எமகாதகன் விமர்சனம்… பாஞ்சாயி சாபம்

எமகாதகன் விமர்சனம்… பாஞ்சாயி சாபம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எமகாதகன் விமர்சனம்… பாஞ்சாயி சாபம்

ஸ்டோரி…

தமிழகத்தில் ஒரு கிராமம்.. இந்த கிராமத்தில் உள்ள தம்பதியருகளுக்கு பிறக்கும் முதல் ஆண் மகனுக்கு திருமணம் நடக்கக்கூடாது.. அப்படி நடந்தால் அவன் இறந்து விடுவான் என்பது அந்த ஊரின் ஒரு சாபக்கேடு.. அதன்படி சில சம்பவங்களும் அப்படியே நடைபெறுகிறது.

இதனால் பாஞ்சாயி சாபத்திற்கு ஆளாக கூடாது என திருமணமாகாத ஆண்கள் பலர் அந்த ஊரில் வசிக்கின்றனர்.. ஆனால் ஒரு சிலரோ இந்த ஊரில் வசிக்கக் கூடாது என ஊர் விட்டு ஊர் சென்று விடுகின்றனர்.. இதனால் அவர்கள் நிலமும் பறிபோகிறது..

பாஞ்சாயின் சாபத்தில் இருந்து தப்பிக்க அவரை கடவுளாகவும் மக்கள் வழிபடுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பத்தின் மூத்த மகன் நாயகன் கார்த்திக் ஸ்ரீராம், தான் காதலித்த நாயகி ராஸ்மிதா ஹிவாரியை ஊர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்கிறார்..

திருமணமாகி சில தினங்கள் மட்டுமே ஆன நிலையில் நாயகன் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைகிறார்.. இது இயற்கை மரணம் அல்ல கொலை என சந்தேகிக்கிறார் நாயகி.. இதனையடுத்து களத்தில் இறங்கி கொலைகளுக்கு உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க முயல்கிறார்.. அடுத்தது என்ன நடந்தது என்பதெல்லாம் ‘எமகாதகன்’ படத்தின் கதை..

கேரக்டர்ஸ்…

நாயகனாக கார்த்திக் ஸ்ரீராம், நாயகியாக ராஸ்மிதா ஹிவாரி, பூசாரியாக தசரதன், நாயகனின் நண்பராக மனோஜ் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.. நாயகி ராஷ்மிதாவும் பூசாரி தசரதனும் மற்றவர்களை விட அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கின்றனர்..

பாஸ்கர் என்ற பாத்திரத்தில் நடித்தவர் போற போக்கில் காமெடி வசனங்களை போட்டு கதைக்கு கலகலப்பு சேர்த்து இருக்கிறார்.

டெக்னீசியன்ஸ்…

விக்னேஷ் ராஜா இசையில், ஹரிஹரசுப்ரமணியன் மற்றும் விஜே விஜய் ஆகியோரது வரிகளில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. நாயகனை இழந்தபின் நாயகி பாடும் பாடல் நிச்சயம் முணுமுணுக்க வைக்கும்.

பாஞ்சாயி காட்சிகள் மற்றும் வசனங்கள் தனி கவனம் பெறும்.

ஒளிப்பதிவாளர் எல்.டி-யின் ஒளிப்பதிவு கிராமத்தை அழகுற செய்து இருக்கிறது.. படத்தொகுப்பாளர் ராம்நாத்.. இடைவேளைக்கு முன்பு வரை படம் நீளமாக தெரிந்தாலும் இடைவேளை முடிந்து ஒரு மணி நேரத்திற்குள் படத்தை முடித்திருப்பது சிறப்பு..

கிராமத்து மண்வாசனையுடன் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்ததில் இயக்குநர் கிஷன் ராஜ் பாஸ் மார்க் பெற்றிருக்கிறார்.. நவீன யுகமாக ஆன்மீக மாறிவிட்டாலும் இன்றும் குலதெய்வங்களை வழிபடும் கிராமத்தினர் உள்ள அந்த பின்னணி கதையை வைத்து படத்தை அவர் நகர்த்தி இருப்பது சிறப்பு..

Emakathagan movie review

ககனாச்சாரி’ (மலையாளம்) பட விமர்சனம்

ககனாச்சாரி’ (மலையாளம்) பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ககனாச்சாரி’ (மலையாளம்) பட விமர்சனம்

ஸ்டோரி…

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பல டைம் டிராவல் படங்களை பார்த்திருக்கிறோம்.. அல்லது ரெட்ரோ டைப் பட பாணியில் பல படங்கள் வருவதை பார்த்திருக்கிறோம்.. சுப்ரமணியபுரம் தொடங்கி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வரை பல படங்கள் அந்த வரிசையில் சேரும்..

