அஞ்சாமை விமர்சனம் 4.25/5.. ஓர் அதிர்வை நிகழ்த்தும்.

அஞ்சாமை விமர்சனம் 4.25/5.. ஓர் அதிர்வை நிகழ்த்தும்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஞ்சாமை விமர்சனம் 4.25/5.. ஓர் அதிர்வை நிகழ்த்தும்.

2016 ஆம் ஆண்டில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை எடுத்து இந்த அஞ்சாமை படத்தை இயக்கியிருக்கிறார் சுப்புராமன்..

நீங்கள் நீட் தேர்வை எதிர்த்தாலும் ஆதரவு கொடுத்தாலும் நிச்சயம் இந்த படம் உங்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்..

ஸ்டோரி…

தந்தை விதார்த்தை இழந்த மகன் காவல் நிலையத்திற்கு சென்று அரசாங்கம் மீது புகார் கொடுக்க வேண்டும் என்கிறார். இதனால் போலீஸ் ரகுமான் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியாகின்றனர்.

மாவட்டத்திலேயே முதல் மாணவனாக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வு எழுத ஜெய்ப்பூர் மாநிலத்திற்கு சென்ற போது என் தந்தை மன உளைச்சலால் இறந்து விட்டார்.

என் தந்தை மரணத்திற்கு காரணமான அரசு அதிகாரிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.. அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறார்.

அப்படி என்னதான் நடந்தது? நீட் தேர்வினால் இந்த மாணவன் பாதிக்கப்பட்டது எப்படி? தந்தையை இழந்தது எப்படி?

மாணவனுக்கு நீதி கிடைத்ததா.? நீட்டால் பாதிக்கப்பட்ட மாணவன் என்ன செய்தான்? அரசாங்கம் & ஊழியர்கள் என்ன செய்தனர்.? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

* Vidaarth – Sarkar
* Vani Bhojan – Sarasu
* Rahman – Manickam
* Krithik Mohan – Arunthavam
* Vijay Tv Ramar – Adhisayam
* Dhanya – Adhira

ஒரு நடிகன் என்பவன் ஒரே மாதிரியான வேடங்களை ஏற்காமல் படத்திற்கு படம் தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நிரூபித்து வருகிறார் விதார்த். தான் கதையின் நாயகன் எனக்கு எத்தனை காட்சிகள் இருப்பது முக்கியம் அல்ல அந்த காட்சிகளில் ல் தன்னால் எப்படி ஸ்கோர் செய்ய முடியும் என நினைத்து அவர் ஒப்புக்கொண்டதற்காகவே பாராட்டலாம்.

ஒரு கலைக்கூத்தடியாக ஒரு பாசமிக்க கணவனாக பொறுப்புள்ள தந்தையாக ஒவ்வொன்றையும் உணர்ந்து நடித்திருக்கிறார்.. முக்கியமாக ரயிலில் பயணம் செய்யும் அந்த ஒரு காட்சி விதார்த் நடிப்புக்கு சான்று..

இளம் வயதிலேயே 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்ட நாயகி வாணி போஜனை வரவேற்கலாம்.. கணவனை இழந்த கட்டத்தில் அவர் கதறி அழும் காட்சி நம் கண்களை குளமாக்கும்..

சாமானியனுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் அவன் முதலில் செல்லும் இடம் காவல் நிலையம் அதன் பின்னர் நீதிமன்றம்.. இந்த இரண்டு இடங்களிலும் ஒரு நேர்மையான அதிகாரி இருக்க மாட்டாரா என ஏங்கியவர்கள் பலருண்டு.. அப்படிப்பட்ட நேர்மையான அதிகாரியாக ரகுமான் வாழ்ந்திருக்கிறார்..

வக்கீல் ஆதரவு இருந்தாலும் இல்லை என்றாலும் தன்னால் தனக்கு நீதி பெற்றுத் தர முடியும் என்ற தன்னம்பிக்கையில் போராடும் மாணவனாக கிருத்திக் மோகன்.. முதல் படத்திலேயே முத்திரை பதித்து விட்டார் இந்த இளவயது நடிகர்.

விஜய் டிவி ராமர் மற்றும் ரேகா, தன்யா உள்ளிட்டோரும் நீதிபதியாக நடித்த நிஜ ஐஏஎஸ் அதிகாரியும் சிறப்பு.

டெக்னீசியன்ஸ்…

Written and Directed by: SP Subburaman
Cinematography: Karthick
Music: Raghav Prasad
Trailer & Background Music Score: KalaCharan
Lyrics: Arivumathi, Karthik Netha, SP Subburaman
Editor : Ramsudharsan
Art: GC Anandhan
Presented by: Dream Warrior Pictures
Production: Thiruchithram
Created & Produced: Dr. M. Thirunavukarasu MD
Costume Designer: Siva Balan
PRO : Johnson

இந்தியாவில் நீட் தகுதி தேர்வு வந்த பின் பல மாநிலங்களில் ஆதரவு இருந்தாலும் முக்கியமாக தமிழகத்தில் எதிர்ப்பு நிலைதான் இருந்து வருகிறது.

