டபுள் டக்கர் பட விமர்சனம்.. என்ஜாய் குட்டீஸ்

டபுள் டக்கர் பட விமர்சனம்.. என்ஜாய் குட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டபுள் டக்கர் பட விமர்சனம்.. என்ஜாய் குட்டீஸ்

ரஜினிகாந்த், கனகா, சின்னி ஜெயன்த், செந்தாமரை, சோ, வினுசக்கரவர்த்தி ஆகியோர் நடிப்பில் 30 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ‘அதிசயப்பிறவி’.

அந்தப் படத்தில் ரஜினி இறந்து விடுவதாக ஒரு காட்சி இருக்கும். இதனை எடுத்து சித்ரகுப்தன் செய்த தவறினால் ரஜினியின் உயிர் முன்பே பறிக்கப்பட்டு விட்டதாக ஒரு காட்சி இருக்கும்.

இதனை எடுத்து தேவலோகத்தில் எமதர்மனிடம் சண்டையிடுவார்.. தனக்கு நியாயம் வேண்டும் என்பார் ரஜினிகாந்த்.

எனவே ரஜினிக்கு பொருத்தமான வேறு ஒரு உடலை தேடி அந்த உயிரை உள்ளே நுழைய வைக்க முயற்சிப்பார்கள். இந்த படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இந்த கதையை நவீன தொழில்நுட்பத்துடன் இன்றைய 2k கிட்ஸ்களுக்கு பிடிக்கும் விதமாக வித்தியாசமாக ஒரு அனிமேஷன் முறையில் கொடுத்திருக்கும் படம் தான் ‘டபுள் டக்கர்’.

ஸ்டோரி..

சிறுவனாக இருக்கும் போதே ஒரு விபத்தில் தன் தாய் தந்தையை இழந்து விடுகிறார் தீரஜ்.. அந்த விபத்தில் இவரது முகம் தீப்பற்றி எரியவே முகம் அகோரமாக மாறிவிடுகிறது.

இதனால் வெளியே தலை காட்ட முடியாமல் குற்ற உணர்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் பெரியவனான பிறகு தனக்கு பிடித்த ஸ்மிருதி வெங்கடிடம் தன் காதலை சொல்கிறார். ஆனால் இவரது காதலை அப்போது ஏற்கும் சூழ்நிலையில் இல்லை நாயகி.

இதனால் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சிக்கிறார் நாயகன் தீரஜ்.. எதிர்பாராத விதமாக நாயகி ஃபோன் செய்கிறார் காதலை ஒத்துக் கொண்டாரா என்ற எண்ணி அவர் தூக்கு கயிரில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் போது இறந்து விடுகிறார்.

அந்த சமயத்தில் தான் அவரை எமலோகம் அழைத்துச் செல்ல இரண்டு கார்ட்டூன் பொம்மைகள் (வான தேவதைகள்) வருகிறது. ஒன்று முனீஸ்காந்த் & காளி வெங்கட்.. இதற்கு ரைட் லெப்ட் என்ற பெயரிட்டு இவர்களின் பின்னணி குரல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் 85 வயது வரை வாழ வேண்டிய தீரஜின் உயிர் இவர்களின் தவறுதலால் பறிக்கப்பட்ட விவரம் நாயகனுக்கு தெரிய வருகிறது. இதனையடுத்து அவரும் சண்டையிட்டு தன் உடல் தனக்கு வேண்டும் என்கிறார். ஆனால் அவரது உடலை சாரா திருடி கொண்டு கடத்தி செல்கிறார்.

எனவே தற்காலிகமாக வேறு ஒரு உடலில் பொருத்தி கொள்ளலாம் என்ற நோக்கத்தில் ராஜாவின் உடலில் தீரஜின் ஆன்மா உள்ளே நுழைகிறது. அதன் பின்னர் தான் ராஜாவிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருப்பதும் தெரிய வருகிறது.

இதனால் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் வான தேவதைகள் சிக்கிக் கொள்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? தீரஜ்-க்கு ஒரிஜினல் உடல் கிடைத்ததா? காதலர்கள் இணைந்தார்களா? இறுதியில் என்ன ஆனது? என்பது தான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

நாயகனாக தீரஜ் நாயகியாக ஸ்மிருதி வெங்கட், போலீஸ் இன்ஸ்பெக்டராக கோவை சரளா, கேங்ஸ்டர் ஆக மன்சூர் அலிகான், ரவுடியாக சுனில் & ஷாரா, பைத்தியமாக எம் எஸ் பாஸ்கர் ஆகியோர்.

அரவிந்த் & ராஜா என்ற இரு கேரக்டர் உடல்களில் நாயகன் தீரஜ்.. மிகை இல்லாத நடிப்பு.. ரொமான்ஸ் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்..

அழகும் திறமையும் நிறைந்த நாயகி ஸ்மிருதி வெங்கட். கொடுத்த காட்சிகள் குறைவு என்றாலும் கேரக்டரில் நிறைவு..

