சென்னை 2 சிங்கப்பூர் விமர்சனம்

சென்னை 2 சிங்கப்பூர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கோகுல் ஆனந்த், (ஹரிஷ்) ராஜேஷ் பாலசந்திரன் (வானம்பாடி), அஞ்சு குரியன் (ரோஷினி) சிவ் கேசவ் (மைக்கேல் கிரிஸ் முருகாந்தம்) எம்சீ ஜெஸ் (பாப்பாபலாஸ்ட்)
இயக்கம் : அப்பாஸ் அக்பர்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு: கார்த்திக் நல்லமுத்து
எடிட்டிங்: பிரவீன் கேஎல்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: ஜிப்ரான்

கதைக்களம்…

சினிமாவில் டைரக்டராக வேண்டும் என பல மாதங்களாக முயற்சிக்கிறார் ஹீரோ கோகுல் ஆனந்த்.

ஆனால் இவரை காக்க வைத்த தயாரிப்பாளரோ ஒரு கட்டத்தில் வேறு ஒரு இயக்குனரை வைத்து படமெடுக்க நினைக்கிறார்.

ஒரு கட்டத்தில் சிங்கப்பூரில் ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார் என்பதற்காக அவரை பார்க்க அங்கு செல்கிறார்.

ஆனால் அவர் விபத்தில் சிக்கி விடுகிறார். அதன்பின் அங்குள்ள ஒரு கேமராமேன் வானம்பாடியை சந்திக்கிறார்.

அவரின் உதவியுடன் புதிய தயாரிப்பாளரை தேடுகின்றார்.

இதனிடையில் நாயகி அஞ்சுவை சந்திக்கிறார். அவரை காதலிக்கிறார். ஆனால் நாயகியோ கேன்சர் நோயாளி. இதனால் அவருக்கு உதவ நினைக்கிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளரும் கிடைக்கிறார்.

அதன்பின் படம் எடுத்தாரா? காதலியை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

chennai to singai

கேரக்டர்கள்…

படம் முழுவதும் 5, 6 கேரக்டர்களே வருகிறார்கள். அதிலும் கோகுல் ஆனந்த் அவரது நண்பன் ராஜேஷ்பாலச்சந்திரன் படத்தின் இரு பில்லர்கள்.

இவர்கள் இருவருமே படத்தை தாங்கி நிற்கின்றனர். கிடைத்த கேப்பில் எல்லாம் நண்பர் காமெடி செய்து படத்தை கலகலப்பாக்குகிறார்.

இருவரும் அடிக்கும் லூட்டிதான் படத்தின் பலம். இவருடன் தயாரிப்பாளராக வரும் சிவ் கேஷவ் ஸ்டைலிஷ்ஷாக ரசிக்க வைக்கிறார்.

ஆனால் உச்சக்கட்ட அந்த பின்னாடி துப்பாக்கி வைக்கும் காமெடி ரொம்ப ஓவர்.

கேன்சர் நோயாளி ரோஷினி சோகமாய் வந்து அனுதாப பட வைக்கிறார்.

செக்மேட் வில்லன் மற்றும் அவரது கேங் செய்யும் அட்டகாசங்கள் சூப்பர். பணம் தரலேன்னா உன் காதலியை கொன்னுடுவேன் என்று சொன்னபின் கொன்னுடு என்ற நாயகன் சொன்னதும், பணம் தரலேன்னா கொல்ல மாட்டேன் என காமெடி செய்து ரசிக்க வைக்கிறது.

ஏன்டீ லவ் யூ ஒரு வார்த்தை ஹீரோகிட்ட சொன்னா என்ன? எனக்கு பணம் கிடைக்கும் என நாயகியிடம் கெஞ்சுவது நச்.

chennai to singapore stills

தொழில்நுட்ப கலைஞர்கள்..

சிங்கப்பூர் அழகை இரவிலும் பகலிலும் நன்றாக படம் பிடித்து அழகு சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து.

படத்தின் டைட்டில் கார்டுகள் அதனை உருவாக்கிய விதம் அருமை.

சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஒரு இளைஞன் அவனை சுற்றியுள்ள கதை என ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர் அப்பாஸ் அக்பர்.

ஆனால் படத்தில் சிலரை மட்டுமே காட்டுவது போரடிக்கிறது. பாஸ்போர்ட் இல்லாமல் ஒருவர் வெளிநாட்டில் வாழும்போது எப்படி தப்பு மேல் தப்பு செய்வார்? போலீஸ் எங்கே? என்ற லாஜிக் எல்லாம் உதைக்கிறது.

மற்றபடி தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது.

அவரது படம் என்பதால் கூடுதல் கவனம் எடுத்துள்ளாரோ என்னவோ? பாடலும் அதை படமாக்கப்பட்ட இடங்களும் ரசிக்க வைக்கிறது.

`சென்னை 2 சிங்கப்பூர்’… ஜாலி டூர் போலாம்

பிரம்மா.காம் விமர்சனம்

பிரம்மா.காம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : நகுல், ஆஷ்னா சவேரி, நீது சந்திரா, மொட்டை ராஜேந்திரன், சித்தார்த் விபின், கே.பாக்யராஜ், கௌசல்யா, ஜெகன், சோனா மற்றும் பலர்
இயக்கம் : பி.எஸ். விஜயகுமார்
இசை : சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு: தீபக்குமார் பதி
எடிட்டிங்: சபு ஜோசப்
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே. அஹ்மது
தயாரிப்பு: கணேஷ் ட்ரீம் பேக்டரி

bramma

கதைக்களம்…

அட்வர்டைசிங் நிறுவனத்தில் டைரக்டராக வேலை பார்க்கிறார் நகுல். இவரின் அண்ணன் முறையான சித்தார்த் விபின் அதே நிறுவனத்தில் சி.இ.ஓ-வாக இருக்கிறார்.

தன்னை பார்த்து தேர்வுகளில் காப்பியடித்த இவர் எப்படி? நம்மை விட உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார் என்பதால் கவலை கொள்கிறார் நகுல்.

இந்நிலையில் சிஇஓ.வை சந்திக்காமல் அடிக்கடி தன்னை சந்திக்க வரும் மாடல் அழகி ஆஷ்னா மீது காதல் கொள்கிறார் நகுல்.

ஒரு பிறந்தநாள் அன்று கோயிலுக்கு செல்லும் நகுல்.. நீ என்ன கடவுள்? நன்றாக படித்த நான்? இப்படி இருக்கிறேன். நாங்கள் ஆசைப்பட்டதை நீ கொடுக்க மாட்டேன் என்கிறாய்? நீ ஆசைப்பட்டு கொடுப்பதை நாங்கள் இஷ்டமில்லாமல் அனுபவிக்க வேண்டுமா? என பல கேள்விகள் கேட்கிறாய்.

அன்றுமுதல் இவருக்கு பேஸ்புக்கில் கடவுள் பிரம்மா பெயரில் ஒரு இன்வைட் வருகிறது. அதை ஏற்றுக் கொண்டது முதல் இவர் திடீரென சிஇஓ ஆகிவிடுகிறார்.

இதனால் பல ஆடம்பர வசதிகள் வந்துவிடுகின்றன. இப்போது இவரது இடத்தில் வந்துவிடுகிறார் சித்தார்த், அதாவது சித்தார்த் விபின் டைரக்டர் ஆகிறார்.

இவர்களை தவிர மற்றவை எல்லாம் பழையபடியே நடக்கிறது. அதாவது ஆஷ்னா டைரக்டர் பொறுப்பில் இருக்கும் சித்தார்த்துடன் நெருக்கமாகுகிறார்.

இதனால் கடுப்பாகும் நகுல் மீண்டும் பழைய வாழ்க்கையை கடவுள் பிரம்மாவிடம் கேட்கிறார்.

