D3 விமர்சனம் 3/5.; முதல் 2 பாகம் எப்போ.?

D3 விமர்சனம் 3/5.; முதல் 2 பாகம் எப்போ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: பிரஜின், சார்லி, வித்யா பிரதீப், ராகுல் மாதவ், காயத்ரி யுவராஜ், மேத்யூ வர்கீஸ் மற்றும் பலர்.

இயக்கம்: பாலாஜி
தயாரிப்பு: பிமாஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ்

பாலாஜி இயக்கத்தில் ப்ரஜின், வித்யா பிரதீப், சார்லி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் D3.

கதைக்களம்…

ப்ரஜின் ஒரு போலீஸ் அதிகாரி. இவரது மனைவி வித்யா பிரதீப். குற்றாலத்திற்கு டிரான்ஸ்பர் ஆகி வருகிறார்.

அப்போது ஒரு விபத்து நடக்கிறது. ஒரு பெண் இறக்கிறார். சில தினங்களில் மற்றொரு பெண் ஒருவர் இறக்கிறார்.

இந்த இரண்டு விபத்துகளும் ஒரே போல நடந்துள்ளதால் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறார் பிரஜின்.

இதனையடுத்து விசாரணையில் இறங்க அவரது மனைவியை வித்யாவை கொல்கிறது அந்த கும்பல்.

அவர்கள் தொடர்ந்து கொலைகளை செய்ய என்ன காரணம்.? அவர்கள் யார்.? அதனை போலீஸ் ப்ரஜின் கண்டுபிடித்தாரா.? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

இதற்கு முன் சில படங்களில் நாயகனாக நடித்த பிரஜின் டி3 படத்திற்காக முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். போலீஸ் கேரக்டருக்கு ஏற்ற வகையில் தன்னுடைய உடலையும் உடல் மொழியையும் மாற்றி இருக்கிறார். ஆக்சனில் கூட பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார்.

வித்யா பிரதீப்புக்கு இந்த படத்தில் பெரிதாக காட்சிகள் இல்லை. ஒரு வேளை இந்த படத்தின் முதல் இரண்டு பாகங்கள் வெளியானால் அவரது கேரக்டர் எப்படி இருக்கும் என தெரியலாம்.

டாக்டராக நடித்திருக்கும் ராகுல் மாதவ் செம ஸ்டைலிஷாக வந்து மிரட்டியிருக்கிறார். ஒரு பணக்காரனுக்கு உரிய கெத்தாக தன்னுடைய கேரக்டரை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மற்ற நடிகர்களான சார்லி, காயத்ரி யுவராஜ், அபிஷேக் தங்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

தொடர் கொலைகள்.. போலீஸ் விசாரணை.. திரில்லர் கதை என பாலாஜி தன் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.. முதல் இரண்டு பாகங்கள் வெளியானால் மட்டுமே மூன்றாம் பாகத்தின் கதை புரியும் போல.

இடைவேளை முன்பு இருந்த வேகம் இரண்டாம் பாதியில் இல்லை. ஒரு திரில்லர் கதையை நேர்க்கோட்டில் பயணிக்கச் செய்யாமல் மாற்றுப் பாதையில் பயணிக்க செய்திருப்பதால் சற்று தொய்வு ஏற்படுகிறது.

ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பணி நேர்த்தியாக உள்ளது. இரவு நேர காட்சிகளுக்கு தன் கேமராவினால் உயிரூட்டியிருக்கிறார்.

இசையமைப்பாளரின் பின்னணி இசை சிறப்பு. ராஜா ஆறுமுகத்தின் எடிட்டிங் ஓகே.

ஒரு மாதிரி போனாங்க.. ஒரு மாதிரி போனாங்க.. என்ற வாக்கியம் அடிக்கடி வருகிறது.. அதனை தொடர்புப்படுத்தியே காவல்துறை விசாரணை நடக்கிறது.

ஆக… டி3 படமும் ஒரு மாதிரி போகுது.. முதல் 2 பாகங்கள் வரட்டும். பார்ப்போம்..

D3 movie review and rating in tamil

கண்ணை நம்பாதே 3.25/5.; பிரகாசிக்கும் பிரசன்னா.. உதயநிதி.??