சுனில் மற்றும் சாரா தனி டிராக்கில் பிளாக் காமெடி.

காமெடியில் பின்னி எடுத்து இருக்கிறார் இன்ஸ்பெக்டர் கோவை சரளா.. சில நேரங்களில் ஓவர் ஆக்டிங்.. வில்லன் மன்சூர் அலிகானுக்கு ஓவர் பில்டப் இன்ட்ரோ…

கார்ட்டூன் வான் தேவதைகளாக முனீஸ்காந்த் & காளி வெங்கட்.. இருவரது குரல்களும் டைமிங் காமெடிகளும் செம..

ஹைடெக் திருடர்களாக கருணாகரன் & யாஷிகா ஆனந்த் நடித்துள்ளனர். இவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை.. யாஷிகாவின் கேரக்டரில் ஒரு ட்விஸ்ட்..

டெக்னீசியன்ஸ்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.. அவரது இசை இந்த படத்திற்கு நல்லதொரு பங்களிப்பை கொடுத்திருக்கிறது.

கினி கினி கின்கினி… என்ற பாடல் குழந்தைகளுக்கான பாடலாகவும் டாலுமா டாலுமா மை டியர் டாலுமா என்ற பாடல் காதலர்களுக்கான பாடலாக அமையும்..

கலை இயக்குனர் : சுப்ரமணிய சுரேஷ்

ஒளிப்பதிவாளர் : கௌதம் ராஜேந்திரன்

ஒளிப்பதிவாளர் & கலை இயக்குனரின் பணி சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறது..

மீரா மஹதி என்பவர் இயக்கியிருக்கிறார். இவர் பல டாப் ஹீரோக்களிடம கதை சொல்லி எவரும் ஒத்துக் கொள்ளாத காரணத்தினால் ஒரு மருத்துவரை ஹீரோவாக்கி இருக்கிறார்.

இதனால் நாயகன் தீரஜ் ஒரு யதார்த்தமான நடிப்பு கொடுத்து இயக்குனரின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.

குழந்தைகளையும் கவர வேண்டும் என்பதற்காகவே அதிகபட்சமான கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.. பெரியவர்களையும் கவரும் வகையில் வி எப் எக்ஸ் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்..

வான தேவதை ரைட் & லெஃப்ட் இடத்தில் திடீரென கபாலி ரஜினி, ரோலக்ஸ் சூர்யா, விக்ரம் கமல் உள்ளிட்டோரும் வந்து செல்கின்றனர்.. இந்த காட்சிகள் கமர்சியலுக்காக இணைக்கப்பட்டுள்ளது என்றாலும் தேவையற்றதாகவே தெரிகிறது.

ஒரு காட்சி தொடங்கி தொடர்வதற்குள் நாம் அதற்குள் கனெக்ட் ஆவதற்குள் அடுத்த காட்சியை காட்டி விடுகிறார் எடிட்டர்.. சுனில் – சாரா & கருணாகரன் – யாஷிகா உள்ளிட்டோரின் காட்சிகள் நீளத்தை குறைத்து இருக்கலாம்.. (படத்தொகுப்பாளர் : வெற்றிவேல்)

நான்கு கதைகள் ஆங்காங்கே சொல்லப்பட்டாலும் அதை எடிட்டிங் செய்த விதத்தில் சுவாரஸ்யம் குறைந்து விட்டது..

படத்தில் சில லாஜிக் குறைகள் இருந்தாலும்.. இன்னுமாடா எங்க படத்துல லாஜிக் பாக்குறீங்க என்ற ஒரு டயலாக் இடம்பெறுகிறது.. எனவே நாமும் லாஜிக்கை மறந்து இந்த டபுள் டக்கர் மேஜிக்கை குட்டீஸ் உடன் இணைந்து பார்த்து ரசிக்கலாம்..

Double Tuckkerr movie review

White Rose ஒயிட் ரோஸ் விமர்சனம்

White Rose ஒயிட் ரோஸ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

White Rose ஒயிட் ரோஸ் விமர்சனம்

ஸ்டோரி…

ரவுடிகள் மீது போலீஸ் நடத்தும் ஒரு என்கவுண்டரில் தவறுதலாக ஆனந்தியின் கணவர் விஜித் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விடுகிறார்.

கணவனை இழந்த ஆனந்தி தனது சிறு வயது மகளை காப்பாற்ற வழியில்லாமல் போராடுகிறார்.. வேறு மதத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ததால் வீட்டிலும் ஆதரவு இல்லாமல் அவதிப்படுகிறார்.

இந்த சூழ்நிலையில் கணவர் வாங்கிய கடனை செலுத்த முடியாத போது மகளை தூக்கிச் சென்று விடுகிறார் பைனான்சியர்.. இரண்டு நாட்கள் கெடு விதித்து செல்கிறார்.

