Dr 56 விமர்சனம்..; Human Experiement

Dr 56 விமர்சனம்..; Human Experiement

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜேஷ் ஆனந்த்லீலா இயக்கத்தில் ப்ரியாமணி நடிப்பில் உருவான படம் Dr 56.

கதைக்களம்…

உயிரைக் காக்கும் டாக்டர்கள் அடுத்தடுத்து மரணம் அடைகின்றனர். இந்த கொலைகளுக்கு பின்னால் ஒரு நோயாளி இருப்பதை கண்டுபிடிக்கிறார் சிபிஐ அதிகாரி ப்ரியாமணி.

அந்த குற்றவாளியை விசாரணை செய்யும் போது அவன் 56 நிமிடத்திற்கு ஒரு மாத்திரை சாப்பிட்டால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதை அறிகிறார். அவனுக்கும் மருத்துவம் சொன்னது ஒரு டாக்டர் தான்.

அப்படி இருக்கும்போது அவர் டாக்டர்களை மட்டும் குறிவைத்து கொலை செய்ய என்ன காரணம்? இதுவே படத்தின் கிளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

அழகான உடை அணிந்து ஹீரோவுடன் ஆடிபாடும் கேரக்டர் தான் இதுவரை செய்துள்ளார் பிரியாமணி. ஆனால் இதில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வந்து அசத்தியிருக்கிறார் பிரியாமணி.

நாயகன் PR ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தல். வித்தியாசமான மேக்அப். அதை படம் முழுவதும் செய்திருப்பது அசாத்திய துணிச்சல்.

கூத்துப்பட்டறை கலைஞராக வரும் காட்சிகளும் பாடல்களும் அனல் தெறிக்கிறது. முக்கியமாக ‘அசுரன்.. அசுரன்டா.. பாடல் அசுரன் படத்திற்கே பொருத்தமானதாக இருந்திருக்கும். அப்படி ஒரு வெறித்தனமான ஆட்டம்..

ஜார்ஜ் கேரக்டரில் வரும் அந்த டாக்டர் பாடி லாங்குவேஜும் அவர் காரில் பேசும் வசனங்களும் அசத்தல்…

டெக்னீஷியன்கள்…

பாடல்களும் பின்னணி இசையும் ஓகே ரகம் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் கொடுத்துள்ளது. ஆனால் படத்தின் மையக் கருவே பிளாஷ்பேக் காட்சிகள் என்பதால் அதில் கூடுதல் கவனம் செலுத்தி படமாக்கி இருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.

டாக்டர் கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம்.

ஒரு புதிய வகையான நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் போது அதை முதலில் விலங்குகளிடம் பரிசோதனை செய்வர். அதன் பின்னர் மனிதர்களிடம் பரிசோதனை செய்வர். இந்த முறைக்கு ஹியூமன் எக்ஸ்பிரிமெண்ட் என்று பெயர்.

சில நேரம் இந்த பரிசோதனை மனிதர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தலாம். சில உயிர்களை எடுக்கக்கூடும். இதன் பிறகு தான் அந்த சோதனை வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தெரியவரும்.

இந்த வித்தியாசமான முயற்சியை அடிப்படையாக வைத்து ஒரு புதிய விதத்தில் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் ஆனந்த்லீலா.

ஆக இந்த Dr 56 – Human Experiement

வதந்தி விமர்சனம்.. 3.75/5.. சிக்காத சிலந்தி

வதந்தி விமர்சனம்.. 3.75/5.. சிக்காத சிலந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

எஸ்ஜே சூர்யா நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ள ‘வதந்தி’ சீசன் 8 தொடர்களாக உருவாகி உள்ளது. ஒவ்வொரு எபிசோடும் முடியும் போது அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஒரு வதந்தி செய்தியாக பரவுகிறது.. அதன் பின்னால் பல உண்மைகளும் பல மர்மங்களும் நிறைந்து இருக்கிறது. இறுதியில் அந்த வதந்தி செய்தியானது எப்படி? அதில் உண்மை என்ன? என்பதே படத்தின் ஒன்லைன்.