கண்ணை நம்பாதே 3.25/5.; பிரகாசிக்கும் பிரசன்னா.. உதயநிதி.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

வாடகை வீட்டில் வசிக்கிறார் உதயநிதி. அந்த வீட்டின் ஓனர் மகள் ஆத்மிகாவை காதலிக்க பிரச்சனை வருகிறது.. உடனே வீட்டை காலி செய்ய சொல்கிறார் ஓனர்.

இதனால் அவசரத்திற்காக வேறு வழியில்லாமல் புரோக்கர் மூலமாக பிரசன்னா வீட்டில் தங்குகிறார். ஒருநாள் இவர்கள் தண்ணி அடித்து விட்டு வரும்போது காரை ஓட்டி வரும் பூமிகாவிற்கு உதவ செல்கிறார் உதயநிதி.

அதன் பின்னர் மர்மமான முறையில் இறக்கிறார் பூமிகா. இந்த கொலையை மறைக்க உதயநிதியும் பிரசன்னாவும் பயணிக்கும் பாதையில் அடுத்தடுத்து ஓரிரு கொலைகள் நடக்கின்றன.

போலீஸிடம் இருந்து தப்பிக்கவும் தங்களை நிரபராதி என் நிரூபிக்கவும் இவர்கள் போடும் திட்டங்கள்தான் இந்த படத்தின் கதை.

கண்ணை நம்பாதே

கேரக்டர்கள்…

படத்தின் நாயகன் என்னவோ உதயநிதி தான்.. ஆனால் தன் கேரக்டரில் அதிகம் பிரகாசிப்பவர் பிரசன்னா.. படத்தின் ஆரம்ப முதல் இறுதி காட்சி வரை பயணம் செய்கிறார்.. பயம் பதட்டம்.. மிரட்டல் என அனைத்தையும் திறம்பட செய்துள்ளார்.

நாயகன் உதயநிதி.. பயம்.. பதட்டம்.. நடுக்கம்.. ரொமான்ஸ்.. என அனைத்திலும் ஒரே முக பாவனை தான்.. என்ன நினைத்து நடித்தாரோ அல்லது இது போதும் என நினைத்தாரோ.?!

ஆத்மிகா மற்றும் சுபிக்ஷா நடித்துள்ளனர். ஆத்மிகா நாயகி என்பதால் ஒரு பாடலைக் கொடுத்து சில காட்சிகளையும் கொடுத்துள்ளனர்..

இவர்களது கேரக்டர் கதைக்கு உதவினாலும் ஓரிரு காட்சிகளிலேயே இவர்கள் வந்து செல்கிறார்கள்

ரோஜாக்கூட்டம் படத்தில் நாம் பார்த்த ஸ்ரீகாந்த் – பூமிகா இருவரும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் ஜோடி இல்லை என்றாலும் கதையில் திருப்புமுனையை கொண்டு வருகிறார்கள்.

வசுந்தரா மாரிமுத்து இருவரும் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம்.. வசுந்தராவின் கேரக்டரில் ட்விஸ்ட் கொடுத்திருப்பது சிறப்பு.

சதீஷ் கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார். பிறகு காணாமல் போய்விடுகிறார். காமெடிக்காக வந்தாரோ.? கால்ஷீட் இருக்கு என கொடுத்தாரோ தெரியவில்லை..

ஞானசம்பந்தம், பழ.கருப்பையா, சென்ராயன், ஆதிரா என அனைவரும் படத்தில் இருக்கிறார்கள். அவ்ளோதான்.

டெக்னீஷியன்கள்…

படத்தின் முதல் பாதி வேகமாக செல்கிறது. கொலைகாரன் யார்.? கொலை நடந்தது எப்படி.? என்ற எதிர்பார்ப்புகளுடன் படத்தை ரசிக்க முடிகிறது.

ஒரு கட்டத்தில் அந்த த்ரில்லர் முடிச்சி அவிழும்போது அட இவ்வளவுதானா.? என எண்ணமே தோன்றுகிறது.