இரண்டு நாட்களுக்குள் குழந்தையை மீட்க வேண்டும் என ஆலோசிக்கும் நிலையில் ஆனந்தியின் தோழி ஒருவர்.. நான் விபச்சாரம் செய்து வருகிறேன். உனக்கு உடனடி பணம் தேவை என்பதால் நீயும் விருப்பம் இருந்தால் என்னுடன் வா என்கிறார்.

வேறு வழியில்லாமல் விபச்சாரத்திற்கு செல்லும் ஆனந்தி முதல் நாள் இரவே வில்லன் ஆர்கே சுரேஷின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்.

அவன் மிகப்பெரிய சைக்கோ கொலைக்காரன் என்பதை அங்கு போன பின்பு தான் தெரிந்து கொள்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? ஆர் கே சுரேஷிடம் இருந்து தப்பித்தாரா? தன் மகளைக் காப்பாற்றினாரா? ஆனந்தியை என்ன செய்தார் ஆர் கே சுரேஷ்? அவர் சைக்கோ கொலையாளியாக மாற என்ன காரணம் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்..

1. KAYAL ANANDHI as DIVYA

2. RK SURESH as DILIP

3. ROOSO SREEDHARAN as ACP VETRIMARAN

4. VIJITH as ASRAF

5. BABY NAKSHATRA as DIYA

6. SASI LAYA as INSPECTOR REKHA

7. SULIYAN BHARANI as YOUNG DILIP

8. RITTIKA CHAKRABORTHY as SWATHI

9. HASHIN as DOCTOR ANJALI

10. DHARANI REDDY as KAVYA

ஒட்டு மொத்த படத்தையும் தன் தோளில் தாங்கி சுமந்து நிற்கிறார் ஆனந்தி.. கடன் தொல்லை, விதவை, குழந்தையை காப்பாற்ற போராடும் ஒரு தாய் என அனைத்து உணர்வுகளையும் நடிப்பில் அழகாக காட்டியிருக்கிறார் ஆனந்தி.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் மிரட்டல் வில்லனாக ஆர்கே சுரேஷ்.. இதில் கொஞ்சம் வித்தியாசமாக சைக்கோ கொலைகாரனாக மாறி இருக்கிறார் படத்தில் மொத்தம் ஐந்து வார்த்தைகளை மட்டுமே பேசி இருப்பார்..

ஆர்கே சுரேஷ் யார்? அவரது பின்னணி என்ன ஆகிய ஃப்ளாஷ்பேக் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம்.

ஆர்.கே.சுரேஷின் இளவயது மருத்துவ கல்லூரி மாணவனாக வரும் சுலியன் பரணி நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்..

தியாவாக பேபி நட்சத்திரா செம க்யூட்.. அம்மாவை ஏமாற்றி அப்பாவிடம் இவர் கொடுக்கும் பர்த்டே பார்ட்டி சர்ப்பிரைஸ்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக சசி லயா.. கம்பீரமும் கவர்ச்சியும் தூக்கலாகவே தெரிகிறது..

இவருடன் மற்றொரு நேர்மையான போலீஸ் ரூசோ ஸ்ரீதரன்.. சில நேர்மையான போலீஸ் அதிகாரிகளும் காவல்துறையில் இருப்பார்கள் என்பதற்கு இவரது கேரக்டர் ஒரு சான்று..

டெக்னீசியன்ஸ் …

11. Writer – Director: K RAJASHEKAR

12. Producer: N RANJANI

13. Cinematographer: V ELAYARAJA

14. Music: SUDHARSHAN

15. Editor: GOPIKRISHNA

16. Lyrics: Kaviperarasu Vairamuthu

17. Art: TN Kabilan

சுதர்ஷன் இசையில் பின்னணி இசை மிரட்டல்.. அடுத்து என்ன நடக்கும் என்ற படபடப்பை உண்டாக்குகிறது.. வைரமுத்து எழுதிய இரண்டு பாடல்கள் ரசிக்க வைக்கிறது..

இளையராஜா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அருமை.. எடிட்டர் கோபிகிருஷ்ணா தன் பணியை கச்சிதமாக செய்து இருக்கிறார்.

ஒரு த்ரில்லர் பாணியிலான கதையை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ராஜசேகர்.. தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வருகிறது ஆனால் அந்த நம்பரை டிரேஸ் செய்ய முடியவில்லை என போலீசு விளக்கம் கொடுப்பது நம்பும்படியாக இல்லை.. ஒரு போன் வந்த இடம் எங்கிருந்து என்பது கூட கண்டுபிடிக்காத அளவிற்கு காவல்துறை செயல்படுகிறது.??

மற்றபடி பெண்கள் ஒரு சைக்கோவிடம் மாட்டினால் காவல்துறையை விட அவர்கள் தன்னை நம்பி தப்பிப்பது சிறந்த வழி என்பதையும் ஒரு காட்சியாக வைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.?!!??