அதன்பின்னர் பிரம்மாவுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தமே மீதிக்கதை.

bramma stills

கேரக்டர்கள்…

காதலிக்காக ஏங்கும் கேரக்டரில் நகுல் ரசிக்க வைக்கிறார். நிறைய காட்சிகளில் சுறுசுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும், அதுவே மிகைப்பட்ட நடிப்பாக தெரிகிறது.

சித்தார்த் விபின் அவருக்கே உரித்தான பாணியில் நடித்திருக்கிறார்.

அழகான இரண்டு நாயகிகள் ஆஷ்னா சவேரி மற்றும் நீது சந்திரா. ஆனால் இருவருக்குமே சரியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

ஒய்யாராமாக அடிக்கடி கேட் வாக் செய்து வருகிறார் ஆஷ்னா.

மொட்டை ராஜேந்திரன் காமெடி வில்லனாக அமர்க்களப்படுத்தியுள்ளார்.

ஜெகன் இருந்தும் கடுகளவு கூட காமெடியில்லை. சோனா, பாக்யராஜ், கௌசல்யா ஆகியோரும் உண்டு. ஆனால் அவர்களை சரியாக டைரக்டர் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.

bramma dot com stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே. இவருக்கென்று அறிமுக காட்சியில் பின்னணி இசையும் சேர்த்துள்ளார். தீபக்குமார் பதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

ஒரு நல்ல கற்பனை கதையை கொடுத்திருந்தாலும், அதை நல்ல கேரக்டர்கள் கொண்டு சென்றிருக்கலாம். தொய்வான திரைக்கதையால் சலிப்பு தட்டுகிறது.

இறுதியாக யாருக்கு என்ன செய்யனும்? என்பது கடவுளுக்கு தெரியும் என்பது போல முடித்து சபாஷ் பெறுகிறார் டைரக்டர் பி.எஸ். விஜயகுமார்.

‘பிரம்மா.காம்’… கற்பனை கடவுள்

பள்ளிப் பருவத்திலே விமர்சனம்

பள்ளிப் பருவத்திலே விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : நந்தன்ராம், வெண்பா, கேஎஸ் ரவிக்குமார், ஆர்கே.சுரேஷ், பொன்வண்ணன், ஊர்வசி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, ஈ.ராமதாஸ், சுஜாதா சிவகுமார் மற்றும் பலர்
இயக்கம் : வாசுதேவ் பாஸ்கர்
இசை : விஜய் நாராயணன்
ஒளிப்பதிவு: வினோத் குமார்
எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ்
பி.ஆர்.ஓ. : மௌனம் ரவி
தயாரிப்பு: வேலு

கதைக்களம்…

படத்தின் தலைப்பிலே கதை புரிந்திருக்கும். பள்ளிப் பருவத்தில் எழும் காதல். அதன்பின் எழும் பிரச்சினைகளே படத்தின் கதை.

நாயகன் நந்தன்ராம், நாயகி வெண்பாவின் காதல் கைகூடியதா? என்ன ஆனது? என்பதே க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

நாயகி வெண்பாவுக்கு இது 2வது படம். ஆனால் அறிமுகம் என்று டைட்டில் கார்டு வருகிறது. இப்படம் தாமதமாக வந்துவிட்டது.

படத்தின் ஆரம்ப காட்சிகளில் கண்களாலும் உதட்டு அசைவிலும் பேசிவிடுகிறார் வெண்பா. க்ளைமாக்ஸ் காட்சியில் எல்லாம் சேர்த்து வெளுத்து கட்டிவிடுகிறார். நல்ல மெச்சூரிட்டியான நடிப்பு.

நாயகன் நந்தன்ராம்க்கு இது முதல் படம். இசையமைப்பாளர் சிற்பியின் மகன் இவர்.

பள்ளி பையன்களுக்கே உரித்தான இளமை துள்ளல் மிடுக்குடன் வருகிறார். அதே சமயம் காதலிக்காக வழிவதும் ரசிக்க வைக்கிறது.