மெடிக்கல் காலேஜ் வைத்திருக்கும் ஒரு தொழிலதிபரால் அவரது வாரிசுகளையும் உறவினர்களையும் எளிதாக டாக்டர் ஆக்கிவிட முடியும்.. ஆனால் பணம் கொடுத்து படிக்க வசதி இல்லாத ஒரு ஏழை மாணவனால் நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் அவரால் மருத்துவம் ஆகிவிட முடியும்..

இந்த சூழ்நிலையில் சில நபர்கள் எதிர்த்தாலும் நீட் தேர்வில் ஏற்படும் பல பிரச்சனைகளை இந்த படம் வலியுடன் எதார்த்தமாகவும் சொல்லி இருக்கிறது..

நாம் பயணம் செய்யும் ரயிலில் கூட முதல் வகுப்பு ஏசி ரிசர்வேஷன் இத்தனை இருக்கும் போது கல்விக்கு மட்டும் ஏன் ஒரே தகுதி தேர்வு இருக்க வேண்டும் என்ற கேள்விகளை இயக்குனர் கேட்டு இருக்கிறார்.. ஐபிஎல் மேட்சுக்கு மெட்ரோ ரயில் பஸ் இலவசமாக விடும்போது நீட் தேர்வு எழுத வெளி மாநிலத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு ஏன் ஒரு இலவச ரயிலை விடக்கூடாது எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

முக்கியமாக ஒரு கருத்தை அவர் சொல்லி இருக்கலாம்.. மாணவர்களுக்கு தகுதி தேர்வு இருக்கும்போது அரசியல்வாதிகளுக்கும் தகுதி தேர்வு வைத்திருக்கலாம் என்ற கேள்வியை கூட அவர் எழுப்பி இருக்கலாம் இயக்குனர் சுப்புராமன்.

ராகவ் பிரசாத் இசையில் பாடல்கள் தனியாக இல்லாமல் படத்துடன் பயணிப்பது சிறப்பு.. பின்னணி இசையில் நீட் எழுதும் மாணவர்களின் வலியை கூட சொல்லி இருக்கிறார் இசையமைப்பாளர்..

கார்த்திக் ஒளிப்பதிவில் கிராமத்து அழகு.. பால் குடிக்கும் கன்று.. வடநாட்டு ரயில்கள் ஜெய்ப்பூர் மக்கள்.. கோர்ட் காட்சிகள் என அனைத்தும் அழகு..

கலை இயக்குனர் ஆனந்தன் கை வண்ணத்தில் உருவான கோர்ட் படத்திற்கு கூடுதல் பலம்.. ஒரு காட்சியில் மாணவர்கள் திரண்டு வரும்போது இது மைதானம் அல்ல கோர்ட்டை வெளியில் வைத்துக் கொள்ளலாம் என சொல்லும் வசனம் ரசிக்க வைக்கிறது.

அரசு வக்கீலும் ரகுமானும் கோர்ட்டில் வாதாடும் காட்சியில் நீங்கள் மெய்மறந்து கைதட்டி ரசிப்பீர்கள்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு கோர்ட் காட்சியை அதிரவிட்டிருக்கிறார் இயக்குனர் சுப்பு ராமன்..

கிளைமாக்ஸ் கட்சியில் மட்டும் ரசிகன் கொஞ்சம் ஏமாற்றம் அடைவான்.. சென்சாரில் ஓகே சொன்ன பிறகும் இயக்குனர் அதை மாற்ற என்ன காரணமோ தெரியவில்லை.?

படத்தின் முதல் காட்சியில் அரசாங்கத்திற்கு எதிராக புகார் அளிக்க வேண்டும் என மாணவன் சொல்லும்போது நாம் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போகிறோம்.. அதற்கு அடுத்தடுத்து நகரும் காட்சிகள் அடடா நிச்சயம் அரசு அதிகாரிகளையும் கேள்வி கேட்க வேண்டும் என ஒவ்வொரு சாமானியன் மனதிலும் இந்த அஞ்சாமை ஒரு அதிர்வை நிகழ்த்தும்.

Anjaamai movie review

தி அக்காலி விமர்சனம்.; என்னதான் சொல்றீங்க.??

தி அக்காலி விமர்சனம்.; என்னதான் சொல்றீங்க.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தி அக்காலி விமர்சனம்.; என்னதான் சொல்றீங்க.??

ஸ்டோரி…

சில ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பற்றி விசாரணை நடத்துகிறார் போலீஸ் ஜெயக்குமார். அதை தற்போது நடப்பு ஆண்டில் ஜெயக்குமாரிடம் பழைய கதையை கேட்டு அறிகிறார் மற்றொரு போலீஸ் அதிகாரி.

