ஆகஸ்ட் 16 1947 விமர்சனம்.. 4.5/5..; முருகதாஸ் தந்த பொன்(குமார்)குடம்

ஆகஸ்ட் 16 1947 விமர்சனம்.. 4.5/5..; முருகதாஸ் தந்த பொன்(குமார்)குடம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

வெளியுலக தொடர்பே இல்லாத கிராமம் திருநெல்வேலி அருகே செங்காடு என்ற பகுதி.. அங்கு பஞ்சு உற்பத்தி தொழில் நடைபெறுகிறது.

இங்குள்ள மக்களை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை வாங்குகிறான் ராபர்ட் கிளைவ் என்ற ஆங்கிலேயன். இவன் அந்த பகுதி மக்களை அடிமைகளாக வைத்திருக்கிறான்.

அவரது மகன் ஜஸ்டின் தங்களிடம் வேலை பார்க்கும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறான்.

இதனால் தங்கள் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து விட்டால் பெற்றோர்களே அவர்களை ஜஸ்டினிடம் இருந்து காப்பாற்ற கொலை செய்து விடுகின்றனர்.

இப்படியான கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு ஆகஸ்ட் 15 1947 நள்ளிரவு சுதந்திரம் கிடைக்கிறது.

ஆனால் தன்னுடைய சொந்த பிரச்சினைக்காக அந்தப் பகுதி மக்களுக்கு சுதந்திரம் அடைந்ததை தெரிவிக்காமல் இருக்கிறான் ராபர்ட்.

பின்னர் அந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது எப்படி தெரிந்தது என்பதுதான் படத்தின் கதை. இதில் கௌதம் கார்த்திக் யார்? நாயகி ரேவதி யார்? என்பதை பார்ப்போம்.

கேரக்டர்கள்…

தன்னுடைய கேரக்டருக்காக தன் வெள்ளை தோலை கருப்பாக்கி நடித்திருக்கிறார் கௌதம் கார்த்திக்.. திருட்டு வேலைகள் செய்யும் அவர் ஒரு கட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக துணிந்து நிற்கிறார்.

தன் அம்மாவின் மரணத்திற்கு இந்த ஊர் தான் காரணம் என்பதால் கௌதம் செய்யும் சேட்டைகள் சுவாரஸ்யம். கிளைமாக்ஸ் காட்சியில் கௌதம் பேசும் சாட்டையடி வசனங்கள் நம்மை அறியாமல் கைதட்ட வைக்கும்.

நாயகியாக ரேவதி.. இவர் அருவி பட நாயகி அதிதி பாலனின் தங்கை.. இந்த கேரக்டருக்கு இவரை விட சிறப்பானவர் எவரும் இருக்க முடியாது என்பதை தன் நடிப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

அந்த கிராமத்தின் அழகு தேவதையாக ஜொலிக்கிறார். இவரின் சிறு வயது தோற்றத்தில் நடித்த அந்த குட்டி பெண்ணும் ஒரே சாயலில் இருப்பது டைரக்டரின் தேர்வை காட்டுகிறது.

இவர்களுடன் நடித்துள்ள புகழ் மதுசூதனன் கலையரசன் என அனைவரும் தேசிய விருது பெரும் அளவுக்கு நடித்துள்ளனர். பொதுவாகவே ஏதாவது பேசிக் கொண்டே இருக்கும் புகழ் இதில் நாக்கு அறுபட்டு பேச முடியாமல் தவிக்கும் காட்சிகள் அருமை.

மேலும் பாட்டியாக நடித்துள்ள விஜயலட்சுமி நடிப்பில் நம்மை கவர்ந்திருக்கிறார்.

சுதந்திர இந்தியாவின் அதிகாரியாக வரும் போஸ் வெங்கட், கௌதம் கார்த்திக்கின் தாயாக வரும் நீலிமாராணி ஆகியோர் சிறப்பு.