இவர்களுடன் கேஎஸ் ரவிக்குமார், ஆர்கே.சுரேஷ், பொன்வண்ணன், ஊர்வசி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, ஈ.ராமதாஸ், சுஜாதா சிவகுமார் என நிறைய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இவர்கள் அனைவரும் தங்கள் அனுபவ நடிப்பால் மிளிர்கின்றனர். ஆனால் கஞ்சா கருப்பு, தம்பி ராமையாவுக்கு காமெடி காட்சிகளை கொடுத்து ரசிக்க வைத்திருக்கலாம்.

நந்தன் ராமின் 2 நண்பர்களும் யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

 

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஜய் நாராயணன் இசையில் அனைத்து பாடல்களும் அருமை. கிராமத்து மண் வாசனையுடன் ரசிக்க வைக்கிறார்.
வினோத் குமாரின் ஒளிப்பதிவில் வெண்பா மிக அழகாக இருக்கிறார்.

வழக்கமான காதல், இதனால் ஏற்படும் மோதல் என 90% கதையை கொடுத்துவிட்டு இறுதியில் வித்தியாசப்படுத்தியுள்ளார் டைரக்டர் வாசுதேவ் பாஸ்கர்.

பார்க், தியேட்டர் போவது போல எங்கள் காதல் நாய் காதல் இல்லை என்கிறார் ஹீரோ. அதுசரி ஆனால் இவர்களின் காதல் எப்படி உயர்ந்துவிட்டது என்பதற்கு காரணம் இல்லை.

மாங்காய் சப்புவது, தயிர்சாதம் சாப்பிடுவது, காதலிக்காக தேர்வு எழுதுவது ஒன்றும் பெரிய காரியமல்லவே.

காதலனை ஏமாற்றிவிட்டு செல்லும் காதல் எப்படி உயர்ந்த காதல் ஆகும்? அதுவும் காதலன் போட்டோவை வெண்பா கணவன் கும்பிடுவது எப்படி? என்ற கேள்விக்கு பதில் இல்லையே..??

காதலன் அம்மாவை நாயகி பாதுகாப்பது மூலம் தேர்ச்சி பெறுகிறார் இயக்குனர்.

பள்ளிப் பருவத்திலே… உதிர்ந்த நினைவுகள்

அருவி விமர்சனம்

அருவி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அதிதி பாலன், லட்சுமி கோபால்சாமி, மதன்குமார் தட்சினாமூர்த்தி, ஸ்வேதா சேகர், திருநங்கை அஞ்சலி வரதன்
இயக்கம் : அருண்பிரபு புருஷோத்தமன்
இசை : பிந்து மாலினி, வேதநாத் பரத்வாஜ்
ஒளிப்பதிவு: ஷேல்லி கார்லிஸ்ட்
எடிட்டிங்: ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டா
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: டீரீம் வாரியர்ஸ் (எஸ்ஆர் பிரபு)

Aruvi movie stills (13)

கதைக்களம்…

அருவி என்பது இப்பட நாயகியின் பெயர். அழகான குடும்பம். இவருக்கு ஒரு தம்பி. அம்மா அப்பா. அழகான கிராமத்தில் இருக்கும் இவர்கள் அப்பாவின் பணி காரணமாக சென்னைக்கு செல்கின்றனர்.

நகரத்து வாழ்க்கை பிடிக்காத அருவி, வேறுவழியின்றி வாழ்க்கிறாள். தோழியின் தவறான பழக்கத்தால் இவரது வாழ்க்கை பயணம் மாறுகிறது.

ஒரு சூழ்நிலையில் உடலால் கெட்டு போகிறாள். (அதை சொன்னால் படத்தின் ட்விஸ்ட் போய்விடும்)

இதனால் தன் குடும்பத்தினாரால் வெளியேற்றப்படுகிறார். அதன்பின்னர் தோழி வீட்டில் தங்குகிறாள். அங்கிருந்து வெளியேறும் இவருக்கு ஒரு திருநங்கையின் நட்பு கிடைக்கிறது.

அதன்பின் ஒரு டிவி ரியால்ட்டி சொல்வதெல்லாம் சத்தியம் என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறாள்.

