ஓயாத மரண ஓலங்கள்… ஆறாம் நிலம் விமர்சனம்

ஓயாத மரண ஓலங்கள்… ஆறாம் நிலம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்

இலங்கையில் ஓயாத போர்… ஓயாத மரண ஓலங்கள்…. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆறாத காயம்.. இவைதான் இலங்கையில் வாழும் தமிழர்களின் விதி. இன்னும் பல இன்னல்களை அவர்கள் அனுபவித்து வருவது நாம் அறிந்த ஒன்றுதான். இதை உலக நாடுகள் அறிய எடுக்கப்பட்ட படம் தான் இந்த “ஆறாம் நிலம்”.

2008 ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈழத்து போர் முடிவுக்கு வந்தபிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் சிங்கள இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் அதன் பிறகு என்ன ஆனார்கள்?

சரணடைந்தவர்கள் பலரை காணாமல் போனவர்கள் என்றும் அறிவித்துள்ளது.

சிங்கள இராணுவத்திடம் சரணடைந்தவர்களும் அவர்களின் குடும்பங்கள் எப்படியான சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்பதையே இந்தப் படம் உணர்வாக உணர்த்தியுள்ளது.

சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த தன் கணவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் அவரை தேடும் மனைவி, அப்பா எப்போது வருவார்? என்ற கேள்வியுடன் வாழும் மகள். இவர்களுக்கு ஆதரவாக ஒரு பாட்டி.

அவர்களின் கண்ணீர் துளிகளை நம் கண் முன் நிறுத்தியுள்ளார் இயக்குநர் அனந்த ரமணன்.

இலங்கையில் போர் முடிவுக்கு பிறகு, ஈழத்தமிழர்களுக்கு நல்லமுறையில் வாழ்வளிப்பதாகவும் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருவதாகவும் சிங்கள அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை என்ன தெரியுமா? போரின் போது பூமிக்கடியில் பதுக்கி வைக்கப்பட்ட கன்னி வெடிகளை எடுப்பது தான்.

ஒரு வேளை தவறுதாக எடுத்துவிட்டால் அதை வெடிக்க நேரிடும். எனவே நமக்கு மரணம் நிச்சயம்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் நவயுகா மற்றும் அவரது மகளாக நடித்திருக்கும் தமிழரசி, இருவரும் யதார்த்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

கன்னிவெடிகளை தேடி எடுக்கும் காட்சிகளில் நமக்கே பயம் தொற்றிக் கொள்ளும்.

பின்னனி இசையில் சிந்தக்கா ஜெயக்கொடி ரசிக்க வைக்கிறார்.

ஆனால் படம் எடுக்கப்பட்ட விதம் நம்மை சோதிக்கிறது. ஒரு டாக்குமெண்டரி படம் தான் என்றாலும் அதை ரசிக்கும் வகையில் கொடுக்க வேண்டாமா? அரசு விளம்பரங்களையும் நாடகங்களையும் பார்த்தால் எப்படி சலிப்பு தட்டுமோ? அதுபோல லைவ் ரெக்கார்ட்டிங் செய்துள்ளதால் வாய்ஸ் சரியாக இல்லை. அதை சரி செய்திருக்கலாம்.

இந்த ‘ஆறாம் நிலம்’ படம் வரும் 24 ஆம் தேதி ஐபிசி தமிழ் (IBC Tamil) யூடியுப் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

 

Aaram Nilam movie review and rating in Tamil

டக் அவுட்டான ஹர்பஜன்சிங்.. லாஸ் ஆன லாஸ்லியா; பிரண்ட்ஷிப் விமர்சனம்

டக் அவுட்டான ஹர்பஜன்சிங்.. லாஸ் ஆன லாஸ்லியா; பிரண்ட்ஷிப் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சினிமாவில் அறிமுகமாகிறார். அதுவும் முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்துள்ளார். (டிக்கிலோனா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அது முதலில் வந்துவிட்டது)

கதைக்களம்..

ஹர்பஜன் சிங், சதீஷ், KPY பாலா மற்றும் சில நண்பர்கள் ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கின்றனர். (காலேஜ்ஜில் இணைந்த பின்தான் இவர்கள் ப்ரெண்ட்ஸ்)

இவர்கள் மெக்கானிக்கல் துறையிலேயே ஒரே ஒரு பெண் படிக்க வருகிறார். அவர்தான் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா. அவருக்கும் சினிமாவில் இதுதான் முதல் படம்.

