தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்
இலங்கையில் ஓயாத போர்… ஓயாத மரண ஓலங்கள்…. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆறாத காயம்.. இவைதான் இலங்கையில் வாழும் தமிழர்களின் விதி. இன்னும் பல இன்னல்களை அவர்கள் அனுபவித்து வருவது நாம் அறிந்த ஒன்றுதான். இதை உலக நாடுகள் அறிய எடுக்கப்பட்ட படம் தான் இந்த “ஆறாம் நிலம்”.
2008 ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈழத்து போர் முடிவுக்கு வந்தபிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் சிங்கள இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் அதன் பிறகு என்ன ஆனார்கள்?
சரணடைந்தவர்கள் பலரை காணாமல் போனவர்கள் என்றும் அறிவித்துள்ளது.
சிங்கள இராணுவத்திடம் சரணடைந்தவர்களும் அவர்களின் குடும்பங்கள் எப்படியான சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்பதையே இந்தப் படம் உணர்வாக உணர்த்தியுள்ளது.
சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த தன் கணவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் அவரை தேடும் மனைவி, அப்பா எப்போது வருவார்? என்ற கேள்வியுடன் வாழும் மகள். இவர்களுக்கு ஆதரவாக ஒரு பாட்டி.
அவர்களின் கண்ணீர் துளிகளை நம் கண் முன் நிறுத்தியுள்ளார் இயக்குநர் அனந்த ரமணன்.
இலங்கையில் போர் முடிவுக்கு பிறகு, ஈழத்தமிழர்களுக்கு நல்லமுறையில் வாழ்வளிப்பதாகவும் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருவதாகவும் சிங்கள அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை என்ன தெரியுமா? போரின் போது பூமிக்கடியில் பதுக்கி வைக்கப்பட்ட கன்னி வெடிகளை எடுப்பது தான்.
ஒரு வேளை தவறுதாக எடுத்துவிட்டால் அதை வெடிக்க நேரிடும். எனவே நமக்கு மரணம் நிச்சயம்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் நவயுகா மற்றும் அவரது மகளாக நடித்திருக்கும் தமிழரசி, இருவரும் யதார்த்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
கன்னிவெடிகளை தேடி எடுக்கும் காட்சிகளில் நமக்கே பயம் தொற்றிக் கொள்ளும்.
பின்னனி இசையில் சிந்தக்கா ஜெயக்கொடி ரசிக்க வைக்கிறார்.
ஆனால் படம் எடுக்கப்பட்ட விதம் நம்மை சோதிக்கிறது. ஒரு டாக்குமெண்டரி படம் தான் என்றாலும் அதை ரசிக்கும் வகையில் கொடுக்க வேண்டாமா? அரசு விளம்பரங்களையும் நாடகங்களையும் பார்த்தால் எப்படி சலிப்பு தட்டுமோ? அதுபோல லைவ் ரெக்கார்ட்டிங் செய்துள்ளதால் வாய்ஸ் சரியாக இல்லை. அதை சரி செய்திருக்கலாம்.
இந்த ‘ஆறாம் நிலம்’ படம் வரும் 24 ஆம் தேதி ஐபிசி தமிழ் (IBC Tamil) யூடியுப் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
Aaram Nilam movie review and rating in Tamil