அப்போது தன்னுடைய இந்த நிலைமைக்கு 3 ஆண்கள் காரணம் என்கிறாள். அதன்பின்னர் படத்தில் நடைபெறும் சம்பவங்களும், அதன் விளைவுகளுமே எதிர்பாராத க்ளைமாக்ஸ்.

Aruvi movie stills

கேரக்டர்கள்…

எத்தனை பேர் நடித்தாலும் மற்ற கேரக்டர்களை தன் அருவி கேரக்டரால் மறைத்துவிடுகிறார் அதிதிபாலன். அருவிக்கு கேரக்டருக்கு இவர் ஒரு ஜெராக்ஸ்.

புதுமுக நாயகி என்று படக்குழு சொன்னாலும் நம்ப மறுக்கிறது நம் உள்ளம். க்ளைமாக்ஸ் காட்சி அந்த வீடியோ நம் மனதை கலங்கடிக்கும். இவர் ஒரு பொம்பள சீயான் என்று சொல்லுமளவுக்கு உடலை வருத்தி நடித்திருக்கிறார்.

டிவி ஷோ டைரக்டராக வரும் கவிதா பாரதி கலக்கல். ஷோ நடத்திக் கொண்டிருக்கும் போதே அதிதிக்கு ரூட் விடுவதும் வழிவதும் டைரக்டர் டச்.

உதவி இயக்குனராக வரும் அந்த இளைஞர் பிரதீப் ஆண்டனி செம. பெரிய டைரக்டர்களிடம் அவர்கள் படும் அவஸ்தையை சரியாக செய்திருக்கிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி கோபால்சாமி அவர்கள் நடிகைக்கு உரிய நளினம், ஆடம்பரம் என அசத்தல்.

முக்கியமாக ரோலிலிலி…ங்ங் சார் என்று அடிக்கடி சொல்லும் அந்த கேமராமேன் அனைவரையும் கவர்வார்.

சுபாஷ் ஆக வரும் சின்ன பையன், செக்யூரிட்டி என அனைவரும் கைத்தட்டல்களை அள்ளுகின்றனர்.
இவருடன் நடித்த பெரும்பாலானோர் புதுமுகங்களே.

திருநங்கை கேரக்டர் நிறைய படத்தில் வந்தாலும், இதில் ரசிக்கும்படி செய்திருக்கிறார் அஞ்சலி வரதன். எமிலி கேரக்டருக்கு இவரால் ஏற்றம் கிடைத்துள்ளது.

Aruvi movie stills (20)

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பிந்துமாலினி – வேதாந்த் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் அழகு சேர்க்கிறது. படத்தின் கதையுடன் ஒன்றிப் போவதால் ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் படத்திற்கு பக்கபலம். முக்கியமாக கிராமத்து காட்சிகள் அருவி காட்சிகள் அந்த அழகு மழலை செல்வங்கள் நிச்சயம் ரசிக்க வைக்கும்.

இப்படி ஒரு கதையை எடுக்க துணிந்த இயக்குனரையும் தயாரிப்பாளரையும் பாராட்டியே ஆகவேண்டும்.

இப்படியாக நிறைய ப்ளஸ்கள் சொன்னாலும் படத்தின் முக்கியமான அந்த நோய் எப்படி வந்தது? அப்படி வருவது சாத்தியமா? என்ற கேள்வி பலரின் மனதில் எழுவது நிச்சயம். அதை நல்ல மருத்துவர்களின் ஆலோசனைப்படி செய்திருக்கலாம்.

இந்த அருவி பெண்ணை சமூகம் புரிந்துக் கொள்ளவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். அதற்காக தன்னுடைய சந்தோஷத்திற்காக மற்றவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பணிய வைப்பது எந்த விதத்தில் நியாயம்?

அந்த வீடியோ பதிவு வந்தபின்பே அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். அதன்பின்னர்தான் அவர்களுக்கு அனுதாபம் வந்ததா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

காவல்துறைக்கு இது எப்படி தெரியாமல் போனது? என்ற பல கேள்விகள் எழுகிறது. சில லாஜிக்குகளை மறந்துவிட்டு நிச்சயம் பார்க்கலாம்.