கதைக்களம்…

அழகு நிறைந்த கன்யாகுமரியில் படத்தின் கதை தொடங்குகிறது.

அங்கே அடர்ந்த காடின் அருகே ஒரு படத்தின் சூட்டிங் நடக்கிறது. அப்போது இளம் பெண்ணின் சடலம் கிடைக்கிறது.

அப்படத்தின் ஹீரோயின் தான் இப்படி சடலமாக என உறுதி செய்கிறார் இயக்குனர்.

இதனையடுத்து அந்த செய்தி காட்டு தீயாய் பரவுகிறது. ஆனால் அதன் பின்னர் நான் உயிரோடு தான் இருக்கிறேன் என சொல்கிறார் நாயகி.

இதனால் மக்களும் காவல்துறையும் குழப்பம் அடைகின்றனர்.

அப்படி என்றால் இறந்து கிடந்தது யார்? என்ற கேள்வி எழுகிறது.

இது பற்றிய விசாரணையில் இறங்குகிறார் போலீஸ் எஸ் ஜே சூர்யா.

அந்த பெண் வெலோனி (Valonie) என தெரிய வருகிறது.. முதலில் பரவிய வதந்தி இப்போது தலைப்பு செய்தியாகிறது.

விடுதி நடத்தும் லைலாவின் மகள் தான் வெலோனி.

அழகான அந்த பெண்ணை கொன்றது யார் காதல் பிரச்சனையா பண பிரச்சனையா கற்பழிக்கப்பட்டாரா பழிதீர்க்கப்பட்டாரா என்ன நடந்தது எப்படி நடந்தது ஏன் நடந்தது என்பதை இந்த வதந்தி அவர்கள் விடுதியில் தங்கியவர்கள் யார் யார் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் யார் வேண்டாதவர்கள் யார் என பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரிக்கிறது.

வெலோனிக்கு காதலன் யாராவது இருக்கிறார்களா? ஒருவேளை காதலிக்க மறுத்ததால் கொல்லப்பட்டாரா? காதலில் பிரேக் அப் ஆனதால் கொல்லப்பட்டாரா?

ஒருவேளை நிறைய பாய் பிரண்டு இருந்ததால் பிரச்சனை உருவானதா? என பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நகர நகர ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு புதிய கோணத்தில் நகருகிறது.

இறுதியில் இது வெறும் வதந்தியா.? தலைப்புச் செய்தியா? என்பதே படத்தின் வித்தியாசமான கிளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

நாயகன் எஸ் ஜே சூர்யாவுக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையை உண்டாக்கும். சிறப்பான நடிப்பை கொடுத்து நம்மை அசர வைத்துள்ளார். இந்த கொலை வழக்கை எப்படியாவது முடிக்க வேண்டும் என அவர் படும் வேதனைகள் செம.

முக்கியமாக தண்ணி அடித்து விட்டு அவர் பேசும் வசன காட்சி கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் நீள்கிறது. அதை எந்த விதத்திலும் போர் அடிக்காமல் அசத்திவிட்டார்.

அந்த காட்சி முடிந்தவுடன் ஸ்ருதி வெங்கட் காட்டும் ரியாக்ஷன் வேற லெவல். அதனை அடுத்து தொடரும் குடும்ப காட்சிகள் நம்மை வாய் விட்டு சிரிக்க வைக்கின்றன.

எஸ் ஜே சூர்யா மனைவியாக ஸ்மிருதி வெங்கட் கன்னியாகுமரி பாஷையில் வெளுத்து கட்டியுள்ளார். பெண்களுக்கே உரித்தான ஒரு எதிர்பார்ப்பு ஒரு ஏக்கம் ஒரு பாசம் என ஸ்மிருதி சிலிர்க்க வைக்கிறார்.

இன்ஸ்பெக்டராக வரும் விவேக் பிரசன்னாவும் தன் பங்கை வெகு சிறப்பாக செய்திருக்கிறார். இந்த ஏரியாவுல போண்டா டீ தரும் சுகத்தை பொண்டாட்டி கூட தர மாட்டா என அவர் கொடுக்கும் விளக்கம் வேற லெவல்.