White Rose movie review

பணநாயக பன்னிகள்.. ‘ஒரு தவறு செய்தால்’ விமர்சனம் 3.5/5

பணநாயக பன்னிகள்.. ‘ஒரு தவறு செய்தால்’ விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oru Thavaru Seidhal ஒரு தவறு செய்தால் விமர்சனம் 3.5/5

ஸ்டோரி…

உபசனா ஸ்ரீதர் பாரி சுரேந்தர் சந்தோஷ் என நான்கு நண்பர்கள் ஒரு பெண். இவர்கள் அனைவரும் நன்றாக படித்து திறமையானவர்கள் இருந்தாலும் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் அவதிப்படுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கே.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிறது.. தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்து தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் இருக்கும் நிலையில் பெரிய அளவில் குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து செட்டிலாக நினைக்கின்றனர்.

அதன்படி பொய்யான வீடியோ ஒன்றை கிரியேட் செய்து அதை ஒரு சுயேட்ச்சை வேட்பாளருக்கு (நமோ நாராயணனுக்கு) அனுப்பி இதை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர்.

இதனால் ஆளுங்கட்சி & எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இருவரும் மோதிக் கொள்வார்கள். அந்த இடைவெளியில் சுயேட்ச்சை வேட்பாளர் ஜெயித்து விடலாம் என்ற எண்ணத்தின்படி அதை விற்கின்றனர்.

முதலில் ஒரு ஓட்டுக்கு 100 ரூபாய் என்ற அளவில் 17 கோடியை தர சம்மதிக்கிறார் வேட்பாளர்.. ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் திட்டம் வேறு ஒன்றாகி விடுகிறது.

நண்பர்களின் திட்டம் நிறைவேறியதா.?அரசியல்வாதியின் திட்டம் நிறைவேறியதா? இவர்கள் கேட்ட பணத்தை கொடுத்தாரா? இறுதியில் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

MS bhaskar as parmaeshwaran
Ramchandran as ram
Upasana rc as munishwari
Paari as paari
Srithar as srithar
Namo narayan as ulaganathan
Surendhar as sura
Santhosh as Santhosh

உபசனா ஸ்ரீதர் பாரி சுரேந்தர் சந்தோஷ் இவர்கள் அனைவரும் ஒரே அறைக்குள் படம் முழுக்க இருந்தாலும் அசால்டான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.. இவர்கள் போடும் திட்டம் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது..

முக்கியமாக இதில் ஒருவரை மட்டும் கொஞ்சம் லூசாக சித்தரித்து அவரை அலைய விடுவது ரசிக்க வைக்கிறது.. அதிலும் அந்த நபர் வேறு ஒருவனை ரவுடியாக அழைத்து வந்து அவரும் அலையும் காட்சிகளும் நம்மை கண்டிப்பாக வாய்விட்டு சிரிக்க வைக்கின்றனர்.

மக்களை ஏமாற்றும் அரசியல்வாதியை ஏமாற்றும் நண்பர்கள் என அவர்களை வைத்து திட்டம் போடும் கதை என்றாலும் இறுதியில் அறவழியில் அவர்கள் செல்ல நினைப்பது படத்தின் மீதான நம்பிக்கை தருகிறது.

அதில் முக்கியமாக ஊனமுற்ற ஒரு நபர் பேசும் வசனம் நிச்சயம் நம்மை செவிகளில் அறையச் செய்யும்.. தன்னையும் தன் மக்களையும் நம்பாதவன் தான் ஓட்டை விற்பான் இந்த நாட்டை விற்பான் என்ற வசனங்கள் நிச்சய நம்மை சிந்திக்க வைக்கும்.

2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஒரு தவறு செய்தால் என்று தலைப்பில் வந்திருக்கும் இந்த படம் நிச்சயம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

நமோ நாராயணன் & எம் எஸ் பாஸ்கர் இருவரும் அரசியல்வாதியை போல போடும் திட்டம் ஆச்சரியப்படுத்துகிறது.. தனக்கு காரியம் ஆகும் வரை தான் ஒருவனை கூட வைத்திருப்பான் அரசியல்வாதி.. காரியமில்லை என்றால் அவனை கழட்டி விடுவான் என்பதையும்.. முட்டாள் அல்லக்கை ஆட்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகளையும் அவர் நக்கல் அடித்திருப்பது வேற லெவல் ரகம்..

மக்களை ஏமாற்ற அரசியல்வாதி எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை அவர்களின் கேரக்டர்கள் உணர்த்துகிறது..

டெக்னீசியன்ஸ்…

Director – Mani dhamodharan
D. O. P – Vijay krishna and mahesh sridhar as
Editor – Vithu jeeva
Music Director – K.m rayan
Production Banner – KMP Pictures
PRO – Nikil Murukan

ராயனின் பின்னணி இசை படத்திற்கு பலம்.. 1980 களில் வந்த டி ராஜேந்தர் படங்களில் கவிதைகளைக் கொண்டு பாடல்களை வைத்திருப்பார் டி. ஆர்.. அதுபோல இந்த படத்தில் ஒரு பாடல் இடம் பெற வேண்டிய இடத்தில் அழகான கவிதைகளை மட்டும் வாசிக்க வைத்திருக்கின்றனர்.. அதுவும் டி. ராஜேந்திர் குரலில் அந்த கவிதைகள் ஒலிப்பது அழகோ அழகு..

