வுகளில் கொடுத்துள்ளனர்.

ஓரிரு பாடல்கள் ரசிகர்களை கவரும். பின்னணி இசை ஒரு சில இடங்களில் பேசப்படும் வகையில் உள்ளது.

இரண்டாம் பாதி முழுவதும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சென்றதால் அதில் நாடகத்தன்மை அதிகமாகவே உள்ளது. எனவே கமர்சியல் ரசிகர்களுக்கு படம் ஏமாற்றத்தை கொடுக்கும்.

தன் மகனின் உயிரை காப்பாற்றிய கடவுள் குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக இந்த படத்தை எடுத்துள்ளார் பலராம். இன்னும் சிறப்பாக திரைக்கதை அமைத்து எடுத்திருந்தால் எல்லாரையும் இந்த கிருஷ்ணன் கவர்ந்திருப்பார்.

குருவாயூரப்பன் மகிமையை உணர இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

ஆக மொத்தம்.. கிருஷ்ணம்.. குருவாயூரப்பன் மகிமை

Krishnam review rating

நடைபாதை வாசிகளின் வலி… ‘கபிலவஸ்து’ விமர்சனம்

நடைபாதை வாசிகளின் வலி… ‘கபிலவஸ்து’ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பொது கட்டண கழிப்பிடத்தை கவனித்து வருகிறார் நாயகன் நேசம் முரளி. இவரின் அம்மா மீரா கிருஷ்ணன் தவறான வழியில் இவரை பெற்று இங்கு இவரை போட்டு விட்டு சென்றுவிட்டதால் அந்த கக்கூஸை கூட கோயிலாக நினைத்து வழிப்பட்டு வருகிறார்.

சாம்பிராணி போடுவது முதல் நாயகி நந்தினியுடன் காதல் செய்வது வரை எல்லாத்தையும் அந்த கழிப்பிடத்திலேயே செய்து வருகிறார்.

அந்த கழிப்பிடத்தில் அருகே உள்ள நடைபாதையிலேயே நாயகி உள்பட பலரும் வசிக்கின்றனர்.

இதுபோல் ஒரு சிறுமியும் பாட்டியுடன் வசிக்கிறார். பள்ளி சென்று நன்றாக பயிலும் இவர், ஒரு வாடகை வீட்டிலாவது வசிக்க நினைக்கிறார். இதனால் இவர்களை அனைவரும் ஒரு வாடகை வீடு பிடிக்கவும் அட்வான்ஸ் கொடுக்கவும் படாதப்பாடு படுகின்றனர்.

அந்த சிறுமி படித்து முன்னேறினால் தாங்கள் அனைவரும் முன்னேறி விடலாம் என்பதால் ஒரு தங்கையாக நினைத்து சிறுமிக்கு நாயகன் உதவுகிறார்.

இவர்கள் நடைபாதை வாசிகள் என்பதாலும் இவர்களுக்கு யாருமில்லை என்பதாலும் அடிக்கடி போலீஸ் இவர்களை ஏதாவது ஒரு காரணம் சொல்லி சிறையில் அடைக்கின்றனர்.

ஒரு நாள் ஒரு பிரச்சினையில் நாயகனை போலீஸ் 2 வருடம் சிறையில் அடைத்து விடுகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? சிறுமி படித்தாரா? கழிப்பிடம் என்ன ஆனது? காதலி என்ன ஆனார்? வாடகை வீட்டுக்கு சென்றார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

தவறான வழியில் பிறக்கும் படும் அவலநிலையை அழகாக சொல்லி இருக்கிறார் நேசம் முரளி. இவரே இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.

அடிக்கடி கழிப்பிடத்தை காட்டுவதும், அதற்கு பூஜை செய்வதும் எல்லாம் ரொம்ப எரிச்சலை உண்டாக்குகிறது.

சிறுமி ஐஸ்வர்யா அனைவரையும் கவர்கிறார். இவரது கேரக்டர் நம் மனதில் நிறைந்கு இருக்கும். சின்ன வயதிலயே முன்னேற துடிக்கும் இவரது கேரக்டர் பேசப்படும் வகையில் உள்ளது.

போலீஸ் அதிகாரியாக மன்சூர் அலிகான் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

நாயகி நந்தினியை பாராட்டியே ஆகவேண்டும். படம் முழுவதும் கழிப்பிடத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் எப்படி எல்லாம் நடித்தார்களோ? தெரியவில்லை. ஆனால் அவர்களின் சகிப்புத்தன்மையை பாராட்ட வேண்டும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பலம். அதுபோல் பட பாடல் வரிகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது.