ஆனால் தமிழ் சினிமாவிற்கு நேர் எதிராக ஒரு வித்தியாசமான கற்பனையை இந்த படத்தின் இயக்குனர் அருண் சந்து கொடுத்திருக்கிறார்.. அதாவது 2040 ஆண்டுகளுக்கு இந்த படத்தின் கதை பயணிக்கிறது..

இன்று பிளாஸ்டிக் கழிவுகளால் பல ஆபத்துகளை நம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.. இப்படியே காலம் சென்று கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் பெட்ரோல் உள்ளிட்ட எந்த அத்தியாவசிய பொருள்களும் நமக்கு கிட்டாது.. அப்படியான ஒரு சூழ்நிலையில்
அந்த காலக்கட்டத்தில் பூமியில் உள்ள எரிபொருள் எல்லாம் தீர்ந்துவிட்ட நிலையில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு அரசால் தடை செய்யப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மக்களை அரசாங்கம் ஒவ்வொருவராக கண்காணிக்கிறது.

ஒரு குடியிருப்பில் முன்னாள் ராணுவ வீரர் விக்டர் வாசுதேவன் (கே.பி.கணேஷ்குமார்) & ஆலனும் (கோகுல் சுரேஷ்), அஜுவும் (வைபவ் வர்கீஸ்) வசிக்கிறார்கள்.. இவர்கள் மூவருமே திருமணம் ஆகாதவர்கள்.

இந்த சூழ்நிலையில் ஏலியன்கள் பற்றி ஆவணப் படம் தயாரிக்க வரும் நபர்கள் இவர்களிடம் பேட்டி எடுக்க வருகின்றனர்.

அப்போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை வைத்து படத்தை இயக்கி கதை சொல்லி இருக்கிறார் அருண் சந்து.

கேரக்டர்ஸ்…

Aju Varghese, Anarkali Marikar, Gokul Suresh, Ganesh Kumar

கோகுல் சுரேஷ், அஜு வர்கீஸ், கணேஷ் குமார்.. இவர்கள் மூவரை சுற்றி படத்தின் கதை நகர்கிறது.. தாங்கள் சந்தித்த சுவாரசியமான சம்பவங்களை இவர்கள் நகைச்சுவையோடு பகிர்ந்து இருக்கின்றனர்.. ஆனால் இந்த படத்தை மலையாளத்தில் கொண்டாடினாலும் தமிழுக்கு ஏற்றவாறு டப்பிங் செய்து டயலாக்குகளை மாற்றி இருக்கலாம்.. ஆனால் முழுக்க முழுக்க மலையாளத்தில் ஆங்கில சப்டைட்டலுடன் படம் பயணிக்கிறது.. எனவே தமிழர்களுக்கு இந்த படம் புரிய தாமதமாகலாம்..

ஏலியனாக நடித்திருக்கும் அனார்கலி மரிகார் மௌன மொழி பேசி பார்வையிலேயே உணர்வுகளை கொண்டு நடிப்புக்கு பலம் சேர்த்திருக்கிறார்.. இறுதியாக அவரது குரல் திடீரென வரும்போது நிச்சயம் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது..

250 வயதாகும் அந்த ஏலியன் எப்படி 25 வயது இளமையாக இருக்கிறார்..?

ஏலியன் மீது கோகுல் சுரேஷுக்கு காதல் மலர்கிறது.. இவருக்காக எழுதப்பட்ட வசனங்கள் காமெடி கலந்து ரசிக்க வைக்கிறது.. ( இந்த கோகுல் சுரேஷ் மலையாள நடிகர் கேரளாவின் முதல் பிஜேபி எம்பி சுரேஷ் கோபியின் மகன் ஆவார் என்பது கூடுதல் தகவல்.)

டெக்னீசியன்ஸ்….

Directed By : Arun Chandu

Music By : Sankar Sharma

Produced By : Ajith Vinayaka Films

ஒளிப்பதிவாளர் சுர்ஜித் எஸ்.பய் கதைக்கான புதிய களத்தை ஒரே அறையில் படமாக்கி இருப்பது அயற்சியை தருகிறது… ஆவணப்படம் பார்க்கும் ஓர் உணர்வை மட்டுமே கொடுக்கிறது..