இவர்கள் இல்லாமல் ராபர்ட் மற்றும் ஜஸ்டின் இருவரும் தெறிக்க விட்டு உள்ளனர்.. ஆங்கிலேயே அதிகாரி ராபர்டாக (ரிச்சர்ட் அஷ்டன்), அவரது மகன் ஜஸ்டினாக (ஜேசன் ஷா)… இவர்களை பார்த்தால் நமக்கே கொன்றுவிடத் தோன்றும் வகையில் வெளுத்துக்கட்டி உள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

ஒரு இயக்குனருக்கு முதல் படம் என்றால் கமர்சியலாக செய்து இருப்பார்கள். ஆனால் தன் உழைப்பின் மீதும் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து தமிழ் சினிமாவுக்கு ஒரு பொன்-முடியை தந்து இருக்கிறார் பொன் குமார்.

இவர் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ ஆர் முருகதாஸின் உதவியாளர் ஆவார்.

1940-களில் கேட்ட இசையை கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். பாடல்களும் பின்னணி இசையும் சூப்பர்.. அந்த காலகட்டத்திற்கே நம்ம இழுத்துச் சென்று விடுகிறார் இசையமைப்பாளர்..

செல்வகுமார் எஸ்.கே-வின் ஒளிப்பதிவும் சுதர்சன்.ஆர்-இன் படத்தொகுப்பும் பெரும்பலம். கண்களுக்கும் விருந்து.

படத்திற்கு பெரிய பலம் கலை இயக்குனர் தான். சுதந்திர காலகட்டத்தில் இந்தியர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை அப்படியே தத்துரூபமாக வடிவமைத்து கொடுத்துள்ளார். கலை இயக்குனர் மறைந்த சந்தானத்திற்கு அளவில்லா பாராட்டுக்கள்.

எந்த ஒரு இடத்திலும் படத்தில் தொய்வு ஏற்படாத வண்ணம் படத்தை கொடுத்திருக்கிறார் பொன் குமார். க்ளைமாக்ஸில் நமக்குள் ஒரு சுதந்திர உணர்வை ஏற்படுத்துகிறது அதிரடி வசனங்கள்..

முக்கியமாக சுதந்திர காலத்தில் நமது முன்னோர்கள் பட்ட கஷ்டங்களை நம் கண் முன் நிறுத்தியுள்ளார்.

சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பதை யாராவது சொல்ல மாட்டார்களா.? என நம்மை ஏங்க வைத்து விட்டார். அதுதான் பொன் குமாரின் முதல் சிக்ஸர்.

ஆக… ஆகஸ்ட் 16 1947.. முருகதாஸ் தந்த பொன்(குமார்)குடம்

August 16 1947 movie review and rating in tamil

விடுதலை விமர்சனம் 4.25/5..; ராஜா இசையில் வெற்றி மெட்டு

விடுதலை விமர்சனம் 4.25/5..; ராஜா இசையில் வெற்றி மெட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

அருமபுரி என்ற கனிமவள நிறைந்த காட்டுப்பகுதியில் சுரங்க அமைக்க திட்டமிடுகிறது அரசு.. இதில் சில தனியார் நிறுவனங்களும் தொடர்பில் உள்ளன.

இந்த சுரங்கம் அமைந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் மக்கள் படையை கொண்டு போராடுகிறார் விஜய் சேதுபதி. இவரது முகம் கூட போலீசுக்கு தெரியாது.

எனவே அவர்களை தீர்த்துக்கட்ட சேத்தன் தலைமையில் போலீஸ் படை குவிக்கப்படுகிறது. இந்தப் படையில் டிரைவராக வந்து இணைகிறார் சூரி. இவர் உயர் அதிகாரிகளுக்கு கூட கட்டுப்படாத நேர்மையான நபர். அந்த காட்டுப் பகுதியில் வசிக்கும் நாயகி பவானி ஸ்ரீ-யின் மீது காதல் கொள்கிறார்.

காட்டுப்பகுதியில் ஜீப் ஒட்டி செல்லும் போது அந்த மக்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்கிறார் சூரி. அப்போது யார் என்று தெரியாமல் மக்கள் படைத்தலைவன் விஜய் சேதுபதியை ஓரிரு முறை பார்த்து விடுகிறார்.

ஒரு கட்டத்தில் போலீசால் தேடப்படுபவர் விஜய் சேதுபதி தான் தெரிய வரும்போது அவரை பிடித்து கொடுக்க முயற்சிக்கிறார்.

