தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்..
நாயகன் ரெஜித் மேனன் ஒரு டாக்டர். இவரின் அம்மா கல்யாணி நடராஜன். தன் உண்டு தன் கடமை உண்டு என இருப்பவர் இவர். இவரது கனவில் இவருக்கு தெரியாத ஒரு பெண் அடிக்கடி வருகிறாள். ஏதோ தனக்கு நடக்க போகிறது? என குழப்பம் அடைகிறார்.
தன் மகனுக்கு ஒரு நல்ல வரன் கிடைக்க அம்மா கோயில் கோயிலாக செல்கிறார்.
நாயகி ராதிகா ப்ரீத்தி தனது தாத்தா சந்திரமெளலியோடு வசிக்கிறார்.
ஹீரோயினுக்கு ஹீரோ மீது லவ்வோ லவ். நீ போகும் இடமெல்லாம் நானே வருவேன் என்பது போல பாலோ செய்கிறார். ஆனால் தன் காதலை சொல்ல தயக்கம் காட்டுகிறார்.
அவர் டாக்டர் தானே. அவரை சந்திக்க வேண்டும் என்றால் தனக்கு ஏதாவது விபத்து அல்லது காய்ச்சல் வரவேண்டும் என்பதால் ஏதாவது செய்துக் கொண்டே இருக்கிறார்.
ஒரு நாள் அதிக காய்ச்சலும் வருகிறது. தன் தாத்தாவுடன் டாக்டரை சந்திக்க செல்கிறார்.
ஆனால் பெரும் விபத்து ஏற்பட தாத்தா சந்திரமெளலி சம்பவ இடத்திலேயே இறக்கிறார். நாயகியோ கோமா நிலைக்கு சென்று விடுகிறார்.
அதன் பின்னர் ராதிகா காதல் கை கூடியதா? ரெஜித் மேனனுக்கு ராதிகாவின் காதல் தெரிந்ததா.? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்..
ஸ்மார்ட்டான டாக்டர் ரெஜித் மேனன். இவர் ரொமான்ஸ் செய்யவில்லை என்றாலும் இவரை நிச்சயம் பெண்கள் சுற்றுவார்கள் என்பது போல இருக்கிறார். நடிப்பில் கொஞ்சம் ஸ்கோர் செய்துள்ளார்.
இந்த படமே நாயகிதான். என்ன அழகு? எத்தனை அழகு? என்ற பாட்டே பாடலாம். கண்களில் காதல் பேசி நம்மை போதை ஏற்றுகிறார். பேச்சும் மழலை பேச்சுக்கு ஈடாக உள்ளது. ப்ரேம் பை ப்ரேம் அழகு சேர்கிறார்.
தாத்தாவாக நடித்துள்ள சந்திரமௌலி மற்றும் அம்மாவாக நடித்துள்ள கல்யாணி இருவரும் தங்கள் பணிகளில் கச்சிதம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
யாகாவராயினும் நாகாக்க” பட புகழ் பிரசன்னாவின் இசையில் பாடல்கள் சிறப்பு என்றாலும் குறைந்த நேர படத்தில் இத்தனை பாடல்கள் தேவையா? என தோன்றுகிறது.
புகழேந்தி என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாயகி மீது அவ்வளவு பாசமா? எனத் தெரியவில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகாக காட்டியுள்ளார். எனவே நாயகிக்காகவே படத்தை பார்க்கலாம்.
நம் முன்னோர்கள் மறைந்த நம் நலம் விரும்பிகள் தனக்கு நடக்கப்போகும் நல்லது கெட்டதை முன்னரே கனவில் வந்து சொல்வார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் டைரக்டர்.
இது சரியா? என்பதை தாண்டி அப்படி இருந்தால் நல்லது தானே என நினைக்க தோன்றுகிறது.
நல்ல கதைக்களம் என்றாலும் மெதுவாக செல்லும் திரைக்கதையால் படம் நம்மை சோதிக்கிறது. ஒருவேளை ஏதாவது காமெடி நடிகர் இருந்திருந்தால் நமக்கு போரடிக்காமல் இருக்காது என்றே சொல்ல வேண்டும்.
எம்பிரான்… கவிதை பேசும் கண்ணழகி