படத்தில் 20% மட்டுமே வெளியில் படமாக்கப்பட்டுள்ளது 80% படத்தை ஒரே லாட்ஜ் அறைக்குள் வைத்து முடித்திருக்கின்றனர்.. அதற்கு கூடுதல் உழைப்பை ஒளிப்பதிவாளர் கொடுத்திருந்தாலும் ஹை குவாலிட்டி கேமராவை பயன்படுத்தி இருக்கலாம்.. குவாலிட்டி குறைவாக இருப்பதால் படத்தை முழுவதுமாக ரசிக்க முடியவில்லை… இரு கேமராமேன்கள் இருந்தும் இந்த நிலையா?

மணி தாமோதரன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. என்னதான் அரசியல் களத்தில் பணநாயகம் வென்று விட்டாலும் ஜனநாயகம் வாழ எவராவது ஒருவர் நிச்சயமாக நேர்மையாக இருப்பார் என்ற ஒரு கதாபாத்திரம் நிச்சயம் நம்மை ரசிக்க வைக்கிறது.

முதலில் நாம் திருந்தினால் மட்டுமே பெரிய மாற்றங்கள் உருவாகும் என்பதை ஒரு காட்சியில் கிளைமாக்ஸில் வைத்து நம்மை சிந்திக்கவும் வைத்து இருக்கிறார் இயக்குனர்

Oru Thavaru Seidhal movie review

ஆலகாலம் விமர்சனம் 3.5/5.. குடிகார அரசு காலம்

ஆலகாலம் விமர்சனம் 3.5/5.. குடிகார அரசு காலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆலகாலம் விமர்சனம் 3.5/5.. குடிகார அரசு காலம்

ஒரு அரசாங்கமே தன் நாட்டு மக்களை போதைக்கு அடிமையாக்கி வைத்திருப்பதை பார்த்து வருகிறோம்.. ஒழுக்கமான மாணவன் ஒருவன் தவறான நண்பர்களின் சகவாசத்தால் போதைக்கு அடிமையாகி தன் லட்சியத்தை இழந்து பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கையே இந்த ஆலகாலம்..

ஸ்டோரி…

சாராய குடிப்பழக்கத்தால் தன் கணவனை இழக்கிறார் ஈஸ்வரி ராய்.. இதனால் சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்து தாய் வளர்ப்பிலேயே வளர்கிறார் நாயகன் ஜெய் கிருஷ்ணமூர்த்தி.

எனவே தன் மகனை நேர்மையாக ஒழுக்கமாக வளர்த்து ஒரு நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும் என பாடுபடுகிறார் தாய் ஈஸ்வரி ராய்.. கல்லூரி மேற்படிப்புக்காக நகரத்திற்கு செல்கிறார் நாயகன் ஜெய்.

இவர் அழகில்லை என்றாலும் இவரின் திறமை படிப்பு ஆகியவற்றால் கவரப்படுகிறார் நாயகி சாந்தினி. ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கின்றனர்..

கல்லூரி நண்பர்களின் சகவாசத்தால் கொஞ்சம் கொஞ்சமாக சரக்கு அடிக்க கற்றுக் கொள்கிறார்.. ஒரு நாள் சரக்கு அடிக்கும் போது சாந்தினி உன்னை நிஜமாக காதலிக்கவில்லை என சவால் விடுகின்றனர் அவரது நண்பர்கள்.

இதனால் காதலிப்பது உண்மையா? என நாயகன் கேட்க இதை நிரூபிக்கும் வகையில் கல்லூரி வளாகத்திலேயே நாயகன் ஜெய் உதட்டில் முத்தமிடுகிறார் சாந்தினி.

இதனால் இருவரையும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேறு வழியின்றி சாந்தினியை திருமணம் செய்து கொண்டு வெளியே வீடு எடுத்து தங்கி வசிக்கிறார். இது எதுவும் அம்மாவுக்கு தெரியக்கூடாது எனவும் வேண்டுகோள் வைக்கிறார்

புதுமண ஜோடிக்கு வீடு எடுத்துக் கொடுத்து உதவி செய்கிறார் தீபா சங்கர்..

படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரத்திற்காக கட்டிட வேலைக்கு தின கூலியாக செல்கிறார் நாயகன் ஜெய். அங்கு எடுபுடி தங்கதுரையுடன் ஏற்படும் சகவாசத்தால் மேலும் குடிக்கு அடிமையாகிறார்..

பிறகு என்ன ஆச்சு? தாய்க்கு தெரிந்ததா.? குடிகாரன் திருந்தினானா? குடியால் குடும்பம் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ஈஸ்வரி ராவ், சாந்தினி தமிழரசன், ஜெய கிருஷ்ணமூர்த்தி, தங்கதுரை, கோதண்டம், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

படத்தின் இயக்குனரே நாயகனாக நடித்திருக்கிறார்.. இடைவேளைக்கு முன்பு வரை இவருக்கும் சாந்தினிக்கும் உள்ள காதலில் எந்த கெமிஸ்ட்ரியும் இல்லை. இவரது நடிப்பும் கவரவில்லை.