ஒரு கட்டத்தில் இவர்கள் அனைவரும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸாக மாறுகிறார்கள்.

அப்போதுதான் லாஸ்லியாவிற்கு ஒரு நோய் இருப்பதாகவும் அவர் சில மாதங்களில் இறந்துவிடுவார் என நண்பர்களுக்கு தெரிய வருகிறது.

அதன்பிறகு அவர்கள் என்ன செய்தார்கள்? லாஸ்லியாவின் நோய் என்ன? குணமானதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அறிமுக காட்சியிலேயே ரஜினி பாட்டுடன் அதகளம் செய்கிறார் ஹர்பஜன் சிங். அதன்பிறகு தான் ஒன்றுமே பேசாமல் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட் போல படம் முழுக்க வருகிறார்.

இவர்தான் படத்தின் நாயகன் என்பதால் உள்ளே ஒரு டிஷர்ட் போட்டு வெளியே பட்டன் போடாத சட்டையோடு வலம் வருகிறார்.

ஹர்பஜனை படத்திலும் சிங் ஆகவே காட்டியிருக்கிறார்கள். ஆனால் பக்க தமிழில் பேசுகிறார். அதையாவது கவனித்திருக்கலாம் இயக்குனர்.

இதுநாள் வரை சிவகார்த்திகேயன் படங்களில் (அவரது படங்களில் மட்டுமே) காமெடி மட்டுமே செய்துவந்த சதீஷ் இதில் கொஞ்சம் குணச்சித்திர கேரக்டரில் முயற்சித்துள்ளார். இவர்தான் படத்தின் நாயகன் என்று கூட சொல்லலாம்.

பரபரப்பான காட்சியாக காட்டப்படும் காலேஜ் கேட் மூடும் காட்சியில் சதீஷ் கொஞ்சம் பேசுகிறார்.. ஹர்பஜன் டோட்டல் ஆஃப் ஆகிவிடுகிறார்.

காமெடியை விட சென்டிமென்ட் காட்சிகள் சதீஷுக்கு கைகொடுத்துள்ளது.

படவா கோபி மற்றும் பாலா கிரிக்கெட் கமெண்ட் என்ற பெயரில் அறுத்துவிடுகின்றனர். ஹர்பஜனுக்காக கிரிக்கெட் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சரி அதையாவது கிராபிக்ஸ் இல்லாமல் ரியலாக எடுத்திருக்கலாம். அப்பட்டமாக தெரிகிறது.

சுட்டித்தனமாக இருக்க முயற்சித்துள்ளார் லாஸ்லியா. ஆனால் பல இடங்களில் இவரது நடிப்பு செயற்கைத்தனமாக உள்ளது.

கிளைமாக்ஸ் நெருங்கும் போது வருகிறார் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவரது காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

வில்லத்தனத்தில் வெங்கட் சுபா மற்றும் ஜே.எஸ்.கே. சிறப்பு.

டெக்னீஷியன்கள்..

உதயகுமார் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை ஓகே ரகம். சாந்த குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து.

நட்பை மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. ஆனால் இதில் நட்பை இன்னும் அழுத்தமாக காட்டியிருக்கலாம்.

இயக்குனர்கள் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரும் இன்னும் கவனம் செலுத்திருக்க வேண்டும். நட்பும் சரி சென்டிமெண்ட்டும் சரி எதிலும் நம் மனம் அவற்றுடன் ஒன்றவில்லை.

ஹர்பஜன் சிங் இனியாவது கிரிக்கெட்டை போல நடிப்பில் சிக்ஸர் அடிக்க வாழ்த்துவோம். லாஸ்லியா இன்னும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தால் சினிமாவிலும் லேடீ பாஸ் ஆகலாம்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசியிருக்கிறார்கள். எனவே படக்குழுவுக்கு வாழ்த்துகள்.

friendship movie review rating

அலட்சியத்தில் விஜய்சேதுபதி.. அப்பா பெயரை கெடுக்கும் தீபக்.. அனபெல் சேதுபதி விமர்சனம் 1.5/5

அலட்சியத்தில் விஜய்சேதுபதி.. அப்பா பெயரை கெடுக்கும் தீபக்.. அனபெல் சேதுபதி விமர்சனம் 1.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, டாப்சி பன்னு, ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு, ராஜந்திரபிரசாத்;
இசை: கிருஷ்ண கிஷோர்
ஒளிப்பதிவு: ஜார்ஜ் கௌதம்
இயக்கம்: தீபக் சுந்தர்ராஜன் (இவர் நடிகர் சுந்தர்ராஜனின் மகன் முதல் படம்)

கதைக்களம்…

நம் நாடு இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை.