நுனி நாக்கு ஆங்கிலத்தில் அழகாக பேசி நம்மை கவர்கிறார் லைலா. கிளைமாக்ஸ் இல் இவரது வேடம் பயங்கர கைத்தட்டலை இள்ளும்.. வெலோனி கேரக்டரில் நடித்துள்ள சஞ்சனா ஒவ்வொரு காட்சியிலும் சபாஷ் போட வைக்கிறார்.

நான் அழகாக பிறந்தது குற்றமா? ஏன் அவர் கலங்கும் போது நம்மையும் அழ வைக்கிறார்.

கபடதாரி படத்தை இயக்கிய பிரதீப் இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக நம்மை மிரள வைத்துள்ளார். அதுபோல நாசரின் கேரக்டர் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை அவராக இருப்பாரோ என நம்மை திசை திருப்ப பார்க்கிறது திரைக்கதை. பாண்டியன் ஸ்டோர்ஸில் கலக்கிய குமரன் இதில் வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார். ஒருவேளை அவர் தான் கொலையாளியாக இருக்குமோ எனவும் நம்மை குழப்ப வைக்கிறார்.

டெக்னீஷியன்கள்…

படத்திற்கு ஒளிப்பதிவு பெரும்பலம். கன்னியாகுமரி காட்சிகளையும் காடு பகுதிகளையும் அழகான விடுதியும் என ஒவ்வொன்றையும் அழகாக தன் பிரேமில் படம் பிடித்து காட்டியுள்ளார் சரவணன் ராமசாமி.

இசையமைப்பாளர் சைமன் கேகிங் தன் பின்னணி இசையில் மிரட்டி விட்டார். இந்த வெப் தொடர் முடிந்து சில மணி நேரங்கள் ஆனாலும் அந்த பின்னணி இசை நம்மில் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு இசையை அவர் கொடுத்துள்ளார்.

கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இதை ஒவ்வொரு எபிசோடாக பார்த்தால் போர் அடிக்காது. ஆனால் இந்த 8 எபிசோடையும் ஒரேடியாக உட்கார்ந்து பார்த்தால் இவ்வளவு நீளம் தேவையா? என தோன்றுகிறது.. 6 எபிசோடில் இந்த வதந்தி தொடரை முடித்து இருக்கலாம்.

சில காட்சிகளில் டிவிஸ்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்டதாக தெரிகிறது.

முக்கியமாக எழுத்தாளர் நாசர் கற்பனையில் எழுந்த ஒரு சின்ன கதை தேவையில்லாதது போல தோன்றுகிறது. அதை வெட்டி எறிந்து இருக்கலாம் எடிட்டர்.

அதுமட்டுமில்லாமல் கல்லூரி பெண்கள் காட்சிகள் எனத் தேவையில்லாத காட்சிகளை அகற்றி இருக்கலாம். இவை எல்லாம் ஒரு நீண்ட சீரியலுக்கான காட்சிகளாகவே தெரிகிறது.

இந்த வதந்தி வெப் தொடரை பிரபல இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இணைந்து தயாரித்துள்ளனர்.

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் முக்கியமாக கன்னியாகுமரி கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்ப பயிற்சி கொடுத்து எல்லோரையும் அந்தப் பகுதி மக்களாகவே நடிக்க வைத்து இல்லை வாழ வைத்து இருக்கிறார்.

ஆக… வதந்தி தொடர்… சிக்காத சிலந்தி

RIVET விமர்சனம்..; எம்எல்ஏவுக்கு சாமானியன் அடிக்கும் ரிவெட்

RIVET விமர்சனம்..; எம்எல்ஏவுக்கு சாமானியன் அடிக்கும் ரிவெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

எம்எல்ஏவால் பாதிக்கப்படும் சிலர் அவரை பழி வாங்க ரிவிட் அடிக்கும் கதைதான் இந்த படம்.