சங்கர் சர்மாவின் இசையும் படத்தொகுப்பாளர் சீஜே அச்சு மற்றும் கலை இயக்குநர் எம்.பாவா ஆகியோரது பணிகள் பாராட்டுக்குரியது.

‘சாஜன் பேக்கரி’, ‘சாயன்ன வார்த் தைகள்’ ஆகிய பட புகழ் அருண் சந்துவின் மூன்றாவது படம் இது..

ககனாச்சாரி… விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் ஒருவன் என்பதுதான் இந்த பொருள்.. அப்படியான ஒரு சர்வதேச கதையை கமர்சியல் கலந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் கொடுத்திருக்கலாம்.

ஏலியன் உலகத்திற்கும் மனித இனத்திற்கும் உள்ள தொடர்பு என பல்வேறு விசயங்கள் பற்றி பேசி இருக்கிறார்..

எத்தனையோ மலையாள படங்களை தமிழ் ரசிகர்கள் ரசித்திருக்கிறார்கள்.. அந்த வரிசையில் இந்த படம் இடம் பெறுவது கொஞ்சம் சந்தேகமே.. மலையாள பட பாணியில் அவர்களுக்கான ஸ்டைலில் படமாக்கி இருப்பது வருத்தமே..

இன்றைய நவீன உலகத்தில் எந்த ஜீவராசிகளையும் பொருட்படுத்தாமல் மனித இனத்தை கூட மதிக்காமல் சுயநலயவாதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த படம் சமர்ப்பிக்கலாம்.

இன்றைய சூழ்நிலையில் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் தண்ணீர் முதல் எரிபொருள் வரை எந்த ஒன்றையும் தேவை அறிந்து பயன்படுத்தி மிச்சப்படுத்தினால் மட்டுமே நாளைய தலைமுறை எந்த அச்சமும் இன்றி வாழ முடியும் என்ற எச்சரிக்கையும் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் அருண் சந்து.

Gaganachari Malayalam movie review

7/G விமர்சனம்.. பேய் பயம் வருதா.?

7/G விமர்சனம்.. பேய் பயம் வருதா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

7/G விமர்சனம்.. பேய் பயம் வருதா.?

ஸ்டோரி…

வழக்கமான தமிழ் சினிமாவின் பேய் டெம்ப்லேட் கதை தான் 7ஜீ.. ஒரு குடும்பம் இருக்கும்.. அந்த வீட்டில் அமானுஷ்ய சக்திகள் இடம் பெறும்.. அவர்களை பயமுறுத்தும்.. பின்னர் அவர் அந்த பேய்களுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக்.. பின்னர் கொன்றவர்களை பழி தீர்க்கும்.. இது மாறாது என்பதற்கு இந்த படமும் ஓர் உதாரணம்.

ரோஷன் பஷீர் – ஸ்மிருதி வெங்கட்.. இந்த இளம் தம்பதியர்.. தங்கள் மகனுடன் அடுக்குமாடி குடியிருப்பில் 7G என்ற தங்கள் கனவு வீட்டில் குடியேறி வாழ்கிறார்கள்..

இந்த சமயத்தில் 7ஜி அப்பார்ட்மெண்டில் பல அமானுஷ்யங்கள் நடக்கிறது.. அந்த பேய்.. இது என் வீடு.. நீ வீட்டை விட்டு ஓடு என ஸ்மிருதியை மிரட்டுகிறது.

அந்த பேய் நோக்கம் என்ன? இவர்களை விரட்ட என்ன காரணம்? என்பதே கதை.

கேரக்டர்ஸ்…

7ஜி சொல்லைக் கேட்டாலே நம் நினைவுக்கு வரும் முதல் முகம் சோனியா அகர்வால். அவர் நடித்ததாலோ என்னவோ இந்த படத்திற்கு 7ஜி என்ற தலைப்பிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து உள்ளனர்.. ஆனால் அதில் 20% நிறைவேறி இருந்தால் கூட ஆச்சரியமே.. பேய் கேரக்டருக்கு பொருந்தாத முகமாக சோனியா அகர்வால் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகியாக ஸ்மிருதி வெங்கட்.. நடிப்பிலும் கொள்ளை அழகிலும் நம்மை கவருகிறார்.. இடைவேளைக்குப் பிறகு சேலையில் வந்து கொஞ்சம் கிளுகிளுப்பு ஊட்டி மிரட்டவும் செய்து இருக்கிறார்.

