Avengers Endgame Review அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் விமர்சனம்

Avengers Endgame Review அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – ராபர்ட் டவ்னி ஜேஆர், ஸ்கார்லெட் ஜோஹன்சன்
இசை – அலன் சில்வஸ்ட்ரி
ஒளிப்பதிவு – டிரெண்ட் ஒப்பலோச்
இயக்குனர் – ஆண்டனிஜோய் ரூசோ
தயாரிப்பு – மார்வெல் ஸ்டூடியோஸ்
தமிழ் வசனம் – ஏஆர் முருகதாஸ்
தமிழ் டப்பிங் பேசியவர்கள் – விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா
மார்வெல் ஆன்த்ம் – ஏஆர். ரஹ்மான்

கதைக்களம்….

மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் தனது சூப்பர் ஹீரோக்களை ஒட்டு மொத்தமாக நடிக்க வைத்து தயாரித்துள்ள படம் தான் அவெஞ்சர்ஸ் என்ட் கேம்.

இதுதான் இதன் பாகம் என்பதால் எண்ட் கேம் என சேர்த்து வெளியிட்டுள்ளனர்.

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்ஸ் பாகத்தின் தொடர்ச்சியாக இது வெளியாகியுள்ளது.

கடந்த பாகத்தில் அனைத்து நவரத்தின கற்களையும் தானோஸ் கைப்பற்றி இருப்பார்.

அதன் மூலம் அதாவது அந்த சக்தியின் மூலம் உலகில் உள்ள பாதி மக்களை அழித்து விடுவார். இது அவெஞ்சர்ஸ் குடும்பங்களையும் ஒட்டு மொத்தமாக பாதிக்கிறது.

முந்தைய படத்தில் வில்லன் தானோசால் கடுமையாக தாக்கப்பட்டிருப்பார் அயர்ன்மேன் ராபர்ட் டோனி.

இதன் தொடர்ச்சியாகதான் இந்த படம் தொடங்குகிறது.

அவெஞ்சர்ஸ் அனைவரும் சோகத்தில் இருக்க கேப்டன் மார்வல் விண்வெளியில் இருந்து ஐயர்ன் மேனை பூமிக்கு அழைத்து வருகிறார்.

உயிர்பிழைக்கும் அயர்ன்மேன் குடும்பத்துடன் செட்டிலாக வேண்டும் என நினைக்கிறார்.

ஆனால் அழிந்த உலகை மீட்க வேண்டும் என கேப்டன் அமெரிக்காவும், பிளாக் விடோவும் நினைக்கிறார்கள்.

இதற்காக ஆண்ட்மேன், தோர், ஹல்க் ஆகியோரை மீண்டும் அழைக்கின்றனர். பின்னர் ஒரு வழியாக அயர்ன்மேனும் வந்து இணைகிறார்.

தானோஸிடம் இருக்கும் நவரத்தின கற்களை வைத்து இறந்த அனைவரையும் மீட்க நினைக்கிறார்கள் அவெஞ்சர்ஸ்.

அதன் படி 5 வருடங்களுக்கு முன் செல்ல டைம் மிஷினை பயன்படுத்துகின்றனர். அதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.

பின்னர் தானோஸ் மகள் மூலம் தானோஸ் இருக்கும் வேற்று கிரகத்தை கண்டுபிடிக்கிறார்கள்.

அப்போதுதான் தானோஸிடம் நவரத்தின கற்கள் இல்லாதது இவர்கள் தெரிய வருகிறது.

அந்த கற்களை அழித்து விட்டதாக தானோஸ் கூறுவதை கேட்டு திகைத்து நிற்கிறார்கள்.

பின்னர் அவர்கள் எப்படி அந்த காலக்கட்டத்திற்கு சென்றார்கள்? இறந்தவர்கள் எப்படி மீட்டார்கள்? என்பதே மீதிக்கதை.

படம் எப்படி..?

படம் 181 நிமிடங்கள். அதாவது 3 மணி நேரம்.
பொதுவாக ஹாலிவுட் படங்கள் என்றால் முதலில் மெதுவாக நகரும். பின்னர் பாஸ்ட்டாக இருக்கும். இது இரண்டும் கலந்த வண்ணம் உள்ளது.