பாழடைந்த கல்லறையில் போதைப் பொருள்கள் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அறிகிறார்.. அது பற்றிய விசாரணையில் ஜெயக்குமார் இறங்கிய போது தான் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் அவருக்கு தெரிய வருகிறது.

அதாவது சாத்தான்களை வழிபடும் சில நபர்கள் அங்கு நரபலி கொடுத்து பல பூஜைகளை செய்திருப்பதை அறிகிறார்.

சாத்தான்களுக்காக நரபலி கொடுத்து அந்த கும்பல் யார்? நோக்கம் என்ன.? அவர்களை கண்டுபிடித்தாரா? என்பதுதான் மீதிக்கதை.

(இப்படி ஈசியாக இந்த கதையை நாம் சொல்லி இருந்தாலும் படத்தில் எதுவுமே புரியாத மனநிலையிலே வந்தோம். பிறகு இயக்குனரிடம் கதை கேட்டு தெரிந்து கொண்டோம் என்பது குறிப்பிடத்தக்கது)

கேரக்டர்ஸ்…

காவல்துறை அதிகாரியாக ஜெய்குமார், கிறிஸ்துவ மத போதகராக நாசர், காவல்துறை உயர் அதிகாரியாக தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் தங்கள் அனுபவ நடிப்பில் ஜொலிக்கின்றனர்.

அதிலும் ஜெயக்குமார் கதைநாயகனாக படம் முழுவதும் ஆளுமை இருக்கிறது. அவரது குரலில் தான் படத்தின் கதை ஓட்டம் நகர்கிறது. ஜெயிச்சிட்ட ஜெயக்குமாரா..

ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் உள்ளிட்ட நடிகர்களும் கதை ஓட்டத்துடன் பயணிக்கின்றனர்.

பேய் பிடித்த தாரணி, பிளாக் மேஜிக் யாமினி, சாத்தான் பாதிக்கப்பட்ட அர்ஜய், பிளாக் வேர்ல்ட் வினோத் கிஷன் ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு பலம்.

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் கிரி முர்பி.. நாம் மற்ற படங்களில் பார்த்து சலிக்காத லொகேஷனை தேர்ந்தெடுப்பது பாராட்டுக்குரியது.

ஆனால் அதே சமயம் ஒரு கதை என்பது ஒரு ரசிகனோடு கனெக்ட் ஆக வேண்டும்.. இந்த படம் எந்த விதத்திலும் கனெக்ட் ஆகவில்லை என்பது வருத்தமே.. முக்கியமாக படத்தின் ஆரம்ப முதல் இறுதி வரை இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்று குழப்ப நிலையே நீடிக்கிறது.

காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா பணிகளில் பெரிய மெனக்கடல் தெரிகிறது.. சாத்தான்களுக்கு அவர் கொடுத்த வடிவமும் காஸ்டீமும் வித்தியாசமான கற்பனை.

கலை இயக்குனர் தோட்டா தரணியின் கலை வண்ணம் படம் முழுவதும் பிரம்மாண்டம்.. சாத்தான்கள் வாழும் இடம் அது பற்றிய குகை கல்லறை உள்ளிட்டு அனைத்தும் பிரம்மாண்டம்..

படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன்.. இவருக்கு மட்டும் கதை புரிந்தால் போதும் என நினைத்து விட்டாரோ? நமக்கு புரியாத படியே எடிட்டிங் செய்து விட்டார்..

தி அக்காலி இந்த படத்தின் தலைப்பே யாருக்கும் புரியவில்லை.. அப்படி இருக்கையில் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் முகமது ஆசிப் ஹமீத். நரபலி என்ற கதைக்களத்தை எடுத்து அத்துடன் சாத்தான் மனிதர்கள் வாழும் இடம் என தனக்குத் தெரிந்த அனைத்தையும் இதில் திணித்து காட்சிகளை சொல்ல முற்பட்டு இருக்கிறார்..

The Akkaali movie review

ஹிட் லிஸ்ட் விமர்சனம் 3.25/5.. செம ட்விஸ்ட்

ஹிட் லிஸ்ட் விமர்சனம் 3.25/5.. செம ட்விஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிட் லிஸ்ட் விமர்சனம் 3.25/5.. செம ட்விஸ்ட்

இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா-வை தன் சொந்த தயாரிப்பின் மூலம் அறிமுகப்படுத்துகிறார் கே.எஸ். ரவிக்குமார்.. குருவுக்கு சிஷ்யன் செய்யும் மரியாதை..

ஒன் லைன்…

நேர்மையான போலீஸ் அதிகாரி சரத்குமார்.. குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து ஹிட் லிஸ்ட்-டில் சேர்த்து விடுவார் என்பதால் இவரைக் கண்டாலே குற்றவாளிகளுக்கு பயம்.

