தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என தமிழக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதில் பலமுறை கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, தற்போது போராட்டம் திசை மாறுவதாக கூறி விலகுவதாக அறிவித்தார்.
இவரின் கருத்தை கார்த்திகேய சிவசேனாபதி, ராஜேஷ் உள்ளளிட்டவர்கள் ஆதரிக்கின்றனர்.
ஆதியின் முடிவு குறித்து நடிகர் விவேக் கூறியுள்ளதாவது…
ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது.உலகமே நம் மாணவர் அறப் போராட்டத்தை உச்சி முகர்கிறது.
அதற்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
மாணவர்களுக்கு தெரியும் என்ன செய்ய வேண்டுமென்று.
தனிநபரை கொச்சைபடுத்தும் கோஷங்கள், தேசியக்கொடி அவமதிப்பு போன்றவை நிகழல் கூடாது. நிதானம் அவசியம்.
என்போல நீங்கள் அனைவரும் கலாம் அய்யாவின் சீடர்கள்.இப்போது அவர் இருந்தால் என்ன முடிவெடுப்பார்?
யோசித்துசெயல்படுங்கள் கண்மணிகளே. இதுவே அதற்கான நேரம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆதியின் பதிவுக்கு சமுத்திரக்கனி கூறியுள்ளதாவது…
ஆதியின் பேச்சு குழப்பத்தை விளைவிக்கும்.
போராட்டத்தில் உடன்பாடு இல்லை என்றால் அமைதியாக அவர் விலகி இருக்கலாம்.
தமிழகம் முழுவதும் கண்ணியமான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அவர்களுக்கு நாம் உறுதுணையாக தான் இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது.
மக்கள் கூடும் இடத்தில் குழப்பவாதிகள் கூடத்தான் செய்வார்கள். யார் சூழ்ச்சி செய்தாலும் நாம் தான் அதனை முறியடிக்க வேண்டும் என்று சமுத்திரக்கனி தன் கருத்தை தெரிவித்துள்ளார்.