தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சிவகுமாரின் மகன்களும் நடிகர்களுமான சூர்யா கார்த்தி இருவரும் சமூக சேவைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அகரம் பவுண்டேசன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு சூர்யா உதவி வருகிறார். நிறைய மாணவர்கள் இதன் மூலம் பலன் அடைந்துள்ளனர்.
அதுபோல் நடிகர் கார்த்தி உழவர் பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் விவசாயிகளுக்கு உதவி வருகிறார்.
இந்த நிலையில் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் ‛உழவர் விருதுகள் 2022′ என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா பிப்ரவரி 5ல் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய விதை மீட்பு, இயற்கை விவசாயம் நீர்நிலை, விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசியதாவது…
“உழவன் பவுண்டேஷன் தொடங்கியுள்ள கார்த்தி ஒரு ஏழைப் பெண் விவசாயின் பேரன்.
நான் பிறந்தபோது 10 மாதத்தில் அப்பா இறந்து விட்டார். என் அம்மாதான் என்னை வளர்த்தார். அரளி செடியும் எருக்கம் செடியும் உள்ள ஊரில் என்னை வளர்த்தார் என் அம்மா.
என் அம்மா எனக்கு தலை வாரி விட்டதில்லை. உணவு கூட ஊட்டி விட்டதில்லை. அவர் தனி ஆளாக நின்று விவசாயம் செய்து என்னை காப்பாற்றினார்” (அழுதபடியே பேசினார் சிவகுமார்).
விவசாயத்தில் அதிகமான வேலைகளை செய்பவர்கள் பெண்கள்தான்.
கடவுளை யாரும் பார்த்ததில்லை. சிலையை தான் நாம் கும்பிடுகிறோம். ஆனால் பெண்கள்தான் கடவுள்”
இவ்வாறு நடிகர் சிவகுமார் பேசினார்.
Womens were God Sivakumar emotional speech at Uzhavar Viruthukal