கதைக்களம்..

எம் எல் ஏ என்ற தனது அதிகாரத்தை பயன்படுத்தி பலரை எதிரியாக வைத்திருக்கிறார் சந்தானபாரதி.

தன் பரம்பரை சொத்தை மிரட்டி வாங்கிய சந்தானபாரதியிடம் இருந்து நிலத்தை மீட்க மீண்டும் இந்தியாவுக்கு வருகிறார் நாயகன் சாம்ஸ்.

ஒரு கட்டத்தில் எம்எல்ஏவின் மகனை சந்திக்கிறார். அப்போது தன் தந்தையால் பாதிக்கப்பட்ட அவரும் சாம்சுடன் இணைகிறார்.

எம்எல்ஏ வை எதிர்த்து அவரிடம் உள்ள பணத்தை ஆட்டைய போட ஒரு கும்பல் அலைகிறது.

இவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் இணைந்து எம்எல்ஏ வை எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

படத்தின் நாயகன் சாம்ஸ். அலட்டிக் கொள்ளாத நடிப்பு.்பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுக்கிறார். ஆனால் திடீரென மாயமாகி விடுகிறார். கால்ஷீட் பிரச்சனையா என்று தெரியவில்லை?

சந்தான பாரதி சைலன்ட் பாரதியாக வருகிறார். எம் எல் ஏவுக்கே உரித்தான கம்பீரம் இல்லை.

இவர்களுடன் மற்ற அரசியல்வாதிகள் நண்பர்கள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆனால் இன்னும் காட்சிகளையும் அழுத்தமான உணர்வுகளையும் கொடுத்திருக்கலாம்.

முக்கியமாக 50 கோடி பணத்தை அபேஸ் செய்யும் காட்சிகள் காமெடியாக உள்ளது.

ரீவெட் படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார் சவுண்ட் என்ஜினியர் அருண்காந்த்.

ஒரு பக்காவான திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக கொடுத்து இருக்கலாம்.

முக்கியமாக ஒரே மாதிரியான பின்னணி இசை படம் முழுவதும் ஒலிக்கிறது. பட்டாசு வெடிக்கும் காட்சிகள் கூட பட்டாசு சத்தத்தை விட மற்ற இசையே ஒலிக்கிறது.

திரில்லர் காட்சிகளுக்கு இன்னும் மெருகேற்றி இசையை மிரட்டி இருக்கலாம்.

ஆனால் சின்ன பட்ஜெட்டில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு படத்தை கொடுக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார் அருண் காந்த்.

முக்கியமாக அரசியல்வாதிகள் மக்களிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் தன் குடும்பத்தாரிடமும் உண்மையாக நடக்க வேண்டும் எனவும் கருத்தை முன் வைக்கிறார்.

இல்லை என்றால் தன்னுடன் இருப்பவர்களே தனக்கு எதிரியாக மாறக்கூடும் என்பதை எச்சரிக்கை பதிவாகவும் கொடுத்து ரிவிட் அடித்து இருக்கிறார் அருண் காந்த்.

டிஎஸ்பி DSP விமர்சனம் 1/5.; DSP – Don’t Spend Paisa

டிஎஸ்பி DSP விமர்சனம் 1/5.; DSP – Don’t Spend Paisa

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் டிஎஸ்பி.

இதில் நாயகன் விஜய்சேதுபதி போலீசாகவும் வில்லன் ரவுடியாகவும் மோதுகின்றனர்.

கதைக்களம்…

முதல் பாதி ஒரு கதை.. இரண்டாம் பாதி ஒரு கதை என கூறலாம்.

முதல் பாதியில் ஊர் சுற்றி திரிகிறார் ஜாலியாக நாயகன் விஜய் சேதுபதி. இவரது அப்பா இளவரசு.

அது போல ரவுடியான வில்லன் முட்டை ரவியுடன் ஒரு கட்டத்தில் விஜய்சேதுபதிக்கு மோதல் வருகிறது.