அதிலும் பூமிகா – ஸ்ரீகாந்த் பிளாஷ் பேக் காட்சிகள் பெரிதாக கவனம் பெவில்லை வழக்கம்போல நாம் ஏற்கனவே பார்த்த கதையாகவே உள்ளது.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மாறன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.. விறுவிறுப்பாக ஒரு திரில்லர் கதையை கொடுக்கு முயற்சித்துள்ளார்.

சித்து குமாரின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. இதனால் படத்துடன் நாம் ஒன்ற முடிகிறது.

ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன்..: முக்கியமாக படத்தின் ஒளிப்பதிவும் பாராட்டப்படும் வகையில் உள்ளது.

இரண்டாம் பாதியின் நீளத்தை குறைத்து இருக்கலாம். லாஜிக் மீறல்கள் உள்ளன.

ஆக இந்த கண்ணை நம்பாதே.. த்ரில்லர்..

Kannai nambathe movie review and rating in tamil

கப்ஜா விமர்சனம் 2.75/5.; KGF Copy.. But Paste.?

கப்ஜா விமர்சனம் 2.75/5.; KGF Copy.. But Paste.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சுதந்திர காலக்கட்டத்தில் நடக்கும் கதை இது. கர்நாடகாவில் உள்ள அமராபுரத்தின் மகாராஜா, வீர பகதூர்.

இவரது மகள் மதுமதியும் (ஸ்ரேயா) ஆர்கா என்ற ஆர்கேஷ்வரனும் (உபேந்திரா) காதலிக்கிறார்கள். தந்தை எதிர்ப்பை மீறி காதலனை மணக்கிறார் ஷ்ரேயா.

இதற்கு முன்பே விமானப் படை பயிற்சியில் இருந்து விடுப்பில் ஊருக்கு வருகிறார் ஆர்கா. ஒரு நாள் இவரது அண்ணன் அராஜகத்தை தட்டி கேட்டு ரவுடியை கொலை செய்தமையால் கைது செய்யப்படுகிறார்.

போலீஸ் இவரை கைது செய்து சில ரவுடிகளின் துணையால் கொலை செய்கின்றனர். இதனால் கத்தி எடுக்கும் உபேந்திரா வளர்ந்து ஆர்காபுரத்துக்கே மிகப்பெரிய டானாக வளர்ந்து நிற்கிறார்

இதனால் மாநில அரசும் துணை ராணுவப் படையும் உபேந்திராவை சுற்றி வளைக்கிறது.

இதையெல்லாம் மீறி உபேந்திரா என்ன செய்தார்.? என்பதுதான் இந்த கப்ஜா படத்தின் முதல் பாக கதை.

இதன் முதல் பாகம் முடிவில் கிச்சா சுதீப் மற்றும் சிவராஜ்குமார் வருகின்றனர்.. இரண்டாம் பாதியில் இவர்கள் மூவருக்கும் நடக்கும் போராட்டமே கதையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கேரக்டர்கள்…

உபேந்திராவின் உயரம் அவரது கம்பீரம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.. எதிரிகளை அடித்து வீசுவதும் அநியாயத்தை தட்டி கேட்பதும் என வெளுத்து கட்டியிருக்கிறார்.

ஸ்ரேயா சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனக்கு கொடுத்த பாத்திரத்தை அழகாக்கி இருக்கிறார்.

உபேந்திராவின் அம்மா ஸ்ரேயாவின் தந்தை உள்ளிட்டோரும் கதைக்கு துணைப் பாத்திரங்களாக வலு சேர்த்து உள்ளனர்.

அதுபோல படத்தில் நிறைய தாதாக்கள் காட்டப்படுகின்றனர்.. ஒவ்வொருவரும் தங்கள் தோற்றத்தில் மிரட்டலாகவே உள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

இயக்கம் – சந்துரு.; இசை – ரவி பர்சூர் (KGF)

முக்கியமாக கலை இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். 1950 – 60களில் உள்ள காலகட்டத்தை அப்படியே கலை நுணுக்கத்தோடு வடிவமைத்து உள்ளார்.

உபேந்திரா டானாக உயர்ந்த கதையை ‘கேஜிஎப்’ பாணியில் சுதீப் சொல்கிறார்.