இந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதியின் உறவினர் தான் தன் காதலிக்கும் பெண் என்பது சூரிக்கு தெரிய வருகிறது.

தான் நேசிக்கும் காவல்துறைக்கு உதவி செய்தாரா.? அல்லது தன் காதலிக்காக விஜய்சேதுபதியை காப்பாற்றினாரா.? என்பதுதான் ‘விடுதலை’ படத்தின் கதை.

கேரக்டர்கள்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார் என்ற செய்தி வந்த போது பலருக்கு கிண்டலாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த படம் பார்த்த பிறகு அவர்கள் சூரியை பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு யதார்த்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.

ஒரு முறை இவரது உயர் அதிகாரி மூணார் ரமேஷ் கேட்கும் போது.. “என்னடா கோபம் வருதா.? ஆமாங்கய்யா.. என்னை அடிக்க தோணுதா.? ஆமாங்கய்யா என சூரி சொல்லும்போதும்…

சேத்தன் சூரியை பார்த்து.. “இவனை என்னய்யா பண்றது? எத்தனை முறை தண்டனை கொடுத்தாலும் செய்கிறான்.. ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்கிறான்.” எனும் போது தியேட்டரில் கைதட்டல் பறக்கிறது.

நாயகி பவானி ஸ்ரீ இடம் தன் காதலை சொல்லும் போதும் விஜய் சேதுபதி துரத்தும் காட்சிகளும் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.

விஜய் சேதுபதி சிறிது நேரமே வந்தாலும் தன் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.. விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் அவருக்கு நிறைய காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கிளைமாக்ஸில் விஜய்சேதுபதி பேசும் வசனங்கள் அனல் தெறிக்கிறது.

இவர்களுடன் உயர்அதிகாரி கௌதம் மேனன், போலீஸ் சேத்தன், நாயகி பவானி ஸ்ரீ, ஏட்டையா உள்ளிட்ட பலரும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஒரு ராத்திரி நீ இல்லாமல் சென்றதற்கே என்னால் தனியாக வாழ முடியலை.. இனி நீ இல்லாமல் எப்படி வாழ்வேன்? என நாயகி தன் பாட்டியை பார்த்து கதறும் போது பலரின் கண்கள் கலங்கும்.

போலீஸ் சித்திரவதை அனுபவிக்கும் போதும் தன் பெற்றோர் இழந்த கதையை கூறும் போதும் பவானி அந்த பாத்திரமாகவே மாறிவிடுகிறார்.

டெக்னீஷியன்கள்…

ஒரு படத்தில் கதை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரசிகனை சீட்டிலிருந்து எழ வைக்காமல் செல்போனை கையில் எடுக்க வைக்காமல் ஒரு இயக்குனரால் படத்தை கொடுக்க முடியும் என்றால் அதுதான் உண்மையான வெற்றி. அதை சரியாக 100% கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன்.

படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு ரயில் விபத்து காட்டப்படுகிறது.. நிஜ ரயில் விபத்தை நம் கண் முன்னால் முன்னே காட்டி இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறனும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜூம்.

நம்மை பதற வைக்கும் ஒரு விபத்தை கலை இயக்குனர் ஜாக்கியுடன் இணைந்து கொடுத்துள்ளனர்.

இதற்கெல்லாம் மெருகூட்டும் வகையில் இளையராஜாவின் பின்னணி இசை ஒலிக்கும் போது நம்மை அறியாமல் கண்கள் கலங்கும்.

1980 – 90களில் நாம் கேட்டு ரசித்து பார்த்த இசையை மீண்டும் கொடுத்து இருக்கிறார் இளையராஜா. முக்கியமாக விஜய் சேதுபதியின் அறிமுக காட்சி.. துப்பாக்கியை கையில் எடுக்கும் சூரி உள்ளிட்ட பல காட்சிகளில் பின்னணி இசையை தெறிக்க விட்டுள்ளார்.