ஆனால் ஒரு கட்டத்தில் ஜெய் முழு குடிகாரனாக மாறிய பிறகு நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.. முக்கியமாக ஒற்றை காலை இழந்த பின் அவர் படும் வேதனைகள் பிச்சை எடுப்பது முதல் சரக்குக்காக அலைந்து மிச்சமுள்ள பாட்டில்களை குடித்து நக்கி எடுக்கும் காட்சிகள் நடிப்புக்கு நல்ல உதாரணம்.

தந்தை இல்லாத ஒரு மகனை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை தன் நடிப்பில் உணர வைத்திருக்கிறார் ஈஸ்வரி ராய்.. தன் மகன் வேலைக்கு சென்று விட்டால் தன் குடும்ப பாரம் குறையும் என்ற நினைப்பில் வாழும் ஒவ்வொரு அம்மாக்களுக்கும் இந்த காட்சிகள் சமர்ப்பணம்..

நாயகன் யார்? அவர் தனக்கு பொருத்தமானவரா.? என நாயகி சாந்தினி பார்க்காமல் தனக்கான தமிழ் கேரக்டரை உணர்ந்து ஒரு குடும்பத் தலைவியாக அழகாக செய்து இருக்கிறார்..

காதலனை நம்பி பெற்றோரை விட்டு வெளியே ஓடிச் செல்லும் பெண்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்.. காதலித்து ஓடிப் போகும் எல்லா பெண்களின் நிலை இதுவல்ல என்றாலும் இந்தப் படம் உதாரணம்.

குடிகார கணவனுக்கு வாக்கப்பட்ட பெண்களின் நிலை அறிந்து அவருக்கு உதவும் பக்கத்து வீட்டு அக்காவாக தீபா ஷங்கர் நடித்திருக்கிறார்.. குழந்தை இல்லாத தனக்கு ஒரு தாயின் வலி புரியும் என அவர் பேசும் காட்சிகள் கண் கலங்க வைக்கும்.

டெக்னீசியன்ஸ்….

இசை : என் ஆர். ரகுநந்தன்

இயக்கம்: ஜெய் கிருஷ்ணமூர்த்தி

ஒளிப்பதிவு : க சத்யராஜ்

படத்தொகுப்பு: காசி விஸ்வநாதன்

தயாரிப்பு: ஜே கிருஷ்ணமூர்த்தி

ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் ஆலக்காலம் படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பாக ஜெனீஸ் வெளியிடுகிறார்.. இவர் தொடர்ந்து சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.

சத்யராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை.. பாடல் காட்சிகளில் நாயகனின் நடிப்பு மெச்சும் அளவுக்கு இல்லை என்றாலும் ஒளிப்பதிவில் எந்த குறையும் இல்லை.. எடிட்டர் காசி விஸ்வநாதன் தன் பணியை நேர்த்தி..

ரகு நந்தனின் இசையில் பாடல் வரிகள் புரியும் வகையில் இருப்பது சிறப்பு.. பின்னணி இசையும் அருமை..

இடைவேளைக்கு பிறகு தான் கதை ஓட்டம் விறுவிறுப்பாக செல்கிறது. குடியால் கெட்டுப்போன குடும்பம்.. இதனால் சமூகத்தில் கிடைக்கும் அவமானங்கள் என அனைத்தையும் எதார்த்தமாக சொல்லி இருக்கிறார்..

குடியால் நல்ல ஒரு மகனை இழந்த ஒரு தாயின் வலி எப்படி இருக்கும் என்பதை ஈஸ்வரி ராய் தன் உணர்ச்சிகரமான நடிப்பில் காட்டியிருக்கிறார்.. குடியால் எத்தனை குடும்பங்கள் சீரழிகிறது இனியாவது நல்லதொரு விடியலை மக்களுக்கு அரசாங்கம் தரவேண்டும்..

உயிர் கொடுத்த என்னிடமே உயிரை எடுக்கும் சாராயத்தை வாங்கி கேட்கிறாயே.. என ஒரு தாய் சொல்லும் காட்சி நெத்தியடி..

ஜெய் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.. இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணி புரியவில்லை என்றாலும் முதல் படத்திலேயே ஒரு நல்ல ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார்..

Aalakaalam movie review

KALVAN கள்வன் பட விமர்சனம்

KALVAN கள்வன் பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KALVAN கள்வன் பட விமர்சனம்

ஸ்டோரி..

சத்தியமங்கலம் பகுதி.. ஒரு அடர்ந்த மலை கிராமத்தில் வசித்து வருகின்றனர் ஜிவி பிரகாஷ் & தீனா. இவர்கள் கொள்ளை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் இவானாவை ஒரு கிராமத்தில் சந்திக்கும் போது அவர் மீது காதல் கொள்கிறார் ஜிவி பிரகாஷ். ஆனால் ஒரு திருடனை காதலிப்பதா? என வெறுத்து ஒதுங்கி விடுகிறார் இவானா.