ஸ்டோரி…

மனிதருள் எல்லா உயிர்களும் ஒன்றே.. இதில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை.. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரின் கொள்கையாகவே வாழ்பவர் நாயகன் விஜய் கனிஷ்கா.. இவர் மென்பொறியாளர். இவரது தாய் சித்தாரா.. இவரது தங்கை அபி நட்சத்திரா..

இவர் சுத்த சைவம்.. பெண்களை வலிய வந்து டேட்டிங் அழைத்தால் கூட செல்லாத உத்தமர் இந்த விஜய் கனிஷ்கா..

டிஎஸ்பி சரத்குமாரை நிகழ்ச்சி ஒன்றில் சந்திக்கிறார்.. சில நேரங்களில் நிகழ்ச்சி முடிந்து செல்ல தயாராகும் போது நாயகனுக்கு ஒரு மிரட்டல் போன் அழைப்பு வருகிறது.. உன் அம்மா மற்றும் தங்கையை கடத்தி வைத்திருக்கிறேன்.. நான் சொன்னதை செய்தால் அவர்களை விட்டு விடும் என்கிறார்.

அதன்படி என்ன செய்ய வேண்டும் என இவர் கேட்க 2 கோடி ரூபாய் பணம் வேண்டும் என்கிறார்.

அவ்வளவு பெரிய தொகை தன்னிடம் இல்லை என விஜய் கூறவே ஒரு பிரபல ரவுடியை கொன்று விட்டால் உன் அம்மா தங்கையை விடுதலை செய்கிறேன் என்கிறார். தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார் நாயகன்..

அதன் பிறகு என்ன செய்தார்.? எந்த உயிரையும் கொல்லக்கூடாது என வள்ளலார் வாக்கை காப்பாற்றும் இவர் வில்லனை கொன்றார்.? குடும்பத்தை காப்பாற்றினாரா? போன் வீடியோ காலில் மிரட்டும் அந்த மாஸ்க் மேன் யார்? இவர்களுக்கெல்லாம் என்ன தொடர்பு? விஜய்யின் நடவடிக்கையை கவனித்த போலீஸ் சரத்குமார் என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

அறிமுகமான முதல் படத்திலேயே தனக்கான கேரக்டரை தேர்ந்தெடுத்து அசரடித்து விட்டார் விஜய் கனிஷ்கா.. அதுவும் முதல் படத்தில் நாயகி வேண்டும் டூயட் வேண்டும் என்றெல்லாம் அடம் பிடிக்காமல் டைரக்டர் சொன்னதை கேட்டதற்காகவே இவரை பாராட்டலாம்.. நாயகியை நம்பாமல் தன்னை நம்பி மட்டுமே களமிறங்கி இருக்கிறார்.

80% படம் முடியும் வரை அப்பாவியாகவே தோன்றும் இந்த விஜய் கனிஷ்கா கடைசி 20 நிமிடங்களில் எடுக்கும் அவதாரங்கள் செம ட்விஸ்ட்.. (கொஞ்சம் ஓவர் தான்)

இவரும் மெகா வில்லன் கே.ஜி.எஃப். கருடா ராம் மோதும் இன்டெர்வல் சண்டைக்காட்சி வேற லெவல்.. தன் அம்மாவை காப்பாற்ற வேண்டும் இவர் துடிக்கும் சீன் அம்மா சென்டிமென்ட்..

என்கவுண்டர் போட்டு ஹிட் லிஸ்டில் சேர்த்துவிடும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக சரத்குமார்.. இவருக்கும் ஒரு அதிரடியான ஃபைட் வைத்து அவரது ரசிகர்களுக்கும் ஆக்ஷன் விருந்து கொடுத்திருக்கிறார்..

அம்மா சித்தாரா, தங்கை அபி நட்சத்திரா ஆகியோர் அருமையான நடிப்பு.. அதிலும் அபி சித்ரவதை பட்டு அழும் காட்சி இளம் பெண்களை கதற வைக்கும்..

டாக்டராக வரும் ஸ்மிருதி வெங்கட், தந்தையாக வரும் சமுத்திரக்கனி, ஹாஸ்பிடல் டீனாக வரும் கௌதம் மேனன் சிறப்பு.. அதிலும் கொரோனா காலத்தில் போராடிய டாக்டராக ஸ்மிருதி வெங்கட் நம் மனதை கலங்கடிக்கிறார்.. டாக்டராக டக்கர் நடிப்பை கொடுத்திருக்கிறார்..

ஐஸ்வர்யா தத்தா, பால சரவணன், முனீஸ்காந்த் உள்ளிட்டோரு பெரிதாக வேலை இல்லை..

டெக்னீசியன்ஸ்…

சி.சத்யாவின் பின்னணி இசை பிளஸ்.. பாடல் எங்கும் கதையை திசை திருப்பாத வண்ணம் கதையோடு பயணிப்பது சிறப்பு..

ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளரும் தங்கள் பணிகளில் சிறப்பு.. கவனமுடன் கையாண்டு உள்ளனர்..