ஒரேடியாக சூப்பர் ஹீரோக்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் இடைவேளையே வந்துவிடுகிறது.

ஸ்கார்லெட் ஜான்சனுக்கு ஆண்ட்ரியாவின் குரல் கச்சிதம். ஆனால் அயர்ன்மேனுக்கு விஜய்சேதுபதியின் வாய்ஸ் ஒட்டவில்லை. என்னமோ விஜய்சேதுபதி படத்தை பார்ப்பது போல உள்ளது.

ஆனால் இறுதியில் ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட், பிரம்மாண்டம் என அனைத்தையும் கலந்துக் கொடுத்துள்ளனர்

குறிப்பாக ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, கேப்டன் மார்வல், தோர், ஹல்க் உள்ளிட்டவர்கள் சூப்பர்.

தோர் காமெடியிலும் கலக்கியிருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியின் போது இறந்துபோன சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் மீண்டு வந்து சண்டையிடும் போது தியேட்டரில் சத்தம் காதை பிளக்கிறது. அதிலும் ஒவ்வொருவராக வரும்போது அனல் பறக்கிறது.

ஆனால் இதற்கு முந்தைய பாகங்களை காட்டிலும் இந்த அவெஞ்சர்ஸ் விருந்து போதவில்லை என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் க்ளைமாக்ஸில் ஐயன்மேன் இறப்பது சரியாக இல்லை என்பதும் பலரது கருத்தாக உள்ளது. அதேபோல் தானோஸும் அழிக்கப்பட்டுவிடுகிறார்.

ஆக ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ 3டியில் கிராபிக்ஸ் ட்ரீட்

வாசமில்லா மலரிது… வெள்ளைப் பூக்கள் விமர்சனம் (2.5/5)

வாசமில்லா மலரிது… வெள்ளைப் பூக்கள் விமர்சனம் (2.5/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விவேக் சார்லி, பூஜா தேவரியா, தேவ், பைஜி ஹென்டர்சன்
இயக்கம் : விவேக் இளங்கோவன்
இசை : ராம்கோபால் கிருஷ்ணராஜீ
தயாரிப்பு : திஹா சேகரன், வருண் குமார், அஜய் சம்பத்

கதைக்களம்…

சின்ன கலைவாணர் விவேக் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்துள்ள படம் இது. அவரின் நிஜ வயதுக்கு ஏற்ற கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.

இவர் தமிழக காவல்துறையில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இவரது ஒரே மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். இவரின் அனுமதியில்லாமல் அங்குள்ள ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்.

பின்னர் மனம் கேட்காமல் உயரதிகாரி சொன்னதற்காக அமெரிக்கா சென்று மகனை காண செல்கிறார்.

மகனின் குடும்ப தோழியான பூஜா தேவரியா ஒரு தமிழச்சிதான். அவரின் தந்தை சார்லி. அப்போது அவருடன் பழக்கம் ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் இவரது குடியிருப்புக்கு அருகே சில கடத்தல் சம்பவங்கள் நடக்கிறது. பக்கத்து வீட்டுப் பெண் மோனா, பின்னர் கார்லோஸ் என்ற பள்ளிச் சிறுவன் கடத்தப்படுகிறார்கள்.

அமெரிக்கா போலீஸ் இருந்தாலும் இவர் ஹீரோவாச்சே துப்பறிய முற்ப்படுகிறார்.

எங்கெங்கோ சென்று கண்டுபிடிக்க முயல்கிறார். அப்போதுதான் இவரது மகனும் காணாமல் போகிறார்.

இதை எல்லாம் யார் செய்கிறார்கள்? எதற்கு செய்கிறார்கள்? என்பதை இவரே தனி ஆளாக நின்று கண்டுபிடிக்கிறார்.. அதுதான் மீதிக்கதை.

ஒரு குற்றம் நடந்தால் அது எப்படி? ஏன்? என்பதைக் கண்டுபிடித்தால் அது யாரால் நடந்தது என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்ற வசனங்களை அடிக்கடி சொல்லி சொல்லி சார்லியுடன் கண்டு பிடித்துவிடுகிறார்.