முட்டை ரவி பெரிய அரசியல்வாதி ஆகிறார். அவரை பழிவாங்க திடீரென டிஎஸ்பி ஆகிறார் விஜய் சேதுபதி.

அதன் பிறகு நடந்தது என்ன? என்பதே கதை

கேரக்டர்கள்…

விஜய் சேதுபதி ஒரு நல்ல நடிகர் என்பதை சில படங்களில் நிரூபித்து இருக்கிறார். கமல், ரஜினி ஆகியோரது பாராட்டுகளை பெற்று இருக்கிறார். இதனால் பெரிய நடிகர் என்று மிதப்பில் இருக்கிறாரா என்னவோ?

ஜூங்கா சீதக்காதி அனபெல் சேதுபதி உள்ளிட்ட மிக்க வரிசையில் இந்த டிஎஸ்பியும் இணைவார்.

நாயகி அணுவுடன் அவருக்கு கெமிஸ்ட்ரியும் இல்லை.. அவரும் ஏதோ பாடி லாங்குவேஜ் என வித்தியாசமாக செய்து மொக்கை போடுகிறார்..

“நல்லா இரும்மா… என்ற பாடல் கூட நல்லா இல்லை..

டெக்னீஷியன்கள்…

படத்தின் ஒளிப்பதிவாளர் தன் கடமையை நிறைவாக செய்து இருக்கிறார்.

பொன்ராம் இமான் கூட்டணி என்றாலே எப்போதும் சிறப்பு தான்… ஆனால் இதில் வெறுப்பு தான்.. பின்னணி இசை கூட சில இடங்களில் மட்டுமே ஓகே ரகம்.

படத்தில் கெஸ்ட் ரோலில் விமல் மற்றும் ஷிவானி வருகின்றனர். அவர்கள் பெயரையும் கெடுத்துக் கொண்டது தான் மிச்சம்.

காமெடி என்ற பெயரில் நடிகர் புகழ் இருக்கிறார். ஆனால் காமெடியின் புகழுக்கு கலங்க வந்திடுமோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஹீரோ – வில்லன் மோதல் என்ற வழக்கமான கதையாக இருந்தாலுமே அதை சுவாரசியமாக கொடுக்க வேண்டும். அதுதான் ஒரு இயக்குனரின் படைப்புத்திறன்.

பொன்முட்டையிடும் வாத்தாக இருந்தார் பொன்ராம். இப்போது முட்டைக்காக வாத்தை அறுத்த கதையாக மாறி வருகிறாரோ.??

இந்தப் படத்தை முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.. ஆனால் அவர்கள் நழுவி விட கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்தார். இப்போது தான் தெரிகிறது சன் பிக்சர்ஸ் கிரேட் எஸ்கேப்.?!!!!!

ஆக DSP – Don’t Spend Paisa

DSP movie review and rating in tamil

கட்டா குஸ்தி விமர்சனம்.. 4.25/5.; காமெடி ஜாஸ்தி

கட்டா குஸ்தி விமர்சனம்.. 4.25/5.; காமெடி ஜாஸ்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

கபடி வீரன் கணவன்… குஸ்தி வீராங்கனை மனைவி.. இவர்களுக்குள் நடக்கும் மோதலே ஒன்லைன்..

கதைக்களம்…

நாயகன் விஷ்ணு விஷால். இவருக்கு தாய் தந்தை இல்லை.. மாமா கருணாஸ் வளர்ப்பில் வளர்கிறார்.

ஜாலியாக ஊர் சுற்றித் திரியும் விஷ்ணுவுக்கு பெண் தேடுகிறார் கருணாஸ்.

ஆனால் தன்னைவிட குறைந்த படிப்பு (7ம் வகுப்பு) உள்ள பெண் வேண்டும் என்கிறார்.. மேலும் பெண்ணுக்கு கூந்தல் நீளமாக இருக்க வேண்டும் என டிமாண்ட் செய்கிறார்.

மற்றொரு புறம் குஸ்தி வீராங்கனை ஐஸ்வர்ய லட்சுமி.. பட்டதாரி பெண்.. இவர் சித்தப்பா முனீஸ் காந்தியின் செல்லம்.

இவர் குஸ்தி கற்றுக் கொண்டதால் எவரும் மருமகளாக ஏற்க மறுக்கின்றனர். மேலும் வரதட்சணை கொடுக்க மாட்டேன் என்ற முடிவில் இருக்கிறார் ஐஸ்வர்யா.

ஒரு கட்டத்தில் நண்பர்கள் ஆன கருணாஸ் முனீஸ்காந்தும் சந்திக்கின்றனர்.

அப்போது விஷ்ணுக்கு பெண் தேடும் படலம் பற்றி சொல்கிறார் கருணாஸ்.. எனவே இரண்டு பொய் சொல்ல திட்டம் போடுகிறார் முனீஸ்.

தன் அண்ணன் மகள் 7வது வரை மட்டுமே படித்திருக்கிறார். அவளுக்கு நீண்ட கூந்தல் உள்ளது என பொய் சொல்லி மணம் முடிக்கின்றனர்.

அதன் பிறகு என்ன நடந்தது? விஷ்ணுவுக்கு உண்மை தெரிந்ததா? இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதை கலகலப்பாக சொல்லி இருக்கிறார் செல்லா அய்யாவு.

கேரக்டர்கள்….

ஒரு தயாரிப்பாளராக நடிகராகவும் விஷ்ணுவை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

பொதுவாக இன்டர்வெல் காட்சியில் நாயகனுக்கு மாஸ் காட்சி இருக்கும். ஆனால் இதில் நாயகிக்கு மாஸ் கொடுத்து தன்னை டம்மி ஆக்கி நம்மை சிரிப்பலையில் குலுங்க செய்துள்ளார் விஷ்ணு விஷால்.

கணவன்களை மனைவியர் மட்டம் தட்டி பேசுவதும்.. மனைவிகளை கணவன்கள் மட்டம் தட்டி பேசும் அந்த காட்சிகள் கண்டிப்பாக விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.

நான்கு திசைகள் போல நான்கு காமெடியன்கள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டனர்… கருணாஸ்.. முனீஸ்காந்த்.. காளி வெங்கட்.. ரெடின் கிங்ஸ்லி.. ஆளுக்கு ஒரு பக்கம் போட்டி போட்டுக் கொண்டு நம்மை சிரிக்க வைத்துள்ளனர்.

ஆக்ஷன் ஒரு பக்கம்.. காமெடி ஒரு பக்கம் என இரட்டைக் குதிரையில் விஷ்ணுவும் ஐஸ்வர்யாவும் வேற லெவலில் பெர்பாமென்ஸ் காட்டியுள்ளனர்.

கருணாஸ் மனைவியாக வருபவர் பேசும் வசனங்கள் “பெண்களை அதிகாரத்தால் மிரட்டும் ஆண்களுக்கு நெத்தியடி”.

டெக்னீஷியன்கள்….

படத்தின் பாடல்கள் பெரிதாக நம்மை கவரவில்லை என்றாலும் கேட்கும்படி உள்ளது. பிண்ணனி இசையும் சிறப்பு.

படத்தின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது… கேரளா வீடுகளை அழகாக காட்டி உள்ளனர்.

முக்கியமாக படத்தின் இயக்குனரை பாராட்டிக் கொண்டே இருக்கலாம். அப்படியான ஒரு காமெடி விருந்தை கொடுத்துள்ளார்.

அதேசமயம் படத்தில் குடும்பத்தினருக்கும் கணவன்களுக்கும் மனைவிகளுக்கும் நிறைய மெசேஜ் சொல்லி இருக்கிறார்.

கட்டாகுஸ்தி மாஸ்டராக வரும் ஹரிஸ் பெராடீ இந்த முறை காமெடியில் அதகளம் செய்துள்ளார். தன் மனைவி பற்றி அவர் பேசும் வசனங்கள் செண்டிமெண்ட் சூப்பர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் சென்று படத்தை ரசிக்கும் படியான விருந்து படைத்துள்ளார் செல்லா அய்யா.