அருவி… நிச்சயம் நனையலாம்

மாயவன் விமர்சனம்

மாயவன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சந்தீப் கிஷன், லாவண்யா, டேனியல் பாலாஜி, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், அமரேந்திரன், மைம் கோபி, பக்ஸ் பகவதி மற்றும் பலர்
இயக்கம் : சிவி. குமார் (வசனம் நலன்குமாரசாமி)
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்
எடிட்டிங்: லியோ ஜான்பால்
கலை: கோபி ஆனந்த்
பி.ஆர்.ஓ. : நிகில்
தயாரிப்பு: திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்

கதைக்களம்…

சந்தீப் கிஷன் ஒரு போலீஸ். படத்தின் ஆரம்ப காட்சியில் குற்றவாளி ஒருவனை துரத்துகிறார். அப்போது ஒரு திறந்திருக்கும் வீட்டில் ஒருவர் அவரது மனைவியை கொலை செய்கிறார்.

இதனால் அதிர்ச்சியைடையும் சந்தீப், அவரை பிடிக்க இருவருக்கும் சண்டை நடக்க, இறுதியில் கொலையாளியை கொன்று விடுகிறார் சந்தீப்.

அவர் அடித்த அடியில் இவருக்கு மனநிலை சரியில்லாமல் போக, வேலையில் சேரக்கூடாது என்கிறார் மருத்துவர்.

ஆனால் மெடிக்கல் ரிப்போர்ட்டை மாற்றி பணியில் சேர்கிறார் சந்தீப்.

இந்நிலையில் மற்ற சில கொலைகள் அதே பாணியில் அதுபோன்ற கொலையாளி நடத்துகிறான்.

இறந்த கொலையாளி போல மற்ற கொலைகளும் நடப்பது எப்படி சாத்தியம்? அவன் சாகவில்லையா? என குழம்புகிறார் சந்தீப்.

அந்த கொலையாளியை இயக்குவது யார்? என்று மாயவனை தேடி அலைகிறார்.

இறுதியில் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நல்ல உயரம், உடல்வாகு என அசத்தலாக வருகிறார் சந்தீப். காதல் காட்சிகள் கைகொடுக்கா விட்டாலும் ஆக்சன் காட்சிகள் கை கொடுத்துவிடுகிறது.

ஆனால் முறுக்கு மீசையை ஒட்டி வைத்து நடித்துவிட்டார். அதிலும் க்ளோசப் காட்சிகள் அசிங்கமாக காட்டி விடுகிறது. டைரக்டர் சார் இப்படி பண்ணலாமா?

டேனியல் பாலாஜிக்கு இதுபோன்ற படம் என்றால் அல்வா சாப்பிடுவது போல. மனிதர் அநியாயத்திற்கு மிரட்டியிருக்கிறார்.

கடைசியில ஜேக்கி ஷெராப் இராணுவ அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு பலம்.

மற்றொரு போலீஸ் ஆக பக்ஸ் பகவதி. நன்றாக நடித்துள்ளார்.

இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், அமரேந்திரன், மைம் கோபி ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பின்னணி இசையில் ஜிப்ரான் செம மிரட்டல். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு. கிராபிக்ஸ் காட்சிகள், அந்த ஆய்வு கூடம் என நன்றாக காட்டியுள்ளனர். கலை இயக்குனருக்கும் பாராட்டுக்கள்.

படத்தின் இடைவேளை வரை என்ன மாதிரியான படம்? யார் மாயவன்? என த்ரில்லாக படத்தை கொண்டு சென்றிருக்கிறார் டைரக்டர் சி.வி. குமார்.

மனிதன் மூளையை காப்பி எடுத்து அதை மற்றவர்கள் மூளையில் ஏற்றி, அவரை சாகாவரம் பெற்று வாழ வைப்பது புதுசு.