சில இடங்களில் இவரது பணி ஹைலைட்டாக இருந்தாலும் பல இடங்களில் காமெடியாக இருக்கிறது.

நவீன டெக்னாலஜியை கையில் வைத்திருக்கும் போலீசே கண்டுபுடிக்காத இடங்களை எல்லாம் இவர் ஒரு ஆள் கண்டு பிடிக்கிறார்.

அதுவும் இவராக ஒரு கற்பனை செய்து இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்பதாக யூகித்து சார்லியுடன் செல்கிறார்.

தேவ். பூஜா தேவரியா, விவேக் மருமகள் ஆகியோர் நல்ல தேர்வு.

அதுபோல் சார்லி நடிப்பும் ரசிக்க வைக்கிறது.

பின்னணி இசை நன்றாக உள்ளது. காட்சிகளும் காட்சி அமைப்புகளும் ஓகே.

ஆனால் முக்கியமான கடத்தல்கள் நடக்கும் இடத்தில் மட்டும் சிசிடிவி கேமரா இல்லை என்பது நம்பும்படியாக இல்லை.

அமெரிக்கா போலீஸ் இருந்தும் இவர் எல்லாம் இடத்திலும் செல்வது எல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்.

இயக்குனர் விவேக் இளங்கோவன் ஒரு குழந்தையை அடிக்கடி காட்டுகிறார்.

ஆனால் அது பின்னர்தான் ப்ளாஷ்பேக் காட்சி என்பதே தெரிகிறது. அப்படி என்றால் காட்சிகளை வேறுபடுத்தி காட்டியிருக்க வேண்டாமா? 15 வருடங்களுக்கு முன்பு போல் உள்ள காட்சியாக அது இல்லையே?

ஆக ‘வெள்ளைப்பூக்கள்’ வாசமில்லா மலரிது

Vellai Pookal review

முடிவில்லாத புதையல்.. ழகரம் விமர்சனம்

முடிவில்லாத புதையல்.. ழகரம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: நந்தா, ஈடன் குரைக்கோஸ் மற்றும் பலர்.
இசை – தரண்குமார்
ஒளிப்பதிவு – பரத்வாஜ், ஜோ, பிரின்ஸ்தாஸ்
இயக்கம் – கிரிஷ்
பிஆர்ஓ – சக்தி சரவணன்
தயாரிப்பு செலவு – ரூ. 10 லட்சம்

நாயகன் நந்தாவும், நாயகி ஈடன் குரைக்கோசும் லவ்வர்ஸ்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளரான நந்தாவின் தாத்தா ஒரு கட்டத்தில் இறந்துவிடுகிறார்.

சில தினங்களுக்கு பின் தாத்தாவின் நண்பர் ஒருவர் நந்தாவை சந்தித்து, தாத்தாவின் மரணம் கொலை என்றும், அவர் தனது தொல்பொருள் ஆராய்ச்சியில் புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாக கூறுகிறார். அவர் ஏதாவது ஒரு பார்சல் கொடுத்தாரா? என்று கேட்கிறார்.

அதில் அந்த இடத்திற்கு செல்வதற்கும் புதையலை அடைவதற்காக விஷயங்களை வைத்துள்ளதாக கூறுகிறார்.

நந்தா புறப்படும் வேளையில் அவரை ஒரு கும்பல் மிரட்டுகிறது. புதையலை தங்களிடம் கொடுக்கவில்லையென்றால் குடும்பத்தை கொன்றுவிடுவதாகவும் மிரட்டுகிறது.
எனவே நந்தா என்ன செய்தார்? அந்த புதையல் என்ன ஆனது? என்பதே மர்மம் நிறைந்த மீதிக்கதை.

அலட்டல் இல்லாத நடிப்பில் நந்தா நடித்துள்ளார். ஆனால் கொஞ்சம் முயற்சித்து மாறுபட்ட முகபாவனைகளை கொடுத்திருக்கலாம். பிடிக்காமல் செய்த கேரக்டர் போல் உள்ளது.

