மதிப்பில்லாத கோமாளிகள் – நயன்தாராவின் பிரசவ சர்ச்சைக்கு வனிதா விஜயகுமார் பதிலடி

மதிப்பில்லாத கோமாளிகள் – நயன்தாராவின் பிரசவ சர்ச்சைக்கு வனிதா விஜயகுமார் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

40 வயதான நடிகை நயன்தாரா வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்தார், இது இந்தியாவில் சட்டவிரோதமானது என்று சிலர் சர்ச்சையை எழுப்பினர்.

இந்நிலையில், வனிதா விஜயகுமார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், “அன்பான பெற்றோருக்கு பிறந்த 2 அப்பாவி குழந்தைகளின் பிறப்பை விட அழகானது எது, எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டிய வாழ்க்கையை அவர்களுக்கு வழங்கவும் கொடுக்கவும் முடியும்.

ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை கெடுத்தால் முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்

கதிரவன் கலக்கும் ‘சீன் நம்பர் 62′.: தேசிய விருது பெற்ற பழங்குடியின பாடகி நஞ்சியம்மாவின் முதல் தமிழ் பாடல்

கதிரவன் கலக்கும் ‘சீன் நம்பர் 62′.: தேசிய விருது பெற்ற பழங்குடியின பாடகி நஞ்சியம்மாவின் முதல் தமிழ் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆதாம்’* திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த இயக்குநர் ‘ஆதாம்’ சமரின் முதல் தமிழ் படமான *‘சீன் நம்பர் 62’*-ஐ நிக்கில் ராமச்சந்திரனின் பவன்புத்ரா பட தயாரிப்பு நிறுவனமும், வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.

இப்படத்தின் முதல் பாடலான *’என் சேவல்’* சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘ஐயப்பனும் கோஷியும்’ மலையாளம் படத்தில் இடம்பெற்ற “களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு” பாடலை பாடிய, *68வது தேசிய விருது வென்ற நஞ்சியம்மா* பாடிய பாடல் என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் இந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

பாடலை கேட்ட அனைவரும் பாராட்டி வருகின்றனர். பல வெற்றி பாடல்களை பாடியுள்ள வேல்முருகன், நஞ்சியம்மாவுடன் இனைந்து இந்த பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடலின் வரிகள் இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. *சிவபிரகாசத்தின்* வரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஆங்கிலம் கலக்காமல் தமிழ் மட்டுமே பயன்படுத்தி* முழு பாடலையும் எழுதியுள்ளார்.

இப்பாடலுக்கு *ஜிகேவி* மிகவும் பொருத்தமான முறையில் இசை அமைத்துள்ளார். பாடலின் காட்சியமைப்பு அனைத்தும் புதுமையாக உள்ளது என்று பாடலை பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர்.

*கோகிலா கோபால், கதிரவன், அமல் தேவ், ஜாய்ஸ், வி ஜே வைத்தி, ஐஸ்வர்யா நந்தன்* மற்றும் *ராகந்த்* ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். புது முகமாக இருந்தாலும் அனைவரும் ரசிகர்களை கவரும் படியாக உள்ளனர்.

சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல், பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் *’சீன் நம்பர் 62’* படமாக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. எனவே விரைவில் டீசர் மற்றும் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

National award winner tribal singer Nanjiammas first Tamil song from Scene Number 62

Link:
https://youtu.be/MEklu2ttqcU

#SceneNumber62
#Nanjamma #Velmurugan
#AdamZamar #ActorKathiravan
#GKV

ஒரே நேரத்தில் ரஜினி & தனுஷுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் ஸ்டார்

ஒரே நேரத்தில் ரஜினி & தனுஷுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் ‘நானே வருவேன்’ ஆகிய இரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தமிழ் & தெலுங்கில் உருவாகியுள்ள ‘வாத்தி (SIR)’ என்ற படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

இந்தப் படம் 1920களில் நடக்கும் கால கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.

மேலும் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான், நிவேதா சதிஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து அடுத்தக்கட்ட படிப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இதில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவலை எதிர்ப்பார்க்கலாம்.

‘ஜெயிலர்’ படத்திலும் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வருகிறார் சிவராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவராஜ்குமார்

Sivarajkumar will be part of Rajini and Dhanush movies

சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு இணையும் படத்தை தயாரிக்கும் நிறுவனம் இதுதான்

சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு இணையும் படத்தை தயாரிக்கும் நிறுவனம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனுதீப் இயக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதன் பின்னர் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ பட இயக்குனர் அஸ்வின் உடன் இணைந்து ‘மாவீரன்’ படத்தில் பணிபுரிந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த படத்தை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படங்களை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த படத்தை பிரபல நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.

சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்தை தொடர்ந்து நாக சைதன்யா நடிக்கும் படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. அந்த படத்தை முடித்துவிட்டு சிவா உடன் வெங்கட் இணைவார் என எதிர்பார்க்கலாம்.

‘பிரின்ஸ்’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியபோது வெங்கட் பிரபு உடன் இணைவதை உறுதிப்படுத்தினார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஜிஎஸ்

Sivakarthikeyan and Venkat Prabu will be joining for new venture

நில அரசியலை தோலுரித்து கன்னடத்தை கலக்கும் ‘கந்தாரா’ இந்திய மொழிகளில் ரிலீஸ்

நில அரசியலை தோலுரித்து கன்னடத்தை கலக்கும் ‘கந்தாரா’ இந்திய மொழிகளில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக கன்னட படங்களுக்கு இந்திய அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

‘தியா’, ‘கருட கமனா விருஷப வாகன’, ‘777 சார்லி’, ‘கேஜிஎப் 1 & 2’ உள்ளிட்ட படங்களின் வருகைக்குப் பிறகு கன்னட படங்களை விரும்பி பார்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் ‘கந்தாரா’ (Kantara).

ரிஷப் ஷெட்டி என்பவர் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இவருடன் தமிழ் நடிகர் கிஷோர் (கறாரான வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.) நாயகியாக சப்தமி கவுடா ஆகியோர் நடித்துள்ளனர்.

நில அரசியல்.. அரசு நிர்வாகம்.. பழங்குடியின மக்கள் என முக்கோண கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினை மோதலை தோலுரிக்கும் படமாகும்.

இந்த நிலையில் படக்குழு தற்போது படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது .

இது தொடர்பான அறிவிப்பு அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மினி ரிவ்யூ..

1980களில் பெரும் செல்வாக்கு கொண்ட அரசர் நிம்மதி தேடி அலைகிறார். அப்போது பழங்குடியின மக்கள் வழிபடும் கடவுளை தனக்கு தருமாறு கேட்கிறார். அதற்கு பதிலாக ‘தன் நிலங்களை உங்களுக்கு தருகிறேன்” என்கிறார்.

சில 100 ஆண்டுகளுக்குப் பிறகு அரசர் பரம்பரையில் வந்தவர்கள் தங்களுக்கு நிலத்தை தருமாறு பழங்குடியின மக்களிடம் சண்டை போடுகின்றனர். இந்த மோதல் தொடர்பான கதைக்களமே இந்த படம்.

கூடுதல் தகவல்…

‘கந்தாரா’ படத்தை “தலைசிறந்த படைப்பு” என்று பாராட்டி இதன் மலையாள பதிப்பை கேரளாவில் வாங்கி வெளியிடப் போவதாக நடிகர் பிருத்விராஜ் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kannada movie Kantara will be dubbed in Indian languages

தமிழ்நாட்டிற்கு வந்து தெலுங்கு பேசும் ‘காட்ஃபாதர்’.; தமிழ் இப்போ இல்லையாம்.!

தமிழ்நாட்டிற்கு வந்து தெலுங்கு பேசும் ‘காட்ஃபாதர்’.; தமிழ் இப்போ இல்லையாம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள காட்பாதர் திரைப்படம் கடந்த அக்-5ஆம் தேதி வெளியானது.

சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கியுள்ளார்.

இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 100 கோடி வசூல் என்கிற இலக்கை தாண்டி இன்னும் வரவேற்புடன் இந்தப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப்படத்தில் சல்மான்கான், நயன்தாரா, சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆந்திரா தெலங்கானாவில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வரும் அக்டோபர் 14ம் தேதி தமிழகத்திலும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இன்னும் ஒரு சில வாரங்களில் இதன் தமிழ் பதிப்பும் வெளியாக இருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படத்தை தான் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.

அதேசமயம் இந்த படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக மிகவும் நேர்த்தியாக ரீமேக் செய்து மோகன்ராஜா இயக்கியிருந்தது இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

படத்தின் கதாநாயகியாக நடித்த நயன்தாரா மற்றும் நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஆகியோரின் பங்களிப்பும் இந்த படத்தின் சிறப்பம்சமாக அமைந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows