தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நம் எல்லோராலும் பேச முடியும். ஆனால் பாடல் முடியுமா? முடியாது.
ஏனென்றால் குரல் வளம் நன்றாக இருந்தால் மட்டுமே பாட முடியும். கேட்பவர்களுக்கு அதுதானே ஆனந்தம் தரும்.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பாடகர் பாடகிகளுக்கு வாய்ப்புகள் குறைந்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பாடல்களை பாட ஆரம்பித்து விடுகிறார்கள்.
நடிகைகளில் ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பாட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
நடிகர்களில் கமல், விஜய், சிம்பு, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், ஜெய் ஆகியோரும் இந்த வரிசையில் உள்ளனர்.
இதில் ஒரு சிலருக்கு குரல் இனிமையாக இருக்கிறது. அதனால் அவர்கள் பாடுவதில் ரசிகர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
ஆனால் சில நடிகர், நடிகைகள் பேசினாலே கரகர குரல் இருக்கும். அவர்கள் பாடினால் கேட்கவா வேண்டும்.
தற்போது அவர்களே பாடல் பாடுகிறோம் என்று படிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
முதன்முறையாக நமக்கு பிடித்த நடிகர், நடிகை பாடுகிறாரோ என்று ஆர்வத்தில் பலரும் அந்த வீடியோக்களை பார்க்க, நாம் நன்றாக பாடி இருக்கிறோம் என அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் போல.
இதை இசை துறைக்கு வந்த இம்சை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
இதுபோன்ற இம்சைகளை அவர்களே புரிந்துக் கொண்டு பாடகர், பாடகிக்கு வாய்ப்பு கொடுத்தால் ரசிகர்களுக்கும் பாடல்கள் இனிமையாக இருக்கும். இம்சையும் குறையும்.
இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துக் கொள்வார்களா..?
Why Top Tamil Actors and Actress turning into Singers