நாயகி ஈடன் குரைக்கோஸ் அழகாக வந்து செல்கிறார். விஷ்ணு பரத், மீனேஷ் கிருஷ்ணா, சந்திர மோகன், சுபாஷ் கண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கச்சிதம்.
புதையலை நெருங்கிய பின்னர் தான் கொஞ்சம் கதை சூடு பிடிக்றிது. தமிழ் மொழியின் பெருமையை அழகாக சொல்லியுள்ளனர்.

முழுப்படத்தையும் 10 லட்சம் செலவில் எடுத்துள்ளதை பாராட்டலாம். டைட்டில் கார்டு முதல் இறுதியாக காட்டப்பட்ட அந்த அருவி புதையல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

தரண்குமாரின் பின்னணி இசையும் பரத்வாஜ், ஜோ, பிரின்ஸ்தாஸ் ஒளிப்பதிவும் படத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன.

மீதிக்கதை 2ஆம் பாகத்தில் என கதையை முடித்துள்ளார் டைரக்டர் கிரிஷ்.

`ழகரம்’… முடிவில்லாத புதையல்

ரசூல் ராக்ஸ்… ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

ரசூல் ராக்ஸ்… ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி பல படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

அண்மையில் வெளியான 2.0 படத்தில் இவரது பணி அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவர் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார்.

இவரின் லட்சிய கனவு கேரளாவின் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழாவை நேரிடையாக ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். அதை ஒரு படமாக எடுத்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என்பதையும் அதில் உள்ள சிரமங்களையும் அழகாக படமாக்கியுள்ளார்.

நண்பர் ஒருவர் மூலமாக பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்து அதை ஆவண படமாக உருவாக்க நினைக்கிறார்.

அப்போது நண்பருக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், அந்த ஆவண படம் தயாரிப்பது கைவிடப்படுகிறது.

ஆனால் கண் பார்வை இல்லாத சிலர் இவரை சந்தித்து உங்கள் தயவால் அந்த ஒலியை ரசிக்க நினைத்தோம் என்று தங்கள் வருத்த்தை தெரிவிக்கின்றனர்.

எனவே அவர்களின் ஆசைப்படி தானே அந்த ஒலியை படமாக்க முடிவு செய்கிறார். ஆனால் ஏற்கெனவே போட்ட ஒப்பந்தம் அதற்கு தடையாக உள்ளது.

அதன்பின்னர் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

சவுண்ட் டிசைனராக நமக்கு அறிமுகமான ரசூல் பூக்குட்டி, இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

நல்ல தொழில்நுட்பங்கள் நிறைந்த தியேட்டரில் இப்படத்தை பார்த்தால் மட்டுமே அந்த இசையை ரசிக்க முடியும்.

உலக புகழ்பெற்ற பூரம் திருவிழாவை பார்க்க முடியவில்லை என்றால் இந்த படத்தை பாருங்கள்.

அனியன் சித்ரஷாலா மற்றும் நீல் டி குஹன்னாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஒரு கதை சொல்லட்டுமா’.. ரசூல் ராக்ஸ்

Oru Kadhai Sollatuma aka The Sound Story review

மக்கள் பிரதிநிதிகளுக்கு மரண அடி… உறியடி2 விமர்சனம் 4/5

மக்கள் பிரதிநிதிகளுக்கு மரண அடி… உறியடி2 விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஜய்குமார், விஸ்மயா மற்றும் பலர்.
இசை – கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு – பிரவீன் குமார்
எடிட்டர் – லீனா.எம்
இயக்கம் – விஜயகுமார்
தயாரிப்பு – நடிகர் சூர்யா (2டி எண்டர்டெயின்மெண்ட்)
பிஆர்ஓ – யுவராஜ்

கதைக்களம்….

போபால் விஷவாயு கசிவு சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. மேலும் தமிழ்நாட்டில் நடக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கும் இந்த கதை பொருந்தும்.

இங்கிலாந்து நாட்டில் அனுமதி மறுக்கப்படும் ரசாயன தொழிற்சாலையை, (பூச்சி கொல்லி மருந்து) தமிழ்நாட்டின் செங்கதிர்மலையில் திறக்கிறார் தொழிலதிபர் ராஜ்பிரகாஷ்.

அந்த தொழிற்சாலையில் வேலைக்கு சேர்கிறார்கள் கெமிக்கல் என்ஜினியரிங் படித்த நாயகன் லெனின் மற்றும் அவரது 2 நண்பர்கள்.