கே ஜி எஃப் என்ற படத்தை நம்பி அதற்கு நிகராக ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என இயக்குனர் சந்துரு முயற்சி செய்து இருக்கிறார். அதில் பாதி அளவு மட்டுமே அவர் கொடுத்துள்ளார் எனலாம்.

முக்கியமாக ஓவர் பில்டப் வசனங்கள் திகட்டும் அளவுக்கு உள்ளது.. பல இடங்களில் பின்னணி இசை வசனங்களை புரியவிடாமல் செய்கிறது.

கேஜிஎப் படத்தில் கோலார் தங்க வயலை காட்டியிருப்பதால் அதில் கருப்பு மண் காட்டப்பட்டிருக்கும்.. ஆனால் இந்தப் படத்தில் நிறைய காட்சிகளில் கருப்பு மண் மட்டுமே காட்டப்படுகிறது. ஆனால் அதற்கான காரணம் எதுவுமில்லை.

அதுபோல ஒளிப்பதிவும் நிறைய காட்சிகளில் இருட்டாகவே உள்ளது. இதனால் படத்தின் காட்சிகள் தெளிவாக இல்லை.

பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக இருந்தாலும் அது வசனங்களை ஓவர் லேப் செய்வதால் எரிச்சலை தருகிறது.

ஆக இந்த கப்ஜா.. KGF Copy.. But Paste missing..

Kabzaa movie review and rating in tamil

ராஜா மகள் விமர்சனம் 3.5/5.; குறை தெரியாத குட்டீஸ்

ராஜா மகள் விமர்சனம் 3.5/5.; குறை தெரியாத குட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

ஆடுகளம் முருகதாஸ் – வெலீனா தம்பதிகளுக்கு பிரதிக்ஷா என்ற 8 வயது மகள்.. செல்போன் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருக்கிறார் முருகதாஸ்.

தன் மகள் மீது கொள்ளை பாசம் வைத்திருக்கிறார். மகள் எதை கேட்டாலும் உடனே வாங்கி கொடுத்துவிடும் சுபாவம்.

ஒரு நாள் தன் பள்ளி தோழன் வீட்டு விழாவுக்கு செல்கிறார் பிரதிக்ஷா. அப்போது சொந்த வீடு.. பங்களா.. வாடகை வீடு உள்ளிட்டவைகளை பற்றி அறிகிறார்.

எனவே தனக்கும் ஒரு சொந்த வீடு வேண்டும் என அப்பாவிடம் கேட்கிறார். மகள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் அப்பா சரி வாங்கி தரேன் என்கிறார்.

ஆனால் உடனே வேண்டும் என அடம் பிடிக்கிறார். ஒரு கட்டத்தில் வீடு வாங்கியாச்சு என பொய் சொல்கிறார்.

இதன்பிறகு என்னாச்சு.? தந்தை மீது மகள் வைத்த நம்பிக்கை என்ன ஆனது.? பொய்யே சொல்லாத தந்தை பின்னர் என்ன செய்தார்.? தன்னுடைய அப்பா தான் ஹீரோ என்று நினைக்கும் மகள் என்ன செய்தார்? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகன் ஆடுகளம் முருகதாஸ். நாயகி வெலீனா.. ஆனால் இவர்கள் இருவரையும் தன் நடிப்பில் முந்திவிட்டார் குட்டி பெண் பிரதிக்ஷா. அவரின் முகபாவனைகளும் அவர் பேச்சும் வேற லெவல்.. பள்ளியில் அவர் செய்யும் அலப்பறைகளும் சூப்பர்.. நிச்சயமாக விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதுவரை பல படங்களை காமெடி செய்து வந்த ஆடுகளம் முருகதாஸ் ஓர் யதார்த்த தந்தையாக வாழ்ந்திருக்கிறார்.

அதுபோல இளம் வயதிலேயே ஒரு மெச்சூரிட்டியான கேரக்டரை தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் வெலீனா.. மகளிடம் அதிக செல்லம் காட்டும் கணவனை கண்டிக்கும் மனைவியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடித்துள்ள பக்ஸ் பகவதி உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களும் பள்ளி மாணவர்களும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

நிக்கி கண்ணனின் கேமரா கதைக்கு துணை புரிந்துள்ளது. சங்கர் ரங்கராஜணனின் பின்னணி இசையை விட பாடல்கள் அதிக கவனம் பெறுகிறது.