அந்த அரண்மனையில் உள்ளே யாரும் செல்வதில்லை. ஏனென்றால் அங்கு நிறைய பேய்கள் இருக்குதாம்.

ஒரு பௌர்ணமி தினத்தன்று யார் அங்கு தங்கி அங்கு (பேய் உடம்பில் புகுந்துவிடும்) சமைத்து சாப்பிட்டால் அவர்களும் இறந்துவிடு பேயாகிவிடுவார்கள்.

ஒருவேளை அவர்கள் இறக்கவில்லை என்றால் அங்கிருந்து தப்பிவிடலாம் என ஒரு பயங்கர பேய் கதையும் சொல்கிறார்கள்.

அந்த அரண்மனையின் ரகசியம் என்ன? ராஜா ஏன் அப்படி கட்டினார்? அவருக்கு வாரிசுகள் இல்லையா? என்பதே ‘அனபெல் சேதுபதி’ படத்தின் கதை.
இதன்பிறகு ஒரு ப்ளாஷ்பேக் காதல் காட்சியும் இருக்கு.

கேரக்டர்கள்..

படத்தின் நாயகன் யோகிபாபு எனலாம். இவர்தான் பேய்களும் நமக்கும் கதை சொல்கிறார். படம் முழுக்க இவர் வருகிறார். மனிதர் பல சினிமாக்களில் நடிப்பதால் காமெடி செய்ய நேரம் இல்லை போல. கவனிக்கவும்.

படத்தின் பிற்பாதியில் விஜய் சேதுபதி வருகிறார். திருமண வரவேற்புக்கு மணமகன் அணியும் டிரஸ்களை போடுகிறார். ஓ… இவர்தான் ராஜாவாம். அதுபோல டிரெஸ் போட்டத்தான் நம்புவாங்களாம். அந்த அரண்மனையில் ஓரிரு வரை தவிர யாருமே இல்லை.

லாபம், துக்ளக் தர்பார் என சமீபகால படங்களைப் போல இதிலும் அலட்சியமாகவே வருகிறார். நிறைய படங்களில் நடிப்பதால் இவருக்கும் சிரமம் எடுத்து நடிக்கதோன்றவில்லை போலும். இதில் இல்லாமல் நிறைய மேடைகளில் அரசியல் பேச வேண்டும். டிவிக்களில் ஷோ நடத்த வேண்டும். என பிசியாக இருக்க நினைக்கிறார் போலும். கொஞ்சமாச்சும் நடிங்க பாஸ்.

விஜய்சேதுபதி டாப்சி பிளாஷ்பேக் காட்சிகள் நிறைவு. தமிழிலேயே பேசும் விஜய், ஆங்கிலத்திலேயே பேசும் டாப்ஸீ… காதல் மொழி நம்மை ரசிக்க வைக்கிறது.

டாப்சி தன் கேரக்டரில் பெரிதாக குறை வைக்கவில்லை. ஆனால் மற்றவர்கள் நம்மை சோதிக்கும்போது இவரால் என்ன செய்ய முடியும்.

ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு, ராஜந்திர பிரசாத் இவ்வளவு பேர் இருந்தும் நம்மை சிரிக்க வைக்க ரசிக்க வைக்க யாராலும் முடியவில்லை.

டெக்னீஷியன்கள்..

கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு அரண்மனையின் அழகும் அனபெல் டாப்ஸீயை அழகும் படத்திற்கு ப்ளஸ்.

இசையமைப்பாளர் கிருஷ்ணா கிஷோர் பின்னணி இசையில் சிறப்பு. ஆனால் பாடல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். எனவே மதராசப்பட்டினம் காட்சிகள் போல காதலை அழகாக காட்டியிருக்கிறார்.