கே எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்த
சூர்யகதிர் காக்கள்ளார் மற்றும் கார்த்திகேயன் இருவரும் குருநாதரின் பெயரைக் காப்பாற்றி விட்டனர்..

கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்களுக்காக போராடி உயிரை மீட்டெடுத்த மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்ற கருத்தை மையப்படுத்தி இந்த படத்தை முடித்து இருக்கிறார்கள்..

அதுபோல வேறு எவருக்கும் உயிருக்கு பிரச்சினை என்றால் ஒதுங்கி நிற்கும் நாம் நம் குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனை என்றால் துணிந்து நிற்கும் செயலையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.. இந்த உலகத்தில் இன்று வேறு ஒருவருக்கு நடக்கும் அநீதி நாளை உனக்கும் நடக்கும் என்று எச்சரிக்கையும் செய்திருக்கின்றனர்.

ஒரு உயிர் துடிப்பதை கண்டு துடிக்கும் உயிரே புனிதமானது.. அதுவே மனிதம்.. என்ற தத்துவத்தை நம் மனதில் பதிய வைக்கின்றனர்..

கடைசி 20 நிமிடங்களில் கிளைமாக்ஸ் இல் வைத்த திருப்புமுனை கொஞ்சம் நம்புபடியாக இல்லை என்றாலும் அது படத்தின் சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது.

சமூகத்தை நேசிக்கும் காவலர்களும் இங்கு இருக்கிறார்கள்… அவர்கள் மக்களுக்கு என்றும் துணை நிற்பார்கள் என்பதை சரத்குமார் கேரக்டரை வைத்து படத்தை முடித்து இருப்பது சிறப்பு..

ஆக இந்த ஹிட் லிஸ்ட்.. செம ட்விஸ்ட்

Hit List movie Review

கருடன் விமர்சனம் 4.25/5… கலக்கல் சம்பவம்

கருடன் விமர்சனம் 4.25/5… கலக்கல் சம்பவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கருடன் விமர்சனம் 4.25/5… கலக்கல் சம்பவம்

ஸ்டோரி…

சசிக்குமாரும் உன்னி முகுந்தனும் சிறு வயது முதலே சிறந்த நண்பர்கள்.. இவர்களுடன் இணைந்து கொண்டவர் சூரி.. சிறு வயது முதலே இவர்கள் ஒன்றாக வளர்கிறார்கள்.. உன்னிக்கு எதிராக எவன் வந்தாலும் சூரி எதிர்த்து நிற்பார்.. சசியின் அன்புக்கு கட்டுப்பட்டாலும் உன்னி முகுந்தனுக்கு விசுவாசி இவர்தான்.. அப்பத்தா வடிவுக்கரசி பெற்ற பிள்ளைகளை போல வளர்த்து வருகிறார்.

இவர்களின் நட்பை பார்த்து ஊரே பொறாமைப்படுகிறது.. ஒரு சிலர் பிரிக்க நினைத்தாலும் அது முடியாமல் போகிறது..

எந்த ஒரு பிரிக்க முடியாத உறவாக இருந்தாலும் அதை பிரித்து விடும் மூன்று பெண் பொன் மண் என்பது தெரிந்த ஒன்றுதான்.. இந்த மூன்று ரூபத்திலும் இந்த நண்பர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது..

இந்த சூழ்நிலையில் மினிஸ்டர் ஆர்வி உதயகுமார் மற்றும் தியேட்டர் ஓனர் மைம் கோபியின் சதி வலையில் விழுகிறார் உன்னி முகுந்தன்.. இதனால் சசிக்கு முன்னிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

இதன் பிறகு என்ன நடந்தது.? சூரி யாருக்கு ஆதரவாக செயல்பட்டார்? இவர்கள் பிரிந்தார்களா? வில்லன் சதித்திட்டம் வென்றதா என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விடுதலைப் படத்திலேயே விஸ்வரூப கதை நாயகனாக உருமாறி இருந்தார் சூரி.. அதனை மிஞ்சும் வகையில் இந்த கருடன் படத்தில் டன் கணக்கில் நடிப்பை கொடுத்திருக்கிறார். விசுவாசத்திற்கு மறுபெயர் சொக்கன் என்ற கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.

அண்ணனிடம் விசுவாசம் அண்ணியிடம் பாசம் காதலியிடம் நேசம் என அனைத்து விதத்திலும் சொக்கன் கேரக்டரில் சொக்க வைத்து விட்டார் சூரி.

சூரி இனி காமெடி செய்ய மாட்டாரா? என ஏங்கிய ரசிகர்களுக்காக ஒரு காட்சியில் பிரிகிடா அவரின் காதலை சொல்லும் போது தன்னை காதலித்து விட்டாரோ என எண்ணி இவர் செய்யும் ரகளை சூப்பர்..