அங்கு ஹீரோ விஜயகுமாருக்கு அந்தத் தொழிற்சாலையில் டாக்டராக இருக்கும் நாயகி விஷ்மாயாவுக்கும் காதல் வளர்கிறது.

ஒரு கட்டத்தில் தொழிற்சாலைக்கு ஆடிட்டிங் வருகிறார்கள். அவர்களுக்கு பணம் கொடுத்து சரி செய்துவிடுகிறார் முதலாளி.

ஒருமுறை தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் விஷவாயுவினால் அங்குள்ள மக்கள் செத்து மடிகின்றனர்.
எனவே அந்த கம்பெனிக்கு எதிராக களமிறங்குகிறார் நாயகன்
.
ஆனால் இவரை காரணம் காட்டி தொழிற்சாலை முதலாளியும் ஜாதி அரசியல் கட்சித் தலைவரும் போட்டுத்தள்ள பார்க்கின்றனர். அதன் பின்னர் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நடிப்பு இயக்கம் என வெரைட்டி காட்டியிருக்கிறார் விஜய்குமார். ரொமான்ஸ் காட்சியில் இன்னும் மெச்சூர்ட்டி தேவை.

உறியடி முதல் படத்தில் இருந்த உற்சாகம் இதில் சற்று போதவில்லை இவருக்கு.

ஆனால் மக்களுக்காக போராடும் காட்சியில் உற்சாகப்படுத்துகிறார். தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்த பின்னர் காட்சிகள் சூடு பிடிக்கிறது.

டாக்டராக வரும் நாயகி காதல் காட்சியிலும் மக்களுக்காக போராடும் காட்சியிலும் ரசிக்க வைக்கிறார்.

நண்பர்களாக வருபவர்களும் அரசியல்வாதியாக வரும் நபர்களும் மற்ற ஊழியர்களும் நம்மை கவர்கின்றனர்.

uriyadi 2 stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

96 பட இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மக்கள் மலையாக மரணமடைந்து கிடக்கும் காட்சியில் இவரின் இசை நம் கண்களை கலங்க வைக்கும்.

“அக்னி குஞ்சொன்று ….” , “வா வாபெணணே ….” , “உரிமை காக்க மனமே எழு … ” உள்ளிட்ட பாடல்களும் வரிகளும் கூடுதல் சிறப்பு ! தத்தகிட.. தத்தகிட.. என்ற வரிகள் கொண்ட தீம் மியூசிக் சூப்பர்.

பிரவீன் குமாரின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அத்தனையும் அழகு. மக்களின் பரிதவிப்பு விஷவாயு பாதிப்பு என அழகாக படமாக்கியிருக்கிறார்.

ஒரு காட்சியில் ஒரு குழந்தையை விஷவாயுவில் இருந்து காப்பாற்ற அதன் தாய் பீரோவில் ஒளித்து வைப்பது நம்மை ஏதோ செய்யும்.

கலை இயக்குனர் ஏழுமலை ஆதிகேசவன் நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார்.

உறியடி முதல் படத்தை இயக்கி நடித்த விஜயகுமார் தான் இப்படத்தையும் இயக்கி நடித்திருக்கிறார். ஆனால் அந்த படத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

படத்தின் வசனங்கள் சாட்டையடி. ஆனால் காட்சிகள் மிக மெதுவாக இருப்பதால் கொஞ்சம் போரடிக்கலாம்.

ஆனால் யதார்த்த உண்மைகளை பார்க்கும்போது நாமும் இப்படிதான் அமைதியாக இருக்க வேண்டியுள்ளது என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார்.

மக்களை அடகு வைக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பாடத்தை சொல்லும் படம் இது.

க்ளைமாக்ஸ் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும் என விரும்பும் நபர்கள் இப்படத்தை பார்க்கலாம்.