என்னதான் வில்லன் பெரிய வீரனாக இருந்தாலும் ஹீரோவிடம் தோற்று தானே ஆக வேண்டும்.. அதுதான் கொஞ்சம் இடிக்கிறது..

ஆக இந்த கட்டா குஸ்தி… காமெடி ஜாஸ்தி

 

கெத்துல விமர்சனம்.; திருநங்கையும் திருப்பங்களும்.!

கெத்துல விமர்சனம்.; திருநங்கையும் திருப்பங்களும்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

சினிமாவில் அதிகம் காட்டப்படாத திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை இது.

அத்தோடு கமர்ஷியல் அம்சங்களோடு உருவானது ‘கெத்துல.’

கதைக்களம்…

அமைச்சரின் தம்பி சலீம் பாண்டா. அந்த அதிகார கெத்தோடு பெண்களை அடைய , அலைகிறார். அழகான பெண்களை குறிவைத்து தன் ஆசைக்கு இணங்க அழைக்கிறார்.

ஒருநாள் பார் டான்சர் நாயகி ரீரினுவை அடைய ஆசைப்பட்டு அணுகுகிறார்.

அப்போது நாயகன் ஸ்ரீஜித் நாயகியை காப்பாற்றுகிறார்.

இதனால் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் மோதல் முற்றுகிறது.. ஹீரோ மீது ஹீரோயினுக்கு காதல் முற்றுகிறது..

ஆனால் ரிரீனு காதலை ஏற்க முடியாது என்கிறார்.

ஸ்ரீஜித் காதலை ஏற்க மறுத்தது ஏன்.? ஸ்ரீஜித்தை பழிவாங்க சலீம் பாண்டா என்ன செய்தார்.? இறுதியில் என்னாச்சு என்பதே கதை.

கேரக்டர்கள்…

இரு தோற்றங்களில் வருகிறார் ஸ்ரீஜித். அதற்கேற்ப நடித்தாலும் உடல் மொழியில் கூடுதல் கவனம் தேவை. ஆனால் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

பார் டான்சராக பளிச்சென்று வருகிறார் ரீனு.. இளைஞர்களை சூடேற்றுவார்.
காதலனுக்காக ஏங்குவதில் தன பங்களிப்பை நிறைவாகத் தந்திருக்கிறார்.

அமைச்சராக சாயாஜி ஷிண்டே, போலீஸ் கமிஷனராக ரவிகாலே அகியோர் கச்சிதம்.

வில்லனாக சலீம் பாண்டா. மிரட்டலான நடிப்பில் சபாஷ்.

முக்கியமாக திருநங்கைகளாக நடித்திருப்பவர்களின் நடிப்பும் அவர்களது கேரக்டர்களும் படத்திற்கு கூடுதல் பலம்.

டெக்னீஷியன்கள்…

கே.ஷஷிதர் ஒளிப்பதிவு நேர்த்தி.. ஃபைட் காட்சிகள் பட்டையை கிளப்புகின்றன. முக்கியமாக திருநங்கை போடும் சண்டைகள் அனல் தெரிகிறது. அதை படமக்கிய விதமும் பாராட்டக்குரியது.

பாடல்களில் கூடுதல் கவனம் வேண்டும். ஆனால் பின்னணி இசையிலும் நிறைவாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷீவா வர்ஷினி. ஆக்சன் மியூசிக் சூப்பர்ல…

நல்ல பரபரப்பான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் வி.ஆர்.ஆர். இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப விறுவிறுப்பாக கொடுத்திருக்கலாம் திரைக்கதை அமைப்பில் தடுமாற்றம் தெரிகிறது.

அரசியல்வாதியும் போலீஸ் அதிகாரியும் மோதும் காட்சிகள் சிறப்பு.. திருநங்கைக்கு ஆக்சன் காட்சிகளை கொடுத்து கெத்து காட்டி இருக்கிறார் இயக்குனர்.

More Articles
Follows