தமிழ் சினிமாவில் நட்புக்கு கை கொடுக்கும் ஒரே நடிகர் சசிகுமார் தான்.. அந்த கேரக்டருக்கு பொருந்தி போகிறார் அவரது முடிவு சோகமா பெரும் சோகம்..

மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மிரட்டி இருக்கிறார்.. தவறான பாதையில் சென்றாலும் நட்புக்காக தயங்கி நிற்கும் காட்சி ரசிக்க வைக்கிறது.. அதே சமயம் திடீரென இவர் விஸ்வரூபம் எடுக்கும் காட்சிகள் மிரட்டல் ரகம்.. அவரது லாங் ஹேர் ஸ்டைல் தோற்றமும் வேற லெவல்..

மிகவும் நேர்மையான போலீசாக சமுத்திரக்கனி.. வில்லன் கோஷ்டி போலீசை பார்த்து எல்லா விஷயத்தையும் சொல்லியாச்சா? என்று அவர் கேட்கும் போது சிரிக்காமலும் சிந்திக்காமல் இருக்க முடியாது.

அப்பத்தா வடிவுக்கரசி… தன் அழகான நடிப்பின் மூலம் கேரக்டருக்கு சிறந்த வடிவம் கொடுத்திருக்கிறார்

சசிகுமாரின் மனைவியாக ஷிவதாநாயர், மற்றும் உன்னி முகுந்தனின் மனைவி, சூரியின் காதலியாக ரேவதி ஷர்மா & உன்னி மச்சானின் மனைவியாக பிரிகிடா உள்ளிட்டோரும் சிறப்பு..

இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டும் துரோகி என சூரியை ஷிவதாநாயர் மண் தூற்றி திட்டும் காட்சி கண்கலங்க வைக்கும்.

நாயகி ரேவதி ஷர்மாவின் மேனியும் அழகான கண்களும் வைத்த கண் வாங்காமல் பார்க்க தூண்டும்..

வில்லன்களாக வரும் ஆர்வி உதயகுமாரும் மைம் கோபியும் வில்லத்தனத்தில் சிறப்பு..

டெக்னீசியன்ஸ்…

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்… யுவன் இசையில் பாடல்கள் செம.. இன்டர்வெல் சீனில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.. சூரிக்கு சாமி வந்து மிரட்டும் காட்சி வேற லெவல் ரகம்..

படத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து.. எடிட்டரும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம்தான் இந்த கருடன்.. அழகான கதை நட்பு பாசம் துரோகம் விசுவாசம் என அனைத்தையும் மையப்படுத்தி கதை எழுதி இருப்பது சிறப்பு.

இந்த படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இதுவரை அவர் இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை எடுத்து இருக்கிறார்.

இதுவரை கொடுத்த அனைத்து படங்களுமே நல்ல பெயரை பெற்ற போதிலும் ஏன் இந்த நீண்ட இடைவெளி என்பது தான் தெரியவில்லை. அடுத்தடுத்து படங்கள் கொடுக்க துரை செந்தில் குமார் அவர்களை வாழ்த்துவோம்..

ஆக கருடன்.. கலக்கல் சம்பவம்

Garudan movie review

FIRST ON NET ‘குற்றப் பின்னணி’ விமர்சனம் 3.5/5.. கள்ளக்காதல் எச்சரிக்கை

FIRST ON NET ‘குற்றப் பின்னணி’ விமர்சனம் 3.5/5.. கள்ளக்காதல் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

FIRST ON NET ‘குற்றப் பின்னணி’ விமர்சனம் 3.5/5.. கள்ளக்காதல் எச்சரிக்கை

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 6-வது படம் ‘குற்றப் பின்னணி’..

‘வாங்க வாங்க’, ‘ஐ.ஆர்.8’ போன்ற படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

ஸ்டோரி…

‘ராட்சசன்’ படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த சரவணன் இந்தப் படத்தின் கதையின் நாயகனாக மாறியிருக்கிறார்.

இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பால்காரராக வேலை செய்து வசித்து வருகிறார். அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஒவ்வொரு வீட்டிற்கும் பால் கொடுத்து வியாபாரம் செய்து வருகிறார். அதன் பின்னர் வாட்டர் கேன் போடும் பிசினஸ் செய்து வருகிறார்.

ஒரு நாள் அதிகாலை 3 மணிக்கு ஒரு வீட்டிற்கு சென்று அங்கு உள்ள செல்வி என்ற இல்லத்தரசியை கழுத்தை நெரித்து கொலை செய்கிறார். தாலியால் அவரை கழுத்து நெறித்து கொலை செய்து விட்டு தாலியை மட்டும் எடுத்துச் செல்கிறார்..

கொலைக்கான எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸ் திண்டாடி வருகிறது.. சில நாட்களில் அந்தப் பெண்ணின் கள்ளக்காதலனையும் கொலை செய்கிறார்

இரு கொலை நடந்து முடிந்த சில தினங்களில் அதே பாணியில் வேறொரு வீட்டில் உள்ள கணவன் மனைவி இருவரையும் கொலை செய்கிறார்..