உங்களுக்கு கழிப்பிடம் எங்களுக்கு இருப்பிடம் என்ற பாடல் ரசிக்க வைக்கிறது.

உதவி செய்ய அனுமதி கேட்கனுமா? என்று சிறுமி கேட்கும் வசனங்கள் நம்மை ஈர்க்கிறது.

விஜியின் ஒளிப்பதிவு பிளாட்பாரத்தில் வாழ்பவர்களை யதார்த்தம் மீறாமல் காட்டியிருக்கிறார்.

30 வருடத்திற்கு முன்பு தவறவிட்ட குழந்தையை இப்போது தாய் தேடி வர என்ன காரணம்? என்பதை தெளிவாக சொல்லவில்லை.

தான் பிறந்த இடம் என்பதால் டாய்லெட்டில் உள்ள மலத்தை கையால் க்ளீன் செய்வது எல்லாம் முகம் சுழிக்க வைக்கிறது.

கபிலவஸ்து என்றால் புத்தர் இடம் என்பது நமக்கு தெரிந்திருக்கலாம். எனவே படத்தையும் புத்தர் பிலிம்ஸ் என்ற பெயரில் எடுத்துள்ளனர்.

மொத்தத்தில் ‘கபிலவஸ்து’ நடைபாதை வாசிகளின் வலி

Kabilavasthu review rating

ஓவர் ஸ்பீடு… ஸ்பாட் விமர்சனம்

ஓவர் ஸ்பீடு… ஸ்பாட் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

நாயகன் கௌசிக். இவர் போலீஸ் அதிகாரியின் மகன். தன்னுடைய பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடி உற்சாகமாக இருக்கிறார்.

அப்போது ஒரு பிரச்னையில் இருக்கும் நாயகி அக்னி பவருக்கு உதவ நேரிடுகிறது.

என்ன காரணம் என்பதை கூட அறியாமல் அக்னி பவரை தன் காரில் ஏற்றிக் கொண்டு நண்பர்களுடன் ஆந்திரா வரை பயணிக்கிறார்.

அக்னி பவரை கொல்ல கராத்தே கோபால் கும்பல் இந்த காரை துரத்துகிறது.

பின்னர் தான் காரணம் தெரிகிறது. அதன்பின்னர் என்ன ஆனது? நாயகியை காப்பாற்றினாரா? என்ன பிரச்சினை அது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ஆக்சன், டான்ஸ் மட்டுமே போதும் என நினைத்துவிட்டார் போல நாயகன் கௌசிக்.படம் முழுவதும் முகத்தை கோபமாகவே வைத்துள்ளார். குளிர்ச்சியான நாயகி இருந்தும் அவரிடம் ஒரு ரொமான்ஸ் கூட இல்லை. முடி மற்றும் தாடியை குறைத்து கொள்வது நல்லது.

அக்னி பவர் நாயகியின் ஆடை போலவே அவரது நடிப்பும் அரை குறைதான்.

கொல்ல திட்டமிடும் தலைவனாக நாசர் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு பெரிதாக வேலையில்லை. இதுபோன்ற படங்களில் அவர் நடிப்பதை தவிர்க்கலாம்.

வில்லத்தனத்தில் நம்மையும் பயப்படும் வகையில் கத்து கத்து என்று மிரட்டி இருக்கிறார் கராத்தே கோபால். இவர் நிஜத்தில் நாயகன் கௌசிக்கின் தந்தையாவார். ஆனால் பார்ப்பதற்கு அண்ணன் போலவே இருக்கிறார். இவரது இன்னொரு மகனும் படத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் சரவணன், சங்கிலி முருகன் ஆகியோரும் உள்ளனர்.

கார் சேசிங் இடையில் காதல் மற்றும் பைட் என விறுவிறுப்பான திரைக்கதையை படமாக்க முயற்சித்துள்ளார் டைரக்டர் விஆர்ஆர். இவரே தான் படத்தையும் தயாரித்திருக்கிறார்.

படத்தில் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை. லாங் சாட் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

விஜய் சங்கர் இசையில் தாஜ்மஹால் பாடல் தாளம் போட வைக்கிறது. மோகன் ராஜ்ஜின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.

மொத்தத்தில் ‘ஸ்பாட்’… ஓவர் ஸ்பீடு

Spot movie review rating

கம்பீரமான கதிர்… சத்ரு விமர்சனம் 3.25/5

கம்பீரமான கதிர்… சத்ரு விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கதிர், ஸ்ருஷ்டி டாங்கே, பொன்வண்ணன், நீலிமா ராணி, மாரிமுத்து, லகுபரன் (வில்லன்), சுஜா வருணி மற்றும் பலர்.
இயக்கம் – நவீன் நஞ்சுண்டன்
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
இசை – அம்ரீஷ்
பிஆர்ஓ – மௌனம் ரவி

கதைக்களம்…

சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் கதிர். இவருக்கு ஓர் அழகான காதலி ஸ்ரூஷ்டி டாங்கே. இவருக்கு அப்பா, அண்ணா, அண்ணி, குழந்தை என அழகான குடும்பம்.