இந்த சூழ்நிலையில் ஒரு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை தத்தெடுக்கிறார் ஜிவி பிரகாஷ்.. இதனால் நாயகன் மீது நாயகிக்கு காதல் வருகிறது.. ஆனால் ஜி வி பிரகாஷின் திட்டம் என்ன என்பதை அறியாமல் இருக்கிறார்..

அப்படி என்னதான் திட்டம் போட்டார் ஜிவி பிரகாஷ்? இறுதியில் காதல் என்ன ஆனது? பாரதிராஜா யார்? அவரது பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்….

ஜிவி பிரகாஷ், தீனா, இவானா, பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கெம்பன் கேரக்டரை கெத்தாகவே செய்து இருக்கிறார்.. தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரவில்லை என்றாலும் உடல் மொழியிலும் உச்சரிப்பிலும் நம்மை கவர்ந்து விடுகிறார் நாயகன் ஜிவி பிரகாஷ்..

பாரதிராஜாவை தத்தெடுக்க என்ன காரணம்? என்பது திரைக்கதைக்கு திருப்புமுனையை உண்டாக்குகிறது..

ஏற்கனவே ஜிவி பிரகாஷ் உடன் நாச்சியார் படத்தில் நடித்திருந்தார் இவானா.. இந்த ஜோடி இணைந்த 2வது படம் இது.. அழகான கண்கள் அளவான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்து விடுகிறார் இவானா..

நாயகனின் நண்பனாக தீனா.. இவரது துள்ளல் நடிப்பும் துருதுருப்பான பேச்சும் கவர்கிறது.. ஆனால் ஓவர் டாக் கொடுத்து எரிச்சல் அடைய வைக்கிறார்..

பாரதிராஜா யார்? அவரது ஃப்ளாஷ் பேக் காட்சிகள் படத்திற்கு யானை பலம்.. பாரதிராஜாவும் பட்டைய கிளப்பி இருக்கிறார்.

இவர்களை தவிர வனத்துறை அதிகாரிகள், ஊர் மக்கள், காவலர்கள் சரியான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர.

டெக்னீசியன்ஸ்…

ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் அருமை.. ரேவாவின் பின்னணி இசை அடர்ந்த காட்டுக்கள் அதற்கு ஏற்ப பயணித்திருப்பது பாராட்டுக்குரியது..

பசுமை நிறைந்த அழகான காடு அதில் ஒளிந்திருக்கும் யானை போன்ற விலங்குகளின் ஆபத்து என அனைத்தையும் அருமையாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பெரும்பாலும் யானையைச் சுற்றி படத்தின் கதை நகர்கிறது.. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் யானை & கிராபிக்ஸ் அனைவரையும் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.. ஜிவி பிரகாஷ் யானை துரத்தும் அந்த காட்சி நிச்சயம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.. குழந்தைகள் இந்த காட்சிகளை கொண்டாடுவார்கள்..

காதல் காமெடி துரோகம் எமோஷனல் என அனைத்தையும் கொடுத்து ஒரு கமர்சியல் விருந்து படுத்தியிருக்கிறார் இயக்குனர் பிவி சங்கர்.. இவரே படத்தின் ஒளிப்பதிவாளர் என்பதால் கூடுதல் கவனம் எடுத்து படமாக்கி இருக்கிறார்.

கள்வன் எப்போதும் கள்வனாக அல்லாமல் ஒரு கட்டத்தில் திருந்துவான் என்பதை கதைக்களமாக கொண்டு சென்றாலும் அதில் கொஞ்சம் சுவாரசியத்தை ஏற்படுத்தும் காட்சிகளை வைத்திருந்தால் இந்தக் கள்வனை மக்கள் இன்னும் அதிகமாக கொண்டாடியிருப்பார்கள்..

Kalvan movie review

‘வெப்பம் குளிர் மழை’ திரை விமர்சனம்

‘வெப்பம் குளிர் மழை’ திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வெப்பம் குளிர் மழை’ திரை விமர்சனம்

ஸ்டோரி…

Dhirav & Ismath Banu.. திரவ் மற்றும் இஸ்மத் பானு இருவரும் கிராமத்து தம்பதியர்.. (பானுவின் மாமியார் ரமா.)

இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிவிட்டது.. குழந்தை இல்லை என்பதால் மலடி மலடி என்ன மாமியாரும் ஊர் மக்களும் அடிக்கடி ஏளனம் செய்கின்றனர்.

ஒரு கட்டத்தில் கருத்தரிப்பு மையத்திற்கு சென்று பரிசோதனை செய்தபோது கணவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லை என்பதை அறிகிறார்.. இந்த சூழ்நிலையில் பானு கணவருக்கு கூட தெரிவிக்காமல் கணவனின் கௌரவத்தை காக்க டெஸ்ட் டிட்யூப் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்.