அதுபோல சூரி – பவானி நடந்து செல்லும் போது ‘உன்னோடு நடந்தால்..’ என்ற பாடல் தனுஷ் குரலில் ஒலிக்கும் போது நம்மால் ஒரு சிறந்த இசையை உணர முடிகிறது.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் வேல்ராஜ். ராமர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஜாக்கி கலை பணிகளை பவனிக்க பீட்டர் ஹெய்ன், ஸ்டன்ட் சிவா ஆகியோ சண்டை பயிற்சிகளை வடிவமைத்துள்ளனர் படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.

இளையராஜா – வெற்றிமாறன் என சிறந்த கலைஞர்கள் இணைந்து ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளனர்.

ஆனால் படத்தின் கதையை நம்மால் எளிதாக யூகிக்க முடிகிறது.. திருப்புமுனையாக சில காட்சிகளை வைத்திருந்தால் இன்னும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கும்.

என்னதான் நாயகன் சாதாரண டிரைவர் ஆக இருந்தாலும் அவரே குற்றவாளியை பிடிக்க வழி நடத்துவது எல்லாம் சினிமாத் தனம்.

இவை எல்லாம் மீறி படத்தை சிறப்பாக தன்னுடைய மேக்கிங்கால் கொடுத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

ஆக விடுதலை.. ராஜா இசையில் வெற்றி மெட்டு..

Viduthalai movie review and rating in tamil

பத்து தல விமர்சனம் 3.5/5.; கேங்-ஸ்டார் GangSTeR

பத்து தல விமர்சனம் 3.5/5.; கேங்-ஸ்டார் GangSTeR

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், சௌந்தர்ராஜா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பத்து தல’.

ஒன்லைன்…

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மப்ஃடி படத்தின் ரீமேக். மணல் மாஃபியா கேங்ஸ்டருக்கும் அரசியல்வாதிக்கும் நடக்கும் மோதலே பத்து தல.

கதைக்களம்..

தமிழ்நாட்டின் ஆட்சியை மாற்றி அமைக்கும் மணல் மாஃபியா தல AGR சிம்பு.

மணல் கொள்ளைக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்காலம் அரசாங்கம் சிம்பு ஆதரவாக செயல்படுவதால் மக்களால் எதையும் செய்ய முடியவில்லை.

இது ஒரு புறம்.. ஆந்திராவில் இருந்து ஒரு பிரச்சனையால் தமிழகத்திற்கு வரும் கௌதம் கார்த்திக் ஒரு கட்டத்தில் சிம்புவின் கூட்டத்தில் இணைகிறார்.

படிப்படியாக சிம்புவின் விசுவாசியாக மாற நினைக்கிறார். அவரின் நோக்கம் என்ன? இங்கே வருவதற்கான காரணம் என்ன? சிம்பு என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்..

இதுவரை ஏற்காத கேரக்டரில் சிம்பு. படத்தில் அவருக்கு குத்து பாடல் இல்லை.. ஜோடி இல்லை. ஆனாலும் தனித்து நிற்கிறார் சிம்பு.. பெரிய மாஸ் ஹீரோவாக காட்டப்படுகிறார் சிம்பு. ஆரம்பத்தில் தங்கையுடன் கஷ்டப்படுவது போல் காட்டப்படுகிறது. பின்பு எப்படி ஒரு பெரிய கேங்ஸ்டர் ஆக மாறினார்.? என்பதற்கான காட்சிகள் இல்லை

இங்கே நல்லது செய்யவும் ஒரு கெட்ட முகம் தேவை என்கிறார் அது ஏன்.? என்பது தான் தெரியவில்லை.

கௌதம் மேனன் வில்லத்தனம் கலந்த அரசியல்வாதியாக மிரட்டி இருக்கிறார்.

கௌதம் கார்த்திக் அறிமுக காட்சி அசத்தல். அவர் போடும் சண்டைக் காட்சியும் அனல் பறக்கிறது. பிரியா உடன் காதல் மோதல் என கலந்துக் கொடுத்திருக்கிறார்.

பிரியா பவானி சங்கர் முதல்முறையாக ஒரு காட்சியில் தொடைத்தெரியும் அளவுக்கு நடித்திருக்கிறார். தாசில்தார் என்றாலும் அவரின் குறும்புத்தனம் ரசிக்க வைக்கிறது.. முக்கியமாக காய்ச்சல் காட்சியில்..!