படத்தின் வில்லன் & இசையமைப்பாளர் என இரண்டு சுமைகளை சுமந்திருக்கிறார் சித்தார்த் விபின்.. நடிப்பில் அதிகமாகவே ஸ்கோர் செய்துவிட்டார்.. அதனால் இசையை பெரிதாக கவனிக்கவில்லை..

சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா உள்ளிட்டோரும் உண்டு.. போலீஸ் KSK செல்வா நடிப்பில் கவனிக்க வைக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

கண்ணா ஒளிப்பதிவு செய்ய சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்

ட்ரீம் ஹவுஸ் சார்பில் ஹரூன் இப்படத்தினை தயாரித்து இயக்கியிருக்கிறார்..

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்தாலும் படத்தில் எங்கும் எந்த திருப்புமுனையும் இல்லாமல் பயணிப்பதால் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.. இயக்குனர் ஹாரூன் படத்தை தயாரித்து இருப்பதால் எவரிடமும் ஆலோசனை கேட்கவில்லை போல..

வழக்கமான பேய் கதையை எந்த பயமும் இல்லாமல் கொடுத்துட்டாரு இயக்குனர் ஹாரூன்..

Smruthi Sonia starrer 7G movie review

———-

கல்கி 2898 AD விமர்சனம்.. மகாபாரத முடிச்சு

கல்கி 2898 AD விமர்சனம்.. மகாபாரத முடிச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்கி 2898 AD விமர்சனம்.. மகாபாரத முடிச்சு

ஸ்டோரி…

மகாபாரத போர் முடிவுக்கு வரும் தருவாயில் துரோணாச்சார்யா மகன் அஸ்வத்தாமன் (அமிதாப்பச்சன்) பாண்டவர் குடும்பத்தில் கருவில் உள்ள குழந்தையை அழிக்கிறார் . அந்த குழந்தையை கொல்ல பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறான்.

இதனை கண்ட கிருஷ்ணர், அஸ்வத்தாமனுக்கு சாகா வரம் அளிக்கிறார்.. நீ பல ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ வேண்டும் கலியுகம் வரும் வரை வேதனையுடன் வாழ வேண்டும் என வரம் அளிக்கிறார்..

அந்த குழந்தையாக தானே பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மண்ணில் அவதரிப்பேன். அப்போது என்னை நீ காப்பாற்ற வேண்டும். அது வரை, நீ வாழனும் என்று சாபம் கொடுத்து சென்று விடுகிறார்.

பின்னர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் கதை நகர்கிறது.. அங்கு சுப்ரீம் யாஸ்கின் பெரிய காம்ப்ளக்சை நிறுவி பிரம்மாண்ட தனி உலகம் நடத்தி, அதில் பல கர்ப்பிணி பெண்களை உருவாக்கி, அவர்களிடம் இருந்து சீரத்தை எடுத்து கொண்டு இருக்கிறார். (அவரே கமல்ஹாசன்)

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் விடுதலைக்காக காம்ப்ளக்சிற்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கிறது ஷம்பாலா மக்கள் கூட்டம்.

ஒரு சூழ்நிலையில் இந்த ஷம்பாலா கும்பலிடம் வந்து தஞ்சம் அடைகிறார் கர்ப்பிணி பெண் தீபிகா படுகோனே.. வயிற்றில் இருக்கும் அந்த குழந்தை ஒரு கடவுள்..

அதன் பின்னர் என்ன ஆனது.. என்பதே கல்கி படத்தின் மீதிக்கதை.. இதில் பிரபாஸ் யார்? இந்த கதைக்கும் என்ன தொடர்பு என்பது படத்தின் கிளைமாக்ஸ்..

கேரக்டர்ஸ்…

கல்கி படத்தின் கதையின் நாயகனாக பிரபாஸ்.. பைரவா கேரக்டரில் நடித்திருக்கிறார்.. இடைவேளைக்கு முன்பு வரை ஜாலியாக சுற்றும் இவரது கேரக்டர் அதற்கு பின்னர் தான் ஆக்ஷனில் இறங்குகிறது.. கிளைமாக்ஸ் காட்சிகள் இவரது பிளாஷ்பேக் கேரக்டர் நிற்கும்.

பிரபாசும் அமிதாப்பும் மோதும் காட்சிகள் அனல் பறக்கிறது.. சண்டை பயிற்சியை இயக்குனரை பூங்கொத்து கொடுத்து பாராட்டலாம்..