திருமதி பழனிச்சாமி, வைதேகி காத்திருந்தாள், ராஜாதி ராஜா என ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனரின் தந்தை சுந்தர்ராஜன். அவரை போல இல்லாவிட்டாலும் அவரின் பெயரை கெடுக்காமல் இருந்தால் சரி.

இயக்குனருக்கு ஒரு அட்வைஸ்.. : ஒரு படம் வெற்றி பெற்றால்தான் பார்ட் 2 வரும். இந்த படத்தின் க்ளைமாக்சில் பார்ட் 2 விரைவில் என்கிறார்கள். அடேய்… கொல்லாதீங்க..

ஏழைகளின் தலைவன்..; கோடியில் ஒருவன் விமர்சனம் 3.5/5

ஏழைகளின் தலைவன்..; கோடியில் ஒருவன் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோடியில் ஒருவன் ஆத்மிகா, கோடியில் ஒருவன் பாடல்கள், விஜய் ஆண்டனி கோடியில் ஒருவன், மெட்ரோ இயக்குனர் கோடியில் ஒருவன்

மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மீகா ஜோடியாக நடித்துள்ள படம் கோடியில் ஒருவன்.

கதைக்களம்.

தன் ஏழை தாய் ஆசைப்பட்டப்படி ஒரு ஐஏஎஸ் ஆகி இந்த நாட்டுக்கு சேவை செய்ய நினைக்கிறார் விஜய் ஆண்டனி.

என ஐஏஎஸ் பயிற்சிக்காக சென்னையில் ஒரு சேரி பகுதியில் தங்கி படிக்கிறார். அங்கு போதை பழக்கத்துக்கு அடிமையான சிறார்களை நல்வழிப்படுத்த டியூசன் எடுக்கிறார்.

இதனால் அங்குள்ள போதை விற்பனையாளர்களின் கோபத்திற்கு ஆளாகிறார். அவர்களை சமாளிக்க தனக்கு பதவி வேண்டும் என நினைத்து அரசியலில் நுழைகிறார்.

அவருக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா? அம்மாவின் ஆசையை நிறைவேற்றினாரா? ஐஏஎஸ் லட்சியம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பொறுமை கோபம் ஆக்சன் அம்மா சென்டிமெண்ட் இவை விஜய் ஆண்டனிக்கு அல்வா சாப்பிடுவது போல. எனவே இதில் அனைத்திலும் அசத்தியிருக்கிறார். ஒவ்வொரு வீடாக சென்று மாணவனை படிக்க சொல்லி கேட்பது நம்மை கலங்க வைக்கும். கவுன்சிலர் ஆகி இவர் எடுக்கும் நடவடிக்கை ரசிக்க செய்கிறது.

விஜய் ஆண்டனிக்கு சுட்டு போட்டாலும் ரொமான்ஸ் வராது. எனவே நாயகியுடன் லவ் என்பதை மறந்துவிட வேண்டியதுதான்.

ஆத்மிகா அழகாக வருகிறார். ஒரு சில காட்சிகள் வந்து டூயட் பாடுகிறார். நாயகன் லட்சிய பயணத்தில் கொஞ்சம் இவருக்கும் காட்சிகள் கொடுத்திருக்கலாம்.

இவர்களுடன் சுல்லு, ராமசந்திர ராஜு, சூப்பர் சுப்புராயன், பூ ராமு, ஆதித்யா கதிர் ஆகியோர் தங்கள் கேரக்டரில்களில் நிறைவு. வில்லன்கள் அனைவரும் மிரட்டல்.

டெக்னீஷியன்கள்…

N.S.உதய குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு. அதுவும் சென்னை நகர சேரி மக்களின் வீடுகளும் அந்த சாக்கடை பகுதிகளை எப்படித்தான் படம் பிடித்தாரோ?

குப்பைகளை விஜய் ஆண்டனி பொறுக்கி எடுக்கும் காட்சி நம்மை முகம் சுளிக்க வைக்கும். அதில் நடித்தவர்கள் பாராட்ட வேண்டும்.

நிவாஸ் K பிரசன்னா இசையில் பாடல்கள் ஓகே ரகம். தாய் சென்டிமெண்ட் பாடல் பாட வைக்கிறது. பின்னணி இசை மிரட்டல். ஆக்சன் காட்சிகள் அனல் பறக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மேத்திவ் தெறிக்க விட்டுள்ளார்.

மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். அதில் செயின் திருடர்களை ஸ்கெட்ச் போட்டு காட்டியிருப்பார்.

இதில் வார்டு மெம்பர் முதல் கவுன்சிலர் வரை… அவர்களின் ஊழல் தோலை உரித்திக் காட்டியிருக்கிறார். ஒரு சட்டசபையை போல மாநகராட்சி அரங்கம் இருப்பதும் அதில் இத்தனை உறுப்பினர்களா? என உள்ளாட்சி பற்றி பாடமும நடத்தியிருக்கிறார்.

ஒரு மாநகராட்சி தேர்தலை இன்ச் பை இன்ச் ஆக காட்டிய இயக்குனர் பொதுத் தேர்தலை டிவியில் மட்டும் காட்டிவிட்டார். நாயகனுக்கு மக்கள் ஆதரவு எப்படி கிடைத்தது? வீட்டை விட்டே வெளியே வராத விதவை தாய் தன் மகனை எப்படி படிக்க வைத்தார்? என்பதற்கான விடைகள் இல்லை.

இந்த லாஜிக்கை எல்லாம் மறந்து தாய் சென்டிமெண்ட் பாட்டு ஆக்சன் சமூக அக்கறை என அனைத்தைதையும் கலந்துக் கொடுத்திருக்கிறார் டைரக்டர்.

ஆக இந்த “கோடியில் ஒருவன்” ஏழைகளின் தலைவன்.

டைம் ட்ராவலில் ஜாலி ட்ரிப்..; டிக்கிலோனா விமர்சனம் 3.25/5

டைம் ட்ராவலில் ஜாலி ட்ரிப்..; டிக்கிலோனா விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னோட்டம்..

‘இன்று நேற்று நாளை’ & ‘ஓ மை கடவுளே’ போன்ற 2 படங்களை மிக்ஸ் செய்து அதை காமெடி ஜாலி லோனாவாக கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி.

2020 முதல் 2027 வரை உள்ள காலக் கட்டத்தில் நகரும் டைம் ட்ராவல் படம் இது.

கதைக்களம்…

2020ல் தான் காதலித்த பெண் அனகாவை திருமணம் செய்து கொள்கிறார் சந்தானம். ஹாக்கி வீரராக ஆக வேண்டும் என்பதே இவரது லட்சியம்.

7 ஆண்டுகள் உருண்டோடுகிறது… ஆனால் ஹாக்கி ஆசை நிறைவேறாத காரணத்தால் வேறு வழியில்லாமல் அரசு மின்சார துறையில் EB மேனாக வேலை பார்க்கிறது.

இவரின் திருமண வாழ்க்கை கசக்கிற வேலையில் நண்பர் யோகி பாபுவை சந்திக்கிறார். அவரின் உதவியாலும் டைம் டிராவல் மெசின் உதவியாலும் 2020 ஆண்டுக்கு சென்று தன் திருமணத்தை நிறுத்த நினைக்கிறார்.

அதன்படி 2020க்கு செல்ல அங்கு ஏற்கெனவே உள்ள சந்தானம் திருமணம் நடக்க வேண்டும் என்கிறார்.

இதனால் இருவருக்கும் மோதல் முற்றுகிறது.

இறுதியில் தனது திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? 2027 ஆம் ஆண்டிற்கு திரும்பி வந்தாரா? இருவருக்குள் மோதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சந்தானத்தின் வழக்கமான டைமிங் மற்றும் ரைமிங் காமெடி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

சில பல இடங்களில் டயலாக் பஞ்சம் ஏற்படுகிறது. பப்புவை பார்த்தால் … இது பப்புவா தண்ணீர் ஊற்றி வைக்கிற டப்புவா? என்கிறார். எய்ன்ஸ்டீனா? தார் ஊத்துன என்ஜீனா? என கேட்கிறார்.

இது போல மொக்க ஜோக்குகளை விஜய் டிவியில் அடிக்கடி பார்க்கலாம்.

சந்தானத்தின் உடல் எடை ஒரேடியாக குறைந்துவிட்டது போலும். எனர்ஜி இல்லாமல் இருப்பதாக தோன்றுகிறது. இதுல 3 சந்தானம் வேற… ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் உள்ள லுக் கூட இதில் இல்லை.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் அனகா, மற்றும் ஷெரீன் காஞ்வாலா இருவரும் ரொம்ப அழகு. இவர்களின் நடிப்பில் குறையில்லை.