குழந்தைகளிடம் பொய் சொல்லி வளர்ப்பதை விட தங்களின் இயலாமையை பெற்றோர்கள் சொல்லி வளர்ப்பது நல்லது என்பதை இயக்குனர் ஹென்றி புரிய வைத்திருக்கிறார்.

ஏழையாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு அப்பனும் ராஜா தான். அதே சமயம் தங்கள் கஷ்டங்களை சொல்லி வளர்க்கும் தந்தையே உண்மையான ராஜா என்பதையும் உணர வைத்திருக்கிறார் இயக்குனர் ஹென்றி.

ஆக ராஜா மகள்.. குறை தெரியாத குட்டீஸ்

Raja Magal movie review and rating in Tamil

FIRST ON NET குடி மகான் விமர்சனம் 3.25/5.; குடித்தால் தாங்குமா.?

FIRST ON NET குடி மகான் விமர்சனம் 3.25/5.; குடித்தால் தாங்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

குடிக்காத ஒருவனுக்கு ஏற்படும் வியாதி போதையாகிறது.. இதனால் அவனுக்கு ஏற்படும் அவமானமே படத்தின் கதை.

கதைக்களம்…

தந்தை சுரேஷ் சக்கரவர்த்தி.. அவரது மகன் விஜய் சிவன்.. அவரது மருமகள் சாந்தினி தமிழரசன்.. இவர்களுக்கு ஒரு குழந்தை.!

ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பும் வேலையை செய்கிறார் நாயகன். இவருக்கு புதுவிதமான நோய் ஒன்று வருகிறது. அதாவது உடலில் கார்போஹைட்ரேட்ஸ் குறைந்து காணப்படுவதால் அது போதை ஆகிறது.. அவர் எதை சாப்பிட்டாலும் அதுவும் போதையாகவே பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.

ஒருநாள் ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பும்போது 100 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் கட்டுகளை வைக்கிறார்.. இதனால் படம் எடுப்பவர்கள் லட்சக்கணக்கில் படம் எடுக்கின்றனர்.

இது பெரும் பிரச்சனையாகவே அவரது வேலை பறிபோகிறது.. இதனையடுத்து மீண்டும் வேலை கேட்கிறார்.. நீ பணத்தை திருப்பி கொடுத்தால் வேலை தருகிறோம் என்கின்றனர் பேங்க் அதிகாரிகள்.

எனவே பணத்தை எடுத்துச் சென்றவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் பணம் பெற முயற்சிக்கிறார்.

இறுதியில் என்ன ஆனது? பணம் கிடைத்ததா.? வேலை கிடைத்ததா.? நாயகனின் வியாதி குணமானதா.? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

விஜய் சிவன் நாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் நாயகியாக நடித்துள்ளார்.

பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

வித்தியாசமான கேரக்டரில் தன்னால் முடிந்த வரை சிறப்பாக கையாண்டுள்ளார் நாயகன் விஜய் சிவன்.. நல்லவேளை இவருக்கு படத்தில் ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை வைக்கவில்லை.

சுரேஷ் சக்கரவர்த்தி செய்யும் அலப்பறைகள் தாங்க முடியாது.. படத்தை கலகலப்பாக எடுத்துச் சென்றுள்ளார்.

சாந்தினி தமிழரசன் சாந்தமாக வந்து ஒரு இல்லத்தரசியாக தனது வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

நமோ நாராயணன் வந்த பிறகு படம் வேறு பாதையில் வேற லெவலில் பயணிக்கிறது.. அவருடன் வரும் அல்லக்கைகளும் அட்டகாசம் செய்துள்ளனர்.

இவர்கள் தவிர நாளைய இயக்குனர்கள் சீசன்-6 டீமில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்….

பாலுமகேந்திராவிடம் சீடராக பணியாற்றிய மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார். ஷிபு நீல் BR படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

படத்தின் பின்னணி இசை பின்னணி இசை காமெடிக்கும் கை கொடுக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு படத்தொகுப்பம் கச்சிதமாக அமைந்துள்ளது.

நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார்.

படத்தை கலகலப்பாக கொடுக்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்.. மக்களும் கைத்தட்டி ரசிப்பதை காண முடிந்தது.

உணவுப்பொருள் எப்படி போதையாகும்.? என்ற லாஜிக் பார்க்காமல் இந்த படத்தை நாம் பார்த்தால் கண்டிப்பாக ரசிக்கலாம்.

ஆக.. குடி மகான்… குடித்தால் தாங்குமா்.?

kudi mahaan movie review and rating in tamil

கொன்றால் பாவம் விமர்சனம் 3.75/5

கொன்றால் பாவம் விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

18 கன்னடப் படங்களை இயக்கியுள்ள தமிழரான தயாள் பத்மநாபனுக்கு இது முதல் தமிழ்ப் படம்.

2018ல் ‘ஆ காரல ராத்ரி’ என்னும் கன்னடப் படத்தை இயக்கி அதை தற்போது தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார்.

தன்னுடைய சுயலாபத்திற்காக ஒருவரை கொன்றால் அது பாவமா இல்லையா.? என்பதுதான் இதன் கதை

கதைக்களம்…

கருப்பசாமி (சார்லி), அவர் மனைவி வள்ளியம்மாள் (ஈஸ்வரி ராவ்). இவர்களது மகள் மல்லிகா (வரலட்சுமி சரத்குமார்). இவர்கள் வீட்டு அழையா விருந்தாளி.

சார்லி, ஈஸ்வரி, வரலட்சுமி இவர்களின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. இதனால் வரலட்சுமிக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது.. ஒருநாள் இக்கட்டான சூழ்நிலையில் வரும் சந்தோஷ் இவர்கள் வீட்டில் தங்க நேரிடுகிறது. அவரிடம் அதிக அளவில் பணம் நகைகள் இருப்பதை கண்டறிகின்றனர்.

இதனையடுத்து அவர்களை இந்த குடும்பத்தினர் கொல்ல திட்டமிடுகின்றனர் இறுதியில் என்ன ஆனது? கொன்றால் பாவம் இல்லையா என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்….

வரலட்சுமி, சார்லி, ஈஸ்வரி ராவ், சந்தோஷ் என அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். படத்தின் கதை ஓட்டத்தை புரிந்து அதற்கு ஏற்ப தங்கள் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்

பார்வையற்றவராக வரும் சென்றாயன், காவலராக வரும் கவிதாபாரதி, சாராயக் கடை முதலாளி சுப்ரமணிய சிவா உள்ளிட்டோரும் தங்கள் பங்களிப்பை திறம்பட கொடுத்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

செழியனின் ஒளிப்பதிவு காலத்துக்கு ஏற்ப நம்மை பயணிக்க வைக்கிறது. சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை வழக்கம்போல நம்மை கவர்ந்து விடுகிறது.. மேலும் த்ரில்லர் படத்திற்கு தேவையான பதட்டத்தைக் கூட்டுகிறது. பாடல்களும் நம் கவனம் ஈர்க்கின்றன.

இயக்குநர் தயாள் பத்மநாபன்.. ஒருவனுக்கு திருடவே மனமில்லை என்றாலும் அதிக அளவு பணத்தை பார்த்தால் மனம் சஞ்சலப்படும்.. திருடத் தூண்டும் என்பதையும் அப்பட்டமாக தன் காட்சிகளில் உணர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

மேலும் மனித வாழ்வில் ஆசையை என்றுமே தவிர்க்க முடியாது.. அதற்கு எல்லையே கிடையாது என்பதையும் சொல்லியிருக்கிறார்..

அதே சமயம் கொன்றால் பாவம்.. தண்டனை ஒருநாள் வரும் என்பதையும் ரசிகர்களுக்கு புரியும் வகையில் உணர்த்தி இருப்பது கூடுதல் சிறப்பு..

ஆக கொன்றால் பாவம்.. சரிதான்..

Kondral Paavam movie review and rating in tamil

More Articles
Follows