அடுத்தடுத்து சரவணன் கொலை செய்ய என்ன காரணம்? அவரது நோக்கம் என்ன? அவரது பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

கேரக்டர்ஸ்…

இதில் ‘ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபர் கேரக்டராக மிரட்டிய சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார்..

சினிமாவில் பல வருடங்களாக இருந்தாலும் சரவணனுக்கு முழு முகவரி கொடுத்த படம் ராட்சசன். அந்தப் படத்தில் கொடூர வில்லனாக ஜொலித்த இவர் இந்த படத்திலும் கொலைகாரன் என்றாலும் ஒரு அப்பாவியான தோற்றத்தில் வருகிறார்.

போலீஸ் தன்னைப் பிடித்து விடும் என்று தெரிந்து அவர் கொலைகள் செய்வது வித்தியாசமான நடவடிக்கை.. அதன் பின்னணியில் என்ன என்பதுதான் இந்த குற்றப் பின்னணி..

அலட்டிக் கொள்ளாத நடிப்பு அப்பாவியான முகம் என தன் கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார் சரவணன்.

மேலும் தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால், கராத்தே ராஜா மற்றும் பலர்..

இவருடன் நடித்துள்ள பல கலைஞர்களும் படத்தின் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கின்றனர்..

மற்றவர்களின் கேரக்டரை சொன்னால் கதையின் திருப்புமுனை தெரிந்து விடும்.. போலீஸ் அதிகாரிகள் நடித்த ஒவ்வொருவரும் எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர்.

எந்த விதத்திலும் அவர்கள் கமர்சியல் போலீசாக காட்டிக் கொள்ளாமல் ஒரு கிராமத்தில் நாம் பார்க்கும் போலீஸ் அதிகாரியாக வாழ்ந்திருக்கின்றனர்.

பல படங்களை வில்லனாக மிரட்டிய கராத்தே ராஜா இந்த படத்தில் முழுக்க முழுக்க பாசிட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

நாட்டில் நடக்கும் கள்ளக்காதல்.. கள்ளக்காதலால் தங்கள் பிள்ளைகளை கொல்லும் பெற்றோர்கள் என்ற கதைக்களத்தை எடுத்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் இஸ்மாயில்.

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவு – சங்கர் செல்வராஜ்,
இசை – ஜித்,
பாடல்கள் – என்.பி.இஸ்மாயில், ஜாபர் சாதிக்,
படத் தொகுப்பு – நாகராஜ்.டி,
சண்டைப் பயிற்சி இயக்கம் – ஆக்ஷன் நூர்,

பத்திரிகை தொடர்பு – வெங்கட்,
வசனம் – ரா.ராமமூர்த்தி,
தயாரிப்பு – ஆயிஷா – அகமல்,
கதை திரைக்கதை இயக்கம் – என்.பி. இஸ்மாயில்.

டிவி & நாளிதழ்களில் நாம் தினம் தினம் பார்க்கும் விபரீதமான விஷயங்களை திரைக்கதையாக அமைத்து இருக்கிறார்.. குறைந்த பட்ஜெட் படம் என்பதால் அதற்கு ஏற்றவாறு படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. இசையமைப்பாளரும் தன் பணியில் நேர்த்தி.. நாயகன் என்பதால் அவருக்கு காதல் பாடல் என்றெல்லாம் கதையை நீட்டாமல் விஷயத்தை சார்பாக சொல்லியிருக்கிறார்..

குற்றவாளிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறான்.. அவனது குற்றப் பின்னணி என்ன என்பதுதான் இந்த படத்தின் நோக்கம்.

நான் திருந்தி வாழ மாட்டேன் திரும்பி வருவேன் குற்றங்கள் நடக்கும் வரை எனது திட்டங்கள் தொடரும் என கள்ளக்காதலனுக்கும் கள்ளக்காதலிக்கும் எச்சரிக்கை கொடுத்திருக்கிறார் இந்த இயக்குனர் இஸ்மாயில்.

KUTTRA PINNANI movie review

புஜ்ஜி அட் அனுப்பட்டி பட விமர்சனம் 3.5/5.. Favorite Goat

புஜ்ஜி அட் அனுப்பட்டி பட விமர்சனம் 3.5/5.. Favorite Goat

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புஜ்ஜி அட் அனுப்பட்டி பட விமர்சனம் 3.5/5.. Favorite Goat

கஞ்சா போதை மது புகை வன்முறை நிறைந்த சினிமாவில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போக முடியாதா என ஏங்கும் பெற்றோர்களுக்காக வரவிருக்கும் படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’.

இந்த வாரம் மே 31ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஸ்டோரி…

சரவணன் & துர்கா இருவரும் அண்ணன் தங்க.. இவர்கள் ஒரு நாள் பள்ளி விட்டு வீட்டிற்கு வரும்போது ஒரு புதருக்குள் சிக்கிய ஆட்டுக்குட்டியை கண்டு அதைக் காப்பாற்றி வீட்டிற்கு எடுத்து வருகின்றனர்.