இவர்களுடன் இயக்குனர் கிருஷ்ணா, சந்தோஷ் பிரதாப், தங்கை அனு சித்தாரா, ஜோ மல்லூரி, கலையரசன், சிங்கா என்ற கேரக்டரில் நடித்த மது குரு.. இன்பா என்று கேரக்டரில் நடித்த சௌந்தரராஜா.. ரெட்டின் கிங்ஸ்லி, கண்ணன் பொன்னையா, டிஜே, சென்றாயன் உள்ளிட்ட பலரும் தங்கள் கேரக்டர்களில் முத்திரை பதித்துள்ளனர்..

டெக்னீஷியன்கள்…

ஹீரோவை மட்டும் சுற்றி கதை நகராமல் அனைவருக்கும் சரியான பங்களிப்பை கொடுத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா..

தாசில்தார் பதவியே ராஜினாமா செய்துவிடுவார் பிரியா.. “நீங்கள் ராஜினாமா செய்து விட்டதால் எங்கள் அலுவலகத்தில் பணமழை கொட்டுகிறது” என்பார் சென்ராயன்.. ஒரு நேர்மையான அதிகாரி விலகினால் அங்கு ஊழல் பெருகும் என்பதற்கு அச்சரமாக அமைந்துள்ளது அந்த காட்சி.

முக்கியமாக இடைவேளை காட்சியில் தான் சிம்பு வருகிறார். அதை ஒத்துக் கொள்ளவே ஹீரோவுக்கு தனி தைரியம் வேண்டும். அதை ஒத்துக் கொள்ள வைக்கவும் இயக்குனருக்கு தன் கதையின் மீது நம்பிக்கை வேண்டும் அதையும் சரியாக செய்துள்ளார்.

சில காட்சிகள் கன்னட ஒரிஜினல் படம் மஃப்ட்டி படத்தில் இடம்பெற்றதாக இருந்தாலும் மேக்கிங் மூலம் வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார். (ஒரிஜினல் படத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்..)

ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசையும் பாடல்களும் ஓகே.. ராவடி என்ற பாடலுக்கு சாயிஷா நடனம். ஆனால் பெரிதாக ஈர்க்கவில்லை.

ஒளிப்பதிவாளர் ஃபரூக்கின் கேமரா பக்கா. மணல் திருடும் காட்சிகள்.. ஹெலிஃகாப்டரில் என்ட்ரீ.. என பல பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார்.

படத்தை பிரம்மாண்டமாக கொடுக்க தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் அதிக அளவில் செலவிட்டுள்ளது. முக்கியமாக அரசியல் கட்சி… மணல் மாஃபியா என பிரம்மாண்டத்தை அள்ளிக் கொடுத்துள்ளார் ஞானவேல் ராஜா.

ஆக பத்து தல.. கேங்-ஸ்டார் GangSTeR

pathu thala movie review and rating in tamil

செங்களம் வெப் தொடர் விமர்சனம் 3.25/5.; சதுரங்க அரசியல்

செங்களம் வெப் தொடர் விமர்சனம் 3.25/5.; சதுரங்க அரசியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஆர் பிரபாகரனின் இயக்கத்தில் கலையரசன், வாணி போஜன், ஷாலி, விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள செங்களம் தொடர்.

ஜீ5 தளத்தில் வெளியான 9 எபிசோடுகளை கொண்டது செங்களம் தொடர்.

கதைக்களம்…

விருதுநகர் மாவட்ட நகராட்சியின் மன்ற தலைவர் பதவியை 40 ஆண்டுகளாக தக்க வைக்கிறார் சிவஞானம்.

இவருக்கு அடுத்து தொடர்ச்சியாக இவரது குடும்பமே பதவி சுகத்தை அனுபவிக்கிறது.

சிவஞானத்தை அடுத்து, அவரது மூத்த மகன் பவன் (ராஜமாணிக்கம்) நகராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கும் சூர்ய கலாவிற்கும் (வாணி போஜன்) திருமணம் நடக்கிறது.

அதே தொகுதியில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வேல ராமமூர்த்திக்கு இல்லாத செல்வாக்கு , நகராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது.

