தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆலகாலம் விமர்சனம் 3.5/5.. குடிகார அரசு காலம்
ஒரு அரசாங்கமே தன் நாட்டு மக்களை போதைக்கு அடிமையாக்கி வைத்திருப்பதை பார்த்து வருகிறோம்.. ஒழுக்கமான மாணவன் ஒருவன் தவறான நண்பர்களின் சகவாசத்தால் போதைக்கு அடிமையாகி தன் லட்சியத்தை இழந்து பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கையே இந்த ஆலகாலம்..
ஸ்டோரி…
சாராய குடிப்பழக்கத்தால் தன் கணவனை இழக்கிறார் ஈஸ்வரி ராய்.. இதனால் சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்து தாய் வளர்ப்பிலேயே வளர்கிறார் நாயகன் ஜெய் கிருஷ்ணமூர்த்தி.
எனவே தன் மகனை நேர்மையாக ஒழுக்கமாக வளர்த்து ஒரு நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும் என பாடுபடுகிறார் தாய் ஈஸ்வரி ராய்.. கல்லூரி மேற்படிப்புக்காக நகரத்திற்கு செல்கிறார் நாயகன் ஜெய்.
இவர் அழகில்லை என்றாலும் இவரின் திறமை படிப்பு ஆகியவற்றால் கவரப்படுகிறார் நாயகி சாந்தினி. ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கின்றனர்..
கல்லூரி நண்பர்களின் சகவாசத்தால் கொஞ்சம் கொஞ்சமாக சரக்கு அடிக்க கற்றுக் கொள்கிறார்.. ஒரு நாள் சரக்கு அடிக்கும் போது சாந்தினி உன்னை நிஜமாக காதலிக்கவில்லை என சவால் விடுகின்றனர் அவரது நண்பர்கள்.
இதனால் காதலிப்பது உண்மையா? என நாயகன் கேட்க இதை நிரூபிக்கும் வகையில் கல்லூரி வளாகத்திலேயே நாயகன் ஜெய் உதட்டில் முத்தமிடுகிறார் சாந்தினி.
இதனால் இருவரையும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேறு வழியின்றி சாந்தினியை திருமணம் செய்து கொண்டு வெளியே வீடு எடுத்து தங்கி வசிக்கிறார். இது எதுவும் அம்மாவுக்கு தெரியக்கூடாது எனவும் வேண்டுகோள் வைக்கிறார்
புதுமண ஜோடிக்கு வீடு எடுத்துக் கொடுத்து உதவி செய்கிறார் தீபா சங்கர்..
படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரத்திற்காக கட்டிட வேலைக்கு தின கூலியாக செல்கிறார் நாயகன் ஜெய். அங்கு எடுபுடி தங்கதுரையுடன் ஏற்படும் சகவாசத்தால் மேலும் குடிக்கு அடிமையாகிறார்..
பிறகு என்ன ஆச்சு? தாய்க்கு தெரிந்ததா.? குடிகாரன் திருந்தினானா? குடியால் குடும்பம் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
ஈஸ்வரி ராவ், சாந்தினி தமிழரசன், ஜெய கிருஷ்ணமூர்த்தி, தங்கதுரை, கோதண்டம், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
படத்தின் இயக்குனரே நாயகனாக நடித்திருக்கிறார்.. இடைவேளைக்கு முன்பு வரை இவருக்கும் சாந்தினிக்கும் உள்ள காதலில் எந்த கெமிஸ்ட்ரியும் இல்லை. இவரது நடிப்பும் கவரவில்லை.
ஆனால் ஒரு கட்டத்தில் ஜெய் முழு குடிகாரனாக மாறிய பிறகு நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.. முக்கியமாக ஒற்றை காலை இழந்த பின் அவர் படும் வேதனைகள் பிச்சை எடுப்பது முதல் சரக்குக்காக அலைந்து மிச்சமுள்ள பாட்டில்களை குடித்து நக்கி எடுக்கும் காட்சிகள் நடிப்புக்கு நல்ல உதாரணம்.