அந்த ஆட்டுக்குட்டிக்கு யாரும் உரிமை கொண்டாடாத நிலையில் இவர்களே அந்த ஆட்டை செல்லமாக வளர்த்து வருகின்றனர். இதற்குப் பெற்றோரும் சம்மதிக்க அவர்களின் பாதுகாப்புடன் புஜ்ஜி என்ற செல்ல பெயரிட்டு வளர்த்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் அந்த ஆட்டை இவர்களது குடிகாரத் தந்தை குடிக்க பணம் இல்லாமல் அனுப்பட்டி என்ற கிராமத்தில் விற்று விடுகிறார்.

இதற்காக ஆட்டுக்குட்டியை தேடி பள்ளிக்கு செல்லாமல் அனுப்பட்டி கிராமத்திற்கு செல்கின்றனர்.

அங்கு அவர்களால் ஆட்டை கண்டுபிடிக்க முடிந்ததா.? என்ன நடந்தது? தன் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளியின் பிள்ளைகளை காண முடியாமல் முதலாளி கமல் குமாரும் தேடி அலைகிறார்,.. இறுதியில் என்ன ஆனது.? ஆட்டை கண்டுபிடித்தார்களா குழந்தைகள்? குழந்தைகளை கண்டுபிடித்தாரா நாயகன் கமல்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்..

நாயகன் கமல் குமாரின் அறிமுக காட்சியே அசத்தல்தான்.. தோட்டத்து முதலாளியாக இருந்தாலும் அடவாடித்தனம் எதுவும் காட்டாமல் அன்பான மனிதராக வருகிறார். அதுவும் கோவை மொழி பேசி குழந்தைகளிடம் கொஞ்சம் இவரது அன்பு பிளஸ்.. நம்ம முதலாளி தங்க முதலாளி என்ற அளவுக்கு நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார்.

பள்ளி குழந்தைகளாக நடித்துள்ள சரவணன் மற்றும் துர்கா இருவரும் நடிப்பில் பாஸ் மார்க் பெறுகின்றனர்.. அதிலும் துர்காவாக நடித்துள்ள பிரணிதி 100 மார்க் பெற்று விடுகிறார்.. ஆட்டுக்குட்டி தொலைந்த பிறகு அந்த கூடைக்குள் அமர்ந்து கொண்டு அவரது ஏங்கும் முகமும் கண்களும் அழகு.

போலீசாக நடித்துள்ள வைத்தீஸ்வரியும் தன் நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார்.. அதிலும் உயிரதிகாரி தவறு செய்தாலும் அவர் தட்டிக் கேட்கும் குணம் பாராட்டுக்குரிய நடிப்பு.

ஆட்டுக்குட்டியை தேட துர்காவுடன் இணையும் இளம்பெண்ணும் நடிப்பில் கவருகிறார்.. அதுபோல பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் பையன் & கறிக்கடை பாய் உள்ளிட்ட வரும் தங்கள் பங்களிப்பில் சிறப்பு..

ஆட்டை திருப்பி தர வேண்டுமென்றால் 5000 ரூபாய் வேண்டும் என கறிக்கடை பாய் நிபந்தனை விதிக்கும் போது உடனே 3000 ரூபாய் திரட்டுவது ஓவர் தான்…

டெக்னீசியன்ஸ்…

ராம் கந்தசாமி என்பவர் எழுதி இயக்கி தனது கவிலயா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார்.

கார்த்திக் ராஜா இசையமைக்க கு.கார்த்திக் பாடல்களை எழுத படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் அருமை.. குழந்தைகளை மட்டுமே மையப்படுத்தி காட்சிகள் அமைத்திருக்கிறார் இயக்குனர்.. நாயகன் கமல் மற்றும் வைத்தீஸ்வரிக்கு ஒரு காதல் பாடல் வைத்து இளசுகளையும் கவர்ந்திருக்கலாம்.

பாடல்களை கு கார்த்திக் பாடல்கள் எழுதி இருக்கிறார்.. புஜ்ஜி புஜ்ஜி என்ற பாடல் குழந்தைகளுக்கு பிடித்த பாடலாக அமையும்..

அருண்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சரவணன் மாதேஸ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவை மாவட்ட அழகை கண்முன் கொண்டு வந்திருக்கின்றனர்.

அதிலும் முக்கியமாக கோவை மொழி பேசும் கோவப்படாத மக்கள் அழகு..

ஒரு வாயில்லா ஜீவன் என ஒரு ஆட்டை நினைத்தால் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.. ஒருவேளை அது மட்டன் கறியாக நினைப்பவர்களுக்கு செட் ஆகாது..

Kamals Bujji at Anuppatti movie review

More Articles
Follows