ஆல்பர்ட் எய்ன்ஷ்டீனாக வருகிறார் யோகிபாபு. சிறிது நேரமே வந்தாலும் கலகலப்பாக்கி விடுகிறார்.

அடி முட்டாளாக வரும் ஆனந்த் ராஜ் மற்றும் முனிஸ்காந்த்தின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. இவர்களின் காமெடி திரைக்கதைக்கு பெரிதாக உதவியிருக்கலாம்.

கெஸ்ட் ரோலில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். இவர் விளையாட்டு வீரர்களை என்க்ரேஜ் செய்யும் பணியை செய்திருக்கிறார்.

டெக்னீஷியன்ஸ்…

‘டைம் டிராவல்’ படங்கள் இப்போது அடிக்கடி வருவதால் நம்மால் இந்த கதையை யூகிக்க முடிகிறது.

ஆனால் இதை கலகலப்பாக கொடுத்து இருப்பதால் எந்த லாஜிக்கும் பார்க்க வேண்டாம். எனவே இயக்குனர் கார்த்திக் யோகியை பாராட்டலாம்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஓகே ரகம். குறிப்பாக கமல் பட ரீமேக் பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது.

அர்வியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.

இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிமாஸும் இணைந்து தயாரித்துள்ளனர்.

மொத்தத்தில் ‘டிக்கிலோனா’ .. டைம் ட்ராவலில் ஜாலி ட்ரிப்

Dikkiloona movie review and rating in Tamil

நையாண்டி (அரசியல்) தர்பார்..; துக்ளக் தர்பார் விமர்சனம்

நையாண்டி (அரசியல்) தர்பார்..; துக்ளக் தர்பார் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தாய் தந்தையை இழந்தவர்கள் விஜய் சேதுபதி & அவரது தங்கை மஞ்சிமா மோகன்.

அரசியலில் குதித்து பெரிய ஆளாக வர வேண்டும் என துடிக்கிறார் விஜய்சேதுபதி. எனவே பார்த்திபன் கட்சியில் நுழைந்து அவரது ஆதரவைப் பெற்று அவரின் விசுவாசி ஆகிறார்.

இதற்கிடையில் ஒருநாள் விஜய் சேதுபதிக்கு மண்டையில் அடிப்பட்டதால் அவர் இரண்டு ஆள்கள் போல இரண்டு விதமாக நடந்து கொள்கிறார். ஒருவன் நல்லவனாக ஒருவன் கெட்டவனாக.

இதனால் அரசியலில் நிறைய பிரச்சினைகளை சந்திக்கிறார்.

இதன்பிறகு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி.

ஆனால் இரண்டுக்கும் வித்தியாசமில்லை. அந்நியன் பாணியில் காட்டியிருக்கலாம்.

பக்ஸ் பகவதி பெருமாள் & கருணாகரனின் நடிப்பு படத்திற்கு பலம்.

ராஷி கண்ணா & மஞ்சிமா என இரண்டு நாயகிகள் உள்ளனர். மஞ்சிமாவுக்கு டயலாக் கூட இல்லை. அய்யோ பாவம்..

தனக்கே உரிய நக்கல் நையாண்டியுடன் அசத்தி இருக்கிறார் பார்த்திபன். பலே சார்.

கிளைமாக்ஸ் வருகிறார் லொள்ளு மன்னன் சத்யராஜ். ஒரே காட்சியில் ரசிகர்களின் கைத்தட்டலை தட்டிச் செல்கிறார்.

டெக்னீஷியன்கள்..

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. பாடல் காட்சிகளும் கவரவில்லை.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு சிறப்பு.

இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் ஒரு அரசியல் நையாண்டி தர்பார் நடத்தி இருக்கிறார். அதில் விஜய்சேதுபதிக்கு ஒரு வித்தியாசமான நோயை காட்டியிருக்கிறார்.

ஆனால் அதில் பெரிதாக வலுவில்லை. மஞ்சிமாவை ஏன் சிஸ்டராக வைத்தார் என தெரியல.

மொத்தத்தில் ‘துக்ளக் தர்பார்’… நையாண்டி தர்பார்

Tughlaq Durbar movie review and rating in Tamil

More Articles
Follows