பிரபாஸ்.. காம்ப்ளக்ஸ் செல்ல வேண்டும் அங்கு கிலோ கணக்கில் காற்றை சுவாசிக்க வேண்டும் என்று பேசும் வசனத்தை கவனித்திருக்கலாம்.. எப்படி இருந்தாலும் காற்றை அதிகமாக சுவாசிக்க முடியாது என்பது வசனகர்த்தாவுக்கு தெரியாதா.???!!

இதில் அதிகமாகவே ஸ்கோர் செய்பவர் அமிதாப்பச்சன் தான்.. 100% பொருந்தி போகிறார் இந்த அசுவத்தாமன்..

பிறக்காத ஒரு குழந்தைக்காக.. எப்போது பிறக்கும் என்று தெரியாத ஒரு குழந்தைக்காக அவர் பல வருடங்கள் காத்திருந்து வாழ்ந்து அந்த குழந்தையை காக்க போராடும் போராட்டம் ஹைலைட்..

கர்ப்பிணி பெண்ணாக தீபிகா படுகோன். இவரது வயிற்றில் இருந்து பிறக்கப் போக்கும் அந்த கடவுளுக்காக தான் இந்த யுத்தமே நடக்கிறது.. அதனால் இவரது கேரக்டர் படத்திற்கு கூடுதல் பிளஸ்.

மற்றொரு நாயகி மிருனாள் தாக்கூர் ஜஸ்ட் வந்து செல்கிறார். இவர்களுடன் ஷோபனாவும் நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்..

தீபிகாவை காப்பாற்றும் அண்ணாபென், பசுபதி என அனைவரும் நிறைவான நடிப்பு…

இயக்குனர் ராஜமவுலி ஒரு சிறிய வேடத்தில் வந்து செல்கிறார். அர்ஜுனனாக விஜய் தேவரகொண்டா சிறப்பு தோற்றத்தில்… கர்ணன் வேடத்தில் வந்தவர் யார் என்பதுதான் படத்தின் ஸ்பெஷல் ஹைலைட்..

கிருஷ்ணராக யார்? எப்போது திரையில் தோன்றுவார்.. என்பதெல்லாம் கல்கி படத்தில் இரண்டாம் பாகத்தில் தெரியும்..

இடைவேளைக்கு முன்பு கண் இமைக்கும் நேரத்தில் வந்து செல்கிறார் கமல்.. அதன் பின்னர் கிளைமாக்ஸ் எண்டு கார்டு போட்ட பிறகு வருகிறார்.. அவரது கேரக்டர் இரண்டாம் பாகத்தில் மட்டுமே முழுமை பெறும்..

டெக்னீசியன்ஸ்…

மூன்று மணி நேரம் ஓடக்கூடிய படமாக இருப்பது தான் படத்தின் பெரிய பலவீனம் இந்த ஃபாஸ்ட் ஃபுட் காலத்தில் யாரும் ஒரு படத்திற்கு மூன்று மணி நேரம் செலவிட தயாராக இல்லை.. அப்படி இருக்கையில் படத்தின் நீளத்தை எடிட்டர் குறைத்திருக்கலாம்.

அது மட்டுமல்லாமல் இடைவேளை முன்பு வரை படத்தின் கதை எதை நோக்கி செல்கிறது என்பது புரியாமல் இருக்கிறது.. இடைவேளை தொடங்கும் சமயத்தில் தான் படத்தின் வேகமும் சூடு பிடிக்கிறது.. அது தொடங்கி கிளைமாக்ஸ் வரை படத்தின் வேகம் அதிகரிக்கிறது..

பிரபாஸ் பயன்படுத்தும் புஜ்ஜி வாகனத்துக்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.. சில நேரங்களில் கேட்பதற்கு ஜாலியாக இருந்தாலும் பிரபாஸின் சீரியஸான செயல்கள் சிரிப்பை வர வைக்கிறது..

முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளை நம்பி இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.. நிச்சயம் இது குழந்தைகளை கவரும் விதமாக இருப்பது படத்திற்கு ஹைலைட்.

படத்தின் ஒளிப்பதிவில் எந்த குறையும் இல்லை.. கண்களுக்கு விருந்தளித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. அதுபோல கலை இயக்குனரும் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கியிருக்கிறார்..

காஸ்ட்யூம் டிசைனரை பாராட்டலாம்.. கலைஞர்களின் ஆடை வடிவமைப்பை அருமையாக அமைத்திருக்கிறார்.

வில்லன் கமல் வாழ்ந்து வரும் காம்ப்ளக்‌ஸ் உலகம் செம பிரமாண்டம்…

தமிழில் பிரபலமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையில் பாடல்கள் ஓகே ரகம்…. பின்னணி இசை மிரட்டல்.