அதன் பின்னர் குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகள் வந்தது என்பதுதான் கதை.

கேரக்டர்ஸ்…

Dhirav,
Ismath Banu,
Rama,
MS Bhaskar
Master Karthikeyan,
Dev Habibullah,
Vijayalakshmi

நாயகன் திரவ் தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எடிட்டர் பாடலாசிரியர் என முக்கியமான பொறுப்புகளை ஏற்று அதை அழகாகவே திறம்பட செய்திருக்கிறார்..

திருமணமாகி 5 வருடம் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் தனக்கு பிரச்சனையா? தன் மனைவிக்கு பிரச்சனையா? என்பதை அறியவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் அவர் படும் வேதனைகள் அழகாகவே காட்டியிருக்கிறார். அதிலும் கிராமத்து ஆண்களுக்கே உரித்தான கெத்து காட்டிக் கொண்டு உள்ளுக்குள் அழுவதும் ஒரு கட்டத்தில் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்ட பின் அவர் மீசையை முறுக்கிக்கொண்டு சிரித்துக் கொண்டே அழும் அந்த காட்சி அவரின் சிறந்த நடிப்பை காட்டி இருக்கிறது

வெப்பம் குளி மழை என்ற மூன்று காலகட்டத்திற்கு ஏற்ப பெண்கள் படும் வேதனைகளை அழகாகவே தன்னுடைய உடல் மொழியில் காட்டியிருக்கிறார் இஸ்மத் பானு.

குழந்தை பெற்றுக்கொள்ள தனக்கு தகுதி இருந்தும் கணவனுக்கு இல்லை என்று தெரிந்தும் அது வெளியே சொல்லாமல் மலடி என்ற பெயரை வாங்கி கட்டிக் கொண்டு படும் வேதனைகளை கண்களில் கூட காட்டியிருக்கிறார். இவர் அசுரன் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் பானுவுக்கு பெரிய பெயரை தரும்.

நாயகன் கூடவே வரும் உறவினர் கருப்பு கிராமத்து வெள்ளந்தி மனிதராக வருகிறார். இவருக்கு கூடுதல் காட்சிகள் கொடுத்திருந்தால் வெளுத்துக் கட்டி இருப்பார்..

நடக்க முடியாமல் குச்சி வைத்துக் கொண்டு நடக்கும் ஒரு கிராமத்து பெரியவரை கண் முன் நிறுத்தி இருக்கிறார் எம் எஸ் பாஸ்கர் எம் எஸ் பாஸ்கர்..

நாயகனின் அம்மாவாக அடாவடி மாமியாராக பொட்டம்மா கேரக்டரை அடித்திருக்கிறார் ரமா.. கணவர் இறந்தாலும் நெத்தியில் வைக்கும் பொட்டை அழிக்க மாட்டேன் என அவர் கிராமத்து பெண்களின் வீரத்தை காட்டி இருக்கிறார்.

டெக்னீசியன்ஸ்…

Director: Pascal Vedamuthu
Production: Hashtag FDFS productions Dhirav
Music director: Shankar
Rangarajan
Editor: Dhirav
Cinematographer: Prithvi Rajendran
Sound designer: Anand, Dhirav, Arun
Stunts: Stunner sam
Art director: Balachander
Costume: Keerthana
Lyrics: Dhirav
D. I. – Srikkanth Raghu

நாயகன் திரவ் இந்த படத்தின் பாடல்கள் எழுதியிருக்கிறார்.. கிராமத்து மண் இசையை மனம் மாறாமல் கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் சங்கர்..

பிரித்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.. கிராமத்து வீதிகள் கிராமத்து வீடுகள் என அனைத்தையும் யதார்த்தமாக காட்ட அதற்கு ஏற்ப கலை இயக்குனரும் ஒத்துழைத்து இருக்கிறார்.

பாஸ்கல் வேதமுத்து படத்தை இயக்கியிருக்கிறார்.. நகரத்தில் குழந்தை இல்லாத தம்பதிகள் சிகிச்சை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகி விட்டது.. ஆனால் கிராமத்தில் உள்ளவர்கள் அக்கம் பக்கத்து வீட்டாருக்காக மறைத்து மறைத்து வாழ்வதை அருமையாக சித்தரித்து இருக்கிறார்.

குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்பதால் குழந்தையை கொல்ல நினைக்கும் தந்தையின் மனநிலை? இப்படி எல்லாம் இருக்குமா? என்பதுதான் கேள்வி.

கணவன் மனைவி உடலுறவு என்பது உடல் மட்டும் சார்ந்தது அல்ல.. இருவரும் உணர்வுபூர்வமாக மனதால் இணைந்தால் மட்டுமே குழந்தை பிறக்கும் என்பதையும் விழிப்புணர்வு காட்சியாக வைத்திருக்கிறார் இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து.

Veppam Kulir Mazhai movie review

More Articles
Follows