ஆனால் இது எல்லா தரப்பு மக்களையும் சென்றடையுமா? என்பதுதான் புரியவில்லை. இடியாப்ப சிக்கல் கதையை சுவையாக கொடுத்திருக்கிறார்.


மாயவன்… மாயஜாலக்காரன்

ரிச்சி விமர்சனம்

ரிச்சி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : நிவின் பாலி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி பிரியா சந்திரமவுலி, பிரகாஷ் ராஜ், நட்டி என்ற நட்ராஜ், ஜிகே. ரெட்டி மற்றும் பலர்.
இயக்கம் : கௌதம் ராமச்சந்திரன்
இசை : அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு: பாண்டிகுமார்
எடிட்டிங்: அதுல்விஜய்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: காஸ்ட் அண்ட் க்குரூ மற்றும் எஸ்.சினிமா கம்பெனி

கதைக்களம்…

சிறுவயதில் தான் செய்யாத குற்றத்திற்காக நிவின்பாலி சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு செல்கிறார்.

அங்கு அவர் நன்றாக படித்தாலும் வெளியே வந்து தாதா (விஷாலின் அப்பா ஜிகே.ரெட்டி) உடன் இணைகிறார்.

ஏன்டா இப்படி இருக்கிற என்று கேட்டால்… சில பேர் படிச்சிட்டு என்ஜினியரா இருக்காங்க. டாக்டராக இருக்காங்க. நான் ரவுடியா இருக்கேன் என்கிறார்.

இந்த ரவுடியின் வாழ்க்கையை மற்றும் அவர் செய்யும் கொலைகளை மையப்படுத்தி ஒரு தொடர் எழுத ஆரம்பிக்கிறார் ரிப்போர்ட்டரான ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இதனால் ரிச்சி சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து அவரின் கதை கேட்கிறார்.

அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் கதைதான் இந்த ரிச்சி.

richie hit

கேரக்டர்கள்…

நிவின்பாலியை எங்கும் நாம் ரவுடியாக பார்க்க முடியவில்லை. அழகாக நல்லவனாகவே தெரிகிறார். படத்தில் ஆடுகளம் முருகதாஸ் சொல்வதுபோல் செம ஸ்டைலிஷ் ஆக வருகிறார்.

தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். (அடிபொலி) சபாஷ் சேட்டா. ஆனால் இவர் கெட்ட வார்த்தைகள் பேசும்போது மொழி தெரியாதவர் பேசுவது போல் அழகாக உள்ளது.

இவரைத் தவிர படத்தில் முக்கிய கேரக்டர்களாக பிரகாஷ்ராஜ், நட்டி, ஷ்ரத்தாஸ்ரீநாத், லட்சுமி, ஆடுகளம் முருகதாஸ், ராஜ்பரத் என நிறைய பேர் வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு இன்னும் சில காட்சிகளை கொடுத்து சிறப்பாக்கி இருக்கலாம்.

richie poster

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இடைவேளை வரை படத்தின் கதையோட்டம் எதை நோக்கி செல்கிறது என்பதை புரிந்துக் கொள்வது கஷ்டம்தான்.

படத்திற்கு அஜனீஷ் லோகேஷின் பின்னணி இசை அசத்தல். ரிச்சி அறிமுக காட்சி முதல் அவர் செய்யும் ரவுடித்தனம் வரை என அருமையான இசையை கொடுத்திருக்கிறார்.

ஆனால் இவரது இசைக்கு படத்தின் வேகம் போதவில்லை. திரைக்கதை ஆமை வேகத்தில் நகர்கிறது.

ஒளிப்பதிவாளர் பாண்டிகுமார் மற்றும் எடிட்டர் அதுல்விஜய் ஆகியோர் தங்கள் பணிகளில் நிறைவு.

ஆக்சன், கடல் காட்சிகள் என நிறைவாக கொடுத்திருக்கிறார்கள்.

பலவீனமான திரைக்கதையால் ரிச்சி ரசிகர்களிடம் ரீச்சாகுமா? என்பது சந்தேகம்தான்.

ரிச்சி… ரீச் லெவல் குறைவு

More Articles
Follows