இவரின் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் ஒரு கேஸ் வருகிறது.

அதாவது பெரிய பணக்கார வீட்டுக் குழந்தைகளை கடத்தி ஒரு கும்பல் பணம் பறிக்க முயல்கிறது.

ஒரு குழந்தையை கடத்தி ரூ. 5 கோடி வரை கேட்கின்றனர். பெற்றோர் பணம் தர சம்மதிக்க அந்த பண்த்தை கொண்டு செல்கிறார் போலீஸ் கதிர்.

ஆனால் பணம் கொடுப்பது போல் சென்று அந்த கும்பலில் உள்ள ஒருவனை கொன்று விட்டு குழந்தையையும் பணத்தை மீட்டு வருகிறார்.

தங்கள் நண்பனை போலீஸ் கதிர் கொன்றதால் அவரின் குடும்ப உறுப்பினர்களை 24 மணி நேரத்திற்குள் கொல்ல திட்டமிடுகிறார் வில்லன் லகுபரன்.

இந்த சவாலை கதிரிடம் தெரியப்படுத்தவும் செய்கிறார்.

அதன்பின்னர் கதிர் என்ன செய்தார்? குடும்பத்தை காப்பாற்றினாரா? வில்லன் லகுபரன் சொன்னதை செய்தாரா? அந்த கும்பல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கம்பீரம், நேர்மை, என மிடுக்கான அதிகாரியாக கலக்கியிருக்கிறார் கதிர்.

பன்ச் டயலாக் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரியாகவும் அதே சமயம் கண்ணியம் தவறாக அதிகாரியாகவும் சிறப்பாக செய்துள்ளார் கதிர்.

ராட்டினம் பட ஹீரோ லகுபரன் தான் இப்படத்தில் வில்லன். பழிவாங்கத் துடிக்கும் அவரின் கண்கள், நண்பன் மீது பாசம் என தெறிக்க விட்டுள்ளார்.

லகுபரனுக்கு இனி வில்லன் வேடங்கள் அதிகம் வந்தாலும் ஆச்சரியமில்லை.

கதிரின் போலீஸ் நண்பர்களாக வரும் அர்ஜீன் ராம் நல்ல தேர்வு.

ஸ்ருஷ்டிக்கு பெரிதாக வேலையில்லை. அவருக்கு கொடுத்த சம்பளத்தை தயாரிப்பாளர் மிச்சம் செய்திருக்கலாம்.

இவர்களுடன் உயர் அதிகாரி மாரிமுத்து, அண்ணா பவன், அண்ணி நீலிமா ராணி, சுஜா வருணி ஆகியோர் தங்கள் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒரு நாளில் நடக்கும் விறுவிறுப்பான திரைக்கதை என்பதால் படத்தில் பாடல்களை வைக்கவில்லை என்பதால் டைரக்டரை பாராட்டலாம்.

எனவே படத்தின் பின்னணி இசையில் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார் அம்ரீஷ். வில்லன் வரும்போது எல்லாம் வரும் பின்னணி இசை செம மிரட்டல்.

நிறைய லாஜிக் மீறல்கள் உள்ளதால் கதையில் சில பலவீனம் தெரிகிறது.

குழந்தையை கொல்ல திட்டமிடும் கொலைக்காரனை பார்த்த நர்ஸ் ஒருவர் இருங்க.. உங்கள மாட்டிவிடுறேன் என்று சொல்வது எல்லாம் நம்புப்படியாக இல்லை.

அதன் பின்னர் அந்த நர்ஸ் டிரெசை சுஜா வருணி போட்டுக் கொள்வதற்காகவே காட்சி வைக்கப்பட்டதாக தெரிகிறது.

அதுபோல் குழந்தையை அழைக்க செல்லும் பள்ளி பேருந்து காட்சியில் நம்பகத்தன்மை இல்லை.

போலீஸ் குடும்பத்தை வில்லன் மிரட்டுவது என வழக்கமான டெம்ப்ளேட் கதை இல்லாமல் இன்னும் மாற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆனாலும் விறுவிறுப்பான படத்தை கொடுத்த நவீன் நஞ்சுண்டைனை பாராட்டலாம்.

சத்ரு.. கம்பீரமான கதிர்

More Articles
Follows