தந்தை இல்லாத ஒரு மகனை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை தன் நடிப்பில் உணர வைத்திருக்கிறார் ஈஸ்வரி ராய்.. தன் மகன் வேலைக்கு சென்று விட்டால் தன் குடும்ப பாரம் குறையும் என்ற நினைப்பில் வாழும் ஒவ்வொரு அம்மாக்களுக்கும் இந்த காட்சிகள் சமர்ப்பணம்..
நாயகன் யார்? அவர் தனக்கு பொருத்தமானவரா.? என நாயகி சாந்தினி பார்க்காமல் தனக்கான தமிழ் கேரக்டரை உணர்ந்து ஒரு குடும்பத் தலைவியாக அழகாக செய்து இருக்கிறார்..
காதலனை நம்பி பெற்றோரை விட்டு வெளியே ஓடிச் செல்லும் பெண்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்.. காதலித்து ஓடிப் போகும் எல்லா பெண்களின் நிலை இதுவல்ல என்றாலும் இந்தப் படம் உதாரணம்.
குடிகார கணவனுக்கு வாக்கப்பட்ட பெண்களின் நிலை அறிந்து அவருக்கு உதவும் பக்கத்து வீட்டு அக்காவாக தீபா ஷங்கர் நடித்திருக்கிறார்.. குழந்தை இல்லாத தனக்கு ஒரு தாயின் வலி புரியும் என அவர் பேசும் காட்சிகள் கண் கலங்க வைக்கும்.
டெக்னீசியன்ஸ்….
இசை : என் ஆர். ரகுநந்தன்
இயக்கம்: ஜெய் கிருஷ்ணமூர்த்தி
ஒளிப்பதிவு : க சத்யராஜ்
படத்தொகுப்பு: காசி விஸ்வநாதன்
தயாரிப்பு: ஜே கிருஷ்ணமூர்த்தி
ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் ஆலக்காலம் படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பாக ஜெனீஸ் வெளியிடுகிறார்.. இவர் தொடர்ந்து சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.
சத்யராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை.. பாடல் காட்சிகளில் நாயகனின் நடிப்பு மெச்சும் அளவுக்கு இல்லை என்றாலும் ஒளிப்பதிவில் எந்த குறையும் இல்லை.. எடிட்டர் காசி விஸ்வநாதன் தன் பணியை நேர்த்தி..
ரகு நந்தனின் இசையில் பாடல் வரிகள் புரியும் வகையில் இருப்பது சிறப்பு.. பின்னணி இசையும் அருமை..
இடைவேளைக்கு பிறகு தான் கதை ஓட்டம் விறுவிறுப்பாக செல்கிறது. குடியால் கெட்டுப்போன குடும்பம்.. இதனால் சமூகத்தில் கிடைக்கும் அவமானங்கள் என அனைத்தையும் எதார்த்தமாக சொல்லி இருக்கிறார்..
குடியால் நல்ல ஒரு மகனை இழந்த ஒரு தாயின் வலி எப்படி இருக்கும் என்பதை ஈஸ்வரி ராய் தன் உணர்ச்சிகரமான நடிப்பில் காட்டியிருக்கிறார்.. குடியால் எத்தனை குடும்பங்கள் சீரழிகிறது இனியாவது நல்லதொரு விடியலை மக்களுக்கு அரசாங்கம் தரவேண்டும்..
உயிர் கொடுத்த என்னிடமே உயிரை எடுக்கும் சாராயத்தை வாங்கி கேட்கிறாயே.. என ஒரு தாய் சொல்லும் காட்சி நெத்தியடி..
ஜெய் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.. இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணி புரியவில்லை என்றாலும் முதல் படத்திலேயே ஒரு நல்ல ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார்..
Aalakaalam movie review