உறியடி2… மக்கள் பிரதிநிதிகளுக்கு மரண அடி

திருந்தாத ஜென்மங்கள்… குடிமகன் விமர்சனம்

திருந்தாத ஜென்மங்கள்… குடிமகன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜெய்குமார், ஜெனிபர், பாவா செல்லத்துரை, பாலா சிங், கிருஷ்ண மூர்த்தி, மாஸ்டர் ஆகாஷ் மற்றும் பலர்.
இசை – எஸ். எம். பிரசாந்த்
ஒளிப்பதிவு – அருள்செல்வன்
எடிட்டர் – செல்வராஜ்
இயக்கம் – சத்தீஸ்வரன்
தயாரிப்பு – ஜீவமலர் சத்தீஸ்வரன்
பிஆர்ஓ – குமரேசன்

கதைக்களம்….

எந்த பிரச்சினையும் இல்லாத ஒரு அழகான ஊர். தன் மனைவி, தன் மகன், தன் ஊர் மக்கள் என எல்லாருடன் அன்பாக வாழ்ந்து வருகிறார் நாயகன் ஜெயகுமார்.

தன் அக்கா மகன் மீது அளவற்ற பாசம் வைத்துள்ள இவர் அவனை காலேஜ்ஜில் படிக்க வைக்க கடன் வாங்குகிறார். இதனால் வட்டியும் ஏறிக் கொண்டே போகிறது.

இந்த நிலையில் அரசியல்வாதியின் (கவுன்சிலர்) உதவியோடு ஊர் மக்களின் எதிர்ப்பையும் மீறி ஊருக்கு மத்தியில் டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது.

மக்கள் எதிர்ப்பால் ஒரு மாதத்தில் கடையை அகற்றிவிடுகிறோம் என அரசியல்வாதி சுறுகிறார்.

ஆனால் அந்த கிராமத்து ஆண்கள் பலரும் மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் பல பிரச்சினைகள் எழுகிறது. நாயகன் குடும்பத்திலும் விரிசல் ஏற்படுகிறது. மகனும் தந்தையும் மதிக்காமல் போகிறான்.

அக்கா மகன் படிப்புக்காக வாங்கின கடனை கட்ட முடியாமல் போய்விடுகிறது. அவர்களும் இவர்களை ஏமாற்றிவிடுகின்றனர்.

அப்போது எவரும் எதிர்பாராத வகையில் நாயகி ஜெனிபர் ஒரு முடிவெடுக்கிறார். அது என்ன? என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

நடித்தவர்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள் எப்படி..?

கந்தனாக நடித்திருக்கும் ஜெய்குமார் குடிகாரன் கேரக்டருக்கு சரியான தேர்வு என்றாலும் ஒரே முக பாவனையை அடிக்கடி கொடுக்கிறார்.

நாயகி ஜெனிபர் நல்ல தேர்வு. அழகு, அன்பு, பாசம் என என நம்மை கவர்கறிர்.

இவர்களுடன் பாவா செல்லத்துரை, பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கேரக்டர்களும் கச்சிதம்.
பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை என்ற பேரில் நம்மை கொன்று விட்டார் இசையமைப்பாளர். தேவையில்லாத இடத்திலும் மெட்டு போட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஓகே ரகம்.

கடன் வாங்கி கொடுப்பதாலும் நம்மை சிலர் ஏமாற்றுவதாலும் ஏற்படும் பிரச்சினைகளையும் அழகாக காட்டியிருக்கின்றனர்.

ஒரு காட்சியில் ரூ. 10,000 பணத்தை தொலைத்துவிடுவார் நாயகன். அதை ஒரு பெண் கீழே இருந்து எடுப்பதையும் அவர் பார்த்துவிடுவார். ஆனால் இவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அந்த பெண் ஒத்துக் கொள்ள மறுப்பார்.

அப்போது குடிகாரன் பேச்சை எவரும் நம்ப மாட்டார்கள். இதுதான் குடிகாரனுக்கு கிடைக்கும் மரியாதை என்பதை அழகாக சொல்லிருப்பார்கள்.

இவை அனைத்தும் இருந்தும் படம் முதுவதும் நாடகத்தன்மை இருப்பதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.
படத்தின் க்ளைமாக்ஸை பார்த்து ஒரு சிலராவது திருந்தினால் அதுவே படத்தின் வெற்றி.

குடிகாரன்.. திருந்தாத ஜென்மங்கள்…

Kudimagan review

More Articles
Follows