எனவே, எப்படியாவது ‘வாரிசு அரசியல் குடும்பத்தை கலைக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

ஒரு கும்பல் கட்டத்தில் ராஜமாணிக்கத்தை போட்டு தள்ளுகிறது. இதனால் வாணி போஜன் பக்கம் பதவி ஆசை திரும்புகிறது. ஆனால் அதே சமயம் குடும்பத்திற்குள்ளும் பதவி ஆசை மோதல் வலுக்கிறது. வீட்டுக்கு வந்த மருமகளுக்கு ஏன் ‘வாரிசு – பதவி ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

இந்த அரசியல் கதை ஒரு புறம் பயணிக்க… மற்றொரு புறம் தொடர் கொலை கதை பயணிக்கிறது.

தனது 2 தம்பிகளின் துணையுடன் மூன்று கொலைகளை செய்கிறார் கலையரசன்.. மொத்தம் 6 கொலை செய்ய தான் காத்திருப்பதாகவும் சவால் விடுகிறார் கலையரசன்.

கலையரசன் கொலைகளை செய்ய என்ன காரணம்.? இவரின் கொலைக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு.?

வாணி போஜன் அரசியலில் நுழைந்தாரா.? வெற்றி பெற்றாரா.? இந்த இரண்டு கதைகளும் கனெக்ட் ஆகிறதா.? என்பதுதான் இந்த தொடரின் கதை.

கேரக்டர்கள்…

கலையரசன், வாணி போஜன், பவன், சரத் லோகிதஸ்வா, ஷாலி, டேனியல், விஜி சந்திரசேகர், சூப்பர் குட் சுப்ரமணி, அர்ஜெய் போன்ற பல நட்சத்திரங்கள் உள்ளனர்.

முக்கியமான கேரக்டர்களுக்கு சமமான ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கலையரசன் நாயகன் என்றாலும் வில்லத்தனம் கலந்த நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்.

பல படங்களில் காதல் நாயகியாக வந்த வாணி போஜன் இந்தப் படத்தில் ஒரு அரசியல் கட்சி உறுப்பினராக அசத்தியிருக்கிறார்.

இவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் கலையரசனின் தங்கையாக நடித்த ஷாலி வேற லெவல் நடிப்பை கொடுத்துள்ளார். இவரது கேரக்டர் உடன் பிறவா சகோதரி சசியை நினைவுப்படுத்துகிறது.

இவர் ஆடும் அரசியல் சதுரங்கம் ரசிகர்களுக்கு சரவெடி. ஆனால் கொடி படத்தில் நடித்த திரிஷாவின் கேரக்டர் போல இவர் இன்னும் மெனக்கெட்டு நடித்திருக்கலாம்.

டெக்னீஷியன்கள்…

அமைதிப்படை போன்ற முழு நீள அரசியல் படத்தை நாம் இதற்கு முன்பு பார்த்திருந்தாலும் இது போன்ற அரசியல் தொடர் தமிழுக்கு முதல் முறையாகும்.

படத்தின் விறுவிறுப்பான காட்சிகள் குறைவு என்பதால் கதை ஓட்டத்தில் தொய்வு ஏற்படுகிறது.. மேலும் இது ஒரு தொடர் என்பதால் காட்சிகளை நீட்டி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆனால் அதே சமயம் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபாகரன் ஒரு புதிய கதை களத்தை தேர்ந்தெடுத்து இருப்பது பாராட்டுக்குரியது.

இந்த தொடரின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. முக்கியமாக படத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.

அரசியல் படம் என்பதால் நிறைய காட்சிகளில் மக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்.. ஆனால் இன்னும் பிரம்மாண்டமாக கொடுத்திருக்கலாம்.

காரணம் பொதுக்கூட்ட மேடைகளை காட்டும்போது குறைந்தபட்ச மக்களை அங்கு இருக்கின்றனர்.

இந்தத் தொடரில் நகராட்சியின் மன்ற தேர்தல் காட்டப்பட்டாலும் இது கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி.. ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோரின் அரசியல் களத்தை அப்பட்டமாக காட்டுகிறது.. எனவே நீங்கள் அதனுடன் தொடர்புபடுத்தி கூட பார்த்துக் கொள்ளலாம்..