மகாபாரத இதிகாச கதையுடன் இன்றைய தொழில்நுட்பத்தையும் கலந்து அதிரடியான பிரம்மாண்ட விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.

கர்ணன் அர்ஜுனன் அஸ்வத்தாமன் கிருஷ்ணர் உள்ளிட்டோரின் கேரக்டர்களையும் படத்தில் கொண்டு வந்து இதிகாச இலக்கிய விருந்தையும் படைத்திருக்கிறார்.. இத்துடன் சுப்ரீம் யஸகின் என்ற பிரம்மாண்ட வில்லன் வேடத்தில் கமலையும் கொண்டு வந்திருக்கிறார்.. ஆனால் இந்த முதல் பாகத்தில் கேரக்டர் வீணடிக்கப்பட்டிருக்கிறது.. ஆனால் அடுத்து வரும் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு பெரிய கேரக்டர் இருக்கும் என நம்பலாம்.

Kalki 2898 Ad movie review

லாந்தர் – திரை விமர்சனம்..

லாந்தர் – திரை விமர்சனம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லாந்தர் – திரை விமர்சனம்..

ஸ்டோரி…

ஓர் இரவில் நடக்கும் கதை அத்துடன் ஒரு சின்ன பிளாஷ்பேக் என படம் நகர்கிறது.

விதார்த் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி.. ஒரு நாள் இரவில் ஒரு முகமூடி அணிந்த மர்ம நபர் காண்போரை எல்லாம் ரோட்டில் அடித்து துன்புறுத்துவதாக தகவல் பறக்கிறது.

அந்த நபர் யார்? அவரை கண்டுபிடிக்க விடிய விடிய போலீஸ் தேடும் வேட்டையே இந்த ‘லாந்தர்’..

அந்த மர்ம நபர் என்ன செய்கிறார்? எதனால் செய்கிறார்? போலீஸ் அவரை என்ன செய்தது? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

படத்துக்கு படம் வித்தியாசமாக கேரக்டர்களை செய்து பாராட்டைப் பெறுபவர் விதார்த்.. மைனா தொடங்கி குரங்கு பொம்மை, இறுகப்பற்று, அஞ்சாமை என பல்வேறு படங்களில் கனமான பாத்திரங்களை தேர்ந்தெடுத்த நடித்த இதில் வித்தியாசமாக போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறார் விதார்த்.

ஆனால் அவரது கேரக்டர் படத்தை தாங்கி அளவு திரைக்கதை அமையவில்லை.. வீட்டில் ஆயிரம் டென்ஷன் காணப்பட்டாலும் சக போலீஸிடம் கண்ணியமாக நடந்து கொள்ளும் இவரது ஏசிபி அரவிந்த் கேரக்டர் ஆச்சரியமே..

விதார்த்தின் மனைவியாக ஸ்வேதா டோரதி.. கண்களும் உதடும் அழகு.. இவருக்கும் ஓர் வித்தியாசமான வியாதி இருப்பதால் மயக்கம் போடுவதும் பின்னர் எழுவதும் என இவரது கேரக்டர் வலுவில்லை.

மஞ்சு என்ற கேரக்டர் நடித்தவர் சஹானா.. இவரது கேரக்டர் தான் படத்தின் ட்விஸ்ட்.. இவரின் வயதுக்கும் உடலுக்கும் சம்பந்தமே இல்லை.. 17 வயது 19 வயது 22 வயது என வெவ்வேறு காலகட்டங்களை காட்டினாலும் இவரது முதிர்ச்சி 30 வயதை காட்டுகிறது..

இவருக்கு பார்டர்லைன் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என்ற வியாதி சொல்லப்பட்டிருந்தாலும் போதிய கேரக்டர் அழுத்தம் இல்லை.. இளம் காதலராக விபின்.. நல்ல ஸ்மார்.. நடிப்பில் இன்னும் மெச்சூரிட்டி தேவை.

கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன், பசுபதி ராஜ் உள்ளிட்ட பலரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…

இசை – பிரவீன்
ஒளிப்பதிவு – ஞான சௌந்தர்
எடிட்டிங் – பரத் விக்ரமன்
இயக்கம் – சாஜி சலீம்

போலீசுக்கும் மர்ப நபருக்கும் நடக்கும் சம்பவங்களை 30 நிமிட இடைவெளி கணக்கில் விவரிக்கிறது இந்த படம்.

அதாவது இரவு 7:00 மணி முதல் 10 மணி வரை நடக்கும் ஒரு கதையும்.. 10 மணி முதல் இரவு 2 மணி வரை நடக்கும் ஒரு கதையும் என இரண்டு கதைகளை பிரித்து இரண்டு கதைகளையும் ஒரு வகையில் இணைத்து படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர்.

ஒரே இரவில் நடக்கும் இந்த க்ரைம் திரில்லர் கதையை இன்னும் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம்.. இதுபோன்ற திரில்லர் படங்களுக்கு ஃப்ளாஷ் பேக் முக்கியம். ஆனால் அவை அயற்சியை தருகிறது.

இடைவேளை வரை விறுவிறுப்பாக செல்லும் இந்த படம் இடைவேளைக்குப் பிறகு பிளாஷ்பேக் காட்சி என நீண்டு கொண்டே செல்கிறது.. ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.

முக்கியமாக காரை சேசிங் செய்யும் போலீஸ் ஜீப் மற்றும் விதார்த் ஆகியோரின் நடிப்பு பாராட்டும் படி வகையில் உள்ளது. அதற்கான ஒளிப்பதிவும் இசையும் படத்தொகுப்பு ரசிக்க வைக்கிறது.

காவல்துறையில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் மற்றவர்களை அடிமைத்தனமாக நடத்துவார்கள். ஆனால் இதில் விதார்த் அனைவரையும் மதிக்கும் குணம் கொண்ட ACP-யாக நடித்திருப்பது பாராட்டுக்குரியது

Vidhaarths Laandhar movie review

ரயில் விமர்சனம்..; வடக்கனை வாழவைக்கும்

ரயில் விமர்சனம்..; வடக்கனை வாழவைக்கும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரயில் விமர்சனம் 3.25/5.. வடக்கனை வாழவைக்கும்

ஸ்டோரி…

தமிழகத்திற்கு பிடிப்பு தேடி வந்த ஒரு வடக்கன் பற்றிய கதையாகும்.. இந்த படத்திற்கு வடக்கன் என்ற தலைப்பு வைக்கப்பட்ட நிலையில் சென்சாரில் எதிர்ப்பு வந்த ரயில் என்று மாற்றப்பட்டு பின்பு வெளியானது.

வடக்கன் பர்வேஸ் மெஹ்ரூ தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் குங்குமராஜ் & வைரமாலா வசிக்கும் ஒரே காம்பவுண்டில் மற்றொரு வாடகை வீட்டில் வசிக்கிறார்..

தமிழ்நாட்டில் நேர்மையாக உழைத்து சிறுக சிறுக பணத்தை சேர்த்து மும்பையில் உள்ள குடும்பத்திற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் இவரது எதிர் வீட்டில் இருக்கும் குங்குமராஜா தன் நண்பர் ரமேஷ் வைத்தியாவுடன் இணைந்து வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு மனைவியுடன் அடிக்கடி சண்டை இடுகிறார்.

வைரமாலாவும் வடக்கனும் அக்கா தம்பியாக பழகி வந்தாலும் இவர்களின் உறவு குங்குமராஜாவுக்கு வெறுப்பை உண்டாக்குகிறது..

எனவே வடக்கனை கொலை செய்ய திட்டமிடுகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ஹீரோ – குங்குமராஜ்
ஹீரோயின் – வைரமாலா
வடக்கன் – பர்வேஸ் மெஹ்ரூ
வரதன் – ரமேஷ்வைத்யா
ஹீரோயின் அப்பா – செந்தில் கோச்சடை

குங்குமராஜ் ஊரில் சுற்றித் திரியும் ஊதாரி மருமனாகவே வாழ்ந்திருக்கிறார் பரட்டை தலை நரைத்த முடி அழுக்கு சட்டை லுங்கி என கிராமத்து குடிகாரனை பிரதிபலிக்கிறார்..

இவரது மனைவி வைரமாலா இந்த படத்தின் வைரம் என்றே சொல்லலாம்.. ஒரு கிராமத்து மனைவி குடிகார கணவனிடம் சிக்கிக் கொண்டு படும் அவஸ்தைகளை அப்படியே பிரதிபலிக்கிறார்..

என்னதான் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை இருந்தாலும் தன் குடிகார கணவனுடன் எப்படி குடும்பம் நடத்த முடியும் என எண்ணும் இல்லத்தரசிகளின் உணர்வுகளை நடிப்பில் உணர வைத்துள்ளார்.