ஆக செங்களம்… சதுரங்க அரசியல் ஆட்டம்

Sengalam web series review and rating in tamil

பருந்தாகுது ஊர் குருவி விமர்சனம் 3/5..; காட்டுக்குள் கண்ணாமூச்சி

பருந்தாகுது ஊர் குருவி விமர்சனம் 3/5..; காட்டுக்குள் கண்ணாமூச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, காயத்ரி ஐயர், வினோத் சாகர் & மற்றும் பலர்.

இயக்குனர் : தனபாலன் கோவிந்தராஜ்

லைட்ஸ் ஆன் மீடியா – EAV சுரேஷ், சுந்தர கிருஷ்ணா .P, வெங்கி சந்திரசேகர் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசை ரெஞ்சித்.

கதைக்களம்…

திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் நாயகன் நிஷாந்த். எனவே காவல் நிலைய குற்றவாளி பட்டியலில் இவருக்கு இடமுண்டு.

ஒரு கட்டத்தில் காட்டுக்குள் இளைஞர் ஒருவர் கொலையாகி கிடக்கிறார்.

அப்போது போலீஸ் கோடங்கி வடிவேலுடன் வழிகாட்ட செல்கிறார். அச்சமயத்தில் பிணத்தின் கையோடு, நிஷாந்தின் கையையும் சேர்த்து விலங்கு போட்டுவிட்டு வெகு தூரம் சென்றுவிடுகிறார் போலீஸ்.

அந்த சமயத்தில் அவருக்கு ஒரு போன் வர நிஷாந்த் எடுக்கிறார்.. என் கணவரை காப்பாற்றினால் உனக்கு 10 லட்ச ரூபாய் தருகிறேன் என்கிறார். அந்நேரம் கொலையாகி கிடக்கும் விவேக் பிரசன்னாவுக்கு திடீரென நினைவு வருகிறது.

எனவே விவேக் பிரசன்னாவுடன் நிஷாந்த் அந்த கை விலங்குடன் காட்டுக்குள் ஓடுகின்றனர். எனவே கொலைக்கார கம்பல் இருவரையும் துரத்துகிறது.

இறுதியில் என்ன ஆனது.? கொலைக்கான காரணம் என்ன? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

நாயகன் நிஷாந்த்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் கவர்கிறார்.. பயம் பதட்டம் துணிச்சல் என அனைத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

பன்றிக்கு நன்றி சொல்லி என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார்.

வழக்கம்போல விவேக் பிரசன்னா.. கேரக்டருக்கு என்ன தேவையோ அதை கொடுத்திருக்கிறார்.

ஆனால் சாகும் தருவாயில் இருந்த இவர் எந்த சிகிச்சையும் இல்லாமல் சாதாரண நிலைக்கு வந்தது எப்படி என்பதற்கான காட்சிகள் விளக்கமும் இல்லை.. அதுபோல விவேக் பிரசன்னாவிற்கு நெருக்கமான ஒருவர் இவரை கொல்ல திட்டமிடுகிறார்.. அதற்கும் ஆணித்தரமான காரணங்கள் சொல்லப்படவில்லை.

கோடாங்கி வடிவேலு ஓகே அவ்வளவுதான். நாயகியாக நடித்த காயத்ரி ஐயர் கச்சிதம்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வினோத் சாகர்.. கொலை செய்ய முயற்சிக்கும் கவுதம், ராஜேஷ், ஆனந்த், ஆதிக் ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

டெக்னீஷியன்கள்…

அஸ்வின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். காட்டுக்குள் இவரின் கேமரா விளையாடி இருக்கிறது. ஒரே சம்பவத்தை வெவ்வேறு கோணங்களில் காட்டியிருக்கிறார்.

ரெஞ்சித்தின் பின்னணி இசை படத்தின் கதை ஓட்டத்துடன் பயணிக்கிறது.

முக்கியமாக இரண்டு கதாபாத்திரங்களை வைத்து காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி ரசிக்க வைக்கிறார் இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ்.