தன் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என கலங்கும் ஓர் தந்தையை தன் நடிப்பில் உணர வைத்திருக்கிறார் செந்தில்.. மருமகனிடம் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் மகளுக்காக இவர் ஒவ்வொன்றாக செய்யும் செயல்கள் தந்தையை போற்றக்கூடிய நடிப்பாகும்..

வடக்கன் பர்வேஸ் மெஹ்ரூ.. தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்திருக்கிறார்.. வடக்கனை இளக்காரமாக நினைக்கும் தமிழர்கள் மத்தியில் உயர நினைக்கும் இவரது உழைப்பு பாராட்டுக்குரியது.

குங்குமராஜா உடன் சுற்றும் வரதனாக ரமேஷ் வைத்திய.. சீரியஸான படத்தில் இவரது நடிப்பு கலகலப்பு ஊட்டுகிறது.. இவரே படத்தின் பாடல் ஆசிரியரும் கூட

இவர்களுடன்.. டிம்பிள் – ஷமீரா
வடக்கன் அப்பா – பிண்ட்டூ
வடக்கன் அம்மா – வந்தனா
குழந்தை – பேபி தனிஷா
திருப்புளி – சுபாஷ்
இன்ஸ்பெக்டர் – தங்கமணி பிரபு
மில் மேனேஜர் – ரமேஷ் யந்த்ரா
அக்கவுண்டண்ட் – சாம் டேனியல்
வடக்கன் ஃப்ரெண்ட் – ராஜேஷ்
கான்ஸ்டபிள் – ராமையா.. ஆகியோரின் பங்களிப்பு கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறது.

டெக்னீசியன்ஸ்…

இயக்குநர் – பாஸ்கர் சக்தி
DOP – தேனி ஈஸ்வர்
இசையமைப்பாளர் – S.J. ஜனனி
எடிட்டர் – நாகூரான் இராமச்சந்திரன்
சவுண்ட் – ராஜேஷ் சசீந்திரன்
பாடலாசிரியர் – ரமேஷ் வைத்யா
தயாரிப்பாளர் – வேடியப்பன்

பெண் இசையமைப்பாளர் ஜனனியின் இசை வசீகரம் செய்கிறது.. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசை அமைத்திருப்பது சிறப்பு. தேவா பாடியுள்ள கானா மெலோடி தாளம் போட வைக்கிறது..

தேனீ ஈஸ்வரின் ஒளிப்பதிவு யதார்த்தம். சினிமா லைட்டிங் இல்லாமல் கிராமத்து வீடுகளில் காணப்படும் விளக்குகளை வைத்து காட்சிகளை நகர்த்தி இருப்பது சிறப்பு.. அதுபோல லைவ் சவுண்டிங் கொடுத்து படமாக்கி இருப்பது சினிமா தனம் இல்லாத ஒன்றாகும்..

இடைவேளைக்கு முன்பு வரை வடக்கன் தமிழன் மோதலை காட்டிய இந்த படம் இரண்டாம் பாதியில் தமிழரின் மனிதநேயத்தை காட்டும் வகையில் படத்தை இயக்கி இருக்கிறார்.. முக்கியமாக வந்தாரை மட்டுமல்ல இறந்தோரையும் கௌரவிக்கும் தமிழ் மண் என காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

பிழைப்புத் தேடி தமிழக வரும் வடக்கன்கள் இந்த படத்தை பார்த்தால் தமிழர்களை நிச்சயம் போற்றுவார்கள்.. இரண்டாம் பாதியில் அயோத்தி பட சாயல் தெரிகிறது. அதே சமயம் தமிழர்கள் கண்மூடித்தனமான நம்பும் சத்தியத்தை வித்தியாசமாக பொய் சத்தியமாக காட்டியிருப்பது யதார்த்தம்.

பஞ்சம் பிழைக்க வடக்கன்கள் தமிழகத்திற்கு வருவது போல தமிழர்கள் மும்பை கொல்கத்தா மற்றும் துபாய் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதும் வழக்கமான ஒன்றாகும்.

நிச்சயம் நம் உறவினர்கள் எவராவது ஏதோ ஒரு நாட்டில் பிழைப்பு தேடி உழைத்துக் கொண்டிருப்பார்கள்.. அவர்களின் உழைப்பை போற்ற வேண்டுமே தவிர அவர்களை உதாசீனப்படுத்த கூடாது என ரயில் படத்தை நகர்த்து இருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி.

ஆக.. ரயில்.. வடக்கனை வாழவைக்கும்

Rail movie review

More Articles
Follows