ஆக பருந்தாகுது ஊர் குருவி.. காட்டுக்குள் கண்ணாமூச்சி

Parundhaguthu Oor Kuruvi movie review and rating in Tamil

D3 விமர்சனம் 3/5.; முதல் 2 பாகம் எப்போ.?

D3 விமர்சனம் 3/5.; முதல் 2 பாகம் எப்போ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: பிரஜின், சார்லி, வித்யா பிரதீப், ராகுல் மாதவ், காயத்ரி யுவராஜ், மேத்யூ வர்கீஸ் மற்றும் பலர்.

இயக்கம்: பாலாஜி
தயாரிப்பு: பிமாஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ்

பாலாஜி இயக்கத்தில் ப்ரஜின், வித்யா பிரதீப், சார்லி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் D3.

கதைக்களம்…

ப்ரஜின் ஒரு போலீஸ் அதிகாரி. இவரது மனைவி வித்யா பிரதீப். குற்றாலத்திற்கு டிரான்ஸ்பர் ஆகி வருகிறார்.

அப்போது ஒரு விபத்து நடக்கிறது. ஒரு பெண் இறக்கிறார். சில தினங்களில் மற்றொரு பெண் ஒருவர் இறக்கிறார்.

இந்த இரண்டு விபத்துகளும் ஒரே போல நடந்துள்ளதால் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறார் பிரஜின்.

இதனையடுத்து விசாரணையில் இறங்க அவரது மனைவியை வித்யாவை கொல்கிறது அந்த கும்பல்.

அவர்கள் தொடர்ந்து கொலைகளை செய்ய என்ன காரணம்.? அவர்கள் யார்.? அதனை போலீஸ் ப்ரஜின் கண்டுபிடித்தாரா.? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

இதற்கு முன் சில படங்களில் நாயகனாக நடித்த பிரஜின் டி3 படத்திற்காக முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். போலீஸ் கேரக்டருக்கு ஏற்ற வகையில் தன்னுடைய உடலையும் உடல் மொழியையும் மாற்றி இருக்கிறார். ஆக்சனில் கூட பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார்.

வித்யா பிரதீப்புக்கு இந்த படத்தில் பெரிதாக காட்சிகள் இல்லை. ஒரு வேளை இந்த படத்தின் முதல் இரண்டு பாகங்கள் வெளியானால் அவரது கேரக்டர் எப்படி இருக்கும் என தெரியலாம்.

டாக்டராக நடித்திருக்கும் ராகுல் மாதவ் செம ஸ்டைலிஷாக வந்து மிரட்டியிருக்கிறார். ஒரு பணக்காரனுக்கு உரிய கெத்தாக தன்னுடைய கேரக்டரை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மற்ற நடிகர்களான சார்லி, காயத்ரி யுவராஜ், அபிஷேக் தங்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

தொடர் கொலைகள்.. போலீஸ் விசாரணை.. திரில்லர் கதை என பாலாஜி தன் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.. முதல் இரண்டு பாகங்கள் வெளியானால் மட்டுமே மூன்றாம் பாகத்தின் கதை புரியும் போல.

இடைவேளை முன்பு இருந்த வேகம் இரண்டாம் பாதியில் இல்லை. ஒரு திரில்லர் கதையை நேர்க்கோட்டில் பயணிக்கச் செய்யாமல் மாற்றுப் பாதையில் பயணிக்க செய்திருப்பதால் சற்று தொய்வு ஏற்படுகிறது.

ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பணி நேர்த்தியாக உள்ளது. இரவு நேர காட்சிகளுக்கு தன் கேமராவினால் உயிரூட்டியிருக்கிறார்.

இசையமைப்பாளரின் பின்னணி இசை சிறப்பு. ராஜா ஆறுமுகத்தின் எடிட்டிங் ஓகே.

ஒரு மாதிரி போனாங்க.. ஒரு மாதிரி போனாங்க.. என்ற வாக்கியம் அடிக்கடி வருகிறது.. அதனை தொடர்புப்படுத்தியே காவல்துறை விசாரணை நடக்கிறது.

ஆக… டி3 படமும் ஒரு மாதிரி போகுது.. முதல் 2 பாகங்கள் வரட்டும். பார்ப்போம்..

D3 movie review and rating in tamil

More Articles
Follows